புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
5 Posts - 4%
prajai
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
2 Posts - 2%
kargan86
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
1 Post - 1%
jairam
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
9 Posts - 5%
prajai
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_m10திருவாசகம் – பெயர்க்காரணம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாசகம் – பெயர்க்காரணம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 04, 2013 5:40 am

திருவாசகம் – பெயர்க்காரணம் 6dAVTjrtTZmM9IGHmRVz+thiruvaasagam

திரு - அழகு, வாசகம் – வார்த்தை; சொல்

திருவாசகம் – அழகிய சொல் என்பது அதனையுடையதாகிய நூலை உணர்த்திற்று. திரு என்பதற்குக் கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என உரைகாண்பர் பேராசிரியர். இதனைக் கண்டார் வேறு எதனையும் விரும்பார் ஆகலின் புண்ணியங்கூட்டக்கண்ட பக்குவான்மாக்களால் விரும்பப் பெறுந்தன்மையுடைய வாசகம் என்றும் பொருள் கொள்ளலாம்.

சங்கரநமச்சிவாயப் புலவர் நன்னூல் விருத்தியுரையில் “அடையடுத்த வாசகம் முதற்கருவியின் பெயர் அதன் காரியமாகிய யாப்பிற்கு ஆயிற்று” என்பர்.

சிவஞான சுவாமிகள் இலக்கணவிளக்கச் சூறாவளியில், “திருவாசகம் என, சொல்லையே யுணர்த்தி நிற்கும் வாசகம் என்னுஞ்சொல் அதனால் ஆக்கப்பெற்ற காரியமாகிய செய்யுட்களை உணர்த்துதலால் காரணவாகுபெயர் எனப்படும். உண்மையான் நோக்கின் அன்மொழித்தொகையாம்” என்று கூறுவர்.

சபாபதி நாவலர் அவர்கள் திராவிடப்பிரகாசிகையில் “திருவாசகமென்பது திருமயமான வாசகம் எனப்பொருள்படும். ஈண்டுத் திரு – அருட்டிரு. எனவே அருள்நாதவடிவான வாசகம் என்றவாறாயிற்று. திருவாசகம் என்பது அழகிய வார்த்தையுடையது  என அன்மொழித்தொகையாய் நூலுக்குக் காரணப் பெயராயிற்று” என்பர்.

ச.பூபாலப்பிள்ளை அவர்கள் தாம் எழுதிய தமிழ் வரலாற்றில் ‘திருமயமான அல்லது அருள்நாதவடிவமான அல்லது அழகிய வாசகம்” எனப்பொருளுரைப்பர்.

(தொடரும்)

நன்றி: டாக்டர் ச.தண்டபாணித் தேசிகர், டி.லிட் அவர்கள் எழுதிய ‘திருவாசகப் பேரொளி’ புத்தகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 04, 2013 6:40 am

பகிர்வு அருமை...தொடருங்கள்
-
அவ்வப்போது பாடலும் கேட்டுக்கொள்ள....
-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 04, 2013 5:22 pm

சிறந்த பதிவு சாமி! தொடருங்கள்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Dec 08, 2013 9:14 pm

பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் “திருவாசகம் என்பது அழகிய தெய்வத்தன்மை வாய்ந்த சொற்களாலாகிய செய்யுள் நூல் என்னும் பொருளை உடையதாகும். இது, திருவென்னும் அடையெடுத்த, வாசகம் என்னும் முதற்கருவியின் பெயர், அதன்காரியமாகிய செய்யுட்கு ஆயினமையின், கருவியாகுபெயராம் என்ப. வாசகம் – சொல். இத்திருவாசகத் திருபாட்டுக்கள், தெய்வ நலங்கனிந்த சொற்களாலும் சொற்றொடர்களாலும் அமைந்தவை; இனிமை எளிமை ஆழமுடைமை என்னுங்குணங்கள் தம்பால் அமையப்பெற்றவை; மெய்யன்புடன் ஓதுவார் கேட்பார் உணர்வார் எல்லோரையும் மிக்க பேரின்பத்தில் திளைப்பித்துப் பரவசப்படுத்தும் இயல்பின; அநுபவ உண்மைகளைத் தெளிவுண்டாக்கும்படி விளக்குவன,” என்று திருவாசகம் திருச்சதகக் கதிர்மணி விளக்கப்பேருரையில் முன்னர்க் கூறியிருக்கின்றார்கள்.
(தொடரும்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 09, 2013 6:30 am

மிகவும் நன்று ....தொடருங்கள் சாமி திருவாசகம் – பெயர்க்காரணம் 103459460 

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 11, 2013 10:19 pm

3.
எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘தெய்வத்தன்மை பொருந்திய வாசகம்’ எனப்பொருள்காண்பர்.

இன்னும் சிலர், ‘சிறந்த அழகிய பல சொற்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூல் என்றும், கடவுளைப்பற்றிய வாசகமாயிருத்தலின் திருவாசகம் எனப்பட்டது என்றும் கூறுவர்.

இத்துணையும் வைத்துக்கொண்டு திருவாசக நூலுள் நுழைவோம். ஆசிரியர் அடிகளார் ‘வாக்கு உன்மணி வார்த்தைக்காக்கி’ என்றும், ‘பேச்சிறந்த மாசில்மணியின் மணிவார்த்தை’ என்றும் இறைவனைப் பற்றிப்பாடும் தமது மொழியை வார்த்தை என்றழைக்கிறார்.

வார்த்தை, வாசகம் என்பன ஒரு பொருட்கிளவி. அல்லாமலும் இறைவன் தம்மை ஆட்க்கொண்ட அருள் விசேடத்தை உலகத்தவர்க்கு உரைப்பது போலவும், பிரிந்த்தனால் உண்டான வருத்தத்தைப்பற்றிப் பெருமானோடு உரையாடுதல் போலவும் இந்நூல் முழுவதும் அமைந்திருத்தலின் பேச்சு முறையான் அமைந்த இந்நூல் வாசகம் என்பதும் சிந்தித்தற்குரியது.
(தொடரும்)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Dec 11, 2013 10:50 pm

திருவாசகம் – பெயர்க்காரணம் 103459460 திருவாசகம் – பெயர்க்காரணம் 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2013 1:17 pm

திருவாசகம் – அழகிய சொல்

அதனால் தானே " ஒரு வாசகம் சொன்னாலும் திருவசகமாய் சொல்லணும் " என்றும் " "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் " என்றும் சொன்னார்கள் புன்னகை
.
.

அருமை சாமி, ரொம்ப அருமையான பதிவு, தொடருங்கள் புன்னகை  திருவாசகம் – பெயர்க்காரணம் 3838410834 திருவாசகம் – பெயர்க்காரணம் 3838410834 திருவாசகம் – பெயர்க்காரணம் 3838410834 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2013 1:19 pm

திருவாசகம் – அழகிய சொல்

அதனால் தானே " ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாய் சொல்லணும் " என்றும் " "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் " என்றும் சொன்னார்கள் புன்னகை
.
.

அருமை சாமி, ரொம்ப அருமையான பதிவு, தொடருங்கள் புன்னகை திருவாசகம் – பெயர்க்காரணம் 3838410834 திருவாசகம் – பெயர்க்காரணம் 3838410834 திருவாசகம் – பெயர்க்காரணம் 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Dec 14, 2013 7:02 am

4.
மறுபெயர்கள்:

இந்நூலை எடுத்துப்பாராட்டிய புலவர்கள் சில மறுபெயர்களை வழங்கியிருக்கிறார்கள். அவை திருவாசகம், மணிவாசகம், மதுரவாசகம், வாசகமாலை, வாசகத்தேன் முதலிய பலவாம்.

அவற்றுள் திருவாசகம் மணிவாசகம் என்ற பெயர்க்காரணங்கள் முன்னரே விளக்கப்பெற்றன.

மதுரவாசகம் என்று அழைத்தவர் சிவப்பிரகாச சுவாமிகள். இது மனம் குழைந்து படிப்பவர்களுக்கு, நெஞ்சத்து அமுதூறி நிற்கச்செய்வது ஒன்றாகலின், இப்பெயரிட்டு அழைத்தனர் போலும்.

வாசகமாலை என்பதும் அவர் தந்த பெயரே. பெயர்க்காரணத்தையும் ‘மாசறுமணிபோல் பன்னாள் வாசகமாலை சாத்தி’ என்ற பகுதியால் குறிப்பிடுகிறார். நன்மணிகள் பலகோத்த மாலைபோலச் சொன்மணிகள் கோத்து ஆக்கிய மாலை என்பது அவர் கருத்து.

வாசகத்தேன் என்பது நூற்சிறப்பினைப் பாடிய பெரியார் ஒருவரும், சிவப்பிரகாச சுவாமிகளும் வழங்கிய பெயர். இதுவும் திருவாசகத்தின் தன்மையாற் போந்த பெயர்.

முத்தி நிச்சயப்பேருரை யாசிரியர் வெள்ளியம்பலவாணர் ‘கோவை திருவாசகம் என்றும், திருவாசகம் திருக்கோவை என்றும் சேர்த்தே நூற்பெயர் வழங்குவர். இதனால் திருவாசகம்  திருக்கோவையார் இரண்டுமே ஒரு நூலுக்கு இணைந்த பெயராக இருக்கலாம் என்ற எண்ணமுண்டு.

(தொடரும்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக