புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
31 Posts - 53%
heezulia
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
2 Posts - 3%
jairam
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
1 Post - 2%
சிவா
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
1 Post - 2%
Manimegala
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
13 Posts - 4%
prajai
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
9 Posts - 3%
Jenila
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
3 Posts - 1%
jairam
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10பாமரர் தேவாரம் - Page 19 Poll_m10பாமரர் தேவாரம் - Page 19 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 19 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Oct 23, 2015 8:53 am

(இறுதிப் பகுதி)

தான வன்மலை தூக்கமு யன்றத லைபத்தும்
வான வர்முதல் ஆனவர் கால்விரல் வைத்தவனின்
தான கந்தைய ழித்தபின் செய்தருள் சடையப்பர்
பான கஞ்செய நஞ்சுணி யூர்நனி பள்ளியே. ... 8

மால யன்றலை தாளிணை தேடினர் மாய்ந்தனர்
கோல மாவழற் கூத்தன ருள்செயக் கூடினர்
நீல கண்டனை நெஞ்சுரு கில்வினை நையுமே
பால னம்தரும் பாதவி ணைநனி பள்ளியே. ... 9

வேதம் யாவையும் தள்ளிடும் பாதைகள் வீணென
வேதன் பாதையில் சாதனை செய்பவர் வில்லடை
வேத னைவினை யாவையும் வேடுவன் வீட்டுவன்
பாதம் சென்னியிற் கொள்ளவென் றூர்நனி பள்ளியே. ... 10

[வில்லடை = இடையூறு, தடை; வீட்டுதல் = அழித்தல்]

தந்தை தோளமர் காழியர் பண்மலர் சாற்றினர்
தந்தை பேரவர் தாத்துவி கம்செல வேண்டினர்
சுந்த ரர்நனி போற்றினர் சீர்கொளும் சொக்கனை
பந்தம் தீர்ந்திட பத்தரின் ஊர்நனி பள்ளியே. ... 11

[காழியர் = சீர்காழி ஊரினரான சம்பந்தர்; தந்தை பேரவர் = அப்பர்;
தாத்துவிகம் செல = தன்னை வருத்தும் 96 உடற் தத்துவ
தாத்துவிகங்கள் நீங்க]

--ரமணி, 03-05/10/2015, கலி.18/06/5116

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Oct 31, 2015 6:13 pm

மூவலூர் (மயிலாடுதுறை அடுத்து)
(ஆசிரிய இணைக்குறட்டுறை: மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

ஆசிரிய இணைக்குறட்டுறை அமைப்பு

1. முதலடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டும் நாலும் சிந்தடி
2. அடிகள் ஒன்று, மூன்றின் வாய்பாடு: மா கூவிளம் கூவிளம் கூவிளம்
3. அடிகள் இரண்டு, நான்கின் வாய்பாடு: மா கூவிளம் கூவிளம்

4. அடிகளின் தொடக்கம் நேரசையில் யெனில் 11/8 எழுத்துகள்;
. . நிரையசை யெனில் 12/9 எழுத்துகள்.

5. அடிதோறும் இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும்.

6. அடிதோறும், ஈற்றுச்சீர் தவிர, மற்ற சீர்களில் விளச்சீர் வருமிடத்தில் மாச்சீர் வரலாம்;
. . அங்ஙனம் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

7. விளச்சீர் வருமிடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரும்.

உதாரணம்: சம்பந்தர் தேவாரம் 01.056.01
காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே.

கோவில்
http://www.shivatemples.com/vt/vt_kovil3/vt124.php
http://temple.dinamalar.com/ListingMore_search.php?search=மூவலூர்&city=0
http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_moovalur.htm

வைப்புப் பதிகம்: அப்பர்:
05.065.08: மூவலூரும் முக் கண்ணனூர் காண்மினே.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50650

06.041.09: மூவலூர் மேவினாய் நீயே யென்றும்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60410

காப்பு
(அளவியல் நேரிசை வெண்பா)
பொன்னி நதிக்கரையில் புன்னை மரத்தடியில்
தன்னை வழிபட்ட தாண்டவனை - மின்னும்
வரிகளில் மூவலூர் வள்ளலைப் பாடக்
கரிமுகன் கண்ணருளே காப்பு.

பதிகம்
(ஆசிரிய இணைக்குறட்டுறை: மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

மூவர் தானவர் முப்புரம் வான்சுற்ற
தேவர் யாவரும் திண்டாட
ஆர்வன் காப்பை அளித்த மூவலூர்
சேர்வன் தீவினை தீருமே. ... 1

(ஆசிரிய இணைக்குறட்டுறை: மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

அரியே அம்பாம் அயனவர் சாரதி
இருவர்க் கும்செருக் கேறவே
சிரித்தே அத்தனும் செற்றிட மூவலூர்
இருவர் போற்றினர் ஈசனே. ... 2 ... (திருத்திய வடிவம்)

வழிகாட் டும்சிவன் வாழ்வில ருள்செய
விழிகாட் டும்சிவை மங்களம்
இழிபா வம்செல இத்தலம் மூவலூர்
எழில்மே வும்கலை யீசனே. ... 3

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 04, 2015 6:44 pm

தீர்த்தம் ஏழெனத் தென்னனின் ஆலயம்
பார்த்தே போற்றியோர் பல்லிறை
மூர்த்தம் தானெழு மூலவன் மூவலூர்
ஆர்வினை கொள்ளவ மைதியே. ... 4

[பல்லிறை = பல கடவுளர்கள்]

பலிபீ டம்முனை பால்வணன் நந்தியர்
பலவே லிப்பரப் பாய்விரி
உலக மூர்த்தியின் உன்னதம் மூவலூர்
நலந்த ரும்சிலை நால்வகை. ... 5

ஆலின் கீழமர் அண்ணலே பாற்கடல்
ஆலம் கண்டம மர்த்தினான்
கால னையுதைக் கண்ணுதல் மூவலூர்க்
கோலம் கொண்டருள் கூத்தனே. ... 6

கழல்கள் மேவிய காலிணை காலமும்
நிழலென் றேகொளின் நீள்வினை
அழிந்தே அன்பே அகமுற மூவலூர்
அழல்வண் ணன்னருள் ஆடலே. ... 7

[அழல்வண்ணன்னருள் = னகர ஒற்று விரித்தல் விகாரம்]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:37 pm

ரமணி wrote:தீர்த்தம் ஏழெனத் தென்னனின் ஆலயம்
பார்த்தே போற்றியோர் பல்லிறை
மூர்த்தம் தானெழு மூலவன் மூவலூர்
ஆர்வினை கொள்ளவ மைதியே. ... 4

[பல்லிறை = பல கடவுளர்கள்]

பலிபீ டம்முனை பால்வணன் நந்தியர்
பலவே லிப்பரப் பாய்விரி
உலக மூர்த்தியின் உன்னதம் மூவலூர்
நலந்த ரும்சிலை நால்வகை. ... 5

ஆலின் கீழமர் அண்ணலே பாற்கடல்
ஆலம் கண்டம மர்த்தினான்
கால னையுதைக் கண்ணுதல் மூவலூர்க்
கோலம் கொண்டருள் கூத்தனே. ... 6

கழல்கள் மேவிய காலிணை காலமும்
நிழலென் றேகொளின் நீள்வினை
அழிந்தே அன்பே அகமுற மூவலூர்
அழல்வண் ணன்னருள் ஆடலே. ... 7

[அழல்வண்ணன்னருள் = னகர ஒற்று விரித்தல் விகாரம்]
மேற்கோள் செய்த பதிவு: 1172940
பாமரர் தேவாரம் - Page 19 3838410834 பாமரர் தேவாரம் - Page 19 103459460 பாமரர் தேவாரம் - Page 19 1571444738

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 10, 2015 5:44 pm

(இறுதிப் பகுதி)

மலையைக் கெல்லிய மாமத ராவணன்
தலையைக் கால்விரல் தாழ்த்தினன்
சிலையால் பூவெறி சித்தசன் மூவலூர்த்
தலைவன் ஆக்கினன் சாம்பரே. ... 8

[சித்தசன் = மன்மதன்]

வேதன் நாரணன் விண்ணெழு சோதியின்
பாதம் உச்சியைப் பார்த்திலர்
ஆதி யண்ணல வர்க்கருள் மூவலூர்
பேதம் தீர்த்தருள் பித்தனே. ... 9

வேதம் தள்ளிடும் வேற்றும தந்தனில்
வேத னைகொளும் வில்லிலை
வேதம் கொள்ளுரு வேரெனும் மூவலூர்
நாதன் காலிணை நன்மையே. ... 10

[வில்லிலை = ஒளியில்லை]

வாக்கில் அப்பரின் வைப்பெனும் இத்தலம்
நோக்கும் யார்க்குமே நொய்விலை
காக்கும் தெய்வமாய்க் கண்ணுதல் மூவலூர்
பார்க்கில் போமே பழவினை!

[-னொய்வு = மனவருத்தம்] ... 11

--ரமணி, 16/10/2015

*****


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 5:49 pm

ரமணி wrote:(இறுதிப் பகுதி)

மலையைக் கெல்லிய மாமத ராவணன்
தலையைக் கால்விரல் தாழ்த்தினன்
சிலையால் பூவெறி சித்தசன் மூவலூர்த்
தலைவன் ஆக்கினன் சாம்பரே. ... 8

[சித்தசன் = மன்மதன்]

வேதன் நாரணன் விண்ணெழு சோதியின்
பாதம் உச்சியைப் பார்த்திலர்
ஆதி யண்ணல வர்க்கருள் மூவலூர்
பேதம் தீர்த்தருள் பித்தனே. ... 9

வேதம் தள்ளிடும் வேற்றும தந்தனில்
வேத னைகொளும் வில்லிலை
வேதம் கொள்ளுரு வேரெனும் மூவலூர்
நாதன் காலிணை நன்மையே. ... 10

[வில்லிலை = ஒளியில்லை]

வாக்கில் அப்பரின் வைப்பெனும் இத்தலம்
நோக்கும் யார்க்குமே நொய்விலை
காக்கும் தெய்வமாய்க் கண்ணுதல் மூவலூர்
பார்க்கில் போமே பழவினை!

[-னொய்வு = மனவருத்தம்] ... 11

--ரமணி, 16/10/2015

*****
மேற்கோள் செய்த பதிவு: 1174027
பாமரர் தேவாரம் - Page 19 3838410834 பாமரர் தேவாரம் - Page 19 103459460 பாமரர் தேவாரம் - Page 19 1571444738

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Feb 15, 2016 7:05 pm

பூவாளூர்
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
சம்பந்தர் தேவாரம்: 2.43.1: கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்)

கோவில்
http://www.dinamani.com/weekly_supplements/vellimani/article728935.ece

காப்பு
(அளவியல் இன்னிசை வெண்பா)

பூவாளூர் புக்குறையும் வெள்ளை விநாயக!
பூவாளி கொண்டடிக்கப் பொற்றவம் நீங்கியே
அங்கசன் தன்னை அனங்கனென் றாக்கிய
அங்கணனைப் பாட அருள்.

[பூவாளி = பூவால் ஆகிய அம்பு; அங்கசன் = மனதில் பிறக்கும் மன்மதன்;
அனங்கன் = தூல உடலற்று சூக்கும உடலில் உலவும் மன்மதன்;
அங்கணன் = அழகிய கண்ணுடைய சிவன்]

பதிகம்
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

முன்னொருநாள் மாமலையில் முக்கண்ணன் தவம்செய்தார்
இன்னலுரு சூரபத்மன் இமையவரைத் துன்புறுத்தப்
பொன்னுலகார் மன்மதனால் பூவாளி தொடுக்கநேர்ந்த
புன்கண்மை போக்கியவர் பூவாளூர்ப் பூரணனே. ... 1

[இமையவர், பொன்னுலகார் = தேவர்; புன்கண்மை = அச்சம், துன்பம்]

சாம்பசிவன் கண்திறக்கச் சாம்பலானான் மன்மதனே
ஏம்பலுற்ற ரதிதேவி இறைநோக்கித் தவம்செய்யச்
சாம்பவிச மேதனெனத் தாண்டவனும் காட்சிதந்த
பூம்பதங்கள் சேர்வதற்கே பூவாளூர் தலமாமே. ... 2

[ஏம்பல் = வருத்தம், மனக்கலக்கம்]

மன்மதனை உயிர்ப்பிக்க மன்மதபு ரம்பேராம்
பொன்மலர்கள் பொழிலாரப் பூவாளூர் பேராமே
இன்னமுதாய் அன்னையுடன் ஈசனவர் வீற்றருளப்
பொன்னனடி சேர்வதற்கே பூவாளூர் தலமாமே. ... 3

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Feb 19, 2016 8:04 pm

திருமூல நாதருடன் திருக்குங்கு மத்தழகி
தருவெனவே வில்வமரம் தலமரமாய் ஆவதுவாம்
அருணகிரி ஒருகல்லாம் அறுமுகனைப் பாடினரே
பொருவினையைப் போவினையாய்ப் பூவாளூர் செய்திடுமே. ... 4

தென்னாட்டுக் கயையாகும் திருத்தலமென் றிவ்வூராம்
தென்புலத்தார் அருள்வேண்டித் திதிசெய்யும் ஆறாகக்
கங்கைநதிக் கிணையாகப் பங்குனியாம் திங்களணிப்
புங்கவனாய் மேவினனே பூவாளூர்த் திருத்தலமே. ... 5

நீங்கிடவே நாகதோஶம் நின்றருள்வி நாயகராம்
ஆங்கவர்க்கு மோதகத்தை அர்ப்பணித்தால் நலமாகும்
ஈங்கன்னை யைப்போற்ற இல்லைவது வைத்தடையே
பூங்கொடியாள் மேவிநிற்கும் பூவாளூர்ப் புண்ணியனே. ... 6

கோட்டத்தில் பலதெய்வம் கொண்டருளும் கோவிலாகும்
ஆட்டத்தின் நாயகனாய் அடுகாட்டில் ஆடுபவன்
ஆட்சியிலே அறம்நான்கும் அமையவருள் ஆதிதேவன்
பூட்சியெலாம் நீறணிந்தே பூவளூரில் மேவுவனே. ... 7

[பூட்சி = உடல்]

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Feb 21, 2016 8:56 am

துச்சனென ராவணனைத் துவளவைத்த தூமணியின்
உச்சிமுதல் தாள்வரையில் உன்மத்தம் உன்னதமே
நச்சரவும் பொடியணியும் நதிநீரும் திங்களுமாய்ப்
புச்சிமலர் சூடுபவன் பூவளூரில் மேவினனே. ... 8

[புச்சிமலர் = எருக்குமலர்]

ஆரழலாய் எழுந்தபிரான் அடிமுடியைக் காணாதே
நாரணனும் நான்முகனும் நலிவுற்ற போதினிலே
வேரெனத்தான் விளங்குவதை வெள்விடையான் அறிவுறுத்திப்
பூரணத்தைத் தந்தவர்க்குப் பூவாளூர் மேவினனே. ... 9

வேதநெறி விலக்குவதாய் வேறுநெறி விளங்குவதில்
சாதனையாய் ஏதுமிலாத் தானறியும் ஞானமிலாப்
பாதகமே எனவறிந்தே பரமசிவன் பாதவிணை
பூதலத்தில் தேடுவோர்க்குப் பூவாளூர் புண்ணியனே. ... 10

பூவாளி பூரணன்மேல் போட்டவொரு கணையாலே
பூவாளி உருவிழந்தே பொடியாகி அனங்கனாக
பூவாளி மனையாளின் பூவிழிக்குள் வைத்தவனைப்
பூவாலே போற்றடியார் பூவாளூர் சேர்வாரே. ... 11

--ரமணி, 01-10/11/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Feb 28, 2016 10:54 am

திருக்கஞ்சனூர்
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம்: 2.47.1: மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்)

குறிப்பு
பாடலின் ஈற்றயலடி வரும் பாடலின் முதற்சீரோடு அந்தாதித்தொடை அமைய மண்டலித்து வரும்.
இறுதியாய் நிற்கும் பதினொன்றாம் பாடல் ’அழற்கண்ணன் போற்றுவமே’ என்று முடிவுறும்.

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=907
http://www.shivatemples.com/nofct/nct36.php

தேவாரப் பதிகம்
அப்பர்: 6.90: மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60900

காப்பு
கஞ்சனூர் வாழும் கணபதியே உன்பாதம்
தஞ்சமெனக் கொண்டேன் தடைநீங்க - செஞ்சடையன்
கஞ்சனூர் ஆளும்கோன் கற்பகம்பேர் நானெழுதக்
குஞ்சரக்கை நுண்மை கொடு.

பதிகம்
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

அழற்கண்ணன் மணமகனாம் ஆடற்கோ தாண்டவனாம்
கழற்செல்வன் பாதவிணை கஞ்சனூரில் தரிசித்தே
விழுநாளில் வினைநீங்க வெள்விடையான் அருள்வேண்டி
மழுவாளி மாதேவ மாமணியைப் போற்றுவமே. ... 1

மாமணியைச் சபாமணியை உமாமணியைத் தூமணியைக்
காமணியை அன்னையுடன் கஞ்சனூரில் தரிசித்தே
தாமணியும் தோலணிந்து தாரணிந்த கோலத்தைத்
தூமணிவெண் ணீற்றாலே துதிபாடிப் போற்றுவமே. ... 2

[காமணி = காக்கும் மணி; தூமணி = முத்து]

துதிபாடிப் போற்றிவுயிர்த் தொன்மையினை அறிவோமே
பதம்காட்டிக் கஞ்சனூரில் பராசரர்க்கு முத்திதந்தே
வதுவைக்கோ லங்காட்டி மலரோனுக் கருள்செய்தே
முதன்மைக்கோ வெனநிற்கும் முக்கணனைப் போற்றுவமே. ... 3

[உயிர்த்தொன்மை = பரமனின் துளியான நம் சீவான்மா இந்த உலகினும்
தொன்மையானது என்னும் உண்மை]

*****


Sponsored content

PostSponsored content



Page 19 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக