புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
Page 4 of 15 •
Page 4 of 15 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 15
First topic message reminder :
பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?
தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.
இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.
தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.
இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.
தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகள் பொதுமக்களை பாதிக்கிறதா?
'தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துகிறோம்' எனக் கூறி, தேர்தல் கமிஷன், புதுப் புது கட்டுப்பாடுகளை அறிவித்து, அதை செயல் படுத்தி வருகிறது. இவற்றில், சில கடுமையான கட்டுப்பாடுகள்; இந்தக் கட்டுப்பாடுகளால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக, பல தரப்பில் இருந்தும், கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், சிறு வியாபாரிகள், சரியான ஆவணங்களின்றி, 10 ஆயிரம் ரூபாயைக் கூட எடுத்துச் செல்லக் கூடாது என்ற, கட்டுப்பாட்டால், மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தேர்தல் கமிஷனின் இதுபோன்ற கட்டுப்பாடுகள் குறித்து, அரசியல் பிரபலங்கள் இருவர் நடத்திய, கருத்து மோதல்கள் இங்கே:
'வாக்காளர்களுக்கு நன்மை செய்கிறோம்; சுதந்திரமான தேர்தலை நடத்துகிறோம்' என்ற பெயரில், தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அதிக அளவில் தீமைகளைத் தான் விளைவிக்கின்றன. தேர்தல், 30 நாளில் முடிந்துவிடும் என்ற நிலையில், தேர்தல் கமிஷன் கெடுபிடிகளை செய்தால் கூட பரவாயில்லை. மூன்று மாதங்களுக்கு தேர்தலை நடத்துகிறோம் என, தேர்தல் தேதி அறிவித்து, ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, நடத்தை விதிமுறைகளை அமல் செய்வது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் செயலாகும். தேர்தல், லோக்சபாவுக்கு நடக்கிறது. அதனால், மத்திய அரசில் உள்ளவர்கள், புதிய அறிவிப்புகளை வெளியிட உரிமையில்லை என, தடுப்பது நியாயம். தமிழகம் போன்ற மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல், ஆட்சியில் இருக்கும் அதிகாரம் உள்ளது. அதுபோன்ற அரசுகளின் செயல்பாட்டை முடக்குவது நியாயமா? என, தேர்தல் கமிஷனே சிந்திக்க வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு, தனிப்பட்ட பணியாளர்கள் இல்லை; பாதுகாப்புக்கான காவலர்களும் இல்லை. இவை அனைத்தையும், மாநில மற்றும் மத்திய அரசுகளிடமிருந்தே பெறுகின்றனர். தேர்தல் தேதி அறிவித்த பின், ஒரு ஊழியரையோ, அதிகாரியையோ இட மாற்றம் செய்வது என்றால் கூட, தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற வேண்டும். இதனால், அரசாங்கத்தையே, தேர்தல் கமிஷன் நடத்துவது போன்ற நிலை ஏற்படுகிறது. இதனால், சாதாரணப் பணிகளைக் கூட, ஒரு அரசால் நிறைவேற்ற முடிவதில்லை. அதேநேரத்தில், பணம் கொடுத்து வாக்காளர்களிடம் ஓட்டு பெறக் கூடாது; நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை, தேர்தல் கமிஷன் தானாகவே பெரும்பாலும் எடுப்பதில்லை. ஒரு கட்சி, மற்றொரு கட்சி மீது, கொடுக்கும் புகாரைத் தொடர்ந்து தான், புதிய புதிய உத்தரவுகளை வெளியிடுகிறது.
ஆவடி குமார், தலைமை நிலைய பேச்சாளர், அ.தி.மு.க.,
தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகளால், அரசு முடங்கிவிட்டது; மக்கள் பணிகள் செய்ய முடியவில்லை என, அலறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள், அமலில் இருக்கும் காலத்தில், மக்களுக்குத் தேவையான, அத்தியாவசியப் பொருட்கள் செல்வது தடைபடப் போவதில்லை. இத்தனை காலம், ஆட்சியில் இருந்தவர்கள் செய்யாதது எதையும், இந்த கால கட்டத்தில், செய்துவிடப் போவதுமில்லை. எனவே, தேர்தல் ஆணையத்தின் விதிகளால், ஆட்சியில் இருப்பவர்கள் அலறத் தேவையில்லை. அரசு என்பது, நிலையாக இருப்பது. எம்.எல்.ஏ., - எம்.பி., போன்றவர்கள், வந்து செல்லக் கூடியவர்கள். அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கும், குறிப்பிட்ட ஆண்டுகளே பதவிக் காலம். ஆனால், அரசின் ஆயுள் நிரந்தரமானது. தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இல்லாமலும் கூட, அரசாங்கம் இயங்கும். அப்போதும், மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் செயல்பட முடியவில்லை; அதனால், மக்கள் திட்டங்களை செய்ய முடியவில்லை என்ற ஒப்பாரி எல்லாம், ஆதாயத்தின் அடிப்படையிலானது. தேர்தல் கமிஷனின் நோக்கம், சுதந்திரமான தேர்தல். எந்த தூண்டுதலும் இல்லாமல், பிரதிநிதியை தேர்வு செய்ய வேண்டும்; கள்ள ஓட்டு போடுவதைத் தடுக்க வேண்டும்; தில்லுமுல்லு இல்லாத தேர்தல் நடத்த வேண்டும் என்பதே. காலத்தின் சூழலுக்கு ஏற்ப, புதிய விதிகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தேர்தல் கமிஷனின், புதிய விதிகள் அமலுக்கு வரும் போது, சில மீறல்கள் இருக்கலாம். தொடர்ந்து அமல் செய்யும்போது, அந்த மீறல்கள் சீர் செய்யப்படும். எனவே, தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடுகளை, குறை சொல்வதை விட, சுய கட்டுப்பாடுகளை வகுத்து, ஜனநாயக முறையில், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்தித்தால், அலற வேண்டிய அவசியம் இருக்காது.
கனகராஜ், மாநில குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட்
'தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துகிறோம்' எனக் கூறி, தேர்தல் கமிஷன், புதுப் புது கட்டுப்பாடுகளை அறிவித்து, அதை செயல் படுத்தி வருகிறது. இவற்றில், சில கடுமையான கட்டுப்பாடுகள்; இந்தக் கட்டுப்பாடுகளால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக, பல தரப்பில் இருந்தும், கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், சிறு வியாபாரிகள், சரியான ஆவணங்களின்றி, 10 ஆயிரம் ரூபாயைக் கூட எடுத்துச் செல்லக் கூடாது என்ற, கட்டுப்பாட்டால், மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தேர்தல் கமிஷனின் இதுபோன்ற கட்டுப்பாடுகள் குறித்து, அரசியல் பிரபலங்கள் இருவர் நடத்திய, கருத்து மோதல்கள் இங்கே:
'வாக்காளர்களுக்கு நன்மை செய்கிறோம்; சுதந்திரமான தேர்தலை நடத்துகிறோம்' என்ற பெயரில், தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அதிக அளவில் தீமைகளைத் தான் விளைவிக்கின்றன. தேர்தல், 30 நாளில் முடிந்துவிடும் என்ற நிலையில், தேர்தல் கமிஷன் கெடுபிடிகளை செய்தால் கூட பரவாயில்லை. மூன்று மாதங்களுக்கு தேர்தலை நடத்துகிறோம் என, தேர்தல் தேதி அறிவித்து, ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, நடத்தை விதிமுறைகளை அமல் செய்வது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் செயலாகும். தேர்தல், லோக்சபாவுக்கு நடக்கிறது. அதனால், மத்திய அரசில் உள்ளவர்கள், புதிய அறிவிப்புகளை வெளியிட உரிமையில்லை என, தடுப்பது நியாயம். தமிழகம் போன்ற மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல், ஆட்சியில் இருக்கும் அதிகாரம் உள்ளது. அதுபோன்ற அரசுகளின் செயல்பாட்டை முடக்குவது நியாயமா? என, தேர்தல் கமிஷனே சிந்திக்க வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு, தனிப்பட்ட பணியாளர்கள் இல்லை; பாதுகாப்புக்கான காவலர்களும் இல்லை. இவை அனைத்தையும், மாநில மற்றும் மத்திய அரசுகளிடமிருந்தே பெறுகின்றனர். தேர்தல் தேதி அறிவித்த பின், ஒரு ஊழியரையோ, அதிகாரியையோ இட மாற்றம் செய்வது என்றால் கூட, தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற வேண்டும். இதனால், அரசாங்கத்தையே, தேர்தல் கமிஷன் நடத்துவது போன்ற நிலை ஏற்படுகிறது. இதனால், சாதாரணப் பணிகளைக் கூட, ஒரு அரசால் நிறைவேற்ற முடிவதில்லை. அதேநேரத்தில், பணம் கொடுத்து வாக்காளர்களிடம் ஓட்டு பெறக் கூடாது; நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை, தேர்தல் கமிஷன் தானாகவே பெரும்பாலும் எடுப்பதில்லை. ஒரு கட்சி, மற்றொரு கட்சி மீது, கொடுக்கும் புகாரைத் தொடர்ந்து தான், புதிய புதிய உத்தரவுகளை வெளியிடுகிறது.
ஆவடி குமார், தலைமை நிலைய பேச்சாளர், அ.தி.மு.க.,
தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகளால், அரசு முடங்கிவிட்டது; மக்கள் பணிகள் செய்ய முடியவில்லை என, அலறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள், அமலில் இருக்கும் காலத்தில், மக்களுக்குத் தேவையான, அத்தியாவசியப் பொருட்கள் செல்வது தடைபடப் போவதில்லை. இத்தனை காலம், ஆட்சியில் இருந்தவர்கள் செய்யாதது எதையும், இந்த கால கட்டத்தில், செய்துவிடப் போவதுமில்லை. எனவே, தேர்தல் ஆணையத்தின் விதிகளால், ஆட்சியில் இருப்பவர்கள் அலறத் தேவையில்லை. அரசு என்பது, நிலையாக இருப்பது. எம்.எல்.ஏ., - எம்.பி., போன்றவர்கள், வந்து செல்லக் கூடியவர்கள். அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கும், குறிப்பிட்ட ஆண்டுகளே பதவிக் காலம். ஆனால், அரசின் ஆயுள் நிரந்தரமானது. தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இல்லாமலும் கூட, அரசாங்கம் இயங்கும். அப்போதும், மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் செயல்பட முடியவில்லை; அதனால், மக்கள் திட்டங்களை செய்ய முடியவில்லை என்ற ஒப்பாரி எல்லாம், ஆதாயத்தின் அடிப்படையிலானது. தேர்தல் கமிஷனின் நோக்கம், சுதந்திரமான தேர்தல். எந்த தூண்டுதலும் இல்லாமல், பிரதிநிதியை தேர்வு செய்ய வேண்டும்; கள்ள ஓட்டு போடுவதைத் தடுக்க வேண்டும்; தில்லுமுல்லு இல்லாத தேர்தல் நடத்த வேண்டும் என்பதே. காலத்தின் சூழலுக்கு ஏற்ப, புதிய விதிகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தேர்தல் கமிஷனின், புதிய விதிகள் அமலுக்கு வரும் போது, சில மீறல்கள் இருக்கலாம். தொடர்ந்து அமல் செய்யும்போது, அந்த மீறல்கள் சீர் செய்யப்படும். எனவே, தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடுகளை, குறை சொல்வதை விட, சுய கட்டுப்பாடுகளை வகுத்து, ஜனநாயக முறையில், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்தித்தால், அலற வேண்டிய அவசியம் இருக்காது.
கனகராஜ், மாநில குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட்
பிரசார கூட்டங்களுக்கு கூடும் மக்களிடம் எழுச்சி இருக்கிறதா?
தேர்தல் என்றால், மக்களை கவருவதற்கு பலவழிகளை அரசியல் கட்சிகள் கையாளுகின்றன. அந்த வகையில் எல்லோரும் அவசியம் பின்பற்றி வரும் முறை, வாக்காளர்களை நேரடியாக சென்று ஓட்டு சேகரிப்பது. தலைவர்கள் என்றால், வாகனங்கள் மூலம் பிரசாரம் செய்வது, ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடத்துவது. அந்த பிரசார கூட்டங்களுக்கு கூடும் மக்கள் எழுச்சியைக் கொண்டு, ஓரளவுக்கு எந்தக் கட்சிக்கு ஆதரவு இருக்கின்றது என்பதை கணிக்க முடியும். ஆனால், இந்த தேர்தலில், தலைவர்கள் கூட்டங்களுக்கு, மக்கள் ஓரளவுக்குக் கூடினாலும், மக்கள் மத்தியில் பெரிய எழுச்சி இல்லை. இது குறித்து, இரு பிரபலங்கள் நடத்திய கருத்து மோதல்கள் இங்கே:
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை துவங்கிவிட்டனர். வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரசாரங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தேர்தல், நெருங்கும்போது தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் குறைவாகவே தென்படுகிறது. இந்த மனப்போக்குக்கு, பணமும், அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பட்ட கூட்டணியும் தான்
காரணம். தமிழகத்தின் எதிர்க்கட்சியான தே.மு.தி.க., பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இக்கூட்டணியில், பா.ம.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இக்கட்சித் தலைவர்கள், ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டதாக எந்த தகவலும் இல்லை.
அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் முரண்பட்டு உள்ளன. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்கள், தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளை தீர்ப்பதாகவும், புதிய திட்டங்களை செயல்படுத்து வோம் என்றும், இலவச திட்டங்கள் தொடரும் எனவு ம் கூறுகின்றனர். ஆனால், இதை காதுகொடுத்தக் கேட்கும் மன நிலையில் வாக்காளர்கள் இல்லை. ஆட்சிக்கு வந்தால், சம்பாதிக்கப் போகிறார்கள். ஏற்கனவே ஆட்சிக்கு வந்தவர்கள் சம்பாதித்து விட்டனர். இருவரும் சேர்ந்து, காசு கொடுத்தால், பிரசாரத்தைப் பார்க்கப் போவோம் என்ற முடிவில் உள்ளனர். அப்படிப் போனாலும், தலைவர்கள் சொல்வதை கேட்கிறார்களா என்பது சந்தேகமே.
பிரதான கட்சிகளின் தலைவர்கள் கூட்டங்களுக்கு, ஒரு நபருக்கு, 150 ரூபாய் பணம், பிரியாணி பொட்டலம், கூட்டத்துக்கு சென்று, வர வேன் வாடகை 2,500 ரூபாய் செலவிட்டால் தான், கூட்டம் சேர்க்க முடியும்.
இதுபோல ஒரு கூட்டம் நடத்த, குறைந்தது 5 கோடி ரூபாய் வேண்டும் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் கூட்டம் நடத்த ஆகும் செலவை கணக்குப் போட்டால், பணம் இருப்பவர்கள் மட்டுமே, அரசியல் நடத்த முடியும் என்ற அவல நிலைக்கு ஆளாகியுள்ளோம். எழுச்சி தானாக வர வேண்டும். அது தான் சாதனை படைக்கும்.
நல்லசாமி, தலைவர், தமிழ்நாடு கள் இயக்கம்
தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும் மெகா கூட்டணிகள் அமைக்காமல் போட்டியிடுகின்றன. பலமுனைப் போட்டி, தேர்தல் களத்தை கலக்கி வருவகிது என்பது தான் உண்மை. வாக்காளர்கள் மத்தியில், ஒவ்வொரு கட்சியும் தனித்துச் சென்று, ஓட்டுக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தங்களிடம் வரட்டும் பார்க்கலாம் என்ற புன்சிரிப்புடன் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். அவர்களின் மவுனம், தேர்தல் களத்தில் எழுச்சி இல்லாதது போல தோற்றம் அளிக்கலாம். ஆனால், ஒட்டுப் பதிவில் அது கடுமையாக எதிரொலிக்கும். அப்போது தான், வாக்காளர்களின் எழுச்சியை உணர முடியும். கடந்த தேர்தல்களின் போது, மாநிலத்தின் சில பகுதிகளுக்கு சென்று வந்து விட்டாலே, யாருக்கு ஆதரவு என்பதை ஓரளவு கணித்துவிட முடியும். இந்த கட்சி வெற்றி பெற்றுவிடும் என சொல்லி விடுவார்கள். ஆனால், இந்தத் தேர்தலில், வாக்காளர்கள் முன், பல வாய்ப்புகள் குவிந்துள்ளன. பல புதிய கட்சிகளும் களத்தில் உள்ளன. வழக்கமாக, வாக்காளர்களின் ஒரு பகுதியினர், ஓட்டப்போட்டு என்ன ஆகப்போகுது என்ற மன நிலையில் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் கூட, ஒட்டுப்போட வேண்டும் என்ற உந்துதல் இந்தத் தேர்தலில் தென்படுகிறது.. பணம் மட்டுமே, தேர்தல் அரசியலை வழி நடத்துகிறது என்ற வாதத்தை முழுமையாக ஏற்க முடியாது. மொத்த வாக்காளர்களில், சொற்ப சதவிகிதத்தினர் பணத்தை எதிர்பார்க்கலாம். அனைவரும் அப்படி இல்லை. பணம் பெற்றுக்கொண்டு ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், கடந்த சட்டசபை தேர்தலில் தலைகீழ் திருப்பம் தமிழகத்தில் ஏற்பட்டிருக்காது. காசு வாங்கிக் கொண்டு தங்கள் விருப்பப்படி ஒட்டுப் போட்டதால் தான், இந்த திருப்பம் சாத்தியமானது. எனவே, பணத்தைக் கொட்டி, அரசியல் கட்சிகள் ஓட்டு வாங்கும் அணுகுமுறை எடுபட வாய்ப்பில்லை. பெரிய கட்சிகள், இந்த அணுகுமுறையை பரிசீலிக்கும் நிலையும், இந்தத் தேர்தலில் ஏற்படலாம்.
சுப குணராஜன், அரசியல் விமர்சகர்
தேர்தல் என்றால், மக்களை கவருவதற்கு பலவழிகளை அரசியல் கட்சிகள் கையாளுகின்றன. அந்த வகையில் எல்லோரும் அவசியம் பின்பற்றி வரும் முறை, வாக்காளர்களை நேரடியாக சென்று ஓட்டு சேகரிப்பது. தலைவர்கள் என்றால், வாகனங்கள் மூலம் பிரசாரம் செய்வது, ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடத்துவது. அந்த பிரசார கூட்டங்களுக்கு கூடும் மக்கள் எழுச்சியைக் கொண்டு, ஓரளவுக்கு எந்தக் கட்சிக்கு ஆதரவு இருக்கின்றது என்பதை கணிக்க முடியும். ஆனால், இந்த தேர்தலில், தலைவர்கள் கூட்டங்களுக்கு, மக்கள் ஓரளவுக்குக் கூடினாலும், மக்கள் மத்தியில் பெரிய எழுச்சி இல்லை. இது குறித்து, இரு பிரபலங்கள் நடத்திய கருத்து மோதல்கள் இங்கே:
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை துவங்கிவிட்டனர். வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரசாரங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தேர்தல், நெருங்கும்போது தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் குறைவாகவே தென்படுகிறது. இந்த மனப்போக்குக்கு, பணமும், அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பட்ட கூட்டணியும் தான்
காரணம். தமிழகத்தின் எதிர்க்கட்சியான தே.மு.தி.க., பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இக்கூட்டணியில், பா.ம.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இக்கட்சித் தலைவர்கள், ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டதாக எந்த தகவலும் இல்லை.
அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் முரண்பட்டு உள்ளன. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்கள், தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளை தீர்ப்பதாகவும், புதிய திட்டங்களை செயல்படுத்து வோம் என்றும், இலவச திட்டங்கள் தொடரும் எனவு ம் கூறுகின்றனர். ஆனால், இதை காதுகொடுத்தக் கேட்கும் மன நிலையில் வாக்காளர்கள் இல்லை. ஆட்சிக்கு வந்தால், சம்பாதிக்கப் போகிறார்கள். ஏற்கனவே ஆட்சிக்கு வந்தவர்கள் சம்பாதித்து விட்டனர். இருவரும் சேர்ந்து, காசு கொடுத்தால், பிரசாரத்தைப் பார்க்கப் போவோம் என்ற முடிவில் உள்ளனர். அப்படிப் போனாலும், தலைவர்கள் சொல்வதை கேட்கிறார்களா என்பது சந்தேகமே.
பிரதான கட்சிகளின் தலைவர்கள் கூட்டங்களுக்கு, ஒரு நபருக்கு, 150 ரூபாய் பணம், பிரியாணி பொட்டலம், கூட்டத்துக்கு சென்று, வர வேன் வாடகை 2,500 ரூபாய் செலவிட்டால் தான், கூட்டம் சேர்க்க முடியும்.
இதுபோல ஒரு கூட்டம் நடத்த, குறைந்தது 5 கோடி ரூபாய் வேண்டும் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் கூட்டம் நடத்த ஆகும் செலவை கணக்குப் போட்டால், பணம் இருப்பவர்கள் மட்டுமே, அரசியல் நடத்த முடியும் என்ற அவல நிலைக்கு ஆளாகியுள்ளோம். எழுச்சி தானாக வர வேண்டும். அது தான் சாதனை படைக்கும்.
நல்லசாமி, தலைவர், தமிழ்நாடு கள் இயக்கம்
தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும் மெகா கூட்டணிகள் அமைக்காமல் போட்டியிடுகின்றன. பலமுனைப் போட்டி, தேர்தல் களத்தை கலக்கி வருவகிது என்பது தான் உண்மை. வாக்காளர்கள் மத்தியில், ஒவ்வொரு கட்சியும் தனித்துச் சென்று, ஓட்டுக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தங்களிடம் வரட்டும் பார்க்கலாம் என்ற புன்சிரிப்புடன் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். அவர்களின் மவுனம், தேர்தல் களத்தில் எழுச்சி இல்லாதது போல தோற்றம் அளிக்கலாம். ஆனால், ஒட்டுப் பதிவில் அது கடுமையாக எதிரொலிக்கும். அப்போது தான், வாக்காளர்களின் எழுச்சியை உணர முடியும். கடந்த தேர்தல்களின் போது, மாநிலத்தின் சில பகுதிகளுக்கு சென்று வந்து விட்டாலே, யாருக்கு ஆதரவு என்பதை ஓரளவு கணித்துவிட முடியும். இந்த கட்சி வெற்றி பெற்றுவிடும் என சொல்லி விடுவார்கள். ஆனால், இந்தத் தேர்தலில், வாக்காளர்கள் முன், பல வாய்ப்புகள் குவிந்துள்ளன. பல புதிய கட்சிகளும் களத்தில் உள்ளன. வழக்கமாக, வாக்காளர்களின் ஒரு பகுதியினர், ஓட்டப்போட்டு என்ன ஆகப்போகுது என்ற மன நிலையில் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் கூட, ஒட்டுப்போட வேண்டும் என்ற உந்துதல் இந்தத் தேர்தலில் தென்படுகிறது.. பணம் மட்டுமே, தேர்தல் அரசியலை வழி நடத்துகிறது என்ற வாதத்தை முழுமையாக ஏற்க முடியாது. மொத்த வாக்காளர்களில், சொற்ப சதவிகிதத்தினர் பணத்தை எதிர்பார்க்கலாம். அனைவரும் அப்படி இல்லை. பணம் பெற்றுக்கொண்டு ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், கடந்த சட்டசபை தேர்தலில் தலைகீழ் திருப்பம் தமிழகத்தில் ஏற்பட்டிருக்காது. காசு வாங்கிக் கொண்டு தங்கள் விருப்பப்படி ஒட்டுப் போட்டதால் தான், இந்த திருப்பம் சாத்தியமானது. எனவே, பணத்தைக் கொட்டி, அரசியல் கட்சிகள் ஓட்டு வாங்கும் அணுகுமுறை எடுபட வாய்ப்பில்லை. பெரிய கட்சிகள், இந்த அணுகுமுறையை பரிசீலிக்கும் நிலையும், இந்தத் தேர்தலில் ஏற்படலாம்.
சுப குணராஜன், அரசியல் விமர்சகர்
100 நாளில் 10 கோடி பேருக்கு வேலை - காங்கிரஸ்
'வறுமையை ஒழிப்போம்; வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்' என, இதுவரை, 15 லோக்சபா தேர்தல்களில் உறுதி அளித்துள்ள காங்கிரஸ், 16வது லோக்சபா தேர்தலுக்காக, நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், அது போன்ற, வழக்கமான அறிவிப்புகளையே வெளியிட்டுள்ளது. 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நூறு நாட்களுக்குள், 10 கோடி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். அனைவருக்கும், ஓய்வூதியம், வீடு, மருத்துவ வசதி, சமூக நீதி கிடைக்கச் செய்யப்படும்' என, காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
நாடு முழுவதும், 543 லோக்சபா தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 7ல் துவங்கி, மே மாதம், 12ம் தேதி வரை, ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, டில்லியில் உள்ள, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின், தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
15 அம்ச திட்டம்
அறிக்கையில், குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய அம்சங்களாவன:
தொழில் துறை மற்றும் சமூக நீதி ஆகிய இரண்டும், ஒரு நாணயத்தின், இரு பக்கங்கள். சமூக நீதியை புறக்கணித்து, தொழில் துறையை மட்டும் கவனிப்பதோ அல்லது தொழில் துறையை முடக்கி, சமூக நீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, எங்கள் நோக்கமாக இருக்காது; இரண்டுக்கும், சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, 15 அம்ச திட்டம் வரையறுக்கப்படும். அதன் படி, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த, 80 கோடி பேரின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த, உறுதி எடுக்கப்படும்.
*அடுத்த, மூன்று ஆண்டுகளுக்குள் தற்போதுள்ள, 3 சதவீத பொருளாதார வளர்ச்சியை, 8 சதவீதம் வரை, உயர்த்த, வழி ஏற்படுத்தப்படும்.
*மக்கள் தொகையில், மூன்றில், இரண்டு பங்கு மக்களுக்கு, அவர்களின் திறன்களை வளர்த்து, சுயதொழில் புரிவதற்கு ஏற்ற வகையில், பயிற்சிகள் வழங்கப்படும்.
*ஆட்சிக்கு வந்து, நூறு நாட்களுக்குள், இளைஞர்களுக்காகவே, 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
*கட்டமைப்புத் துறையில் மட்டும், 60 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.
*கடந்த ஆட்சிகளில், அனைவருக்கும் உணவு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைகள் வழங்கப்பட்டு விட்டன.
*அடுத்த ஆட்சியில், அனைவருக்கும் மருத்துவ வசதி, ஓய்வூதியம், வீடு, சமூக நீதி ஆகிய, நான்கு உரிமைகளும் கிடைக்க, வழி வகை செய்யப்படும்.
*இலங்கையில், கடந்த, 2009ல் நடந்த, உள்நாட்டு
போரின் போது நிகழ்ந்த, மனித உரிமை அத்துமீறல்கள் பற்றி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், நம்பகமானவிசாரணை நடத்த வேண்டும் என, வலியுறுத்தப்படும்.இவ்வாறு, அந்த அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.
'ரிப்போர்ட்' கார்டு:
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கிரஸ் தான், மத்தியில் ஆட்சியில் இருந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும், 'வறுமையை ஒழிப்போம்' என, அக்கட்சி கூறி வந்துள்ள நிலையில், நாட்டிலிருந்து வறுமை இன்னும் விலகவே இல்லை.அது போல் தான், 2009 லோக்சபா தேர்தலின் போதும், பல அறிவிப்புகளை, காங்கிரஸ் வெளியிட்டது. அவற்றில், பல, இன்னும் அறிவிப்புகளாகத் தான் உள்ளன. குறிப்பாக, '100 நாட்களுக்கு ஒருமுறை, மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், மதிப்பீடு செய்யப்படும்' என்பன போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், ஒருமுறை கூட, அமைச்சர்களின், 'ரிப்போர்ட் கார்டு' வெளியிடப்படவில்லை.
'அம்போ'வான 2009 வாக்குறுதி
கடந்த, 2009 தேர்தலில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த அம்சங்கள் -- அவற்றின் இப்போதைய நிலை:
*நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்வோம் - இது வரை கிடைத்தது போல் தெரியவில்லை
*நாட்டு மக்கள் அனைவருக்கும், அடையாள அட்டை வழங்கப்படும் - அரைகுறையாக நிற்கிறது, 'ஆதார்!'
*அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வோம் - பாக்., மற்றும் சீன அத்துமீறல்கள், மத்திய அரசால் கண்டுகொள்ளப்படுவதில்லை
*அனைவருக்கும் சுகாதார வசதி ஏற்படுத்தப்படும் - கிடைக்கவே இல்லை
*அனைவருக்கும் குறைந்த விலையில் கல்வி
- ஆண்டுக்கு ஆண்டு, கல்விக்கான செலவு, விலை அதிகரித்த வண்ணமாக உள்ளது
*நாடு முழுவதும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு - இன்னமும் எழுத்தில் தான் உள்ளது
*விவசாயிகள் முன்னேற்றத்திற்கு திட்டங்கள் - விவசாயிகள் பாடு, திண்டாட்டமாக மாறிவிட்டது; பல மாநிலங்களில், நூற்றுக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
*கிராமங்களுக்கு, 'பிராட்பேண்ட்' வசதி ஏற்படுத்தப்படும் - கம்ப்யூட்டரே இன்னும் கிடைக்கவில்லை; அதற்குப் பிறகு தான், பிராட்பேண்ட் பற்றி யோசிக்கலாம்
*சிறுதொழில்கள் காக்கப்படும் - நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது
*பொருட்கள், சேவை வரி அமல்படுத்தப்படும் - இன்னமும் எழுத்தளவில் தான் உள்ளது
*அரசில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் - இன்னும் இல்லை
*நீதிமன்ற நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் - எந்த சிறப்பு ஏற்பாடுகளும் இல்லை
*மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் - அதற்கான மின்வழித்தடங்கள் இல்லை.
'வறுமையை ஒழிப்போம்; வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்' என, இதுவரை, 15 லோக்சபா தேர்தல்களில் உறுதி அளித்துள்ள காங்கிரஸ், 16வது லோக்சபா தேர்தலுக்காக, நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், அது போன்ற, வழக்கமான அறிவிப்புகளையே வெளியிட்டுள்ளது. 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நூறு நாட்களுக்குள், 10 கோடி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். அனைவருக்கும், ஓய்வூதியம், வீடு, மருத்துவ வசதி, சமூக நீதி கிடைக்கச் செய்யப்படும்' என, காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
நாடு முழுவதும், 543 லோக்சபா தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 7ல் துவங்கி, மே மாதம், 12ம் தேதி வரை, ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, டில்லியில் உள்ள, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின், தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
15 அம்ச திட்டம்
அறிக்கையில், குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய அம்சங்களாவன:
தொழில் துறை மற்றும் சமூக நீதி ஆகிய இரண்டும், ஒரு நாணயத்தின், இரு பக்கங்கள். சமூக நீதியை புறக்கணித்து, தொழில் துறையை மட்டும் கவனிப்பதோ அல்லது தொழில் துறையை முடக்கி, சமூக நீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, எங்கள் நோக்கமாக இருக்காது; இரண்டுக்கும், சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, 15 அம்ச திட்டம் வரையறுக்கப்படும். அதன் படி, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த, 80 கோடி பேரின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த, உறுதி எடுக்கப்படும்.
*அடுத்த, மூன்று ஆண்டுகளுக்குள் தற்போதுள்ள, 3 சதவீத பொருளாதார வளர்ச்சியை, 8 சதவீதம் வரை, உயர்த்த, வழி ஏற்படுத்தப்படும்.
*மக்கள் தொகையில், மூன்றில், இரண்டு பங்கு மக்களுக்கு, அவர்களின் திறன்களை வளர்த்து, சுயதொழில் புரிவதற்கு ஏற்ற வகையில், பயிற்சிகள் வழங்கப்படும்.
*ஆட்சிக்கு வந்து, நூறு நாட்களுக்குள், இளைஞர்களுக்காகவே, 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
*கட்டமைப்புத் துறையில் மட்டும், 60 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.
*கடந்த ஆட்சிகளில், அனைவருக்கும் உணவு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைகள் வழங்கப்பட்டு விட்டன.
*அடுத்த ஆட்சியில், அனைவருக்கும் மருத்துவ வசதி, ஓய்வூதியம், வீடு, சமூக நீதி ஆகிய, நான்கு உரிமைகளும் கிடைக்க, வழி வகை செய்யப்படும்.
*இலங்கையில், கடந்த, 2009ல் நடந்த, உள்நாட்டு
போரின் போது நிகழ்ந்த, மனித உரிமை அத்துமீறல்கள் பற்றி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், நம்பகமானவிசாரணை நடத்த வேண்டும் என, வலியுறுத்தப்படும்.இவ்வாறு, அந்த அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.
'ரிப்போர்ட்' கார்டு:
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கிரஸ் தான், மத்தியில் ஆட்சியில் இருந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும், 'வறுமையை ஒழிப்போம்' என, அக்கட்சி கூறி வந்துள்ள நிலையில், நாட்டிலிருந்து வறுமை இன்னும் விலகவே இல்லை.அது போல் தான், 2009 லோக்சபா தேர்தலின் போதும், பல அறிவிப்புகளை, காங்கிரஸ் வெளியிட்டது. அவற்றில், பல, இன்னும் அறிவிப்புகளாகத் தான் உள்ளன. குறிப்பாக, '100 நாட்களுக்கு ஒருமுறை, மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், மதிப்பீடு செய்யப்படும்' என்பன போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், ஒருமுறை கூட, அமைச்சர்களின், 'ரிப்போர்ட் கார்டு' வெளியிடப்படவில்லை.
'அம்போ'வான 2009 வாக்குறுதி
கடந்த, 2009 தேர்தலில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த அம்சங்கள் -- அவற்றின் இப்போதைய நிலை:
*நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்வோம் - இது வரை கிடைத்தது போல் தெரியவில்லை
*நாட்டு மக்கள் அனைவருக்கும், அடையாள அட்டை வழங்கப்படும் - அரைகுறையாக நிற்கிறது, 'ஆதார்!'
*அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வோம் - பாக்., மற்றும் சீன அத்துமீறல்கள், மத்திய அரசால் கண்டுகொள்ளப்படுவதில்லை
*அனைவருக்கும் சுகாதார வசதி ஏற்படுத்தப்படும் - கிடைக்கவே இல்லை
*அனைவருக்கும் குறைந்த விலையில் கல்வி
- ஆண்டுக்கு ஆண்டு, கல்விக்கான செலவு, விலை அதிகரித்த வண்ணமாக உள்ளது
*நாடு முழுவதும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு - இன்னமும் எழுத்தில் தான் உள்ளது
*விவசாயிகள் முன்னேற்றத்திற்கு திட்டங்கள் - விவசாயிகள் பாடு, திண்டாட்டமாக மாறிவிட்டது; பல மாநிலங்களில், நூற்றுக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
*கிராமங்களுக்கு, 'பிராட்பேண்ட்' வசதி ஏற்படுத்தப்படும் - கம்ப்யூட்டரே இன்னும் கிடைக்கவில்லை; அதற்குப் பிறகு தான், பிராட்பேண்ட் பற்றி யோசிக்கலாம்
*சிறுதொழில்கள் காக்கப்படும் - நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது
*பொருட்கள், சேவை வரி அமல்படுத்தப்படும் - இன்னமும் எழுத்தளவில் தான் உள்ளது
*அரசில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் - இன்னும் இல்லை
*நீதிமன்ற நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் - எந்த சிறப்பு ஏற்பாடுகளும் இல்லை
*மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் - அதற்கான மின்வழித்தடங்கள் இல்லை.
ஜெயலலிதாவின் சொத்து பட்டியலை வெளியிட்ட கருணாநிதி
சென்னையில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா சொத்து பற்றிய விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
“தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு ஒரு ரூபாய்தான் சம்பளம் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகாத அவரது வழக்கறிஞருக்கு, அவரது ஒருநாள் சம்பளமான ரூ.65000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதை கேள்விப்படும் போது ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் எவ்வளவு என்று அனைவருமே தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வழக்கறிஞரே அம்மையாரின் உண்மையான சொத்துக்குவிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார். அப்பட்டியலில் ஜெயலலிதாவின் சொத்துக்களாக வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கரில் பங்களா, நீலாங்கரையில் 2 ஏக்கர், கோடநாட்டில் 800 ஏக்கர், காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதிகளில் 1190 ஏக்கர் ஸ்ரீவைகுண்டத்தில் 200 ஏக்கர், மற்றும் ஹைதராபாத்தில் 200 ஏக்கரில் தோட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஆனால் ஜெயலலிதாவோ தன்னை ஒன்றுமில்லாத ஏழை எனவும் பச்சைக்குழந்தை போலவும் தன்னை கருதி பிரச்சாரம் செய்து வருவகிறார்” என்று கருணாநிதி பேசினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா சொத்து பற்றிய விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
“தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு ஒரு ரூபாய்தான் சம்பளம் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகாத அவரது வழக்கறிஞருக்கு, அவரது ஒருநாள் சம்பளமான ரூ.65000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதை கேள்விப்படும் போது ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் எவ்வளவு என்று அனைவருமே தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வழக்கறிஞரே அம்மையாரின் உண்மையான சொத்துக்குவிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார். அப்பட்டியலில் ஜெயலலிதாவின் சொத்துக்களாக வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கரில் பங்களா, நீலாங்கரையில் 2 ஏக்கர், கோடநாட்டில் 800 ஏக்கர், காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதிகளில் 1190 ஏக்கர் ஸ்ரீவைகுண்டத்தில் 200 ஏக்கர், மற்றும் ஹைதராபாத்தில் 200 ஏக்கரில் தோட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஆனால் ஜெயலலிதாவோ தன்னை ஒன்றுமில்லாத ஏழை எனவும் பச்சைக்குழந்தை போலவும் தன்னை கருதி பிரச்சாரம் செய்து வருவகிறார்” என்று கருணாநிதி பேசினார்.
இலங்கை போர்க் குற்றங்கள் மீது விசாரணை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதி
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இலங்கை போர்க் குற்றங்கள் மீது முழுமையான விசாரணை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்ற நிலையில், காங்கிரஸின் இந்த வாக்குறுதி முக்கியத்துவம் பெறுகிறது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டனர்.
அதில், "விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் புரிந்த போர்க் குற்றங்கள் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து நேர்மையான, முழுமையான, விரைவான விசாரணை நடத்துவது உறுதி செய்யப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் பேசும் மக்களுக்கும், மற்ற சிறுபான்மையினருக்கும் சட்டரீதியாக சம உரிமை வழங்குவது உறுதி செய்யப்படும். தமிழர்கள் அதிகம் இருக்கும் வடக்கு மாகாணத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு தன்னிச்சையான மாகாணங்களாக உருவாக முயற்சிகள் எடுக்கப்படும். இலங்கைத் தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் தங்களது வாழ்வை முறையாக மறுசீரமைத்துக் கொள்ளத் தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி செய்யும்' என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் கட்சிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக, கடந்த இரண்டு வருடங்களாக ஐ.நா-வில் இலங்கைக்கு எதிராகவே மத்தியில் ஆளும் காங்கிரஸ் அணி வாக்களித்து வருகிறது.
இந்தத் தேர்தல் அறிக்கையும், தொடர்ந்து ராஜபக்சேவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
வலுவான, ஆரோக்கியமான வெளியுறவுக் கொள்கைகளை அமல்படுத்தவதோடு, அண்டை நாடுகளுடன் நிலையான, அமைதியான, பரஸ்பரமான உறவை மேம்படுத்தவும் காங்கிரஸ் கட்சி உறுதி கொண்டுள்ளதாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக சென்ற வருடம் மார்ச் மாதம் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இலங்கை போர்க் குற்றங்கள் மீது முழுமையான விசாரணை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்ற நிலையில், காங்கிரஸின் இந்த வாக்குறுதி முக்கியத்துவம் பெறுகிறது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டனர்.
அதில், "விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் புரிந்த போர்க் குற்றங்கள் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து நேர்மையான, முழுமையான, விரைவான விசாரணை நடத்துவது உறுதி செய்யப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் பேசும் மக்களுக்கும், மற்ற சிறுபான்மையினருக்கும் சட்டரீதியாக சம உரிமை வழங்குவது உறுதி செய்யப்படும். தமிழர்கள் அதிகம் இருக்கும் வடக்கு மாகாணத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு தன்னிச்சையான மாகாணங்களாக உருவாக முயற்சிகள் எடுக்கப்படும். இலங்கைத் தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் தங்களது வாழ்வை முறையாக மறுசீரமைத்துக் கொள்ளத் தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி செய்யும்' என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் கட்சிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக, கடந்த இரண்டு வருடங்களாக ஐ.நா-வில் இலங்கைக்கு எதிராகவே மத்தியில் ஆளும் காங்கிரஸ் அணி வாக்களித்து வருகிறது.
இந்தத் தேர்தல் அறிக்கையும், தொடர்ந்து ராஜபக்சேவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
வலுவான, ஆரோக்கியமான வெளியுறவுக் கொள்கைகளை அமல்படுத்தவதோடு, அண்டை நாடுகளுடன் நிலையான, அமைதியான, பரஸ்பரமான உறவை மேம்படுத்தவும் காங்கிரஸ் கட்சி உறுதி கொண்டுள்ளதாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக சென்ற வருடம் மார்ச் மாதம் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் ஏற்படுத்திய சேதத்தை மீட்க 60 மாதங்களை தாருங்கள்: மோடி
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சிக்கு எதிரான மன நிலையை திரட்டும் முயற்சியாக பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஹிராநகர் பிரச்சாரத்தில் பேசியதாவது:-
கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஏற்படுத்திய சேதத்தை மீட்க 60 மாதங்களை எனக்கு தாருங்கள்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகள் கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை அழித்துவிட்டன. காங்கிரசால் ஏற்பட்ட அழிவிலிருந்தும், சேதத்திலிருந்தும் நாட்டை மீட்டு கொண்டு வர என்னால் முடியும். எனக்கு வாய்ப்பு தாருங்கள். இது பதவியில் அமர்வதற்கான நேரம் மட்டும் அல்ல நாட்டிற்கான பாதுகாவலராக மாற வேண்டிய நேரமாக நான் கருதுகிறேன்.
இந்த நாட்டிற்கு நல்ல பாதுகாவலர் தேவை. எனவே 60 மாதங்களை எனக்கு தாருங்கள். 60 ஆண்டுகளாக ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இப்போது 60 மாதங்களுக்கு இந்த நாட்டிற்கு சேவை செய்யும் சேவகனை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு ஆட்சியாளன் வேண்டுமா? சேவகன் வேண்டுமா? ஆட்சியாளர்களிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்கள்.
காஷ்மீர் மக்களிடம் வாஜ்பாய் நம்பிக்கையை ஏற்படுத்தினார். வாஜ்பாய்க்கு இன்னும் 5 ஆண்டுகளை அளித்திருந்தால் காஷ்மீரின் முகம் வேறு மாதிரி இருந்திருக்கும். அவர் முடிக்காத பணிகளை நாம் நிறைவேற்றுவோம். காஷ்மீரில் மனிதநேய கொடியை பறக்க விடுவோம்.
குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரி. நாம் இந்த நாட்டை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்.
மாற்றத்திற்கான அலைகள் காஷ்மீரில் வீசுகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்கள் பா.ஜ.க. வேட்பாளர்களை வெற்றியாளர்களாக டெல்லிக்கு அனுப்புவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சிக்கு எதிரான மன நிலையை திரட்டும் முயற்சியாக பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஹிராநகர் பிரச்சாரத்தில் பேசியதாவது:-
கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஏற்படுத்திய சேதத்தை மீட்க 60 மாதங்களை எனக்கு தாருங்கள்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகள் கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை அழித்துவிட்டன. காங்கிரசால் ஏற்பட்ட அழிவிலிருந்தும், சேதத்திலிருந்தும் நாட்டை மீட்டு கொண்டு வர என்னால் முடியும். எனக்கு வாய்ப்பு தாருங்கள். இது பதவியில் அமர்வதற்கான நேரம் மட்டும் அல்ல நாட்டிற்கான பாதுகாவலராக மாற வேண்டிய நேரமாக நான் கருதுகிறேன்.
இந்த நாட்டிற்கு நல்ல பாதுகாவலர் தேவை. எனவே 60 மாதங்களை எனக்கு தாருங்கள். 60 ஆண்டுகளாக ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இப்போது 60 மாதங்களுக்கு இந்த நாட்டிற்கு சேவை செய்யும் சேவகனை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு ஆட்சியாளன் வேண்டுமா? சேவகன் வேண்டுமா? ஆட்சியாளர்களிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்கள்.
காஷ்மீர் மக்களிடம் வாஜ்பாய் நம்பிக்கையை ஏற்படுத்தினார். வாஜ்பாய்க்கு இன்னும் 5 ஆண்டுகளை அளித்திருந்தால் காஷ்மீரின் முகம் வேறு மாதிரி இருந்திருக்கும். அவர் முடிக்காத பணிகளை நாம் நிறைவேற்றுவோம். காஷ்மீரில் மனிதநேய கொடியை பறக்க விடுவோம்.
குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரி. நாம் இந்த நாட்டை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்.
மாற்றத்திற்கான அலைகள் காஷ்மீரில் வீசுகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்கள் பா.ஜ.க. வேட்பாளர்களை வெற்றியாளர்களாக டெல்லிக்கு அனுப்புவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
வி.ஐ.பி. தொகுதி அந்தஸ்தை இழக்கிறது சிவகங்கை
1980-க்குப் பிறகு முதல்முறையாக ப.சிதம்பரம் இல்லாத தேர்தலை சந்திக்கிறது சிவகங்கை தேர்தல் களம். இதனால் 30 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த வி.ஐ.பி. தொகுதி என்ற அந்தஸ்தை இழக்கிறது சிவகங்கை சீமை.
சிவகங்கையில் தொடர்ந்து 8 முறை போட்டியிட்டு 7 முறை வெற்றிபெற்று 23 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அமைச்சராகவும் வலம் வந்தவர் ப.சிதம்பரம். 1984-ல் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தல் களத் துக்கு வந்த சிதம்பரம், திமுக வேட்பாளர் தா.கிருட்டிணனை தோற்கடித்து நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தவர், அடுத்த 10 மாதங்களில் பணியாளர் நலன் மற்றும் மக்கள் குறைதீர்ப்பு துறை அமைச்சரானார். அடுத்த சில மாதங்களில் உள்துறை இணை அமைச்சரானார்.
1989-ல் மீண்டும் அதே கூட்டணியில் போட்டியிட்டு தி.மு.க-வின் ஆ.கணேசனை வீழ்த்தி எம்.பி. ஆனார். 1991-ல் அதிமுக கூட்டணியில் திமுக-வின் காசிநாதனை வென்ற சிதம்பரத் துக்கு தனிப் பொறுப்புடன் கூடிய வர்த்தக அமைச்சர் பதவி தரப்பட்டது. ஆனால், இடை யில் ஃபேர் குரோத் ஊழல் சர்ச்சையில் சிக்கியதால் பதவி விலகியவர், ஒன்றரை வருடங்கள் கழித்து மீண்டும் வர்த்தக அமைச் சரானார்.
1996-ல் தமாகா - திமுக கூட்டணியில் போட்டியிட்டு காங்கிரஸின் கௌரிசங்கரை வீழ்த்தினார். அந்தத் தேர்தலில் சிதம்பரத்தின் வாக்கு வித்தியாசம் மட்டுமே 2,47,302 ஓட்டுகள். அப்போது ஐ.கே. குஜ்ரால் அமைச்சரவையில் இரண்டாண்டு காலம் நிதியமைச்சராக இருந்தார்.
1998-ல் மீண்டும் தமாகா - காங்கிரஸ் கூட்டணியில் போட்டி யிட்டு அதிமுக-வின் காளிமுத்துவை வீழ்த்தினார் சிதம்பரம். 1999-ல் தமாகா- விடுதலைச் சிறுத்தை கள் கூட்டணியில் போட்டியிட்டு காங்கிரஸின் சுதர்சன நாச்சியப் பனிடம் தோற்றார்.
அப்போது சிதம்பரத்துக்கு கிடைத்த ஓட்டுகள் சுமார் 1.26 லட்சம். இடையில், மூப்பனாருடன் முறைத்துக் கொண்டு 2001 சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை தொடங்கி, திமுக-வுடன் கூட்டணி வைத்தார் சிதம்பரம்.
அந்தத் தேர்தலில் அவரது கட்சிக்கு புரசைவாக்கம், காட்டு மன்னார் கோவில் தொகுதி களை ஒதுக்கியது திமுக. இரண்டி லுமே சிதம்பரம் கட்சி வேட்பாளர் களான புரசை ரங்கநாதன், வள்ளல் பெருமான் வெற்றி பெற்றனர். தொடர்ந்து தனது கட்சியை நடத்திவந்த சிதம்பரம், 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஓசைப்படாமல் தான் மட்டும் காங்கிரஸில் ஐக்கியமாகி கை சின்ன வேட்பாளரானார். அந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நின்று அதிமுக வேட் பாளர் கருப்பையாவை வீழ்த்தி நிதியமைச்சராகவும் வந்தார்.
மூன்றரை ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தவர், மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, நிதியை பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைத்துவிட்டு, உள்துறைக்கு அமைச்சரானார். 2009-ல் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக-வின் ராஜகண்ணப்பனிடம் போராடி 3,354 ஓட்டு வித்தியாசத்தில் தொகுதியை தக்கவைத்த சிதம்பரம், மீண்டும் நிதியமைச்சரானார்.
இந்தத் தேர்தலில் ப.சிதம்பரம் தனது தேர்தல் பயணத்தை நிறுத்திக் கொண்டு, ’’நானே நிற்பதாக நினைத்து கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’’ என்று மகனுக்காக வாக்கு கேட்டு வருகிறார்.
1980-க்குப் பிறகு முதல்முறையாக ப.சிதம்பரம் இல்லாத தேர்தலை சந்திக்கிறது சிவகங்கை தேர்தல் களம். இதனால் 30 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த வி.ஐ.பி. தொகுதி என்ற அந்தஸ்தை இழக்கிறது சிவகங்கை சீமை.
சிவகங்கையில் தொடர்ந்து 8 முறை போட்டியிட்டு 7 முறை வெற்றிபெற்று 23 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அமைச்சராகவும் வலம் வந்தவர் ப.சிதம்பரம். 1984-ல் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தல் களத் துக்கு வந்த சிதம்பரம், திமுக வேட்பாளர் தா.கிருட்டிணனை தோற்கடித்து நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தவர், அடுத்த 10 மாதங்களில் பணியாளர் நலன் மற்றும் மக்கள் குறைதீர்ப்பு துறை அமைச்சரானார். அடுத்த சில மாதங்களில் உள்துறை இணை அமைச்சரானார்.
1989-ல் மீண்டும் அதே கூட்டணியில் போட்டியிட்டு தி.மு.க-வின் ஆ.கணேசனை வீழ்த்தி எம்.பி. ஆனார். 1991-ல் அதிமுக கூட்டணியில் திமுக-வின் காசிநாதனை வென்ற சிதம்பரத் துக்கு தனிப் பொறுப்புடன் கூடிய வர்த்தக அமைச்சர் பதவி தரப்பட்டது. ஆனால், இடை யில் ஃபேர் குரோத் ஊழல் சர்ச்சையில் சிக்கியதால் பதவி விலகியவர், ஒன்றரை வருடங்கள் கழித்து மீண்டும் வர்த்தக அமைச் சரானார்.
1996-ல் தமாகா - திமுக கூட்டணியில் போட்டியிட்டு காங்கிரஸின் கௌரிசங்கரை வீழ்த்தினார். அந்தத் தேர்தலில் சிதம்பரத்தின் வாக்கு வித்தியாசம் மட்டுமே 2,47,302 ஓட்டுகள். அப்போது ஐ.கே. குஜ்ரால் அமைச்சரவையில் இரண்டாண்டு காலம் நிதியமைச்சராக இருந்தார்.
1998-ல் மீண்டும் தமாகா - காங்கிரஸ் கூட்டணியில் போட்டி யிட்டு அதிமுக-வின் காளிமுத்துவை வீழ்த்தினார் சிதம்பரம். 1999-ல் தமாகா- விடுதலைச் சிறுத்தை கள் கூட்டணியில் போட்டியிட்டு காங்கிரஸின் சுதர்சன நாச்சியப் பனிடம் தோற்றார்.
அப்போது சிதம்பரத்துக்கு கிடைத்த ஓட்டுகள் சுமார் 1.26 லட்சம். இடையில், மூப்பனாருடன் முறைத்துக் கொண்டு 2001 சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை தொடங்கி, திமுக-வுடன் கூட்டணி வைத்தார் சிதம்பரம்.
அந்தத் தேர்தலில் அவரது கட்சிக்கு புரசைவாக்கம், காட்டு மன்னார் கோவில் தொகுதி களை ஒதுக்கியது திமுக. இரண்டி லுமே சிதம்பரம் கட்சி வேட்பாளர் களான புரசை ரங்கநாதன், வள்ளல் பெருமான் வெற்றி பெற்றனர். தொடர்ந்து தனது கட்சியை நடத்திவந்த சிதம்பரம், 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஓசைப்படாமல் தான் மட்டும் காங்கிரஸில் ஐக்கியமாகி கை சின்ன வேட்பாளரானார். அந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நின்று அதிமுக வேட் பாளர் கருப்பையாவை வீழ்த்தி நிதியமைச்சராகவும் வந்தார்.
மூன்றரை ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தவர், மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, நிதியை பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைத்துவிட்டு, உள்துறைக்கு அமைச்சரானார். 2009-ல் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக-வின் ராஜகண்ணப்பனிடம் போராடி 3,354 ஓட்டு வித்தியாசத்தில் தொகுதியை தக்கவைத்த சிதம்பரம், மீண்டும் நிதியமைச்சரானார்.
இந்தத் தேர்தலில் ப.சிதம்பரம் தனது தேர்தல் பயணத்தை நிறுத்திக் கொண்டு, ’’நானே நிற்பதாக நினைத்து கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’’ என்று மகனுக்காக வாக்கு கேட்டு வருகிறார்.
சென்னையை திமுக, அதிமுக சீரழித்து விட்டன: விஜயகாந்த் குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம்: சென்னையை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கழகங்களும் சீரழித்து விட்டன என விஜயகாந்த் கூறினார்.
மத்திய சென்னையில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அண்ணாநகரில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''சென்னை நகர் குப்பைகளும், கொசுக்களும் நிறைந்து காணப்படுகிறது. சென்னை நகர் முழுவதும் சுகாதார சீர்கேடுகள் நிலவுகிறது.
சிங்கார சென்னை, சீர்மிகு சென்னை எனக்கூறி 2 கழகங்களும் சென்னையை சீரழித்து விட்டன. ஆண்டாண்டு காலமாக சென்னை நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்காக திட்டங்கள் எதுவும் இதுவரை கொண்டு வரவில்லை'' என்றார்.
காஞ்சிபுரம் பிரசாரம்
முன்னதாக, பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள ம.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரத்தில் போட்டியிடும் வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ''காஞ்சிபுரத்தின் நீராதாரங்களை பெருக்க எவ்வளவோ வழிகள் இருக்கிறது. ஆனால், ஆண்ட, ஆளும் கட்சிகள் இதுவரை எதுவும் செய்யவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களை துர்வார அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீர் ஆதாரங்களையும் பலப்படுத்தவில்லை. எனவே, தமிழகம் வளம் பெற நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். எனவே, பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்'' என்றார்.
காஞ்சிபுரம்: சென்னையை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கழகங்களும் சீரழித்து விட்டன என விஜயகாந்த் கூறினார்.
மத்திய சென்னையில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அண்ணாநகரில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''சென்னை நகர் குப்பைகளும், கொசுக்களும் நிறைந்து காணப்படுகிறது. சென்னை நகர் முழுவதும் சுகாதார சீர்கேடுகள் நிலவுகிறது.
சிங்கார சென்னை, சீர்மிகு சென்னை எனக்கூறி 2 கழகங்களும் சென்னையை சீரழித்து விட்டன. ஆண்டாண்டு காலமாக சென்னை நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்காக திட்டங்கள் எதுவும் இதுவரை கொண்டு வரவில்லை'' என்றார்.
காஞ்சிபுரம் பிரசாரம்
முன்னதாக, பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள ம.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரத்தில் போட்டியிடும் வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ''காஞ்சிபுரத்தின் நீராதாரங்களை பெருக்க எவ்வளவோ வழிகள் இருக்கிறது. ஆனால், ஆண்ட, ஆளும் கட்சிகள் இதுவரை எதுவும் செய்யவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களை துர்வார அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீர் ஆதாரங்களையும் பலப்படுத்தவில்லை. எனவே, தமிழகம் வளம் பெற நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். எனவே, பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்'' என்றார்.
”மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்” காங்கிரஸ் வேட்பாளர் பேச்சால் சர்ச்சை
காங்கிரஸ் கட்சியின் சகாரான்பூர் தொகுதி வேட்பாளர், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில், சகாரான்பூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மஸூத் பேசிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அவர், நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நேற்று வெளியாகியுள்ள இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:- உத்தர பிரதேசம் ஒன்றும் குஜராத் அல்ல. குஜராத்தில் வெறும் 4 சதவீத மூஸ்லிம் மக்களே உள்ளனர். ஆனால் இங்கு 22 சதவீத முஸ்லீம் மக்கள் உள்ளனர். நான் நரேந்திர மோடிக்கு எதிராக போராட உள்ளேன். ஏனெனில் அவருக்கு பொருத்தமான பதிலடி கொடுப்பது எவ்வாறு என்று எனக்கு தெரியும். நாங்கள் அவரை துண்டு துண்டாக வெட்டுவோம் .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த பேச்சு குறித்து அங்குள்ள செய்தித்தாள் ஒன்றிற்கு மசூத் அளித்த விளக்கத்தில், இது பழைய அறிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், இது போன்று சிலவற்றை நான் கூறியிருந்தால் ஜனாநாயக முறையில் மோடிக்கு கற்பிக்க வேண்டும் என்ற அர்த்ததில் தான் கூறியிருப்பேன் என்று தெரிவித்தாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மறுத்த அவர், குஜராத்தில் நடைபெற்ற குற்ற செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நான் மனிப்பு கேட்க தயாராக இருப்பதக தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் சகாரான்பூர் தொகுதி வேட்பாளர், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில், சகாரான்பூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மஸூத் பேசிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அவர், நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நேற்று வெளியாகியுள்ள இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:- உத்தர பிரதேசம் ஒன்றும் குஜராத் அல்ல. குஜராத்தில் வெறும் 4 சதவீத மூஸ்லிம் மக்களே உள்ளனர். ஆனால் இங்கு 22 சதவீத முஸ்லீம் மக்கள் உள்ளனர். நான் நரேந்திர மோடிக்கு எதிராக போராட உள்ளேன். ஏனெனில் அவருக்கு பொருத்தமான பதிலடி கொடுப்பது எவ்வாறு என்று எனக்கு தெரியும். நாங்கள் அவரை துண்டு துண்டாக வெட்டுவோம் .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த பேச்சு குறித்து அங்குள்ள செய்தித்தாள் ஒன்றிற்கு மசூத் அளித்த விளக்கத்தில், இது பழைய அறிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், இது போன்று சிலவற்றை நான் கூறியிருந்தால் ஜனாநாயக முறையில் மோடிக்கு கற்பிக்க வேண்டும் என்ற அர்த்ததில் தான் கூறியிருப்பேன் என்று தெரிவித்தாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மறுத்த அவர், குஜராத்தில் நடைபெற்ற குற்ற செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நான் மனிப்பு கேட்க தயாராக இருப்பதக தெரிவித்தார்.
- Sponsored content
Page 4 of 15 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 15
|
|