புதிய பதிவுகள்
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
28 Posts - 56%
heezulia
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
13 Posts - 26%
Dr.S.Soundarapandian
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
5 Posts - 10%
Abiraj_26
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
150 Posts - 19%
krishnaamma
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
24 Posts - 3%
sugumaran
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
3 Posts - 0%
prajai
மூலிகை வனம்-தொடர் Poll_c10மூலிகை வனம்-தொடர் Poll_m10மூலிகை வனம்-தொடர் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகை வனம்-தொடர்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 12:13 pm

அருகம்புல்

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே.... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.


அனைத்து நோய்க்கும் தீர்வான அருகம்புல் பற்றி அறிந்துகொள்வோம்...

'மூர்த்தி சிறிது... கீர்த்தி பெரிது’ என்பார்களே, அது அருகம்புல்லுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். சிறிய புல்லில், புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்கள்தான் எத்தனை... எத்தனை? மனிதனின் பிணி நீக்கும் அத்தனை மூலக்கூறுகளும் அருகம்புல்லுக்குள் இருப்பதால்தான் அனைத்து இடங்களிலும் இதை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது, இயற்கை. எல்லாவிதமான மண்ணிலும் வளரும் அருகு, சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. நீரில்லாமல் அருகம்புல் காய்ந்து போனாலும் போகும். ஆனால், பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் நீர் பட்டால், பட்டென்று செழித்து வளரத் தொடங்கிவிடும் தன்மை அருகுக்கு உண்டு. இந்தப் புல் உள்ள நிலம், மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்திலிருந்தும் காக்கப்படுகிறது. அதனால்தான் அருகம்புல்லால் வரப்பு அமைத்து நெல் சாகுபடி செய்கின்றனர்.

புல் வகைகளின் அரசன்!


அருகம்புல்லின் அற்புதத்தை எளிதாகப் புரிந்துகொள்ள ஓர் எடுத்துக்காட்டு. மங்கள நிகழ்வுகளின்போது சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அருகம்புல் செருகி வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. ஆனால், சாணத்தில் சாதாரணமாக இரண்டு நாட்களிலேயே புழுக்கள் உருவாகிவிடும். புல் வகைகளில் அரசு போன்றது அருகு. அதனால்தான், அந்தக் காலத்தில் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் ஜெபிப்பார்கள்.
'அருகே... புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ என்று முடிசூடும்போது மன்னர்கள் கூற வேண்டும் என்பதை மரபாகவே வைத்திருந்தார்கள். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லைப் போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நம்மிடம் இருக்கிறது. அது மூட நம்பிக்கையல்ல. கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால், ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள்.
அபார சக்தி கொடுக்கும் அருகு!

'அருகன்' என்றால் சூரியன் என்று பொருள். ஒலிம்பிக் வீரர்களுக்கெல்லாம் முன்னோடிகளாகத் திகழும் ஓட்டக்காரர்களான மான் மற்றும் முயல் இரண்டுக்குமான உந்துசக்தி, அவை தினமும் உண்ணும் அருகம்புல்தான். மிருகங்களில் பலமானவையும், வேகமானவையும் பெரும்பாலும் சைவம் உண்ணும் விலங்குகள்தான். யானை, குதிரை, காண்டாமிருகம் அனைத்தும் அருகம்புல் உண்பவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். விலங்குகளில் நாய், பூனை, கோழிகள்கூட நோய் வந்தால், அருகம்புல்லைக் கடித்துத் துப்புவதைப் பார்க்கலாம்.

இப்படி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் நிவாரணியை நிராகரித்துவிட்டு, மருத்துவமனைகளின் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறோம். 'அருகைப் பருகினால் ஆரோக்கியம் கூடும்’ என்கிறது, சித்த மருத்துவம். அதனால்தான் இதை 'விஷ்ணு மூலிகை’ என்று அழைத்தார்கள், சித்தர்கள். இதன் மருத்துவத் தன்மைகளை 'பால வாகடம்' என்ற நூலில் விளக்கியுள்ளார், அகத்தியர். பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை 'குருமருந்து' எனவும் அழைக்கிறார்கள்.

அருகம்புல் சாறு குடித்தால், அண்டாது நோய்!

மூலிகை வனம்-தொடர் Pv48b
காணும் இடமெல்லாம் காட்சி தரும் அருகம்புல்லை எடுத்து, நீரில் அலசி சுத்தப்படுத்தி... தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இது, நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய் களுக்கு மிகச்சிறந்த மருந்து. அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். இதுமட்டுமா, அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களைப் போலவே நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பைக் கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை நீங்கும் என நீள்கிறது, பட்டியல். புற்றுநோய்க்கும் நல்ல மருந்தாக உள்ளது.

இதன் அருமையை நம்மைவிட வெளிநாட்டினர்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில், அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும், தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம். இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்குப் போகும்போது, பாலில் அருகம்புல்லை தோய்த்து வாயில் விடுவர். 'பால் அரிசி வைத்தல்’ என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது.
இலவசமாக கிடைக்கும் ஊட்டச்சத்து!

தினமும் காலையில் குழந்தைகளுக்கு சத்து வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்து பானங்களைக் கொடுக்கிறோமே. அதை விட அதிக ஊட்டசத்து மிக்க பானம் அருகம்புல் சாறு. தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, நீரில் கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக் காய்ச்சி, இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக உட்கொண்டு வந்தால், எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறிவிடும்.

கிரீன் பிளட்..!

அருகம்புல்லை நீரில் இட்டுக் காய்ச்சி, பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும். அனைத்தையும்விட முக்கியமானது அருகம்புல் சாறு... மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பான். இதற்கு இணையாக ரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருந்து ஆங்கில மருத்துவத்தில்கூட இல்லை எனலாம். அதனால்தான் அருகை, 'கிரீன் பிளட்’ என அழைக்கிறார்கள், வெளிநாட்டினர். ரத்த மூலம் உள்ளவர்கள், ஒரு கைப்பிடி அருகை அரைத்து, 200 மில்லி காய்ச்சாத ஆட்டுப் பாலில் கலந்து காலைவேளையில் மட்டும் குடித்து வந்தால், மூன்றே வாரங்களில் கட்டுப்படும். இதைத் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால், நரம்புத்தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
'ஆல்போல் தழைத்து... அருகு போல் வேரூன்றி... ஆரோக்கியமாய் வாழ்வோம்.
மூலிகை வனம்-தொடர் Pv48c


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 12:18 pm

ஆவாரை
மூலிகை வனம்-தொடர் Pv30a
ஆவாரை!

புராணங்களில் சொல்வதுபோல் ஏழு கடல், ஏழு மலைகளுக்கு அப்பால் கிடைப்பதல்ல மூலிகைகள். சாதாரணமாக, நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதையில், கைக்கெட்டும் தூரத்திலேயே ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருக்கின்றன. அந்த வகையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மஞ்சள் நிறப் பூக்களுடன் புன்னகைப்பவை... ஆவாரை. வறண்ட நிலத்தில் தான் வளர்ந்தாலும், மனிதர்களின் நோய்களை நீக்கி நீண்ட ஆயுளை கொடுக்கும் அற்புத மூலிகை ஆவாரை. இந்தச் செடி இருக்கும் இடங்கள்தான், உண்மையில் ஆரோக்கிய மையங்கள். இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலையும் மனித மனதுக்கு, செலவில்லாமல் கையருகே கிடைக்கும் இதன் அருமை தெரிவதில்லை. மனித சமுதாயத்துக்கு ஆவாரை அள்ளி அள்ளித் தரும் பலன்கள் சொல்லி மாளாது.


புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல்!

கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள், வெயிலின் சூட்டைத் தவிர்க்க, ஆவாரம் இலைகளை தலையில் வைத்துக் கட்டிக் கொள்வார்கள். இக்காட்சியை இன்றைக்கும் பார்க்கலாம். சூட்டிலிருந்து உடலைக் காத்து குளிர்ச்சியை அளிப்பதில் ஆவாரையின் பங்கு அலாதியானது. உலகை உலுக்கும் கொடிய நோய்களான புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் இரண்டுக்கும் எதிரான ஆற்றல் கொண்டது, ஆவாரை. அதனால்தான் உலகின் பல நாடுகளில் கேன்சருக்கான சின்னங்களில் ஆவாரம் பூ இடம் பிடித்திருக்கிறது. குறிப்பாக, 'கனடா கேன்சர் சொசைட்டி’ சின்னத்தில்இதைத் தெளிவாகப் பார்க்கலாம். உலகின் பல நாடுகளில் விளையும் ஆவாரையைவிட, நம் மண்ணில் விளையும் ஆவாரைக்கு ஆற்றல் அதிகம் என்கிறார்கள்.

ஆவாரை நீர்!

இன்றைக்கு தேநீர் அருந்தாமல் நம்மால் இருக்க முடியவில்லை. அதனால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்தப் பலனும் இல்லை. பணம் செலவாவதுதான் மிச்சம். ஆனால், அதைவிட ருசியான, மிகமிக செலவு குறைந்த, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆவாரை நீரைப் பருகிப் பாருங்கள். பிறகு, அதை மட்டும்தான் பருகுவீர்கள். கையளவு ஆவாரம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, அதனுடன் தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து அருந்தினால்... உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன், சரும நோய்களும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம்.
'கிரீன் டீ’ என்ற பெயரில் இன்றைக்கு அதிகமாக விற்பனையாகும் தேநீரை விட, ஆயிரம் மடங்கு அற்புதமானது, ஆவாரை நீர். இது மட்டுமல்ல... ஆவாரை இலையைப் பறித்து, கல்லில் வைத்து அரை குறையாகத் தட்டி, தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, கண்களின் வழியே வெளியேறுவதை உணர முடியும். தலை முடி வளர, உடலை மினுமினுப்பாக்க, உடல் துர்நாற்றத்தைத் துரத்த... என அனைத்துக்கும் ஆவாரை பயன்படுவதால் இதனை, 'சகலநோய் தீர்க்கும் சர்வரோக நிவாரணி’ என்கிறார்கள்.

இவ்வளவு அற்புதங்களைச் செய்வதால்தான் 'ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டோ’ எனச் சொல்லி வைத்தார்களோ நம் முன்னோர்கள்.
இனி, ஆவாரையை ஆராதிப்போம்.

சர்க்கரை கட்டுக்குள் வரும்!
ஆவாரையின் மகத்துவத்தைப் பேசிய கோயம்புத்தூரைச் சேர்ந்த சுவாமி சுந்தரானந்தர், ''பூ, காய், இலை, பட்டை, வேர் ஆகிய ஐந்தும் சேர்ந்ததை 'ஆவாரைப் பஞ்சாங்கம்’ என்கிறார்கள். இவற்றை சம அளவு எடுத்து, பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டு வெந்நீர் பருகி வந்தால்... நீரிழிவு, உடல் சோர்வு, நா வறட்சி, தூக்கமின்மை போன்ற பல நோய்கள் குணமாகும். ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் காயவைத்து, பொடியாக்கி, கஷாயம் செய்து அருந்தி வந்தால்... சர்க்கரை கட்டுக்குள் வரும். ஆவாரம் பூ, குப்பைமேனி இலை, பூவரசு இலை, செம்பருத்தி இலை ஆகிய நான்கையும் சமஅளவு எடுத்து அரைத்து, முழங்காலுக்கு கீழே பூசி வந்தால்... நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கால்பகுதி உணர்ச்சி பெறும்' என்றார்.



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 2:45 pm

குப்பைமேனி

'குப்பையில் கிடக்கும் கோமேதகம்’, 'சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனச் சொல்வார்களே... அதற்கு முற்றும் பொருத்தமானது, குப்பைமேனி. வாய்க்கால், வரப்பு, சாலையோரங்கள், குப்பைமேடுகள் எனக் காணும் இடங்களிலெல்லாம் துளிர்த்துக் கிடக்கும் குப்பைமேனி... மனிதனைக் காக்கும் அற்புத மூலிகை என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

மூலிகை வனம்-தொடர் Tp22a

குப்பையான மேனியைக் குணப்படுத்தும்!


'உணவே மருந்து... மருந்தே உணவு’ எனச் சொன்ன முன்னோர்களின் அறிவை, கை கொள்ளாததன் விளைவு, பல்வேறு பிணிகளால் பின்னப்பட்டுக் கிடக்கிறது, நம் உடம்பு. இப்படி, நோயால் குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால்தான் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்திருக்குமோ... என ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறது, இதன் பயன்பாடு. குப்பைமேடுகளில் வளர்வதால்... இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

பூனைவணங்கி!

இதை, 'மார்ஜால மோகினி’ என வடமொழியில் அழைக்கிறார்கள். 'மார்ஜாலம்’ என்றால் பூனையைக் குறிக்கும்.

'பூனைவணங்கி’ என்ற பெயரும் இதற்கு உண்டு. 'குப்பைமேனியில் உள்ள கந்தகச்சத்து, பூனையின் கண்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதால், அதன் அருகில் வரும்போது பூனையானது கண்களை மூடிக் கொள்ளும். அதேசமயம், ஆரோக்கிய குறைவான உணவை உண்பதால் பூனைகளுக்கு ஏற்படுகிற நஞ்சினை நீக்குவதற்கான மருந்து, குப்பை மேனியில்தான் இருக்கிறது. எனவே, கந்தகத் தாக்குதல் குறைவாக இருக்கும் இரவு வேளைகளில் சென்று, குப்பைமேனி இலைகளை பூனைகள் உண்ணும். அதனால்தான் பூனைவணங்கி என்று பெயர் வந்தது' என்று இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.

குப்பைமேனி சிறுசிறு கிளைகளுடன் உள்ள அடர்த்தியான செடி. இலையின் ஓரங்கள் ரம்பத்தின் பற்களைப் போன்று இருக்கும். பச்சை நிறத்தில் மிளகு போன்ற காய்கள் இதில் காய்க்கும். இது, விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் இலைகளின் அமைப்பே வித்தியாசமானது. மாற்றடுக்கில் அமைந்துள்ளதால், உச்சிவெயில் நேரத்தில் ஓர் இலையின் நிழல், அடுத்த இலையின் மீது விழாது.

குடற்புழு நீக்க மருந்து!

குப்பைமேனி குணமாக்கும் நோய்களின் எண்ணிக்கை ஏராளம். இதன் இலை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன்பாடு நிறைந்தவை. குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி, அப்படியே நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கி உலர வைக்க வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, ஆற வைத்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்... பேதியாகி மலத்துடன் வயிற்றுப் பூச்சிகள், கிருமிகள் வெளியேறிவிடும். இலையை பொடி செய்து சாப்பிட்டும் பூச்சிகளை வெளியேற்றலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான அற்புதத் தீர்வு, இதன் இலையும், வேரும். குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கு ஆங்கில மருந்துக்கடையில் ஒரு குப்பியை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதைவிட குப்பைமேனி இலையை அரைத்து சாறெடுத்து, குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தாலே போதுமானது.
மூலிகை வனம்-தொடர் Tp22d
மூலம் முற்றிலும் குணமாகும்!

வயது வித்தியாசமின்றி பலரும் இன்று மூல நோயால் அவதிப்படுகிறார்கள். காரமான உணவு உண்பது; சரிவிகித உணவாக இல்லாமல் புரதம் நிறைந்திருக்கும் உணவை மட்டும் உண்பதால் ஏற்படும் மலச்சிக்கல் ஆகியவைதான் மூல நோய்க்கு முக்கியமான காரணங்கள். இந்நோய்க்கு எளிதான தீர்வு, குப்பைமேனி.
அறுவை சிகிச்சைக்கும் அசைந்து கொடுக்காத மூலத்தை, நிர்மூலமாக்கும் ஆற்றல் குப்பைமேனிக்கு இருக்கிறது. குப்பைமேனியை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி சூரணம் செய்து, 5 கிராம் அளவு எடுத்து பசு நெய்யோடு சேர்த்து 48 நாட் களுக்கு காலை, மாலை என இருவேளைகளும் உண்டு வந்தால்... ஆசன மூலம், பக்க மூலம், சிந்தி மூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலை மூலம், கொடி மூலம், கண்டமாலை என எட்டு வகையான மூல நோய்களும் கட்டுப்படும்.
மூலிகை வனம்-தொடர் Tp22c
தோல் நோய் குணமாகும்!

ஆஸ்துமா, சைனஸ்... போன்ற நோய்களைக் குணமாக்கும் ஆற்றலும் குப்பைமேனி இலைக்கு உண்டு. இது, உடலில் வெப்பத்தை உண்டாக்கி, நாள்பட்ட கோழையைக்கூட வெளியேற்றி விடும். இலையை உலர்த்தி சூரணம் செய்து, சின்ன நெல்லிக்காய் அளவு தேனில் கலந்து கொடுத்து வந்தால்... இருமல், இரைப்பு, கபம் குணமடையும். சொறி, சிரங்கு போன்ற பல்வேறு தோல் நோய்களுக்கு, குப்பைமேனி தைலத்தை
15 நாட்கள் தொடர்ந்து தடவி வந்தால்... 'ஸ்கின் பிராப்ளமா... எனக்கா?’ எனக் கேட்கும் அளவுக்கு 'அடடா’ மாற்றத்தை உணர்வீர்கள். இப்படி, தலைவலி, வாத நோய், படுக்கைப் புண்கள்... என இது தீர்க்கும் நோய்கள் ஏராளம், ஏராளம். தான், குப்பையில் வளர்ந்தாலும் மனிதர்களின் நோய்களை அறுக்கும் குப்பைமேனி ஆராதிக்கப்பட வேண்டிய ஒன்று.


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 2:49 pm

நாயுருவி
சிறுநீர் சிக்கல்களுக்கு..செலவில்லாதத் தீர்வு...!

மூலிகை வனம்-தொடர் Pv52e
வீதியெங்கும் நாதியற்றுக் கிடக்கும் நாயுருவி பற்றி அறிந்து கொள்வோம்...

கடுமையான பாறையையும் தனது மெல்லிய வேரால் துளைக்கும் இயற்கை அதிசயம் கொண்ட மூலிகை நாயுருவி. இப்படி மலைப்பாறைகளில் துளையிட்டு வளர்வதால், இதற்கு 'கல்லுருவி’ என்ற பெயரும் உண்டு. தரிசு நிலங்கள், வேலியோரங்கள், காடு, மலைகள் என அனைத்துப் பகுதிகளிலும் தானே வளரும் நாயுருவி... முட்டை வடிவ இலைகளைக் கொண்டிருக்கும். நெற்கதிர் போல் நீண்டிருக்கும் கிளைகளில், அரிசி போன்ற முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தச் செடியின் அருகில் செல்லும் விலங்குகள், மனிதர்களின் உடல் மற்றும் உடைகளில் ஒட்டிக் கொள்ளும் இதன் விதைகள், வெவ்வேறு இடங்களில் விழுந்து பரவுகின்றன.
மூலிகை வனம்-தொடர் Pv52b

இயற்கைப் பற்பசை..!

'உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?, எலுமிச்சை இருக்கா?’ என்று கேட்டு பல பற் பசை நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. இந்த பற்பசைகளுக்கெல்லாம் முன்னோடி, நாயுருவிதான். முற்காலத்தில் மனிதர்கள், பற்பசை மற்றும் பல்துலக்கியாக நாயுருவி வேரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த வேரால் பல் துலக்கினால், பற்கள் கறைகள் நீங்கி வெண்மையாவதுடன், பாக்டீரியா போன்ற கிருமிகளும் ஒழிந்துவிடும். கடுமையான பல்வலி இருப்பவர்கள்... மிருதுவான நாயுருவி வேருடன், சிறிது கடுகு எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால், வலி பறந்தோடி விடும்.

'தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) இதில் பல் துலக்கினால்... முகம் பிரகாசமடையும். பேச்சு தெளிவாகும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் இருந்து அகலும். ஆனால், இந்த நாட்களில் டீ, காபி, புகை, புலால் கூடாது என்கிறது’ சித்த மருத்துவம்.

யானை பலம் கிடைக்கும்!

நாயுருவி அரிசிக்கு பசியைப் போக்கும் அபாரமான ஆற்றல் இருக்கிறது. இதன் அரிசியை சமைத்து உண்டு வந்தால், பசியே எடுக்காது. ஒரு வாரம் ஆனாலும், உடல் சோர்வின்றி சுறுசுறுப்பாக இருக்கும். அத்துடன் உடம்பு இரும்பு போல உறுதியாகும். 50 கிராம் நாயுருவி அரிசியை உண்டால், இரண்டுவேளை பசியைத் தாங்கலாம். இந்தச் சோற்றை உண்டு பசியே எடுக்காவிட்டால், மிளகு, சீரகம் இரண்டையும் வறுத்து தண்ணீரில் காய்ச்சிக் குடித்தால் பசியெடுக்கும். மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து, ஒன்றாக அரைத்துப் பொடியாக்கி, அதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, கஞ்சி போல செய்து தினமும் உண்டு வந்தால்... யானை பலத்தையொத்த அபார உடல் திறனும், வனப்பும் கிடைக்கும்.
மூலிகை வனம்-தொடர் Pv52c

அட்டகர்ம மூலிகை!

காடுகளில் சுற்றித் திரியும் சித்தர்கள், இதன் வேர்களில் பல் துலக்கி, இதன் அரிசியை உண்டு பல நாட்கள் பசியில்லாமல் திரிவார்கள் என்பதால்... இதற்கு 'மாமுனி’ என்ற ஒரு பெயரும் இருக்கிறது. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்விகத் தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை 'அட்டகர்ம மூலிகை’ எனக் கொண் டாடுகிறார்கள், சித்தர்கள். நாயுருவியில் ஆண், பெண் இரண்டும் உண்டு. பச்சை நிற இலை, தண்டுகளை உடையது, ஆண் நாயுருவி எனவும்; சிவப்பு நிறத் தண்டு, பாகங்களைக் கொண்டது பெண் நாயுருவி எனவும் அழைக்கப்படுகிறது. இதை 'செந்நாயுருவி’ என்றும் அழைப்பார்கள். இந்த செந்நாயுருவியில்தான் மருத்துவ குணங் கள் அதிகம்.

மனநோய்க்கு மருந்து!

''இதன் வேர் மிகவும் வசியத்துவம் மிக்கது. நமது முன்னோர்கள், நாயுருவி வேரை வசிய மை தயாரிக்க, பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் வேரை பால் விட்டு அவித்து, உலர்த்திப் பொடியாக்கி... தினமும் இரண்டு கிராம் அளவு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர, மனநோய்கள், தூக்கமின்மை, படபடப்பு, சித்த பிரமை குறைபாடுகள் நீங்கும்'' என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

கண்ணாடியைக் கடிக்கலாம்!

100 கிராம் நாயுருவி இலையை, 500 மில்லி தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, கொதிக்க வைத்து இறக்கி ஆற வைத்து... எண்ணெயில் உள்ள இலைகளை எடுத்து விழுதாக அரைத்து, மீண்டும் எண்ணெயில் கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை ஆறாதப் புண்கள், வெட்டுக் காயங்கள், சீழ்வடியும் புண்களின் மீது பூசி வந்தால்... உடனடி பலன் கிடைக்கும். இதன் இலைக்கு கண்ணாடியை அறுக்கும் தன்மையும் உண்டு. சித்துவேலைகள் செய்பவர்கள், இதன் இலையை மென்று விழுங்கி, தாடையில் கொஞ்சத்தை அடக்கிக் கொண்டு, கண்ணாடிகளைக் கடித்து துப்புவார்கள். ஆனால், இதைச் செய்ய முறையான பயிற்சி வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மூலிகை வனம்-தொடர் Pv52d

சிறுநீர் பிரச்னைக்கான தீர்வு!

சிறுநீர் சிக்கலுக்கும் செலவில்லாதத் தீர்வு நாயுருவி. கதிர்விடாத இளம்செடியின் இலையை இடித்து சம அளவு நீர் கலந்து காய்ச்சி... 3 மில்லி அளவு தினமும் மூன்றுவேளை குடித்து, அத்துடன் பால் அருந்தி வந்தால் தடைபட்ட சிறுநீர் பிரியும். சிறுநீரகம் சிறப்பாகச் செயல்படும். நாயுருவி இலை, காராமணி இரண்டையும் சம அளவு எடுத்து மையாக அரைத்து, நீர்கட்டுள்ளவர்களுக்கு தொப்புள் மீது பற்று போட்டால்... நீர்கட்டு நீங்கும். இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து, சமைத்து வாரம் இரு முறை சாப்பிட்டால்... நுரையீரலிலுள்ள சளி வெளியேறும். இருமல் குறையும். இலையுடன், சம அளவு துளசி இலை சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு, தினமும் இருவேளை கொடுத்து வந்தால், வண்டு, பூச்சிக்கடி குணமாகும்'' என நாயுருவியைக் கொண்டாடு கிறது, சித்த மருத்துவம்.

மலச்சிக்கல், செரியாமை, பால்வினை நோய்கள், தோல் அரிப்பு, மூலம், தொழுநோய்... என மனித குலத்தின் நோய்களைச் செலவில்லாமல் விரட்டும் மருந்துக்கடையான நாயுருவி, அனைவரின் இல்லங்களிலும் இருக்கவேண்டிய ஒன்று.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 2:53 pm

அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி பற்றி அறிந்து கொள்வோம்...

'இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே!'

- கண்ணதாசனின் இந்தப் பாடல் வரிகளின்படி, வீதியெங்கும் விளைந்து கிடக்கும் விலையில்லா மருந்துகளான மூலிகைகளைப் புறக்கணித்ததன் விளைவுதான், புற்றுநோய் உள்ளிட்ட ஆட்கொல்லி நோய்கள் மனிதகுலத்தை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நோய்க்களுக்கான தீர்வைத் தேடுவதில்கூட சமுதாய அந்தஸ்து பார்க்கும் மக்களின் மனநிலையைப் பயன்படுத்தி, சாதாரண காயங்களுக்குக்கூட, ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறந்து விடுகின்றன, பல மருத்துவமனைகள். இத்தகைய மாயா மனநிலையை ஒதுக்கிவிட்டு, செலவில்லாத எளிய தீர்வு ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டால், உங்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்து வைக்க காத்திருக்கின்றன, விதவிதமான மூலிகைகள். அந்த வகையில் ஈரமான இடங்களிலும், விளைநிலங்களிலும் தானாக விளைந்து கிடக்கும் மூலிகைதான், அம்மான் பச்சரிசி. இதில், சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரண்டு வகைகள் இருக்கின்றன. இரண்டின் மருத்துவ குணங்களும் ஒன்றுதான்.
மூலிகை வனம்-தொடர் Pv23b

சிறப்பு வாய்ந்த சித்திரபாலாடை..!

பெயரைத் தவிர, அரிசிக்கும் இந்தச் செடிக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை. இது ஓர் அற்புதமான மூலிகை. பூண்டு இனத்தைச் சேர்ந்த இது, குற்றுச் செடியாகவும், தரையில் படர்ந்து வளர்ந்து காணப்படும். சிவப்பு, பச்சை நிறத்தில் எதிரெதிராக அமைந்த சொரசொரப்பான ஈட்டி போன்ற முனைகளை உடைய இலைகளை உடையது. சிறு பூக்கள் தொகுப்பாக அமைந்திருக்கும். இதன் எந்தப் பகுதியைக் கிள்ளினாலும் பால் வரும் என்பதால், 'சித்திரபாலாடை' எனவும் அழைக்கிறார்கள், சித்தர்கள். இந்தப்பால் மருத்துவ குணம் வாய்ந்தது. இச்செடியில் விதைகள் மூலமாக இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

'காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்ந்த தினவிவைகள் தேகம்விட்டுப்பேர்ந் தொன்றாய்
ஓடுமம்மான் பச்சரிசிக் குண்மை இனத்துடனே
கூடுமம்மா னொத்த கண்ணாய் கூறு!’ (அகத்தியர் குணபாடல்)


இதன் இலைச் சாறை உட்கொண்டால் மலச்சிக்கல், உடல் மெலிவு, படை, நமைச்சல் ஆகியவை தீரும், என்கிறது சித்தர் பாடல். இதன் பாலுக்கு நெருப்புப் புண், நகச்சுத்தி ஆகியவற்றை ஆற்றும் குணமுண்டு. இப்படி பல்வேறு நோய் தீர்க்கும் குணங்கள் இதில் இருந்தாலும், இதன் சில பயன்பாடுகள் அதிமுக்கியமானவை.

மகத்துவம் வாய்ந்த மரு அகற்றி!


இன்றைக்கு பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்னை மரு. உடம்பில் சிறு கட்டிகளைப் போல தொங்கிக் கொண்டிருக்கும் இந்த மருக்களை வேரோடு, உதிர வைக்கும் தன்மை அம்மான் பச்சரிசிப் பாலுக்கு உண்டு. இதன் தண்டைக் கிள்ளினால் வரும் பாலை, மருக்களின் மேல் வைக்க வேண்டும். மருவின் அளவைப் பொருத்து, மூன்று நாட்கள், ஏழு நாட்கள் என்று தொடர்ந்து அந்த பாலை வைத்துவர... ஏழு நாட்களில் மருக்கள் உதிரத் தொடங்கும். அதனால்தான், இதை 'மரு அகற்றி’ எனவும் அழைக்கிறார்கள்.

பயனுள்ள பால் பெருக்கி!

கலப்படமில்லாததும்... நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததுமான தாய்பால் இன்றைக்கு பல குழந்தைகளுக்குக் கிடைப்பதேயில்லை. மாறிப்போன உணவு முறைகளாலும், பழக்க வழக்கங்களாலும் பல பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில்லை. அதனால், புட்டிப்பாலுக்கு மாறி விடுகிறார்கள். புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி அற்றவர்களாக, சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கும் வாழ்நாள் முழுவதும் மருத்துவமனையை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

வளரும் தலைமுறையை ஆரோக்கியமில்லாத தலைமுறையாக வளர்க்கிறோமே என்ற ஆதங்கம் இருந்தாலும், 'பால் சுரக்காதபோது என்ன செய்ய?’ என்கிற விரக்தியை மட்டுமே வெளிப்படுத்த முடிகிறது. இப்பிரச்னைக்கு இயற்கை அளித்துள்ள எளிய தீர்வு, அம்மான் பச்சரிசி. இதன் பூக்களை சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து, பசும்பாலில் கலந்து காலை, மாலை என தினமும் இருவேளை பருகி வந்தால், பால் சுரக்கும்.

சொந்தக் காசில் சூன்யம் வைத்த கதையாக, பணத்தைக் கொடுத்து, ஆரோக்கியத்தைக் கெடுக்கும் புட்டிப்பாலை வழியனுப்பி விட்டு, அம்மான் பச்சரிக்கு வரவேற்பு வளையம் வையுங்கள். உங்கள் வாரிசுக்கு நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழும் வாய்ப்பைக் கொடுங்கள்.

ஆணியே பிடுங்க வேண்டாம்...

அதுவா விழுந்திடும்..!


கால்களில் ஆணி வருவது ஒரு முக்கியமான பிரச்னை. அதை அகற்றுவதற்காக, ஆணி வந்த இடத்தைச் சுற்றி கத்தியால் அறுப்பார்கள்... அறுவை சிகிச்சைகூட செய்கிறார்கள். வேதனை நிறைந்த இந்த சிகிச்சை தேவையே இல்லை. வலி இல்லாமல் ஆணியை அகற்றும் வித்தை அம்மான் பச்சரியிடம் உள்ளது. ஒரு செடியை சிறிது சிறிதாக உடைத்து அதில் வரும் பாலை ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால், வலி குறைவதோடு, சில நாட்களில் ஆணி மறைந்துவிடும். எந்த வலியும் இல்லாத சுகமான தீர்வை இயற்கை கொடுக்கும்போது, அறுவை சிகிச்சை எதற்கு நண்பர்களே?



வெள்ளி பஸ்பம்..!

வெள்ளைப்படுதல் பெண்களுக்கான முக்கிய பிரச்னைகளில் ஒன்று. 'அம்மான் பச்சரிசி இலைச்சாறை, மோருடன் கலந்து, காலைவேளையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் பருகி வர, வெள்ளைபடுதல் நின்று போகும்’ என்கிறது, சித்த மருத்துவம். அம்மான் பச்சரிசி இலையுடன் தூதுவளை (தூதுவேளை என்றும் சொல்வார்கள்) இலையை சம அளவு எடுத்து, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து கூட்டு செய்து, தேங்காய் துருவல், நெய் கலந்து உண்டு வந்தால்... உடம்பில் தாது பலப்படும். அதனால் இதை 'வெள்ளிப் பஸ்பம்’ எனவும் அழைக்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

ஆடு, மாடுகள் ஒன்றோடொன்று மோதி, இடறி விழும்போது ஏற்படும் காயங்களில், அம்மான் பச்சரிசி பாலைத் தடவினால், விரைவில் குணமாகும்.

மந்திர மூலிகை!


அம்மான் பச்சரி பால் பயன்படுத்தி, காகிதத்தில் ஏதாவது எழுதினால், சிறிது நேரத்தில் மறைந்துவிடும். பிறகு அக்காகிதத்தை நெருப்பில் வாட்டினால்... மறைந்த எழுத்துக்கள் தெரியும். அந்தக் காலத்தில் பல ரகசியக் குறிப்புகளை இப்படி எழுதியிருக்கிறார்கள், என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார் கள்.



டெங்குவை குணப்படுத்த ஆராய்ச்சி!

இந்தியாவை தாயகமாகக் கொண்ட அம்மான் பச்சரிசி யின் தாவரவியல் பெயர், இப்ஃபோர்பியா ஹிர்டா (Euphorbia hirta). இதன் மருத் துவ குணங்களைப் பற்றி பேசினார், ரூமி ஹெர்பல்ஸ் இயக்குநரும், மூலிகை தொடர்பான ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவருமான, திருஞானசம்பந்தம். ''புண்கள், சூடுகட்டி, சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கு, நமைச்சல், எரி புண் போன்றவற்றுக்கும் அம்மான் பச்சரிசி சிறந்த நிவாரணி. இந்தச் செடியை உலர்த்தி பொடி செய்து, ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, சமஅளவு கற்கண்டு சேர்த்து தினம் ஓரிரு வேளை அருந்தி, பால் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும்.

உதடு, நாக்கு போன்ற இடங்களில் ஏற்படும் வெடிப்பைக் குணப்படுத்தும் தன்மை அம்மான் பச்சரிசி பாலுக்கு உண்டு. இதன் காயை துவையல் அரைத்து உண்டால், நாள்பட்ட மலச்சிக்கல் தீரும். பிலிப்பைன்ஸ் நாட்டில் அம்மான் பச்சரிசி மூலமாக, டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன'' என்றார்.



M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Oct 10, 2014 4:52 pm

அற்புதமான பதிவு நண்பரே !!!
நன்றி !!!

:நல்வரவு: :நல்வரவு:



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மூலிகை வனம்-தொடர் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 5:29 pm

வேதனை போக்கும் வேலிப்பருத்தி..!

வேலிப்பருத்தி...
மூலிகை வனம்-தொடர் Pv44a

மனிதனுக்கான மருத்துவத்தை இலைகளில் வைத்திருக்கிறது, இயற்கை... இந்த உண்மையை சித்தர்கள் உணர்ந்து கொண்டதால்தான் சித்த மருத்துவம் உருவானது. ஆங்கில மருந்துகளுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை சித்தர்களின் ஆராய்ச்சிகள்தான். இன்றைக்கும் பல்வேறு ஆங்கில மருந்துகள் தயாரிப்பில் மூலிகைச்சாறுகள் சேர்க்கப்படுகின்றன.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேலியோரங்களில் படர்ந்து கிடக்கும் அற்புதமான மூலிகைதான் வேலிப்பருத்தி... இதய வடிவ இலைகள், இரட்டைக் காய்கள், முட்டை வடிவ விதைகளுக்குள் பட்டு போன்ற பஞ்சுகள் கொண்ட வேலிப்பருத்திக்கு, 'உத்தாமணி’ என்ற பெயரும் இருக்கிறது. சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் உத்தாமணி என்றே குறிப்பிடுகிறார்கள்.

இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்த மனிதன் காற்றைக்கூட விட்டு வைக்கவில்லை. கழிவுகளுக்குக் காற்றை காவு கொடுத்துவிட்டு, ஆக்சிஜன் பார்லர்களில் காசு கொடுத்து சுத்தக் காற்று சுவாசிக்கும் நிலை வந்தே விட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரும் மனிதர்கள், முகத்தை முழுவதும் மூடிக் கொண்டுதான் பயணிக்கிறார்கள். அந்தளவுக்கு மாசடைந்து கிடக்கிறது, காற்று. அதையும் மீறி பலருக்கு ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள்.

மூச்சிரைப்பைப் போக்கும் கற்பக மிளகு!

சுவாசக் கோளாறை சரி செய்வதற்கு, எளிமையான தீர்வு வேலிப்பருத்தி. இதன் இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து, தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... ஆஸ்துமா, அலறியடித்துக் கொண்டு ஓடிவிடும். இச்சாறை லேசாக சூடாக்கி, ஆற வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடித்து வந்தால் சுவாச, காச நோய்கள் காணாமல் போய்விடும். இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், வாயுவால் உண்டாகும் நோய்கள், கைகால் குடைச்சல், இளைப்பு, இருமல், கோழைக்கட்டு நீங்கும். ஒரு குவளையில் கொஞ்சம் மிளகை இட்டு அவை மூழ்கும் அளவுக்கு வேலிப் பருத்தி இலைச்சாறை ஊற்றி, ஊற வைத்து எடுத்து வெயிலில் ஏழு நாட்கள் காய வைத்தால்... அதன் பெயர் 'கற்பக மிளகு’. 'கற்பக மிளகை, தினமும் ஒரு மிளகு வீதம் உட்கொண்டால் மூச்சிரைப்பு நோய் முற்றி லும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம்.

உடல் வலுப்பெற!

ஊட்டச்சத்து பானங்கள் குடிக்கும் குழந்தைகள் வேண்டுமானால், 'நான் வளர்கிறேனே மம்மி’ என விளம்பரங்களில் காட்டப்படுவது போல வேகமாக வளரலாம். ஆனால், உணவுக்கே வழியில்லாத குழந்தை கள் ஊட்டச்சத்துக்கு எங்கு போவார்கள்? ஏழை வீட்டுப் பிள்ளைகள், மார்புக்கூடு முன்தள்ளி நோஞ்சானாகவே வளர்கின்றன. இன்னும் சில குழந்தைகள் என்னதான் ஊட்டச்சத்து கொடுத்தாலும் நோஞ்சானாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் உடல் வலுப்பெற உதவுகிறது, வேலிப்பருத்தி. இதன் இலையை நிழலில் உலர்த்தி, பொடி செய்துகொண்டு அதில் ஒரு தேக்கரண்டி, சீரகப்பொடி, அருகம்புல் பொடி ஆகியவற்றில் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கஷாயம் செய்து... பனங்கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் நோஞ்சான் தன்மை நீங்கி, உடல் வலுப்பெறும்.

ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்!

நாளைய இந்தியாவை வழி நடத்த வேண்டிய இளைஞர்கள், இருபத்தைந்து வயதிலேயே ரத்த அழுத்தம் ஏறிக் கிடக்கிறார்கள். 'பி.பி’ எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் 'பிளட் பிரஷர்’ உள்ளவர் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மாத்திரைகள் உண்டு. ஆனால், காலம் முழுவதும் விழுங்கிக் கொண்டே இருக்கவேண்டும். இடையில் நிறுத்தினால், மீண்டும் ரத்த அழுத்தம் எகிறிவிடும். 'இதற்கு வேறு வழியே இல்லையா?’ என கேட்பவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கிறது வேலிப்பருத்தி.

வேலிப்பருத்தி இலைகள் ஆறினை எடுத்து சுத்தம் செய்து, அப்போது கறந்த ஆடு அல்லது மாட்டுப் பாலில் அரை டம்ளர் எடுத்துக் கொள்ள வேண்டும். கறந்த பால் கிடைக்காத பட்சத்தில் கொதிக்க வைத்த பாலை அரை டம்ளர் எடுத்துக் கொள்ளலாம். பாலில் இலையைப் போட்டு நன்றாக அரைத்து, 'பிரம்ம முகூர்த்த வேளை’ எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் அருந்த வேண்டும். இப்படி, தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால்... ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும். எவ்விதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இந்த மருந்து, உடல் அசதியைப் போக்கி நரம்புகளைப் புத்துணர்வு பெறச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது.

வயதுக்கு வர வைக்கும் வேலிப்பருத்தி!

வேலிப்பருத்தி இலைச்சாறு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்து, காய்ச்சி இளஞ்சூட்டில் பற்று போட்டால்... வாத வலி, வீக்கம் குறையும். யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் விரைவில் குணமாகும். காணாக்கடி, அரிப்பு, தடிப்பு, கீழ்வாதம், முடக்குவாதம், இடுப்புவலி ஆகியவற்றுக்கு வேலிப்பருத்தி இலைச்சாறை வதக்கி, துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும். குறிப்பிட்ட வயது வந்த பிறகும், பெண்கள் ருதுவாகாமல் இருந்தால், ஆறு வேலிப்பருத்தி இலை, மூன்று மிளகு ஆகியவற்றை மை போல அரைத்து, 10 தினங்கள் தொடர்ந்து உண்டு வந்தால் நிச்சயம் பலன் கொடுக்கும். வேலிப்பருத்தி இலைச்சாறு, தேன் இரண்டை யும் கலந்து தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி தீரும் என்கிறார்கள், சித்தர்கள்.

இத்தனை பயன்பாடு மிகுந்த வேலிப் பருத்தியை இனியாவது பயன்படுத்தி, நோயற்ற வாழ்வு வாழ்வோம்...



வாத நோய்க்கு மருந்து!


வேலிப்பருத்தியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் காளிமுத்து, ''வேலி ஓரங்களில் படர்ந்து, மனிதனின் வலிகளைக் குறைக்கும் அற்புதமான மூலிகை வேலிப்பருத்தி. இது மிகச் சிறந்த வலிநிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன் படுகிறது. வேலிப்பருத்தி இலையைப் பறித்து, அரைத்து, துணியில் கட்டி, சூடாக உள்ள தோசைக்கல்லில் துணியை வைத்து எடுத்து ஒத்தடம் கொடுத்தால் ரத்தகட்டு, முழங்கால் வலி, வாதநோய் குறையும்'' என்றார்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 5:32 pm

சிறுநீரகத்தைச் சீராக்கும் நெருஞ்சில்..!


மூலிகை வனம்-தொடர் Pv20a
சகமனிதர் உதவியில்லாமல் இந்த உலகில் நம்மால் ஒன்றையும் பெறமுடியாது. உண்ணும் உணவு... உடுத்தும் உடை... இருக்கும் இடம்... என அனைத்திலும் அடுத்தவர்களின் பங்களிப்பு இருக்கிறது. ஆனால், நமக்கான செயல்களைச் செய்த அந்த எளிய மனிதர்களை என்றைக்காவது நினைவு கூர்ந்து நன்றி பாராட்டியிருக்கிறோமா? மனிதர்கள் செய்யும் உதவிகளையே கொண்டாடத் தெரியாத நாம், சிறிய தாவரங்கள் செய்யும் உதவிகளையா உற்றுப் பார்க்கப் போகிறோம்?

பாதையோரங்கள், புல்வெளிகள், தரிசுநிலங்கள், வயல்கள், வரப்புகள் என எங்கெங்கும் சின்னஞ்சிறு வடிவில் படர்ந்து கிடப்பவை... நெருஞ்சில். பாதங்களை பதம்பார்க்கும் முள்ளுடன் இருப்பதால்... வேண்டாத விருந்தாளியைப் பார்ப்பதுப் போல, இதைப் பார்த்து பழகிவிட்டோம். கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும் என்பது போல, முட்களை உடைய இந்த சின்னஞ்சிறிய செடிக்குள் இருக்கும் மருத்துவக் குணம்... மகத்தானது.

விதைகள் மூலமாக இனப்பெருக்கம் செய்து, நிலங்களில் படர்ந்து வளரும் இதன் வேர், அதிக ஆழம் வரை செல்லும். இதில், சிறு நெருஞ்சில், யானை நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் என மூன்று வகைகள் இருக்கின்றன. சிறு நெருஞ்சில் செடி... ஐந்து இதழ்களைக் கொண்ட மஞ்சள் நிற பூக்களுடன் காணப்படும். இந்தப் பூக்கள் சூரியனின் திசை நோக்கி திரும்பும் தன்மையுடையவை. புளிய மர இலையைப் போல், ஆனால், அளவில் அதைவிட சிறிய இலைகளை உடையவை. காய்கள், நிலக்கடலைப் பருப்பு அளவில் எட்டு முதல் பத்து கூரிய நட்சத்திர வடிவ முட்களுடன் இருக்கும். யானை நெருஞ்சில்.... இலை பெரியதாகவும், காயானது சிறுநெல்லி அளவிலும் இருக்கும். செப்பு நெருஞ்சில்... இலைகள் சிறியதாகவும், மிளகு அளவிலான முட்கள் இல்லாத காய்களுடன் மூன்று இதழ்களைக் கொண்ட சிவப்பு நிற பூக்களுடன் இருக்கும். இவை அனைத்துக்குமான மருத்துவக் குணங்களில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.

பல நாடுகளிலும் பயன்பாடு!


நெருஞ்சில் இலையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை இருக்கின்றன. பாலியல் பிரச்னைகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆயுர்வேதத்திலும், சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் பெருமை வாய்ந்தது, நெருஞ்சில். இன்றைக்கும் சீனாவில்... சிறுநீரகம் தொடர்பான நோய்கள், கல்லீரல் பாதிப்புகள், சரும நோய்கள், ரத்தநாள பாதிப்புகள், இதயநோய்களுக்கு முக்கிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பல்கேரியாவில், பாலியல் வேட்கையை அதிகப்படுத்தவும், குழந்தையின்மைப் பிரச்னைக்கும் நெருஞ்சிலைப் பயன்படுத்துகின்றனர். கிரேக்க நாடுகளில், சிறுநீர் பிரச்னைகளுக்கும், மனநிலை சார்ந்த பிரச்னைகளுக்கும் இதைப் பயன்படுத்துகின்றனர்.

சிறுநீரகம் சீராகும்!

சிறுநீரகக் கோளாறுகளுக்கு நெருஞ்சில் நல்ல மருந்து. சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 'அன்யூரியா’ (கிஸீuக்ஷீவீணீ) எனப்படும் சிறுநீர் தடைப்பட்டு வலியுடன் வெளிவரும் நோய்க்கு, நெருஞ்சில் சேர்த்த 'கோக்சூராதி க்ருதம்’ நல்ல மருந்து.

சிதைந்த நெருஞ்சில் முள் 50 கிராம், கொத்தமல்லி விதை 5 கிராம் ஆகியவற்றை 500 மில்லி நீரில் இட்டு சுண்டக் காய்ச்சி, காலை-மாலை இருவேளையும் 60 மில்லி அளவு குடித்து வந்தால்... கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர்எரிச்சல் போன்றவை குணமாகும். நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இரண்டையும் சமஅளவு எடுத்துப் பொடி செய்து, அதிலிருந்து 2 கிராம் எடுத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், கல் அடைப்பு குணமாகும். இதன் இலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி, கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால்... சிறுநீரில் ரத்தம் கலந்து போகும் பிரச்னை குணமாகும்.

சூடு தணிப்பான்!

இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் பிடுங்கி, ஒரு பிடி அருகம்புல் சேர்த்து, அதில், ஒரு லிட்டர் நீர்விட்டு, அரை லிட்டர் அளவுக்கு வரும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை, மாலை இருவேளையும் 50 மில்லி அளவு, மூன்று நாட்கள் குடித்து வந்தால், உடல்சூடு தணியும். கண்எரிச்சல், கண்ணில் நீர்வடிதல், சொட்டுசொட்டாக சிறுநீர் போதல் ஆகியவை குணமாகும்.

கர்ப்பப்பைக் கோளாறுகளுக்கும் மருந்து!

நெருஞ்சில் வேரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து குடித்து வந்தால், பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவார்கள். 50 கிராம் நெருஞ்சில் இலையில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதைப் பாதியாக காய்ச்சி, தினமும் சிறிதளவு குடித்து வந்தால் பெண்களுக்கான கர்ப்பப்பைக் கோளாறுகள் சரியாவதுடன், குழந்தைப்பேறு உண்டாகும்.

ஆண்மை அதிகரிக்கும்!

நெருஞ்சில் முள்ளை பசும்பாலில் வேகவைத்து, உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு, அதில், 2 கிராம் எடுத்து பாலில் கலந்து, காலை, மாலை இருவேளைகளும் பருகி வந்தால், ஆண்மை பெருகும். நெருஞ்சில் இலையை வெள்ளாட்டுப் பாலுடன் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்துக் குடித்து வந்தால், ஆண்மை அதிகரிக்கும். நெருஞ்சில் வேர், கீழாநெல்லி வேர் இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், மஞ்சள் காமாலை நோய் குறையும்.

சிறுநீரகக் கோளாறுகளுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு அவசியமில்லாமல்... பல ஆயிரங்களை மிச்சப்படுத்தும் நெருஞ்சிலை நெஞ்சில் இருத்துங்கள்... வாழ்வு வளமாகும்... மருத்துவச் செலவுகள் மட்டுப்படும்.



ஆண்மைக் குறைவுக்கு அருமையான தீர்வு!

நெருஞ்சிலின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசும் தேனி அரசு மருத்துவமனையின் சித்தமருத்துவர் சுவாமிநாதன், ''இது சிறுநீரகக் குறைபாடுகளைச் சரிசெய்யும் அற்புதமான மூலிகை. இதன் காய்களை 10 கிராம் அளவு எடுத்து, 100 மில்லி தண்ணீரில் போட்டு, நாலில் ஒரு பங்காக வரும் அளவுக்கு, சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் பருகி வந்தால், சிறுநீரகம் தொடர் பான நோய்கள் குணமாவதுடன், சிறந்த ஆண்மைப் பெருக்கியாகவும் பயன்படும். ஒட்டுமொத்தச் செடியையும் எடுத்து, சம அளவு எள் சேர்த்து, ஆட்டுப்பாலில் அரைத்துப் பருகினால் ஆண்மைக் குறைவு நீங்கும்'' என்கிறார்.

வேறு பெயர்கள்..!

'ட்ரைபுலுஸ் டெர்ரெஸ்ட்ரிஸ்' (Tribulus Terrestris) என்ற தாவரவியல் பெயர் கொண்ட நெருஞ்சில், திரிகண்டம், கோகண்டம், நெருஞ்சிபுதும், காமரசி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. கோக்ரூ என இந்தியிலும், 'கேல்ட்ராப்' (Caltrop) என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது. கோக்சுரா அவலேஹம், கோக்சுரா க்ருதம், கோக்சுரா க்வாதம், கோக்சுரா குக்குலு என்ற பெயர்களில், நெருஞ்சிலால் செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகள் கடைகளில் கிடைக் கின்றன.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 5:37 pm

மாயம் செய்யும் கீழாநெல்லி
மூலிகை வனம்-தொடர் Pv74a
பட்டிதொட்டி மட்டுமல்லாமல், சென்னை போன்ற பெருநகரங்களிலும் தெருக்களில், சாலையோரங்களில் எளிதாகக் கிடைக்கும் மூலிகைகள் ஏராளம் உள்ளன. அவற்றில் முதன்மையானது கீழாநெல்லி. அம்மா மதுக்கடையில் (டாஸ்மாக்) மதுபானம் அருந்தி, கல்லீரல் கெட்டுபோனால், அம்மா மருந்தகங்களில் மானிய விலையில் மருந்துகள் கிடைக்கும். ஆனால், கல்லீரல் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கும் கீழாநெல்லி போன்ற மூலிகை மருந்துகள்...? இவையெல்லாம் இலவசமாகவே கிடைக்குமாறு வீதியெங்கும் விளைய வைத்திருக்கிறது இயற்கை.

கீழாநெல்லி என்றாலே மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் மூலிகை என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், மஞ்சள் காமாலையுடன் நின்று விடவில்லை இதன் சேவை. கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்பட்டு வரும் கீழாநெல்லியை இன்னமும் ஆய்வு செய்துகொண்டே இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். பைல் நிரூலின், நார் செக்குரினின், நிர் பைலின், தேலிக் அமிலம், எல்லாஜிக் அமிலம், ஹேலிக் அமிலம் போன்ற 50-க்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் இதில் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யத்தில் வாயடைத்துக் கிடக்கிறார்கள். சாதாரண களைச்செடியாக குப்பையில் வளரும் ஒரு சின்னஞ்சிறிய செடிக்குள், இத்தனை மருத்துவ குணங்களா எனக் கொண்டாடுகிறது உலகம். ஆனால், 'உள்ளூர் மாடு விலை போகாது’ என்பதுபோல அருகிலிருக்கும் அற்புதத்தை நாம் அவ்வளவாகக் கண்டுகொள்வதே இல்லை.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் இதன் இலைகளின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால், கீழ்க்காய்நெல்லி என அழைக்கப்பட்டது. பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்கா நெல்லி என அழைக்கப்படும் கீழாநெல்லியின் மருத்துவக் குணங்களைக் கேட்டால் மலைத்துப் போவீர்கள்.

கீழா நெல்லிக் குணந்தான் கேளாய் மது மேகந்
தாழாக்கா மாலைகளைச் சண்ணுந்தாதேனழலுந்
தொக்கினனலுந் தொலைக்குந் தொன்மேகம் போக்கிவிடுத்
தக்கவிர ணங்கெடுக்குந் தான்
- என்கிறது குணபாடம்.

கீழாநெல்லி, கண் சம்பந்தமான நோய்கள், சர்க்கரை வியாதி, நாள்பட்ட மேகப்புண் ஆகியவற்றைப் போக்கும் என்பதுதான் இப்பாடலின் சுருக்கமான பொருள். கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால்... தோல் நோய்கள் குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். மேலும் செடியை நன்றாக மென்று ஈறுகளில் சாறு நன்றாகப் படிய வைத்திருந்தால்... ஈறு நோய்கள் குணமாகும்.

கீழாநெல்லி செடியுடன் கரிசலாங்கண்ணி இலையை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலுடன் காலை, மாலை இருவேளை உட்கொண்டு வந்தால், ரத்தசோகை, ரத்தக்குறைவு நோய் நீங்கும். கல்லீரல் தொடர்பான நோய்களும் குணமாகும். கல்லீரல் பிரச்னைக்கு லட்சங்களில் பணத்தைச் செலவழித்து பெறும் வைத்தியத்தை, இலவசமாகவேத் தருகிறது கீழாநெல்லி. இன்றைக்கு மனிதர்களுக்குள்ள மற்றொரு பெரிய நோயான நீரிழிவு நோய்க்கும் தீர்வைச் சொல்கிறது இந்த சிறியச் செடி. இதை அரைத்து, பாலுடன் கலந்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். இதுமட்டுமா குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுப் பிரச்னைகள், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்ப் பிரச்னைகள், பசியின்மை, தீராத அழுகிய புண்கள், வீக்கம் என எத்தனையோ பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறது கீழாநெல்லி.

கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால்... அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கீழாநெல்லி புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுவதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் காமாலை நோய்க்கு கீழாநெல்லியைவிட கைகண்ட மருந்து இல்லை என்றே சொல்லலாம். இதை ஆங்கில மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். நவீன மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே கண்களில் உள்ள வெண்கரு, மஞ்சளாக மாறுவதை வைத்து மஞ்சள் காமாலையைக் கண்டுபிடித்த முன்னோர்கள், கீழாநெல்லியையும் ஆட்டுப்பாலையும் மட்டுமே கொண்டு, அந்தக் காலத்தில் உயிர்க்கொல்லி நோயான மஞ்சள் காமாலையில் இருந்து காத்துக்கொண்டார்கள்.

கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால்விட்டு அரைத்து, கோலிக்குண்டு அளவு காலை, மாலை இருவேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தால் ஏழு நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும். இரண்டு கீழாநெல்லிச் செடி, நான்கு ஏலக்காய் அரிசி, ஒரு காசு எடை மஞ்சள்தூள், ஒரு சின்ன வெங்காயம் ஆகியவற்றை பால்விட்டு அரைத்து... காலை, மாலை இருவேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தாலும் மஞ்சள் காமாலை குணமாகும். அதே நேரத்தில் கிராமப்புறங்களில் இன்றைக்கும் கீழாநெல்லிச் செடியுடன், வெள்ளாட்டு பால்விட்டு அரைத்து, காலையில் வெறும்வயிற்றில் நெல்லிக்காய் அளவு, ஆட்டுப்பாலுடன் உட்கொண்டு, மஞ்சள் காமாலையில் இருந்து குணமாகிறார்கள்.

இந்த மூன்று முறைகளில் எந்த முறை உங்களுக்கு எளிதாக இருக்கிறதோ அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கீழாநெல்லி பொடி, சூரணம் ஆகியவை சித்தமருந்து கடைகளிலும், காதி கடைகளிலும் கிடைக் கின்றன.

மனிதகுலம் நோயின்றி வாழ்வதற்காகவே நம் காலடியில் கிடக்கும் கீழாநெல்லிக்கு இனியாவது மரியாதை செய்வோம். அனைத்து வீடுகளிலும் வளர்ப்போம்.



பித்தப்பைக் கல்லைத் தடுக்கும்!

கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள் பற்றிப் பேசும் தேனி மாவட்டம் உத்தமப்பாளையம், சித்தமருத்துவர் அமுதா, ''இதன் தாவரவியல் பெயர் 'ஃபிலாந்தஸ் அம்ரஸ்’ அல்லது 'நிரூரி’ (Phyllanthus amrus or Niruri). கீழா நெல்லியைப் பொறுத்தவரை மஞ்சள் காமாலைக்கான மருந்துனுதான் பொதுவா நினைக்கிறாங்க. ஆனா, இது அருமையான கிருமிநாசினி. இந்த இலைகளைக் காய வெச்சு தயாரிச்ச கஷாயத்தை புண்களை கழுவப் பயன்படுத்தலாம். இது துவர்ப்பு சுவைகொண்ட மூலிகைங்கிறதால, பித்தப்பையில கல் உற்பத்தி ஆகிறதைத் தடுக்கும். கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும் கீழாநெல்லி நல்ல மருந்து'' என்கிறார்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 5:41 pm

துத்தி மூலத்துக்கு கத்தி..!

மூலிகை வனம்-தொடர் Pv26a
மூலிகைகள் என்றாலே, கிடைப்பதற்கரிய ஒரு பொருள் என்கிற எண்ணம்தான் அநேகரிடம் இருக்கிறது. ஆனால், அது தவறான கருத்து. உண்மையில், நம் கண் முன்னால், கைக்கெட்டும் தூரத்தில், கடந்து போகும் பாதையில் வீதியெங்கும் வியாபித்திருக்கின்றன, மூலிகைகள். அவற்றில், குறிப்பிடத்தக்க மூலிகை, துத்தி. தமிழகத்தில் இது இல்லாத இடமே இல்லை. நிஜக்காடுகள் இருக்கும் கிராமங்கள் தொடங்கி, கான்கிரீட் காடுகளாக மாறிவிட்ட சென்னை போன்ற பெருநகரங்களிலும்கூட முளைத்துக் கிடக்கிறது துத்தி. இதன் மருத்துவப் பலன்களைக் கேட்டால் மலைத்துப் போவீர்கள்.

இதய வடிவ இலைகள், மஞ்சள் நிறப் பூக்கள், தோடு வடிவ காய்கள் ஆகியவற்றைக் கொண்டது, துத்தி. இதன் இலைகளில் மென்மையான சுனை இருக்கும். இது உடலில் பட்டால் அரிக்கும். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம். தெருவோரங்கள், தரிசு நிலங்கள், சுடுகாடுகள்... என அனைத்து இடங்களிலும் பார்க்கலாம். கிலோ கணக்கான காய்கறிகள், இறைச்சிகளில் உள்ள சத்துக்களை சில இலைகளில் அடக்கி வைத்திருக்கும் கீரைகள், இயற்கை மனித இனத்துக்கு அளித்த மகத்தான கொடைகளில் ஒன்று. தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக் கொள்பவர்களை அணுக அஞ்சுகின்றன, பிணிகள். அந்த வகையில் துத்திக்கீரை அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. உடல் புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி, உடலைத் தேற்றும் அதிசய மூலிகை, துத்தி.

'துத்தி மலரை நிதம் துய்க்கின்ற பேர்களுக்கு
மெத்த விந்து வும்பெருகும் மெய்குளிரும்சத்தியமே
வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந்
தேயாமதி முகத்தாய் செப்பு’
என்கிறது குணபாடம்.

'துத்திப் பூவை தினமும் உட்கொண்டு வந்தால் ரத்தவாந்தி, காசநோய் நீங்கும். விந்து அதிகமாக உற்பத்தியாகும். உடல் குளிர்ச்சியடையும்’ என்பது இச்செய்யுளின் சுருக்கமான பொருள். பசும்பாலில் ஒரு கைப்பிடி துத்திப் பூவைப் போட்டு வேகவைத்து குழையும் பதத்தில் கடைந்து... சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து உண்டு வந்தால், உடல் சூடு தணியும். விந்து கட்டும். ரத்தக் காசம் குணமாகும். துத்திப் பூவுடன் சுவைக்காக துவரம் பருப்பைச் சேர்த்து வேகவைத்தும் சாப்பிடலாம்.

துத்தி இருக்க, துன்பம் எதற்கு..?

அவசர யுகத்தில் உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிய பிறகு... விஞ்ஞானத்தின் உதவியால், அலைச்சல் குறைந்து, அமர்ந்த இடத்திலேயே அனைத்துப் பணிகளையும் செய்து கொள்கிறோம். 'நடக்க நடக்க நோய் தள்ளிப் போகிறது’ என்பது மூத்தோர் மொழி. ஆனால், நடை குறைந்து, இருக்கையிலேயே அதிக நேரம் இருப்பதால், முக்கால்வாசி பேருக்கு மூலநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி மூலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் இருக்கின்றன. அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் மூலத்துக்கு சிகிச்சையளிப்பதாகச் சொல்லும் மஞ்சள் நிற விளம்பரச் சுவரொட்டிகளைப் பார்க்கலாம். இப்படிப்பட்ட மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு மூலத்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இன்னும் பெரிய மருத்துவமனைகளிலோ, 'அறுவை சிகிச்சை இல்லாமல், எண்டாஸ்கோபி மூலமாக மூலத்தை குணமாக்குகிறோம்’ எனச் சொல்லி பல ஆயிரங்களைக் கறக்கிறார்கள். உண்மையில் மூலத்துக்கு அறுவை சிகிச்சையும் தேவையில்லை. எண்டாஸ்கோபியும் தேவையில்லை. மூலத்தை அறுவை சிகிச்சை செய்ய, இயற்கை அனுப்பி வைத்துள்ள மருத்துவன்தான் துத்தி. அதனால்தான் 'துத்தி, மூலத்துக்கு கத்தி’ எனச் சொல்லி வைத்தனர், முன்னோர்.

மூலத்துக்கு முற்றுப்புள்ளி!

துத்தி இலையை சிறிது விளக்கெண்ணெய் விட்டு கை பொறுக்கும் சூட்டில் வதக்கி... வாழை இலையில் வைத்து, ஆசன வாயில் துணியைக் கொண்டு கோவணம் போலக் கட்டிக்கொள்ள வேண்டும். இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக இப்படி ஓரிரு நாட்கள் செய்து வந்தால், கடுப்பு நீங்கிவிடும். சிறிது சிறிதாக மூலமும் குணமாகிவிடும். சூட்டுக்கட்டிகளில் இதைக் கட்டினால், கட்டிகள் உடையும். இதை செய்வது சிரமம் என நினைப்பவர்கள், இரண்டு கை அளவுக்கு துத்தி இலைகளைப் பறித்து, தண்ணீரில் கழுவி, சிறிதாக நறுக்கி, சிறிது மஞ்சள்தூள், 10 சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு வதக்கி, சிறிது மிளகுத்தூள், உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து

10 நாட்களுக்கு இதை உண்டு வந்தால், மூலநோய் குணமாகும். இலையை பருப்புடன் சேர்த்து வேக வைத்து, சாதத்துடன் கலந்து உண்டால், மலம் இலகுவாகப் போகும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக