புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 11:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:33

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:17

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:09

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:01

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:30

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:10

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 10:10

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:08

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Tue 30 Apr 2024 - 0:12

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 28 Apr 2024 - 10:52

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
3 Posts - 6%
prajai
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
viyasan
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Rutu
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Rutu
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!


   
   

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 21 May 2014 - 23:15

First topic message reminder :




பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 6-2-na11 பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு
பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 29 May 2014 - 0:58

மோடிக்கு எதிராக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளின் கண்டன தீர்மானம் பஞ்சாப் சட்டசபையில் நிராகரிப்பு

பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளின் மோடிக்கு எதிரான கண்டன தீர்மானத்தை பஞ்சாப் சட்டசபை நிராகரித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்தன. பயங்கரவாத நாடு என்று அவர் பாகிஸ்தனை குறை கூறியதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக கண்டன தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால் எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை பஞ்சாப் சட்டசபை நிராகரித்தது. இதனையடுத்து எதிர்க்கட்சியினர் இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். நவாஸ் ஷெரிப் இந்தியாவிற்கு வந்தது குறித்தும் விமர்சித்து கோஷம் எழுப்பினர். தலைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 29 May 2014 - 0:59

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக நிருபேந்திர மிஸ்ரா நியமனம்

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையரான நிருபேந்திர மிஸ்ரா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.




பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 29 May 2014 - 0:59

மாநில அரசுகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது அலுவலக அதிகாரிகளை முதல் முறையாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மக்கள் பிரச்சனைகளை விரைந்து தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரச்சனைகளை தீர்க்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் மோடி ஆலோசனை வழங்கினார். மாநிலங்களின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது நாட்டின் வளர்ச்சி என்றும் மாநில பிரச்சனைகளை மிகுந்த அக்கறையுடன் முன்னுரிமை கொடுத்து தீர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கூறினார்.

இதனால் கூட்டாட்சி அமைப்பு வலுப்படும் என்பதை மோடி சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், பிரதமர் அலுவலக அதிகாரிகள் குழுவாக ஒன்றுபட்டு பணிபுரிய வேண்டும் என்றும் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் தங்களது யோசனைகளை எந்த நேரத்திலும் என்னிடம் வெளிப்படையாக தெரிவிக்கலாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அலுவலக அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.




பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 29 May 2014 - 0:59

சொந்தபந்தங்களுக்கு சலுகைகள் அளிப்பதை தவிர்த்துவிடுங்கள் மந்திரிகளுக்கு மோடி ’அட்வைஸ்’

சொந்தபந்தங்களுக்கு சலுகைகள் அளிப்பதை தவிர்த்துவிடுங்கள் என்று மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ’அட்வைஸ்’ வழங்கியுள்ளார். தனிப்பட்ட ஊழியர்கள் அல்லது ஒப்பந்த விவகாரங்களில் உறவினர்களுக்கு எதிராக இருங்கள் என்றும் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.




பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 29 May 2014 - 1:05

இது பயனுள்ள பதிவு. அப்படியே அவரது வரலாறு பதிவு செய்யுங்கள் சிவா



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Aபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Aபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Tபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Hபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Iபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Rபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Aபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 30 May 2014 - 4:53

தொலைபேசியில் 25 நிமிடம் நரேந்திர மோடியுடன் சீன பிரதமர் பேச்சு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் சீன பிரதமர் தொலைபேசியில் இருதரப்பு உறவு பற்றி பேசினார்.நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்க்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், சீன பிரதமர் லீ கெகியாங் நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்தியாவுடன் பலமான, ஆரோக்கியமான உறவை வளர்க்க சீனா விரும்புவதாக தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேலும் பலப்படுத்த ஆர்வமாக இருப்பதாகவும், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் சீனாவுக்கு எப்போதுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதாகவும் மோடி கூறினார்.

இந்த தொலைபேசி உரையாடல் 25 நிமிடங்கள் நடந்தது. மேலும், இருநாட்டு தலைவர்களும் அடிக்கடி பேசவும், தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்தனர்.நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக தனது நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங்கை அடுத்த மாதம் 8ம் தேதி சிறப்பு தூதராக சீன அரசு அனுப்ப உள்ளது. அவருடைய வருகைக்கு முன்னோடியாக மோடியை லீ நேற்று தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது, இந்தியா & சீனா இடையிலான முக்கிய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு காணவும் இரு தலைவர்களும் ஆர்வம் தெரிவித்தனர். மேலும், சீன அதிபர் ஜிங்பிங்கை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வரும்படி லீ மூலமாக மோடி அழைப்பு விடுத்தார்.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 30 May 2014 - 4:55

குஜராத்: பள்ளி பாடப்புத்தகத்தில் மோடி வாழ்க்கை வரலாறு சேர்ப்பு!

அகமதாபாத்: குஜராத்தில் வரவிருக்கும் 2015 ஆம் கல்வியாண்டில் பள்ளி பாட புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு குறித்த பாடத்தை சேர்க்க அம்மாநில பள்ளி கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

வருகிற 2015 ஆம் கல்வியாண்டு முதல் இதனை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் பள்ளிக் கல்வி வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மோடி, தேனீர் விற்பவராக வாழ்க்கையை தொடங்கி நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்தது மகத்தான சாதனை என்றும், கடும் உழைப்புடன் முதல்வர் பதவி, அதனைத் தொடர்ந்து பிரதமர் என மோடி வாழ்க்கையில் அடைந்த உயர்வு இள வயது மாணாக்கர்களுக்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என்றும், அதன் காரணமாகவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அநேகமாக 3-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை உள்ள பாடத்தில் மோடியின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப் படும் என்று தெரிகிறது.

மத்தியபிரதேச அரசும் பரிசீலனை

இதனிடையே மோடியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்க ஆலோசித்து வருவதாக மத்திய பிரதேச அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இது குறித்து மத்தியபிரதேச மாநில கல்வித்துறை அமைச்சர் பராஸ் ஜெயின் கூறுகையில்," மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி பாடத்தில் மோடியின் வாழ்க்கை வர லாற்றை சேர்க்க உள்ளோம்.

இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை செய்து வருகிறோம் என்று கூறினர்.விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை போலவே மோடியின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களின் மனதில் தூண்டுதலை ஏற்படுத்தும்" என்றார்.

எதிர்ப்பு

இதனிடையே மோடி வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்கக் கூடாது என எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட கலவரமும், அப்போது ஏற்பட்ட உயிரிழப்புகளும் அவர் மீது நீங்கா களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தவிர மேலும் பல குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அப்படி இருக்கையில் மோடி குறித்த நல்ல அம்சங்களை மட்டுமே பாடப்புத்தகத்தில் சேர்ப்பது, வருங்கால தலைமுறையினரிடத்தில் உண்மை நிகழ்வையும், வரலாறையும் மறைப்பதாகும் என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 30 May 2014 - 4:59

மோடி- நவாஸ் ஷெரீப் சந்திப்பால் இருநாட்டின் நல்லுறவு மேம்படும்: அமெரிக்கா

வாஷிங்டன்: நரேந்திர மோடி - நவாஸ் ஷெரீப் சந்திப்பு பாராட்டுக்குரியது என்று கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, இதன் மூலம் தெற்கு ஆசியாவில் உள்ள அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மேம்படும் என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், அந்த இருவரின் சந்திப்பு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும், இரு தலைவர்களின் சந்திப்பு நேர்மறையான செயல்களை ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், இதனை முன்னெடுத்து செல்வது மிகவும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு இதுவொரு நேர்மறையான தொடக்கத்தின் அறிகுறியாக இருக்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேபோல், இரு தலைவர்களின் சந்திப்பையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையையும் பாராட்டுவதாக, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் பாஸ்கி தெரிவித்துள்ளார்.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 30 May 2014 - 5:00

மோடி வருகைக்காக காத்திருக்கிறோம்: அமெரிக்கா

வாஷிங்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை, ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புதிய அரசு அமைந்ததையடுத்து, இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இன்று அமெரிக்காவுக்கான இந்திய உயர் தூதர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

அப்போது, இந்தியாவில் அமைந்துள்ள புதிய ஆட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவித்த ஜான் கெர்ரி, நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வரவேற்பதை அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக குறிப்பிட்டார்.

மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, இந்திய தூதருடன் அமெரிக்க வெளியுறவு செயலாளர் சந்திப்பது இதுதான் முதல் முறை ஆகும்.

முன்னதாக, குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது, அப்போது மாநில முதல்வராக இருந்த மோடி கலவரத்தை தடுக்க தவறிவிட்டார் என கூறி, மோடிக்கு கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா விசா வழங்க மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 30 May 2014 - 5:13

ராசியான ஸ்கார்பியோவை விட்டு கொடுத்தார் - பிரதமர் நரேந்திர மோடி பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரையே பயன்படுத்துவார்

புதுடெல்லி: பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த தனது ராசியான ஸ்கார்பியோ காரை, பிரதமராக பதவி ஏற்ற பிறகு நரேந்திர மோடி விட்டுக் கொடுத்துள்ளார். மன்மோகன் சிங் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரையே மோடியும் இனி பயன்படுத்த உள்ளார். பிரதமராக பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி, பல ஆண்டாக ஸ்கார்பியோ காரைத்தான் பயன்படுத்தி வருகிறார். பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்ட அந்த கார், குஜராத் முதல்வராக இருந்த மோடியின் ராசியான காராகவும் இருந்து வந்தது. அதில்தான் மக்களவை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மகத்தான வெற்றி பெற்ற பிறகு, பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கும் ஸ்கார்பியோ காரில்தான் வந்தார். இந்திய தயாரிப்பான மகிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ காரைத்தான், பிரதமரான பிறகும் மோடி பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு, நவீன வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது ராசியான ஸ்கார்பியோ காரை விட்டுக் கொடுத்துள்ளார் மோடி. கடந்த 2003ம் ஆண்டுவரை அம்பாசிடர் கார்தான் இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தப்பட்டு வந்தது.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பிரதமருக்காக அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் ரகத்தை சேர்ந்த 6 கார்கள் வாங்கப்பட்டன. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு கமாண்டோ படையினருக்காக பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 ரகத்தை சேர்ந்த 12 கார்கள் வாங்கப்பட்டன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பயன்படுத்தி வந்த பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் கார் பிரதமர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதாகும். இதில் குண்டுகள் துளைக்காத புல்லட் புரூப் கதவு, கண்ணாடி, கண்ணிவெடித் தாக்குதலிலும் சேதமடையாத வலுவான அடிப்புறம், டயர்கள் வெடித்தாலும் ஓடும், குண்டுவெடிப்பிலும் தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், ஏவுகணை, வெடிகுண்டு களைக் கண்டறியும் வெப்ப சென்சார்கள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனம் என பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.

பொதுவாக பிரதமரின் காருக்கு முன்னும் பின்னும் மொத்தம் 9 கார்கள் அணிவகுத்துச் செல்லும். இந்த அணிவகுப்பில் செல்லும் இரண்டு பி.எம்.டபிள்யூ கார்கள் பிரதமரின் பி.எம்.டபிள்யூ கார் போன்றே தோற்றமளிக்கும். இதர பி.எம்.டபிள்யூ. கார்களில் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வார்கள். இதுபோன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகள் ஸ்கார்பியோவை விட பிஎம்டபிள்யூ காரில் அதிகம் உள்ளதால் அந்த காரையே பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு கமாண்டோ குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். இதனால் தனது ராசியான ஸ்கார்பியோவை விட்டுக் கொடுத்துள்ளார் மோடி. இனி அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரையே பயன்படுத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக