by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
உலகச் செய்திகள்!
Page 76 of 81 • 1 ... 39 ... 75, 76, 77 ... 81
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பிலிப்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் உள்ள 6000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிறது.
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம்மை தலைமையிடமாகக் கொண்டு பிலிப்ஸ் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் அமேசான், டுவிட்டர், மைக்ரோசாஃப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்களில் இருந்து பணியாளர்கள் ஆயிரக்கணக்கில் பணி நீக்கப்பட்ட நிலையில், தற்போது, பிலிப்ஸ் நிறுவனத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்ஸ் நிறுவனத்தில் லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் 6000 ஊழியர்களை பணி நீக்கவுள்ளதாகவும், இது மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 5% எனக் கூறப்படுகிறது.
இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்து வெளியிட்ட ஆவணப் படத்திற்கு ரஷியா கருத்துக் கூறியுள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்து வெளியிட்ட “இந்தியா தி மோடி கொஸ்டீன் (India the modi question) என்ற ஆவணப்படம் வெளியான நிலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டு, இப்படத்தைப் பகிரவும் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் வெளியிட்டத்திற்கு பிபிசி நிறுவனத்திற்கு பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆவணப் படம் தடையை மீறி சில இடங்களில் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரிஷ்டிஷ் நிறுவனமான பிபிசி ஆவணப் பிரதமர் மோடி குறித்த ஆவணப் படம் வெளியிட்டதற்கு ரஷிய கருத்துக் கூறியுள்ளது.
இதுகுறித்த கேள்விக்கு ரஷிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர், மரியா சகரோவா, ரஷியா மட்டுமின்றி உலகில் முக்கிய நாடுகளுக்கு எதிராக பிபிசி நிறுவனம் தகவல் போரிடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பிபிசி நிறுவனம் இங்கிலாந்து அரசுடனே பிரச்சனை செய்தது. எனவே, பிபிசிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- GuestGuest
//பிரிஷ்டிஷ் நிறுவனமான பிபிசி
...திருத்தம் செய்ய வேண்டும்.
......................................................................................................
இந்தியாவின் நண்பன்-சர்வாதிகாரி பூட்டின் ஆட்சி- இதைத் தவிர வேறெதையும் சொல்ல மாட்டார்கள்.
பிபிசி ஆவணத்தில் இருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் உண்மையானவை.பிரிட்டிஷ் அரசின் ஆதாரங்களுடன் ஒப்பிடப்பட்டவை,சரிபார்க்கப்பட்டன.
தடைசெய்வதால் உண்மைகளை மறைக்க முடியாது என்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்ள வேண்டும்.
இனப்படுகொலை செய்யப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதுவும் செய்யாவிட்டாலும் தவறுக்காக மன்னிப்புக் கேட்டிருக்கலாம்.
நீதி கேட்டு நிற்கும் பில்கிஸ் பானுவிற்காவது ஆறுதல் காட்டி இருக்கலாம்.கொலைகாரர்களுக்கு மன்னிப்பு தந்து தேர்தலில் பிரச்சாரம் செய்து வைத்தது சரியாக இருக்காது.
பிபிசி இன் ஆவணப்படம் உள்நோக்கத்துடன் இருந்தாலும் கூட ஆதாரங்கள் உண்மையானவை.
என் கருத்து மட்டுமே!
(ஈகரையிலும் நடுநிலையுடன் கருத்திடுவதற்கு அனுமதிக்க வேண்டும். தமிழர்களில் 54% தான் இணையத்தைத் பயன்படுத்துகிறார்கள்.இணையத்தை பயன்படுத்தாத-பயன்படுத்தத் தெரியாதவர்கள் வரும்போது தெரிந்துகொள்ள அவகாசம் தேவை.உடனடியாக அவர்களை அடித்துத் துரத்துவது சரியாக இருக்காது.ஐடி துறை சேர்ந்தவர்கள் கூட இணையத்தில் ஏமாறுகிறார்கள்,தவறு செய்கிறார்கள்...கனிவான கவனத்திற்கு ..தவறான இடத்தில் பதிவிட்டதற்கு மன்னிக்கவும்.)
Guest. wrote:முதலில் .......
//பிரிஷ்டிஷ் நிறுவனமான பிபிசிஆவணப்பிரதமர் மோடி குறித்த ஆவணப் படம் வெளியிட்டதற்கு ரஷிய கருத்துக் கூறி//
...திருத்தம் செய்ய வேண்டும்.
......................................................................................................
இந்தியாவின் நண்பன்-சர்வாதிகாரி பூட்டின் ஆட்சி- இதைத் தவிர வேறெதையும் சொல்ல மாட்டார்கள்.நடுநிலை தவறும் போது சர்வாதிகாரம் தலைதூக்கும்.
பிபிசி ஆவணத்தில் இருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் உண்மையானவை.பிரிட்டிஷ் அரசின் ஆதாரங்களுடன் ஒப்பிடப்பட்டவை,சரிபார்க்கப்பட்டன.
தடைசெய்வதால் உண்மைகளை மறைக்க முடியாது என்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்ள வேண்டும்.
இனப்படுகொலை செய்யப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதுவும் செய்யாவிட்டாலும் தவறுக்காக மன்னிப்புக் கேட்டிருக்கலாம்.
நீதி கேட்டு நிற்கும் பில்கிஸ் பானுவிற்காவது ஆறுதல் காட்டி இருக்கலாம்.கொலைகாரர்களுக்கு மன்னிப்பு தந்து தேர்தலில் பிரச்சாரம் செய்து வைத்தது சரியாக இருக்காது.
பிபிசி இன் ஆவணப்படம் உள்நோக்கத்துடன் இருந்தாலும் கூட ஆதாரங்கள் உண்மையானவை.
என் கருத்து மட்டுமே!
(ஈகரையிலும் நடுநிலையுடன் கருத்திடுவதற்கு அனுமதிக்க வேண்டும். தமிழர்களில் 54% தான் இணையத்தைத் பயன்படுத்துகிறார்கள்.இணையத்தை பயன்படுத்தாத-பயன்படுத்தத் தெரியாதவர்கள் வரும்போது தெரிந்துகொள்ள அவகாசம் தேவை.உடனடியாக அவர்களை அடித்துத் துரத்துவது சரியாக இருக்காது.ஐடி துறை சேர்ந்தவர்கள் கூட இணையத்தில் ஏமாறுகிறார்கள்,தவறு செய்கிறார்கள்...கனிவான கவனத்திற்கு ..தவறான இடத்தில் பதிவிட்டதற்கு மன்னிக்கவும்.)
இதுபோன்ற கருத்துரிமைகள் ஈகரையில் என்றும் பறிக்கப்படாது.
இந்த தளம் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ, இனத்திற்கோ ஆதரவாக என்றும் செயல்பட்டதில்லை, செயல்படவும் அனுமதிக்க மாட்டோம்.
என் கட்சி, என் இனம், என் ஊர் பற்றிய இடுகைகளை நான் மேற்கொள்ளும் பொது அதே உரிமை உங்ககளைச் சார்ந்த கட்சி, இனம், ஊர் எனப் பதிவிட மாற்றுக் கருத்துக் கூற முழு அனுமதி உள்ளது.
ஆனால் அந்தக் கருத்துக்கள், விவாதங்கள் நாகரீகமாக இடம் பெற வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.
சிவகங்கை மாவட்ட செய்திகளை நான் பதிவிடும் பொழுதே கூறியிருந்தேன், என் மாவட்ட செய்திகளை நான் பதிவிடுகிறேன், உங்கள் மாவட்ட செய்திகளை நீங்கள் பதிவிடலாம் என்று.
இது மாவட்ட செய்திக்கு மட்டுமல்ல, நம்மைச் சார்ந்த அனைத்திற்கும் பொருந்தும்.
அதன் பெயர் தான் கருத்துக் களம்.
எனவே உங்களின் கருத்துக்களை பதிவிட எந்த ஆட்சேபனையும் இல்லை.
எனது பதிவுகளையோ அல்லது மற்ற ஒருவருடைய பதிவுகளையோ இது உண்மையில்லை, தவறானது என்று தோன்றினால் அங்க்கு உங்கள் கருத்தை உடனடியாகப் பதிவிடலாம்.
- GuestGuest
இதுபோன்ற கருத்துரிமைகள் ஈகரையில் என்றும் பறிக்கப்படாது. wrote:
- GuestGuest
ஆயிரக்கணக்கான அழுகும் மீன்களால் அவர்களின் பிரச்சனைகள் போதாதது போல், ஆஸ்திரேலியா இப்போது ஒரு சாத்தியமான கதிர்வீச்சு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
கேப்சூல் (radioactive capsule ) மிக மிக சிறியதாக இருந்தாலும், அதிக அளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது. அதன் அருகில் இருப்பது ஒரு டஜன் டோஸ் எக்ஸ்-கதிர்கள் மூலம் தாக்குவதற்குச் சமம்.
காணாமல் போன காப்ஸ்யூலுக்காக அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அது இருக்கக்கூடிய பரந்த பகுதியையும் அதன் சிறிய அளவையும் கருத்தில் கொண்டு, அதைத் தேடுவது பாலைவனத்தில் ஒரு குறிப்பிட்ட கூழாங்கல் கண்டுபிடிக்க முயற்சிப்பது போன்றது.
ஜனவரி 10 அன்று ஒரு பொதிக்குள் வைக்கப்பட்டு,ஜனவரி 12 ஆம் தேதி மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பில்பரா சுரங்கத்தில் இருந்து கதிரியக்க காப்ஸ்யூல் ஒரு போக்குவரத்து ஒப்பந்தக்காரரால் சேகரிக்கப்பட்டதாகவும், ஜனவரி 16 ஆம் தேதி பெர்த்தில் உள்ள ஒரு கதிர்வீச்சு சேமிப்பு நிலையத்திற்கு வரவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.அதன் கொள்கலனை ஆய்வுக்காக ஜனவரி 25 அன்று திறந்து பார்த்தபோதுதான் அது காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. .
ஜனவரி 11 மற்றும் 16 க்கு இடையில் ஒரு கட்டத்தில் கதிரியக்க காப்ஸ்யூல் காணாமல் போனது.
குறிப்பிட்டுள்ளபடி, காப்ஸ்யூல் மிகவும் சிறியது. 6 மில்லிமீட்டர்கள் மற்றும் 8 மில்லிமீட்டர்கள் மட்டுமே .கதிரியக்க சீசியம்-137 ஆல் தயாரிக்கப்பட்டது.
இப்போது, அது சுரங்கத்திற்கும் பெர்த்துக்கும் இடையே 870 மைல் பாதையில் எங்கோ உள்ளது.
நல்ல செய்தி என்னவென்றால், காப்ஸ்யூலை "ஆயுதமாக்க" முடியாது. மோசமான செய்தி என்னவென்றால், இது இன்னும் கடுமையான உடல்நல ஆபத்தைக் கொண்டது.
"நீங்கள் [மூன்று அடி தூரத்தில்] நின்றால், 17 மார்பு எக்ஸ்-கதிர்களுக்குச் சமமானதைப் பெறுவீர்கள்" என்று ரேடியேஷன் சர்வீசஸ் WA இன் பொது மேலாளர் லாரன் ஸ்டீன் கூறினார்.
அந்தத் தூரத்தில் ஒரு மணிநேரம் செலவழித்தால், ஒரு வருடத்திற்குள் நீங்கள் வழக்கமாகப் பெறும் கதிர்வீச்சு அளவுக்கு அதிகமாக இருக்கும்.
நீங்கள் நெருங்கினால், ஆபத்துகள் அதிகரிக்கும். சீசியம்-137 பீட்டா மற்றும் காமா கதிர்வீச்சு இரண்டையும் வெளியிடுகிறது. எனவே பொருளை எடுப்பது கதிர்வீச்சு தீக்காயங்களை ஏற்படுத்தும்.
ஆபத்து காரணமாக, ஆஸ்திரேலிய அதிகாரிகள் அது பயணித்த பாதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் டயர்களை சரிபார்க்கும்படி கேட்டுக் கொண்டனர். ஒரு வித்தியாசமான உலோகத் துண்டு தங்களிடம் சிக்கியிருப்பதை அவர்கள் கவனித்தால், அவசரகால சேவைகளை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.
'ஒழுங்குமுறை தோல்வி'- இந்த சம்பவம் காப்ஸ்யூலை எடுத்துச் செல்ல எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, விஷயங்கள் சரியாக செய்யப்படவில்லை.
தங்களுக்கு போதுமான அளவு கட்டுப்பாடு இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் வெளிப்படையாக அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
சுரங்க நிறுவனமான ரியோ டின்டோ திங்களன்று மன்னிப்பு கேட்டது, இது சுரங்க உபகரணங்களில் பயன்படுத்தப்படும் அதிக கதிரியக்கப் பொருளான சீசியம் -137 ஐக் கொண்ட காப்ஸ்யூலைக் கண்டுபிடிப்பதற்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியது.
அது கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?
சீசியம்-137 ஆனது சுமார் 30 ஆண்டுகள் அரை ஆயுளைக் கொண்டுள்ளது, அதாவது மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, காப்ஸ்யூலின் கதிரியக்கத்தன்மை பாதியாகக் குறையும். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, அது மீண்டும் பாதியாகக் குறையும்.
அந்த விகிதத்தில், காப்ஸ்யூல் அடுத்த 300 ஆண்டுகளுக்கு அதைக் காணும்/நெருங்கும் எவருக்கும் கதிரியக்க ஆரோக்கிய அபாயத்தை உருவாக்கும்.
உலகின் மிகப்பெரிய சுரங்க நிறுவனங்களில் ஒன்றான ரியோ டின்டோ மேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பரா பகுதியில் 17 இரும்புத் தாது சுரங்கங்களை நடத்தி வருகிறது. நிறுவனத்தின் சுரங்க நடவடிக்கைகள் கடந்த காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது,
(bloomberg/skynews/7news australia)
காதலர் தினத்தை முன்னிட்டு ஆணுறைகள் இலவசம் - தாய்லாந்து அரசு வெளியிட்ட அறிவிப்பு!
பாதுகாப்பான உடலுறவை வலியுறுத்துவதற்காக காதலர் தினத்தை முன்னிட்டு ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் பிப்ரவரி 1-ம் தேதியான இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில், காதலர்களுக்கு இலவசமாக ஆணுறை வழங்கப்படும் என்று தாய்லாந்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சுமார் ஒன்பது கோடியே 50 லட்சம் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
பிப்ரவரி மாதம் பிறந்தாலே காதலர்கள் உற்சாகமடைகின்றனர். காரணம், பெரும்பாலான நாடுகளில் பிப்ரவரி 14 காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, சாக்லேட் டே, ரோஸ் டே, டெடி டே என கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது. பிப்ரவரி மாதம் காதலர் தினம் கொண்டாடியவர்கள், நவம்பர் மாதம் குழந்தையோடு இருப்பது போன்ற கிண்டலான மீம்ஸ்களையும் நாம் பார்ப்பதுண்டு.
காதலர் தினம் கொண்டாட்டமாக இருக்க, தாய்லாந்து போன்ற நாடுகளில் காதலர் தினத்தால் சில சிக்கல்கள் எழுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, தாய்லாந்தில் எய்ட்ஸ் போன்ற பாலியல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் 15 முதல் 19 வயதுடைய பெண்களில் 24.4% பேர் கருவுற்றதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதேபோல், பாலியல் ரீதியான நோய்களில் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் 15 முதல் 19 வயது மற்றும் 20 முதல் 24 வயது உடையவர்களாக இருக்கின்றனர்.
இதனை தடுப்பதற்காகவும், பாதுகாப்பான உடலுறவை வலியுறுத்துவதற்காகவும், காதலர் தினத்தை முன்னிட்டு ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் பிப்ரவரி 1-ம் தேதியான இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் இருக்கும் காப்பீட்டு திட்டம் போன்றதொரு அமைப்பின் கீழ், ‘கோல்டு கார்டு' என்ற அட்டை தாய்லாந்தில் வழங்கப்படுகிறது. இந்த அட்டை வைத்திருப்போர் ஒரு வாரத்திற்கு 10 ஆணுறைகள் வீதம், ஒரு வருடம் வரை வாங்கிக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் ரச்சனா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆணுறைகள் நான்கு விதமான அளவுகளில், மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகளில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ’கோல்டு கார்டு’ வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்குவதன் மூலம் நோய்களை தடுக்கவும், ஆரோக்கியமான உடலுறவையும் வலியுறுத்தவும் முடியும் என் அந்நாட்டு அரசு செயல்படுகிறது.
மேலும் STD (Sexually Transmitted Disease) மற்றும் கருப்பை புற்றுநோய் போன்ற நோய்கள் பரவுவதையும் தடுக்க முடியும். 70 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தாய்லாந்தில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ’கோல்ட் கார்டு’ வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
பயங்கரவாதத்தின் விதைகளை விதைத்தோம்- பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தான் நாட்டிலுள்ள பெஷாவர் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியாகியுள்ள நிலைய்ல், பயங்கரவாதத்தின் விதைகளை நாங்கள் விதைத்தோம் என்று பாகிஸ்தான் மந்திரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
நேற்று, முன் தினம் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில்,பிற்பகல் தொழுகையில் 400 க்கும் அதிகமானோர் இருந்தனர்.
அப்போது, பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில், 46 பேர் பலியாகினர்,. 150 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியான நிலையில் 100 பேர் பலியாகியுள்ளனர்.
100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெஷாவரில் தாக்குதல் நடத்தப்பட்ட மசூதிக்கு அருகில், போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகம், போலீஸ் அதிகாரிகள் குடியிருப்புகள் இருப்பதால் 4 அடுக்கு பாதுகாப்புகள் தாண்டி செல்ல முடியும்.
அப்படி இருந்தும், இங்கு வெடிகுண்டு தாக்குதல் நடந்ததால், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அந்த நாட்டு பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் மந்திரி கவாஜா இதுகுறித்து பேசியதாவது: மதத்தின் பெயரால் பயங்கரவாதம் நடத்தப்பட்டு வருகிறது. நாங்கள் பயங்கரவாதத்தின் விதைகளை விதைத்தோம்.
பெஷாவரில் இந்த தற்கொலை குண்டுவெடிப்பு நடத்துவதற்கு முன்பு, தொழுகை நடக்கும் மசூதியின் முன்பு அந்த நபர் நின்றிருந்தார். இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கடவுளை வழிபடும்போது மக்கள் கொல்லப்படுவதில்லை; ஆனால் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தெருவில் கட்டிப்பிடித்து நடனமாடிய இளம் ஜோடிக்கு தலா 10 வருட ஜெயில் : டெக்ரான் நீதிமன்றம் உத்தரவு
டெக்ரான் : ஈரானில் இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக தெருவில் கட்டிப்பிடித்து நடனம் ஆடிய இளம் ஜோடிக்கு தலா 10 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டில் வசிக்கும் பெண்களுக்கு அரசு, கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்து உள்ளது. பொது வெளியில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது அவசியம். பொது இடங்களில் நடனம் ஆடுவது மற்றும் பாட்டுப் பாடுவது ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது.
இந்த நிலையில், ஆஸ்தியாஜ் ஹகீகி மற்றும் அவரது வருங்கால மனைவியான ஆமிர் முகமது அகமதி ஆகிய இளம் ஜோடி ஒன்று பிரசித்தி பெற்ற அடையாளங்களில் ஒன்றான ஆசாதி கோபுரம் முன்பு கட்டிப் பிடித்தபடி, காதல் நடனமாடியா வீடியோ வைரலானது. இதை தொடர்ந்து அவர்கள் சமூக வலைதளங்களிலும் அப்போது பிரபலமடைந்து இருந்தனர்.
இஸ்லாமிய சட்ட விதிகளை மீறியதற்காக, கடந்த நவம்பரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மீது டெக்ரானில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் 6 மாதம் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் வலைதளம் பயன்படுத்துவதற்கும், ஈரானை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனை அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு செயல்படும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் தேச பாதுகாப்புக்கு எதிராக சதி திட்டம் தீட்டியுள்ளனர். அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
ஹகீகி தற்போது, குவார்சக் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அந்த ஜோடி, தங்களுக்காக வாதிடும் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் சார்ந்த உரிமை இல்லாமலேயே விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. இதனால், அவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன.
- Sponsored content
Page 76 of 81 • 1 ... 39 ... 75, 76, 77 ... 81
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|