புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
prajai
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Rutu
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
viyasan
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Rutu
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:20 am

First topic message reminder :

ஹரிவன்ஷ் ராய் பச்சன்

நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 KdQzBA4R1mQzOOpaAxxO+Harivansh-Rai-Bachchan

ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள், இந்தி இலக்கியங்களின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் ஆவார். இவருடைய கவிதைகள், வாழ்க்கை மற்றும் காதல் உணர்வுகளை உணர்த்தும் அற்புதப் படைப்புகளாக இருந்தது. 1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “மதுஷாலா” என்ற இந்திக் கவிதைப் புத்தகம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது. இந்தி இலக்கியத்தில் அவரது மகத்தான பங்களிப்பிற்காக 1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது. மேலும் “சோவியத் லேண்ட் நேரு விருதினை” வென்றுள்ளார். இவர் பிரபல இந்தித் திரைப்பட நடிகரான “அமிதாப் பச்சனின்” தந்தை ஆவார். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அற்புதக் கவிஞராகவும், மொழிப்பெயர்ப்பாளராகும் விளங்கிய ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் படைப்புகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 27, 1907

பிறப்பிடம்: பாபுபட்டி, உத்திரப்பிரதேசம் மாநிலம், இந்தியா

பணி: கவிஞர் மற்றும் எழுத்தாளர்

இறப்பு: ஜனவரி 18, 2003

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள், 1907 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27 ஆம் நாள் இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில், அலகபாத்திற்கு அருகிலுள்ள “பாபுபட்டி” என்ற இடத்தில் பிரதாப் நாராயண் ஸ்ரீவாஸ்தவ் மற்றும் சரஸ்வதி தேவிக்கு மூத்த மகனாக ஒரு காயஸ்தா எனப்படும் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஆரம்பக் கல்வியை ஒரு நகராட்சிப் பள்ளியில் தொடங்கினார். பிறகு காயஸ்தா பாத்ஷாலஸ்லிருந்து உருது கற்கத் தொடங்கிய அவர், அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து உயர் கல்வி கற்றார். 1941 ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியராக சுமார் பத்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1952 ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘முனைவர் பட்டம்’ பெற்றார்.

ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பணிகள்

இங்கிலாந்தில் முனைவர் படிப்பை முடித்து இந்தியா திரும்பிய அவர், மீண்டும் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். அதே நேரத்தில் அலகாபாத் நிலையத்திலுள்ள “ஆல் இந்திய ரேடியோவிலும்” சில நேரங்களில் பணிபுரிந்தார். பின்னர் 1955 ஆம் ஆண்டு தில்லிக்கு சென்ற அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இந்தி மொழி சிறப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தார். சுமார் பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். இந்தி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றியபோது, மக்மத், ஓதெல்லோ, பகவத்கீதை மற்றும் உமர்கயாம் பற்றிய “ருபாயியத்” போன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த புத்தகங்களுக்கு இந்தியில் மொழிப்பெயர்க்கும் பணி இவரிடம் வந்து சேர்ந்தது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:27 am

பாரதிதாசன்

நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 VQ1jQh77SFSDIerD6Hd2+Bharathidhaasan

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஏப்ரல் 29, 1891

பிறப்பிடம்: புதுவை

இறப்பு: ஏப்ரல் 21, 1964

பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

இல்லற வாழ்க்கை

பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

பாரதியார் மீது பற்று

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:28 am

தொழில் வாழ்க்கை

பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

அவரது படைப்புகள்

எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:

‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.

1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.

1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது

2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.

இறப்பு

எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

காலவரிசை

1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:29 am

அமர்த்தியா சென்

நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 UJ4Dn5WWRM2viQa0m5iE+amartya_sen

அமர்த்தியா சென் அவர்கள், ‘நோபல் பரிசும்’, ‘பாரத ரத்னா புரஸ்கார் விருதும்’ பெற்று, இந்திய குடிமக்களுள் மிக முக்கியமான பொக்கிஷமாக கருதப்படுபவர். அவர், ஏராளமான மாற்றங்களை பொருளாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் கொண்டு வந்து, புரட்சிகரமான சிந்தனை முறைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் சவால் விடுத்தார். தனது சிறு வயதிலேயே வங்கப் பிரிவினையின் போது நடந்த மோசமான விளைவுகளையும், வன்முறைகளையும் நேரில் கண்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இந்த அனுபவம் அவருக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்ததோடு மட்டுமல்லாமல், “இந்தப் பிரிவினை, அரசியலில் புதைக்கப்பட்ட நெஞ்சறிந்த மறைப்புரை” என்றும், இந்த அனுபவத்தை தனது படைப்புகளில் சொந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். அமர்த்தியா சென் அவர்களின் வாழ்க்கை மற்றும் சாதனைகளைப் பற்றி மேலுமறிய ஆவலாக இருந்தால், தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: நவம்பர் 3, 1933

பிறந்த இடம்: சாந்திநிகேதன், வங்காள மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா (இன்றைய மேற்கு வங்காளம்)

தொழில்: பொருளியலாளர், எழுத்தாளர், பேராசிரியர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

அமர்த்தியா சென் அவர்கள், அஷுதோஷ் சென் மற்றும் அமிதா சென் தம்பதியருக்கு நவம்பர் 3, 1933 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மேற்கு வங்கத்திலிருக்கும் சாந்திநிகேதன் என்ற இடத்தில் ஒரு பெங்காலி இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தார். சாந்திநிகேதன், ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வ-பாரதி பள்ளி / கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

அமர்த்தியா சென் அவர்களின் மூதாதையர்களின் இருப்பிடம் இப்போது வங்காளத்தின் தலைநகரான ‘டாக்கா’ ஆகும். ஆகவே, அவரது தந்தையான அஷுதோஷ் சென், டாக்கா பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சில ஆண்டுகள் கழித்து, மேற்கு வங்கத்தின் பொது சேவை ஆணைக்குழு தலைவராகி டெல்லியில் பணியாற்றினார். சென் அவர்கள், சாந்திநிகேதனுக்கு வரும் முன், அவர் வங்காளத்திலிருக்கும் ‘புனித கிரிகோரி பள்ளியில்’ கல்வி கற்றார். சென் அவர்களின் தாய்வழி தாத்தா ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வ-பாரதி பள்ளியில் ஒரு ஆசிரியராகவும், அவரது அம்மா ஒரு மாணவியாகவும் இருந்ததால், சென்னும் இப்பள்ளியில் படித்தார் என்றால் அதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவரது உயர் கல்விக்காக கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரிக்குச் சென்று பொருளாதாரம் (மேஜர்) மற்றும் கணிதத்தில் (மைனர்) பி.ஏ. பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, கேம்பிரிட்ஜிலுள்ள டிரினிட்டி கல்லூரியில், தூய பொருளாதாரத்தில் மற்றுமொரு பி.ஏ பட்டத்தைப் பெற்றார்.

தொழில்

1956ல் கேம்பிரிட்ஜிலிருந்து திரும்பிய அமர்த்தியா சென் அவர்கள், புதிதாக நிறுவப்பட்ட கல்வி நிறுவனமான ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இருபத்தி மூன்று வயதாக இருந்ததால், அங்குள்ள மக்கள் மத்தியில் அதிருப்தியை அது ஏற்படுத்தியது. ஓரிரு ஆண்டுகள் அந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின்னர், அவர் கேம்பிரிட்ஜிற்குத் திரும்ப சென்று, டிரினிட்டி கல்லூரியில் தத்துவப் பாடத்தில் சேர்ந்தார். 1963 ஆம் ஆண்டு, இந்தியா திரும்பிய அவர், தில்லி பல்கலைக்கழகத்திலும், தில்லி பொருளாதார பள்ளியிலும் பொருளாதார பேராசிரியராக பணியில் அமர்ந்தார். 1970ல், அவரது முதல் புத்தகமான “கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோசியல் வேல்ஃபார்” என்ற படைப்பை வெளியிட்டார். 1971 ஆம் ஆண்டில், அவரது மனைவியின் உடல்நிலை மோசமானதால், அவர் டெல்லியை விட்டு, லண்டனுக்குச் சென்றார். இருப்பினும், அவரது மனைவி இறந்ததால், அவர்களது திருமண பந்தம் ஒரு முடிவுக்கு வந்தது. 1972 ஆம் ஆண்டில், லண்டன் பொருளாதார பள்ளியில் பேராசிரியராக சேர்ந்து, 1977 வரை பணிபுரிந்த அவர், அதற்கு பின், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆக்ஸ்ஃபோர்டிலுள்ள நட்ஃபீல்ட் கல்லூரியின் முதல் பொருளியல் பேராசிரியர் என்ற பெருமை இவரையே சேரும். 1986 வரை அங்கு பணிபுரிந்த பின்னர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

அவரது படைப்புகள்

சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி, வெளியிட்ட வரலாற்று உரிமை அமர்த்தியா சென் அவர்களுக்கு உண்டு. 1981 ஆம் ஆண்டு அவர் தனது கட்டுரையான, ‘பாவர்ட்டி அண்ட் ஃபாமைன்ஸ்: (வறுமை மற்றும் பஞ்சம்): உரிம மற்றும் வாழ்வாதாரங்களின்மைக்கான ஒரு கட்டுரையை’ வெளியிட்டார். அவர் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தில் வெளியிடப்பட்ட “ஹ்யூமன் டெவலப்மென்ட் ரிப்போர்ட்” (மனித அபிவிருத்தி அறிக்கை), என்ற கட்டுரையையும் எழுதியுள்ளார். 1990 ஆம் ஆண்டில், அவர் தி நியூயார்க் ரெவ்யூ ஆஃப் புக்ஸில், அவரது சர்ச்சைக்குரிய கட்டுரைகளில் ஒன்றான “மோர் தான் ஹன்ட்ரெட் மில்லியன் வுமன் ஆர் மிஸ்ஸிங்” என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டார். அமர்த்தியா சென் அவர்கள், இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் அவைகள் பல முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:30 am

பங்களிப்பு

அமர்த்தியா சென் அவர்கள், தனது ஆராய்ச்சி மூலமாக அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பொருளாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் புதிய தரங்களைக் கொண்டு வந்தார். இன்று அதிகாரிகளின் செல்வாக்கை நிர்வகித்து, துன்பத்திற்கான வழிகளைக் கண்டுபிடித்து ஒழித்ததோடு மட்டுமல்லாமல், ஏழைகளின் வருமான இழப்பிற்கான மாற்றீடாக இருப்பனவற்றையும் கண்டுபிடித்தார். பொருளாதார வளர்ச்சி பகுதியில், அவர், “ஈக்வாலிட்டி ஆஃப் வாட்” என்ற ஆய்வு கட்டுரையின் மூலமாக ‘செயல்திறனின் கோட்பாட்டை’ அறிமுகப்படுத்தினார். இது பொருளாதார வளர்ச்சியில் அவருடைய முக்கிய பங்களிப்பாகும்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

1954: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஆடம் ஸ்மித் பரிசு’ வழங்கப்பட்டது.
1956: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஸ்டீவென்சென் பரிசு’ வழங்கப்பட்டது.
1976: மகாலானோபிஸ் பரிசு பெற்றார்.
1986: அரசியல் பொருளாதாரத்தில் ‘ரேங்க் ஈ செய்ட்மேன் டிஸ்டிங்கஷ்ட் விருது’ கிடைத்தது.
1990: நெறிமுறைகளுக்கான ‘செனட்டர் ஜியோவானி அக்னெல்லி சர்வதேச பரிசு’ பெற்றார்.
1990: ‘ஆலன் ஷான் ஃபெய்ன்ஸ்டீன் வேர்ல்ட் ஹங்கர் விருது’
1993: ஜோன் மேயர் ‘குளோபல் குடியுரிமை விருது’
1994: ஆசிய சமூகத்தின் ‘இந்திரா காந்தி தங்க பதக்கம் விருது’
1997: ‘எடின்பர்க் பதக்கம்’
1997: ஒன்பதாவது ‘கட்டலோனியா சர்வதேச பரிசு’
1998: பொருளாதாரத்தில் ‘நோபல் பரிசு’
1999: ‘பாரத் ரத்னா விருது’
1999: வங்காள அரசின் ‘கெளரவ குடியுரிமை’ வழங்கப்பட்டது.
2000: உலகளாவிய அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்திலிருந்து ‘லியன்டெஃப் பரிசு’
2000: அமெரிக்காவின் தலைமை மற்றும் சேவைக்காக ‘ஐசனோவர் பதக்கம்’
2000: ‘சாம்பியன் ஆஃப் ஹானர்’
2002: சர்வதேச ஹ்யுமனிஸ்ட் மற்றும் எதிக்கல் யூனியனிலிருந்து ‘சர்வதேச ஹ்யுமனிஸ்ட் விருது’
2003: இந்திய வர்த்தக சேம்பர் அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவித்தது’
யுனெஸ்கேபின் (UNESCAP) ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
காலவரிசை

1933: நவம்பர் 3, 1933 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள வங்காள மாகாணத்திலிருக்கும் சாந்திநிகேதனில் பிறந்தார்.

1953: கொல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில், பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

1955: கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில், பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

1959: கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில், ஹெச்.ஏ. மற்றும் பி.எச்.டி முடித்தார்.

1956: கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக அவரது முதல் பணியைத் தொடங்கினார்.

1963: தில்லி பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக பணியேற்றார்.

1970: அவரது முதல் புத்தகமான “கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோசியல் வேல்ஃபார்” வெளியிடப்பட்டது.

1972: லண்டன் பொருளாதார பள்ளியில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.

1977: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.

1986: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.

1989: பொருளாதாரத்திற்காக ‘நோபல் பரிசு’ பெற்றார்.

1999: ‘பாரத ரத்னா புரஸ்கார்’ விருதைப் பெற்றார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:31 am

மு. கருணாநிதி

நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 8eKRR6sJQgSOxCZQafng+karunanidhi(1)

இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து வருகிறார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்துகிறார். எம். கருணாநிதி அவர்கள், அன்போடு மக்களால் “கலைஞர்” என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்குகிறார். தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார். தனது அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி அவர்கள், சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும், சீர்திருத்தத்திற்காகவும் போராடினார். அவருடைய ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்ட ‘தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம்’, தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரமாக இருந்தது. மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தொழில்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அவரது சக்திவாய்ந்த செல்வாக்கு ஆளுமையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஜூன் 3, 1924

பிறப்பிடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா

தொழில்: அரசியல்வாதி, எழுத்தாளர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

கருணாநிதி அவர்கள், திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில், ஜூன் 3ஆம் தேதி, 1924ஆம் ஆண்டு, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

அவருடைய பெற்றோர்கள் இருவரும் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார். கருணாநிதி அவர்களின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவமும், ஆரம்பக்கல்வியும் திருப்திகரமாக இல்லாதபோதிலும், அவர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகவும் பற்றுடையவராக இருந்தார்.

தொழில்

தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அவர், தமிழ் திரையுலகில் கதை-வசனம் எழுதுபவராக .இருந்தார். அவருடைய திரை வசனங்கள் மூலம், அர்த்தமுள்ள சமூக செய்திகளை வெளிப்படுத்த முயன்றார். அவரது கதைகளனைத்தும், ‘விதவை மறுமணம்’, ‘ஜமீன்தார் முறையை ஒழித்தல்’, ‘மத பாசாங்குத்தனத்தை ஒழித்தல்’, ‘தீண்டாமை அழிப்பு’ மற்றும் ‘சுய மரியாதை திருமணம் ஒழிப்பு’ போன்றவற்றை சார்ந்தே இருக்கும். பாரம்பரிய இந்து மத சமூகங்கள் எதிர்த்த பிராமண ஆதிக்கத்தின் எதிர்மறை அம்சங்களை, தனது படமான ‘பராசக்தியில்’ பிரதிபலித்தார். பல சர்ச்சைகள் இருந்தாலும், இப்படம் பரவளான விளம்பரம் பெற்று, மாநிலத்திலுள்ள அனைத்து பார்வையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் திரைக்கதையிலுள்ள மரபுசாரா கருப்பொருள்களே, அவரை அக்காலத்தில் மிகவும் பிரபலமாக்கியது. திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதைத் தவிர, கருணாநிதி அவர்கள், பல்வேறு கவிதைகள், கடிதங்கள், புத்தகங்கள், வரலாறு, வரலாற்று நாவல்கள், இசை, வசனம், நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். அவர் ஒரு கலாரசிகனாக இருந்ததால், புகழ்பெற்ற கவிஞரான திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கட்டடக்கலைக் குவியலான ‘வள்ளுவர் கோட்டத்தை’ நிறுவினார்.

அரசியல் வாழ்க்கை

இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலவிய நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த அழகிரிஸ்வாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஒருமுறை, சமூகநல காரணங்களைப் பற்றிய அழகிரிஸ்வாமியின் உரையை கேட்ட கருணாநிதி அவர்கள், அதனால் ஊக்குவிக்கப்பட்டார். அவர் இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது. இந்த காலக்கட்டத்தில், தனது வேலைகளை விளம்பரம் செய்ய பத்திரிக்கை என்னும் சக்தியை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். இதன் காரணமாக, தனது சொந்த தலையங்க பத்திரிக்கையை உருவாக்கினார். 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று, அவர் தனது பத்திரிக்கையான “முரசொலியை” தொடங்கினார். அப்பொழுது முதல், இந்த பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வருகிறார். எழுத்துத்திறன் கொண்ட கருணாநிதி அவர்கள், தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார். மேலும் ‘குடியரசு’, ‘முத்தாரம்’, ‘தமிழரசு’ போன்ற தனது இதர வெளியீடுகளிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறார். கள்ளக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருணாநிதி அவர்கள் ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. 1957ல், அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து, முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல், தி.மு.க. கட்சியில் சேர்ந்தார், பின்னர் அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரானார். 1967ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது, கருணாநிதி அவர்கள், ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார்.

1967ல் தமிழ்நாடு முதலமைச்சராக பணியாற்றிய அண்ணாதுரை அவர்கள், திடீர் மரணம் அடைந்ததால், பதவிப் பொறுப்பை தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின், அண்ணாதுரை வகித்த தலைமையமைச்சர் பதவியை மு.கருணாநிதி அவர்கள் ஏற்றார். அதன் பின், அவர் 1971, 1989, 1996 மற்றும் 2006 ல் மீண்டும் தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 87 வயதான மு.கருணாநிதி அவர்கள், திமுக கட்சியின் ஆணிவேராக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மாநில அரசியலிலும், ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:32 am

சாதனைகள்

கருணாநிதி அவர்கள், 1970ல், பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987ல், அவர் மலேஷியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 2010 க்கான ’உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் அமைத்தார். தமிழ் இலக்கியத்தில், தனது இலக்கிய பங்களிப்பைத் தவிர, கருணாநிதி அவர்கள், தனது மக்கள் நலனிற்காக தனது ஆதரவை நீட்டித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டார். சமூகநலன்களை நோக்கி இன்றும் அவருடைய வேலை தொடர்கிறது. ஐ.டி துறையை மாநிலத்தில் வரவேற்கும் விதமாக, அவருடைய பதவி காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில், புதிய டிராக்டர் உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது

தனிப்பட்ட வாழ்க்கை

கருணாநிதி அவர்கள், மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியான பத்மாவதி அவர்களுக்கு, எம்.கே. முத்து என்று ஒரு மகன் பிறந்தார். அவரது முதல் மனைவி, திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார். கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்களே அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்கு பிறந்தவர் தான் கனிமொழி.

விருதுகள்

அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.
தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.
தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.
தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.
காலவரிசை

1924: கருணாநிதி, திருக்குவளை என்ற ஒரு சிறிய கிராமத்தில், ஜூன் 3ம் தேதி பிறந்தார்.

1942: அவரது பத்திரிக்கை ‘முரசொலி’ நிறுவப்பட்டது.

1957: அவர் மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1961: திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962: தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1967: பொது நல அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

1969: முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்.

1970: உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு அங்கமாக இருந்தார்.

1971: இரண்டாவது முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989-1991: எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சியமைத்தார்.

1996: நான்காவது முறையாக முதலமைச்சரானார்.

2006: ஐந்தாவது முறையாக மாநிலத் தேர்தலில் வெற்றிப்பெற்று, மீண்டும் முதலமைச்சரானார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:33 am

சுப்ரமணிய பாரதியார்

நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 AfBrWf07TukXWG44IqKA+Subramanya-Bharathi

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 11, 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

இறப்பு: செப்டம்பர் 11, 1921

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்

சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். .

பாரதியாரின் திருமண வாழ்க்கை

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி

‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:33 am

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப்பு

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.

பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:34 am

சி. என். அண்ணாதுரை

நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 2 X2U7h3jFTeaBQc2lFBa8+C-N-Annadurai

அனைவராலும் மிகவும் பிரபலமாக அண்ணா அல்லது அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை, முதலில் திராவிட மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார். ஒரு நடுத்தர வர்க குடும்பத்தில் பிறந்த கா. ந. அண்ணாதுரை அரசியலில் இறங்குவதுற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியராகவும், பத்திரிக்கையாளராகவும் பணியாற்றினார். திராவிட கட்சி, திராவிட கழகம் மூலம் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த கா.ந. அண்ணாதுரை பிறகு தன்னுடைய ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை உருவாக்கினார். அரசியல் உலகில் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கிய அண்ணா அவரின் மறைவிற்கு பின், இவரது பெயரால் “அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” (அதிமுக) என்ற ஒரு கட்சி எம். ஜி ராமச்சந்திரனால் 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தமிழக முதல்வராக தன்னுடைய முதல்வர் பணியை சிறப்பாக செய்த அண்ணாவின் புகழ் சாதாரண மக்களிடையே பெரும் புகழை தேடித் தந்தது. இவர் நவீன இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த, வலிமையான அரசியல் தலைவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். அது மட்டுமல்லாமல் இவர் அனைவராலும் பாராட்டுப்பெற்ற ஒரு சிறந்த பேச்சாளராகவும், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய எழுத்தாளராகவும் மற்றும் ஒரு மேடை நாடகராகவும் புகழ் பெற்றார்.

பிறப்பு : செப்டம்பர் 15, 1909

இடம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு

இறப்பு : பிப்ரவரி 3, 1969

தொழில் : அரசியல்வாதி, எழுத்தாளர்

நாட்டுரிமை : இந்தியா

ஆரம்ப வாழ்க்கை:

அண்ணா அவர்கள் நடராஜன் மற்றும் பங்காரு அம்மாளுக்கு மகனாக செப்டம்பர் 15, 1909-ல் காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவர் செங்குந்த முதலியார் வகுப்பை சார்ந்த ஒரு நடுத்தர நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை சென்னையிலுள்ள பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் தொடங்கினார். ஆனால் தன்னுடைய குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கிளர்க்காக வேலை புரிந்தார். பிறகு அவர் தன்னுடைய பட்டப் படிப்பை பச்சையப்பா கல்லூரியில் தொடர்ந்தார்.

1930-ல் தனது 21வயதில் ராணியை மணம் முடித்தார். பின்னர் 1934-ல் பி .ஏ (ஹானர்ஸ்) பட்டமும், பிறகு எம். ஏ (பொருளாதாரம் மற்றும் அரசியல்) முதுகலை பட்டமும் பெற்றார். தன்னுடைய கல்லுரி வாழ்க்கைக்கு பிறகு ஆங்கில ஆசிரியராக பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆசிரியர் பணியை தொடர்ந்தார். ஆனால், குறுகிய காலத்திலேயே ஆசிரியர் தொழிலை விட்டு பத்திரிக்கை மற்றும் அரசியலில் ஈடுபாடுகொண்ட அண்ணா தன்னை முழு அரசியல்வாதியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

அண்ணாவின் அரசியல் தொடக்கம் :

தனது கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு அரசியலில் ஈடுபட மிகவும் ஆர்வம் கொண்ட அண்ணா 1934 ஆம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்டம் திருப்பூரில் நடந்த ஒரு இளைஞர் மாநாட்டில் பெரியாருடனான முதல் சந்திப்பு ஏற்பட்டது. அவருடைய கொள்கைகள் மிகவும் அவரை ஈர்த்தது. அதனால் பெரியாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார். பிறகு பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீதி கட்சியிலிருந்து பிரிந்து “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை 1949 ல் உருவாக்கினார். நீதி கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த இவர், பிறகு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிக்கையான குடியரசு பத்திரிக்கைக்கு ஆசிரியராக பணியாற்றினார். அது மட்டுமல்லாமல் “திராவிட நாடு” என்ற தலைப்பில் ஒரு தமிழ் இதழையும் தொடங்கினார்.

திமுக உருவாக்கம்:

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது காலனி ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிகவும் வன்மையாக கண்டித்தது. ஆனால் இந்த கட்சி பெரும்பாலும் பிராமிணர்கள், வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக இருக்கிறது என்று பெரியாரால் விமர்சிக்கப்பட்டது. இதனால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 1947ஐ கறுப்புதினமாக அறிவிக்க தனது தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்தார் பெரியார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அண்ணா “இந்தியாவின் சுதந்திரம்” இந்தியாவில் உள்ள அனைவரின் போராட்டத்தினாலும், வியர்வையாலும் கிடைக்கப்பெற்ற ஒன்று அது ஆரிய மற்றும் வடஇந்தியர்களால் மட்டும் பெறப்பட்டது அல்ல என்றார், இதனால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 1948ல் நடந்த “திராவிட கட்சியின் கட்சி” கூட்டத்திலிருந்து அண்ணா வெளியேறவும் நேர்ந்தது. அது மட்டுமல்லாமல் பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மணந்ததால் அண்ணாவும் அவருடைய ஆதரவாளர்களும் திராவிட கட்சியை விட்டு வெளியேறி 1949ல் “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை பெரியாரின் மருமகன் இ.வி.கே சம்பத்துடன் இனைந்து உருவாக்கினார். இக்கட்சி குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:35 am

திராவிட நாடு:

பெரியாரின் திராவிட கழகத்தில் இருந்த போது, அண்ணா பெரியாரின் திராவிட நாடு கொள்கைக்கு ஆதரவு அளித்தார். ஆனால், பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட அவரின் மருமகனான இ.வி.கே சம்பத் இக்கொள்கைக்கு மறுப்பு தெரிவிப்பது மட்டும் அல்லாமல் பெரியாரின் திராவிட கழகத்தை விட்டு திமுகவிலும் இணைந்தார். ஆனால் அண்ணாவின் திமுக கட்சி தமிழ் திரைப்பட கலைஞர்களை முன்னிறுத்தி செயல்பட்டதை விரும்பாத இ.வி.கே. சம்பத், தி.மு.கவிலிருந்து விலகி 1961-ல் “தமிழ் தேசியவாதக் கட்சி” என்ற தனி கட்சியை தொடங்கினார்.

1962 ல் நடந்த மாநிலங்கள் அவையில் அவர் பேசுகையில், ‘நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற நாடு’என்று உரையாற்றினார். அதன் பிறகு இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் (தமிழ் நாடு) மாநிலமாக உருவாக்கப்பட்டது. “அண்ணா திராவிட நாடு, திராவிடர்கே!’ என்ற உண்மையை உணர்ந்த அவர் அக்கொள்கையை கைவிட்டார்.

இந்தி எதிர்ப்பு :

1928-ல் மோதிலால் நேரு அவர்கள் அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்த ஹிந்தியை பரிந்துரைத்த போது, தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளும் ஹிந்தி வட இந்தியர்கள் முக்கிய மொழியாக இருப்பதால் மற்ற மொழிமக்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட வேண்டும் என்று கருதி கடுமையாக எதிர்த்தார்கள். இதன் தொடக்கமாக காங்கிரஸ் கட்சி 1938-ல் மதராஸ் மாகாணத்தில் சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் அனைத்து பள்ளிகளிளும் கட்டாய மொழியாக இந்தி பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதை விரும்பாத அண்ணா, பாரதிதாசன், தமிழ் ஆன்றோர்கள், புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது மிகபெரிய போராட்டமாக வெடித்தது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் நடராஜன் என்பவர் தமிழுக்காக உயிரையும் தியாகம் செய்தார். அவரின் இறப்பு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் ஒரு முக்கிய தூண்டுகோலாகவும் இருந்தது. இதன் விளைவாக பிப்ரவரி 1938 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிபடுத்தினர்.

1950 இல், இந்தியா ஒரு குடியரசு நாடாக மாறிய போது, இந்தியை இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனால் 1960-ல் திமுக கட்சி அண்ணாவின் தலைமையில் கட்டாய இந்தி மொழி திணிப்பை எதிர்த்து சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் “இந்தி எதிர்ப்பு மாநாடு” நடத்தப்பட்டது. பிறகு இந்திய குடியரசு தலைவர் வருகையின் பொழுது கருப்புக்கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை கண்ட இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியல் அமைப்பில் சட்ட திருத்தம் நிறைவேற்றினார். அதன் பிறகு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா வெற்றி பெற ஓர் முக்கிய காரணமாகவும் அமைந்தது.

தமிழக முதல்வராக அண்ணா:

1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஒன்பது மாநிலங்களில் தி.மு.க வெற்றிபெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி சென்னையில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1967 பிப்ரவரியில் சென்னை மாநில அமைச்சர் ஆனார் அண்ணா. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அது மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் நிலவும் மூன்று மொழி திட்டத்துக்கு எதிராக தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார். பின்னர் ஜனவரி 3, 1968 ஆம் அண்டு “இரண்டாம் உலக தமிழ் மாநாடு” நடத்தப்பட்டது. ஏப்ரல்-மே 1968 இல் யேல் என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் இவருக்கு “சுபப் பெல்லோஷிப்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருதை பெற்ற அமெரிக்க அல்லாத ஒரு இந்தியர் என்ற பெருமையை தேடித்தந்தது. பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக கெளரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக