புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_m10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_m10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_m10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_m10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_m10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_m10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_m10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_m10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_m10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_m10ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 28, 2014 12:24 pm

First topic message reminder :

ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், இருபத்தொண்ணுல இருந்து திண்டாட்டம்... கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் வெளிவந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அந்தப் பாடலின் கருத்து இன்றைக்கும் நூறு சதவிகிதம் நமக்குப் பொருந்தி வருகிறது.

ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தாலும் 20 தேதிக்குமேல் திண்டாட்டமாகவே இருக்கிறது நம்மில் பலருக்கு. 'கையில வாங்கினேன். பையில போடல; காசு போன இடம் தெரியலை’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடலை பாட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது நம் வாழ்க்கை. எனவே, 21-ம் தேதிக்குப்பின் யாரிடம் கடன் கேட்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்.

இந்தப் பிரச்னையிலிருந்து நாம் எப்படித் தப்பிப்பது? என நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

நடுத்தரக் குடும்பத்தின் பெரிய பிரச்னையே மாத கடைசியில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னையை எல்லாராலும் எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை பாயின்ட் பை பாயின்டாகச் சொல்கிறேன்.

1. சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட்டில் எழுதியதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதாவது, கல்விக் கட்டணம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு 5-ம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். சம்பளம் வந்தவுடன் இதைச் செலுத்திவிட வேண்டும். 15-ம் தேதிதானே, அன்றைக்கு கட்டினால் போதாதா என்று நினைக்கக் கூடாது. இப்படியே தள்ளிப்போட்டுக்கொண்டே போவது பிரச்னைகளை நாமே வரவழைத்துக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். இதனால் உரிய நேரத்தில் பணத்தைக் கட்டமுடியாத நிலைகூட நமக்கு வரலாம். அதனால் அபராதம் செலுத்தவேண்டிய சிக்கலும் வந்து சேரலாம். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் நாம் வழிவிடவே கூடாது.

2. சம்பளம் வந்ததும் அத்தியாவசி யமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும். வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது, இ.எம்.ஐ செலுத்துவது, மருத்துவம் போன்றவற்றுக்கான பணத்தை எந்தக் காரணம் கொண்டும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது.

3. கட்டாயம் செய்யவேண்டிய செலவுகளுக்கான பணத்தை சம்பளம் வந்தவுடன் ஒதுக்கிவைத்துவிட வேண்டும். இதுபோக, மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, அடிக்கடி ஹோட்டலுக்குப் போவது, ஷாப்பிங் செய்வது, சுற்றுலா போவது போன்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.

4. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன், ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி, ரிசர்வ் ஃபண்டாக வைத்துவிட வேண்டும். இதை எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை வைத்துவிடலாம். இந்தப் பணத்தை மிக மிக அவசர தேவைகள் ஏற்பட்டாலொழிய, 20-ம் தேதிக்கு முன்பு தொடவே கூடாது. இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய வுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டுவைப்பது ஆபத்பாந்தவனாக உதவும்.

ரிசர்வ் ஃபண்ட்தான் இருக்கிறதே என்று நினைத்து 20 தேதிக்குள் தாம்தூம் என்று செலவழிக்கக் கூடாது. அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் ஒருவேளை பயன்படவில்லை எனில், அதை அந்தக் கணக்கிலேயே அப்படியே வைத்துவிடலாம். இப்படி ஒவ்வொரு மாதமும் சேரும் பணத்தை நீண்ட நாள் சேமிப்பாக மாற்றலாம்.

5. எப்போதுமே குறைந்த அளவில் கடனை வைத்துக்கொள்வது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்க உதவும் கடன்கள் தவிர்த்து, பிற கடன்கள் அனைத்துமே தேவை இல்லாத கடன்கள்தான். இதைத் தவிர்த்து, வாகனக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன் அனைத்துமே அதிகமான வட்டி விகிதத்தில்தான் கிடைக்கிறது. இந்தமாதிரியான கடன்களை வாங்கும்போது அதிகமான வட்டியைச் செலுத்தவேண்டியிருக்கும். இதனாலும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு மாத கடைசியில் பிரச்னை உண்டாகும்.

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 Nav60c
6. மளிகைப் பொருட்களை தினம் தினம் வாங்குவதால் நமக்கு நஷ்டம்தான். இதற்குப் பதில் மொத்தமாக வாங்கினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். சம்பளம் வந்தவுடன் ஒரு மாதத்துக்குத்  தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடலாம். மொத்த விலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது ஒரு மாதத்துக்கு 200 - 300 ரூபாய் வரை மிச்சமாகும். தவிர, மாத கடைசியில் கையில் பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

7. கையிலிருக்கும் பணத்தை வைத்துதான் செலவுகளை முடிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, அடுத்த வாரம் 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் எனில், உடனே எங்கு ஷாப்பிங் போகலாம், என்ன பொருளை வாங்கலாம் எனத் திட்டமிடக்கூடாது. ஏனெனில், அந்தப் பணம் வராமல் போவதற்கு  வாய்ப்புள்ளது. எனவே, கையில் உள்ளதைவைத்து திட்டமிட்டு சிறப்பாக வாழ்வதே புத்திசாலித்தனம்.

8. எல்லாவற்றுக்கும் மேலாக, சிக்கனமான வாழ்க்கைமுறைதான் அடுத்தவரிடம் கையேந்தாத நிலைமையை நமக்குத் தரும். விரும்பியதையெல்லாம் அனுபவித்தால் பணம் செலவழியவே செய்யும். இதனால் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை வரவே செய்யும். எனவே, சிக்கனத்துக்கான வழிவகைகளை அவசியம் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது'' என்றார் சங்கர்.

கிடைக்கும் சம்பளத்தைத் திட்டமிட்டு செலவு செய்தால், மாத கடைசியில் பணமுடையா இருக்கே என்று கவலைப்படாமல், நிம்மதி யாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.

-முக நூல்
ந. விகடன்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 28, 2014 8:09 pm

//6. மளிகைப் பொருட்களை தினம் தினம் வாங்குவதால் நமக்கு நஷ்டம்தான். இதற்குப் பதில் மொத்தமாக வாங்கினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். சம்பளம் வந்தவுடன் ஒரு மாதத்துக்குத்  தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடலாம். மொத்த விலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது ஒரு மாதத்துக்கு 200 - 300 ரூபாய் வரை மிச்சமாகும். தவிர, மாத கடைசியில் கையில் பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.//

எங்க அம்மா எல்லாம் அந்த காலத்தில் வருஷ சாமான் வாங்குவா............இப்போ யாராவது அப்படி வாங்கராளா தெரியலை............அப்படி செய்தால் .......கொஞ்சம் பாடுதான்..........அதாவது வெயிலில் காயவைத்து எடுப்பது....................சேமிப்பது என்று ........ஆனால்  ரொம்ப ரொம்ப நல்லது.

இப்போ அது முடியாது எல்லோராலும் எனவே , லிஸ்ட் போட்டு மொத்தமாக வாங்கணும். மேலும் எங்கு மலிவாக கிடைக்கும் என்று பார்த்து வாங்கி, விலைகளை நோட்டில் குறித்து வைத்துக் கொள்ளணும்.

இங்கும் நான் ஒன்று சொல்லணும்...............நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போது, ஹபீப் என்று ஒரு கடை இல் மளிகை வாங்குவோம். நான் எப்போதும்போல எழுதி வைத்தேன் விலைகளை. 2 மாதம் கழித்து ஒன்று கவனித்தேன்................ஒவ்வொரு பருப்பும் மாதாமாதம் 25 பைசா ஏற்றி போட்டிருந்தார்கள் .............மறு முறை நான் கடைக்கு போகும்போது அது பற்றி கேட்டேன்...............அந்த கடை owner கொஞ்சம் அசந்து விட்டார்.... ....என்னை கொஞ்சம் காத்திருக்க சொன்னார்........... கும்பல் கொஞ்சம் குறைந்ததும் " எப்படி அம்மா பார்த்திங்க? " என்று கேட்டார்...............நான் கையுடன் கொண்டு சென்ற நோட்டு மற்றும் அவரின் விலைப்பட்டியல் இரண்டையும் காட்டினேன் .................."நான் இது போல follow செய்பவரை பார்த்ததே இல்லை" என்று சொல்லி சிரித்தார்..............."நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க போங்க" என்றார். நிஜமாகவே அப்புறம் வந்த 5 - 6 வருடங்களுக்கும் அவர்தான் எங்களின் மளிகை கடைக்காரர்..............எது விலை ஏறினாலும் போன் செய்து சொல்லிவிடுவார் ஜாலி ஜாலி ஜாலி


நான் இதையும் (அதாவது மளிகை நோட் புக் புன்னகை )86 லிருந்து maintain  பண்ணறேன் புன்னகை சாதரணமாக நாம் எல்லா சாமானும் எல்லா மாசமும் வாங்கமாட்டோம்..............சிலது 2 -3 மாதத்துக்கு ஒருமுறை வாங்குவோம்............அவற்றை குறித்து வைத்துக்கொண்டு மாற்றி மாற்றி வாங்கினால் நல்லது.

அப்படி வாங்குவது நம் பட்ஜெட்டை பதம் பார்க்காது புன்னகை கறிகாய் பழமும் அப்படித்தான். ஹோல் சேல் லில் எங்கு கிடைக்கும் என்று பார்த்து வாங்குவது நல்லது புன்னகை அதுவும் வாரா வாரம் வாங்கினால் நல்லது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 28, 2014 8:27 pm

//7. கையிலிருக்கும் பணத்தை வைத்துதான் செலவுகளை முடிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, அடுத்த வாரம் 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் எனில், உடனே எங்கு ஷாப்பிங் போகலாம், என்ன பொருளை வாங்கலாம் எனத் திட்டமிடக்கூடாது. ஏனெனில், அந்தப் பணம் வராமல் போவதற்கு  வாய்ப்புள்ளது. எனவே, கையில் உள்ளதைவைத்து திட்டமிட்டு சிறப்பாக வாழ்வதே புத்திசாலித்தனம்.//

ஆமாம் இதுவும் ரொம்ப முக்கியம்................இந்த தீபாவளி போனஸ் இருக்கே..............கடவுளே..................ரொம்ப தொல்லை புன்னகை வரும் என்று சொல்லும் தொகை வராது............நாம் முதலிலேயே செலவழித்துவிட்டு விழி பிதுங்குவோம். எனவே , ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் நண்பர்களே !

நாம் முதலில் போட்டு வைத்திருக்கும் வருட பட்ஜெட் இப்போதான் கைகொடுக்கும் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 28, 2014 8:35 pm

இந்த திரியில் உங்கள் பின்னுட்டமும் , வழிகாட்டலும் மிக அருமை .. ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 3838410834 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 28, 2014 8:40 pm

//8. எல்லாவற்றுக்கும் மேலாக, சிக்கனமான வாழ்க்கைமுறைதான் அடுத்தவரிடம் கையேந்தாத நிலைமையை நமக்குத் தரும். விரும்பியதையெல்லாம் அனுபவித்தால் பணம் செலவழியவே செய்யும். இதனால் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை வரவே செய்யும். எனவே, சிக்கனத்துக்கான வழிவகைகளை அவசியம் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது'' என்றார் சங்கர்.

கிடைக்கும் சம்பளத்தைத் திட்டமிட்டு செலவு செய்தால், மாத கடைசியில் பணமுடையா இருக்கே என்று கவலைப்படாமல், நிம்மதி யாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.//


ஆமாம்.....சிக்கனமே சகல நன்மை தரும் புன்னகை நாம் நியாயமாய் சம்பாதிக்கும் பணத்தில் மட்டுமே வாழணும் என்கிற மனஉறுதி வேண்டும் புன்னகை இப்படி திட்டமிட்டு செலவு செய்தால் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம் தான் புன்னகை

இன்னும் ஒன்று சொல்லணும் எனக்கு...............நான் ஒரு மாமி இடம் பார்த்து கற்றுக்கொண்டேன் இதை அதாவது மாசத்துக்குத்தேவையான மளிகை, பால் என்று எல்லாத்துக்கும் பணம் எடுத்து வைத்து விடுவார்கள் . மற்றபடி தினமும் வாங்கவேண்டிய கறிகாய், பழம், பூ வெற்றிலை என்று வாங்க அவர்கள் வீட்டில் 5 பேர் எனவே, தினமும் 10 ருபாய் என்று கணக்கிட்டு மாதம் 300 எடுத்துவைப்பார்கள் . இது 1987 இல் இப்போ நீங்கள் உங்கள் தேவையை பொருத்தும் விலைவாசியை பொறுத்தும் வேண்டியவைகளுக்காக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த மாதம் முழுவதுக்கும் அவ்வளவுதான். ஆனால் கண்டிப்பாக அது மிஞ்சும்.

ஏன் என்றால் நான் அப்படி எடுத்து வைத்துக்கொண்டிருப்பவள்......இன்னும் follow செய்கிறேன். IT WORKS ! அப்படி அதில் மீந்தால்.................மாசக்கடைசி இல் கண்டிப்பாக கை இல் பைசா இல்லாமல் இருக்காது..................இருக்கவே இருக்காது புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 28, 2014 8:41 pm

பாலாஜி wrote:இந்த திரியில் உங்கள் பின்னுட்டமும் , வழிகாட்டலும் மிக அருமை .. ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! - Page 3 3838410834 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மேற்கோள் செய்த பதிவு: 1083481

நன்றி பாலாஜி புன்னகை இது யாருக்கணும் பயன்பட்டால்..............எனக்கு ரொம்ப சந்தோஷம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 28, 2014 8:46 pm

ஈகரையின் மதி நிறைந்த நிதி மந்திரி மற்றும்
உணவுத் துறை மந்திரி கிருஷ்னாம்மா தான்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 28, 2014 8:50 pm

இன்னும் ஒன்று ..............சொல்லணும் எங்க அம்மா எப்பவும் நவராத்திரி, ஆடிவெள்ளி, தைவெள்ளி என்று பண்டிகை பெயர் போட்டு உண்டியல் வைத்திருப்பா...............சம்பளம் வந்ததும் அதில் பணம் போடுவா...............இதில் சேரும் பணத்தில் பண்டிகைக்கு வேண்டிய பூ, பூஜைக்கு வேண்டிய ரவிக்கை துணி போன்றவை வாங்குவா ( அம்மா நவராத்திரி 9 நாளும் லலிதா சகஸ்ரநாமம் சொல்லி விளக்கு பூஜை செய்வா , ரவிக்கை துணி வைத்து சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு தருவா.அதேபோலத்தான்  ஆடிமாதமும் தைமாதமும் எல்லோருக்கும் ரவிக்கை வைத்து தருவா புன்னகை ) மற்றபடி சாதாரணமாக வெள்ளிக் கிழமையும் , பௌர்ணமியும் பூஜை செய்வா............அப்படித்தான் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து எங்க 5 போரையும் வளர்த்தா புன்னகை

அதனால் மேலே சொன்னவற்றை மனதில் கொண்டு உங்களுக்குத்தேவையானபடி உங்களின் பட்ஜெட் ஐ அமைத்துக்கொண்டால்...............20ம் தேதி என்ன 29ம் தேதி  கூட நீங்க மத்தவாளுக்கு 10 ருபாய் கடனாய் தரலாம் புன்னகை அப்படி இருக்கும் உங்க நிடி நிலைமை !  ஜாலி ஜாலி ஜாலி

sorry one more point புன்னகை குழந்தைகளையும் நாம் இதில் சேர்த்துக்கணும். நாங்க போடும் பட்ஜெட்டை பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணா . அப்ப அவனுக்கு ஒரு 4 -5 வயது இருக்கும்.........."அம்மா வேண்டுமானா நான் பிஸ்கட் சாக்லெட் கேட்காம இருகட்டா ? அப்போ உனக்கு பஜட் ஓகே வா " என்றானே மழலை இல் புன்னகை நாங்க ஆடிப்போய்ட்டோம். " இப்போ வேண்டாம் கண்ணா, பிறகு பார்த்துக்கலாம்" என்றோம். என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் வளர்ந்ததும் கேட்பான்........."இன்னைக்கு டெய்லி இல் எவ்வளவு மீதி"? என்று புன்னகை

பிறகு அவன் ஒரு 8 வது படிக்கும்போதிலிருந்து ..................எங்காத்து மொத்த கணக்கு வழக்கும் அவனுக்கு சொல்ல ஆரம்பித்தோம்.................. அப்புறம் அவனையே பட்ஜெட் போடவைத்தோம்...............அது போல நீங்களும் உங்க குழந்தைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்............அது அவர்களின் பிற்காலத்துக்கு ரொம்ப உதவும் மேலும் அவாளுக்கே நம் அப்பா அம்மாவால் எது முடியும் எது முடியாது என்று தெரிந்து நடந்து கொள்வார்கள் புன்னகை

இவ்வளவு நேரம் பொறுமையாய் படித்ததற்கு நன்றி நண்பர்களே ! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 28, 2014 8:57 pm

krishnaamma wrote:இன்னும் ஒன்று ..............சொல்லணும் எங்க அம்மா எப்பவும் நவராத்திரி, ஆடிவெள்ளி, தைவெள்ளி என்று பண்டிகை பெயர் போட்டு உண்டியல் வைத்திருப்பா...............சம்பளம் வந்ததும் அதில் பணம் போடுவா...............இதில் சேரும் பணத்தில் பண்டிகைக்கு வேண்டிய பூ, பூஜைக்கு வேண்டிய ரவிக்கை துணி போன்றவை வாங்குவா ( அம்மா நவராத்திரி 9 நாளும் லலிதா சகஸ்ரநாமம் சொல்லி விளக்கு பூஜை செய்வா , ரவிக்கை துணி வைத்து சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு தருவா.அதேபோலத்தான் ஆடிமாதமும் தைமாதமும் எல்லோருக்கும் ரவிக்கை வைத்து தருவா புன்னகை ) மற்றபடி சாதாரணமாக வெள்ளிக் கிழமையும் , பௌர்ணமியும் பூஜை செய்வா............அதனால் மேலே சொன்னவற்றை கரத்தில் கொண்டு உங்களுக்குத்தேவையானபடி உங்களின் பட்ஜெட் ஐ அமைத்துக்கொண்டால்...............20ம் தேதி என்ன 29ம் தேதி கூட நீங்க மத்தவாளுக்கு 10 ருபாய் கடனாய் தரலாம் புன்னகை அப்படி இருக்கும் உங்க நிடி நிலைமை ! ஜாலி ஜாலி ஜாலி

இவ்வளவு நேரம் பொறுமையாய் படித்ததற்கு நன்றி நண்பர்களே ! அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1083490

உங்களுடைய சிறப்பான மறுமொழிகளுக்கு நாங்கள்தான் நன்றி சொல்லவேண்டும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 28, 2014 9:02 pm

யினியவன் wrote:ஈகரையின் மதி நிறைந்த நிதி மந்திரி மற்றும்
உணவுத் துறை மந்திரி கிருஷ்னாம்மா தான்
மேற்கோள் செய்த பதிவு: 1083489

நன்றி இனியவன்.......ஆனால் ரொம்ப பதவி கொடுத்திடீங்க போல இருக்கே புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 28, 2014 9:03 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:இன்னும் ஒன்று ..............சொல்லணும் எங்க அம்மா எப்பவும் நவராத்திரி, ஆடிவெள்ளி, தைவெள்ளி என்று பண்டிகை பெயர் போட்டு உண்டியல் வைத்திருப்பா...............சம்பளம் வந்ததும் அதில் பணம் போடுவா...............இதில் சேரும் பணத்தில் பண்டிகைக்கு வேண்டிய பூ, பூஜைக்கு வேண்டிய ரவிக்கை துணி போன்றவை வாங்குவா ( அம்மா நவராத்திரி 9 நாளும் லலிதா சகஸ்ரநாமம் சொல்லி விளக்கு பூஜை செய்வா , ரவிக்கை துணி வைத்து சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு தருவா.அதேபோலத்தான் ஆடிமாதமும் தைமாதமும் எல்லோருக்கும் ரவிக்கை வைத்து தருவா புன்னகை ) மற்றபடி சாதாரணமாக வெள்ளிக் கிழமையும் , பௌர்ணமியும் பூஜை செய்வா............அதனால் மேலே சொன்னவற்றை கரத்தில் கொண்டு உங்களுக்குத்தேவையானபடி உங்களின் பட்ஜெட் ஐ அமைத்துக்கொண்டால்...............20ம் தேதி என்ன 29ம் தேதி கூட நீங்க மத்தவாளுக்கு 10 ருபாய் கடனாய் தரலாம் புன்னகை அப்படி இருக்கும் உங்க நிடி நிலைமை ! ஜாலி ஜாலி ஜாலி

இவ்வளவு நேரம் பொறுமையாய் படித்ததற்கு நன்றி நண்பர்களே ! அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1083490

உங்களுடைய சிறப்பான மறுமொழிகளுக்கு நாங்கள்தான் நன்றி சொல்லவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1083492

நன்றி பாலாஜி புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக