புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?
ஒரு வேடிக்கையான கதை மருத்துவ வட்டாரங்களில் உலவி வருகிறது. கி.மு. 2000-ம் ஆண்டில் ஒருவனுக்கு ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் இந்தப் பச்சிலையை அல்லது இந்த வேரைச் சாப்பிடு என்றார்கள் மருத்துவர்கள். பின்னர்க் கி.மு.1000-ம் ஆண்டில் ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் வேரையோ, பச்சிலையையோ சாப்பிடாதே, அது கடவுளால் ஆசீர்வதிக்கப்படவில்லை. பூஜை செய், ஜெபம் பண்ணு, தொழுகை நடத்து என்று மாந்திரீக நடவடிக்கைகளைச் செய்யச் சொன்னார்கள்.
கி.பி. 1850-களில் அதெல்லாம் மாந்திரீகம், மூடப்பழக்கம் இதோ இந்தக் கஷாயத்தைக் குடி என்றார்கள். கி.பி.1950-களில் கஷாயம் எல்லாம் விஷம், இதோ சோதனைச்சாலைகளில் நிரூபிக்கப்பட்ட மாத்திரை, இதைச் சாப்பிடு என்றார்கள். கி.பி. 1980-களில் மாத்திரைகள் போதாது. இதோ நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotics) சாப்பிடுங்கள் என்றார்கள். இப்போது கி.பி. 2000-ம் ஆண்டில் மறுபடியும் பச்சிலையையோ, வேரையோ சாப்பிடச் சொல்கிறார்கள்!?. இந்தக் கதையிலுள்ள முக்கியமான விஷயம் மாற்றம் அல்ல. இயற்கைக்குத் திரும்புதலே மனிதக் குலத்துக்குக் கடைசி வழி என்பதுதான்.
அற்புத உயிராற்றல்
ஒரு மருத்துவரிடம் சென்று எனக்குக் காய்ச்சல், சளி, இருமல், தும்மல், என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ, இரண்டோ நுண்ணுயிர்க்கொல்லிகளையும் தன்னுடைய மருந்துச்சீட்டில் எழுதித் தருகிறார். அதை வாங்கிச் சாப்பிடுகிறோம். எல்லாம் சரியாகிவிடுகிறது. உண்மையில் எல்லாம் சரியாகி விட்டதா? முதலில் நமது உடல் தனக்குள் ஏற்படுகிற பாதிப்புகளை நம்முடைய பாதுகாப்பு அமைப்புக்கும், நமக்கும் தெரியப்படுத்துகிற அறிகுறிகளே காய்ச்சல், சளி, தும்மல், இருமல் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்னொரு வகையில் உடலின் உயிராற்றலைப் பாதிக்கும் நுண்ணுயிரிகள் (வைரஸ்கள், பாக்டீரியாக்கள்) உடலுக்குள் நுழைந்திருப்பதைச் சொல்லும் எச்சரிக்கைதான், இந்த வெளிப்படையான பாதிப்புகள். இந்த எச்சரிக்கை நம்முடைய பாதுகாப்பு படையணிகள் யுத்தத்துக்குத் தயாராகச் சொல்வதற்கும் யுத்தம் நடத்துவதற்குமான முழக்கம்.
நம்முடைய உடலின் பாதுகாப்பு அமைப்பின் இன்னொரு விசேஷமான காரியம். ஒரு முறை உடலில் நுழைந்து உயிராற்றலுக்கும் உடலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் பயோடேட்டாவை, தன்னுடைய ஞாபகத்தொகுப்புகளில் பத்திரப்படுத்திக் கொள்ளும். அது மட்டுமல்ல எதிரி நுண்ணுயிரியின் யுத்த முறைகளையும், யுத்தத் தந்திரங்களையும் அதற்கு எதிராக எடுத்த எதிர் நடவடிக்கைகளையும்கூடத் தன்னுடைய நினைவு அடுக்குகளில் பதிவு செய்துகொள்ளும்.
பலமும் பலவீனமும்
ஒரு முறை கொன்றொழித்த நுண்ணுயிரிகள் மீண்டும் உடலுக்குள் நுழைந்தால்போதும், உடனே ஒரு பொத்தானைத் தட்டி தன்னுடைய ஞாபகத் தொகுப்பிலிருந்து அந்த நுண்ணுயிரியை எதிர்கொள்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் கணப்பொழுதில் எடுத்துவிடும். ஆனால், உடலினுள்ளே நுழைந்திருக்கும் நுண்ணுயிரியின் தன்மைகளைப் பற்றி நமது பாதுகாப்பு அமைப்பு அறியத் தொடங்குவதற்கு முன்னதாகவே நாம் சாப்பிடும் நுண்ணுயிர்க்கொல்லிகள் அவற்றை அழித்துவிடுகின்றன.
அதனால் நம்முடைய பாதுகாப்பு அமைப்பில் அந்த நுண்ணுயிரிகளைப் பற்றிய எந்தப் பதிவுகளும் இல்லாமல் போய்விடுகிறது. அதற்குப் பிறகு எப்போது அந்த நுண்ணுயிரிகள் தாக்குதல் தொடுக்கும்போதும், வெளியிலிருந்து நுண்ணுயிர்க்கொல்லியின் ஆதரவு தேவைப்படும் அளவுக்கு உடல் பலவீனமாகி விடும். தூண்டத் தூண்ட துலங்கும் விளக்கு போலத்தான் நம்முடைய பாதுகாப்பு அமைப்பும் நுண்ணுயிரிகளின் தாக்குதல்களைத் தானே சமாளிக்கும்போது மேலும் மேலும் பலம் பெறும்.
பாக்டீரிசியான்
நமது உடல் ஆரோக்கியமாக, முழு பலத்துடன், உற்சாகமாக இயங்குவதற்கு நமது உடலுக்குள்ளேயே சுமார் ஒன்றரைக் கிலோ அளவுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவை நமது உடலின் நண்பர்கள். இந்த நண்பர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றால், நமது உடல் மெல்ல மெல்ல நலிவடையும். இவர்களுடைய இருத்தல் மிக மிக அவசியம்.
நாம் தனியாகச் சாப்பிடும் நுண்ணுயிர்க்கொல்லிக்கு என்ன தெரியும்? அதன் வேலை நுண்ணுயிரிகளை அழிப்பது. அந்த நுண்ணுயிரிகள் நல்லவையா? கெட்டவையா? என்பதைப் பற்றி அதற்குக் கவலையில்லை. அழிக்கப்போகிற நுண்ணுயிரிகளின் வேலைகளைப் பற்றியும் அதற்குத் தெரியாது. ஆக, அது உடலுக்குள் புகுந்து நுண்ணுயிரிகள் அனைத்தையும், நல்லது கெட்டது அனைத்தையும் அழிக்கிறது.
நமது உடலில் நுழையும் தீய பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை தொற்று போன்றவற்றை எதிர்க்கும் முதல் படையணி உடலில் உள்ள நன்மை நுண்ணுயிரிகள்தான். அது மட்டுமல்லாமல் அவை உடலுக்குத் தேவையான வைட்டமின் பியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், தொற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுகின்றன. அதோடு அவை பாக்டீரிசியான் (bactericions) என்ற பொருளையும் உற்பத்தி செய்கின்றன. இந்தப் பாக்டீரிசியான்கள் இயற்கையான நுண்ணுயிர்க்கொல்லியாகச் செயல்படுகின்றன.
என்ன பாதிப்பு?
இத்தகைய நன்மை நுண்ணுயிரிகளையும் சேர்த்து நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் கொன்றுவிடுகின்றன. ஒரு முறை நீங்கள் எடுக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளால் அழிந்துவிடும் நன்மை நுண்ணுயிரிகள் திரும்பவும் உருவாக, குறைந்தது ஆறு மாதங்களாகும்.
அது மட்டுமல்ல தொடர்ந்து வெளியிலிருந்து சாப்பிடும் நுண்ணுயிர்க்கொல்லிகளால் தீமை பாக்டீரியாக்களுக்கும், வைரஸ்களுக்கும் தற்காப்புத் திறன் கூடிக்கொண்டே போகிறது. அதனால், வெளியிலிருந்து எடுக்கும் நுண்ணுயிர்க்கொல்லிகளின் அளவும் கூடிக்கொண்டே போகிறது. தேவைக்கு அதிகமான நுண்ணுயிர்க்கொல்லிகளை வெளியேற்றும் பணியைச் செய்யும் சிறுநீரகங்களும் சிரமப்படும். அளவுக்கு அதிகமான வேலைப்பளுவால் சில நேரம் சிறுநீரகங்கள் வேலைநிறுத்தம் செய்யவும் கூடும். உடல் பலவீனமடையும்.
எனவே, அநாவசியமாக நுண்ணுயிர்க்கொல்லிகளைச் சாப்பிடக் கூடாது. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவி செய்வதே மருத்துவர்களின் தலையாய கடமை. எனவே, அவர்களும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
சரி, இயற்கையான எதிர்ப்புச்சக்தியை எப்படி அதிகரிப்பது? எதற்கெடுத்தாலும் மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும். உடல் தன்னுடைய பாதுகாப்பு படையைப் பயன்படுத்த அவகாசம் தரவேண்டும். தீமை நுண்ணுயிரிகளும் நன்மை நுண்ணுயிரிகளும் நம் உடலில் அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதற்கு நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கமே முக்கியமான காரணம்.
எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு, சரிவிகித உணவு அவசியம். இந்த உணவே நம்முடைய எதிர்ப்புச்சக்தியைத் தூண்டிப் பாதுகாப்புப் படைக்குப் பலத்தைத் தரும். அந்தப் பலத்தால் எந்தத் தீய நுண்ணுயிரிகளையும் நமது உயிராற்றல் அழித்து, ஆரோக்கியத்தை நிலைநாட்டும்.
நன்றி கட்டுரையாளர், உதயசங்கர்
ரமணியன்
ஒரு வேடிக்கையான கதை மருத்துவ வட்டாரங்களில் உலவி வருகிறது. கி.மு. 2000-ம் ஆண்டில் ஒருவனுக்கு ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் இந்தப் பச்சிலையை அல்லது இந்த வேரைச் சாப்பிடு என்றார்கள் மருத்துவர்கள். பின்னர்க் கி.மு.1000-ம் ஆண்டில் ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் வேரையோ, பச்சிலையையோ சாப்பிடாதே, அது கடவுளால் ஆசீர்வதிக்கப்படவில்லை. பூஜை செய், ஜெபம் பண்ணு, தொழுகை நடத்து என்று மாந்திரீக நடவடிக்கைகளைச் செய்யச் சொன்னார்கள்.
கி.பி. 1850-களில் அதெல்லாம் மாந்திரீகம், மூடப்பழக்கம் இதோ இந்தக் கஷாயத்தைக் குடி என்றார்கள். கி.பி.1950-களில் கஷாயம் எல்லாம் விஷம், இதோ சோதனைச்சாலைகளில் நிரூபிக்கப்பட்ட மாத்திரை, இதைச் சாப்பிடு என்றார்கள். கி.பி. 1980-களில் மாத்திரைகள் போதாது. இதோ நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotics) சாப்பிடுங்கள் என்றார்கள். இப்போது கி.பி. 2000-ம் ஆண்டில் மறுபடியும் பச்சிலையையோ, வேரையோ சாப்பிடச் சொல்கிறார்கள்!?. இந்தக் கதையிலுள்ள முக்கியமான விஷயம் மாற்றம் அல்ல. இயற்கைக்குத் திரும்புதலே மனிதக் குலத்துக்குக் கடைசி வழி என்பதுதான்.
அற்புத உயிராற்றல்
ஒரு மருத்துவரிடம் சென்று எனக்குக் காய்ச்சல், சளி, இருமல், தும்மல், என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ, இரண்டோ நுண்ணுயிர்க்கொல்லிகளையும் தன்னுடைய மருந்துச்சீட்டில் எழுதித் தருகிறார். அதை வாங்கிச் சாப்பிடுகிறோம். எல்லாம் சரியாகிவிடுகிறது. உண்மையில் எல்லாம் சரியாகி விட்டதா? முதலில் நமது உடல் தனக்குள் ஏற்படுகிற பாதிப்புகளை நம்முடைய பாதுகாப்பு அமைப்புக்கும், நமக்கும் தெரியப்படுத்துகிற அறிகுறிகளே காய்ச்சல், சளி, தும்மல், இருமல் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்னொரு வகையில் உடலின் உயிராற்றலைப் பாதிக்கும் நுண்ணுயிரிகள் (வைரஸ்கள், பாக்டீரியாக்கள்) உடலுக்குள் நுழைந்திருப்பதைச் சொல்லும் எச்சரிக்கைதான், இந்த வெளிப்படையான பாதிப்புகள். இந்த எச்சரிக்கை நம்முடைய பாதுகாப்பு படையணிகள் யுத்தத்துக்குத் தயாராகச் சொல்வதற்கும் யுத்தம் நடத்துவதற்குமான முழக்கம்.
நம்முடைய உடலின் பாதுகாப்பு அமைப்பின் இன்னொரு விசேஷமான காரியம். ஒரு முறை உடலில் நுழைந்து உயிராற்றலுக்கும் உடலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் பயோடேட்டாவை, தன்னுடைய ஞாபகத்தொகுப்புகளில் பத்திரப்படுத்திக் கொள்ளும். அது மட்டுமல்ல எதிரி நுண்ணுயிரியின் யுத்த முறைகளையும், யுத்தத் தந்திரங்களையும் அதற்கு எதிராக எடுத்த எதிர் நடவடிக்கைகளையும்கூடத் தன்னுடைய நினைவு அடுக்குகளில் பதிவு செய்துகொள்ளும்.
பலமும் பலவீனமும்
ஒரு முறை கொன்றொழித்த நுண்ணுயிரிகள் மீண்டும் உடலுக்குள் நுழைந்தால்போதும், உடனே ஒரு பொத்தானைத் தட்டி தன்னுடைய ஞாபகத் தொகுப்பிலிருந்து அந்த நுண்ணுயிரியை எதிர்கொள்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் கணப்பொழுதில் எடுத்துவிடும். ஆனால், உடலினுள்ளே நுழைந்திருக்கும் நுண்ணுயிரியின் தன்மைகளைப் பற்றி நமது பாதுகாப்பு அமைப்பு அறியத் தொடங்குவதற்கு முன்னதாகவே நாம் சாப்பிடும் நுண்ணுயிர்க்கொல்லிகள் அவற்றை அழித்துவிடுகின்றன.
அதனால் நம்முடைய பாதுகாப்பு அமைப்பில் அந்த நுண்ணுயிரிகளைப் பற்றிய எந்தப் பதிவுகளும் இல்லாமல் போய்விடுகிறது. அதற்குப் பிறகு எப்போது அந்த நுண்ணுயிரிகள் தாக்குதல் தொடுக்கும்போதும், வெளியிலிருந்து நுண்ணுயிர்க்கொல்லியின் ஆதரவு தேவைப்படும் அளவுக்கு உடல் பலவீனமாகி விடும். தூண்டத் தூண்ட துலங்கும் விளக்கு போலத்தான் நம்முடைய பாதுகாப்பு அமைப்பும் நுண்ணுயிரிகளின் தாக்குதல்களைத் தானே சமாளிக்கும்போது மேலும் மேலும் பலம் பெறும்.
பாக்டீரிசியான்
நமது உடல் ஆரோக்கியமாக, முழு பலத்துடன், உற்சாகமாக இயங்குவதற்கு நமது உடலுக்குள்ளேயே சுமார் ஒன்றரைக் கிலோ அளவுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவை நமது உடலின் நண்பர்கள். இந்த நண்பர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றால், நமது உடல் மெல்ல மெல்ல நலிவடையும். இவர்களுடைய இருத்தல் மிக மிக அவசியம்.
நாம் தனியாகச் சாப்பிடும் நுண்ணுயிர்க்கொல்லிக்கு என்ன தெரியும்? அதன் வேலை நுண்ணுயிரிகளை அழிப்பது. அந்த நுண்ணுயிரிகள் நல்லவையா? கெட்டவையா? என்பதைப் பற்றி அதற்குக் கவலையில்லை. அழிக்கப்போகிற நுண்ணுயிரிகளின் வேலைகளைப் பற்றியும் அதற்குத் தெரியாது. ஆக, அது உடலுக்குள் புகுந்து நுண்ணுயிரிகள் அனைத்தையும், நல்லது கெட்டது அனைத்தையும் அழிக்கிறது.
நமது உடலில் நுழையும் தீய பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை தொற்று போன்றவற்றை எதிர்க்கும் முதல் படையணி உடலில் உள்ள நன்மை நுண்ணுயிரிகள்தான். அது மட்டுமல்லாமல் அவை உடலுக்குத் தேவையான வைட்டமின் பியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், தொற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுகின்றன. அதோடு அவை பாக்டீரிசியான் (bactericions) என்ற பொருளையும் உற்பத்தி செய்கின்றன. இந்தப் பாக்டீரிசியான்கள் இயற்கையான நுண்ணுயிர்க்கொல்லியாகச் செயல்படுகின்றன.
என்ன பாதிப்பு?
இத்தகைய நன்மை நுண்ணுயிரிகளையும் சேர்த்து நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் கொன்றுவிடுகின்றன. ஒரு முறை நீங்கள் எடுக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளால் அழிந்துவிடும் நன்மை நுண்ணுயிரிகள் திரும்பவும் உருவாக, குறைந்தது ஆறு மாதங்களாகும்.
அது மட்டுமல்ல தொடர்ந்து வெளியிலிருந்து சாப்பிடும் நுண்ணுயிர்க்கொல்லிகளால் தீமை பாக்டீரியாக்களுக்கும், வைரஸ்களுக்கும் தற்காப்புத் திறன் கூடிக்கொண்டே போகிறது. அதனால், வெளியிலிருந்து எடுக்கும் நுண்ணுயிர்க்கொல்லிகளின் அளவும் கூடிக்கொண்டே போகிறது. தேவைக்கு அதிகமான நுண்ணுயிர்க்கொல்லிகளை வெளியேற்றும் பணியைச் செய்யும் சிறுநீரகங்களும் சிரமப்படும். அளவுக்கு அதிகமான வேலைப்பளுவால் சில நேரம் சிறுநீரகங்கள் வேலைநிறுத்தம் செய்யவும் கூடும். உடல் பலவீனமடையும்.
எனவே, அநாவசியமாக நுண்ணுயிர்க்கொல்லிகளைச் சாப்பிடக் கூடாது. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவி செய்வதே மருத்துவர்களின் தலையாய கடமை. எனவே, அவர்களும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
சரி, இயற்கையான எதிர்ப்புச்சக்தியை எப்படி அதிகரிப்பது? எதற்கெடுத்தாலும் மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும். உடல் தன்னுடைய பாதுகாப்பு படையைப் பயன்படுத்த அவகாசம் தரவேண்டும். தீமை நுண்ணுயிரிகளும் நன்மை நுண்ணுயிரிகளும் நம் உடலில் அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதற்கு நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கமே முக்கியமான காரணம்.
எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு, சரிவிகித உணவு அவசியம். இந்த உணவே நம்முடைய எதிர்ப்புச்சக்தியைத் தூண்டிப் பாதுகாப்புப் படைக்குப் பலத்தைத் தரும். அந்தப் பலத்தால் எந்தத் தீய நுண்ணுயிரிகளையும் நமது உயிராற்றல் அழித்து, ஆரோக்கியத்தை நிலைநாட்டும்.
நன்றி கட்டுரையாளர், உதயசங்கர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு, சரிவிகித உணவு அவசியம். இந்த உணவே நம்முடைய எதிர்ப்புச்சக்தியைத் தூண்டிப் பாதுகாப்புப் படைக்குப் பலத்தைத் தரும். அந்தப் பலத்தால் எந்தத் தீய நுண்ணுயிரிகளையும் நமது உயிராற்றல் அழித்து, ஆரோக்கியத்தை நிலைநாட்டும்.//
அருமையான அறிவுரை, அருமையான பகிர்வு ஐயா ....நன்றி !
அருமையான அறிவுரை, அருமையான பகிர்வு ஐயா ....நன்றி !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|