புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10 
18 Posts - 95%
Geethmuru
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10 
145 Posts - 57%
heezulia
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10 
1 Post - 0%
Geethmuru
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 5:37 pm

First topic message reminder :

இது தான் எழுதும் முதல் கதை.....ஆச்சர்யப்படவேண்டாம் நண்பர்களே ! புன்னகை..........'இவர்' வெகு நாட்களாய் சொல்லிக்கொண்டே இருந்தார் "இவ்வளவு கதைகள் படிக்கிறே நீயே ஏன் ஒரு  கதை எழுதக்கூடாது என்று"...................இன்று  ஆரம்பித்திருக்கேன்  ..............எப்படி இருக்குமோ  தெரியலை................முதலில் Guest பார்வைக்கு வைக்கிறேன்  .....கருத்தை சொல்லுங்கள் உறவுகளே ! புன்னகை

அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

அந்த வீடு அலங்காரத்துடன் தயாராய் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். ஆமாம் கண்ணன் தம்பதிகளின் ஒரே பெண் ஸ்ருதி க்கு கல்யாணம். அயல்நாட்டிலிருந்து மாப்பிள்ளை வரவேண்டியது தான் பாக்கி, மீதி எல்லாம் தயராய்  இருந்தது. மாப்பிள்ளை தன்னுடன் வேலை செய்யும் இரண்டு நண்பர்களுடன் புறப்பட்டு விட்டார் என்று தகவல் வந்து விட்டது,   நாளை காலை அவர்கள் இங்கிருப்பர்கள்.

எனவே, கண்ணன் மீண்டும் ஒருமுறை மாப்பிள்ளை வீட்டார், அவர்களின் சுற்றம் மற்றும் நண்பர்கள்  தங்குவதற்கு செய்த ஏற்பாட்டை பார்த்து, திருப்தி அடைந்தார்.

மகளிடம்  சென்று புன்னகைத்தவாறே, "என்னம்மா  , உன்னவர்  கிளம்பி விட்டார் போல இருக்கே?" என்றார்.

அவளும் கொஞ்சம் வெட்கத்துடன் புன்னகைத்து , " ஆமாம் அப்பா, இப்போ தான் whatsup  இல் message  அனுப்பினார், கிளம்பிட்டார்களாம் , flight  இல் போன் அணைக்கும் முன் மீண்டும் மெசேஜ் செய்வதாக சொன்னார்" என்றாள்.  
அன்புடன் பெண்ணின் தலையை தடவிக்கொடுத்துவிட்டு அறைலிருந்து வெளியே வரவும் அவரின் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது. எடுத்து பேசியவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்து விட்டார், சத்தம் கேட்டு அறை லிருந்து ஸ்ருதி யும் உள்ளிருந்து அவரின்  மனைவி ராதாவும் ஓடிவந்தார்கள். போன் அப்போதும் கட் ஆகாமல் இருந்ததால், எடுத்து பேசினாள் ஸ்ருதி.

பேசியது மாப்பிள்ளை மாதவனின் அப்பா.... அவர் சொன்ன தகவல்.....ஸ்ருதிக்கும் மனது வலித்தது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, விஷயத்தை காதில் வாங்கினாள். பிறகு அப்பாவை பார்த்தாள். அதற்குள் வேலை செய்து கொண்டிருந்த வேலை ஆட்கள் ஓடி வந்து அவரை அருகே இருந்த சோபாவில் கிடத்தினார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்தாள் ராதா.

"என்ன ஆச்சுங்க? என்ன ஆச்சு?...ஸ்ருதி யார் போன் இல்?...என்ன விஷயம்? "  என்று மாறி மாறி கேட்டாள்.
கண்ணனால் பேச முடியவில்லி, நா தழு தழுத்தது................"நாம் மோசம் போனோம் ராதா" என்று கேவினார்.
ஸ்ருதி யாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை..............கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்த வண்ணம் இருந்தது.

பிறகு ஒருவழியாக சுதாதரித்து, கண்ணனே சொன்னார். " சம்பந்தி தான் போன் செய்தார், மாப்பிள்ளை  ஏர்போர்ட் அருகில் வரும்போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் தவறுதலாய் ஒரு குண்டு அவர்  மேல் பாய்ந்து விட்டதாம்............நண்பர்கள் மற்றும் போலிஸ் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று இருக்கிறர்களாம்......மாப்பிள்ளை இன் நண்பர் phone  செய்தாராம் " என்றார்.

அவ்வளவுதான், அங்கு சூழ்நிலையே மாறி விட்டது, ராதா வாய்விட்டு கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.
" ஐயோ ! இது என்ன சோதனை? கடவுளே, என ஒரே பெண்ணுக்கு இப்படி ஆகணுமா? " என்று புலம்பினாள்.
ஆள்  ஆளுக்கு இது போலவே நிகழ்ந்த, தங்களுக்கு தெரிந்த நிகழ்ச்சிகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். உறவுகள் இவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்தார்கள்.

"பெருமாளுக்கு முடிந்து வை, ஒண்ணும் ஆகாது "................

"கல்யாணத்தை  தள்ளி வெச்சுக்கலாம்  கவலைப்படாதே ! ".................

" நீங்க ரொம்ப பிரும்மாண்டமாய் ஏற்பாடு செய்திருக்கீங்க,  அது தான் திருஷ்டி, அவர் நலம் தான் என்று  அடுத்த போன் வந்துடும் பாரேன்"...............

இப்படி பலவகை ஆறுதல்கள் வந்தாலும், கண்ணன் தம்பதிகளின் மனம் ஏற்க மறுத்தது....................ஜோசியர் சொன்னதையே சுற்றி சுற்றி வந்தது.

"ஸ்ருதி இன் கல்யாணத்தில் ஒரு பெரிய தடங்கல் வரும் , கவலைப்படவேண்டாம் அது தெய்வாதீனமாய்  நீங்கும்"  என்று சொல்லி இருந்தார் அவர்.....ஆனால் அது மாப்பிள்ளை இன் உயிருக்கே ஆபத்து என்று நனைக்கவில்லை இவர்கள்.

ஸ்ருதி நிலைமையோ படு மோசம்..............கண்களில் வழிந்த கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவே இல்லை, நிச்சயதார்த்தத்தில்  பார்த்த மாதவனின்  அழகிய முகமும் அவனின் அருகாமையும் பேச்சுகளும் நினைவில் சுழன்று சுழன்று வந்து கொண்டே இருந்தது. அன்று பேசும்போது "நான்  லக்ஷத்தில் ஒருவன், உனக்கு கிடைத்திருக்கேன் " என்றாரே, அதனால் தான் எங்கோ படவேண்டிய குண்டு இவர் மேல் பாய்ந்ததா? என்று தன்னைத்தானே  கேட்டுக்கொண்டாள் .

எல்லோரைவிடவும் முதலில் சுதாதரித்தது  ராதா தான், " நாம் உடனே சம்பந்தி வீட்டுக்கு போகணும், அவர்கள் அல்லது அவங்க சொந்தங்கள், இதை அபசகுனமாய் நினைத்து , நம்ப ஸ்ருதியை அதிருஷ்டமில்லாதவள்  என்று  கல்யாணத்தை நிறுத்திடப்போறாங்க" என்றாள்.

துணுக்குற்ற  கண்ணனும் ஸ்ருதி யும் உடனே கிளம்பினார்கள் சம்பந்தி வீட்டுக்கு.

"நீ ஏன் மா? ' என்றார் கண்ணன்......

ஆனால் அழுது கொண்டே தன் கையை பற்றிய ஸ்ருதியை ஒன்றும் சொல்ல முடியாமல் அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள் சம்பந்தி வீட்டுக்கு.  அங்கு போனால், இவர்கள் வீட்டுக்கு சற்றும் குறையாத அலங்காரங்களுடன் இருந்தது வீடு...ஆனால் வீட்டில் தான் மயான அமைதி...........தயங்கியவாறே உள்ளே நுழைந்தனர்  தம்பதிகள்.

இவர்களைப் பார்த்ததும் சம்பந்தி மாமி ஓடோடி வந்தாள், " பாருங்க எப்படி ஆகிவிட்டது, யார் கண் பட்டதோ"  என்று அழ ஆரம்பித்தாள். ராதாவுக்கு   என்ன சொல்வதென்று தெரியாமல் கண்ணீர் பெருக்கியபடி அவரின் கைகளை படித்தவண்ணம் நின்றாள்.

அதற்குள் ரொம்ப சோகமாய் இருந்த சம்பந்தி மாமாவும் வந்து இருவரையும் உள்ளே அழைத்தார், பிறகு கேட்டார் " ஸ்ருதி வரலையா? "

கண்ணன் பதில் சொன்னார்" வந்திருக்கா...காரில் அழுது கொண்டே உட்கார்ந்து இருக்கா" என்று .

" அடாடா....கூப்பிடுங்கள்  அவளை, அவளுக்குத்தான் இப்போ நாம் ரொம்ப ஆறுதல் சொல்லணும், பாவம் சின்னப்பெண்" என்று சொல்லி தானே காருக்கு அருகில்  சென்றார். அதற்காகவே காத்திருந்தது போல உள்ளிருந்து ஸ்ருதி பாய்ந்து வெளியே வந்தாள் ..............'அப்பா'....என்று கேவிய படி மாமனார் காலில் விழுந்து வணங்கினாள்.

" என் துரதிருஷ்டம்  தான் அவருக்கு இப்படி .........." என்று தொடர்ந்து சொல்லும் முன் ....." என்ன ஸ்ருதி இது அசட்டுத்தனம்"?.....சீசி...........சீ ..... அப்படீல்லாம் மனதில் கூட நினைக்காதே அம்மா.....எழுந்திரு, உள்ளே போகலாம் " என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு உள்ளே நுழையவும் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

பாய்ந்து எடுத்தார்..............ஆனால் விஷயம்  கேட்டு "அய்யய்யோ" என்றார்................"பிறகு எப்படி" என்றார்..............போன் ஐ வைத்து விட்டார்......யாருக்கும் அவரிடம் விவரம் கேட்கவே அச்சமாக இருந்தது, அவரே  சுதாதரித்துக்கொண்டு   சொல்லட்டும் என்று நினைத்து  , அவரவர்கள் மனதில் பெருமாளுக்கு பல வேண்டுதல்களை வேண்டிக்கொண்டார்கள்.

இரண்டு நிமிடங்கள் இரண்டு யுகங்களாக கடந்தது, பிறகு அவர் சொன்னார், "மாதவனின் நண்பன்தான் போன் இல், குண்டு பாய்ந்தது இடது தோளில் இருதயத்துக்கு  சற்று மேலேயாம், டாக்டர்கள் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றுள்ளார்களாம் "  என்று .

இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது அவர்கள் அனைவருக்கும், இருதயத்துக்கு மேலே என்றால்???????????நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது.......யோசிக்கும் திறன் அறவே போய்விட்டது..............அப்படியே செதுக்கிய சிற்பம் போல அமர்ந்து விட்டனர் அனைவரும்.............எவ்வளவு நேரம் கடந்ததோ தெரியாது........அவர்கள்  எல்லோரையும் உயிர்பித்தது  telephone  னின் மணி ஓசை .

அது அடித்ததும் எடுக்கவே பயமாய் இருந்து சம்பந்தி மாமாவுக்கு, நாலு முறை அடித்ததும் தான் எடுத்தார், பேசியவர் சொல்ல வொண்ணா ஆனந்தத்தில் . ................"அப்படியா அப்படியா............ரொம்ப சந்தோஷம்..............எல்லாம் தெய்வாதீனம் தான்........நல்லபடி அவனை பார்த்துக்கோப்பா, உனக்கு ரொம்ப புண்ணியம் உண்டு, பெருமாள் உன்னை நன்னா  வைப்பார்......சரிப்பா மறுபடி கூப்பிடு..............."என்றல்லாம் சொன்னார்.

அவரின் வார்த்தைகளால் இங்குள்ளவர்களுக்கும் சந்தோஷம் தொற்றிக்கொண்டது, அப்படி என்ன தெய்வாதீனம்......ஜோசியர் சொன்ன வார்த்தைகளையே இந்த சம்பந்தி மாமாவும் சொல்கிறாரே என்று யோசித்தனர்  கண்ணன் தம்பதிகள். ஸ்ருதிக்கும் ஆவல் அதிகமானது, சம்பந்தி மாமியும் மாமா சொல்லப்போவதை கேட்க தயார் ஆனாள்.

மாமா ரொம்ப சந்தோஷமாய் போனை வைத்து விட்டு, கேளுடி, எல்லோரும்  கேளுங்கோ, மாதவனுக்கு treate  ment  செய்யும் டாக்டர் வெளியே வந்து, " இது ரொம்ப அபூர்வமான கேஸ்,  குண்டு heartkku  மேலே பாய்ந்தது என்னவோ வாஸ்தவம்.....ஆனால் மாதவனுக்கு ஹார்ட் அங்கு இல்லை.............அவருக்கு ஹார்ட் வலது புறம் மாறி இருக்கு............இது போல லக்ஷத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும்...........ஸோ டோன்ட் வொர்ரி நாங்கள் operate  செய்து குண்டை   எடுத்துக்கொண்டிருக்கோம், நீங்கள் வீட்டுக்கு தகவல் சொல்லலாம், கவலை வேண்டாம்..... இதை சொல்லத்தான் வந்தேன்"  என்றாராம்.

எல்லோரும் வானத்தை நோக்கி வணங்கினர், ஸ்ருதிக்கு அப்போது தான் புரிந்தது அன்று மாதவன் ஏன் தான் லக்ஷத்தில் ஒருவன் என்று சொன்னான் என்று.

பி . கு.  : மீண்டும் ஒலித்த போனிலும் நல்ல செய்தி தான் வந்தது, ஆபரேஷன் செய்து வெற்றிகரமாய் குண்டை  எடுத்துவிட்டார்கள் என்றும், ஒரு 2 நாள் வைத்திருந்து விட்டு, 'ஸ்டேச்சர் ' இல் வைத்து பாது காப்பாக இந்தியா அனுப்பிவைப்பதாக டாக்டர்கள் சொல்லியதாக  மாதவனின் நண்பன் சொன்னான்................போன உயிர் எல்லோருக்கும் திரும்பியது .

க்ரிஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 6:32 pm

M.M.SENTHIL wrote:அப்படி துவண்ட எனக்கு தோள் கொடுத்ததால்தானே நான் இன்று உங்கள் முன் தெரிகிறேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1117102

ம்...புரிகிறது செந்தில் புன்னகை ஆறுதல் ஆறுதல் ஆறுதல் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 25, 2015 10:10 pm

கன்னி முயற்சி போல் தெரியவில்லை .
லக்ஷத்தில் ஒரு கதைதான் இதுமாதிரி அமையும் .
எதாவது பத்திரிகைக்கு அனுப்பலாமே !

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 OTlj4Uw8TlGPW5sxhz1S+0107-flowers

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 10:19 pm

T.N.Balasubramanian wrote:கன்னி முயற்சி போல் தெரியவில்லை .
லக்ஷத்தில் ஒரு கதைதான் இதுமாதிரி அமையும் .
எதாவது பத்திரிகைக்கு அனுப்பலாமே !

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 OTlj4Uw8TlGPW5sxhz1S+0107-flowers

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1117162

ஆஹா.....ரொம்ப சந்தோஷமாய் இருக்கு ஐயா புன்னகை ..........................மிக்க நன்றி, எனக்கு தெரியலையே ஐயா, எந்த பத்திரிக்கைக்கு அனுப்பணும், எப்படி அனுப்பணும்.............கொஞ்சம் சொல்லுங்களேன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jan 26, 2015 4:03 am

சகோதரி ,  இன்றுதான் தங்கள்கதையை  பார்த்தேன்  படித்தேன்....நல்ல உயிரூட்டமான கற்பனை........ஏன் லட்சியத்தில்  ஒருவராகக்கூட  சொல்லலாமே......பாராட்டி பதிவு செய்கிறேன். பணி தொடர்க வெல்க.........

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 26, 2015 11:10 am

P.S.T.Rajan wrote:சகோதரி ,  இன்றுதான் தங்கள்கதையை  பார்த்தேன்  படித்தேன்....நல்ல உயிரூட்டமான கற்பனை........ஏன் லட்சியத்தில்  ஒருவராகக்கூட  சொல்லலாமே......பாராட்டி பதிவு செய்கிறேன். பணி தொடர்க வெல்க.........
மேற்கோள் செய்த பதிவு: 1117187

ரொம்ப நன்றி ராஜன் அண்ணா புன்னகை.................... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82455
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 26, 2015 4:56 pm

யதார்த்தமான கதை...
படிக்க ஆரம்பித்தவுடன், தொடர்ந்து படிக்கத் தூண்டும்
சரளமான நடை..
-
அருமை, அருமை,,
-
தயக்கம் ஏதும் இல்லாமல் சிறுகதை முயற்சிகளை தொடருங்கள்...
-
வாழ்த்துகள்...
-
---------------------------------------------------
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 3838410834 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 3838410834 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 3838410834
-
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jan 26, 2015 5:49 pm

அக்கா, உங்கள் கதை சூப்பர் அக்கா, படித்து முடித்து விட்டு தான் கருத்தை கருத்தாக எழுதுகிறேன். பல கதைகள் எழுதிய அனுபவம் நிச்சயமாக உங்களுக்கு இருந்திருக்கும். கதையின் நாயகன் மட்டும் லட்சத்தின் ஒருவன் அல்ல, உங்கள் கதையும் லட்சத்தில் ஒன்று தான். ரத்தின சுருக்கமாக வரைந்து , மங்களமாக முடிந்துள்ளது எங்கள் அன்பான அக்காவின் அற்புத கதை. தொடருங்கள் அக்கா. தம்பியின் வாழ்த்துகள்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Jan 26, 2015 6:50 pm

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 QbZ7qqBS960oWQFvWE1g+gold-medal-con
அம்மா கிருஷ்ணம்மா ,
உங்களுக்குள் ஒரு கதாசிரியை ஒளித்திருந்திருக்கிறார்,
உங்களுடைய கணவர்தான் அதைக் கண்டுபிடித்திருக்கிறார்,
முதல் கதையே இப்படியென்றால்
உங்களால் நல்ல படைப்புகளை நிச்சயம் எழுத முடியும்.
கதையை படிக்க ஆரம்பித்ததும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது.
உங்களுக்கு எழுதும் ஆற்றல் இருக்கிறது,
நீங்கள் எழுத எடுக்கும் கருப்பொருள் மக்களை சிந்திக்க தூண்டக்கூடியதாக இருந்தால் நல்ல வரவேற்பைப் பெறும்.
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்.

இன்றுதான் இந்த பதிவை கவனித்தேன்.



நேர்மையே பலம்
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 5no
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jan 26, 2015 8:00 pm

இன்றுதான் இந்த பதிவை கவனித்தேன். 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 1757813334

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 ViJkPjzfQhGwx4pbyshO+music-trophy-awards-3h4gNg

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 WRHxntCIQki7V08Xh4YS+gold-metal-winner-ribbon-20297562

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 103459460 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 103459460 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 103459460

நாளை வருகிறேன் ...
நான் ஆபீஸ் இல் உள்ளேன் ..


'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 1757813334 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 1757813334





krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 26, 2015 8:11 pm

ayyasamy ram wrote:யதார்த்தமான கதை...
படிக்க ஆரம்பித்தவுடன், தொடர்ந்து படிக்கத் தூண்டும்
சரளமான நடை..
-
அருமை, அருமை,,
-
தயக்கம் ஏதும் இல்லாமல் சிறுகதை முயற்சிகளை தொடருங்கள்...
-
வாழ்த்துகள்...
-
---------------------------------------------------
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 3838410834 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 3838410834 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) - Page 2 3838410834
-
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ரொம்ப நன்றி ராம் அண்ணா, இன்றும் ஒன்று எழுதி இருக்கேன்.படித்து பாருங்கோ, உங்களை போல பெரியவர்கள் ஆசி இருந்தால் எதைத்தான் சாதிக்க முடியாது ? புன்னகை...................... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக