புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
2 Posts - 3%
jairam
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
2 Posts - 3%
சிவா
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
1 Post - 1%
Manimegala
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
13 Posts - 4%
prajai
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
9 Posts - 3%
Jenila
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
4 Posts - 1%
jairam
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
4 Posts - 1%
Rutu
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
2 Posts - 1%
Barushree
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_m10என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 3:43 am

தமிழில் எனக்கு தெரிந்தது இரண்டே சொற்கள் தான். "வணக்கம்' "நமஸ்காரம்'. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. ஜெயலலிதா, எனது ராக்கி சகோதரியான பிரேமா சுப்ரமணியம் உள்பட.

ஆனால் அவர்கள் எனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க கொஞ்சமும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களும் என்னிடம் பஞ்சாபி கற்றுக் கொள்ளவில்லை.

இப்போது என்னைப் பற்றி சில வார்த்தைகள்.

உங்களுக்கே அனேகமாய்த் தெரிந்திருக்கும் - நான் ஒரு சர்தார்ஜி. என்னை "பஞ்சாப் சோ ராமசாமி' என்று அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். அவருக்கும் எனக்கு உருவ ஒற்றுமை எதுவும் கிடையாது. என்னைவிட வயதில் ரொம்பச் சிறியவர் அவர். அவருக்கு முட்டையோடு மாதிரி வழவழவென்று வழுக்கை. புருவம் கிடையாது. தாடி கிடையாது. எனக்கு வயது எழுபத்தைந்தாகிறது. நீண்ட வெள்ளை முடி உண்டு. தலைப்பாகை கட்டாதபோது தோள்வரை தொங்கும் அத்துடன் மீசையும் தாடியும் எனக்க உண்டு.

உலகத்திலேயே ரொம்ப மோசமாய் உடையணியும் சர்தார்ஜி நான்தான். சோவுக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. நாங்கள் இரண்டு பேருமே ஜோக் அடிப்பவர்கள். அவரது ஜோக் சீரியஸாய் இருக்கும். நான் கோமாளி - விதூஷகன் ரகம்.

1915-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி நான் பிறந்தேனென்று சொல்கிறார்கள். அதற்கு ரெக்கார்டு எதுவும் இல்லை. ஏனென்றால் நான் பிறந்த சின்னஞ்சிறு ஹடாலி கிராமத்தில் பதிவு கிதிவு எல்லாம் கேள்விப்பட்டிராத விஷயம். அந்தக் கிராமம் இப்போது பாகிஸ்தானில், தார் பாலைவனத்தில் இருக்கிறது. நான் 1915-ம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி பிறந்ததாக அதிகாரபூர்வமாகப் பதிவாகியுள்ளது.

நான் லியோ ராசிக்காரன் என்பது எனக்கு தெரியும். வேகம் உள்ளவன், சகஜமாகப் பழகுபவன், கூச்சப்படாதவன்.

மிகச் சிறு பிராயத்திலேயே ஐந்தாறு வயதில் நான் குறும்புக்காரனாக வாழ்க்கையைத் தொடங்கி விட்டேன்.

எனக்கு நாலு அறை விழுந்தது: ஒரு உறவினர் எங்களுடன் தங்கியிருக்க வந்திருந்தார். விடி காலையிலேயே எழுந்து விடுவார். எங்கள் கிராமத்தைச் சுற்றியிருந்த மணல் மேடுகளுக்குச் சென்று காலை கடன்களை முடித்துக் கொண்டு திரும்புவார். முந்தின இரவே, தன் பக்கத்தில் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்வார் - மறுநாள் காலைக் கழுவிக் கொள்வதற்காக. எதனாலோ எனக்கு இது எரிச்சலாக இருந்தது. ஒருநாள் ராத்திரி அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு புட்டிக் கோந்தை அவர் செம்பில் கொட்டி வைத்தேன்.

மறுநாள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு திரும்பியவர் இடி விழுந்தாற் போலீருந்தார். தனக்குப் பிசுபிசுவென்று பேதியாகிதென்று, தன் வேஷ்டி பிட்டத்தோடு ஒட்டிக் கொள்கிறதென்றும் எல்லாரிடமும் புலம்பிக் கொண்டிருந்தார், அத்துடன், ஒரு ஹக்கீமிடம் போய் மருந்து வாங்கிக் கொண்டார். அவர் தந்த பேதி மருந்தையும் கவனமாக உட்கொண்டார்.

அதற்கு மேல் ரகசியத்தை சொல்லாமலிருக்க என்னால் முடியவில்லை. நான் செய்த காரியத்தை எல்லாரிடமும் சொன்னேன். என்னை நாலு அறை அறைந்து, காதைத் திருகி, அந்த உறவினரிடம் மன்னிப்புக் கேட்கும்படி செய்தார்கள். ஆனால் கிராமம் மொத்தமும் விழுந்து விழுந்து சிரிந்தது. எல்லாரும் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தார்கள். நான் ஒரு ஹீரோ மாதிரி ஆகிவிட்டேன்.



நல்ல பாம்பை பிடித்து....: குறும்புத்தனம் செய்வது என் ரத்தத்தில் கலந்திருந்தது.

என் சயன்ஸ் ஆசிரியர் எப்போதும் பார்த்தாலும் என் கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு பாடம் கற்பித்தேன். ஒரு நாளும் மறக்கமுடியாதபடி.

அவருடைய லேபரட்டரியில், ஸ்பிரிட் ஊற்றிய ஜாடிகளில் பலவகையான செத்த பாம்புகள் வைத்திருந்தார் அவர். ஒரு நல்ல பாம்பு வேண்டும். கிடைக்கமாட்டேன் என்கிறது என்று அவர் அடிக்கடி சொல்வார்.

மாரிக் காலத்தில் ஒரு நாள் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு நல்ல பாம்பைக் கண்டோம். அது நழுவியோடப் பார்த்தது. ஆனால் நானும் என் சகோதரனும் ஒரு கழியை எடுத்து அடித்து, அதைக் குற்றுயிராக்கி விட்டோம். ஒர பெரிய பிஸ்கெட் டின்னில் அதைப் போட்டு மூடி, கயிறு போட்டுக் கட்டி விட்டோம்.

மறுநாள் அதைப் பெருமையுடன் சயின்ஸ் ஆசிரியரிடம் தந்தோம். எங்களுக்கு ஏதோ வேலை கொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு காலி ஜாடியுடன் டின்னிடம் போய் உட்கார்ந்து, கயிற்றை அவிழ்க்கலானார். மூடியைச் சிறிது திறந்தாரோ இல்லையோ...

மூடி எகிறிப்போய் விழ, அடைபட்டுக் கிடந்த அந்தப் பாம்பு கோபத்துடன் புஸ்ஸென்று சீறிக் கொண்டு வெளியே வந்தது. வகுப்பறையை ஆத்திரத்துடன் நோட்டம் விட்டுவிட்டு ஆசிரியரை நோக்கி ஒரு சீறு சீறியது! அவ்வளவுதான், அவர் பயந்தடித்துக் கொண்டு விழுந்தார். பாம்பு, குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்தபோதிலும், எப்படியோ ஊர்ந்து ஓடி வெளியேறிவிட்டது. பிற்பாடு, நான் இந்தச் சம்பவத்தை விஷ்ணுவின் அடையாளம் என்ற தலைப்பில் ஒரு சிறுகதையாக எழுதினேன்.

அவன் ஒரு கிறுக்கு!: என் முதல் சிறுகதைத் தொகுப்பு லண்டனில் வெளிவந்தது. மிக நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் பணம் எதுவும் கிடைக்கவில்லை.

சிறிது தலைக்குனிவுடன் டெல்லிக்குத் திரும்பினேன். நண்பர்களும் உறவினர்களும் என் முதுகுக்கு பின்னால் சிரித்தார்கள். "பரீட்சைகளைப் பாஸ் பண்ண முடியவில்லை. புஸ்தகம் எழுதப் புறப்பட்டு விட்டான்' என்றார்கள். "அவன் ஒரு கிறுக்கன்' என்று என் தந்தை சொன்ன போதிலும் எனக்கு உறுதியுடன் பக்கபலமாக இருந்தார். போபாலில் அவருக்கு சொந்தமான வீட்டில் மூன்று மாத காலம் தனியே தந்கி, ட்ரெயின் டு பாகிஸ்தான் என்ற என் முதல் நாவலை எழுதி முடித்தேன். சிறந்த நவீனமென்று அது க்ரோவ் பரிசைப் பெற்றுத் தந்தது எனக்கு. நான் மெர்ஸிடிஸ் பென்ஸ் கார் வங்கிக் கொள்ள முடிந்தது.

வெற்றி! வெற்றி! வெற்றி!: சீக்கியர்களின் வரலாறும் மதமும் என்ற புத்தகத்துக்காக வெளிநாடுகளுக்குச் சென்று தகவல்கள் திரட்டினேன். இரண்ட வால்யூம்கள் கொண்ட இப்புத்தகத்தை பிரின்ஸ்டன் அண்ட் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடி பிரஸ் வெளியிட்டது. பிரின்ஸ்டன், ஸ்வார்ட்மோர், ஹவாய் பல்கலைக்கழகங்கள் எனக்கு விஸிட்டிங் புரொபசர்ஷிப் பதவிகள் வழங்கின.

இச்சமயம் நான் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தவறாமல் எழுதத் தொடங்கியிருந்தேன். 1969ம் ஆண்டு பம்பாய் இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு ஆசிரியராக வரும்படி அழைத்தார்கள். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, ஒன்பது வருட காலம் அதன் ஆசிரியராக இருந்தேன். 80000 பிரதிகளாக இருந்த அதன் சர்க்குலேஷனை 410000க்கு உயர்த்தினேன்.

என் பத்திரிகை, இந்தியாவிலேயே மிக அதிகமாகப் படிக்கப்படுவதாக ஆயிற்று, வெற்றி என் தலைக்கேறிற்று.

1979ல் பத்திரிகையின் சொந்தக்காரர்களான ஜெயின்கள், சிறிதும் தயவுதாட்சண்யம் பாராமல், என்னைப் பதவியிலிருந்து நீக்கினார்கள். மீண்டும் டெல்லிக்கே திரும்பினேன் - எழுதுவதைத் தவிர வேறு எதுவும் அறியாதவனாக.

தெய்வங்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லாதபோதும், தெய்வங்கள் எனக்கு நல்லதே செய்து வந்துள்ளன. வீக்லிக்குப் பிறகு நேஷனல் ஹெரால்டு ஆசிரியராக ஆனேன். (ஊதியம் இல்லாமல்) பிறகு நியூடெல்லி மேகஸின். பிறகு சஞ்சய் காந்தியின் தயவில் - அவருடைய துன்பம் மிகுந்த காலத்தில் நான் சினேகிதனாக இருந்த காரணத்தால் - ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராக ஆனேன். ராஜ்ய சபா உறுப்பினராகவும் ஆனேன். சஞ்சய்காந்தி இறந்து போனார். அவருடன் என் அரசியல் அபிலாஷைகள் மொத்தமும் இறந்து போயின. இந்திரா காந்தி என்னை ஹிந்துஸ்தான் டைம்ஸிலிருந்து வெளியேற்றினார்.

ராஜ்ய சபா உறுப்பினர் பதவி மீண்டும் ஒருமுறை எனக்குக் கொடுத்திருக்கலாம். ராஜீவ் காந்தி கொடுக்கவில்லை.

என் ஆஸ்தியெல்லாம் என்னுடைய கடுமையான பேனாதான். பதவிப் பித்தர்களையும் கூஜாக்களையும் ஈவிரக்கமின்றி என் பேனாவினால் சாடினேன். கவர்னர்கள், நீதிபதிகள், மந்திரிகள், பதவியில் இருக்கும் எவரையும் கிண்டல் செய்தேன்.

நீதிமன்றத்திலும் பிரஸ் கவுன்ஸிலிலும் என் மீது புகார் தொடுத்தார்கள். அதனால் எனக்கு எதுவும் நேரவில்லை - வாழ்க்கையில் முன்னெப்போதையும் விட அதிகப் பணம் சம்பாதித்தேன் என்பதைத் தவிர.

உலகத்தைப் பலமுறை சுற்றினேன் - பயணத்துக்கோ தங்குவதற்கோ என் கையை விட்டு எதுவும் செலவழிக்காமலே. எனக்க முன்னிருந்த எந்தப் பத்திரிகையாளரைக் காட்டிலும் அதிகம் பேர் நான் எழுதியதைப் படித்தார்கள்.

[thanks] 18.10.1990ல் குஷ்வந்த்சிங் தயாரித்து, எழுதிய குமுதம் இதழிலிருந்து[/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக