புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10 
31 Posts - 70%
heezulia
ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10 
11 Posts - 25%
cordiac
ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10 
1 Post - 2%
Geethmuru
ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10 
158 Posts - 57%
heezulia
ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10 
9 Posts - 3%
prajai
ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10 
1 Post - 0%
cordiac
ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்காடு - ஒரு அனுவபம்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 30, 2014 12:19 pm

நேற்று முன்தினம் 28.06.14 சனியன்று ஏற்காடு போக முடிவு செய்து கிளம்பினோம்.  மிக அருமையான சீதோஷ்ண நிலை.  அங்கு சென்று வந்த அனுபவத்தை உறவுகளிடம் பகிர்ந்து கொள்ள ஆசை..

முதலில் ஏற்காடு பற்றி ஒரு கண்ணோட்டம்:

ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

பக்கோடா முனையிலிருந்து அழகாகத் தெரியும் ஒரு ஊர்
19ம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காபி செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு அருவியில் குளித்து மகிழ கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எனும் அருவி ஒன்றும் உள்ளது. ஏற்காடு ஏரியில் நிரம்பினால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்ற கோயிலாகும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 30, 2014 12:31 pm

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப்பூ
இங்கு விசேஷம்...!
-
அருகில் கிளியுர் நீர்வீழ்ச்சி உள்ளது
-
ஏற்காடு - ஒரு அனுவபம்  T8sAzETNQIiVn5jsrdzQ+kiliyur_falls

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 30, 2014 12:37 pm

காலையில் ஐந்து மணிக்கு புறப்பட்டு ஏழு மணியளவில் அங்கு சென்று சேர்ந்தோம். நான் எனது மனைவி, மகள் மேலும் என்னிடம் பணி புரியும் இருவர் அவர்களின் நண்பர்கள் என்று மொத்தம் ஏழு பேர் சென்றோம். என்னிடம் பணி புரிபவர்களை வருடத்தில் ஒரு முறை இது போல் சுற்றுலா அழைத்து செல்வது எனது பழக்கம். அன்றைய ஒருநாள் எல்லாவித கவலைகளும் மறந்து, தொழில் பற்றிய எண்ணம் நானும் மறந்து (அந்த ஒரு நாள் மட்டுமே) ஜாலியாக (சரக்கு இல்லாமல்) சுற்றி வருவோம்.. இம்முறை ஏற்காடு செல்லலாம் என்று முடிவெடுத்தோம்..

தமிழ் நாட்டில் நல்ல வெயில் என்றாலும் நாங்கள் புறப்பட்டு போகும்போது மழை சாரல் இருந்தது, அது ஏற்காட்டில் நன்றாக தெரிந்து, நல்ல குளிர்.. அருமையான கிளைமேட்.. சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உண்டு.. ஒவ்வொன்றாக சுற்றுவோம் என்று முடிவெடுத்து நாங்கள் முதலில் சென்றது பக்கோடா பாயின்ட்..

இங்கு இருந்து கொண்டு சுற்றிலும் பார்த்தால் சேலம் மாநகரமே ஒரு அழகிய தோற்றத்துடன் காட்சி அளிக்கும்.. காலையில் நல்ல குளிரில் அங்கிருந்து கொண்டு கை, கால் நடுங்க சுற்றிலும் பார்த்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.. இரவில் பார்த்தால் சேலம் முழுவதும் மின் ஒளி வெளிச்சத்தில் பயங்கர அழகாய் தெரியும்..,

ஏற்காடு - ஒரு அனுவபம்  IFX0WugTJqJGHV95W1JM+a007





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 30, 2014 12:49 pm

அடுத்து லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட் மற்றும் சில்ரன்ஸ் சீட்

இவை அடிப்படையில் ஏற்காடு மலை உச்சியில் அமைந்துள்ள இயற்கை பாறைகளின் தொகுப்பாகும்.
அந்த பாறைகள் இருக்கைகளை போல் அமைந்து மலை சாலைகளையும், மேட்டூர் அணை மற்றும் சேலத்தையும் நோக்கியவாறு அமைந்துள்ளன. கதைகளின் படி ஒரு ஆங்கிலேய பெண்மனி இந்த இடத்தில் அமர்ந்தவாறு சூரியன் மறையும் தருனத்தில் சுகமாக குளிர் காய்ந்து கொண்டு இயற்கையின் அழகான காட்சியை ரசித்துகொண்டிருந்ததால் இந்த பெயர் வந்தாகவும் கூறப்படுகிறது.
இங்கு அமைந்துள்ள தொலை நோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் பார்வையாளர்களின் வருகைக்கு தினமும் திறக்கப்பட்டிருக்கிறது.

இந்த தொலை நோக்கியில் நாம் நோக்கும் போது, மிகவும் தூரத்தில் உள்ளவைகளும் நமக்கு அடுத்து உள்ளதாய் தெரியும், மிகவும் அற்புதமான ஒரு இடம்., கோடை காலத்தில் இங்கு சென்றோமானால் வெகு நேரம் காத்திருந்து, வரிசையில் சென்றுதான் பார்க்க முடியும், நாங்கள் சென்றபோது ப்ரீயாக இருந்தது, அதிக நேரம் இங்கு செலவிட முடிந்தது..,

டெலஸ்கோப்பில் கீழே சேலத்தில் உள்ள மேட்டூர் டேம், டால்மியா, என அனைத்தையும் கண்ணருகே கொண்டு வந்து பார்த்தோம் செம அழகு. அருகிலேயே இருந்த ஜென்ட்ஸ் சீட் போக அங்கே இருந்து பசுமை நிறைந்த மலையை பார்க்க அழகிய கியூட் கவிதையாய் காட்சி தந்தது. நல்ல வியூ பாயின்ட்.

ஏற்காடு - ஒரு அனுவபம்  QZzEz7ucTrKAd3ZvOalt+19

ஏற்காடு - ஒரு அனுவபம்  DuoemQWqSBm4pXRibOIb+20



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 30, 2014 1:00 pm

படகு இல்லம் (போட்டிங் ஹவுஸ்)

இங்கு படகில் சவாரி செய்யலாம், என ஆசைப்பட்டு சென்றோம், ஆனால் அந்த ஏரியில் உள்ள நீரைப் பார்த்ததும், வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம், அழகான ஏரி இப்போது அசிங்கப் பட்டு விட்டது, ஆம்., முன்பெல்லாம் அதிலுள்ள நீரைப் பார்க்கும் போதே, நாம் படகு சவாரி போக ஆசை வரும், ஆனால் இப்போது அந்த நீர் மாசு பட்டு அதன் நிறம் மாறிக் கிடக்கிறது, (ஏற்காடு நிர்வாகமே கொஞ்சம் இதை கவனத்தில் கொண்டு சரியாக்கு, இல்லையில் ஏழைகளின் ஊட்டியில் படகு போக்குவரத்து, கொஞ்சம் மனதிற்கு நெருடலாய் அமையும்.)
ஏற்காடு - ஒரு அனுவபம்  CVOinOgmRg6oE29E1HmV+boat

படகு இல்லத்திற்கு நுழையும் வாயில் முன்பு, குதிரை ஏற்றம் செல்ல விருப்பமும், துணிவும் இருந்தால் உங்களுக்காகவே குதிரைகள் அதன் பாகனுடன் ரெடியாக இருக்கிறது, பத்து நிமிட பயணத்திற்கு இருநூறு முதல் வாங்குகிறார்கள்.. (இது ஆளுக்கு ஏற்றாற்போல் மாறும்)..




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 30, 2014 1:12 pm

ஏற்காடு போனிங்களா லீவ் லெட்டர் தரவே இல்லயே? உடுட்டுக்கட்டை அடி வ 


முழுதும் எழுதி முடிங்க பிறகு வாசிக்கிறேன் ஜாலி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 30, 2014 2:53 pm

அண்ணா பூங்கா:

இது சிறுவர்களுக்கான ஏரியா, அதே சமயம் காதலர்களுக்கும் இதுதான் நல்ல ஏரியா. கூட்டம் கூட்டமாய் காணலாம் காதலர்களை. நாங்கள் செல்லும்போது இரண்டு ஜோடிகள் மட்டுமே..ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து காதல் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அதே சமயம், பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்ற வாசகங்கள் ஆங்காங்கே தென் பட்டாலும் இங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் இல்லை. (உபயம் சரக்கடிக்கும் குடிமகன்கள்)

ஏற்காடு - ஒரு அனுவபம்  Xp3jxy2DQ4qmkZGx34vY+annaapark




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 30, 2014 3:00 pm

மான் பூங்கா:

மான் பூங்கா என்று பெயர் வைத்துக் கொண்டு, இங்கே செல்ல முப்பது ரூபாய் வாங்குகிறார்கள்.. ஆனால் உள்ளே இருப்பது என்னவோ மூன்றே மூன்று மான்கள் தான். மேலும், மயில், வெள்ளை எலி, வித விதமான புறாக்கள் ஆகியவற்றை காணலாம்.. இங்கு ஒரே நிமிடத்தில் போட்டோ எடுத்து கொடுக்கிறார்கள், அதுவும் சாவிக்கொத்தில் (கீ செயின்). நமது வீட்டினருடன் நின்று போட்டோ எடுத்து அதை கீ செயினில் அழகாக கட் செய்து கொடுக்கிறார்கள். இங்கு என்னை கவர்ந்தது ஒரு பெரிய மயில்தான்.. பெரிய தோகையுடன் அது கம்பீரமாய் நின்றது, மிகவும் ரசித்தேன்.

மேலும் குழந்தைகள் பார்த்து ரசிக்க யானை, டைனோசர், காண்டா மிருகம், சிங்கம் போன்ற விலங்குகளை நிறுவி உள்ளனர்.

ஏற்காடு - ஒரு அனுவபம்  1szva4D3Q1uRL8XCRJjy+a019

ஏற்காடு - ஒரு அனுவபம்  DSpSrJDR1WvOMZE8aLy6+a027

ஏற்காடு - ஒரு அனுவபம்  Cqo1V35iQqqVoPrCUAAw+a037



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 30, 2014 3:08 pm

ரோஜாத் தோட்டம்:

ஏற்காட்டில் அதிக நேரம் நடந்து கொண்டு, மனம் விட்டு பேசிக் கொண்டே செல்ல வேண்டுமா? எனது சாய்ஸ் இந்த ரோஜாத் தோட்டம்தான்.. மிகவும் அற்புதமான ஒரு இடம், நல்ல குளிரில் அங்குள்ள அனைத்து வகை பூக்களையும் ரசித்துக் கொண்டு, குழந்தை குட்டியுடன் சுற்றி வர ஏற்ற இடம்.. பச்சைப் பசேல் என அங்குள்ள அனைத்து செடிகளும், மலர்களும் புல் தரையும் காண்போர் மனதை கவரும்.. பூக்களை பறிக்காதீர் என்ற எச்சரிக்கைப் பலகை இருப்பினும் சில குறும்புக்கார பசங்க பறிப்பதையும் பார்க்க முடிகிறது. கொஞ்ச தூரம் நடந்து விட்டு ஜாலியாய் அங்குள்ள ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடலாம்..


ஏற்காடு - ஒரு அனுவபம்  Di7ToHtqTBmM01a9fGrK+a073

ஏற்காடு - ஒரு அனுவபம்  8pYMZfP5RFZHtTmWiZiT+a082





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 30, 2014 3:13 pm

ஏற்காடு - ஒரு அனுவபம்  UnIm4DQYQWGyfCxcGeM3+a083

(அன்பு மகள் நெஞ்சில் சாயும் தருணம், இதைவிட சந்தோசம் வேற என்னங்க வேண்டும்)

ஏற்காடு - ஒரு அனுவபம்  ZvcRciER9qAeolxTXSGT+a092

ஏற்காடு - ஒரு அனுவபம்  5Z02SviHR5S7DJvIS5qP+a096



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக