புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_m10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_m10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10 
1 Post - 14%
Manimegala
சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_m10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_m10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_m10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_m10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10 
11 Posts - 4%
prajai
சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_m10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10 
9 Posts - 4%
Jenila
சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_m10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_m10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_m10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_m10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_m10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10 
2 Posts - 1%
jairam
சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_m10சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 15, 2014 9:49 pm

சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை 201408151344161279_Cinkamena-flowing-Strangers-Expulsion-Paladin_SECVPFகொங்கு சீமையில் சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை வாழ்ந்த இடம் ஓடாநிலை. ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகே உள்ளது. அங்கு புதுப்பிக்கப்பட்டு அழகுற காட்சி அளிக்கிறது தீரன் சின்னமலை மணி மண்டபம். அங்கிருந்து அவரது பெருமைகளை பகிர்ந்து கொள்கிறார்கள், அறச்சலூர் நவரசம் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள்.

‘‘முன்பு ஒரு காலத்தில் ஓடாநிலை பகுதி காடாக இருந்ததாம். அப்போது சுற்றுவட்டார பகுதியினர் வேட்டைக்காக நாய்களுடன் இங்கு வருவார்கள். ஒரு முறை ஒரு வேட்டைக்குழுவினர் வந்தபோது முயல் ஒன்று ஓடியது. அதைப்பார்த்த வேட்டை நாய் முயலைப்பிடிக்க துரத்தியது. வேட்டைக்காரர்களும் பின்னால் ஓடினார்கள். மரணபயத்தில் தப்பித்தால் போதும் என்று நாலுகால் பாய்ச்சலில் முயல் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒரு இடத்தில் வந்ததும், அதுவரை பயத்தில் ஓடிய முயல் சட்டென்று நின்றது. அது துரத்திக்கொண்டு வந்த நாயை கோபத்துடன் பார்த்தது. அதைப்பார்த்த நாய் ஒரு வினாடி திகைத்து நின்று விட்டது. இதைப்பார்த்த வேட்டைக் காரர்களும் அதிசயித்துப்போனார்கள். முயல் ஓடாமல் நாயை எதிர்த்த இடமாதலால் இதற்கு ஓடாநிலை என்று பெயர் வந்ததாக எங்கள் ஊர் பெரியவர்கள் கூறுவார்கள்’’ என்றார் பிரியங்கா.

(ஓடாநிலையில் தமிழக அரசின் சார்பில் அழகிய மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. தீரன் சின்னமலையின் வழி வந்தவர்களுக்கு அது ஒரு கோவில். தீரன் வழிபட்ட கோவில் மணி மண்டபத்தின் பின்பக்கமாக உள்ளது.)

கோகிலா, தீரன் சின்னமலையின் பிறப்பை சொன்னார்.
‘‘இதோ இங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள பழையகோட்டையில் சர்க்கரை மன்றாடியார்-பெரியாத்தாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் தீரன்சின்னமலை. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி. இவரது பரம்பரையில் சின்னமலை என்ற பெயர் வைப்பது மரபு. இவருக்கு ஒரு சகோதரியும், நான்கு சகோதரர்களும் உண்டு.

தீரன் சின்ன மலையும், அவரது சகோதரர்களும் உடலையும், மனதையும் தைரியமாக்க போர் முறைகளை கற்றுத்தேர்ந்தனர். சிலம்பம், தடி வீச்சு, கவண் எறிதல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். இந்த காலகட்டத்தில்தான் கொங்கு மண்டலம் மைசூர் மன்னர் ஹைதர்அலியின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஒருமுறை ஹைதர் அலியின் வீரர்கள் கொங்கு மண்ணில் இருந்து வரிப்பணத்தை வசூல் செய்து கொண்டு சென்றனர். அப்போது தீரன் சின்னமலை தலைமையிலான இளைஞர்படையினர் காங்கயம் அருகில் சிவன்மலை பகுதியில் வந்து கொண்டிருந்தனர். வரிவசூலித்து செல்பவர்களை பார்த்ததும், தைரியத்துடன் அது என்ன? என்று கேட்டனர். அவர்கள் வரிப்பணம் என்பதை கூறியதும், தீரன் கோபமானார். நமது மண்ணில் வாழ நாம் வரி செலுத்துவதா? என்று கேட்டவர், வரிப்பணத்தை பறித்துக்கொண்டார்.
இந்த தகவல் ஹைதர் அலிக்கு தெரிவிக்கப்பட்டது. வரிப்பணத்தை பறித்த சின்னமலையை பிடிக்க படை அனுப்பினார் ஹைதர்அலி. படைவீரர்கள் வந்த நேரம், தீரன் சின்னமலையின் தங்கை பருவதத்துக்கு திருமணம் நடந்து கொண்டிருந்தது. எனவே ரகசியமாக தனது இளைஞர் படையுடன் வெளியேறிய சின்னமலை, வீரர்களை பாதி வழியிலேயே தடுத்து சிலம்பம் தடிவீச்சு, கவண் எறிதல் போர்க்கலைகள் மூலம் துரத்தி அடித்த£ர். இந்த காலக்கட்டத்தில் ஹைதர் அலி மரணம் அடைந்ததால் அவருடைய மகன் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார்.

ஆங்கிலேயப்படைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த திப்புசுல்தான் கொங்கு மண்ணில் இருந்து சின்னமலை தலைமையில் வீரர்களை தேர்ந்து எடுத்தார். திப்புசுல்தானின் படையில் இருந்த கொங்கு வீரர்கள் சித்தேஸ்வரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் வீரவேசமாக போரிட்டு திப்புசுல்தானுக்கு வெற்றி பெற்று கொடுத்தனர்.
வழக்கம்போல நேரில் போரிட்டு வெற்றி பெற முடியாத ஆங்கிலேயர்கள் துரோகத்தின் மூலம் திப்புசுல்தானை சாய்த்தனர். தலைவனை இழந்த படையினர் ஆங்காங்கே சென்றனர். ஆனால் சின்னமலையின் எண்ணம் மட்டும் வெள்ளையரை இந்த நாட்டைவிட்டு வெளியேற்றியே ஆகவேண்டும் என்று துடித்தது. மைசூர் படையில் இருந்த கொங்கு வீரர்களுக்கு மீண்டும் கடுமையான போர் பயிற்சி கொடுத்தார். ஏற்கனவே வீரம் விளையும் மண்ணாக இருந்த ஓடாநிலையை தனது களமாக தேர்ந்தெடுத்து அங்கே கோட்டை கட்டினார். முழுவதும் மண்ணால் கட்டி எழுப்பப்பட்டது. ஓடாநிலையை தலைநகராக கொண்டு தன்னை பாளையக்காரராக அறிவித்தார் சின்னமலை.
இது ஆங்கிலேயருக்கு அதிர்ச்சியை அளித்தது. பிற பாளையக்காரர்களை போல தந்திரத்தால் வெற்றி பெற நினைத்த ஆங்கிலேயர்கள் பேரம் பேசினார்கள். எதுவும் வெற்றி பெறாததால் 1801-ம் ஆண்டு கர்னல் மேக்ஸ்வெல் தலைமையில் படையை அனுப்பினார்கள். ஆனால் துப்பாக்கி குண்டுகளுக்கு அச்சப்படாத சின்னமலையின் படை அவரது மெய்க்காப்பாளனான கறுப்பசேர்வை தலைமையில் மேக்ஸ்வெல் படையை துரத்தி அடித்தது.

மீண்டும் 1802-ம் ஆண்டு மேக்ஸ்வெல் ஒரு பெரும்படையை திரட்டிக்கொண்டு வந்தான். கறுப்பசேர்வையின் சிறுபடையால் மேக்ஸ்வெல்லை தடுக்க முடியவில்லை. ஏற்கனவே அவமானத்தில் இருந்த மேக்ஸ்வெல் கிராமங்களையும் சூறையாடிக்கொண்டே அறச்சலூர் நோக்கி வந்து கொண்டிருந்தான். காங்கயம் அறச்சலூர் ரோட்டில் உள்ள தம்பட்டம் பாறையில் மறைந்திருந்த சின்னமலைப்படையினர் திடீரென்று ஆங்கிலேய படைக்குள் புகுந்து சிலம்பக்கலை மூலம் போர் நடத்தினார்கள். திகைத்து நின்ற ஆங்கிலேய தளபதி மேக்ஸ்வெல் முன்னால் சின்னமலை தோன்றினார். அவரது வாள் மின்னல் வேகத்தில் சுழன்று மேக்ஸ்வெல்லின் தலையை கொய்தது. இது ஆங்கிலேய அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

சின்னமலை என்ற சிறு தீபம், பெரும் நெருப்பாக மாறி வருவதை புரிந்து கொண்டனர். திடீரென்று கர்னல் ஹாரீஸ் என்பவர் தலைமையில் ஒரு படையை அறச்சலூர் நோக்கி அனுப்பினார்கள். குதிரைப்படை வேகமாக வந்து கொண்டிருந்தது. சின்னமலை பக்கமோ வீரர்கள் குறைவு. துப்பாக்கிகளுக்கு முன்னால் கவண் எறியும் வீரர்கள் என்ன செய்ய முடியும்?. ஆனால் சின்னமலை மனம் தளரவில்லை. அவர் திப்புவின் படையில் இருந்தபோது பிரெஞ்சு படைவீரர்களிடம் இருந்து வெடிகுண்டு செய்யும் முறையை கற்றிருந்தார். அதன்மூலம் வெடிகுண்டுகளும் தயாரித்து வைத்திருந்தார். கர்னல் ஹாரீசின் படை வேகவேகமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த நேரம் சின்னமலை அறச்சலூர் அறச்சாலையம்மன் கோவிலில் உச்சிகால பூஜையில் இருந்தார். அதை தெரிந்து கொண்ட ஹாரீஸ் கோவிலுக்கு வந்தார். ஆனால், சின்னமலையை காணவில்லை. கோபம் கொண்ட ஹாரீஸ் தனது வாளை உருவி, அம்மன் சிலையில் ஓங்கி வெட்டினான். சிலையில் சேதம் ஏற்பட்டது.

அகங்காரத்தால் கோவிலை விட்டு வெளியே வந்த ஹாரீஸ், தனது குதிரைப்படையுடன் முன்தொடர்ந்தான். அறச்சலூர் நத்தமேடு அருகே படை வந்துகொண்டிருந்தபோது தூரத்தில் ஒரு குதிரைவீரன் தன்னந்தனியாக வேகமாக வந்து கொண்டிருந்தான். அதைப்பார்த்த ஹாரீஸ் என்ன வென்று புரியாமல் நின்றான். படையும் நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் படை அருகே தன்னந்தனியாக குதிரையில் வந்த சின்னமலை ஹாரீசின் குதிரை மீது ஒரு கையெறி குண்டினை வீசினார். வெடித்துச்சிதறிய குண்டு தாக்கியதில் குதிரை சாய்ந்தது. மற்ற குதிரைகளும் ஆளுக்கொரு திசையாய் ஓட, உள்ளே புகுந்த சின்னமலை படை துரத்தி துரத்தி அடித்தது.

அந்த கோபத்தில் ஆங்கிலேயர்கள் ஓடாநிலை கோட்டையை தகர்த்தனர். தப்பி ஓடிய தீரன்சின்னமலை சகோதரர்களுடன் கருமலை அடிவாரத்தில் தலைமறைவாக இருந்தார். கறுப்பசேர்வை வாழத்தோட்டம் வலசில் இருந்தார். மெய்க்காப்பாளன் இல்லாத தீரன்சின்னமலை, சகோதரர்களோடு வசித்தார். அவருக்கு உணவு சமைக்கும் சமையல்காரர் நல்லான் என்பவரை ஆங்கிலேயே நயவஞ்சகப்படை பணத்தைக்காட்டி தன்பக்கம் இழுத்தது. அவன் மூலம் தீரன் சின்ன மலையையும், அவரது சகோதரர்களையும் நயவஞ்சகமாக பிடித்தது. தீரன் சின்னமலை உள்பட 4 பேரையும் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டனர்’’ என்று உணர்ச்சி பெருக்கோடு மாணவிகள் தீரன் சின்ன மலையின் வரலாற்றை பகிர்ந்து கொண்டார்கள்.



சிங்கமென பாய்ந்து அன்னியர்களை விரட்டிய வீரன் தீரன் சின்னமலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 15, 2014 10:15 pm

சிவா wrote: தீரன் சின்னமலை உள்பட 4 பேரையும் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டனர்’’ என்று உணர்ச்சி பெருக்கோடு மாணவிகள் தீரன் சின்ன மலையின் வரலாற்றை பகிர்ந்து கொண்டார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1079678

பதிவுக்கு நன்றி அண்ணா, இந்த சங்ககிரி எங்கள் ஊரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரம்தான்..
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக