புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது.
மெல்பர்னில் இன்று நடந்த பி-பிரிவு ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு இந்திய அணி 307 ஓட்டங்களை குவித்திருந்தது.
தென்னாப்பிரிக்க அணி 40.2 ஓவர்கள் முடிவில் 177 ஓட்டங்கள் மட்டுமே குவித்திருந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவிக்கொண்டது.
இந்திய அணியில் ஷிக்கார் தவான் ஆபாரமாக ஆடி 137 ஓட்டங்களையும் அஜின்க்யா ரஹானே 79 ஓட்டங்களையும் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
விராத் கோலி 46 ஓட்டங்களையும் மகேந்திர சிங் தோனி 18 ஓட்டங்களையும் எடுத்திருந்தினர்.
தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக பாப் டு பிளெஸிஸ் 55 ஓட்டங்களைக் குவித்திருந்தார். டி வில்லியர்ஸ் 30 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 10 ஓவர்களில் 41 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
மொஹமட் ஷமி மற்றும் மோஹித் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை 177 ஓட்டங்களுக்குள் சுருட்டினர்.
நடப்பு சாம்பியனான இந்தியா இம்முறை உலகக்கோப்பை போட்டிகளில் பங்குபற்றிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
பாகிஸ்தானுடனான முதல் போட்டியை 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, பி-பிரிவில் 4 புள்ளிகளுடன் இந்தியா முன்னணியில் உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது.
மெல்பர்னில் இன்று நடந்த பி-பிரிவு ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு இந்திய அணி 307 ஓட்டங்களை குவித்திருந்தது.
தென்னாப்பிரிக்க அணி 40.2 ஓவர்கள் முடிவில் 177 ஓட்டங்கள் மட்டுமே குவித்திருந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவிக்கொண்டது.
இந்திய அணியில் ஷிக்கார் தவான் ஆபாரமாக ஆடி 137 ஓட்டங்களையும் அஜின்க்யா ரஹானே 79 ஓட்டங்களையும் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
விராத் கோலி 46 ஓட்டங்களையும் மகேந்திர சிங் தோனி 18 ஓட்டங்களையும் எடுத்திருந்தினர்.
தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக பாப் டு பிளெஸிஸ் 55 ஓட்டங்களைக் குவித்திருந்தார். டி வில்லியர்ஸ் 30 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 10 ஓவர்களில் 41 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
மொஹமட் ஷமி மற்றும் மோஹித் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை 177 ஓட்டங்களுக்குள் சுருட்டினர்.
நடப்பு சாம்பியனான இந்தியா இம்முறை உலகக்கோப்பை போட்டிகளில் பங்குபற்றிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
பாகிஸ்தானுடனான முதல் போட்டியை 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, பி-பிரிவில் 4 புள்ளிகளுடன் இந்தியா முன்னணியில் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஷிகர் தவனின் 'தொடர்ச்சி'
தொடக்கம் முதலே அருமையான செட்டிங். துணைக்கண்டம் போன்ற பிட்ச், மைதானம் முழுதும் இந்திய ரசிகர்கள். நல்ல வெயில். டாஸில் வெற்றி என்று இந்திய அணிக்கு அனைத்தும் சாதககமாகவே அமைந்தது.
தொடக்கத்தில் ஷிகார் தவண், ரோஹித் சர்மா நிதானமாக ஆடினர். ரோஹித் சர்மா 6 பந்துகளில் ரன்கள் இல்லை. ஆனால், அவர் தேவையில்லாத ரன் அவுட் என்றே கூற வேண்டும். நீண்ட தூரம் அவர் ஓடிவிட்டார். மிஸ் ஃபீல்டிற்கு எப்போதும் ரன் ஓடக்கூடாது என்பதே நியதி. ஏனெனில் அது முழுதான மிஸ் பீல்ட் அல்ல. பந்தும் ஃபீல்டர் கையில் பட்டு நீண்ட தூரம் செல்லவில்லை. இப்படியாக ஒரு அதிரடி வீரர் ரன் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய அனுகூலத்தை அளித்திருக்கும்.
ஆனால், ஷிகார் தவண் சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கார்டிஃபில் சதம் எடுத்த அதே இன்னிங்ஸின் தொடர்ச்சி போலவே இன்றும் ஆடினார்.
விராட் கோலி வழக்கம் போல் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்தவே ஃபீல்டிங்கில் மிகவும் 'டைட்' ஆக இருந்த தென் ஆப்பிரிக்கா சற்றே சோடைப் போகத் தொடங்கியது.
தவணும் கோலியும் ஸ்கோரை 14-வது ஓவரில் 56 ரன்களுக்கு உயர்த்தினர். அதில் தவண் 38, கோலி 18. கூடுதல் ரன்களை தென் ஆப்பிரிக்கா அளிக்கவில்லை அவ்வளவு ஒழுக்கமான பந்துவீச்சாக அமைந்தது.
தொடக்கம் முதலே அருமையான செட்டிங். துணைக்கண்டம் போன்ற பிட்ச், மைதானம் முழுதும் இந்திய ரசிகர்கள். நல்ல வெயில். டாஸில் வெற்றி என்று இந்திய அணிக்கு அனைத்தும் சாதககமாகவே அமைந்தது.
தொடக்கத்தில் ஷிகார் தவண், ரோஹித் சர்மா நிதானமாக ஆடினர். ரோஹித் சர்மா 6 பந்துகளில் ரன்கள் இல்லை. ஆனால், அவர் தேவையில்லாத ரன் அவுட் என்றே கூற வேண்டும். நீண்ட தூரம் அவர் ஓடிவிட்டார். மிஸ் ஃபீல்டிற்கு எப்போதும் ரன் ஓடக்கூடாது என்பதே நியதி. ஏனெனில் அது முழுதான மிஸ் பீல்ட் அல்ல. பந்தும் ஃபீல்டர் கையில் பட்டு நீண்ட தூரம் செல்லவில்லை. இப்படியாக ஒரு அதிரடி வீரர் ரன் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய அனுகூலத்தை அளித்திருக்கும்.
ஆனால், ஷிகார் தவண் சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கார்டிஃபில் சதம் எடுத்த அதே இன்னிங்ஸின் தொடர்ச்சி போலவே இன்றும் ஆடினார்.
விராட் கோலி வழக்கம் போல் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்தவே ஃபீல்டிங்கில் மிகவும் 'டைட்' ஆக இருந்த தென் ஆப்பிரிக்கா சற்றே சோடைப் போகத் தொடங்கியது.
தவணும் கோலியும் ஸ்கோரை 14-வது ஓவரில் 56 ரன்களுக்கு உயர்த்தினர். அதில் தவண் 38, கோலி 18. கூடுதல் ரன்களை தென் ஆப்பிரிக்கா அளிக்கவில்லை அவ்வளவு ஒழுக்கமான பந்துவீச்சாக அமைந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆம்லா செய்த மிகப் பெரிய தவறு... ஆட்டத்தின் முதல் திருப்புமுனை:
ஷிகர் தவண் தனது அரைசதத்தை 73 பந்துகளில் பூர்த்தி செய்தார். அதில் 8 பவுண்டரிகள். இதில் மோர்னி மோர்கெல், டேல் ஸ்டெயின், வெய்ன் பார்னெல், பிலாண்டர் ஆகியோர் பந்து வீச்சில் அடித்த பவுண்டரிகள் அபாரம்.
அவர் 53 ரன்கள் எடுத்து மிகவும் பலமாகச் சென்று கொண்டிருந்தபோது ஆட்டத்தின் 20-வது ஓவரை பார்னெல் வீச, முதல் பந்து ஷாட் ஆக விழ, தவண் அதை கட் செய்தார். பந்து காற்றில் பேக்வர்ட் பாயிண்ட் திசைக்குச் சென்றது. ஆம்லா வலது புறம் டைவ் அடித்து பிடிக்க முயன்றார். இரு கைகளையும் கொண்டு சென்றும் பந்தைப் பிடிக்காமல் கோட்டைவிட்டார். இந்த விடப்பட்ட கேட்ச் ஆட்டத்தின் முதல் திருப்பு முனை.
அதன் பிறகு பார்னெல் பந்தை விளாசத் தொடங்கினார். முதலில் 2 பவுண்டரிகள் விளாசினார். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சில் ஒழுக்கம் குலைந்து ஷாட் பிட்ச், லெக் திசைப் பந்துகள் என்று தவணுக்கு எளிதான பந்துகள் வந்து விழுந்தன. தவண் விடப்பட்ட கேட்சுக்குப் பிறகு பலமாகச் செல்ல விராட் கோலி 3 பவுண்டரிகளுடன் 59 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிர் வீசிய அரைக்குழி பந்தை எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்கலாம். ஆனால் நேராக ஷாட் மிட்விக்கெட்டில் டுபிளேசியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவண், கோலி இணைந்து 24 ஓவர்களில் 127 ரன்கள் சேர்த்து அருமையான ஓர் அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
ஷிகர் தவண் தனது அரைசதத்தை 73 பந்துகளில் பூர்த்தி செய்தார். அதில் 8 பவுண்டரிகள். இதில் மோர்னி மோர்கெல், டேல் ஸ்டெயின், வெய்ன் பார்னெல், பிலாண்டர் ஆகியோர் பந்து வீச்சில் அடித்த பவுண்டரிகள் அபாரம்.
அவர் 53 ரன்கள் எடுத்து மிகவும் பலமாகச் சென்று கொண்டிருந்தபோது ஆட்டத்தின் 20-வது ஓவரை பார்னெல் வீச, முதல் பந்து ஷாட் ஆக விழ, தவண் அதை கட் செய்தார். பந்து காற்றில் பேக்வர்ட் பாயிண்ட் திசைக்குச் சென்றது. ஆம்லா வலது புறம் டைவ் அடித்து பிடிக்க முயன்றார். இரு கைகளையும் கொண்டு சென்றும் பந்தைப் பிடிக்காமல் கோட்டைவிட்டார். இந்த விடப்பட்ட கேட்ச் ஆட்டத்தின் முதல் திருப்பு முனை.
அதன் பிறகு பார்னெல் பந்தை விளாசத் தொடங்கினார். முதலில் 2 பவுண்டரிகள் விளாசினார். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சில் ஒழுக்கம் குலைந்து ஷாட் பிட்ச், லெக் திசைப் பந்துகள் என்று தவணுக்கு எளிதான பந்துகள் வந்து விழுந்தன. தவண் விடப்பட்ட கேட்சுக்குப் பிறகு பலமாகச் செல்ல விராட் கோலி 3 பவுண்டரிகளுடன் 59 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிர் வீசிய அரைக்குழி பந்தை எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்கலாம். ஆனால் நேராக ஷாட் மிட்விக்கெட்டில் டுபிளேசியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவண், கோலி இணைந்து 24 ஓவர்களில் 127 ரன்கள் சேர்த்து அருமையான ஓர் அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தவண், ரஹானே ஆடிய அபார ஆட்டம்:
கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரெய்னாவை இறக்கிய நிலையில், இம்முறை ரஹானேயை களமிறக்கினார் தோனி. இது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். நேற்று நாமும் முன்னோட்டத்தில் இதையே கூறினோம். காரணம் ரெய்னாவை ஷாட் பிட்ச் போட்டு எடுத்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அவரும் அப்படித்த்தான் அவுட் ஆனார்.
ரஹானே களமிறங்கி அனாயசமாக ஆடினார். வெய்ன் பார்னெல் பந்து வீச்சு மிக மோசமாக அமைந்தது. அவரை 2 பவுண்டரிகள் அடித்துத் தொடங்கினார் ரஹானே. தொடர்ந்து பார்னெல் ரன்களைக் கசிய விட்டுக் கொண்டிருந்தார். மறுமுனையில் டுமினியையும் ரஹானே விளாசி எடுத்தார்.
தவண் சதம்:
ஆட்டத்தின் 35-வது ஓவரில் கடைசி பந்தில் பார்னெல் வீசிய பந்தை பாயின்ட்டில் பவுண்டரி அடித்து ஷிகர் தவண் 122 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் என்று தனது அபாரமான சதத்தை பூர்த்தி செய்தார். 35 ஓவர்கள் முடிவில் இந்தியா 183/2.
கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரெய்னாவை இறக்கிய நிலையில், இம்முறை ரஹானேயை களமிறக்கினார் தோனி. இது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். நேற்று நாமும் முன்னோட்டத்தில் இதையே கூறினோம். காரணம் ரெய்னாவை ஷாட் பிட்ச் போட்டு எடுத்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அவரும் அப்படித்த்தான் அவுட் ஆனார்.
ரஹானே களமிறங்கி அனாயசமாக ஆடினார். வெய்ன் பார்னெல் பந்து வீச்சு மிக மோசமாக அமைந்தது. அவரை 2 பவுண்டரிகள் அடித்துத் தொடங்கினார் ரஹானே. தொடர்ந்து பார்னெல் ரன்களைக் கசிய விட்டுக் கொண்டிருந்தார். மறுமுனையில் டுமினியையும் ரஹானே விளாசி எடுத்தார்.
தவண் சதம்:
ஆட்டத்தின் 35-வது ஓவரில் கடைசி பந்தில் பார்னெல் வீசிய பந்தை பாயின்ட்டில் பவுண்டரி அடித்து ஷிகர் தவண் 122 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் என்று தனது அபாரமான சதத்தை பூர்த்தி செய்தார். 35 ஓவர்கள் முடிவில் இந்தியா 183/2.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பவர் பிளேயில் அதிரடி!
36-வது ஓவர் பவர் பிளே. முதல் ஓவரிலேயே டுமினியை இரண்டு பவுண்டரிகள் அடித்தார் ரஹனே. பிறகு 39-வது ஓவரில் ரஹானே மீண்டும் மோர்கெல் பந்தை இரண்டு அபாரமான பவுண்டரிகளை அடித்தார். ஒன்று பவுலர் தலைக்கு மேல், இன்னொன்று மேலும் அலட்சியமாக கவர் திசையில் பவுண்டரி.
பவர் பிளேயின் கடைசி ஓவரை டேல் ஸ்டெய்ன் வீச, ஷிகார் தவண் லென்த்தில் விழுந்த பந்தை லாங் ஆன் திசையில் மிகப்பெரிய சிக்சருக்கு தூக்கினார். ஆட்டத்தின் முதல் சிக்ஸ் அது. அடுத்த பந்து ஷாட் பிட்ச், காத்திருந்து விக்கெட் கீப்பர் பின்னால் தூக்கி விட்டு ஒரு பவுண்டரி அடித்தார் ஷிகர் தவன்.
பவர் பிளேயில் இந்தியா 5 ஓவர்களில் 44 ரன்கள் அடித்து விக்கெட்டுகள் இழக்கவில்லை என்பது மிக முக்கியமானது. அடுத்ததாக மோர்கெல் வீசிய ஓவரில் ஆஃப் திசையில் நகர்ந்து கொண்டு ஃபைன் லெக் திசையில் தவன் அடித்த சிக்ஸ், இந்த போட்டியின் மிகச்சிறந்த ஷாட்.
இதற்கிடையே, ரஹானே தனது அரைசதத்தை 40 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் எடுத்தார். அதன் பிறகு பார்னெல் பந்தில் ஒரு சிக்ஸ், இம்ரான் தாஹிர் பந்தில் ஒரு சிக்ஸ்.
அதன் பிறகு ஆட்டத்தின் 44-வது ஓவரில் தவண் 146 பந்துகளில் 16 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 137 எடுத்து பார்னெல் வீசிய ஷாட் பிட்ச் பந்தில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 53 ரன்களில் தவணுக்கு கேட்ச் விட்ட ஆம்லா இப்போது எல்லாம் முடிந்த பிறகு அதே தவனுக்கு கேட்ச் பிடித்தார். தவணும் ரஹானேயும் இணைந்து சுமார் 16 ஓவர்களில் 3-வது விக்கெட்டுக்காக 125 ரன்களைச் சேர்த்தனர்.
தென் ஆப்பிரிக்கா ஃபீல்டிங் இந்த காலக்கட்டத்தில் மேலும் நெருக்கடி காரணமாக சொதப்பத் தொடங்கியது. ரெய்னா கொடுத்த கேட்சை ரூசோ தவற விட்டார். ஆனால், ரெய்னா அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே ஓவரில் மோர்கெலின் இன்னொரு ஷாட் பிட்ச் பந்துக்கு வெளியேறினார்.
45-வது ஓவரில் இந்தியா 269/4. அதன் பிறகு ரஹானே இன்னொரு சிக்சரை அடித்து 60 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 79 ரன்கள் விளாசினார். தோனி 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி 5 ஓவர்களில் இந்தியா 38 ரன்களையே எடுக்க முடிந்தது.
தென் ஆப்பிரிக்க தரப்பில் வெர்ன பிலாண்டருக்கு 4 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. ஏன் என்று தெரியவில்லை. பார்னெலை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறாக போய் முடிந்தது. அவர் 9 ஓவர்களில் 85 ரன்கள் விளாசப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆல் ரவுண்டர் பிஹார்டீனைத் தேர்வு செய்திருக்க வேண்டும், இது அணித்தேர்வில் ஏற்பட்ட குழப்பமே. இம்ரான் தாஹிர் மட்டுமே 10 ஓவர்களில் சிறப்பாக வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
36-வது ஓவர் பவர் பிளே. முதல் ஓவரிலேயே டுமினியை இரண்டு பவுண்டரிகள் அடித்தார் ரஹனே. பிறகு 39-வது ஓவரில் ரஹானே மீண்டும் மோர்கெல் பந்தை இரண்டு அபாரமான பவுண்டரிகளை அடித்தார். ஒன்று பவுலர் தலைக்கு மேல், இன்னொன்று மேலும் அலட்சியமாக கவர் திசையில் பவுண்டரி.
பவர் பிளேயின் கடைசி ஓவரை டேல் ஸ்டெய்ன் வீச, ஷிகார் தவண் லென்த்தில் விழுந்த பந்தை லாங் ஆன் திசையில் மிகப்பெரிய சிக்சருக்கு தூக்கினார். ஆட்டத்தின் முதல் சிக்ஸ் அது. அடுத்த பந்து ஷாட் பிட்ச், காத்திருந்து விக்கெட் கீப்பர் பின்னால் தூக்கி விட்டு ஒரு பவுண்டரி அடித்தார் ஷிகர் தவன்.
பவர் பிளேயில் இந்தியா 5 ஓவர்களில் 44 ரன்கள் அடித்து விக்கெட்டுகள் இழக்கவில்லை என்பது மிக முக்கியமானது. அடுத்ததாக மோர்கெல் வீசிய ஓவரில் ஆஃப் திசையில் நகர்ந்து கொண்டு ஃபைன் லெக் திசையில் தவன் அடித்த சிக்ஸ், இந்த போட்டியின் மிகச்சிறந்த ஷாட்.
இதற்கிடையே, ரஹானே தனது அரைசதத்தை 40 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் எடுத்தார். அதன் பிறகு பார்னெல் பந்தில் ஒரு சிக்ஸ், இம்ரான் தாஹிர் பந்தில் ஒரு சிக்ஸ்.
அதன் பிறகு ஆட்டத்தின் 44-வது ஓவரில் தவண் 146 பந்துகளில் 16 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 137 எடுத்து பார்னெல் வீசிய ஷாட் பிட்ச் பந்தில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 53 ரன்களில் தவணுக்கு கேட்ச் விட்ட ஆம்லா இப்போது எல்லாம் முடிந்த பிறகு அதே தவனுக்கு கேட்ச் பிடித்தார். தவணும் ரஹானேயும் இணைந்து சுமார் 16 ஓவர்களில் 3-வது விக்கெட்டுக்காக 125 ரன்களைச் சேர்த்தனர்.
தென் ஆப்பிரிக்கா ஃபீல்டிங் இந்த காலக்கட்டத்தில் மேலும் நெருக்கடி காரணமாக சொதப்பத் தொடங்கியது. ரெய்னா கொடுத்த கேட்சை ரூசோ தவற விட்டார். ஆனால், ரெய்னா அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே ஓவரில் மோர்கெலின் இன்னொரு ஷாட் பிட்ச் பந்துக்கு வெளியேறினார்.
45-வது ஓவரில் இந்தியா 269/4. அதன் பிறகு ரஹானே இன்னொரு சிக்சரை அடித்து 60 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 79 ரன்கள் விளாசினார். தோனி 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி 5 ஓவர்களில் இந்தியா 38 ரன்களையே எடுக்க முடிந்தது.
தென் ஆப்பிரிக்க தரப்பில் வெர்ன பிலாண்டருக்கு 4 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. ஏன் என்று தெரியவில்லை. பார்னெலை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறாக போய் முடிந்தது. அவர் 9 ஓவர்களில் 85 ரன்கள் விளாசப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆல் ரவுண்டர் பிஹார்டீனைத் தேர்வு செய்திருக்க வேண்டும், இது அணித்தேர்வில் ஏற்பட்ட குழப்பமே. இம்ரான் தாஹிர் மட்டுமே 10 ஓவர்களில் சிறப்பாக வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்திய நெருக்கடியில் சரிந்த தென் ஆப்பிரிக்கா:
308 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி மீது பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 280 ரன்களே போதுமானது... தென் ஆப்பிரிக்கா துரத்த முடியாது என்று வர்ணனையாளர்கள் பலரும் கூறினர். ஷேன் வார்ன் இந்தப் பிட்ச் ஒரு ரன் குவிக்கும் பிட்ச் என்றார். இதனால் டிவிலியர்ஸ், ஆம்லா, டுபிளேசி, டுமினி, மில்லர், டி காக் என்று பலமான வரிசையைக் கொண்ட தென் ஆப்பிரிக்கா நிச்சயம் இலக்கை எதிர்த்து ஒரு மோது மோதும் என்றே எதிர்பார்த்தனர்.
ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சு, பீல்டிங், அனைத்துக்கும் மேலாக தொடர்ந்து கொடுத்த நெருக்கடி ஆகியவை தென் ஆப்பிரிக்காவை மீண்டும் ஒரு முறை உலகக்கோப்பை முக்கிய போட்டியில் மண்ணைக் கவ்வச் செய்துள்ளது.
இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே குவிண்டன் டி காக் விக்கெட்டை ஷமியிடம் இழந்தது. ஷமி வீசிய பந்தை ஃபுல் லென்த் பந்து என்று நினைத்து அவர் டிரைவ் ஆட மிட் ஆஃபில் கேட்ச் ஆனது.
ஹஷிம் ஆம்லா இந்தியாவுக்கு எதிராக நல்ல ரெக்கார்ட் வைத்திருப்பவர். தொடர்ந்த இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு ரன் எடுக்க முடியாமல் திணறிய நிலையில், ஆட்டத்தின் 11-வது ஓவரை மோஹித் சர்மா வீச, ஷாட் பிட்ச் பந்தை ஹூக் செய்து ஷமியிடம் கேட்ச் கொடுத்து 22 ரன்களில் வெளியேறினார்.
11-வது ஓவரில் 40/2 என்ற நிலையில் டு பிளேசி மற்றும் டிவிலியர்ஸ் ஒன்று சேர்ந்தனர். தென் ஆப்பிரிக்காவின் பிரகாசமான தருணம் இதுவே. இவர்கள் இருவரும் இணைந்து 12 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்தனர். டுபிளேசி, டிவிலியர்ஸ் இருவருமே இறங்கி வந்து ஆடத் தொடங்கியிருந்தனர்.
308 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி மீது பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 280 ரன்களே போதுமானது... தென் ஆப்பிரிக்கா துரத்த முடியாது என்று வர்ணனையாளர்கள் பலரும் கூறினர். ஷேன் வார்ன் இந்தப் பிட்ச் ஒரு ரன் குவிக்கும் பிட்ச் என்றார். இதனால் டிவிலியர்ஸ், ஆம்லா, டுபிளேசி, டுமினி, மில்லர், டி காக் என்று பலமான வரிசையைக் கொண்ட தென் ஆப்பிரிக்கா நிச்சயம் இலக்கை எதிர்த்து ஒரு மோது மோதும் என்றே எதிர்பார்த்தனர்.
ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சு, பீல்டிங், அனைத்துக்கும் மேலாக தொடர்ந்து கொடுத்த நெருக்கடி ஆகியவை தென் ஆப்பிரிக்காவை மீண்டும் ஒரு முறை உலகக்கோப்பை முக்கிய போட்டியில் மண்ணைக் கவ்வச் செய்துள்ளது.
இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே குவிண்டன் டி காக் விக்கெட்டை ஷமியிடம் இழந்தது. ஷமி வீசிய பந்தை ஃபுல் லென்த் பந்து என்று நினைத்து அவர் டிரைவ் ஆட மிட் ஆஃபில் கேட்ச் ஆனது.
ஹஷிம் ஆம்லா இந்தியாவுக்கு எதிராக நல்ல ரெக்கார்ட் வைத்திருப்பவர். தொடர்ந்த இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு ரன் எடுக்க முடியாமல் திணறிய நிலையில், ஆட்டத்தின் 11-வது ஓவரை மோஹித் சர்மா வீச, ஷாட் பிட்ச் பந்தை ஹூக் செய்து ஷமியிடம் கேட்ச் கொடுத்து 22 ரன்களில் வெளியேறினார்.
11-வது ஓவரில் 40/2 என்ற நிலையில் டு பிளேசி மற்றும் டிவிலியர்ஸ் ஒன்று சேர்ந்தனர். தென் ஆப்பிரிக்காவின் பிரகாசமான தருணம் இதுவே. இவர்கள் இருவரும் இணைந்து 12 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்தனர். டுபிளேசி, டிவிலியர்ஸ் இருவருமே இறங்கி வந்து ஆடத் தொடங்கியிருந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
2-வது திருப்பு முனை:
தென்னாப்பிரிக்க சரிவைத் தொடக்கி வைத்ததே மோஹித் சர்மா த்ரோவும், டிவிலியர்ஸ் ரன் அவுட்டும்தான்.
டிவிலியர்ஸ் 38 பந்துகளில் 30 ரன்களுடன் அபாயகரமாகத் திகழ்ந்தார். ஆனால், அப்போதுதான் 23-வது ஓவரில் ஜடேஜா சில ரன் கொடுக்காத பந்துகளை வீச அழுத்தம் அதிகரித்த்து. இந்த நிலையில்தான் ஜடேஜா வீசிய பந்தை ஸ்வீப்பர் கவரில் கட் செய்தார் டிவிலியர்ஸ். அங்கு பந்து சற்று வேகமாகச் சென்றது. அங்கு 2 ரன்கள் இல்லை. ஆனால் பிடிவாதமாக 2 ரன்கள் எடுக்க முயல, மோஹித் சர்மாவின் த்ரோ மிகத் துல்லியமாக தோனி கைக்கு வர ஸ்டம்ப் சாய்கிறது. டிவிலியர்ஸ் ரன் அவுட். அவ்வளவுதான் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் மத்தியில் கவலை தரும் மவுனம் குடியேறியது.
மீதமிருப்பது டுபிளேசி, டேவிட் மில்லர், இருவரும் இணைந்து 25 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 29-வது ஓவரி மோஹித் சர்மாவிடம் தோனி கொடுக்க, டுபிளேசி 55 ரன்கள் எடுத்த நிலையில், தேவையில்லாமல் மிட் ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முயன்று 30 அடி வட்டத்துக்குள்ளேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு தொடர்ந்த நெருக்கடியில் டுமினி 6 ரன்களில் அஸ்வின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று ரெய்னாவிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 34-வது ஓவரில் டேவிட் மில்லர் (22) மீண்டும் ஒரு நல்ல த்ரோவுக்கு ரன் அவுட் ஆக, அதே ஓவரின் கடைசி பந்தில் அஸ்வினிடம் பிலாண்டர் எல்.பி. ஆகி வெளியேற, தென் ஆப்பிரிக்கா 40.2 ஓவர்களில் 177 ரன்களுக்குச் சுருண்டு 130 ரன்களில் தோல்வி தழுவியது.
இந்தியத் தரப்பில் அஸ்வின் மீண்டும் சிறப்பாக வீசி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷமி, மோஹித் சர்மா மீண்டும் ஒரு முறை மிகத் துல்லியமாகவும் ஆக்ரோஷமாகவும், ஃபீல்டிங்குக்கு தக்கவாறு வீசியும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜடேஜா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினாலும் டிவிலியர்ஸுக்கு அந்த ரன் அவுட் ஓவரில் ரன் கொடுக்காமல் வீசி ஒரு ரன்னை 2 ஆக மாற்ற நெருக்கடி கொடுத்து, அதன் மூலம் டிவிலியர்ஸ் ரன் அவுட் ஆனதற்குப் பிரதான காரணமாகத் திகழ்ந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராகத் திட்டமிடுதலைத் துல்லியமாகச் செய்தது போல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் திட்டமிடுதல் மிகத் துல்லியமாக அமைந்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றி பாகிஸ்தானின் பலவீனமான பேட்டிங்கினால் என்று இந்திய அணியின் ஆட்டத்திறன் மீது சந்தேகங்களை வல்லுநர்கள் ஏற்படுத்தினர். ஆனால், இந்த 2-வது கிளினிக்கல் வெற்றியின் மூலம் தற்போது உலகக்கோப்பையை வெல்வோம் என்று தன்னம்பிக்கையுடன் திகழும் அணிகளுக்குக் கூட இந்தியாவின் மீது தற்போது மரியாதையும், பயமும் அதிகரித்திருக்கும் என்பது உறுதி.
குறிப்பாக, தென் ஆப்பிரிக்க அணிக்கு கடைசி 8 விக்கெட்டுகளுக்கு வெறும் 69 ரன்கள் மட்டுமே வழங்கியது, அந்த அணியை தவிக்கவைத்த இந்திய அணியின் 'சிகிச்சை'க்கு சான்று.
இன்றைய போட்டியில் இருந்து ஒன்று புரிகிறது. கேரி கிர்ஸ்டனைக் கூப்பிட்டுக் கொண்டாலும், மைக் ஹஸ்ஸியைக் கூப்பிட்டுக் கொண்டாலும் மைதானத்தில் எப்படி ஆடுகிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி - தோல்விகள் தீர்மானிக்கப்படும் என்பதை தென் ஆப்பிரிக்கா இன்று உணர்ந்திருக்கும். அதேபோல், ஒரு வலுவான தலைமையின் கீழ் கூட்டு முயற்சியின் அணுகுமுறைக்கு உள்ள சக்தியை இந்திய அணி மீண்டும் புரிந்துகொண்டுள்ளது எனலாம்.
தென்னாப்பிரிக்க சரிவைத் தொடக்கி வைத்ததே மோஹித் சர்மா த்ரோவும், டிவிலியர்ஸ் ரன் அவுட்டும்தான்.
டிவிலியர்ஸ் 38 பந்துகளில் 30 ரன்களுடன் அபாயகரமாகத் திகழ்ந்தார். ஆனால், அப்போதுதான் 23-வது ஓவரில் ஜடேஜா சில ரன் கொடுக்காத பந்துகளை வீச அழுத்தம் அதிகரித்த்து. இந்த நிலையில்தான் ஜடேஜா வீசிய பந்தை ஸ்வீப்பர் கவரில் கட் செய்தார் டிவிலியர்ஸ். அங்கு பந்து சற்று வேகமாகச் சென்றது. அங்கு 2 ரன்கள் இல்லை. ஆனால் பிடிவாதமாக 2 ரன்கள் எடுக்க முயல, மோஹித் சர்மாவின் த்ரோ மிகத் துல்லியமாக தோனி கைக்கு வர ஸ்டம்ப் சாய்கிறது. டிவிலியர்ஸ் ரன் அவுட். அவ்வளவுதான் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் மத்தியில் கவலை தரும் மவுனம் குடியேறியது.
மீதமிருப்பது டுபிளேசி, டேவிட் மில்லர், இருவரும் இணைந்து 25 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 29-வது ஓவரி மோஹித் சர்மாவிடம் தோனி கொடுக்க, டுபிளேசி 55 ரன்கள் எடுத்த நிலையில், தேவையில்லாமல் மிட் ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முயன்று 30 அடி வட்டத்துக்குள்ளேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு தொடர்ந்த நெருக்கடியில் டுமினி 6 ரன்களில் அஸ்வின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று ரெய்னாவிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 34-வது ஓவரில் டேவிட் மில்லர் (22) மீண்டும் ஒரு நல்ல த்ரோவுக்கு ரன் அவுட் ஆக, அதே ஓவரின் கடைசி பந்தில் அஸ்வினிடம் பிலாண்டர் எல்.பி. ஆகி வெளியேற, தென் ஆப்பிரிக்கா 40.2 ஓவர்களில் 177 ரன்களுக்குச் சுருண்டு 130 ரன்களில் தோல்வி தழுவியது.
இந்தியத் தரப்பில் அஸ்வின் மீண்டும் சிறப்பாக வீசி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷமி, மோஹித் சர்மா மீண்டும் ஒரு முறை மிகத் துல்லியமாகவும் ஆக்ரோஷமாகவும், ஃபீல்டிங்குக்கு தக்கவாறு வீசியும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜடேஜா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினாலும் டிவிலியர்ஸுக்கு அந்த ரன் அவுட் ஓவரில் ரன் கொடுக்காமல் வீசி ஒரு ரன்னை 2 ஆக மாற்ற நெருக்கடி கொடுத்து, அதன் மூலம் டிவிலியர்ஸ் ரன் அவுட் ஆனதற்குப் பிரதான காரணமாகத் திகழ்ந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராகத் திட்டமிடுதலைத் துல்லியமாகச் செய்தது போல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் திட்டமிடுதல் மிகத் துல்லியமாக அமைந்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றி பாகிஸ்தானின் பலவீனமான பேட்டிங்கினால் என்று இந்திய அணியின் ஆட்டத்திறன் மீது சந்தேகங்களை வல்லுநர்கள் ஏற்படுத்தினர். ஆனால், இந்த 2-வது கிளினிக்கல் வெற்றியின் மூலம் தற்போது உலகக்கோப்பையை வெல்வோம் என்று தன்னம்பிக்கையுடன் திகழும் அணிகளுக்குக் கூட இந்தியாவின் மீது தற்போது மரியாதையும், பயமும் அதிகரித்திருக்கும் என்பது உறுதி.
குறிப்பாக, தென் ஆப்பிரிக்க அணிக்கு கடைசி 8 விக்கெட்டுகளுக்கு வெறும் 69 ரன்கள் மட்டுமே வழங்கியது, அந்த அணியை தவிக்கவைத்த இந்திய அணியின் 'சிகிச்சை'க்கு சான்று.
இன்றைய போட்டியில் இருந்து ஒன்று புரிகிறது. கேரி கிர்ஸ்டனைக் கூப்பிட்டுக் கொண்டாலும், மைக் ஹஸ்ஸியைக் கூப்பிட்டுக் கொண்டாலும் மைதானத்தில் எப்படி ஆடுகிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி - தோல்விகள் தீர்மானிக்கப்படும் என்பதை தென் ஆப்பிரிக்கா இன்று உணர்ந்திருக்கும். அதேபோல், ஒரு வலுவான தலைமையின் கீழ் கூட்டு முயற்சியின் அணுகுமுறைக்கு உள்ள சக்தியை இந்திய அணி மீண்டும் புரிந்துகொண்டுள்ளது எனலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவரங்களுக்கு நன்றி சிவா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தவான் சதம் அடித்த அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது: ருசிகர தகவல்
உலகக்கோப்பை போட்டியின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா- தென்ஆப்பரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்தியா 307 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்கா 177 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் தென்ஆப்பிரிக்காவை முதன்முதலாக வெற்றி கண்டுள்ளது.
இந்த போட்டியில் இந்திய வீரர் தவான் 146 பந்தில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 137 ரன்கள் குவித்தார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. தவான் இதுவரை ஒருநாள் போட்டியில் 7 சதங்கங்கள் அடித்துள்ளார்.
அவர் சதம் அடித்துள்ள எந்த போட்டியிலும் இந்தியா தோற்றதில்லை. இந்த பெருமையுடன் தவான் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.
1. 2013-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 114 ரன்கள்
2. 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 102 (அவுட் இல்லை) ரன்கள்
3. 2013-ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக 116 ரன்கள்
4. 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 100 ரன்கள்
5. 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 119 ரன்கள்
6. 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 113 ரன்கள்
உலகக்கோப்பை போட்டியின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா- தென்ஆப்பரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்தியா 307 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்கா 177 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் தென்ஆப்பிரிக்காவை முதன்முதலாக வெற்றி கண்டுள்ளது.
இந்த போட்டியில் இந்திய வீரர் தவான் 146 பந்தில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 137 ரன்கள் குவித்தார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. தவான் இதுவரை ஒருநாள் போட்டியில் 7 சதங்கங்கள் அடித்துள்ளார்.
அவர் சதம் அடித்துள்ள எந்த போட்டியிலும் இந்தியா தோற்றதில்லை. இந்த பெருமையுடன் தவான் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.
1. 2013-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 114 ரன்கள்
2. 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 102 (அவுட் இல்லை) ரன்கள்
3. 2013-ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக 116 ரன்கள்
4. 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 100 ரன்கள்
5. 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 119 ரன்கள்
6. 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 113 ரன்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.
» இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி
» உலகக் கோப்பை கிரிக்கெட் 2023
» டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா
» உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.
» இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி
» உலகக் கோப்பை கிரிக்கெட் 2023
» டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|