புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
7 Posts - 4%
Jenila
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kargan86
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
எனது கதைகள் -- - Page 2 Poll_c10எனது கதைகள் -- - Page 2 Poll_m10எனது கதைகள் -- - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கதைகள் --


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 8:55 am

First topic message reminder :

ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,

"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.

" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "

" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "

" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"

" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )

" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "

" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "

" அது என்ன வழி ? "

" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )

அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."

" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"

உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "

" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "

" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "

ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.

" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "

நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 23, 2015 12:43 pm

நன்றி விமந்தனி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 24, 2015 7:58 am

சாவதே மேல்.
===========
மாலை மணி நான்கு இருக்கும்.

வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. விரைந்து சென்று கதவைத் திறந்தார் கந்தசாமி.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். மீசை தாடியுடனும், பரட்டைத் தலையுடனும், அழுக்கடைந்த ஆடைகளுடனும் காட்சியளித்த அந்த முதியவர் , பார்க்கப் பரிதாபமாக இருந்தார்.

" யார் நீங்கள் ? உங்களுக்கு என்ன வேணும் ? "

" கந்தசாமி ! என்னைத் தெரியவில்லையா உனக்கு ? நான்தான் உன்னுடைய பால்ய சிநேகிதன் ராமசாமி! '

" ராமசாமியா நீ ? பார்த்து 30 வருடங்களுக்குமேல் இருக்குமே ! அதான் சட்டென்று அடையாளம் தெரியவில்லை; உள்ள வா ராமசாமி ! "

ராமசாமி உள்ளேசென்று சோபாவில் அமர்ந்தார்.

கந்தசாமி , " அபிராமி ! " என்று சொல்லி தன் மனைவியைக் கூப்பிட்டார். அபிராமி வந்தாள்.

" அபிராமி ! நான் அடிக்கடி சொல்வேனே ; என் நண்பன் ராமசாமி ! அவர் இவர்தான். ரொம்பநாள் கழிச்சு என்னைப் பார்க்க வந்திருக்கார்! "

" வாங்க ! " என்று சொல்லி ராமசாமியை வரவேற்றாள் அபிராமி.

" அபிராமி ! காபி கொண்டுவா!"

அபிராமி கொண்டுவந்த காபியைப் பருகிக் கொண்டே நண்பர் இருவரும் பேசத் தொடங்கினர்.

" என்னப்பா ராமசாமி ! தாடியும், மீசையுமாக இது என்ன கோலம் ? "

ராமசாமி சிறிதுநேரம்என் எதுவும் பேசவில்லை; அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது.

" ஏம்பா ராமசாமி ஏன் அழறே ? என்ன ஆச்சு உனக்கு ? "

" கந்தசாமி ! இப்ப என்னோட நிலைமை சரியில்லப்பா! என் பையன் அவனோட பொண்டாட்டி பேச்சைக் கேட்டுட்டு என்னை வீட்டைவிட்டுத் துரத்திட்டான்; என்னை அவன் மதிப்பதில்லை ! அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாம நடுத்தெருவுக்கு வந்துட்டேன்பா ! பிச்சை எடுக்க என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை! சொந்த ஊரில் இருக்கவும் பிடிக்கவில்லை. உன்னுடைய வீட்டுவிலாசம் என்னிடம் இருந்தது; அதான் உன்னைத்தேடி பறப்பட்டு வந்திட்டேன். என்னிடம் இருந்த கொஞ்ச நஞ்ச காசும் செலவாகிவிட்டது. தெரியாதவர்களிடம் சென்று உதவி கேட்பதைவிட , பழகிய நண்பனிடம் உதவி கேட்பது மேலானதல்லவா! அதுதான் உதவிகேட்டு உன்னிடம் வந்துள்ளேன். " இடுக்கண் களைவதாம் நட்பு " என்ற வள்ளுவர் வாக்குப்படி என்னுடைய துன்பத்தை நீதான் போக்கவேண்டும்." என்று சொன்ன ராமசாமியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

' அழாதேப்பா! உனக்கா இந்த நிலை! பள்ளியிலும், கல்லூரியிலும் நாம் ஒன்றாகப் படித்த நாட்கள், பழகிய நாட்கள் இன்றும் பசுமையாக நினைவில் நிற்கின்றன. மற்றவர்களுக்காக ஓடி ஓடி உதவி செய்வாயே! உனக்கா இந்த கதி ? எனக்காகப் பலமுறை பள்ளிக் கட்டணமும், தேர்வுக் கட்டணமும் கட்டி உதவி செய்தாயே ! அந்த நன்றியை நான் மறக்கமுடியுமா ? நான் தினமும் தயிர் சோறும் , ஊறுகாயும் மதிய உணவுக்காகக் கொண்டுவருவேன்; ஆனால் நீயோ வகை வகையாய்ச் சமைத்த சுவையான உணவுகளைக் கொண்டுவருவாய்! அதையெல்லாம் நீ எனக்கு ஊட்டி மகிழ்வாயே! அந்த நாட்களையெல்லாம் எப்படி நான் மறக்கமுடியும்? ஒருசமயம், கல்லூரி மைதானத்தில் ,நாம் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்த சமயத்தில், வேகமாக வந்த கிரிக்கெட் பந்து என்தலையில் பட்டு இரத்தம் கொட்டிய சமயத்தில், மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்று , எனக்குச் சிகிச்சை அளித்து , என்னை வீட்டிலே கொண்டுபோய் விட்டாயே! அதை எப்படி நான் மறக்க முடியும்?கடைசியாக நாம் கல்லூரியைவிட்டுப் பிரியும் சமயத்தில், உன் நினைவாக ,எனக்கு ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசாகக் கொடுத்தாயே !அதை இன்னும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். ராமசாமி ! உனக்கு நான் என்ன செய்யவேண்டும் ? சொல் ! "

ராமசாமி சிறிதுநேரம் பேசவில்லை. குரல் தழுதழுக்க , " கந்தசாமி ! நான் இருக்கப்போவது இன்னும் கொஞ்சநாள்தான்; நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. என்னை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடப்பா ! வேலைசெய்து பிழைக்க என் உடலில் தெம்பு இல்லை; என் கடைசி நாட்களை அங்கு கழிக்க விரும்புகிறேன் ! "

" ராமசாமி ! அதெல்லாம் இருக்கட்டும்; முதலில் நீ சாப்பிடு ! மற்றவற்றை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்."

" அபிராமி ! ரெண்டு பேருக்கும் இலைபோடு ! "

அபிராமி இலைபோட்டு இருவருக்கும் உணவு பரிமாறினாள். நண்பர்கள் இருவரும் கைகழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தனர்.

" கொஞ்சம் உள்ள வந்துட்டுப் போங்க ! " அபிராமி கூப்பிட்டாள்.

கந்தசாமி உள்ளே சென்றார்.

" உங்க பிரண்டை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போறீங்களா ? "

" ஆமாம் ! "

" முதியோர் இல்லத்துல முதல்ல டெபாசிட் கட்டச் சொல்லுவாங்க ! அப்புறம் மாசாமாசம் பணம் கட்டணும்; அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது; உங்க பிரண்டு கிட்ட , சாப்பிட்ட கையோட அஞ்சோ பத்தோ குடுத்து அனுப்பிடுங்க ! தேவையில்லாத பிரச்சினையில மாட்டிக்காதீங்க !"

" மெதுவா பேசுடி ! அவரு காதில விழப்போகுது ! அவரு எனக்கு எவ்வளவோ செய்து இருக்காரு ! ஏதோ அவருடைய கெட்ட காலம் , அவரோட மகன் வீட்டைவிட்டுத் துரத்திட்டான். அவரு கேட்ட இந்த உதவிகூட நான் செய்யலைன்னா , என்னைவிட நன்றிகெட்டவன் இந்த உலகத்துல யாரும் இருக்கமுடியாது. அதுக்கு நான் சாகறதே மேல் ; மேற்கொண்டு எதுவும் பேசாதே ! வந்து சாப்பாடு பரிமாறு ! "

கந்தசாமி டைனிங் ஹாலுக்கு வந்தார். அங்கு ராமசாமி இல்லை. இலையில் பரிமாறிய உணவு அப்படியே இருந்தது.

" ராமசாமி ! என்று அழைத்துக்கொண்டே தெருவுக்கு வந்தார். தெருக்கோடி வரைக்கும் சென்று தேடிப்பார்த்தார். ஆனால் ராமசாமியைக் காணவில்லை.

கவலையோடு வீட்டுக்குத் திரும்பினார் கந்தசாமி. மனைவியுடன் எதுவும் பேசவில்லை; சாப்பிடவும் இல்லை; படுக்கை அறைக்குச் சென்று படுத்துக் கொண்டார். இரவு முழுவதும் நண்பன் ராமசாமியின் நினைவாகவே இருந்தார். ஒரு வாய் சாப்பாடு கூடச் சாப்பிடாமல் சென்றுவிட்டாரே என்று வருத்தப்பட்டார். தூக்கம் வரவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தார்.

விடிந்ததும் , மனைவிடம் கூடச் சொல்லாமல் நண்பனைத்தேடிப் புறப்பட்டார். பேருந்து நிறுத்தத்தில் சென்று பார்த்தார். நண்பனைக் காணவில்லை. அங்கேயே சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தார். எங்குசென்று நண்பனைத் தேடுவது ? ஒருவேளை சொந்த ஊருக்கே புறப்பட்டுப் போயிருப்பாரோ ? சிந்தனையில் ஆழ்ந்தார். அங்கிருந்த பெட்டிகடைக்கு வெளியே செய்தித்தாள் தொங்கிக்கொண்டு இருந்தது. அதில்

" முதியவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை ! " என்று போட்டிருந்தது.

ஏதோ பொறி தட்டவே செய்தித்தாள் ஒன்றை வாங்கிப் படித்தார்.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். உடல் அடையாளம் காணமுடியாத அளவுக்குப் பல துண்டுகளாக சிதறிவிட்டது. அவரது தற்கொலைக்கு வறுமை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது சட்டைப் பையில் ஒரு துண்டுக் காகிதம் இருந்தது. அதில் ஒரு விலாசம் குறிப்பிட்டிருந்தது. அந்த விலாசம்...

அந்த விலாசத்தைப் பார்த்த கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார். அது தன்னுடைய விலாசம். இறந்துபோனது தன் நண்பன் ராமசாமி என்று தெரிந்ததும் , துக்கம் அவரது தொண்டையை அடைத்தது. அது ஒரு பொதுஇடம் என்பதையும் மறந்து , வாய்விட்டுக் கதறி அழுதார். சிறிதுநேரம் அழுதுகொண்டு இருந்த கந்தசாமி , துக்கத்தைக் கட்டுப் படுத்திக்கொண்டு மெல்ல எழுந்தார். ஒரு முடிவுக்கு வந்தார். கால்போன போக்கில் நடந்தார். நண்பனின் நினைவாகவே இருந்தார்; திடீரென நின்றார். தான் நின்றுகொண்டிருக்கும் இடம் ஓர் ஆற்றுப் பாலம் என்பதை அறிந்துகொண்டார். ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. பாலத்தின் கைப்பிடிச் சுவரின்மீது ஏறி நின்றார்.

" ராமசாமி ! உன்னைத்தேடி , நீ இருக்கும் இடத்திற்கு நானும் வந்துட்டேன்பா ! " என்று சொல்லிக்கொண்டே ஆற்றில் குதித்தார்.


குறள்
=====

சாதலின் இன்னாதது இல்லை; இனிததூம்
ஈதல் இயையாக் கடை. ( ஈகை-210 )


இறத்தலைப் போலத் துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை;ஆனால் பிறர் யாசிக்கும்போது , அவருக்கு உதவி செய்யமுடியாத நிலை ஏற்படுமாயின், அவ்விறத்தலாகிய துன்பமும் கூட இன்பமாய்விடும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 25, 2015 10:24 am

இல்லறமும் துறவறமும்.
==================
ஊருக்கு அருகே சிறு குன்று; குன்றின் அடிவாரத்தில் ஒரு கோவில்.
காலையிலும் மாலையிலும் கோவிலில் கூட்டம் இருக்கும்; மற்ற நேரங்களில் அவ்வப்போது ஓரிருவர் வந்துபோவார்கள். பொதுவாக அந்தக் கோவிலிலும் சுற்றுப்புரத்திலும் அமைதியான சூழ்நிலையே எப்போதும் நிலவும்.
அங்குத் துறவி ஒருவர் இருந்தார். எப்போதும் கோவில் மண்டபத்தில் அமர்ந்திருப்பார்; இரவில் அங்கேயே படுத்துக்கொள்வார்.
எப்போது அவர் அந்த ஊருக்கு வந்தார் என்று யாருக்கும் சரியாக நினைவில்லை; எங்கிருந்து வந்தார் என்று யாருக்கும் தெரியாது. முதிர்ந்த அகவையைக் காட்டும் தோற்றம்; ஏறத்தாழ அறுபது ஆண்டுகளைத் தாண்டி இருப்பார் என்று ஊர்மக்கள் ஊகித்தார்கள்.
எப்போதும் அமைதியாகவே இருப்பார்; யாரிடமும் பேசுவதில்லை. பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஓரிரு சொற்கள் பேசுவார்; பேசியவுடன் மீண்டும் அமைதியாகி விடுவார்.மக்கள் விரும்பிக் கொடுக்கும் உணவுப் பண்டங்களை வாங்கிப் புசிப்பார்.

ஒரு நாள் அந்தக் கோவிலுக்குப் புதிய துறவி ஒருவர் வந்தார்.  மண்டபத்தில் அமர்ந்திருந்த முதிய துறவியை வணங்கினார்.
“சுவாமி, நான் தொலைவிலிருந்து வருகிறேன்; இங்குத் தங்கிக்கொள்ளலாமா?” என்று கேட்டார்.
உடன்பாட்டுக்கு அடையாளமாகத் தலையை அசைத்தார் முதிய துறவி.
அன்றிலிருந்து அந்த இளந்துறவிக்கும் கோவில் மண்டபமே இருப்பிடம் ஆகியது.
சில திங்கள் கழிந்தன.
தம் வழக்கத்துக்கு மாறாக ஒரு நாள் இளையவரிடம் பேசத் தொடங்கினார் முதியவர்.
“நீங்கள் ஏன் துறவி ஆனீர்கள்?” என்று கேட்டார்.
“வாழ்க்கையே வெறுத்துவிட்டது, சுவாமி! திருமணம் செய்துகொள்ள எவ்வளவோ முயற்சி செய்தேன்; முடியவில்லை. எல்லா முயற்சிகளும் வீணாகி விட்டன. ஒவ்வொரு முறையும் என்ன என்னவோ தடைகள்! எவ்வளவு காலம்தான் முயற்சி செய்வது? வெறுத்துவிட்டது. எனக்கு மனைவிஅமையாத காரணத்தினால்தான் நான்  துறவியானேன். மனைவி மக்கள் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? ஆமாம், தாங்கள் துறவி ஆனது ஏன் சுவாமி?” என்று கேட்டார் இளையவர்.

“எனக்கு மனைவி இருந்தாள் அதனால்தான்!” என்றார் முதிய துறவி.

இதைக்கேட்ட இளந்துறவி, " சுவாமி! தாங்கள் கூறுவது விந்தையாக உள்ளது.இனிய இல்லறத்தை விட்டுவிட்டுக் கொடிய துறவறத்தைத் தாங்கள் மேற்கொண்டது சரிதானா? " இல்லறமல்லது நல்லறமன்று " என்ற ஒளவையின் வாக்கைத் தாங்கள் அறியீரோ ?"

" அந்த ஒளவைப் பாட்டிதான் என்னைத் துறவறம் மேற்கொள்ளச் சொன்னாள். "

" சுவாமி! தாங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை."

" எனக்கு வாய்க்கப்பெற்ற மனைவி ஒரு ஊதாரி; ஆடம்பரப் பிரியை; தாறுமாறாகச் செலவு செய்வாள். அவளுடைய ஆடம்பரச் செலவுக்கு என்னுடைய வருமானம் போதவில்லை; ஊரெல்லாம் கடன் வாங்கினேன்; கடன்காரர்கள் தொல்லை அதிகமாயிற்று; நிம்மதி இழந்தேன்; தூக்கத்தைத் தொலைத்தேன்.
உற்றார், உறவுகளை அண்டவிடமாட்டாள். உறவுக்குப் பகையானேன். தெருவில் " பசி " என்று சொல்லி வந்தவர்களுக்குப் " புசி " என்று சொல்லி ஒருபிடி அன்னம் இடமாட்டாள். நான் அவளுக்குக் கூறிய அறிவுரைகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராயிற்று. இனி அவளோடு வாழ்வதில் பயனில்லை என்பதை உணர்ந்தேன்.

பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி இருக்கலாம்- சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாயின்
கூறாமல் சன்யாசம் கொள்.

என்ற ஒளவையின் வாக்கிற்கு இணங்க துறவறத்தை மேற்கொண்டேன்." என்று முடித்தார் முதிய துறவி.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 25, 2015 6:43 pm

அவையறிந்து பேசுக.
===============
செல்வந்தர் ஒருவர் ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்தார். அதைக் கவனித்துக் கொள்ள வேலைக்காரன் ஒருவனை ஏற்பாடு செய்திருந்தார்.ஒருநாள் வேலைக்காரன் வரவில்லை.எனவே தானே அதற்கு உணவு கொடுக்க விரும்பினார்.ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி, ஒரு தேக்கரண்டியில் எடுத்து அதன் வாயில் ஊட்ட முனைந்தார்.அந்த நாயோ தனக்குப் பொருந்தாத எதையோ கொடுப்பதாக நினைத்து, உண்ண மறுத்து திமிறிக்கொண்டு இருந்தது. செல்வந்தரோ விடாப்பிடியாக பாலை ஊட்ட முயன்றார். இருவருக்கும் நடந்த போராட்டத்தில், கிண்ணம் தவறிக் கீழே விழுந்து பால் முழுவதும் தரையில் கொட்டியது.இதனால் வெறுப்படைந்த செல்வந்தர் நாயைத் திட்டிவிட்டு சோபாவில் சென்று அமர்ந்தார்.

அமர்ந்தவர் அடுத்து நடந்த நிகழ்வைப் பார்த்து, பெரிதும் வியப்பில் ஆழ்ந்தார்.கீழே கொட்டியிருந்த பாலை அவரது செல்ல நாய் ஆவலுடன் நக்கிக் குடித்துக் கொண்டிருந்தது. நாயின் இயல்புக்கு ஏற்றவாறு கொடுக்காமல், தான் எண்ணியவாறு கொடுக்க நினைத்த தம் அறியாமையை எண்ணி வெட்கப்பட்டார்.

அவையில் தம் கருத்தைச் சொல்ல முற்படுபவர்கள் அவையின் தன்மை அறிந்து பேசவேண்டும். பாமரர்கள் நிறைந்துள்ள அவையில் உயர்ந்த நடையில் பேசுவதால் பயன் இல்லை.கற்றுத் துறைபோகிய சான்றோர்கள் நிறைந்த அவையில் வித்தக நடையில் பேசவேண்டும்.பேரறிஞர் அண்ணாவின் வெற்றிக்குக் காரணம் அவர் அவை அறிந்து பேசியதுதானே!

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

கருத்து:அறிவுடையார் முன்பு, தம் நூலறிவும் சொல்வன்மையும் தோன்ற பேசவேண்டும். நூலறிவற்ற பாமரர்கள் முன்பு, தாமும் வெண்மையுடையராகக் காட்ட வேண்டும்.

ஒளியார்= அறிவுடையோர். வெளியார்= அறிவிலே வெண்மை கொண்டவர்கள்.
வான்சுதை=வெண்மை நிறம்.

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 7:52 pm

அனைத்து கதைகளும் அருமையோ அருமை!
சூப்பர் ஜி! சூப்பர் ஜி!
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 26, 2015 8:43 am

நேர்காணல்
=========
அது ஒரு முதியோரில்லம். சுமார் 100 முதியோர்கள் அங்கு தங்கியிருந்தனர். அவர்களைக் கவனித்துக்கொள்ள 10 ஆயாக்களும், இரண்டு மருத்துவர்களும், மேலாளர் ஒருவரும், வாட்ச்மேன் ஒருவரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலாளராக இருந்தவர் ஓய்வு பெற்றுவிடவே , வேறு ஒரு மேலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக அன்று நேர்முகத்தேர்வு நடக்க இருந்தது.

சரியாகப் பத்து மணிக்கு நேர்முகத்தேர்வு ஆரம்பிக்க இருந்தது. அந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக ஆண்களும் ,பெண்களுமாக 20 பேர் வந்திருந்தனர். செயலாளரின் அறைக்கு முன்பாக இருந்த இருக்கைகளில் அனைவரும் அமர்ந்திருந்தனர். செயலாளரின் வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர். அவர் வந்தபாடில்லை. அனைவரும் ஒருவித மன இறுக்கத்துடன் காணப்பட்டனர். கையில் புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருந்தனர். சரியாகப் 10 மணிக்கு செயலாளர் , அவரது அறையில் நுழைந்தார்.

சிறிதுநேரம் கழித்து இண்டர்வியூ ஆரம்பமானது.

பியூன் வெளியேவந்து ," ரகுராமன் யார் ? உள்ள போங்க ! " என்று சொன்னான்.

ரகுராமன் உள்ளே சென்றார்.

சிறிதுநேரம் கழித்து இண்டர்வியூ முடிந்தவுடன் ரகுராமன் வெளியே வந்தார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்துகொண்டார். இண்டர்வியூ முடிவுக்காகக் காத்திருந்தார்.

அடுத்து பியூன் வெளியே வந்து, " மாலதி ! " என்று கூப்பிட்டான்.

மாலதி என்ற பெயருடைய அந்தப் பெண் செயலாளரின் அறைக்கு உள்ளே நுழைய யத்தனித்தபோது

திடீரென்று அங்கு வந்திருந்த 20 பேரில் ஒருவன் ," ஐயோ ! அம்மா ! நெஞ்சு வலிக்கிறதே ! நெஞ்சு வலிக்கிறதே ! தாங்க முடியலையே !" என்று சொல்லி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான். " என்னை யாராவது மருத்துவ மனையில் சேர்த்துவிடுங்கள் " என்று சொல்லி அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்துக் கெஞ்சினான். அவனுக்கு சுமார் 35 வயதிருக்கும்.

இண்டர்வியூக்கு வந்திருந்தவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவனுக்கு உதவப்போய் , இண்டர்வியூவைத் தவறவிட்டால் , வேலைவாய்ப்புக் கிடைக்காமல் போய்விடும் என்று எண்ணி யாரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை.

மாலதியும் அவனை ஒருகணம் பார்த்தாள். இன்டர்வியூவுக்குப் போவதா அல்லது அவனுக்கு உதவுவதா என்று அவளுக்குத் தெரியவில்லை. சிறிதுநேரம் குழம்பினாள். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தாள். மாலதி அவனருகே விரைந்து சென்றாள்.

" சார் ! கொஞ்சம் பொறுத்துக்கோங்க ! நான் போய் ஒரு ஆட்டோவைக் கூட்டிகிட்டு வர்றேன்." என்று சொல்லிவ்ட்டு மாலதி வெளியே சென்றாள்.

பத்துநிமிடம் கழித்து மாலதி வந்தாள். ஆட்டோ வெளியில் நின்றிருந்தது.

உள்ளே வந்த மாலதிக்கு ஒரே வியப்பு. வலியால் துடித்த அந்த நபர் , சிரித்துக் கொண்டே அங்கு நின்றிருந்தான். அவன் மாலதியைப் பார்த்து,

" வா ! மாலதி ! You are appointed ; உன்ன மாதிரி பொறுப்பு உள்ள ஒருவரைத்தான் நாங்க எதிர்பார்த்தோம். உன்ன நம்பி 100 என்ன ! ஆயிரம் முதியவர்களைக் கூட ஒப்படைக்கலாம். நான்தான் இந்த முதியோர் காப்பகத்தை நடத்துகிறேன்." என்று சொன்ன அவர்

" செக்ரட்டரி ! " என்று கூப்பிட்டார்.

செக்ரட்டரி அறையிலிருந்து வெளியே வந்தார்.

" செக்ரட்டரி ! இந்தப் பெண் மாலதிக்கு appointment order கொடுத்திருங்க ! " என்றார்.

" Yes Sir ! " என்றார் செக்ரட்டரி.

செக்ரட்டரி இண்டர்வியூவுக்கு வந்திருந்தவர்களைப் பார்த்து, " Interview is over ! you can go ! " என்றார்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 27, 2015 10:12 am

திருடன் !
=======
இரவு மணி இரண்டு இருக்கும். பவர்கட் இருந்ததால் எங்கும் ஒரே கும்மிருட்டு. திடீரென்று பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. என் மனதில் பயம் பற்றிக்கொண்டது. ஒருவேளை திருடன் எவனாவது வந்திருப்பானோ? நல்லவேளையாக போன மின்சாரம் , திரும்ப வந்தது.நைட்லேம்ப்பின் மங்கலான வெளிச்சத்தில் பூட்டியிருந்த பீரோவைக் கண்டதும் , மனதிற்குள் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது.திருடன் யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்டேன்.

பீரோவைத் திறப்பதற்காக சாவியைத் தேடினேன். எங்கு தேடியும் சாவி கிடைக்கவில்லை. மாற்று சாவியைப் பயன்படுத்தி பீரோவைத் திறந்தேன்.
பீரோவில் நகைகளும், பணமும் பத்திரமாக இருந்தது கண்டு போன உயிர் திரும்ப வந்தது.கடவுளுக்கு நன்றி சொன்னேன். வீட்டுக்காரன் விழித்துக் கொள்வதற்கு முன்பாக வந்த வேலையை முடித்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணி , பீரோவில் இருந்த நகைகளையும், கரன்சி நோட்டுகளையும் அவசர அவசரமாக , நான் கொண்டுவந்த கோணிப் பைக்குள் நிரப்பினேன். சத்தமில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினேன்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 4:23 pm

நோய் கொடுத்த டாக்டர் !
=========================
எழுபது வயதான பங்கஜம் தன் மகனைப் பார்த்து,"சரவணா! எனக்குஉடம்புக்கு ரொம்பவும் முடியல! படுத்தா உக்கார முடியல, உக்காந்தாநிக்க முடியல! நின்னா நடக்க முடியல! கீழ தள்ளுது.டாக்டர பாத்தாதேவல! என்ன டாக்டர் கிட்டஅழச்சிட்டுப் போப்பா." என்று கேட்டாள்.

"அம்மா! ஆபீஸிலிருந்து வந்த பின்னாடி இன்னிக்கி சாயங்காலம் உன்னடாக்டர் கிட்ட அழச்சிட்டுப் போறேம்மா!" என்றான் சரவணன்.

மாலை ஆறு மணி. ஆபீஸிலிருந்து சரவணன் வந்தான்.டாக்டரிடம் போவதற்கு ரெடியாக இருந்தாள் பங்கஜம்.இருவரும் ஒரு ஆட்டோவைப்பிடித்துக் கொண்டு டாக்டரின் கிளினிக்கை அடைந்தார்கள்.

டாக்டர் பங்கஜத்தை செக்கப் செய்தபிறகு சரவணனைப் பார்த்து,"அம்மாவுக்கு ஒன்றுமில்லை!பிரஷர் அதிகமாக உள்ளது.மாத்திரைகள் எழுதித் தாரேன்.தொடர்ந்து சாப்பிடணும்;சாப்பாட்டில் உப்பைக் குறைச்சிக்கணும்;தினமும் அரைமணி நேரம் வாக்கிங் போகணும்.இன்னும் ஒரு மாசம்கழிச்சி என்ன வந்து பாருங்க!" என்று சொல்லி மாத்திரைகளை எழுதித்தந்தார்.

பங்கஜம் தொடர்ந்து மருந்துகளை சாப்பிட்டு வந்தாள்.பத்து நாட்களிலேயே நல்ல குணம் தெரிந்தது.ஓடி ஆடி வீட்டு வேலைகளைச்செய்தாள்.ஆனால் சரவணனுக்கு உடம்புக்கு வந்துவிட்டது.எதையும்சரியாகச் சாப்பிடுவதில்லை;இரவில் சரியாகத் தூங்குவதில்லை; அவன்முகத்தில் சிரிப்பைப் பார்த்தேவெகுநாளாயிற்று.ஆபீஸுக்கும் நேரத்திற்குச்செல்வதில்லை.பித்துப்பிடித்தவன்போலஇருந்தான்.உடம்பும்மெலிந்துவிட்டது.இப்படியேஒருமாதம்ஆயிற்று.இதையெல்லாம் கவனித்த பங்கஜம் தன்மகனைப் பார்த்து,"என்னப்பா சரவணன்! உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கே? ஒழுங்கா சாப்பிட்டாத்தானே உடம்புநல்லா இருக்கும்!ஆபீஸ்ல ஒழுங்காவேலைசெய்யமுடியும்! எப்பவும்கலகலன்னு சிரிச்சி பேசறவன் இப்படி உம்மணா மூஞ்ஞியாட்டம் இருக்கியே! இன்னிக்கி வா! டாக்டரைப் போய்ப் பார்க்கலாம்!என்று மகனிடம் சொன்னாள்.

"சரிம்மா! இன்னிக்கி சாயங்காலம் போலாம்!"

மாலை ஆறு மணிக்கு சரவணனை அழைத்துக்கொண்டு டாக்டரிடம்சென்றாள் பங்கஜம்.
"வாங்கம்மா!எப்படி இருக்கீங்க? மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடறீங்களா?"
"டாக்டர்! இப்ப நான் நல்லா இருக்கேன்.எனக்கு ஒன்னும் இல்ல! ஆனால்என் மகனுக்குத்தான் ஒரு மாசமா உடம்பு சரியில்ல எதையும் சரியாசாப்பிடறது இல்ல.சரியா தூங்கறது இல்ல!எதையோ பறி கொடுத்தவன்மாதிரி இருக்கான்!இப்பல்லாம் அவன் முகத்தில் சிரிப்பையே காணோம்.என்னன்னு கொஞ்ஞம் பாருங்க டாக்டர்!

டாக்டர் சரவணனை உள்ளே அழைத்துச் சென்றார்.பத்து நிமிடம் கழித்து டாக்டர் வெளியே வந்தார்.அவருக்குப் பின்னால் சரவணன்சிரித்துக் கொண்டே வெளியே வந்தான்.தன் மகன் சிரிப்பதைக் கண்டுபங்கஜம் மிகுந்த வியப்பு அடைந்தாள்.

"அம்மா! உங்க மகனுக்கு ஒன்னும் இல்ல! உங்க மகனுக்கு வந்திருக்கிறநோய் இந்த வயசுல எல்லாருக்கும் வர்ரதுதான்.அவருக்கு வந்திருக்கிறதுகாதல் நோய்! அந்த நோயை அவருக்குக் கொடுத்ததேநான்தான் .இப்பநானேஅதசரிபண்ணிட்டேன்.இனிமே உங்க மகன் ஒழுங்கா சாப்பிடுவாரு! ஒழுங்கா தூங்குவாரு! கவலைப் படாமே போய் வாங்க அத்தை!"என்று சொன்னாள் இருபத்தைந்து வயதான டாக்டர் அகல்யா.

"அத்தையா!" என்று சொல்லி மயக்கம் அடைந்தாள் பங்கஜம்.

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து.

என்பது குறள்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 29, 2015 9:27 am

விட்டுவிட விட்டுவிட இன்பம் !
==============================
ஒருவன் தன வேலையில் இடமாற்றம் காரணமாக, இருந்த வீட்டைக் காலி செய்து கொண்டு வேறு ஊருக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது.அந்த ஊருக்குப் போகவேண்டுமானால், வழியில் உள்ள ஒரு பெரிய ஆற்றைக் கடந்தாகவேண்டும்.ஆறு நிறைய தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு,ஒரு படகை வாடகைக்குப் பேசி ஏற்பாடு செய்து கொண்டான்.வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் படகில் ஏற்றினான். மனைவி, மற்றும் இரு குழந்தைகளுடன் படகில் ஏறி அமர்ந்து கொண்டான்.

படகு ஆற்றில் சிறிது தூரம் சென்றவுடன், ஆடத் தொடங்கியது.படகில், அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றியதன் காரணமாக,படகு,மெல்ல மெல்ல ஆற்றில் அமிழத் தொடங்கியது.ஆற்றுநீர் கொஞ்சம் கொஞ்சமாக படகின் உள்ளே வரத் தொடங்கியது.நிலைமையின் ஆபத்தைப் புரிந்துகொண்ட அவன்,விரைந்து செயலாற்றத் தொடங்கினான்.பாரத்தைக் குறைப்பதற்காக, ஒவ்வொரு பொருளாக எடுத்து ஆற்றில் வீசினான்.இவ்வாறு கட்டில்,பீரோ,கிரைண்டர்,மிக்சி,குளிர்சாதனப் பெட்டி என்று ஒவ்வொன்றாக ஆற்றிலே தள்ளி விட்டான்.ஓரளவு பாரம் குறைந்தவுடன்,படகு, மெல்ல மெல்ல மேலே எழும்பி வந்தது.படகில் நீர் நுழைவதும் நின்றுவிட்டது.படகு பாதுகாப்பாக மறுகரையை வந்து அடைந்தது.

கவலையுடன் இருந்த மனைவியைப் பார்த்துக் கணவன் சொன்னான்,"கவலைப்படாதே,இந்தப் பொருட்கள் எல்லாம், நம்மைவிட்டுப் போகாதிருந்தால்,நம்முடைய உயிர்,நம்மைவிட்டுப் போயிருக்கும்.நம்முடைய அருமைக் குழந்தைகளையும்,நாம் இழந்திருப்போம்.நம்மைவிட்டுப் போன இப்பொருட்களை எல்லாம், நாம் திரும்பப் பெறமுடியும். ஆகையால் நீ கவலைப்படாதே"-என்று ஆறுதல் கூறினான்.அவன் மனைவி,கண்களில் ஆனந்தக் கண்ணீர்மல்க,அப்படியே தன கணவன் மீது சாய்ந்து கொண்டாள்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். ( துறவு-341 )

என்பது குறள்.ஒருவன்,எந்தெந்தப் பொருட்களிடம் பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ,அந்தந்தப் பொருட்களினால்,அவனுக்குத் துன்பம் இல்லை என்பது இக்குறளின் பொருள்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 30, 2015 9:05 am

பொய்யா விளக்கு.
-----------------------------
இராமகிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது சுமார் ஒன்பது வயதில், அவரது பிறந்த குலவழக்கப்படி, அவருக்குப் பிரம்மோபதேசம்,அதாவது பூணூல் போட்டு ஆன்மீக உபதேசம் செய்யும் உபநயனச் சடங்கு நடந்தது.அதில்,பூணூல் போட்ட சிறுவன்,மற்றவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டும் என்று ஒரு கட்டம் உண்டு.பிச்சை ஏற்கும் கட்டம் வந்ததும்,இராமகிருஷ்ணருக்குத் தான் கொடுத்த வாக்கு ஒன்று நினைவிற்கு வந்தது.தனது அன்னைக்குப் பலவகையிலும் உதவி செய்து அன்னையின் அன்பிற்குப் பாத்திரமாக நடந்து வந்தாள் தானி என்னும் ஒரு கருமானின் மனைவி.அவள் தன்மேல் அன்பு காட்டியதன் விளைவாக,"உபநயனத்தன்று,என்னிடம் பிச்சை ஏற்பாயா?" என்று கேட்டதற்கு,"ஏற்பேன்" என்று வாக்களித்தார் இராமகிருஷ்ணர்.

அந்த வாக்கு இப்போது நினைவிற்கு வந்தது. அண்ணாவிடம் அதைக்கூறி,அவளிடமிருந்துதான் முதலில் பிச்சை ஏற்கப் போவதாகக் கூறினார்.உடனே அண்ணா வெகுண்டார்,"தாழ்ந்த குலப் பெண்ணிடம் பிச்சை ஏற்பது மரபல்ல" என்றுகூறி "அவளிடம் பிச்சை ஏற்கக்கூடாது" என்றார்.

ஆனால் இராமகிருஷ்ணர்,"அவளுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்.கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்றால் நான் உண்மை நெறியினின்று தவறியவன் ஆவேன்.உண்மை நெறியை நான் கடைப் பிடிக்கவில்லை என்றால் இந்தப் பூணூல் அணிவதால் பயன் ஏதும் இல்லை" என்று கூறிப் பிடிவாதமாக தானியிடமிருந்து பிச்சை ஏற்றுத் தன வாக்கினைக் காப்பாற்றினார்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

புற இருளை நீக்குகின்ற சூரியன்,சந்திரன்,தீபம் போன்ற விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல.அகத்தே ஏற்றப்படுகின்ற "உண்மை" என்னும் விளக்கே சான்றோர்களுக்கு அழகு தருவதாகும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக