புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
1 Post - 1%
bala_t
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
1 Post - 1%
prajai
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
284 Posts - 42%
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
6 Posts - 1%
prajai
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
4 Posts - 1%
manikavi
நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு அழகின் அலை


   
   

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:09 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Apr 01, 2014 10:28 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 97


அலைமகளும் நீதானே சொல்வாய் – என்
அறியாமை போக்கியே இங்குநீ செல்வாய்
அலைபாயும் மனம்நிறுத்தி
அறிவுக்கண் திறந்துவிட்டு
நிலையாக வைத்துவிட்ட
நான்முகியே அம்பிகையே
கலையாத ஆர்வத்தில் வந்தேன் – உன்னால்
கவிதைகள் பலவாறாய் வடித்துப்பார்க் கின்றேன்..

மலைமகளும் நீயோடி தங்கம் – என்
மனதுள்ள சந்தேகம் போக்குவாய் இங்கும்
விளையாட்டுப் பிள்ளையென
வினவத்தான் செய்கின்றேன்
சலசலக்கும் ஆறாக
பதிலைநான் கேட்கின்றேன்
வலைவீசி மீன்பிடித்த சிவனார் – உனை
பார்வதியாய் கைபிடித்த துண்மைதான் அன்றோ..

கலகலப்பாய்க் கல்விதனை தருவாள் – அந்தக்
கலைமகளும் நீதானே சொல்லுவாய் அம்மா
மளமளவெனப் பேசாமல்
மயக்கமெதும் கொள்ளாமல்
வளைக்காமல் கேட்கின்றேன்
வயணமாகச் சொல்லிடுவாய்
நலமெல்லாம் தந்திடும் கல்வி – அதை
நவில்வதும் நீதானே நீதானே செல்வி

எல்லாரைக் கொண்டவளும் நீதான – எனக்
கெல்லாமும் தந்தவளும் நீதான்
நில்லாத உலகினிலே
நிலைத்தேதான் இருப்பவளே
மல்லிகையின் மணமாக
மனதுள்ளே நிலைப்பவளே
வல்லோர்கள் சொல்வார்கள் உன்னை – வாழ
வைக்கின்ற மஹாமாயை நீதானே என்று.


சாயங்கள் சிச்சிறிதாய் வெளுக்கும் – பின்பு
சத்திரமாய் நினைத்து உயிர் வானிலே பறக்கும்
மாயமாய்ப் போகுமிக் காயம் – பின்பு
மறைந்திட்ட பின்னாலே உன்னிடம் பாயும்
தாயங்கள் போட்டு எனை ஆட்டி
தவிக்கவே வைக்காதே சொல்லுவாய் பதிலை
மாயாதான் நீதானே ஷக்தி..- இந்த
மாநில மெல்லாமே உன்னடி பற்றி

**

சில சமயங்களில் திரைப் படங்களில் சில நல்ல பாடல்கள் வரும்.. அதன் சிச்சுவேஷன் பற்றி மட்டும் சிந்தித்திருப்போம்..பாடலின் உள்ளர்த்தம் நினைக்கத்தோன்றாது.. பலமுறை கேட்ட போதிலும்.. அப்படி ஒரு பாடல் நான் பல முறை கேட்டது.. இன்றைய ஸ்லோகம் படித்த பின்பு தான் புரிந்தது..

அதிலிருந்து சில வரிகள்.

உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி எங்க ரீங்காரி
இங்கே உன்னை நம்பி வந்தோம் அம்மா வா நீவா

சிவனும் திருமாலும் நீயோ அருள் செய்யும் மாகாளி நீயோ]
தவம் செய்யும் கன்னியா குமரியும் நீயோ தாயான விந்தையைச் சொல்வாயோ..

சூரிய சந்திர ஜோதியும் நான்
சுந்த்ர தாண்டவ மூர்த்தியும் நான்
நாரணன் நான்முக பிரம்மமும் நான்
நாரணி பார்வதி உமை நானே

நல்ல இனிய பாடல்..அம்பாள் சொல்வது போல் நம்ம வீட்டு தெய்வம் எனும்படத்தில் வந்தது.

**
இன்றைய ஸ்லோகத்தில் பகவத் பாதர் என்ன சொல்லப் போகிறார் எனத் தெரிந்திருக்கும்.. வாருங்கள்… லெட்ஸ் கோ அண்ட் ஸீ


**

கிராமாஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரிநயாம்
துரீயா காபி த்வம் துரதிகமநிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷீ

Giram aahur devim Druhina-gruhinim agaamavidho
Hareh pathnim padhmam Hara-sahacharim adhri-thanayam;
Thuriya kapi thvam dhuradhigama-niseema-mahima
Maha-maya visvam bhramayasi parabhrahma mahishi.

**


**
“பரப்ப்ரம்ம ஸ்வரூபியான பரமேஸ்வரனின் பட்ட மகிஷியே. அம்பிகையே..

மறையின் பொருள் அறிந்தவர் உன்னையே பிரம்மாவின் பத்தினியான கலைமகள் என்றும், விஷ்ணுவின் பத்தினியான திருமகள் என்றும் கூறுகின்றனர்..அவர்களே உன்னை ஈசனை மணம் புரிந்த பார்வதிஎன்றும் சொல்கின்றனர்.

நீயோ வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாத, நான்காவதாக அடைவதற்கு அரிதான எல்லையில்லாத பெருமை கொண்டவளான மகாமாயை என்னும் சக்தியாக உலகினை ஆட்டுவிக்கின்றாய்..

**

இவ்வாறாய் தேவியை தியானிப்பவர்கள் ஜீவன் முக்தி பெறுவார்களாம்.


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Apr 02, 2014 10:56 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 98


காலம் பலவாகக் கால்கள் நடைதளரும்
ஞாலத்தில் நாட்டம் நலிந்துவரும் போதினில்
தேவியின் பொற்பாதம் தேடிச் சரணடைய
மேவும் மகிழ்ச்சியு மே

செவ்வண்ணக் குழம்பதனால் சிவந்திருக்கும்  காலை
…சிறுவன்நான் பற்றித்தான் வார்த்திடுவேன் நீரை
எவ்வண்ணம் எத்திக்கு என்றெல்லாம் கூட
..இருந்தேதான் கடந்துவிட்ட காலங்களும் போக
இவ்வண்ணம் இங்கெழுத இன்னருளும் தந்தாய்
….இனிதான உன்னழகை இயம்பவைக்கச் செய்தாய்..
அவ்வண்ணம் அம்பிகையுன் அழகுவண்ணம் நெஞ்சில்
…ஆழமாகப் பதிந்திடத்தான் ஆட்கொள்வாய் நீயே..

***

இன்றைய ஸ்லோகத்தில் பகவத்பாதர் கொஞ்சூண்டு கவலை கொள்கிறார்.. யாரைப்போல கம்பனைப் போல..

ஓசை பெற்றுயர் பாற்கடலுற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையனுற்றேன்..

வால்மீகியின் ராமாயணத்தைக் கம்பன் பெரும் பாற்கடலுக்கு ஒப்பிடுகிறார்.. ஓசை பொருந்திய பாற்கடலை அடைந்த பூனையானது அதை முற்றிலும் நக்கிக்குடித்துவிடலாம் என எண்ணுவது போல ராம காதையைப் பாட முற்படுகிறேன், உலகம் எள்ளி நகையாடினாலும் கவலை இல்லை என்கிறார் கம்பர்.. பின்னர் எழுதிய கம்ப ராமாயணப் புகழ் சொல்லி மாளாது...

பகவத் பாதர் எப்படிப் பட்டவர்.. அம்பிகையின் அருள் பெற்றவர்.. அவருக்கும் சந்தேகம் வருகிறது..
என்னவாம்.

சரி. வாருங்கள்.ஸ்லோகத்தினுள் சென்று பார்ப்போம்..

**

கதா காலே மாத: கதய கலிதாலக்தக ரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜநஜலம்
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதாகாரணதயாகதா
தத்தே வாணீ முக-கமல-தாம்பூல ரஸதாம்

Kadha kaale mathah kathaya kalith'alakthaka-rasam
Pibheyam vidyarthi thava charana-nirnejana-jalam;
Prakrithya mukhanam api cha kavitha-karanathaya
Kadha dhathe vani-mukha-kamala-thambula-rasatham.


**


“”அம்மையே.. உனதுபாதங்கள் செம்பஞ்சுக் குழம்பினால் அலங்கரிக்கப் பட்டதால் மேலும் சிவந்திருக்கின்றன..அப்படிப் பட்ட உனது பாத மலர்களைக் கழுவியதால் சிவந்த தீர்த்தத்தை பிரஹ்ம வித்யை என்னும் கல்வியை நாடும் நான் எப்போது பருகுவேன்..

வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் தான் தரித்த தாம்பூலச் சாற்றைப் பிரசாதமாக மற்ற்வர்களுக்கு வழங்கிட அவர்கள் கல்வி அறிவு பெற்றார்கள்.. அந்த தாம்பூலச் சாறினைப் பருகியவர்கள் ஊமையாக இருந்தாலும் பேச்சறிவும் கவி எழுதும் தன்மையும் பெற்றார்கள்.

அதற்குச் சமமான சக்தியுடைய தங்களதுபாத ப்ரஷாளன நீரை நான் எப்போது பருகுவேன்..”

**
இவ்வாறு தேவியை தியானிப்பவர் வாக்கினில் எப்பொழுதும் கலைமகள் குடியிருப்பாள்..

**


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Apr 02, 2014 2:14 pm

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 99

சுகம் என்பது என்ன..

சுருக்கமாய்ச் சிந்தித்தால் மண், பெண், பொன் இவையெல்லாம் யாருக்கு அருமையாக அமைகிறதோ அது தானா.. கூட பிணியில்லாத வாழ்வு.. சரி..

இவை எல்லாம் நிரந்தரமா..

இல்லை இவை எல்லாம் அழியக் கூடிய சுகங்கள்.

உதாரணத்திற்கு மகாகவி காளிதாஸ் என்ற திரைப்படத்தில் கு.மா. பாலசுப்பிரமணியன்(என நினைக்கிறேன்) எழுதிய கட்டளைக்கலித்துறைப் பாடல்..

தங்கமே தாமரை மொட்டுக ளாகித் தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியே பூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!

வாலி என்ன சொல்கிறார் ஒரு திரைப்பாடலில்…

தொட்ட சுகம் ஒன்றா என்ன
துள்ளும் உள்ளம் பந்தா என்ன
செவ்விதழை கண்ணால் என்ன
தேனெடுத்து உண்டால் என்ன
கொத்து மலர் செண்டா என்ன
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன

(கொஞ்ச நாளா சமர்த்தா இருந்தியேடா

சும்மா இரு மனசாட்சி.. 99வது ஸ்லோகம் வந்துட்டேன்.. முடியப்போகுதேன்னு ஒரு வித சோகத்தில இருக்கேன்..

அதுக்காக இந்தப் பாட்டுக்களா அதுசரி.. நன்னா இருக்குடாப்பா நீ பேச்றது.. நீ தான் எங்க போகப்போற.அம்பாள் தான் உன் மனதை விட்டு எங்க போகப் போறா..

அப்படிங்கற..

ஆமா..மேல சொல்லு)


அழியாத சுகம் என்பது என்ன.

புலமைப் பித்தன் எழுதிய திரைப்பாடலில் என்ன கூறுகிறார்.

கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்
இளைய தென்றல் காற்றினிலே...
இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்
வேதம் நீ இனிய நாதம் நீ

திரையில் இந்தப் பாடலின் சூழல் என்னவென்று தெரியாது.ஆனால் அழியாத சுகம் தருபவள் அம்பிகை – அதென்ன அழியாத சுகம் – மோட்சம் எனச் சொல்ல முடிகிறது.

ஆக இன்றைய ஸ்லோகத்தில் அம்பிகையைத் துதிப்பவருக்கு இன்னும் என்னவெல்லாம் கிடைக்கும் என பகவத் பாதர் சொல்வதை..

வாருங்கள் உள்ளே சென்று பார்க்கலாம்

**

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதிஹரி ஸபத்னோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாசவ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவாந்

Saraswathya lakshmya vidhi hari sapathno viharathe
Rathe pathivrithyam sidhilayathi ramyena vapusha
Chiram jivannehva kshapathi pasu pasa vyathikara
Paranandabhikhyam rasayathi rasam twadjanavaan.

**

”தேவி உன்னைத் தொழுபவர்களுக்கு கல்வியோடு செல்வமும் கலைமகளும் திருமகளும் அருளுகின்றனர். அதுவும் எவ்வளவு..எண்ணற்ற அளவு..

அதைப் பார்க்கும் பிரம்மா விஷ்ணுவுக்கும் கூட பொறாமை+பொறாமை ஏற்படுகிறது.

உனது அடியாரின் அழகிய வடிவம் கண்ட ரதியோ இவர் யார், என் கணவருக்கு உறவா, சொல்லவேயில்லை- என்பது போல கொஞ்சம்  பெருமூச்சு விடுகிறாள்..எனில் ரதியையும் கலங்கவைக்கும் அழகு அடியவர் பெற்று விடுகிறார்..

உன்னை பூஜிக்கும் அடியவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதுடன் பரம ஞானிகளைப் போல லோக மாயை நீங்கி பேரானந்தம் எனப்படும் மோட்சத்தையும் பூமியிலேயே அனுபவிக்கிறார்கள்..”

**
இந்த ஸ்லோக பாராயணம் கல்வி, செல்வம், அழகு, ஆயுள், மோட்சம் என அனைத்தையும் அளிக்குமாம்..

**


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Apr 02, 2014 2:18 pm

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 100


அம்பிகை என்நாவில் வந்தாள் – தினம்
ஒருவிதம் அவள் அழகைப் பருகவும் வைத்தாள்
விம்மியே நிற்குமே நெஞ்சம் – அந்த
வித்தகச் செல்வியின் பாதங்கள் தஞ்சம்

சொல்லத்தான் ஆவலாய் வந்தேன் - பல
சிறப்பான செய்திகளைக் கற்றே உவந்தேன்
அள்ளவா மொள்ளவா முடியும் – அவள்
அருளான விழிப்பார்வை அமுதூறி வடியும்

சற்றேதான் நெஞ்சத்தில் துன்பம்- அவள்
பற்றியே பாடல்கள் முடித்திடும் நேரம்
பற்றுக்கள் எல்லாமே விட்டு – தேவி
பாதம் பணிகின்றேன் நல்வழி சுட்டு

சின்னவன் நெஞ்சிலே ஆசை – உன்
செயலாலே தானிங்கு விளைந்திட்ட ஓசை
வண்ணமாய் வாழ்த்துக்கள் சொல்லி – உன்
விழிப்பார்வை அமுதத்தைத் தெளிப்பாயே அள்ளி..

*********

இன்னும் பலவாய் இங்கே நானும்
எழுதிட வைத்திடு வீர்
இனிதாய் நலமும் இளைமைக் குணமும்
என்றும் கொடுத்திடு வீர்

சின்னத் தனமாய் நானும் இருந்தேன்
அதுவோ பழங்கா லம்
சேற்றில் இருந்து மீண்டே வந்தேன்
இதுவே இந்நே ரம்

அன்னை பற்றி அருள்வடி வான
ஆதி சங்கரர் தான்
அழகாய்ச் சொன்ன பாடல் களிலே
அமுதம் சிறிதெடுத்தே

எண்ணம் போலே எழுதிப்பார்த்தேன்
எளியவன் நானும்தான்
என்னைச் செய்வித் தவரும் அவர்கள்
என்பிழை எதுவு மிலலை!!

***
என்னுடைய பிழை எதுவுமில்லை என்று மேலே சொன்னது சும்மா தான்..தமிழில் ஜஸ்ட் லைக் தட் என்பார்க்ள்.. இந்தப் பாடல்கள் உரையில் சொற்குற்றம் பொருட்குற்றம் எதுவும் இருந்தால் அது என்னையே சாரும்..

அம்பிகையின் அருட்துதிகளான இந்த நூறு பாடல்களும் புரிவதற்கு அடியேனுக்குச் சிரமமாகத் தான் இருந்தது..கொஞ்சம் அங்குமிங்கும் படித்து, கேட்டு எனக்குப் புரிந்த வரையில் இங்கு எழுதிப் பார்த்திருக்கிறேன்

ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு சின்னப் பாடல் தமிழில் எழுதிப் பார்க்க ஆசை.. இந்த நினைப்பைத் தூண்டியவளே அவள் தான்..அம்பாள் தான்..எழுத வைப்பாள்.. எழிதிய பின் மீண்டும் வருகிறேன்..

இன்றைய பாடலில் அம்பிகையானவளைப் பற்றி தான் செய்த துதிகள் எல்லாம் அவள் செயலே என்கிறார் பகவத் பாதர்.. இந்தப் பாடல்க்ள் எப்படி இருக்கின்றன.. என்பது பற்றி இந்த ஸ்லோகத்தில் என்ன சொல்கிறார்..

வாருங்கள் உள்ளே சென்று பார்ப்போம்..

**



**
ப்ரதீப ஜ்வாலாபி: திவஸகர நீராஜந விதி:
ஸுதாஸூதே: சந்த்ரோபலஜல லவைராக்யரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலில நிதி ஸெள்ஹித்யகரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ்தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்

Pradhipa-jvalabhir dhivasa-kara-neerajana-vidhih
Sudha-suthes chandropala-jala-lavair arghya-rachana;
Svakiyair ambhobhih salila-nidhi-sauhitya karanam
Tvadiyabhir vagbhis thava janani vacham stutir iyam.



அம்பிகையே.. உன்னைத் துதிக்கும் இந்தத் துதிகள் எப்படி இருக்கிற்து..

மஹா பிரகாசமான ஒளி பொருந்திய சூரியனுக்குச் சின்னக் கற்பூர ஒளியினால் தீபாராதனை செய்வது போல இருக்கிறது..

குளிர்ந்த கிரகணங்களுடைய சந்திரனுக்கு, அவனது கிரணங்களால் சந்திர காந்தக் கல்லில் துளிர்த்த நீரெடுத்து சமர்ப்பணம் செய்வது போலிருக்கிறது..

அலைகளால் ஆர்ப்பரிக்கும் சமுத்திரத்திற்கு அதனுடைய நீரினையே எடுத்து தர்ப்பணம் செய்வது போல இருக்கிறது..

ஏன் தெரியுமா

எழுத்துக்களின் வர்ணம் எனப்படும் வடிவம் நீ.. அந்த எழுத்துக்களால் வடிவமைக்கப் படும் சொற்களின் செல்வியும்  நீயே..

எனில் உன்னுடைய சொற்காளை வைத்து உனக்காக இயற்றப் பட்டதே இந்தத் துதிகள்.. இதை நீ ஏற்று அருள் புரிய வேண்டும்..

**

எவ்வளவோ பயமாய்த் தான் இருந்தது இந்த உரைகளை எளிமையாக எழுதிப் பார்ப்பதற்கு..எழுத வைத்தவர்கள் அம்பாளும் ஆதி சங்கரரும் தான்..அவரகளது பாதங்களை நான் பணிகிறேன்..

பொறுமையாய் இந்த உரைகளைப் படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.. அம்பாள் உங்களுக்கு எல்லா நலங்களும் அருளுவாள்

இவ்வாறு ஸ்ரீமத் பகவத் பாதர்  எழுதிய ஸ்ரீ செளந்தர்ய லஹரி முற்றிற்று..

****

( கட்டிச் சமத்துடா நீ.. முடிச்சுட்டியே.. உனக்கு திருஷ்டி சுத்தி உன்னையே தூக்கிப் போடணும்..

மன்ச்சு..ஒண்ணு மறந்துட்ட.. நான் விழுந்தா நீயும் தான் விழுவ..

ஆமாம்.. அப்ப்ப வேண்டாம்.. என்றாலும் நீ குட்பாய் தான் போ..

தாங்க்ஸ் மன்ச்சு.. மனசாட்சி....!)


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Apr 02, 2014 2:26 pm

அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு..

ஒரு வழியாய் பதிவிட்டு முடித்துவிட்டேன் அம்பாளின் அழகின் அலைகளைப் பற்றி..

சிறு பொறியாய் போன வருடம் ஜனவரி மாதம் தோன்றிய எண்ணம், பின் தொடர்ந்த நூறு நாட்கள் அலுவலகம் முடித்து வீட்டிற்கு வந்து சில பல புத்தகங்கள், வலை என ரெஃபரன்ஸ் செய்து எழுதிப் பார்த்தேன்.. சில நாட்களில் முதல் வார்த்தையோ..தகவல்களோ கிடைப்பதற்கோ, விருத்தத்திற்கான கற்பனையோ- எழுதிப்பார்த்தால் சரியாக வராமல் அடித்துத் திருத்தி எழுதி இடுவதற்கு நடு இரவும் ஆகியிருந்தது..முக நூலில் ஒரு சின்ன நட்பு வட்டம், உறவு வட்டம் தான் இருந்தது..

இங்கு இடுகையில் எனக்கு மிக மகிழ்வாக இருந்தது/இருக்கிறது.. முழுக்கப் படித்துக் கொஞ்சம் சரியாக வந்திருக்கிறதா என்று சொன்னால் மகிழ்வேன்..

இதைத் தொடர்ந்து நான்கு அத்தியாயங்கள் நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்தைப் பற்றி எழுதப்பார்த்து நிறுத்தியிருந்தேன் - நாளும் ஒரு எண்ண அலை என்ற தலைப்பில்..அதை மறுபடியும் ஆரம்பிக்கப் பார்க்கிறேன்..

அனுமதி அளித்து ஊக்குவித்த மாடரேட்டர்கள், படித்து ஊக்குவித்த நண்பர்களுக்கும் என் நன்றி..


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 01, 2015 11:39 pm

நாளும் ஒரு அழகின் அலை - Page 14 3838410834



நாளும் ஒரு அழகின் அலை - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat May 02, 2015 6:38 pm

நாளும் ஒரு அழகின் அலை

அன்புள்ள CK

அருமை , அற்புதம் , ஆனந்தம் - இவைகளுக்கும் மேலே ஏதாவது வார்த்தை இருந்தால் , சாதாரண
நடையில் , இந்த பாமரனுக்கும் புரிகின்ற வகையில் சொல்ல முடியுமா ?

ஒன்று மட்டும் எனக்கு புரிகின்றது - உங்கள் முன்னோர்கள் கம்பனின் வழி வந்தவர்களாக இருக்க வேண்டும் - அதனால் வர்னைனைகளும் , கவிகளும் குற்றால அருவி போல உங்களுக்கு வருகின்றது - இல்லை என்றால் சின்ன வயதில் காளி உங்கள் நாவில் "ஓம் " என்று எழுதி இருக்க வேண்டும் ; அப்படியும் இல்லை என்றால் அந்த ஆதி சங்கரரே உங்கள் ஆத்மாவுடன் கலந்திருக்க வேண்டும் .

மிகவும் ரசிக்கின்றேன் - நிலா பதிவுகள் போடுவது மட்டும் அன்றி , அந்த நிலவையே , அம்மாவாசையில் வரவழைத்தவளை உங்களால் மட்டுமே இப்படி ரசித்து , அழகாக எழுத முடியும் - என் நீண்ட நாள் வேண்டுதல் - லலிதா சகஸ்ரநாமம் - இதை இந்த கால மேக புலவர் அலசுவாரா ?

அன்புடன்
ரவி

Sponsored content

PostSponsored content



Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக