புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
34 Posts - 52%
heezulia
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
17 Posts - 2%
prajai
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
4 Posts - 1%
jairam
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !


   
   

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 11, 2015 8:28 am

அவரவர் பார்வையில்...
=================
வாழைப் பழத்தோல் ஒன்று வழியில் கிடந்து
வருவோர் போவோரை அச்சுறுத்தி நின்றது.

அவ்வழி வந்த அரசியல் வாதி
தோலின் மீது காலை வைத்து
வழுக்கி விழுந்து நொண்டி ஆனான்.
என்னைக் கவிழ்க்க எதிரிகள் செய்த
அரசியல் சதியென்று அறிக்கை விட்டான்.

பருத்த உடல்கொண்ட மருத்துவர் ஒருவர்
இருமிக் கொண்டே அங்கு வந்தார்
பழுத்த தோல்மீது காலை வைத்து
வழுக்கி விழுந்தார் ; விழுந்தவர் ஆங்கே
எழுந்து நின்றார்; தோலைப் பார்த்து
சத்தான தோலை தூக்கி எறிந்து
சக்கையைத் தின்பது சரியல்ல என்றார்.

வணிக நோக்கில் தோலைக் காட்டும்
கணிகை ஒருத்தி அங்கு வந்தாள்
தோலின் மீது காலை வைத்துத்
தொப்பென்று விழுந்தாள் குப்புற ஆங்கே!
வழுக்கி விழுந்தவள் எழுந்து நின்றாள்
தோலைப் பார்த்தவள் சற்றே சிரித்து
" வழுக்கி விழுவது புதிதல்ல எனக்கு
வழுக்கலில் தான்என் வாழ்க்கை உள்ளது "
என்றே சொல்லி தன்வழி சென்றாள்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 12, 2015 8:34 am

இறப்பது ஒரு தடைவையாக இருக்கட்டும் !
===========================================
சிறுவயதில்
பச்சைக் குதிரைத் தாண்டக்கூட பயப்பட்ட எனக்கு
இன்று
எவரெஸ்ட் சிகரம்கூட எம்பித் தாண்டும் உயரம்தான்

அன்று
ஐப்பசி அடைமழையில் நனையப் பயந்த எனக்கு
இன்று
அட்லாண்டிக் சமுத்திரம் கூட முழங்கால் அளவுக்குத்தான்

அன்று
பகலில்கூட வெளியில் செல்லப் பயந்த எனக்கு
இன்று
அமாவாசை இருட்டுக்கூட ஆயிரம் வாட் பல்புதான்

அன்று
பத்து ரூபாய்கூட கடன் வாங்கப் பயந்த எனக்கு
இன்று
பத்துக் கோடி கடன் கொடுக்க வங்கிகள் அலைகின்றன.

அன்று
என்பெயரைக் கூட எழுதப் பயந்த எனக்கு
இன்று
கம்பனும் , காளமேகமும் கட்டியம் கூறுகின்றனர்
என் கவிதையைக் கண்டு.

பயந்தவன் தினமும் செத்துப் பிழைக்கிறான்
நீ பிறந்தது ஒரு முறைதான்
இறப்பதும் ஒரு தடைவையாக இருக்கட்டும்.

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Fri Jun 12, 2015 8:36 am

சாலச்சிறந்த கவிதைகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
எனது கவிதைகள் ! - Page 10 103459460 எனது கவிதைகள் ! - Page 10 103459460 எனது கவிதைகள் ! - Page 10 103459460 எனது கவிதைகள் ! - Page 10 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 12, 2015 10:34 am

பாரதி தமிழிசையின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 12, 2015 10:38 am

வாரமும் தாரமும்
===================
ஞாயிற்றின் ஒளியெல்லாம் உன்வதன ஜோதியிலே
போயிற்று போயிற்று மங்கியே போயிற்று!
உன்அழகில் தோற்றோடியத் திங்களைத் தேற்றியே
கங்கைக்கு அருகினிலே வைத்திட்டான் சிவபெருமான்
செவ்வாயின் அழகினிலே சொக்கினேன் உந்தனுக்கு
செவ்வாய் தோஷம் இருந்தாலும் உன் கழுத்தில்
புதனன்று தாலியைக் கட்டிய வேளையில்உன்
வதனம் சிவந்ததம்மா! வந்திருந்த உறவினரும்
" தயாபரியே! தருமத்தின் தேவதையே !விண்ணிலுள்ள
வியாழன்போல் உன்மனது விசாலம் ! " என்றுரைத்தார்.
வெள்ளி முளைப்பதற்கு முன்பாக நீகுளித்து
அள்ளி முடிந்த கூந்தலிலே வேடுகட்டி
சனிஎன்னும் கடவுளை நீதொழும் வேளையிலே
பிணியகன்று வீட்டினிலே மங்கலம் வந்ததம்மா!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 12, 2015 7:28 pm

எனது கவிதைகள் ! - Page 10 3838410834 எனது கவிதைகள் ! - Page 10 3838410834

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Fri Jun 12, 2015 7:30 pm

M.Jagadeesan wrote:வாரமும் தாரமும்
===================
ஞாயிற்றின் ஒளியெல்லாம் உன்வதன ஜோதியிலே
போயிற்று போயிற்று மங்கியே போயிற்று!
உன்அழகில் தோற்றோடியத் திங்களைத் தேற்றியே
கங்கைக்கு அருகினிலே வைத்திட்டான் சிவபெருமான்
செவ்வாயின் அழகினிலே சொக்கினேன் உந்தனுக்கு
செவ்வாய் தோஷம் இருந்தாலும் உன் கழுத்தில்
புதனன்று தாலியைக் கட்டிய வேளையில்உன்
வதனம் சிவந்ததம்மா! வந்திருந்த உறவினரும்
" தயாபரியே! தருமத்தின் தேவதையே !விண்ணிலுள்ள
வியாழன்போல் உன்மனது விசாலம் ! " என்றுரைத்தார்.
வெள்ளி முளைப்பதற்கு முன்பாக நீகுளித்து
அள்ளி முடிந்த கூந்தலிலே வேடுகட்டி
சனிஎன்னும் கடவுளை நீதொழும் வேளையிலே
பிணியகன்று வீட்டினிலே மங்கலம் வந்ததம்மா!
மேற்கோள் செய்த பதிவு: 1144316

சும்மா கிழிகிழினு கிழிச்சிட்டீங்க எனது கவிதைகள் ! - Page 10 3838410834 எனது கவிதைகள் ! - Page 10 3838410834 எனது கவிதைகள் ! - Page 10 3838410834



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 12, 2015 7:39 pm

பிரீதிகா சந்திரகுமார் , பாரதி தமிழிசை ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 13, 2015 5:41 pm

எப்போது?
===========
ஓடும் வரைதான் நதி
ஓடாவிட்டால் குளம்
இவ்வுண்மையை
ஓடாமல் ஓரிடத்தில்
ஒதுங்கிக் கிடப்போர்கள்
ஒப்பும் நாள் எப்போது?

தேடும் வரைதான் செல்வம்
தேடாவிட்டால் வறுமை
இவ்வுண்மை
தேடாமல் ஓரிடத்தில்
தேங்கிக் கிடப்போர்க்குத்
தெரியும் நாள் எப்போது?

பாடும் வரைதான் குயில்
பாடாவிட்டால் காக்கை
இவ்வுண்மை
உள்ளிருக்கும் திறமைகளை
உலகுக்குக் காட்டாமல்
கல்லினுள் தேரைபோல்
கரந்து வாழ்வோர்கள்
கற்கும் நாள் எப்போது?

மூடும் வரைதான் அழகு
மூடாவிட்டால் அசிங்கம்
இவ்வுண்மை
மூடாமல் எல்லாமே
முழுமையாய்க் காட்டுகின்ற
மூளையில்லா மூடருக்கு
உறைக்கும் நாள் எப்போது?

வாழும் வரைதான் பெண்
இல்லையெனில் வாழாவெட்டி
இவ்வுண்மை
வாழாமல் பெண்ணை
வீட்டகத்தே வைத்திருந்து
காவல் காப்போர்கள்
கற்கும் நாள் எப்போது?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 5:45 pm

எனது கவிதைகள் ! - Page 10 3838410834 எனது கவிதைகள் ! - Page 10 3838410834



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக