புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
13 Posts - 25%
prajai
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Rutu
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
viyasan
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 8%
Rutu
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 28, 2014 10:17 am

First topic message reminder :

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
ரமணி


இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம்.

01. Pantoum: பாண்டி
Pantoum - Wikipedia, the free encyclopedia


இந்த வடிவத்தைத் தமிழில் ’பாண்டி’ என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள்
தம் ’சந்தவசந்தம்’ மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w

இந்த pantoum--’பாண்டி’ வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்:

Stanza 1 A B C D
Stanza 2 B E D F
Stanza 3 E G F H
Stanza 4 G I (or A or C) H J (or A or C)

This pattern continues for any number of stanzas, except for the final stanza,
which differs in the repeating pattern. The first and third lines of the last stanza
are the second and fourth of the penultimate; the first line of the poem
is the last line of the final stanza, and the third line of the first stanza
is the second of the final. Ideally, the meaning of lines shifts when they
are repeated although the words remain exactly the same: this can be done
by shifting punctuation, punning, or simply recontextualizing.

Ref: Pantoum - Wikipedia, the free encyclopedia

அதாவது, ஒவ்வொரு செய்யுளின் இரண்டாம், நான்காம் அடிகள்
அதற்கடுத்த செய்யுளின் முதலாம், மூன்றாம் அடியாக வரவேண்டும்.
இதுபோல் எத்தனை செய்யுட்களும் வரலாம். ஆனால் இறுதிச் செய்யுள் அமைப்பில்
அதன் முந்தைய செய்யுளில் அடிகள் இரண்டும் நான்கும் இதன் முதல், மூன்றாம்
அடிகளாக அமைவதுடன், முதற்செய்யுளின் மூன்றாம் அடி இதன் இரண்டாம் அடியாகவும்,
முதற்செய்யுளின் முதலடி இதன் இறுதி அடியாகவும் அமைதல் வேண்டும்.

pantoum உதாரணங்கள்:
Pantoum Poems | Examples of Pantoum Poetry - PoetrySoup

*****

இனி, நான் எழுதிய சில ’பாண்டி’க் கவிதைகள்:

வேலை எனவோ?
(ஆங்கிலப் பாவடிவம் pantoum-இன் தமிழ் வடிவாகப் ’பாண்டி’ எனப் பெயரிட்டு,
சந்தவசந்தம் இணையக் குழும ஸ்தாபகர் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் செய்த வடிவம்)


காலை நேரம் கதிர்வரும் போதில்
மேலைக் காற்றில் மேனியும் குளிர
சாலை வாகனம் சற்றே குறைய
காலை வீசிக் கடற்கரை சென்றாள். ... 1

மேலைக் காற்றில் மேனியும் குளிர
சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
காலை வீசிக் கடற்கரை சென்றாள்
வாலைக் குமரி வயதில் இளையாள். ... 2

சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
வாலைக் குமரி வயதில் இளையாள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள். ... 3

சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள்
வேலை எனவோ? வியந்தேன் நானே! ... 4

மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை வாகனம் சற்றே குறைய
வேலை எனவோ வியந்தேன் நானே
காலை நேரம் கதிர்வரும் போதில்! ... 5

--ரமணி, 26-27/12/2014

*****

வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்!
(நாற்சீர்ப் ’பாண்டி’)

’பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’*
வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்!

’நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’
பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்
நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்!

பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்
சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்!

யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
தேரும் வாழ்வில் தேடியே ஞானச்
சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்
சீரும் சிறப்பும் செயல்வித மாகும்!

தேரும் வாழ்வில் தேடியே ஞான
வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
சீரும் சிறப்பும் செயல்வித மாகும்
’பாரத பூமி பழம்பெரும் பூமி’!

--ரமணி, 27/12/2014

குறிப்பு:
முதற் செய்யுளின் முதலிரண்டு அடிகள் மகாகவி பாரதியாரின் ’சத்ரபதி சிவாஜி’
என்னும் பாடலில் இருந்து கொண்ட மேற்கோள் ஆகும்.

*****

பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்!
(மழலையர் பாட்டு: நாற்சீர்ப் பாண்டி)

பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்
வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்
அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்! ... 1

வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்
பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்! ... 2

உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்
பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்
கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே! ... 3

துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்
புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்
கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே
பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்! ... 4

புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்
கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்
பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்ப்
பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்! ... 5

--ரமணி, 27/12/2014, கலி.12/09/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat May 02, 2015 7:51 am

தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
2. மூன்று நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + குறள் வெண்செந்துறை

ஆ2. குடும்பக் குமிழிகள்
(அளவியல் ஆங்கில சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

அப்பாவின் குட்டியென்றே ஆகிநின்றேன் அப்போதே
எப்போதும் அம்மாவே என்றிருந்தேன் சின்னாளே
தப்பாமல் எதிலும் தலைநீட்டும் அப்பாவே
ஒப்பாரி யம்மாவே ஒப்பவிலை பின்னாளே.

கல்யாணம் ஆனதுமே கடமைகளாய்க் கதித்தனவே
இல்லாளும் அன்னையாரும் இன்முகமே வேட்டனரே
நல்விதமா யிருகுழந்தை நலம்தந்தான் விதித்தவனே
பல்லாண்டு வாழ்ந்தனரே பாட்டிதாத்தா வீட்டினிலே.

ஆயினநாள் இன்றுநாங்கள் அறுபதினும் நனியெனவே!
தாயன்புப் பிள்ளையவன் தந்தையன்புச் சேயிழையும்
போயினரே திருமணத்தில் புக்கவரும் தனியெனவே!
நோயற்ற வாழ்வெனினும் வாயற்ற ஆவினமே!

கூட்டுக் குடும்பமொன்று குமிழிகளாய்ப் பிரிந்ததுவே
காட்டாற்று வெள்ளத்தில் கதியற்றே உடைந்ததுவே.

--ரமணி, 12/03/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 04, 2015 8:15 am

தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
2. எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

இ2. மருள்மலர்
(அளவியல் இத்தாலிய சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

வானின்று வரர்தூவும் மலர்களிலே ஒருமலரோ
கானின்று விகசித்தே கருவண்டு சூழ்-இனமோ
நானென்றன் முற்பிறப்பில் நற்கரும வாழ்வினிலோ
ஆனின்று உய்விக்கும் அறுமுகனாய் ஒருமகனோ
தேனுண்டு கண்ணுறங்கும் தெய்வீகத் திருமுகமோ
தானுண்டு தனக்குள்ளே தனதென்று வாழ்மனமோ
ஊணுண்டு உலவுகின்ற உயிரெனவே வாழ்முனமே
மானொன்று பார்ப்பதுபோல் மலர்விழிகள் உருவகமே!

அரவொன்று தீண்டியதோ அடிவயிற்றில் நஞ்செனநான்
உரமின்றிக் குமைகின்றேன் உயிர்பெற்ற உறவினிலே
வரமொன்று கேட்டேனே வகையின்றிக் கேட்டேனோ
நரம்பியலில் கோளாறால் நாளங்கள் துஞ்சுவதாம்
உருவமுண்டு மிழலையுண்டு உளஞ்சொல்லும் திறனிலையே
கருகமணிக் கோவையெனக் கனகமாலை வேட்டேனோ?

--ரமணி, 19/03/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 07, 2015 8:17 am

தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
3. இரண்டு நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா

இ3. கணிணிச் செயலியும் புதுக்கவிதையும்
(அளவியல் இத்தாலிய சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

சொற்பலவும் சேர்ப்பதிலே தொட்டுவரும் குற்றென்றோ ... ... [குற்று = குறை; syntax error]
பற்பலவாம் குறியீடு பக்கமொன்று தப்புதலோ ... ... [error in punctuation]
சொற்பொருளை ஆய்ந்தெழுதித் தொட்டதிலே தப்பெனவோ ... ... [semantical error]
சற்றோடி என்செயலி தத்திநிற்கும் வெற்றென்றே! ... ... [செயலி = computer program]

என்றிருக்கும் போதிவண்நான் எத்தனை யோவிதமாய்த்
தன்னளவில் நன்கியங்கித் தக்கபலன் தந்திடவே
இன்றுபல வேசெயலி எண்ணியெழு துந்திறனைக்
குன்றெனவே என்வசத்தில் கொள்கணினிக் கோவிதன்நான். ... ... [கோவிதன் = நன்குணர்ந்தோன், expert]

இத்தனையொ ழுங்கிருந்தும் ஏன்கவிதை யாப்பினிலே
வித்தகனாய் ஆகாமல் மீக்கூரும் ஓசையற
தெத்துசொல்லே எண்ணமதைச் செப்புவதாய் வாக்கியமே
குத்துடைத்துத் தொங்கவிட்டுக் கூறிடுதல் காப்பெனவே ... ... [காப்பு = அணி]
சொத்தையைப்பு துக்கவிதைச் சொர்ணமலர்ப் பூசையென
எத்தனைநாள் இன்னும்நானும் ஏமாறும் பாக்கியமோ?

--ரமணி, 24/03/2015

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 18, 2015 7:59 am

தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
3. எட்டடித் தரவு + நாலடித் தரவு + குறள் வெண்செந்துறை

ஆ3. மரபே இதயம்!
(அளவியல் ஆங்கில சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

நாளெல்லாம் பாடுபட்டால் நாலுவரிக் கவிதைவரும்
கோளொன்றும் குணமொன்றும் குறியெனவே கொண்டமர்ந்தேன்
வாளென்றே இலக்கணத்தால் வகையில்லா எதுகைவரும்
நீளில்லா மோனைவரும் நிலையெல்லாம் விண்டெறிந்தேன்
தாளொன்றும் தலையொன்றும் சார்வதிலே தளைதட்ட
வேளொன்று வினையொன்று விளைவொன்று வந்ததுவே
ஆள்வினையை விட்டிடாமல் அரும்பொருளைக் களைகட்டக்
கேள்விஞானம் கல்விஞானம் கேவலமாய் நின்றதுவே.

பேசாமல் புதுக்கவிதைப் பேரினிலே எழுதிடவோ?
கூசாமல் சொற்றொடரைக் குறைத்திடவோ மழுங்கிடவே?
ஏசாமல் படிப்போரும் இருக்கையிலே பழுதுறுமோ?
வீசாமல் தரித்துநின்றால் விளையாதோ ஒழுங்கெனவே?

இதயமென்று துடித்தொன்று இயங்கிடுமே வேரெனவே
எதையுமிங்கு மரபினிலே எழுதுவதே சீரெனவே.

[கோள் = கொள்கை, கோட்பாடு; நீள் = ஒளி; நிலை = இடம்;
தாள்-தலை = உறுசீரின் முடிவும் வருசீரின் முதலும்; வேள் = விருப்பம்;
ஆள்வினை = முயற்சி; வீசாமல் = விரித்துநீட்டாமல்.]

--ரமணி, 10/04/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue May 26, 2015 8:53 am

தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
4. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை

இ4. எந்திரப் புலமைவேலை ஏன்தோழி!
(அளவியல் இத்தாலிய சானட்: ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)

அந்தியின் வண்ணங்கள் அழகினை விரிக்கும்
மந்திரம் மேவும் மாலன்கை யாழி!
வந்துநீ காண வழியிலையே தோழி!
சிந்தனை யெல்லாம் திருவிரல் அரிக்கும்
விந்தைகள் புரிந்தவை விசைகளில் தரிக்கும்
எந்திரப் புலமைவேலை ஏனோ தோழி?
உந்துதல் பலவாக உதிர்ந்திடும் ஊழி
தந்திரம் எல்லாம் தகவென வரிக்கும்!

பெண்ணெனும் இயல்பின் பெற்றிமை உள்ளுவாய்
பெண்மையின் மென்மையைப் பெரிதும் வஞ்சித்தே
வண்ணங்கள் இழந்தே வாடுதல் விடுதோழி!
பெண்மையாய்ப் பொலியும் பேற்றினைக் கொள்ளுவாய்
உண்மையில் நீசெயும் ஊழியம் சிந்தித்தே
வண்மையால் வந்துசேரும் வளங்கொள்ள இதுநாழி!

[ஆழி = சக்கரம்; விசை = கணினி விசைப்பலகை விசைகள்;
ஊழி = வாழ்நாள்]

--ரமணி, 11/04/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jun 04, 2015 9:21 am

தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
4. நான்கு ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை

ஆ4. என்னில்லம் என்னில்லமான கதை
(அளவியல் ஆங்கில சானட்: ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஅஆ, இஈஇஈ, உஊஉஊ, எ-ஏ)


கிடைநிலை மூன்றடுக்காய்க் கீழ்முதல் மாடியே
தடையிலா வாஸ்து சக்திகள் அருள்தரும்
மடைதிறந்த வெள்ளமாய் வரும்தென்றல் ஆடியே!

வான்கூரை மேல்மாடம் மாலையின் பொருள்தரும்
கான்சூழும் புள்ளிசை கவனத்தை ஈர்க்கும்
தேன்சூழும் மலர்வண்டு திண்டாடிக் கால்வைக்கும்!

எழுந்திரு விடிந்தது எனக்காலைக் கதிர்பார்க்கும்!
முழுநிலா சன்னல்வழி முகம்காட்டிக் கால்வைக்கும்!
இழுபறியாய்ச் சுற்றிலுமே இன்றுபல அடுக்ககமே!

வானம் துண்டாகி வருமெனக்கோர் பங்கென்றே
கானப் பறவையின் கவின்சிறகுத் துடிப்பிலையே
மோன உதயமும் முழுநிலவும் எங்கென்றே!

விண்ணும் மண்ணும் வேருடன் மறையும்
கண்ணில் மனிதன் கவலைகள் உறையும்!

--ரமணி, 12/04/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jun 08, 2015 8:00 am

தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
5. இரண்டு கலிவிருத்தம் + ஒரு கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை

இ5. கணிணித் துறையே கவையென்று...
(அளவியல் இத்தாலிய சானட்: வெண்டளைக் கலிவிருத்தம் + குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)

வான்சூழும் நீலம். வடிவம் உறுமேகம்.
தான்வீழும் செங்கதிர்த் தண்ணொளி ஜாலத்தில்
வானவில் லைவிஞ்சும் வண்ணமிகு கோலத்தில்
மோனச் சிரிப்பில் முகிழ்க்கும் உறவாகும்!
தேன்மலர் வண்டுகள் தேடிச் சிறகோயும்;
கானுறும் பண்ணில் கனியுள்ளம் சீலத்தில்;
ஆன்றமையும் சாந்தி அகம்வர ஞாலத்தில்
தோன்றும் இறைமையில் தொல்லை அறுந்தோயும்!

இவையெதுவும் காணா(து) இளநெஞ்சம் இன்று
கவையென்று கொள்ளும் கணிணித் துறையில்
சுவையின்றிச் சொல்லின்றிச் சோப்புக் குமிழ்செய்(து)
அவையே நிலையென்(று) அவனியை வென்றே
தவமென்று கொண்டே தனிமை அறையில்
சவமென்று முடங்கி சலத்தில் அமிழ்வெய்தும்!

[கானுறும் = செவியுறும்; சீலத்தில் = ஒழுக்கத்தில்;
கவை = வேலை, அக்கறை; சலம் = சுழற்சி, பட்சபாதம்,
மாறுபாடு, போட்டி, பிடிவாதம்.]

--ரமணி, 13/04/2015

*****


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 09, 2015 3:54 am

கவிதைகள் நன்றாக உள்ளது அய்யா ... technical. டெர்ம்ஸ் சரியாக புரியவில்லை . இருந்தாலும் உங்கள் கவிதைகளை மட்டும் வாசித்தேன் . ரசித்தேன் அய்யா . தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 103459460 தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jun 15, 2015 7:04 pm

மிக்க நன்றி ஷோபனா அவர்களே.
ரமணி


ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Mon Jun 15, 2015 7:30 pm

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 103459460 தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக