புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
1 Post - 1%
bala_t
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
1 Post - 1%
prajai
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
5 Posts - 1%
prajai
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கல்யான் --புல்லும் ஆயுதம்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 27, 2014 10:27 am

மங்கல்யான் --புல்லும் ஆயுதம்

மங்கல்யான் --புல்லும் ஆயுதம் UjJdNkdtRHCy0OdJeXRR+vallavan_2127364f

குறைந்த செலவில் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதற்கு இந்தியா காட்டிய வழியை பிற நாடுகள் பின்பற்ற முற்படலாம்.

உள்ளபடி செவ்வாய்க்கு விண்கலம் ஒன்றை அனுப்பும் திறன் படைத்த ராக்கெட் இந்தியாவிடம் கிடையாது. ஆனாலும், மங்கள்யானை அனுப்பி இந்தியா உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) தகுந்த உத்தியைப் பின்பற்றியதன் மூலமே இது சாத்தியமாகியது.

இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மிகவும் நம்பகமானது என்பது 25 முறைகளுக்கும் மேல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்து நாம் உருவாக்கிவரும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் நம்பகத்தன்மை இனிதான் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டினால் பொதுவில் ஒரு விண்கலத்தை மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வரும்படி செலுத்த இயலும். ஒரு விண்கலம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு, செவ்வாய் நோக்கிச் செல்ல வேண்டுமானால், அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

ஆகவே, மங்கள்யான் திட்டம்பற்றி ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டபோது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை மேலும் சில முறைகள் செலுத்தி, அதன் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்ட பின்னர் அதைக் கொண்டு மங்கள்யானைச் செலுத்தலாம் என்று யோசிக்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு பிரச்சினை இருந்தது. செவ்வாய் கிரகத்துக்கு நினைத்த நேரத்தில் விண்கலத்தைச் செலுத்த இயலாது. பூமியும் செவ்வாயும் இருக்கும் நிலைகளைப் பொறுத்து 26 மாதங்களுக்கு ஒரு முறைதான் வாய்ப்பான சமயம் கிட்டும். 2013-ம் ஆண்டு நவம்பர் முதல் 2014 ஜனவரி வரையிலான காலம் வாய்ப்பான காலமாகும். அதை விட்டால் 2016 ஜனவரி வரை காத்திருந்தாக வேண்டும். இஸ்ரோ அதுவரை காத்திருக்க விரும்பவில்லை. மிக நம்பகமான பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டையே பயன்படுத்த முடிவுசெய்தது. அது உண்மையில் துணிச்சலான முடிவாகும்.

கிராவிட்டி அசிஸ்ட் உத்தி

மங்கள்யானை செவ்வாயை நோக்கிச் செலுத்துவதற்கான வேகத்தைப் பெறுவதற்கு பூமியின் ஈர்ப்புவிசையையே பயன்படுத்திக்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டது. அந்த உத்திக்கு கிராவிடி அசிஸ்ட் (Gravity Assist) என்று பெயர். இது ஒன்றும் புதுமையானது அல்ல. 2008-ம் ஆண்டில் சந்திரனுக்கு இந்தியாவின் சந்திரயான் அனுப்பப்பட்டபோது இதே உத்திதான் பயன்படுத்தப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 2013 நவம்பர் 5-ம் தேதி மங்கள்யான் உயரே செலுத்தப்பட்டது. அத்தோடு அந்த ராக்கெட்டின் வேலை முடிந்துவிட்டது. மங்கள்யான் பூமியைச் சுற்றி வர ஆரம்பித்தது. எல்லா விண்கலங்களிலும் அவசியமானபோது அவற்றின் வேகத்தை அதிகரிக்க ‘லாம்’ (LAM) எனப்படும் இன்ஜின் இடம்பெறுவது உண்டு. மங்கள்யானில் அவ்வித இன்ஜின் இடம்பெற்றிருந்தது. 2013 நவம்பர் கடைசி வரை மங்கள்யான் பூமியை ஆறு முறை சுற்றியது. அந்த ஆறு முறைகளிலும் மங்கள்யானில் இருந்த இன்ஜின் அவ்வப்போது சிறிது நேரம் இயக்கப்பட்டது. ஆகவே, ஒவ்வொரு முறையும் பூமியை நெருங்கும்போது மங்கள்யானின் வேகம் அதிகரித்துக்கொண்டே போயிற்று. மங்கள்யான் ஏழாவது முறை சுற்ற முற்பட்டபோது அதன் வேகம் மணிக்கு 38 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்துவிட்டிருந்தது. ஏழாவது முறை இன்ஜினை இயக்கியபோது வேகம் மணிக்கு 42 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்து மங்கள்யான் டிசம்பர் முதல் தேதி செவ்வாயை நோக்கிப் பயணித்தது.

வட்டப் பாதைக்கு மாறுதல்

சூரியனைப் பூமி சுற்றுவதுபோல மங்கள்யான் அதன் பின்னர் இன்ஜின் உதவியின்றி விண்வெளியில் சூரியனைச் சுற்ற ஆரம்பித்தது. பூமி சூரியனை மூன்றாவது சுற்றுவட்டப் பாதையில் சுற்றுகிறது. செவ்வாய் கிரகம் நான்காவது வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆகவே, மங்கள்யான் நான்காவது வட்டப் பாதைக்கு மாற வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் நெடுஞ்சாலையில் ஒரு லேனிலிருந்து அடுத்த லேனுக்கு மாற மெல்ல ஓரங்கட்டுவதுபோல மங்கள்யானின் பயணப் பாதையை அவ்வப்போது ஓரங்கட்ட வேண்டியிருந்தது. இறுதியில், செவ்வாயை நெருங்கிய கட்டத்தில் மங்கள்யானின் வேகம் குறைக்கப்பட்டு, அது கடந்த 24-ம் தேதி செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்தது.

முன்னுதாரணம் இல்லை

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ள ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியா இப்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், கிராவிடி அசிஸ்ட் உத்தியைப் பயன்படுத்தி செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பியுள்ள ஒரே நாடு இந்தியாதான்.

சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்ப சீனா, அமெரிக்கா ஆகியவை கடந்த காலத்தில் கிராவிடி அசிஸ்ட் முறையைப் பயன்படுத்தியுள்ளன. வேறு கிரகங்களுக்கு விண்கலத்தை அனுப்பவும் பிற நாடுகள் இந்த உத்தியைப் பயன்படுத்தியது உண்டு. ஆனால், எந்த நாடும் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்ப இந்த உத்தியைப் பயன்படுத்த முற்படவில்லை.

அதற்குக் காரணம் உண்டு. செவ்வாய்க்கு நேரடியாக விண்கலத்தை அனுப்புகிற அளவுக்கு அந்த நாடுகளிடம் சக்தி மிக்க ராக்கெட்டுகள் உள்ளன. அந்த வகையில் அமெரிக்காவின் நாஸாவினால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மாவென் விண்கலம் பூமியை ஒரு தடவை சுற்றிவிட்டு நேரே செவ்வாய்க்குக் கிளம்பியது.

புல்லும் ஆயுதம்

இனி, இந்த நாடுகள் குறைந்த செலவில் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதற்கு இந்தியா காட்டிய வழியைப் பின்பற்ற முற்படலாம். ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஜப்பான், சீனா ஆகியவற்றிடம் உள்ள ராக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஓரளவில் சிறிய ராக்கெட் என்றே சொல்ல வேண்டும். ஆனால், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல அந்த சிறிய ராக்கெட்டைப் பயன்படுத்தி செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை இந்தியா அனுப்பியிருப்பது என்பது மிகப் பெரிய சாதனையே. ஆகவேதான், இந்தியாவால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது என்று உலக நாடுகள் வியந்து நிற்கின்றன.

இதற்கிடையே இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி-2 வகை ராக்கெட் கடந்த ஜனவரியில் செலுத்தப்பட்டபோது சுமார் இரண்டு டன் கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக மேலே செலுத்தியது. அது தொடர்ந்து மேலும் சில முறை சோதிக்கப்பட இருக்கிறது. அடுத்தபடி யாக நாம் புதிதாக உருவாக்கிவரும் ஜி.எஸ்.எல்.வி-3 வகை அநேகமாக அடுத்த மாதக் கடைசியில் முதல் தடவையாக உயரே செலுத்திச் சோதிக்கப்படவிருக்கிறது. அது, மூன்று டன் எடையைச் சுமந்து செல்லக்கூடியது. அது வெற்றிபெற்றுவிட்டால் ராக்கெட் விஷயத்தில் இந்தியா சுயசார்பு நிலையை எட்டிப் பிடித்துவிடும்.

அடுத்து, 2018-ம் ஆண்டில் செவ்வாய்க்கு மேலும் ஒரு விண்கலத்தைச் செலுத்தத் திட்டம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி-3 ராக்கெட் மூலம் அனுப்புவதானால் நிறைய ஆராய்ச்சிக் கருவிகளுடன் கூடிய பெரிய விண்கலத்தை அதனுடன் அனுப்ப இயலும்.

நன்றி - என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர்,
தமிழ் ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Sep 27, 2014 12:34 pm

நல்ல பதிவு !!!
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மங்கல்யான் --புல்லும் ஆயுதம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 28, 2014 2:16 pm

மங்கல்யான் மனதிற்குள் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கும் .
நம்மளை பற்றி அறிவியல் செய்தி வெளிவந்த சமயத்தில் தான்
ஜெயலலிதா செய்தி வரவேண்டுமா ?
அவரை பற்றிய அவியல் செய்திகளை படிப்பதில் காட்டும் ஆர்வம் மிகுதியாக உள்ளதே .
நம்மை பற்றி தெரிந்து கொள்ள ரமணியன் /சரண்யாவை தவிர வேறு ஒருவரும் இல்லையே .அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 28, 2014 2:19 pm

உண்மைதான் ஐயா, பாவம் மங்கல்யான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 28, 2014 2:27 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
சோகம் சோகம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Sep 28, 2014 2:58 pm

T.N.Balasubramanian wrote:மங்கல்யான் மனதிற்குள் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கும் .
நம்மளை பற்றி அறிவியல் செய்தி வெளிவந்த சமயத்தில் தான்
ஜெயலலிதா செய்தி வரவேண்டுமா ?
அவரை பற்றிய அவியல் செய்திகளை படிப்பதில் காட்டும் ஆர்வம் மிகுதியாக உள்ளதே .
நம்மை பற்றி தெரிந்து கொள்ள ரமணியன் /சரண்யாவை தவிர வேறு ஒருவரும் இல்லையே .அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1091520

ஜெயலலிதா பற்றி செய்தி வந்தாலும், செவ்வாயை பார்த்த செயற்கை கோளை மக்கள் மறந்திடார். ஜெ.ஜெ. வெறும் அரசியல்வாதி, மங்கல்யான் வேற்றுகிரகவாசி ..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 28, 2014 4:53 pm

T.N.Balasubramanian wrote:மங்கல்யான் மனதிற்குள் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கும் .
நம்மளை பற்றி அறிவியல் செய்தி வெளிவந்த சமயத்தில் தான்
ஜெயலலிதா செய்தி வரவேண்டுமா ?
அவரை பற்றிய அவியல் செய்திகளை படிப்பதில் காட்டும் ஆர்வம் மிகுதியாக உள்ளதே .
நம்மை பற்றி தெரிந்து கொள்ள ரமணியன் /சரண்யாவை தவிர வேறு ஒருவரும் இல்லையே .அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1091520

ஹா...ஹா.........ஹா......நான் நேற்று மங்கள் யான் அனுப்பிய புகைப்படங்கள் போட்டேனே ......நீங்க
பாரதேளோ  ? ..........நல்ல  பகிர்வு ஐயா,  ..........நான் தலைப்பை பார்த்தேன் நேற்றே...............ஏதோ ஜோக் என்று நினைத்து தவிர்த்துவிட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 28, 2014 5:21 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:மங்கல்யான் மனதிற்குள் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கும் .
நம்மளை பற்றி அறிவியல் செய்தி வெளிவந்த சமயத்தில் தான்
ஜெயலலிதா செய்தி வரவேண்டுமா ?
அவரை பற்றிய அவியல் செய்திகளை படிப்பதில் காட்டும் ஆர்வம் மிகுதியாக உள்ளதே .
நம்மை பற்றி தெரிந்து கொள்ள ரமணியன் /சரண்யாவை தவிர வேறு ஒருவரும் இல்லையே .அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1091520

ஹா...ஹா.........ஹா......நான் நேற்று  மங்கள் யான் அனுப்பிய புகைப்படங்கள் போட்டேனே ......நீங்க
பாரதேளோ  ? ..........நல்ல  பகிர்வு ஐயா,  ..........நான் தலைப்பை பார்த்தேன் நேற்றே...............ஏதோ ஜோக் என்று நினைத்து தவிர்த்துவிட்டேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091560

பாக்காம இருக்க முடியுமா .போட்டோவிற்கு   பிறகு போட்டோ என செக்கசெவேனே ஒரே ரணகளமாயிடுத்தே
ஈகரை பூரா !
தலைப்பே பார்த்து ஜோக் என்ற அனுமானிப்பா ! ஹே கிருஷ்ணா ! நீதான் காப்பாத்தணும் !! ஜோக்குனா பிடிக்காதா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 28, 2014 5:29 pm

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:மங்கல்யான் மனதிற்குள் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கும் .
நம்மளை பற்றி அறிவியல் செய்தி வெளிவந்த சமயத்தில் தான்
ஜெயலலிதா செய்தி வரவேண்டுமா ?
அவரை பற்றிய அவியல் செய்திகளை படிப்பதில் காட்டும் ஆர்வம் மிகுதியாக உள்ளதே .
நம்மை பற்றி தெரிந்து கொள்ள ரமணியன் /சரண்யாவை தவிர வேறு ஒருவரும் இல்லையே .அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1091520

ஜெயலலிதா பற்றி செய்தி வந்தாலும், செவ்வாயை பார்த்த செயற்கை கோளை மக்கள் மறந்திடார். ஜெ.ஜெ. வெறும் அரசியல்வாதி, மங்கல்யான் வேற்றுகிரகவாசி ..
மேற்கோள் செய்த பதிவு: 1091534

அப்படியா , அப்படி தெரியவில்லை . அதனால் தான் , ஞாபக படுத்தவேண்டி வந்தது . வானியல் விஷயங்கள் தெரிந்து கொள்ளளாமே என்று நினைத்தேன் . மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று நினைத்துவிட்டேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Sep 28, 2014 5:36 pm

T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:மங்கல்யான் மனதிற்குள் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கும் .
நம்மளை பற்றி அறிவியல் செய்தி வெளிவந்த சமயத்தில் தான்
ஜெயலலிதா செய்தி வரவேண்டுமா ?
அவரை பற்றிய அவியல் செய்திகளை படிப்பதில் காட்டும் ஆர்வம் மிகுதியாக உள்ளதே .
நம்மை பற்றி தெரிந்து கொள்ள ரமணியன் /சரண்யாவை தவிர வேறு ஒருவரும் இல்லையே .அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1091520

ஜெயலலிதா பற்றி செய்தி வந்தாலும், செவ்வாயை பார்த்த செயற்கை கோளை மக்கள் மறந்திடார். ஜெ.ஜெ. வெறும் அரசியல்வாதி, மங்கல்யான் வேற்றுகிரகவாசி ..
மேற்கோள் செய்த பதிவு: 1091534

அப்படியா , அப்படி தெரியவில்லை . அதனால் தான் , ஞாபக படுத்தவேண்டி வந்தது . வானியல் விஷயங்கள் தெரிந்து கொள்ளளாமே என்று நினைத்தேன் . மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று நினைத்துவிட்டேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1091571


என்ன செய்ய அய்யா, சில முக்கிய விசயங்களை ஞாபகப் படுத்தினால் ஒழிய, மனதில் நிற்பதில்லையே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக