புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
48 Posts - 45%
heezulia
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
3 Posts - 3%
jairam
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
2 Posts - 2%
சிவா
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
1 Post - 1%
Manimegala
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
14 Posts - 4%
prajai
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
6 Posts - 2%
jairam
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Rutu
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !


   
   

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 15, 2015 9:47 pm

M Jagadeesan wrote:திருந்தா முண்டம்

ஆம் திருந்தா முண்டம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 15, 2015 9:51 pm

அற்ப ஆசைகள்
[quote]அற்ப ஆசைகள் மனதில் நுழைந்தால்
அறிவுக்கு அங்கே என்ன வேலை?
எப்பொருள் யார்யார் வாய் கேட்டாலும்
மெய்ப்பொருள் காண்பதே அறிவின் வேலை."quote

அன்றே வள்ளுவன் சொன்னதை ,
அன்றே மறந்து விட்டோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:15 am

அருமைன வரிகள்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 5:41 pm

அறிந்தே வந்த காதல்
======================
அறிந்தே வந்த காதல்
அழகாய் வந்த காதல்
தெரிந்தே வந்த காதல்
தெளிவாய் வந்த காதல்

இளமையில் வந்த காதல்
இயற்கையில் வந்த காதல்
பள்ளியில் பாடம் தன்னைப்
படிக்கையில் வந்த காதல்

கருவறை தொடங்கிய பயணம்
கல்லறை முடியும் மட்டும்
உயிருடன் கலந்து என்றன்
உணர்வொடு ஒன்றிய காதல்

உலகையே தந்தால் கூட
உதறியே தள்ளி விட்டு
எதுவுமே வேண்டாம் என்று
எண்ணுகின்ற தமிழ்க் காதல்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 5:51 pm

கறை நல்லதா?
=================
அப்பிலே உப்பு அதிகரித்தால் எப்படித்தான்
தப்பிடினும் பேரழுக்கு நீங்கிடுமோ ? - ஒப்பாதீர்
ஆடையிலே பட்டகறை நல்லதென்று சொல்வோரே
ஓடுமதி பட்டகறை நீக்கு.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 5:53 pm

சுகமான சுமைகள்.
====================
மண்ணுக்கு மரமும் விண்ணுக்கு நிலவும்
கண்ணுக்கு மையும் பெண்ணுக்கு நகையும்
சுகமான சுமைகள்! சுகமான சுமைகள்!!

கடலுக்கு படகும் உடலுக்கு உயிரும்
மடலுக்கு எழுத்தும் மனதுக்கு நினைவும்
சுகமான சுமைகள்! சுகமான சுமைகள்!!

மலருக்கு வண்டும் மாரிக்கு நீரும்
நிலவுக்குக் கறையும் நீருக்கு மீனும்
சுகமான சுமைகள்! சுகமான சுமைகள்!!

பிணக்கு ஆயிரம் வந்த போதும்
எனக்கு நீயும் உனக்கு நானும்
சுகமான சுமைகள்! சுகமான சுமைகள்!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 5:56 pm

பொருட்டல்ல !
===============
ஐந்தோ, பத்தோ பொருட்டல்ல
ஆணுக்கு அழகு ஒரு வேலை

கருப்போ, சிவப்போ பொருட்டல்ல
பெண்ணுக்கழகு திருமணமே!

ஊமையோ ,செவிடோ பொருட்டல்ல
தாய்மைக்கழகு அன்பு பாராட்டல்.

ஆணோ, பெண்ணோ பொருட்டல்ல
தந்தைக்கழகு சான்றோனாக்குதல்

வெற்றியோ, தோல்வியோ பொருட்டல்ல
வீரனுக்கழகு துணிவுடைமை.

உறவோ, பகையோ பொருட்டல்ல
வீட்டிற்கழகு விருந்தினர் போற்றல்.

இலாபமோ நட்டமோ பொருட்டல்ல
வணிகனுக்கழகு நேர்மையுடைமை.

பாஸோ, பெயிலோ பொருட்டல்ல
மாணவனுக்கழகு விடாமுயற்சி

தமிழோ, ஆங்கிலமோ பொருட்டல்ல
நாவிற்கழகு இனியவை கூறல்.

ஆறோ, குளமோ பொருட்டல்ல
ஊருக்கழகு நீர்சூழ நிற்றல்.

மலையாளியோ, மராட்டியனோ பொருட்டல்ல
தமிழனுக்கு அழகு தோழமை பாராட்டல்.

நல்லவனோ, தீயவனோ பொருட்டல்ல
கடவுளுக்கு அழகு கருணைகாட்டல்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 9:56 pm

கிளி ஜோதிடம் !
============
சிலசில ஆண்டுகள் முன்னம்
பலரும் போற்றும் வண்ணம்
வாழ்ந்து வந்தவன் நான்-இன்று
வாழ்ந்து கெட்டவன் நான்.

என்னுடைய வாழ்வே என்னுடைய செய்தி
எல்லோரும் கேட்பதற்கே என்கதையை உரைக்கின்றேன்.

உணவுக்கடை ஒன்று வைத்தேன்
உளுந்துவடை பொங்கல் மற்றும்
மணங்கமழும் நெய் தோசை
மல்லிகைப்பூ இட்லி என்று
கணக்கின்றி பொது மக்கள்
கடன் சொல்லித் தின்றதனால்
பணக்கஷ்டம் வந்தது ஐயா
படுத்தது ஐயா வியாபாரம்.

மக்கள் நோய் தீர்த்திடவே
மருந்துக் கடை வைத்தேன்
சிக்கல் எதுவும் இன்றி
சில காலம் சென்றதையா
என்கடை மருந்துண்டு ஏழையொருவன் கண்மூட
போலி மருந்தென்று போலீஸ் என்னை விலங்கிட
சிக்கல் வந்ததய்யா கடை சீரழிந்து போனதையா.

பல்லாயிரம் செலவிட்டுப் பலசரக்குக் கடைவைத்தேன்
பொல்லாப் பணியாளர் பொறுப்பிலே விட்டுவைத்தேன்
கல்லாவில் எல்லோரும் கைவைத்த காரணத்தால்
கலகலத்துப் போனதையா பலசரக்கு வியாபாரம்.

இனியொரு தொழில் வேண்டாம்
இருக்கின்ற பணத்தை மட்டும்
பெருக்கிடுவோம் என்று எண்ணி
சிக்கல் இல்லாத சீட்டுக் கம்பெனி ஒன்றில்
பிக்செட் டிபாசிட்டில் போட்டு வைத்திட்டேன்.
பட்ட காலிலே மீண்டும் பட்டதையா
கெட்ட குடியே மீண்டும் கெட்டதையா
குருவிபோல் சேர்த்திட்ட பணத்தை எல்லாம்
பருந்தெடுத்துப் போனதுபோல் பைனான்ஸ் காரன்
இரவோடு இரவாக ஓடிவிட்டான்
இருக்கின்ற நம்பிக்கையும் தகர்ந்ததையா.

செய்வது அறியாமல் சேருமிடம் தெரியாமல்
கால்போன போக்கினிலே போகின்ற வேளையிலே
ஆலமரத்தடியில் அழகான கூண்டு ஒன்றில்
கோல மொழிபேசும் கிளிஒன்றை வைத்தொருவன்
ஜோதிடம் சொல்லக் கண்டு
அவனிடம் நான் சென்று
ஐயா என்பெயர் ஆடியபாதம் என்பார்
செய்யாத தொழிலில்லை, செய்வதற்கு ஏதுமில்லை
தொட்ட தொழிலெல்லாம் துலங்கவில்லை ஐயா
நட்டம் வந்ததையா, நடுத்தெருவில் நிற்கின்றேன்
என்ன தொழில் செய்தால் ஏற்றம் வருமென்று
சொன்னதைச் சொல்லும் கிளியிடம் கேட்டுரைப்பீர்
எனக்கேட்க, ஜோசியனும்
கிளியை நோக்கி
"வாடா ராஜா வந்திடுவாய் வெளியே
ஆடியபாதம் என்ற அழகான பேருக்கு
தேடியொரு சீட்டைத் தேர்ந்தெடுப்பாய்"
எனச் சொல்ல
அழகான கிளியொன்று வெளியே வந்ததையா
அலகால் கவ்வியொரு சீட்டை எடுத்ததையா
சீட்டைப் பிரித்துப் பார்த்திட்ட ஜோசியனும்
சிரித்திட்டான் பலமாக சிரித்திட்டான் எனக்காக

'ஐயா
தக்கதொரு வழிசொல்வேன் தலைவணங்கிக் கேட்டிடுவீர்
மிக்கபுகழ் உண்டாகும் மேதினியில் உந்தனுக்கு
மூலதனம் வேண்டாம், முதலீடு தேவையில்லை
காலம் முழுமைக்கும் காசுபணம் பார்த்திடலாம்
கல்லூரிக் கட்டிடங்கள், கல்யாண மண்டபங்கள்
எல்லாமே கைகூடும்,எண்ணியபடி நடக்கும்
உல்லாசம் எல்லாமே உன்மடியில் காத்திருக்கும்
பெண்டு பிள்ளைகள் பெரியோர்கள் எல்லாமே
கண்டு வணங்கிடுவர், காலில் விழுந்திடுவர்"

"ஜோசியரே அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?'
எனக்கேட்க,
"காவிஉடை அணிந்தே, கமண்டலத்தை ஏந்திடுவீர்
தரையில் விழுமளவு தாடி வளர்த்திடுவீர்
நெற்றியில் திருநீறும், நடுவில் குங்குமமும்
கற்றைமுடி வளர்த்து, கழுத்தில் கொட்டையும்
தாங்கி
சாமியாராகப் போவதே சரியான வழியென்று
நான் சொல்லவில்லை ஐயா,கிளிசொன்ன வழி" என்று
பாவாடைச் சாமியாரின் படம் எடுத்துக் காட்டிட்டான்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 19, 2015 8:22 am

பேருந்து ஹைகூக்கள்
=======================
சில்லரை கேட்டுத் தொந்தரவு செய்பவன்
பிச்சைக்காரன் மட்டுமல்ல
கண்டக்டரும்தான் !

பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தேன் !
ஒருவழியாகப் பேருந்து வந்தது !
எதிர்த் திசையில் !

பேருந்தில் உட்கார இடம் கிடைத்தும்
இருப்புக் கொள்ளவில்லை !
கண்டக்டர் சில்லரை பாக்கி !

பேருந்தில் எழுதியிருந்த வாசகம்
" திருடர்கள் ஜாக்கிரதை ! "
தான் திருடிய பணத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான் -பிக்பாக்கெட் !

படியிலே கால்வைக்க இடமிருந்தும்
தொங்கிக்கொண்டே  பயணித்தான் கல்லூரி மாணவன் !
படிக்கட்டுப் பயணம் பரலோகப் பயணம் என்பதால் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 10:22 am

பேருந்து நகைச்சுவை
பேறுவுகை தந்ததே !
நன்றி ,ஜெகதீசன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக