புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
32 Posts - 55%
heezulia
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
23 Posts - 40%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
306 Posts - 45%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
17 Posts - 3%
prajai
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
9 Posts - 1%
Jenila
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
4 Posts - 1%
jairam
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10பாமரர் தேவாரம் - Page 15 Poll_m10பாமரர் தேவாரம் - Page 15 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 15 of 20 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 18, 2015 7:49 am

சுற்றில் அமர்வர் பைரவர் சூரி யதேவன் பிள்ளையார்
உற்ற துணைகொள் வேலவன் உவந்தே அருள்செய் லட்சுமி
கற்றார் போற்றும் நாமகள் கலியைக் கொடுக்கும் கோள்நவம்
மற்றும் நந்தி யென்றுநாம் மகிழ வெதிர்கொள் பாடியே. ... 5

கோட்டம் வாழும் தக்கணர் குமரி நடேசர் பிள்ளையார்
வாட்டம் தீர்பிட் சாடனர் மலரோன் ராகு என்றிவர்
நாட்டம் எல்லாம் நம்வினை நலியச் செய்தே காப்பதே
பாட்டன் பலரும் போற்றிய பழவூர் எதிர்கொள் பாடியே. ... 6


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 18, 2015 7:52 am

சுற்றில் அமர்வர் பைரவர் சூரி யதேவன் பிள்ளையார்
உற்ற துணைகொள் வேலவன் உவந்தே அருள்செய் லட்சுமி
கற்றார் போற்றும் நாமகள் கலியைக் கொடுக்கும் கோள்நவம்
மற்றும் நந்தி யென்றுநாம் மகிழ வெதிர்கொள் பாடியே. ... 5

கோட்டம் வாழும் தக்கணர் குமரி நடேசர் பிள்ளையார்
வாட்டம் தீர்பிட் சாடனர் மலரோன் ராகு என்றிவர்
நாட்டம் எல்லாம் நம்வினை நலியச் செய்தே காப்பதே
பாட்டன் பலரும் போற்றிய பழவூர் எதிர்கொள் பாடியே. ... 6


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 21, 2015 7:41 am

மத்தம் மதியம் மானுடன் மழுவும் சிகைவீழ் வானதி
நித்தம் தேயும் சந்திரன் நீண்டே நெளியும் பாம்பென
அத்தன் சூடி பார்வதி யாயோர் பாக மேனியன்
சித்தம் நடனம் செய்யவே சேர்வீர் எதிர்கொள் பாடியே. ... 7

மலையைத் தூக்க ராவணன் வலிமை காட்டும் யத்தனம்
குலையச் செய்தே கால்விரல் கூர்ந்தே வாட்டும் ஈசரே
அலையும் புரங்கள் தீக்குண வாக்கும் அஞ்செ ழுத்தராம்
தொலையும் பாவம் புண்ணியம் தொடரும் எதிர்கொள் பாடியே. ... 8

மாலும் அயனும் தேடியே மாயச் செய்தாட் கொண்டவர்
ஆலம் அடியில் நால்வருக் கரிய உண்மை விண்டவர்
ஆல கால நஞ்சினை அருந்திக் கழுத்தில் கொண்டவர்
கோலம் காண வாருமின் கோவில் எதிர்கொள் பாடியே. ... 9

வேதம் தள்ளும் பாதையை வீணர் மட்டும் நாடுவர்
பேதம் இல்லா ஈசரின் பேர்கொள் நெறியே வாழ்வினில்
போதம் கிட்டும் பாதையாய்ப் போவோர்க் கில்லை தோல்வியே
நாதன் நமச்சி வாயரை நாட வெதிர்கொள் பாடியே. ... 10

தோற்றம் மரணம் வஞ்சகம் துயரம் அலைக்கும் ஐம்புலன்
நீற்றை அணியும் ஈசராம் நீல கண்டர் நீக்குவர்
சாற்றும் பதிகம் சுந்தரர் சாறும் சொல்லும் மந்திரம்
ஏற்றே இன்றே நாடுவீர் ஈசர் எதிர்கொள் பாடியே. ... 11

--ரமணி, 11-12/05/2015, கலி.29/01/5116

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed May 27, 2015 7:46 am

திருப்புறம்பியம்
(எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் விளம் மா)

சம்பந்தர் தேவாரம்: 3.120.1: மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை

கோவில்
Satchinadeswarar Temple : Satchinadeswarar Satchinadeswarar Temple Details | Satchinadeswarar - Tirupurambiam | Tamilnadu Temple | ????????????????
?????? ?????????? ??????, ???????????????? - Satchi Natheswarar Temple, Thirupurambiyam
: ( ) : kamakoti.org:

பதிகம்
சம்பந்தர்: 2.030.1: மறம்பய மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை
??????? ???????? ???????? ????????
அப்பர்: 6.013.1: கொடிமாட நீள்தெருவு கூடல் கோட்டூர்
??????? ???????? ???????? ????????
சுந்தரர்: 7.035.1: அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி
??????? ???????? ???????? ????????

காப்பு
ஊழியில் காத்த உமைமுதற் பிள்ளையே!
ஊழிப் புறம்பாகும் ஊர்த்தலத்தில் - வாழுகின்ற
சாட்சிநா தீசர் சகலமும் தந்தருளும்
ஆட்சியைப் பாட அருள்.

பதிகம்
(எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் விளம் மா)

பிரளயப் புறம்பாய் அமைந்தவூர்ப் பெயராம்
. பிறையணிப் பரமனித் தலத்தில்
கரும்பன மொழிசொல் சாம்பவி சேரக்
. கருவினில் வினைகளைக் கொண்டே
உருவினில் தானே யெழுந்தவி லிங்கம்
. ஒருமணச் சான்றென நின்றார்
புரந்தரும் மாயைப் புகைதெளி விக்கப்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 1

வருணனின் படைப்பாய்க் கடல்நுரை கிளிஞ்சல்
. வடிவினில் உட்பொரு ளாகிப்
பிரளயம் புகாதே ஊரினைக் காத்த
. பிள்ளையார் முன்னுறும் சிறப்பாய்
ஒருமுறை வருடம் தேனபி டேகம்
. உறிஞ்சுவார் முற்றிலும் உண்மை!
புரையுறும் மாயைப் புண்ணது மறையப்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 2


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 28, 2015 9:25 am

தனித்துறை குருவாய்த் தரிசனம் தருவார்
. தமிழகத் தொன்றென இதுவாம்
சனந்தனர் சனகர் புலத்தியர் மற்றும்
. தமிழ்முனி விசுவமித் திரரும்
அனலனை வணங்க வெளிவரும் சுற்றில்
. அவரது லிங்கமும் பலவே
புனலணிச் சடையர் புதிர்களை விளக்கப்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 3

கருவறைச் சுற்றுச் சுவர்களில் சிற்பம்
. கவினுற விளங்குதல் காண்போம்
உருவினில் அவைதான் சிதைந்துள காட்சி
. உளந்தனில் வேதனை தருமே
’கரும்பொடு படுஞ்சொல் மடந்தை’யின் கோவிற்
. கருவரைச் சுற்றினி ரண்டில்
பெரும்பிணி பிறப்பும் இறப்புமாம் சுழலைப்
. புறம்பயம் போக்குவ தாமே. ... 4

[’கரும்பொடு படுஞ்சொல் மடந்தை’ -- சம்பந்தர் பிரயோகம்]


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri May 29, 2015 8:33 am

தட்சிணா மூர்த்தி குளக்கரை மேவச்
. சட்டைநா தர்துறை மேலே
வெட்டிய விறகை ஆயலம் கொணர்ந்த
. வேழையின் காட்சியாய் நின்றார்
சட்டையப் பன்கொள் சாட்சியாய் வன்னி,
. தலமரம் புன்னையாம் நெற்றிப்
பொட்டினில் பொறியைக் கொண்டவன் மேவும்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 5

திருமண வரமும் கல்வியிற் சிறப்பும்
. செல்வமாய்க் குழந்தையும் கேட்பர்
திருவிளை யாடல் தொல்கதை மற்றும்
. திருத்தல புராணமும் பேசும்
திருமண சாட்சி சொல்லம துரையில்
. திருக்கிண றுடன்மரம் வன்னி
பொருத்திய ஈசன் பொடியணி கொண்டே
. புறம்பயம் மேவிடப் புகழே. ... 6


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat May 30, 2015 10:54 am

விரித்தவன் அவனே குவிந்தவன் அவனே
. வினையறப் பிரித்தவன் அவனே
சிரித்தவன் உலகாய் உருத்தவன் அவனே
. சினமுற எரித்தவன் அவனே
எருத்தினில் உதைத்தே பாலனைக் காத்தே
. எமனவன் பணிந்திட அருளைப்
புரிந்தவன் புரியாப் புதிரெனப் புணரும்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 7

இராவணன் மலையைத் தூக்கிட முயல
. இவரவன் தலைகளும் தோளும்
ஒரேவிரல் காலால் அழுத்தியே அவனை
. ஒறுத்தவன் கதறிடச் செய்தார்
சராசரம் அண்டம் யாவையும் காத்தே
. சகலமும் அழித்துயர் வுதரும்
புராதனன் புனிதன் புகலெனக் கொண்டே
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 8


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jun 01, 2015 6:44 pm

(இறுதிப் பகுதி)

மாலவன் தாளும் மலரவன் தலையும்
. மாய்ந்தனர் தேடிய லைந்தே
ஆலமர் செல்வன் தன்னிலை விளக்கி
. ஆறுதல் தந்தருள் செய்தார்
நீலமி டற்றர் நிலவணிச் சடையர்
. நிலமிசை காணுதற் கென்றே
போலியாம் மாயை நீக்கவே மேவும்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 9

ஆரணம் தள்ளும் அயல்நெறி எதுவும்
. அறமெனக் கொளுவார் இன்றி
வேரென வேதம் விளங்கிடும் சைவ
. விழுநெறி கொளுவார் உள்ளக்
காரிருள் நீக்கிக் கேள்வியின் ஞானம்
. கனியெனக் கைவரச் செய்வார்
பூரணன் பூந்தாள் பற்றியே வாழ்வோம்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 10

அத்தனைப் போற்றி ஆளுடைப் பிள்ளை
. அடியார்க் கருள்வது சொன்னார்
புத்தகம் ஏந்திப் புறம்பயம் போனார்
. பூரணன் என்றனர் அப்பர்
சித்தமஞ் ஞானம் போகவே நாடு
. சிவனருள் சுந்தரர் சொன்னார்
பொத்திடும் இமையாய் அடியவர் காப்பார்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 11

--ரமணி, 20-23/05/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jun 04, 2015 8:56 am

திருவின்னம்பூர் (இன்று இன்னம்பூர்)
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம்: 2.43.1: கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=674
http://www.shivatemples.com/nofct/nct45.php

பதிகம்
சம்பந்தர்: 3.095: எண்டிசைக் கும்புகழ்
http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30950
அப்பர்: 4.072: விண்ணவர் மகுட கோடி
http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40720
4.101: மன்னு மலைமகள்
http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=41000
5.021: என்னி லாரு மெனக்கினி
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50210
6.089: அல்லிமலர் நாற்றத் துள்ளார்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60890

காப்பு
எழுத்தினில் எண்ணம் எழுந்தே இறைவன்
எழுத்தறி நாதரின்னம் பூரில் - எழுந்த
விழுமத்தைப் பாட விநாயகனே உன்னைத்
தொழுதேன் அருளால் தொடு.

பதிகம்
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

கடமையெனப் பெற்றோர்கள் கல்வியருள் மழலையர்க்கே
உடைமையென நாடவருள் உமையீசன் செய்தலமாம்
சுடரோனுக் கருள்செய்த சூலமேந்தி யெழுந்தருளும்
இடிபோலும் முழவொலிக்கும் இன்னம்பூர்த் தலமாமே. ... 1

எழுத்தறிவித் தானிறைவன் எனும்வெற்றி வேட்கைநூல்
எழுத்துறுநா எண்ணுமனம் எழுதும்கை எல்லாமே
வழுத்திநிற்க வானிறைவன் வாலிறைவன் வரமருள
எழுந்தருளும் நாதெனென இன்னம்பூர்த் தலமாமே. ... 2

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jun 05, 2015 7:46 am

நித்தியகல் யாணியென்று நிதம்திரும ணக்கோலம்
சத்தியவள் கன்னியர்க்குத் தாமதமில் மணமருள்வாள்
கொத்துமலர்க் குழலன்னை கோலமதோ தவக்கோலம்
இத்தலமாம் இன்னம்பூர் இறைவியவள் இருவுருவே. ... 3

அகத்தியர்க்குத் தமிழ்சொன்னான் அரசனுக்குக் கணக்குரைத்தான்
பகலவனின் ஒளியோங்கப் பனிமதியன் அருள்செய்தான்
அகமலரும் முகமலராள் ஆதிசிவன் இடமுறவே
இகவாழ்வில் வினைதீர்க்க இன்னம்பூர் மேவினனே. ... 4


Sponsored content

PostSponsored content



Page 15 of 20 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக