புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
31 Posts - 36%
prajai
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Jenila
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
1 Post - 1%
jairam
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
7 Posts - 5%
prajai
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Jenila
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Rutu
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
1 Post - 1%
jairam
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:51 am

First topic message reminder :

ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறும் உரிமை கருணாநிதிக்கு இல்லை: ஜெயலலிதா

தான் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கருணாநிதி ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்துக் கூறும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:

இந்திய நாடே அதிர்ச்சியுறும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் கோவையில் நடைபெற்ற போது, அதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய அன்றைய முதல்வர் கருணாநிதி; 1997 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கத் தவறிய

கருணாநிதி; தனது மைனாரிட்டி ஆட்சியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட போது, அதனை வேடிக்கைப் பார்க்கும் அளவுக்கு காவல் துறையை சீரழித்த கருணாநிதி; அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை, தனது ஆட்சிக் காலத்தில் அமளிக் காடாக மாற்றிய கருணாநிதி; 1.5.2014 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து விவரம் புரியாமல், மனம் போன போக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டு இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

கருணாநிதி தனது அறிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ளது என்றும்; ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், தீவிரவாத நடவடிக்கைகள் என்ன என்று உடனடியாக முறைப்படி முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றிருக்காமலே கூடத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் வாய்க்கு வந்தவற்றையெல்லாம் கூறி இருக்கிறார்; எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் ‘armchair critic’ என்ற ஒரு சொலவடை உள்ளது. அதாவது எதைப் பற்றியும் தெளிவுற, அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ளாமல்; சாய்வு நாற்காலியில் சுகமாக அமர்ந்தவாறே, மனம் போன போக்கில், எதிர்மறை கருத்துகளைத் தெரிவிப்பது என்பது இதன் பொருள். கருணாநிதியின் அறிக்கை இதற்கு இலக்கணமாக அமைந்துள்ளது.

தீவிரவாதம் தமிழகத்தில் தலைதூக்க விடாமல் இருப்பதில் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழகக் காவல் துறையினர் கடந்த

34 மாதங்களாக எடுத்து வருகின்றனர். பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட “போலீஸ்” பக்ருதீனை சென்னையிலும், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை ஆந்திர மாநிலம் புத்தூரிலும் அடையாளம் கண்டு, அவர்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக காவல் துறை கைது செய்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதி ஜாகீர் உசேனையும் தமிழகக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், 1.5.2014 அன்று பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் பெங்களூரு-கவுகாத்தி விரைவு ரயில், 1ஙூ மணி நேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தவுடன், எஸ் 4 மற்றும் எஸ் 5 ரயில் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்து, ஒருவர் உயிரிழந்தார்; 14 பேர் காயமுற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் என்பவை மத்திய அரசினுடைய ரயில்வே பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. மாநில ரயில்வே காவல் படை, ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ரயில் நிலையத்திற்குள்ளோ அல்லது ரயிலிலோ ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறும் போது, ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தமிழகக் காவல் துறையினர் புலன் விசாரணையை மேற்கொள்வார்கள். அந்த வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றவுடன் தமிழக காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், எனது உத்தரவின் பேரில், இந்த வழக்கு மாநிலக் குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட உலோக பைப், மின்கல உறை, கடிகாரத்தின் பகுதிகள் ஆகியவற்றை கொண்டு, எவ்விதமான கருவி பயன்படுத்தப்பட்டது; பயன்படுத்திய வெடிகுண்டின் தன்மை போன்றவற்றை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வெடிகுண்டு எங்கு வைக்கப்பட்டது என்பது குறித்து ஆராய, ரயில் வண்டி புறப்பட்ட ரயில் நிலையத்திலிருந்து சென்னை வந்து சேரும் வரை உள்ள ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள காமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆராயப்படுகின்றன. முதல்கட்ட விசாரணையில், காலக்கெடுவுடன் கூடிய வெடிகுண்டாக இருக்கலாம் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

இந்த ரயில் குறித்த நேரத்தில் சென்னை வந்தடைந்து, புறப்பட்டுச் சென்று இருக்குமேயானால், காலை 7.15 மணிக்கு ஆந்திர மாநில எல்லையில் சென்று கொண்டிருக்கும் போது வெடித்திருக்கும். இது குறித்தும், மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு எந்த ஓர் அமைப்பும் இதுவரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் நுண்ணறிவுப் பிரிவினருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களிடமும், இதர சாட்சிகளிடமும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

நான்கு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேனிடமும் முழுமையான விசாரணையை காவல் துறையினர் அன்றே மேற்கொண்டனர். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து ஜாகீர் உசேனிடம் தகவல் பெறப்பட்டு இருந்தால், தமிழகக் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பினை தடுத்து இருப்பார்கள். தமிழகக் காவல் துறை முன் எச்சரிக்கையுடன் தான் செயல்பட்டு வருகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க,

ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று கருணாநிதி கூறி இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் பொறுப்பற்ற செயல் ஆகும்.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் 1.5.2014 அன்று அளித்த பேட்டியில், “இந்த ரயில் பெங்களூரிலிருந்து கிளம்பி ஜோலார்பேட்டை தாண்டியவுடன் தமிழ்நாடு எல்லை வந்து விடுகிறது. எனவே, தமிழ்நாட்டு எல்லைக்குள் எங்கே குண்டு வைக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு காவல் துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற எச்சரிக்கையாகத் தான் இதைக் கருத வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், வெடிக்காத பைப் வெடிகுண்டு ஒன்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

இந்த விபத்து குறித்து கருணாநிதியும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவனும் தெரிவிக்கின்ற கருத்துகளைப் பார்க்கும் போது, தீவிரவாதிகளிடமிருந்து இவர்கள் நிறைய தகவல்களைப் பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. அப்படி அவர்கள் ஏதாவது தகவல்களைப் பெற்றிருந்தால், அவற்றை உடனடியாகத் தமிழகக் காவல் துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றை அனுப்ப மத்திய அரசு முன்வந்தது போலவும், அதனை எனது தலைமையிலான அரசு தடுத்துவிட்டது போலவும் தவறான செய்திகள் சில பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. மத்திய அரசின் உள் துறையில் உள்ள ஒரு இடைநிலை அதிகாரி, தமிழக உள் துறை செயலாளரை 1.5.2014 அன்று தொடர்பு கொண்டு, வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளோ, வெடிகுண்டினைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் குழுவோ தேவைப்பட்டால் அனுப்புவதாகத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் உள் துறைச் செயலாளர், ஏதேனும் தேவையிருப்பின், உதவியைக் கோருவதாகக் கூறினார். தேசிய பாதுகாப்புக் குழுவின் வெடிவிபத்து குறித்த வழக்குகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் சம்பவ இடத்தைப் பார்வையிட வந்துள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை ஏதும் எடுக்காத கருணாநிதி, இந்த ரயில் வெடிகுண்டு விபத்து குறித்து கருத்து தெரிவிக்கும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு; இந்தக் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சதிகாரர்களை கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுத் தரத் தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 4:14 am

அரசியல் அரைவேக்காடு யார்?- நதிநீர்ப் பிரச்சினையில் கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்

நதிநீர்ப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதி அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள முதல்வர் ஜெயலலிதா, முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அரசியல் ஆதாயம் அடையலாம் என்று எதிர்பார்த்து "நதிநீர்ப் பிரச்சினையில் கேரளமும், தமிழகமும்" என்ற தலைப்பில் ஒரு வெத்துவேட்டு அறிக்கையை வெளியிட்டு, வாங்கிக் கட்டிக் கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது அறியாமையை மூடி மறைக்க, "அரைவேக்காடு யார்?" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

"வாய்மூடி மவுனியாக இருந்து முட்டாள் என்று பிறர் நினைப்பது, வாயைத் திறந்து அனைத்து ஐயப்பாடுகளையும் நீக்கி, தான் ஒரு முட்டாள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குவதைவிட மேலானது" என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. இந்த இலக்கணத்திற்கு ஏற்ப மீண்டும் வாயைத் திறந்து, தான் ஒரு அரைவேக்காடு தான் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் கருணாநிதி.

நதிநீர்ப் பிரச்சனை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்த நான், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு ஆகிய அணைகள் குறித்து 2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது?, 2012 ஆம் ஆண்டு வரையிலான விவரங்களை உள்ளடக்கிய 2009 ஆம் ஆண்டைய புதுப்பிக்கப்பட்ட தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது?, 2013 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது? என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டியதோடு, மேற்படி நான்கு அணைகளும் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற தமிழ்நாட்டின் உரிமை, அணைப் பாதுகாப்பு தேசியக் குழுக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் சுட்டிக் காட்டினேன்.

இது மட்டுமல்லாமல், முல்லை பெரியாறு அணை குறித்து 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் இரண்டாவது பத்தியில், முல்லை பெரியாறு அணை கேரள மாநிலம், தேக்கடி மாவட்டத்தில் இருந்தாலும், இந்த அணை தமிழ்நாட்டிற்குச் சொந்தம் என்றும், தமிழ்நாட்டினால் பராமரிக்கப்படுகிறது என்றும் சுட்டிக் காட்டியிருப்பதையும் விளக்கமாக எடுத்துரைத்து இருந்தேன்.

அதே சமயத்தில், மேற்படி அணைகள் கேரளாவுக்குச் சொந்தமானவை என்று எந்தப் பதிவேட்டிலும் சுட்டிக் காட்டப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் ஆதாயம் தேடும் வகையில், என்னுடைய பதில் அறிக்கையில் உள்ள உண்மை விவரங்களையும் படித்து புரிந்து கொள்ளாமல், தேசியப் பதிவேடுகளையும் படித்துப் பார்க்காமல், யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து கருணாநிதி லாவணி பாடி ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கையின் மூலம் தான் ஒரு குழப்பவாதி என்பதை படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்.

2012 ஆம் ஆண்டு விவரங்களை உள்ளடக்கிய 2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை குறித்த விவரங்கள் தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால் சேர்க்கப்பட்டதால் தான் முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய அணைகள் கேரள மாநிலத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன என்று நான் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டி, "2012 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா தானே பொறுப்பு வகித்தார்? தேசியப் பதிவேட்டில் இந்த நான்கு அணைகளும் 2012 ஆம் ஆண்டு கேரள மாநில அணைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஜெயலலிதா குரல் கொடுத்திருக்க வேண்டாமா? இது குறித்து மத்திய அரசுக்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்க வேண்டாமா?" என்று பதில் அளித்து இருக்கிறார் கருணாநிதி.

நான் முதலமைச்சராக இருந்ததால் தான், நான் குரல் கொடுத்ததால் தான், நான் வலியுறுத்தியதால் தான் கேரள மாநிலத்தின் கீழ் வரும் முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய அணைகளின் பெயருக்கு அருகிலேயே, இந்த அணைகள் தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்ற வாசகமும்; தமிழ்நாட்டிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலின் பின் குறிப்பில், கேரளாவில் உள்ள மேற்படி அணைகள் தமிழ்நாடு பொதுப் பணித் துறையினரால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்ற வாசகமும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இது மட்டுமல்லாமல், மேற்படி அணைகள் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற கோரிக்கையும் அணைப் பாதுகாப்பு தேசியக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றால், தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மூலம், தி.மு.க. தலைவர் கருணாநிதியால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்னால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி தன்னுடைய அறிக்கையின் மூலம், இந்தப் பிரச்சனையில் மத்திய அரசை தான் தட்டிக் கேட்காததை ஒப்புக் கொண்டிருக்கிறார். துரோகத்தை மட்டுமே தன்னால் செய்ய முடியும் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. எனவே, கருணாநிதியின் இந்த அறிக்கை யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல் அமைந்துள்ளது.

காவிரி நதிநீர்ப் பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை சத்தம் போடாமல் திரும்பப் பெற்ற கருணாநிதி; கச்சத்தீவு மத்திய அரசினால் இலங்கைக்கு தாரைவார்க்கப்படப் போகிறது என்பதை முன் கூட்டியே தெரிந்தும், அதைத் தடுக்காமல் வாய்மூடி மவுனியாக இருந்த கருணாநிதி; ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, முல்லை பெரியாறு பிரச்சனையில் மத்திய அரசையோ, கேரள அரசையோ கண்டிக்கக் கூட திராணியில்லாமல் மூலையில் முடங்கிக் கிடந்த கருணாநிதி; ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்த கருணாநிதி; தமிழகத்தின் உரிமைகளை பாதுகாத்து வரும் என்னைப் பற்றி குறை கூறி பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

"நதிநீர் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை" என்று ராகுல் காந்தி கூறிய போது, அதைத் தட்டிக் கேட்காமல் தொடர்ந்து ஆட்சியிலிருந்தது குறித்தோ; நதிநீர் இணைப்புத் திட்டத்தினை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் சிறப்புக் குழுவினை அமைக்க வேண்டும் என்று கூறி, அதன் அடிப்படையில் ஓர் ஆண்டு கழித்து சிறப்புக் குழுவினை அமைத்தாலும், அந்தக் குழுவின் கூட்டத்தை ஒரு முறை கூட கூட்ட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நான் எழுப்பிய கேள்வி குறித்தோ, பதில் அளிக்க வக்கில்லாத கருணாநிதி; அந்த வழக்கை தொடுத்ததே கழக வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் தான் என்று கூறியிருப்பது தான் "பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கு விலை சொல்வது" என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்த கே.எஸ். இராதாகிருஷ்ணன், பல்வேறு காலங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்தவர். மூன்றாவது முறையாக தி.மு.க.வில் இணைந்து தற்போது பணியாற்றி வருகிறார். இவர் தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்த வழக்கு, தி.மு.க.வினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? இதை வைத்து நதிநீர்ப் பிரச்சனையில் தி.மு.க. போராடியதாக உரிமை கொண்டாட கருணாநிதி முயல்வது சிறுபிள்ளைத்தனமானது.

1994 ஆம் ஆண்டே யமுனை நதி பற்றி ஒரு நாளிதழில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஒரு வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனுடன், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஓர் இடைக்கால மனுவையும், 2002 ஆம் ஆண்டு தனியே ஒரு ரிட் மனுவாக உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. இராதாகிருஷ்ணனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு, கடந்த 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு ராதாகிருஷ்ணனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூலம் மட்டுமே கிடைத்தது என்று கருத முடியாது.

கருணாநிதியால் குறிப்பிடப்பட்ட இதே ராதாகிருஷ்ணன் "கங்கையும் - காவிரியும் குமரியைத் தொடுக" என்ற தலைப்பில் ஓர் கட்டுரையை 2007 ஆம் ஆண்டு எழுதி இருக்கிறார். அது அவருடைய இணைய தளத்திலேயும் உள்ளது. அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சிலவற்றை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

"கடந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நதிநீர் இணைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அது குறித்து ஆராய சுரேஷ் பிரபு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு தன் அறிக்கையை கடந்த 2005 டிசம்பரில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வந்து அக்குழுவின் காலத்தை நீட்டிக்காமல் விட்டதால் நதிநீர் இணைப்பு குறித்து ஐந்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் வீணடிக்கப்பட்டன. சுரேஷ் பிரபு குழு இந்திய நதி நீர்களை இணைக்க 1,200 கோடி ரூபாயிலிருந்து 1,500 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிட்டது. இன்றைக்குள்ள மன்மோகன் சிங் அரசு சற்றும் நாட்டின் நலனைச் சிந்திக்காமல் இந்தத் திட்டத்துக்கு ‘அம்போ’ என்று மங்களம் பாடிவிட்டது. இது எல்லாம் தெரியாமல் தமிழக முதலமைச்சர் கருணாநிதி டெல்லியைப் பார்த்து நதிநீர் இணைக்க வேண்டும் என்று சொல்கின்றார். இதில் விஷய ஞானம் தெளிவில்லாமல் பேசுவது மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும் ..." என்று கூறியிருக்கிறார்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றினார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. நதிநீர்ப் பிரச்சனை மட்டுமல்ல, அனைத்துப் பிரச்சனைகளிலும் மக்களை ஏமாற்றுவது தான் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வேலை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, "மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகள் உட்பட அனைத்து நதிகளும் தேசிய நதிகள் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்றும், நதி நீரை முறையாக பயன்படுத்தும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்" என்று தெரிவித்து 26.4.1982 அன்றே அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அடுத்தபடியாக, "முதலில் தீபகற்ப நதிகளையாவது இணைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை அவசர அவசியம் கருதி, உடனடியாக நிறைவேற்றும் பணி மத்திய அரசால் தொடங்கப் பெற இந்த அரசு தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொள்ளும்" என்று 2007-2008 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டு உள்ளார். 2004 முதல் மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. மாநிலத்தில் 2006 முதல் 2011 வரை மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி நடைபெற்று வந்தது. இப்படி இருக்கும் போது, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற என்ன முயற்சி எடுத்தார் கருணாநிதி? ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை கருணாநிதி. நதிநீர் இணைப்பு குறித்து அறிந்தவர்கள் இதையெல்லாம் மறக்கவில்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கடைசியாக, தன்னுடைய ஆட்சிக் காலத்தில், "...திருச்சிக்கு அருகே மாயனூரில் உபரி நீரை வறண்ட மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ், காவிரியின் குறுக்கே கட்டளையில் கதவணை கட்டும் பணிகள் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக 369 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. பெண்ணை ஆற்றுடன் செய்யாற்றை இணைக்கும் திட்டத்திற்கு 174 கோடி ரூபாய்க்கான கருத்துரு மத்திய அரசின் நீர்க் குழுமத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது" என்று தனது அறிக்கையில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இது குறித்த உண்மை நிலையை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

மாயனூர் கதவணையைப் பொறுத்த வரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 189 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், 96 கோடி ரூபாய் தான் செலவிடப்பட்டது. அடைப்பான்கள் தயாரித்தல், அதை நிறுவுவதற்கான பகுதியினை அமைத்தல், அடைப்பான் நிறுவுதல், சிமெண்ட் கான்கிரீட் பிளாக்குகள் அமைக்கும் பணிகள் என பல்வேறு பணிகள் தொடங்கப்படவே இல்லை. நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்தத் திட்டத்திற்கு 234 கோடி ரூபாய் அளவுக்கு திருத்திய ஒப்புதல் வழங்கி, கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 135 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, 25.6.2014 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டது.

தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டத்தை எடுத்துக் கொண்டால், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்ததாக கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். உண்மை நிலை என்னவென்றால், இந்தத் திட்டத்தை நான்கு நிலைகளில் செயலாக்க 2008 ஆம் ஆண்டு ஆணை

வெளியிடப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணையே 2010 ஆம் ஆண்டு தான் வெளியிடப்பட்டது. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தான், முதல் இரண்டு நிலைகளுக்கான 190 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது புதிய நில எடுப்புச் சட்டத்தினை மத்திய அரசு இயற்றியுள்ளதால், இந்தச் சட்டத்தின்படி மூன்றாம் மட்டும் நான்காம் நிலைகளுக்கு நிலங்களை கையகப்படுத்த ஆணை வெளியிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் இரண்டு நிலைகளுக்கு 57.06 கிலோ மீட்டர் நீளத்திற்கான கால்வாய் அமைக்கப்பட வேண்டும். 22.84 கிலோ மீட்டர் நீளத்திற்கான கால்வாய் மட்டுமே முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் அமைக்கப்பட்டது. மீதமுள்ள 34.22 கிலோ மீட்டர் நீளத்திற்கான கால்வாய் அமைப்பதில் எனது தலைமையிலான அரசால் 27.82 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6.40 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி, நிலம் கையகப்படுத்தும் பிரச்சனையால் நிலுவையில் உள்ளது. இதே போன்று, முதல் இரண்டு நிலைகளுக்கு 168 குறுக்கு கட்டுமான பணிகள் அமைக்கப்பட வேண்டும்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெறும் 23 குறுக்குக் கட்டுமானப் பணிகளே முடிக்கப்பட்டன. எனது தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் 100 கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 45 குறுக்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு அறிக்கையை அங்கீகரிக்கப்பட்ட கலந்தறிவு நிறுவனத்தின் மூலம் ஆய்வு செய்யப்படவில்லை. இந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

கடைசியாக பெண்ணையாற்றுடன் செய்யாற்றினை இணைக்கும் திட்டம் குறித்து கருணாநிதி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி பெறும் கோரிக்கை 2008 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தும், 2011 ஆம் ஆண்டு ஆட்சியை விட்டுச் செல்லும் வரை மத்திய அரசிடமிருந்து இதற்கான நிதி உதவியை கருணாநிதியால் பெற முடியவில்லை. புதிய நில எடுப்புச் சட்டத்தின்படி நிலத்தை கையகப்படுத்த கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியிருப்பதால், இத்திட்ட மதிப்பீடு 360 கோடி ரூபாயாக திருத்தி அமைக்கப்பட்டு, விரைவுபடுத்தப்பட்ட பாசனத் திட்டத்தின்கீழ் நிதி உதவி கோரி மத்திய நீர் வளக் குழுமத்திற்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது.

என்னுடைய விளக்கங்களிலிருந்து, கருணாநிதியால் குறிப்பிடப்பட்ட மேற்காணும் மூன்று திட்டங்களுக்கு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, என்னுடைய ஆட்சிக் காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக்கப்பட்டு உள்ளது.

எனது தலைமையிலான அதிமுக அரசுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமையின் வெளிப்பாடாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற தவறான அறிக்கைகளை கருணாநிதி வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். 1.7.2014 அன்று "கேள்வியும் நானே – பதிலும் நானே" என்ற பாணியில் வெளியிடப்பட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில், "அ.தி.மு.க. அரசு சார்பில் பத்து இடங்களில் ‘அம்மா’ மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்திருக்கிறாரே" என்று தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு, "அடுத்த அறிவிப்பினை நீங்கள் பார்க்கவில்லையா? தமிழகத்தில் 100 இடங்களில் "அம்மா வெற்றிலை-பாக்கு கடை" களைத் திறந்து வைத்து, அந்த வியாபாரத்தை அமைச்சர்களே முன் நின்று நடத்தப் போகிறார்களாம்" என்று வயிற்றெரிச்சலுடன் தனக்குத் தானே பதில் அளித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இது போன்று தனக்குத் தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, பதில்களை அளிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தமிழக மக்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.

"ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை - ஊக்கா ரறிவுடையார்" என்றார் வள்ளுவர். அதாவது, "பெரிய ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்து, இருக்கின்றதையும் இழந்துவிடக் கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்" என்பது இதன் பொருள். அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைத்து, தன்னுடைய அரசியல் அறியாமையை தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாநிதி. இதிலிருந்து "அரசியல் அரைவேக்காடு யார்?" என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.




கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 08, 2014 8:17 am

இருவரின் அறிக்கை போர்களை மையபடுத்தி , ஆராய்ச்சிகள் செய்து முனைவர் பட்டம் வாங்கலாம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jul 08, 2014 8:53 am

இந்த ரெண்டு பேரும் சேர்ந்து, பொது மக்களை வைக்கோல் போரா ஆகுகிட்டாங்களே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 22, 2014 2:07 am

மின்வெட்டைப் பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை இல்லை: ஜெயலலிதா

தமிழக சட்டசபையில் இன்று எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-

மின்வெட்டைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க.-விற்கு அருகதையே இல்லை. ஏனென்றால், மின்வெட்டு என்பதை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான். நான் இப்போது மூன்றாவது முறையாக முதலமைச்சராக ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில், 1991 முதல் 1996 வரை மின்வெட்டு என்ற பேச்சுக்கே தமிழ்நாட்டில் இடமில்லை. அப்போது மின் உற்பத்தியில் உபரி மாநிலமாக, மிகை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்தது.

அதைப்போலவே, எனது இரண்டாவது ஆட்சிக் காலம்; 2001 முதல் 2006 வரை, தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்போதும் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக விளங்கியது. அதன்பின்னர், தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாடு மின் குறை மாநிலமாக ஆக்கப்பட்டு, தமிழ்நாடு இருளில் தள்ளப்பட்டது. மீண்டும் 2011-ல் மூன்றாவது முறையாக நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தி.மு.க. விட்டுவிட்டுச் சென்ற கடன், சுமை, தி.மு.க. விட்டுவிட்டுச் சென்ற மின்வெட்டு என்ற நிலைமை, இவற்றோடு பகீரத முயற்சி செய்து, போராடி இப்பொழுதுதான் நிலைமையைச் சரிசெய்திருக்கிறோம்.

விவசாயிகளுக்கு மின்வெட்டு என்றார்கள்; இரண்டு மணி நேரம்தான் மின்சாரம் தரப்படுகிறது என்றார்கள்; அப்படியில்லை. விவசாயிகளுக்கு 12 மணி நேரம் தடையில்லா மின்சாரம், மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உறுப்பினர் பெரியசாமி பேசும்போது, இலவச ஒரு விளக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி என்று தெரிவித்தார். இது உண்மைக்கு மாறான தகவல். ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு என்ற திட்டத்தை 1979 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். 1979 ஆம் ஆண்டு இதனை அறிமுகப்படுத்தியபோது, மாதம் 2 ரூபாய் 50 காசு எனக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர், இந்தக் கட்டணம் நீக்கப்பட்டு விட்டது. எனவே, செய்யாத ஒரு செயலுக்கு உரிமை கொண்டாட வேண்டாமென்று தி.மு.க. உறுப்பினரை கேட்டுக்கொள்கிறேன்.

விலைவாசியைப் பற்றியும் தி.மு.க. உறுப்பினர் பேசினார். அதிக கட்டணம் கொடுத்து இந்த ஆட்சியில் மின்சாரத்தை வெளி மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம் என்றும் குற்றஞ்சாட்டினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஒட்டுமொத்த விலைவாசி குறைவாக இருந்தபோது, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், இப்போது எனது ஆட்சிக் காலத்தில், விலைவாசி மூன்று மடங்கு பெருகியிருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில், இந்தச் சூழ்நிலையில், குறைந்த விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறு அவர் பேசினார்.



கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 22, 2014 12:52 pm

தெரிஞ்சி , தெரியாம இந்த திரிக்குள் வந்துவிட்டேன்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 19, 2014 9:57 pm

மீனவர்கள் வேலை நிறுத்தம்: மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது: ஆனால் தமிழக அரசு? கலைஞர் கேள்வி

இந்தியாவின் கண்ணீர்; இலங்கையின் கர்வம்! என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் 19.08.2014 செவ்வாய்க்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

கேள்வி :- இலங்கையிலே சிறைப்பட்டிருந்த மீனவர்களையெல்லாம் விடுவிக்க அதிபர் ராஜபக்சே உத்தரவு பிறப்பித்த போதிலும், இலங்கை கடற்தொழில் அமைச்சர், தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறாரே?

கலைஞர் :- இலங்கை அரசு இப்படியெல்லாம் மாற்றி மாற்றிப் பேசி இந்திய அரசுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. ஏதோ தமிழக மீனவர்கள்பால் அக்கறை உள்ளவரைப் போலவும் இந்திய சுதந்திரத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பவரைப் போலவும் காட்டிக் கொள்ள, இலங்கை அதிபர் மீனவர்களை விடுவிப்பதாக அறிவிக்கிறார். ஆனால் அந்த நாட்டின் கடற் தொழில் அமைச்சர் திட்டவட்டமாக, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்று அறிவித்திருக்கிறார்.

இலங்கையிடம் இவ்வாறு 62 படகுகள் சிக்கியிருக்கின்றன. அந்தப் படகுகள் இல்லாமல் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான தங்கள் தொழிலினை நடத்த முடியாது. செய்தியாளர்கள், இலங்கை அமைச்சரிடம், “இந்திய மீனவர்களின் விசைப் படகுகள் விடுவிக்கப்படுமா?” என்று கேட்டதற்கு “இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 62 படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று இரக்கமின்றித் தெரிவித்திருக்கிறார்.

அந்த விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 24வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மத்திய அரசின் சார்பில், அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இந்தப் பிரச்சினை பற்றி மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழக அரசு?

இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.



கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 19, 2014 10:22 pm

என்னத்தை சொல்லறது போங்க !

பக்கத்து வீட்டு ஜோசபின்னுக்கும்,
எதிர் வீட்டில் இருக்கும் கேரனுக்கும்
எப்பப் பார்த்தாலும் தகராறு .
படிக்கிறது என்னவோ 2ம் கிளாசும் 3ம் கிளாசும்தான்.

ஏதோ பின்னூட்டம் இட நினைத்து ,இப்படி இட்டு விட்டேனே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 10:30 pm

நீதிக்கு தலை வணங்குமா அதிமுக அரசு?- கருணாநிதி கேள்வி

மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமன விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, மனிதாபிமானத்தோடு அ.தி.மு.க. அரசு நடந்துகொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று கடித வடிவில் வெளியிட்ட அறிக்கையில், "திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 1989ஆம் ஆண்டு நான் முதல்வராக பொறுப்பேற்றவுடன், வேலையில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கித் தர வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் 2-7-1990 அன்று நியமனம் செய்யப்பட்டார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அவர்கள் நியமனம் பெற்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, 1991-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், அனைத்து மக்கள் நலப் பணியாளர்களையும் பணி நீக்கம் செய்து வெளியேற்றினார்கள்.

1996-ஆம் ஆண்டு மீண்டும் கழக ஆட்சி, என்னுடைய தலைமையில் அமைந்தபோது, வீட்டுக்கு அனுப்பப்பட்ட அனைத்து மக்கள் நலப் பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு 31.5.2001 அன்று மீண்டும் மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தது.

2006-ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி என் தலைமையில் ஐந்தாவது முறை அமைந்தபோது, 31-5-2006 அன்று மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்பட்டது. 2011 ஆம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அவர்கள் ஏற்கனவே செய்ததைப்போல, மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்து தமிழக அ.தி.மு.க. அரசு, 8-11-2011 அன்று அரசாணை பிறப்பித்தது.

பணி நீக்க உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு அந்தச் சங்கத்தின் அலுவலர்கள் சார்பில் தொடரப்பட்டது. இதற்கான வழக்கில் நீதியரசர் சுகுணா, பணி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். 21-11-2011 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோர்ட் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை; மக்கள் நலப் பணியாளர்களை பணியில் சேர்க்கவில்லை என்று கூறப்பட்டது. உடனடியாக அவர்களை பணியில் சேர்க்க அனுமதிக்க வேண்டுமென்றும், கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை 23-11-2011 அன்று தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.

மக்கள் நலப் பணியாளர் சங்கத் தேர்தல் 3-4-2012 அன்று நடத்தப்பட்டு, மதிவாணன் தலைவராகவும், ராஜேந்திரன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் சார்பில் எந்தவொரு முக்கிய முடிவு எடுக்கப்பட வேண்டுமென்றாலும், சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டித்தான் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அந்த சங்கத்தின் செயலாளராக ஏற்கனவே இருந்த பழனி என்பவர் நீக்கப்பட்டிருந்த நேரத்தில், அவர் யாருடனும் கலந்து கொள்ளாமல், அவர் மட்டும் தன்னிச்சையாக ஒப்பந்தம் செய்து கொண்டு, ஐந்து மாதச் சம்பளம் கொடுத்தால் போதும், பணியிலிருந்து நீக்குவதற்கு ஒப்புக் கொள்வதாக ஒரு உடன்பாட்டினைச் செய்து கொண்டு, நீதிமன்றத்திலும் அதனைத் தெரிவித்து விட்டனர். நீதிமன்றமும் அதனை உண்மை என்று ஏற்றுக் கொண்டு, மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த ஆணைக்கு ஒப்புதல் கொடுத்து உத்தரவிட்டது.

அதற்குப் பிறகுதான் மக்கள் நலப் பணியாளர் சங்கத்தினர் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் வில்சன், "பழனி என்பவர் பொறுப்பிலேயே இல்லை, மதிவாணன்தான் பொறுப்பிலே இருக்கிறார், எனவே பழனியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டு"மென்று நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினார்.

நீதியரசர் சுகுணா பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், "மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம் என அரசின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்துள்ளது தெரிகிறது. இவர்கள் அனைவரும் தற்காலிகப் பணியாளர்கள் என வாதத்துக்கு கருதினாலும் கூட கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளனர். ஒரு கையெழுத்தில் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டியிருந்தால் நீதியின் கொள்கைப்படியும், சட்டப்படியும் அவர்களை நீக்கும் முன்பு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அரசு கருத்துக் கேட்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் தனி நீதிபதி சுகுணா இந்த வழக்கில் தடை உத்தரவைச் சரியாக பிறப்பித்துள்ளார். அதை நீக்க முடியாது. மக்கள் நலப் பணியாளர்களின் நிலையை பார்க்கும்போது கால்பந்து விளையாட்டு போல உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் நிர்ணயம் செய்து ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிய பிறகு சரியான காரணம் இல்லாமல் அவரை நீக்குவது சட்ட விரோதமானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அரசு மாறும்போது மாறி மாறி உத்தரவு பிறப்பிப்பது கடும் கண்டனத்துக்குரியது, வேதனையானது, வருந்தத்தக்கது. எனவே அரசு கோரிக்கையை நிராகரிக்கிறோம். கடந்த ஆட்சியின் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் அந்தத் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களை வேறு பணியில் அமர்த்த வேண்டும்; அதை விட்டு விட்டு அவர்களை டிஸ்மிஸ் செய்வது தவறு. இது எந்த விதத்தில் நியாயமானது? இது அரசியல் சார்புடையது என்பது தெரியும். இருந்தாலும் அதற்குள் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று நீதிபதிகள் கூறினார்கள்.

ஆனால் தமிழக அரசின் சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். உச்ச நீதிமன்றத்தில் 29-11-2011 அன்று நீதிபதிகள் டி.கே. ஜெயின், தவே ஆகியோர் இந்த மனுவை விசாரித்து, “தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது? ஆட்சி மாறும்போது முந்தைய அரசின் திட்டங்களை ரத்து செய்வது ஏன்? இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்கக்கூடாது" என்று கண்டனம் தெரிவித்தார்கள்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 11-11-2013 அன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அணில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்து அளித்த தீர்ப்பில், மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அனைத்து அம்சங்களையும் தகுதி அடிப்படையில் கணக்கிலே எடுத்துக் கொண்டு, வழக்கை மறுவிசாரணை செய்து, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழக அரசு வழக்கை ஒத்தி வைக்குமாறு கோரக்கூடாது. பொறுப்பில்லாத ஒருவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களின் வாழ்க்கையை அரசு பாழடித்துள்ளது, கண்டிக்கத்தக்கது. இருபது வருடம் அரசுக்காக அவர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்கள்.

நீதியரசர்கள், "தமிழகத்திலே என்ன நடக்கிறது?" என்றும், "மக்கள் நலப் பணியாளர்களை பந்துபோல் விளையாடுவது சரிதானா?" என்றும் கேட்டிருக்கிறார்களே, அது இந்த அரசுக்கு அவமானமாகத் தெரியவில்லையா? அதையெல்லாம் தாங்கிக் கொண்டு, தி.மு. கழக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை கிடைத்தது என்ற ஒரே காரணத்திற்காக அரசு வீம்பு காட்டுவது நல்லதுதானா? அ.தி.மு.க. ஆட்சியில் இவ்வாறு பணி நியமனம் பெற்றவர்கள் யாரையாவது தி.மு. கழக ஆட்சியிலே வீட்டிற்கு அனுப்பிய சம்பவம் நடைபெற்றது உண்டா?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் நான் கருத்துத் தெரிவிக்கும் போது, "நடந்தது, நடந்ததாக இருக்கட்டும். இனியாவது அ.தி.மு.க. அரசு தெளிவுபெற வேண்டும். யாரையும் பழிவாங்கும் நடவடிக்கைகளை விட்டுவிட வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களின் வழக்கிலே உச்ச நீதிமன்றம் இன்னும் ஆறு மாதங்களில் உயர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டுமென்று தீர்ப்பு அளித்திருந்த போதிலும், அந்த விசாரணை நடைபெறும் வரை காத்திருக் காமல், தமிழக அரசே முன்வந்து, வழக்கினைத் திரும்பப் பெற்று, அந்த 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களுக்கும் உடனடியாக மீண்டும் வேலை அளித்திட, முன்வர வேண்டும். 'ஆறுவது சினம்' என்பது பழமொழி. ஆறிவிடாமல் சினத்தை அப்படியே வைத்திருப்பது, அதலபாதாளத்திற்கே இட்டுச் சென்றுவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. தி.மு. கழக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால், மக்கள் நலப் பணியாளர்கள் மீது அ.தி.மு.க. அரசு கொண்டிருக்கும் கோபத்தைத் தணித்துக் கொண்டு, அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் காப்பாற்றிட அரசே முன் வரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன்.



கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 10:31 pm

ஆனால் ஜெயலலிதா அப்படியெல்லாம் கேட்டு விடுவாரா என்ன? உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் சென்னை உயர் நீதிமன்றம் மக்கள் நலப் பணியாளர்களின் வழக்கை மீண்டும் விசாரித்து வந்தது. மக்கள் நலப் பணியாளர்களுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் வில்சன், மக்கள் நலப் பணியாளர்கள் கழக ஆட்சியில் எவ்வாறு விதிமுறைப்படி, தேர்வுக் குழு அமைத்து, பத்திரிகைகளில் விளம்பரம் செய்து நியமிக்கப்பட்டார்கள் என்பதையும், எவ்வாறு அ.தி.மு.க. ஆட்சியில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதையும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்பதையும் எடுத்து விளக்கினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர்கள் பால் வசந்தகுமார், சத்திய நாராயணா ஆகியோர் 19-8-2014 அன்று நல்லதோர் தீர்ப்பினை வழங்கியிருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பில் முக்கியமாக, "பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு, அதே பெயரிலேயோ அல்லது வேறு எந்தப் பெயரிலேயோ, மது ஒழிப்புப் பிரச்சாரப் பணிக்காகவோ அல்லது அரசுப் பள்ளிகள், கிராமப் பஞ்சாயத்து, நகர மன்றங்கள், மாநகராட்சிகள், கிராம நிர்வாக அலுவலகங்கள், வட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களிலே பணி அமர்த்தப்பட வேண்டும். அப்போது அவர்களுடைய உச்ச வயது வரம்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவர்களது கல்வித் தகுதிக்கேற்ப பணி வழங்கவேண்டும். அவர்களுடைய சொந்த நகரங்களிலேயோ அல்லது மாவட்டங்களிலேயோ மேற்காணும் அடிப்படையில் பணி வழங்கப்பட வேண்டும்.

இந்த நடைமுறைகள் உடனடியாகத் தொடங்கப் பட்டு, 31-10-2014க்குள் முடிக்கப்பட வேண்டும். ஒருவேளை அன்றைய தேதிக்குள் அவர்கள் பணி அமர்த்தப்படவில்லை என்றால், பணி அமர்த்தப்படாத மக்கள் நலப் பணியாளர்களுக்கு 1-11-2014 ஆம் தேதி முதல் அவர்கள் இறுதியாக வாங்கிய மாதச் சம்பளத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழக அரசு மது விற்பனை மூலம் ஆண்டுக்கு சுமார் 21 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வருவாயை, சுமார் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பணியிலே அமர்த்திப் பெறுகின்ற நிலையில், அந்தக் குடியினால் ஏற்படுகின்ற தீமைகளை விளக்கிடும் வகையில் மது ஒழிப்புப் பிரச்சாரத்திற்கு இந்த மக்கள் நலப் பணியாளர்களை பணியிலே அமர்த்திப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் குழந்தை சுகாதாரத் திட்டம், ஊரகத் தூய்மைத் திட்டம் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் இவர்களை பணியிலே அமர்த்தலாம்" என்றெல்லாம் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளாகின்றன. மக்கள் நலப் பணியாளர்களுக்குப் பணி தராமல் இந்த மூன்றரை ஆண்டுகளையும் அ.தி.மு.க. அரசு வீணடித்ததோடு, உச்ச நீதிமன்றம் வரை அவர்களை இழுத்தடித்து படாத பாடு படுத்தியிருக்கிறது. நீதியரசர்கள் எல்லாம் தங்களது கடுமையான கண்டனத்தை இந்த அரசுக்குத் தெரிவித்ததோடு, மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி கொடுக்கப்பட வேண்டுமென்று உறுதியாகக் கூறியிருக்கிறார்கள்.

இவ்வளவுக்கும் பிறகும் அ.தி.மு.க. அரசு மேலும் கால தாமதம் செய்யாமல், பணி வாய்ப்பினை இழந்ததால் 19 மக்கள் நலப் பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள் என்ற சோக நிகழ்வினையும், வேலையிழந்து தவிக்கும் மக்கள் நலப் பணியாளர்களில் மிகப் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் நினைவிலே கொண்டாவது, உடனடியாக அவர்களுக்கு வேலை தர முன்வர வேண்டும். அதற்கு இடம் அளிக்காமல், தி.மு. கழக ஆட்சியில் பணி நியமனம் பெற்றவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இந்தத் தீர்ப்பையும் மதிக்காமல், கால தாமதம் செய்ய வேண்டு மென்ற நோக்கத்தோடு, இதற்குப் பிறகும் மேல் முறையீடு செய்ய முற்பட்டால், அதைவிடப் பெரிய கொடுமையோ, அநீதியோ வேறு எதுவும் இருக்க முடியாது. பொதுவாகவே அ.தி.மு.க. அரசுக்கு அரசு அலுவலர்களிடம் எந்த அளவுக்கு நல்ல பெயர் (?) உண்டு என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

எனவே இதற்குப் பிறகாவது அ.தி.மு.க. அரசு மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமனத்தைப் பொறுத்தவரை, நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வதுதான் அவர்களுக்கும் நல்லது! நாட்டிற்கும் நல்லது! பொதுவாக அ.தி.மு.க. அரசு நியாயத்தையும் மதிப்பதில்லை; நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிப்பதில்லை! அந்த முறையையே இப்போதும் பின்பற்றாமல் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்புக்குத் தலை வணங்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள முன்வருவார்களா?" என்று கருணாநிதி கூறியுள்ளார்.




கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2014 1:34 am

தமிழ்நாடு எக்கேடு கேட்டால் என்ன என்று நினைக்கிறது இந்த ஆட்சி... கருணாநிதி சாடல்

சென்னை: தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தடுமாறுவதால் தமிழகத்தின் வளர்ச்சி தள்ளாடுவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு, இன்று, "Infra Shutdown slows Down State" அதாவது "அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கு மூடுவிழா நடத்தி விட்டதால் தமிழகத்தின் வளர்ச்சி தள்ளாடுகிறது"" என்ற தலைப்பில், தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை பற்றிய அதிர்ச்சி தரும் பல தகவல்களைத் தெரிவித்துள்ளது. அவையாவன :-


25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. (மதுரவாயல் - சென்னைத் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலைத் திட்டம், எண்ணூர் - மணலி வரையிலான நெடுஞ்சாலைத் திட்டம், சென்னை - திருப்பதி நெடுஞ்சாலைத் திட்டம், சென்னை - தடா நெடுஞ்சாலைத் திட்டம், திருச்சி பை-பாஸ் திட்டம், கிருஷ்ணகிரி - வாலாஜாபாத் நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பல்வேறு செயற்கையான காரணங்களை தமிழக அரசு முன்னிறுத்தி வருவதால் தொடங்கப்படவில்லை).

38 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்கப்படாமல் உள்ளன. (660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் உற்பத்தித் திட்டம் - 1,600 மெகாவாட் உடன்குடி அனல் மின் உற்பத்தித் திட்டம் - 1600 மெகாவாட் உப்பூர் அனல் மின் உற்பத்தித் திட்டம் - 800 மெகாவாட் வடசென்னை அனல் மின் உற்பத்தித் திட்டம் - 1200 மெகாவாட் வடசென்னை சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் உற்பத்தித் திட்டம் - 660 மெகாவாட் எண்ணூர் விரிவாக்க அனல் மின் உற்பத்தித் திட்டம்)

மேலும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், கருத்துரு கட்டத்தையே தாண்டவிடாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. மோதல் போக்கைக் கைவிட்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்பட ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று தமிழக அரசைப் பல முறை மத்திய அரசு வற்புறுத்திக் கேட்டும்கூட, எவ்விதப் பலனும் ஏற்படவில்லையாம்.

மிகப் பெரிய நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதன் மூலம் தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக்கு முற்றிலும் எதிரான போக்கு வெளிப்பட்டிருக்கிறது.

மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாததன் காரணமாக கார் தொழிற்சாலைகள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, துறைமுகம் மூலம் அனுப்பப்படும் கார்கள் 48 மணி நேரத்திற்கு மேலாக துறைமுகத்திலேயே வீணாகக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பண விரயமும், கால விரயமும் ஏற்படுகின்றன.

உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்யும் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவின் சராசரி செலவுத் தொகையான 7 சதவிகிதத் திலிருந்து 8 சதவிகிதம் என்பது, தமிழகத்தைப் பொறுத்தவரை வெறும் 5 சதவிகிதமாகச் சுருங்கி விட்டது.

முக்கியமான இந்தக் காரணத்தினாலேதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 2012-2013ஆம் ஆண்டில் தேசிய சராசரியான 4.4 சதவிகிதம் என்பதற்கு மாறாக 3.39 சதவிகிதமாகக் குறைந்து விட்டது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, திரு.தேவசகாயம், "ஒரு திட்டத்தைத் தமிழகத்தில் தொடங்குவதற்கே எடுத்துக் கொள்ளப்படும் நேரம் அரசியல் தலையீடுகளின் காரணமாக மிகவும் அதிகமாகி விட்டது. தொழில் தொடங்குவதற்காக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திப்பது என்பதே குதிரைக் கொம்பாக இருந்ததால், எதிலும் முடிவெடுப்பது இயலாத ஒன்றாக ஆகி விட்டது"" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டினைத் தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக உலகம் முழுதும் உள்ள முதலீட்டாளர்களை அக்டோபர் மாதத்திலேயே சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றும் அந்தச் சந்திப்பு இதுவரை நிகழவில்லை.

ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தண்டனை மாநில நிர்வாகத்தை மேலும் முடமாக்கி விட்டது. வேறு முதலமைச்சர் பதவியேற்றிருந்தாலுங்கூட, தொழில் வளர்ச்சிக்கு எந்தவிதமான உந்துதலும் இல்லை. தமிழ்நாடு எக்கேடு கெட்டால் என்ன என்று நினைக்கின்ற ஆட்சியும் அதற்கு "பஜனை" பாடுகின்ற சில ஏடுகளும் இருக்கின்ற வரையில் இப்படித்தான் நடக்கும்

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.



கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக