புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
அன்பு நண்பர்களே,
நெடுங்காலம் ஆகி விட்டது...
ஒரு பாடலை இப்போதாவது இடலாம் என எண்ணம் !
ஒருத்தி , அவளது தோழி , அவ்வொருத்தியின் தலைவன் ! மூவர்தான் இங்கு உலகம் !!
இந்த தோழி இருக்காளே - நான் சொல்வது சங்கப்பாடல்களில் காணும் தோழிகளை - எந்த இலக்கியத்திலும் காண முடியாதவள் ! அடியேன் இதைச் சொல்லவில்லை ; சொல்வதற்கான தகுதியும் இல்லை - ஏனெனில் தெரிந்தது , தமிழன்றி ஆங்கிலம் மட்டும்தான் ! ஆயின் , பல மொழிகள் கற்றுத்துறைப் போகிய ஞானம் சிறந்த பல்லோர் சங்க இலக்கியத் தோழிகள் போல் திறம் வாய்ந்தோர் வேறு இலக்கியங்களில் இல்லை என உறுதிபடக் கூறியுள்ளனர் ! She is not just a Friend , Philosopher and Guide ! இவர்களுக்கும் மேலானவள் !! தலைவியைத் தன் உயிரெனத் தாங்குபவள் ; தலைவியின் மகிழ்ச்சி தன்னதே எனத் திளைப்பவள் ; அவளின் மென் மனதில் தோன்றும் - முகத்தில் அல்ல அன்பர்களே - சிறு மாறுதல்களையும் உடனறிபவள் ; அது துயரம் சார்ந்ததெனில் உடன் அதை துடைத்தெறிய முயல்பவள் ; தலைவியின் மனம் களவு போனதெனில் , அந்நிலையில் முழு உறுதுணையாய் இருப்பவள் ; தூதும் போவாள் ; தலைவிக்கு அமைச்சாயும் இருப்பாள் ; தலைவனையும் , தவறிழைக்கையில்
அவன் செயல்களை சாடுபவள் ; தலைவி சொல்ல நினைத்தும் சொல்ல முடியாதவற்றை தலைவனிடம் நயம்படச் சொல்பவள் ;
தலைவனையும் நட்பாய் நினைப்பவள் ...
இப்படிப்பட்ட தோழி கிடைக்க கோடி கோடி புண்ணியம் - தலைவி மட்டுமில்லை , அவளது முன்னோர்களும் -செய்திருக்கவேணும் ...
சரி , இங்கு என்னவென எட்டிப்பார்ப்போமே ...
தன் உற்ற தோழியிடம் தலைவி சொல்கிறாள் ...
என் தலைவனிடம் நீ , என் பொருட்டு , கடிந்து பேசாதே ; உரையல் என்கிறாள் .
ஏன் அவ்வாறு சொல்கிறாள் ..!? ஒன்றுமில்லை , கதை இதுதான் ...
தலைவன் ஏதோ ஒரு நிமித்தமாய் தலைவியை விட்டு சிலகாலம் பிரிந்துவிட நேர்கிறது .
( இதை , சிலர் பரத்தமையோடு உள்ள உறவினால் பிரிந்துள்ளான் என்றும் கொள்வர் ; அப்படிப் பொருள் கொள்வதில் என்ன திருப்தியோ...!?) காதலில் கனிந்து நிற்கும் அன்புள்ளம் கொண்ட இருவர் பிரிந்திருத்தல் வேதனையே . அவளுடன் உடனுறையனாக , மாதொரு பாகனாக , வசித்த நாளெல்லாம் அவள் சுகித்திருந்தவள் மட்டுமல்ல ; இல்லறமும்மாண்புற நடத்தி வந்தவள் . அதனாலேயே , அவளின் பெண்மையுள்ளம் மலர்ந்து மணம் நீக்கமற வீசலாயிற்று ; அவளின் மேனியழகும் மிகுந்து , வாழ்நாளும் நீடிக்குமாய் இன்புற தோற்றம் கண்டது .
ஆனாலும் என் ...!? அத்தலைவன் மனம் பேதலுற்று அவளைப் பிரிந்தபோது , அவளது மேன்மைகளும் அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டன ; அவளது பெண்மை நலங்கள் தொலைந்தது மட்டுமல்லாமல் அவளது உடலழகும் மாசுபட்டது ; குறைபட்ட இவ்விரு நலங்களால் அவளது இன்னுயிரும் நீங்கிவிடும் நிலை ; அப்படியும் , தலைவன் மாட்டு அத்தலைவி கொண்ட காதலன்பு குறையவில்லை ! அதானாலேயே , அவள் தோழியிடம் இவ்வாறு கூறலானாள் :
" என் இனிய தோழியே, தலைவரின் பிரிவு என் அனைத்து நலங்களையும் தொலையச் செய்ததுவே ; அவனுக்காகவே வாழ்ந்த என் உயிரும் கழிந்து விடும் போலும் ! என் நிலை பொறுக்காது அவனை சுடு சொற்களால் தீண்டியிருக்கிறாய் .உன்னை எனக்குப் புரியாமல் போய்விடுமா ! ஆனாலும் , நீ இனி அவனை இம்மாதிரியெல்லாம் கடிந்து பேசாதே ! ஏன் தெரியுமா ... என் தலைவனின் நேசம் முன் போல் சுடர் விடவில்லை ; அப்படி உள்ளபோது , நான் எப்படி அவனிடம் ஊடல் கொள்வது ; உரிமையிருந்தால் அல்லவா , கோபமோ , புலவுமோ செல்லும் ; அப்படியான நிலைதான் இப்போதில்லையே ! இருப்பினும் அவனை நான் ஏற்றுக் கொள்கிறென் ; ஏனென்று விளங்குகிறதா தோழியே ...! அவன் எனக்கு கணவானாக அன்பு காட்டதபோதும் , எமக்கு அன்னை போலும் தந்தை போலும் அன்பு காட்டுகின்றானே ; என் அன்னையை நான் புறக்கணிக்க இயலுமா ?! ; எம் தந்தைக்குதான் நான் அடங்காது ஒழுக முடியுமா ?! இயலாது தானே ! அதனால் , அவனின் அன்பினை நானும் இந்தவாறு இப்போது பாராட்டுகிறேன் ; அவனை வரச் சொல்லடி ; அவன் இனி எமக்கு அன்னையும் அத்தனமாய் இருக்கட்டும் !"
நன்னலம் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல் ; அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ , தோழி !
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.
-அள்ளூர் நன்முல்லையார். ( குறுந்தொகை 93 )
ஆழத்திலும் ஆழ்ந்த தன் உள்ளக் குமுறல்களை எவ்வளவு நுட்பமாய் இத்தலைவி வெளியிடுகிறாள் ...
அவளுக்கு, கழிந்த காதலின் பெருமை இனிக்காண முடியாது எனத் தோன்றினாலும் தலைவனை விட்டுக்
கொடுக்கவும் - அதுவும் தன் உயிரனைய உற்ற தோழியிடம் கூட - அவள் மனம் ஒப்பவில்லை ...
சரி , அன்பர்களை , செவ்வியல் இலக்கியத்தின் சீரியக் குணக்கூறுகளான அமைதியும் , செறிவும் , கட்டுக்கோப்பும்
கொண்ட இக்குறுந்தொகைப் பாடலை நம் உள்ளம் அள்ளும் வண்ணம் நான்கே நான்கு வரிகளில் யாத்தவர்
அள்ளூர் ( என்ன பெயர் பொருத்தம் ! ) நன்முல்லையார்!
இப்பாடலில் எளிய சொற்களே உள ; முதல் வரியில் உள்ள இரண்டு ' நலம் ' கவனிக்கப்பட வேண்டியது !
சாஅய் - சாய்ந்து , மங்கி , குறைந்து
கழியினும் - நீங்கினும் , பிரியினும்
உரையல் - சொல்லாதே , குறையாக சொல்லாதே
புலவி - ஊடல்
நீரும் நிழலது இனிதே ; புலவியும்
வீழுநர் கண்ணே இனிது .
அன்புடன்,
சுந்தரம்
நெடுங்காலம் ஆகி விட்டது...
ஒரு பாடலை இப்போதாவது இடலாம் என எண்ணம் !
ஒருத்தி , அவளது தோழி , அவ்வொருத்தியின் தலைவன் ! மூவர்தான் இங்கு உலகம் !!
இந்த தோழி இருக்காளே - நான் சொல்வது சங்கப்பாடல்களில் காணும் தோழிகளை - எந்த இலக்கியத்திலும் காண முடியாதவள் ! அடியேன் இதைச் சொல்லவில்லை ; சொல்வதற்கான தகுதியும் இல்லை - ஏனெனில் தெரிந்தது , தமிழன்றி ஆங்கிலம் மட்டும்தான் ! ஆயின் , பல மொழிகள் கற்றுத்துறைப் போகிய ஞானம் சிறந்த பல்லோர் சங்க இலக்கியத் தோழிகள் போல் திறம் வாய்ந்தோர் வேறு இலக்கியங்களில் இல்லை என உறுதிபடக் கூறியுள்ளனர் ! She is not just a Friend , Philosopher and Guide ! இவர்களுக்கும் மேலானவள் !! தலைவியைத் தன் உயிரெனத் தாங்குபவள் ; தலைவியின் மகிழ்ச்சி தன்னதே எனத் திளைப்பவள் ; அவளின் மென் மனதில் தோன்றும் - முகத்தில் அல்ல அன்பர்களே - சிறு மாறுதல்களையும் உடனறிபவள் ; அது துயரம் சார்ந்ததெனில் உடன் அதை துடைத்தெறிய முயல்பவள் ; தலைவியின் மனம் களவு போனதெனில் , அந்நிலையில் முழு உறுதுணையாய் இருப்பவள் ; தூதும் போவாள் ; தலைவிக்கு அமைச்சாயும் இருப்பாள் ; தலைவனையும் , தவறிழைக்கையில்
அவன் செயல்களை சாடுபவள் ; தலைவி சொல்ல நினைத்தும் சொல்ல முடியாதவற்றை தலைவனிடம் நயம்படச் சொல்பவள் ;
தலைவனையும் நட்பாய் நினைப்பவள் ...
இப்படிப்பட்ட தோழி கிடைக்க கோடி கோடி புண்ணியம் - தலைவி மட்டுமில்லை , அவளது முன்னோர்களும் -செய்திருக்கவேணும் ...
சரி , இங்கு என்னவென எட்டிப்பார்ப்போமே ...
தன் உற்ற தோழியிடம் தலைவி சொல்கிறாள் ...
என் தலைவனிடம் நீ , என் பொருட்டு , கடிந்து பேசாதே ; உரையல் என்கிறாள் .
ஏன் அவ்வாறு சொல்கிறாள் ..!? ஒன்றுமில்லை , கதை இதுதான் ...
தலைவன் ஏதோ ஒரு நிமித்தமாய் தலைவியை விட்டு சிலகாலம் பிரிந்துவிட நேர்கிறது .
( இதை , சிலர் பரத்தமையோடு உள்ள உறவினால் பிரிந்துள்ளான் என்றும் கொள்வர் ; அப்படிப் பொருள் கொள்வதில் என்ன திருப்தியோ...!?) காதலில் கனிந்து நிற்கும் அன்புள்ளம் கொண்ட இருவர் பிரிந்திருத்தல் வேதனையே . அவளுடன் உடனுறையனாக , மாதொரு பாகனாக , வசித்த நாளெல்லாம் அவள் சுகித்திருந்தவள் மட்டுமல்ல ; இல்லறமும்மாண்புற நடத்தி வந்தவள் . அதனாலேயே , அவளின் பெண்மையுள்ளம் மலர்ந்து மணம் நீக்கமற வீசலாயிற்று ; அவளின் மேனியழகும் மிகுந்து , வாழ்நாளும் நீடிக்குமாய் இன்புற தோற்றம் கண்டது .
ஆனாலும் என் ...!? அத்தலைவன் மனம் பேதலுற்று அவளைப் பிரிந்தபோது , அவளது மேன்மைகளும் அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டன ; அவளது பெண்மை நலங்கள் தொலைந்தது மட்டுமல்லாமல் அவளது உடலழகும் மாசுபட்டது ; குறைபட்ட இவ்விரு நலங்களால் அவளது இன்னுயிரும் நீங்கிவிடும் நிலை ; அப்படியும் , தலைவன் மாட்டு அத்தலைவி கொண்ட காதலன்பு குறையவில்லை ! அதானாலேயே , அவள் தோழியிடம் இவ்வாறு கூறலானாள் :
" என் இனிய தோழியே, தலைவரின் பிரிவு என் அனைத்து நலங்களையும் தொலையச் செய்ததுவே ; அவனுக்காகவே வாழ்ந்த என் உயிரும் கழிந்து விடும் போலும் ! என் நிலை பொறுக்காது அவனை சுடு சொற்களால் தீண்டியிருக்கிறாய் .உன்னை எனக்குப் புரியாமல் போய்விடுமா ! ஆனாலும் , நீ இனி அவனை இம்மாதிரியெல்லாம் கடிந்து பேசாதே ! ஏன் தெரியுமா ... என் தலைவனின் நேசம் முன் போல் சுடர் விடவில்லை ; அப்படி உள்ளபோது , நான் எப்படி அவனிடம் ஊடல் கொள்வது ; உரிமையிருந்தால் அல்லவா , கோபமோ , புலவுமோ செல்லும் ; அப்படியான நிலைதான் இப்போதில்லையே ! இருப்பினும் அவனை நான் ஏற்றுக் கொள்கிறென் ; ஏனென்று விளங்குகிறதா தோழியே ...! அவன் எனக்கு கணவானாக அன்பு காட்டதபோதும் , எமக்கு அன்னை போலும் தந்தை போலும் அன்பு காட்டுகின்றானே ; என் அன்னையை நான் புறக்கணிக்க இயலுமா ?! ; எம் தந்தைக்குதான் நான் அடங்காது ஒழுக முடியுமா ?! இயலாது தானே ! அதனால் , அவனின் அன்பினை நானும் இந்தவாறு இப்போது பாராட்டுகிறேன் ; அவனை வரச் சொல்லடி ; அவன் இனி எமக்கு அன்னையும் அத்தனமாய் இருக்கட்டும் !"
நன்னலம் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல் ; அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ , தோழி !
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.
-அள்ளூர் நன்முல்லையார். ( குறுந்தொகை 93 )
ஆழத்திலும் ஆழ்ந்த தன் உள்ளக் குமுறல்களை எவ்வளவு நுட்பமாய் இத்தலைவி வெளியிடுகிறாள் ...
அவளுக்கு, கழிந்த காதலின் பெருமை இனிக்காண முடியாது எனத் தோன்றினாலும் தலைவனை விட்டுக்
கொடுக்கவும் - அதுவும் தன் உயிரனைய உற்ற தோழியிடம் கூட - அவள் மனம் ஒப்பவில்லை ...
சரி , அன்பர்களை , செவ்வியல் இலக்கியத்தின் சீரியக் குணக்கூறுகளான அமைதியும் , செறிவும் , கட்டுக்கோப்பும்
கொண்ட இக்குறுந்தொகைப் பாடலை நம் உள்ளம் அள்ளும் வண்ணம் நான்கே நான்கு வரிகளில் யாத்தவர்
அள்ளூர் ( என்ன பெயர் பொருத்தம் ! ) நன்முல்லையார்!
இப்பாடலில் எளிய சொற்களே உள ; முதல் வரியில் உள்ள இரண்டு ' நலம் ' கவனிக்கப்பட வேண்டியது !
சாஅய் - சாய்ந்து , மங்கி , குறைந்து
கழியினும் - நீங்கினும் , பிரியினும்
உரையல் - சொல்லாதே , குறையாக சொல்லாதே
புலவி - ஊடல்
நீரும் நிழலது இனிதே ; புலவியும்
வீழுநர் கண்ணே இனிது .
அன்புடன்,
சுந்தரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|