புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
21 Posts - 66%
heezulia
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
63 Posts - 64%
heezulia
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனப் போலிகளின் உண்மை மதிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 4:51 am


சீனத்தின் ‘ஆன்-லைன்’ வர்த்தக இணையதளமான டௌபௌ 2003 மே 10-ம் நாள் வியாபாரத்தைத் தொடங்கியது. ஜேக்மாவின் அலிபாபா குழுமம்தான் இந்த வர்த்தக இணையதளத்தை உருவாக்கியது.

நுகர்வோரிடம் வாங்கி நுகர்வோருக்குத் தருவது - வர்த்தகர்களிடம் வாங்கி நுகர்வோருக்குத் தருவது என்று இருவித வியாபாரத்தையும் கடந்த 11 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்துவருகிறது. 2013-ல் 50 கோடிப் பேர் அதனிடம் பதிவுசெய்துகொண்டுள்ளனர். தினமும் 6 கோடிப் பேர் அதனுடன் தொடர்புகொள்கின்றனர். 80 கோடிக்கும் மேற்பட்ட பொருட்களை அது பட்டியலில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 48,000 பொருட்களை விற்கிறது. நுகர்வோரிடமிருந்து நுகர்வோருக்கு விற்கும் விற்பனையில் சீனத்திலேயே 80% டௌபௌ மூலம்தான் நடக்கிறது.

வீடு தேடி வரும் சரக்கு

மா’வின் வர்த்தக சாம்ராஜ்யம் சீன மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவருகிறது. வீட்டைவிட்டு வெளியே போகாமலேயே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றாகிவிட்டது. அதுமட்டுமல்ல, வழக்கமான சில்லறை வியாபாரத்தைவிட விலை குறைவாக இருப்பதுதான் வியாபாரம் பெருக முக்கியக் காரணம். சீன நகரங்கள் அனைத்திலும், அடுக்ககங்கள் எல்லாவற்றின் முன்பும் டெலிவரிப் பையன்கள் சரக்குகளைக் கொண்டுவந்து இறக்குவதும் பணம் வாங்கிக்கொண்டு திரும்புவதுமான காட்சிகளைத் தினந்தோறும் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

மிகவும் வியப்பான காட்சி எதுவென்றால், பல்கலைக்கழக மைதானங்களில் காண்பதுதான். மதிய நேரம் விளையாட்டு மைதானங்களுக்கு அருகில் டௌபௌ பணியாளர்கள் பொருட்களைக் கொண்டுவந்து மலைபோலக் குவித்து விடுகின்றனர். விளையாட்டுக்குத் தேவையான பந்து, கையுறைகள், கால்காப்புகள், காலணிகள், டி-ஷர்ட்டுகள், மட்டைகள், வளைகோல்கள், உடற்பயிற்சிச் சாதனங்கள், பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பேனாக்கள், குடிநீர் போத்தல்கள் என்று கணக்கற்றவை அதிலிருக்கின்றன. கடைப் பையன்கள் அந்தப் பொருட்களுக்கு ஆர்டர் செய்த மாணவர்களின் பெயர்களைவிட, அவர்களுடைய செல்போன்களின் கடைசி நான்கு இலக்க எண்களைச் சொல்லிக் கூவுவது கண்கொள்ளாக் காட்சி. அதைக் கேட்டு அந்தந்த மாணவர்கள் அந்தந்த டெலிவரிப் பையன்களிடம் சென்று தங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொள்கிறார்கள்.

கெட்டிக்கார யுவதிகள்

மிகப் பெரிய வணிக வளாகங்களுக்கு நவநாகரிகத்தில் ஆர்வமுள்ள பெண்கள் சென்று அந்தக் கடைகளில் விற்கும் நவீன ஆடைகளை அணிந்து பார்க்கின்றனர். அதன் விலை, ரகம், அளவு ஆகியவற்றைக் குறித்துக்கொண்டு, அந்தக் கடைக்காரரிடம் அப்படியே திருப்பிக்கொடுத்துவிட்டு, டௌபௌவின் இணையதளத்தைத் தொடர்புகொண்டு கடையைவிடக் குறைந்த விலையில் இருக்கிறதா என்று சரிபார்த்து ஆர்டர் செய்கின்றனர். இதன் மூலம் தங்களுக்கு வேண்டுமென்ற பொருட்களைப் ‘பார்த்துப் பார்த்து’ வாங்குகின்றனர்.

டௌபௌ வெற்றிகரமான நிறுவனமாகத் திகழ்ந்தாலும் மற்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகிறது. டௌபௌ விற்பவற்றில் போலிகள், மட்டரகமானவை, திருட்டுச் சாமான்கள் இருக்கின்றன என்பவை அந்தக் குற்றச்சாட்டுகள். “போலிகளை நாங்கள் மட்டும்தான் விற்கிறோம் என்றால், எங்கள் கடைகளை இன்று இரவிலிருந்தே மூடிவிடத் தயார். சந்தையிலிருந்து போலிகள் ஒழிந்துவிடுமா?” என்று கேட்கிறார் டௌபௌ உரிமையாளர். டௌபௌ கடைகளில் மட்டும்தான் என்றில்லை, சீனத்தின் எல்லா சில்லறைக் கடைகளிலுமே இப்படிப் போலிச் சாமான்களே மலிந்துகிடப்பதால் நுகர்வோர் அதுகுறித்துக் கவலைப்படுவதில்லை. அவர்கள் பார்ப்பதெல்லாம் விலையை மட்டும்தான்.

நம்பிக்கையைப் பெற்றது எப்படி?

அங்கிங்கெனாதபடி எங்கும் போலிகளே விற்பனையாவது சீனத்தில் இப்போது பெரிய பிரச்சினையாகிவருகிறது. சீனப் பொருட்கள் என்றால் நம்பகத்தன்மையற்றவை என்றாகிவிட்டது. மக்களின் நம்பிக்கையை டௌபௌ பெற்றதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அதன் உரிமையாளருடைய அலிபாபா நிறுவனம், ‘அலி-பே ஆன்-லைன் பணப்பட்டுவாடா சேவை’யை 2004-ல் தொடங்கியது. அது ‘மூன்றாவது நபர் பணப்பட்டுவாடா’ முறை. டௌபௌவில் பொருள் வாங்கினால் அலி-பே நிறுவனத்திடம் பணம் செலுத்தலாம். வாங்கிய பொருளை வீட்டில் பயன்படுத்தி திருப்தி இருந்தால், வாடிக்கையாளர் தந்த பணம் சரக்கைக் கொடுத்த நிறுவனத்திடம் தரப்படும். திருப்தி இல்லாவிட்டால், பணம் வாடிக்கையாளரிடமே திருப்பித் தரப்படும். பொருளை டௌபௌ நிறுவனம் திரும்ப எடுத்துக்கொண்டுவிடும். இந்த ஒரு நடவடிக்கையால்தான் அந்த நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

30 கோடி வாடிக்கையாளர்கள்

அலி-பே நிறுவனத்துக்கு மட்டும் 30 கோடி வாக்காளர்கள் கணக்கு இருக்கிறது. சீனத்தின் மொத்த இணையவழி விலைசெலுத்தல் கணக்குகளில் சரிபாதி அலி-பே நிறுவனத்திடம் இருக்கிறது. இணைய நிறுவனங்களில் பொருட்கள் வாங்கினால் எப்படி இருக்குமோ, தரமாக இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகத்தைப் போக்கி வியாபாரத்தை வளர்த்துக்கொண்டது அலிபாபா நிறுவனம். அதற்கு உதவியது அலி-பே.

சீன அரசின் சாமர்த்தியம்

போலிச் சரக்குகள் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்குத் தங்களுடைய கொள்கைகள் காரணமல்ல, மக்களுடைய நடத்தைதான் காரணம் என்கிறது சீன அரசு.

தரக்குறைவான சாதனங்கள், போலிச் சாமான்கள் சந்தைக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையைச் செய்யத் தவறியதால், சீனச் சரக்குகள் மீது மட்டுமல்ல… சீன மக்கள் மீதும் மற்றவர்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆரம்பத்திலேயே இதை அரசு தடுத்திருக்க வேண்டும். இப்போதும் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது. இதனால், சீன அரசின் மீதான நம்பகத்தன்மையும் குலைந்துவிட்டது.

பொருளாதார வளர்ச்சி ஒன்றே குறி என்று கண்மூடித்தனமாகச் செயல்பட்டது அரசு. இப்போது சீன நகரங்கள் அனைத்துமே சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன. இதுநாள்வரை இதைத் தடுக்காமல் கண்மூடியிருந்துவிட்டு, இப்போது தொழிற்சாலைகளைக் குற்றம்சாட்டுகிறது அரசு. தன்னுடைய கடமை, பொறுப்பு என்ன என்று வாய்திறக்காமல் இருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக சீனத்தில் நடப்பவற்றைப் பார்த்தால், சீன அரசு தொடர்ச்சியாக தன்னுடைய நிலைகளை மாற்றிக்கொண்டே வந்திருப்பது நன்கு புலனாகும். நேற்றைக்கு எதை ஊக்குவிக்கிறதோ அதை இன்று இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது. இன்றைக்கு எதை அடக்குகிறதோ அதை நாளை ஊக்குவிக்கவும் கூடும். இதை சீன மக்கள் இணையத்தில் விஷமமாக விமர்சித்துள்ளனர். “முதலில் சீன அரசு பாலியல் தொழிலை ஊக்குவிக்கிறது. அது முற்றிய பிறகு, பாலியல் தொழிலைத் தடுப்பதை ஊக்குவிக்கிறது” என்று கூறியுள்ளனர்.

இதையொட்டி எனக்கும் ஒரு யோசனை தோன்றுகிறது: “சீன அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை நான் அலி-பே மூலமே செலுத்துவேன். அரசின் செயல்கள் மேம்பட்டு அதில் திருப்தி ஏற்பட்டால் அந்த வரியை அரசிடம் சேர்த்துவிடுமாறு கூறுவேன். இல்லாவிட்டால், நான் கட்டிய வரியை என்னிடமே திருப்பித்தந்துவிடுங்கள் என்று வாங்கிக்கொள்வேன்.”

© தி நியூயார்க டைம்ஸ், தமிழில்: சாரி @ தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக