புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
3 Posts - 2%
Kavithas
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
1 Post - 1%
bala_t
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
1 Post - 1%
prajai
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
280 Posts - 42%
heezulia
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
5 Posts - 1%
prajai
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
4 Posts - 1%
manikavi
சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_m10சுகப்பிரசவம் சாத்தியமே! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகப்பிரசவம் சாத்தியமே!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 21, 2014 8:00 pm

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை, கூடியமட்டும் சிசேரியன் மூலம் பிள்ளை பெறும் நிலைமையைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான். மொத்த குழந்தைப் பிறப்பில் 10% முதல் 15% க்குமேல் சிசேரியன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடாது என்றுதான் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால் இந்தியாவில் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவோர் எண்ணிக்கை 24% ஆக இருக்கிறது.

இதற்கு காரணம் பெண்கள் வலியில்லாமல் குழந்தை பெறவும், குழந்தையின் ஜாதகம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் சிசேரியன் செய்து கொள்ளவும் விரும்புகிறார்கள் என்றும், குறிப்பாக இத்தகைய விருப்பம் உழைக்கும் மகளிரிடம் அதிகமாக இருக்கிறது என்றும் மருத்துவ உலகம் கூறுகிறது. அண்மையில் இந்திய குடும்ப நலத்திட்ட சங்கம் நடத்திய ஆய்வில் 60% பெண்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவதையே விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால், மருத்துவ உலகுக்கு வெளியே இருப்போர் சொல்வது இதற்கு நேர் எதிரான ஒன்று. குழந்தை மிகவும் பெரிதாக இருப்பதால் சுகப்பிரசவம் மிகமிக அரிது. வலி அதிகமாக இருக்கும். சிசேரியன் மட்டுமே பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் சொன்னதால் ஒப்புக்கொண்டோம் என்பதாகவும், குழந்தை தலை புரண்டு கிடக்கிறது என்றும், பனிக்குடம் உடைந்துவிட்டதால் இனி சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லை என்றும் கூறித்தான் சிசேரியனுக்கு சம்மதிக்க வைத்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.

இந்த முரண்பாடுகளின் பின்னணியில் மருத்துவ வணிகம் முக்கிய இடம் பெறுகிறது. சாதாரண மகப்பேறு ரூ.3,000 வரை செலவாகிறது என்றால், சிசேரியனுக்கு ரூ.30,000 முதல் 40,000 வரை செலவாகிறது. இதில் மருத்துவர்களுக்கு பாதி கட்டணம் கிடைக்கிறது என்பதும் சிசேரியன் அதிகரிக்க காரணம் என்று சொல்லப்படுகிறது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள், உள்ளாட்சிகள் நடத்தும் மகப்பேறு மருத்துவமனைகளைக் காட்டிலும் அதிகமான குழந்தை பிறப்பு தனியார் மருத்துவமனைகளில்தான் நடக்கிறது.

தற்போது அரசு மருத்துவமனைகளிலும்கூட சிசேரியன் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. திருச்சி மாவட்டத்தில் 2011இல் 917 சிசேரியன் நடந்தது என்றால், 2013இல் 1,987-ஆக இரண்டு ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதே நிலைமைதான் தமிழ்நாடு முழுவதிலும். இதற்குக் காரணம், அரசு மருத்துவமனைகளில் பிரசவ கால இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாக ஆக்குவதற்கு, கொஞ்சம் கடினமான பிரசவம் என்றாலும் சிசேரியனாக மாற்றிவிடுகிறார்கள்.

இதன் உண்மைகளும் பின்னணிகளும் எதுவாக இருந்தபோதிலும் சிசேரியன் தேவைப்படும் நேர்வுகள் மிகவும் குறைவு என்பதும் இவற்றை முறையான பயிற்சி மற்றும் மருத்துவ கண்காணிப்பால் தவிர்த்துவிட முடியும் என்பதுமே நிஜம். இது ஒரு தாயின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு மிகமிக இன்றியமையாதது.

உழைக்கும் மகளிர் சிசேரியன் செய்துகொள்ளவே விரும்புகிறார்கள் என்கின்ற ஆய்வு முடிவு நம்பும்படியாக இல்லை. சிசேரியன் செய்துகொண்டால், அந்தத் தாய் எழுந்து நடமாட ஒரு வாரம் ஆகும். அவர் அன்றாடப் பணிகளை தானே செய்வதற்கு இரண்டு மாதங்கள் ஆகும். இவ்வளவு சிரமங்களை ஒரு கர்ப்பிணி விரும்பி ஏற்கிறார் என்று சொல்லப்படுவது நம்பும்படியாக இல்லை.

மேலைநாடுகளில், முடிந்தவரை இயற்கையான பிரசவங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் என்பது தாய் சேய் நல மருத்துவருக்கு இழிவு என்பதாகவும், கர்ப்ப நேரத்தில் மருத்துவர் கர்ப்பிணித் தாயைச் சரியாக வழிகாட்டவில்லை என்பதாகவும் அங்கே கருதப்படுகிறது. இந்தியாவின் நிலைமை நேர் எதிராக மாறிக்கொண்டு வருகிறது. இது ஆரோக்கியமான வருங்கால சமுதாயத்திற்கு வழிகோலாது.

மதுரை அருகே ஒரு பழங்குடியினத்தவர், ஒரு கர்ப்பிணியை பிரசவத்துக்காக அழைத்து வந்தபோது, வயிற்றில் இருக்கும் குழந்தை தலை புரண்டு கிடப்பதால் அறுவைச் சிகிச்சை செய்துதான் வெளியே எடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியபோது, அந்த பழங்குடியின மூப்பன் அக்குழந்தையின் தலையை அப்பெண்ணின் வயிற்றைத் தட்டி உருட்டி சரிசெய்து சுகப்பிரசவம் பார்த்ததாக ஒரு செய்தி நமது தினமணியிலேயே வந்தது.

இந்த அளவுக்கு பழைமைக்கு திரும்ப வேண்டியதில்லை. ஆனாலும், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் 99% குழந்தைப் பிறப்பை சுகப்பிரசவமாக மாற்றிவிடலாம். முந்தைய காலத்தில் மட்டுமல்ல, இன்றைய காலத்திலும் இயற்கையான மக்கட்பேறு சாத்தியமே! அது வலியுறுத்தப்பட வேண்டும். (தினமணி தலையங்கம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக