புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத் தாமரைப் பெண்ணே!
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
வாழ்த்துரை
நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.
சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.
ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.
எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.
குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.
இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.
பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.
இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,
அன்புடன்
(ஏ.நடராஜன்)
முன்னாள் இயக்குநர்
சென்னைத் தொலைக்காட்சி
அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.
இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.
மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.
கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,
இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.
முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.
இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்
அன்புடன்
ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா
பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.
பதிப்புரை
எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.
கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,
எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,
எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.
அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.
கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.
இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,
அன்புடன்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்
வாழ்த்துரை
நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.
சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.
ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.
எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.
குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.
இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.
பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.
இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,
அன்புடன்
(ஏ.நடராஜன்)
முன்னாள் இயக்குநர்
சென்னைத் தொலைக்காட்சி
அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.
இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.
மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.
கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,
இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.
முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.
இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்
அன்புடன்
ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா
பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.
பதிப்புரை
எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.
கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,
எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,
எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.
அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.
கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.
இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,
அன்புடன்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
18
நிர்வாகி பொய் சொல்லுகிறார். தங்களைத் தவிர்க்கப் பார்க்கிறார் என்று தான் சுஷ்மா முதலில் நினைத்தாள். அதை அவர் புரிந்துகொண்டு, “என் வார்த்தைகளில் உங்களுக்கு நம்பிக்கையில்லேன்னு தோணுது, வேணுமானால் உள்ளே போய் யாரை வேணுமானாலும் விசாரிச்சுப் பாருங்க. அவங்க இல்லாம பசங்க வாடிப் போயிருக்காங்க.“
அது உண்மை என்பது பலரின் வார்த்தைகளிலும் வருத்தங்களிலும் அங்கே வெளிப்பட்டது.
“எவ்ளோ நாளா காணோம்?”
“ரெண்டு வாரம்.”
சுரேஷ், “போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்தீங்களா?” என்று விரைத்தான்.
“இல்லை.”
“ஏன்? எங்கம்மா அத்தனைக்கு எளப்பமா போயிட்டாங்களா?”
“அப்படியில்லேம்மா. ஒண்ணு அவங்க திரும்பி வந்திருவாங்கன்னு நினைச்சோம். அடுத்தது போலீசுக்குப் போனால், ஆசிரமத்தின் பெயர் கெட்டிடும். அவங்களுக்கு எந்த ஆபத்தும் வருகிற அளவுக்கு எதிரிங்க யாரும் கிடையாது. நல்லதையே நினைத்து நல்லதையே செய்கிற அவங்களுக்கு எதிரின்னு யாரும் இருக்க முடியாதுன்னு நம்பறேன்.”
“அப்புறம் எப்படி?”
“சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்கக் கூடாது. செண்பகம் இங்கே இருப்பது உங்களுக்குத் தெரிஞ்சுப் போச்சு. அதனால அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணுவீங்கன்னு நினைச்சு தலைமறைவாகியிருக்கலாம்.”
சுஷ்மாவிற்கு அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. அழுகை பொங்கிக் கொண்டுவர,
“சுஷ், வா போகலாம்.” என்று சுரேஷ் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.
மருத்துவக் கல்லூரி.
அன்று அனாடமி வகுப்பு.
சென்ற மாதம் இதற்காக இறந்த உடல் கிடைக்காமல், தற்போது கிடைத்து மாணவர்கள் தயாராக இருந்தனர். பொதுப்பிரிவு, பரிவு, பல், கண், காது என அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் முதலாமாண்டில் இந்த அனாடமி பாடம் உண்டு.
அரசாங்கக் கல்லூரிகளுக்குப் பிரச்சினையில்லை. அரசு மருத்துவமனையிலிருந்து உடல்கள் கிடைத்துவிடும். தனியார் கல்லூரிகளுக்கு இது எப்போதும் பிரச்சினை. சாதாரணமாய் எட்டு அல்லது பத்து மாணவர்களுக்கு ஒரு உடல் என ஒதுக்குவார்கள்.
இப்போது...நன்றாகக் குளிரூட்டப்பட்ட அறைகளில் ஆங்காங்கே உடல்கள் கிடக்க, அறை ஒன்றிற்குள்...
டாக்டர் பிஜு மாணவ, மாணவிகளுக்கு அனாடமி பற்றி விளக்கமளித்துக் கொண்டிருந்தார். சுஷ்மாவின் முகம் களையிழந்திருந்தது, சுரேஷ் இந்த வகுப்பு எடுக்க வந்திருக்கலாமே என்று தோன்றிற்று.
டாக்டர் பிஜு சூழ்ந்திருந்தவர்களுக்கு டேபிள்மேல் விரைத்துக் கிடந்த உடலை எப்படியெப்படிக் கீற வேண்டும், என்னென்ன திசுககள், செல்கள், நரம்புகளைப் பிரிக்க வேண்டும், எப்படி வெட்ட வேண்டும் என்று விளக்கிச் சொன்னார்.
“ஹோப் எவ்ரிபடி அன்டர்ஸ்டான் நவ் டேக் யுவர் டூல்ஸ் அன்ட் கிட்ஸ்! குரூப் குரூப்பா அவங்கவங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாடியைப் போய் பரிசோதிக்கலாம்.”
சுஷ்மா தன் குழுமத்துடன் ஒரு அறைக்குள் பிரவேத்தாள். அங்கேயும் உடல் ஒன்று விரைத்து மேஜைமேல் கிடந்தது. ப்ரீஸியரின் பனிப் புகை. தலை மழிக்கப்பட்டு, உச்சி முதல் பாதம் வரை ஒரே நிலைமை.
“சுஷ்மா, நீ ஆரம்பிக்கிறாயா? நாங்க டீ சாப்பிட்டு வந்திடறோம்.”
“யெஸ்” என்று சுவாரஸ்யமில்லாமல் கையுறை எடுத்து மாட்டினாள். முகத்துக்கு மாஸ்க்.
‘அம்மா, நீ எங்கேயிருக்கிறாய்? குளிர் அதிகமாகத் தெரியவே கோட் பொத்தான்களைப் போட்டாள். அம்மா, ஏன் இப்படிப் பண்ணுகிறாய் நீ?’
கிட்ஸ் பெட்டியைத் திறந்து கத்தி, கத்திரிக்கோல், கத்தியை எடுத்து அந்த உடலின் மண்டைப் பகுதிக்குக் கொண்டுபோனவள்...
“அம்மா... !” என்று அலறினாள்.
அந்த அலறல் பிண அறை முழுக்க எதிரொலித்து, டீ குடிக்கப் போனவர்களையும் பிற அறைகளில் இருந்தவர்களையும் மிரள வைத்து, “என்ன, என்ன?” என்று ஓடி வந்தனர்.
“அம்மா!”
“இங்கேயும் ஆரம்பிச்சுட்டாயா? கடவுளே, கடவுளே! உனக்கு அம்மா வேணும்னா சொல்லு. வெளியே கடைல வாங்கித் தறோம். வீணா எங்களை டார்ச்சர் பண்ணாதே!”
“நோ! திஸ் ஈஸ் மை மம்!”
ஆர் யூ மேட்-”
“ப்ளீஸ்... பிலீவ் மீ...இது என் அம்மாதான்!” என்று அந்த உடலின் முகத்தைப் பற்றப் போனவள், மயங்கிக் கீழே சாய்ந்தாள்.
“ஏய், பிடிங்கப்பா. யாரைப் பார்த்தாலும் இவளுக்கு அம்மா நினைப்பு. தூக்குங்க கிளினிக்குக்கு. இன்னிக்கும் அனாடமி... பனாடமிதான்!”
கிளினிக்!
அதே கல்லூரியின் விளிம்பில் பளபளப்பும் பணக்காரத்தனமுமாய் வார்டு முழுக்க நோயாளிகளும் நர்ஸ்களுமாய் நிரம்பிருந்தனர்.
நிர்வாகி பொய் சொல்லுகிறார். தங்களைத் தவிர்க்கப் பார்க்கிறார் என்று தான் சுஷ்மா முதலில் நினைத்தாள். அதை அவர் புரிந்துகொண்டு, “என் வார்த்தைகளில் உங்களுக்கு நம்பிக்கையில்லேன்னு தோணுது, வேணுமானால் உள்ளே போய் யாரை வேணுமானாலும் விசாரிச்சுப் பாருங்க. அவங்க இல்லாம பசங்க வாடிப் போயிருக்காங்க.“
அது உண்மை என்பது பலரின் வார்த்தைகளிலும் வருத்தங்களிலும் அங்கே வெளிப்பட்டது.
“எவ்ளோ நாளா காணோம்?”
“ரெண்டு வாரம்.”
சுரேஷ், “போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்தீங்களா?” என்று விரைத்தான்.
“இல்லை.”
“ஏன்? எங்கம்மா அத்தனைக்கு எளப்பமா போயிட்டாங்களா?”
“அப்படியில்லேம்மா. ஒண்ணு அவங்க திரும்பி வந்திருவாங்கன்னு நினைச்சோம். அடுத்தது போலீசுக்குப் போனால், ஆசிரமத்தின் பெயர் கெட்டிடும். அவங்களுக்கு எந்த ஆபத்தும் வருகிற அளவுக்கு எதிரிங்க யாரும் கிடையாது. நல்லதையே நினைத்து நல்லதையே செய்கிற அவங்களுக்கு எதிரின்னு யாரும் இருக்க முடியாதுன்னு நம்பறேன்.”
“அப்புறம் எப்படி?”
“சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்கக் கூடாது. செண்பகம் இங்கே இருப்பது உங்களுக்குத் தெரிஞ்சுப் போச்சு. அதனால அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணுவீங்கன்னு நினைச்சு தலைமறைவாகியிருக்கலாம்.”
சுஷ்மாவிற்கு அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. அழுகை பொங்கிக் கொண்டுவர,
“சுஷ், வா போகலாம்.” என்று சுரேஷ் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.
மருத்துவக் கல்லூரி.
அன்று அனாடமி வகுப்பு.
சென்ற மாதம் இதற்காக இறந்த உடல் கிடைக்காமல், தற்போது கிடைத்து மாணவர்கள் தயாராக இருந்தனர். பொதுப்பிரிவு, பரிவு, பல், கண், காது என அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் முதலாமாண்டில் இந்த அனாடமி பாடம் உண்டு.
அரசாங்கக் கல்லூரிகளுக்குப் பிரச்சினையில்லை. அரசு மருத்துவமனையிலிருந்து உடல்கள் கிடைத்துவிடும். தனியார் கல்லூரிகளுக்கு இது எப்போதும் பிரச்சினை. சாதாரணமாய் எட்டு அல்லது பத்து மாணவர்களுக்கு ஒரு உடல் என ஒதுக்குவார்கள்.
இப்போது...நன்றாகக் குளிரூட்டப்பட்ட அறைகளில் ஆங்காங்கே உடல்கள் கிடக்க, அறை ஒன்றிற்குள்...
டாக்டர் பிஜு மாணவ, மாணவிகளுக்கு அனாடமி பற்றி விளக்கமளித்துக் கொண்டிருந்தார். சுஷ்மாவின் முகம் களையிழந்திருந்தது, சுரேஷ் இந்த வகுப்பு எடுக்க வந்திருக்கலாமே என்று தோன்றிற்று.
டாக்டர் பிஜு சூழ்ந்திருந்தவர்களுக்கு டேபிள்மேல் விரைத்துக் கிடந்த உடலை எப்படியெப்படிக் கீற வேண்டும், என்னென்ன திசுககள், செல்கள், நரம்புகளைப் பிரிக்க வேண்டும், எப்படி வெட்ட வேண்டும் என்று விளக்கிச் சொன்னார்.
“ஹோப் எவ்ரிபடி அன்டர்ஸ்டான் நவ் டேக் யுவர் டூல்ஸ் அன்ட் கிட்ஸ்! குரூப் குரூப்பா அவங்கவங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாடியைப் போய் பரிசோதிக்கலாம்.”
சுஷ்மா தன் குழுமத்துடன் ஒரு அறைக்குள் பிரவேத்தாள். அங்கேயும் உடல் ஒன்று விரைத்து மேஜைமேல் கிடந்தது. ப்ரீஸியரின் பனிப் புகை. தலை மழிக்கப்பட்டு, உச்சி முதல் பாதம் வரை ஒரே நிலைமை.
“சுஷ்மா, நீ ஆரம்பிக்கிறாயா? நாங்க டீ சாப்பிட்டு வந்திடறோம்.”
“யெஸ்” என்று சுவாரஸ்யமில்லாமல் கையுறை எடுத்து மாட்டினாள். முகத்துக்கு மாஸ்க்.
‘அம்மா, நீ எங்கேயிருக்கிறாய்? குளிர் அதிகமாகத் தெரியவே கோட் பொத்தான்களைப் போட்டாள். அம்மா, ஏன் இப்படிப் பண்ணுகிறாய் நீ?’
கிட்ஸ் பெட்டியைத் திறந்து கத்தி, கத்திரிக்கோல், கத்தியை எடுத்து அந்த உடலின் மண்டைப் பகுதிக்குக் கொண்டுபோனவள்...
“அம்மா... !” என்று அலறினாள்.
அந்த அலறல் பிண அறை முழுக்க எதிரொலித்து, டீ குடிக்கப் போனவர்களையும் பிற அறைகளில் இருந்தவர்களையும் மிரள வைத்து, “என்ன, என்ன?” என்று ஓடி வந்தனர்.
“அம்மா!”
“இங்கேயும் ஆரம்பிச்சுட்டாயா? கடவுளே, கடவுளே! உனக்கு அம்மா வேணும்னா சொல்லு. வெளியே கடைல வாங்கித் தறோம். வீணா எங்களை டார்ச்சர் பண்ணாதே!”
“நோ! திஸ் ஈஸ் மை மம்!”
ஆர் யூ மேட்-”
“ப்ளீஸ்... பிலீவ் மீ...இது என் அம்மாதான்!” என்று அந்த உடலின் முகத்தைப் பற்றப் போனவள், மயங்கிக் கீழே சாய்ந்தாள்.
“ஏய், பிடிங்கப்பா. யாரைப் பார்த்தாலும் இவளுக்கு அம்மா நினைப்பு. தூக்குங்க கிளினிக்குக்கு. இன்னிக்கும் அனாடமி... பனாடமிதான்!”
கிளினிக்!
அதே கல்லூரியின் விளிம்பில் பளபளப்பும் பணக்காரத்தனமுமாய் வார்டு முழுக்க நோயாளிகளும் நர்ஸ்களுமாய் நிரம்பிருந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“டாக்டர் சுரேஷ், அம்மா கண் திறந்துட்டாங்க!” என்க, “இதோ வந்துட்டேன்” என்ற செல்போனை நிறுத்தி விட்டு உள்ளே ஓடினான்.
அந்தப் படுக்கைக்குச் சென்று எழ முயன்ற சுஷ்மாவை, “தட்ஸ் ஓக்கே” என்று தலையில் பிடித்து அமர்த்தினான். “ஆர் யு ஆல் ரைட்?”
“யெஸ்” என்று கண்கலங்கினாள்.
“அது நிச்சயமாய் என் அம்மாதான்! சொன்னா யாரும் என்னை நம்பமாட்டேன்றாங்க. பைத்தியக்காரி பட்டம்... சுரேஷ் நீங்களாவது..”
“ஐ பிலீவ்! நீ எதைப் பத்தியும் ஒர்ரி பண்ணிக்காம ரெஸ்ட் எடு!”
“நோ, சும்மா என்னைச் சமாதானப்படுத்தறதுக்காகச் சொல்ல வேணாம். தட்ஸ் மை மம்!”
“சுஷ், வி அக்ரி. விசாரிச்சாச்சு. ஏற்கனவே போலீஸுக்குச் சொல்லி இன்ஸ்பெக்டர் விஜய் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார். உன்கிட்ட பேசணுமாம். வரச் சொல்லட்டா?”
இன்ஸ்பெக்டர் பதவிக்குப் பொருந்தாமல் தொப்பையின்றி நரையின்றி விஜ்ய் இளமையாய்த் தெரிந்தான். அவனது கண்களில் ஆர்வமும் கனிவும் கசிய, அவளது படுக்கையருகே நாற்காலி போட்டு அமர்ந்தான்.
அவள் அவநம்பிக்கையோடு சுரேஷைப் பார்க்க...
“சுஷ்மா, நான் டாக்டர் சுரேஷின் நண்பன்தான். நாங்க எல்லாம் விசாரிச்சுட்டோம். யு ஆர் ரைட். நீ பயந்தது போலவே அது உங்கம்மாதான். அந்த ஆசிரமத்தின் நிர்வாகியும் இங்கே வந்து அதை உறுதிப்படுத்திட்டார்.”.
அதைக் கேட்டதும் சுஷ்மா கண்களை மூடிக்கொண்டு விம்ம ஆரம்பித்தாள்.
“மை மாம். எங்கம்மா... வாட் ஹேப்பன்ட் டு ஹர்...?”
“தெரியல. கண்டுபிடிப்போம். அவங்க ஆசிரமத்தை விட்டுப்போய் இரண்டு வாரத்துககு மேலாச்சாம், நிர்வாகியும் அங்கு பணிபுரிபவர்களும் சொன்னாங்க. அதற்குப் பிறகு அவங்க எங்கே போனாங்க? என்னாச்சு... எப்படி இங்கே வந்தாங்கன்னு விசாரிக்கணும்?”
“அதோட...எப்படி இறந்தாங்கன்னும் கூட தெரிஞ்சாகணும் சார்?”
“சுஷ்மா என்ன சொல்ற நீ?”
“யெஸ். ப்யூர்லி இட்ஸ் எ மர்டர்?”
“வாட் ஆர் யு டாக்கிங். வயசானவங்க. அவங்களைப் போய் யார் கொலை? என்ன மோட்டிவ்?”
“அது எனக்குத் தெரியாது. ஆனா அவங்க நார்மலா சாகலே. அது மட்டும் உறுதி!”
“எதை வச்சு சொல்கிறாய்?”
“அவங்க மண்டைல அடிபட்ட தழும்பு இருந்தது. நான் பார்த்தேன்.”
“தழும்பு? இறந்து பதப்படுத்தப்பட்ட உடலின் மண்டையில் தழும்பு? ஈஸ்ட் பாஸிபிள்?”
“விஜய் சுரேஷைக் கேட்க, அங்கே ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்த டாக்டர் ஒருவர், “சார், நான் என் அபிப்பிராயத்தைச் சொல்லலாமா?” என்றார்.
விஜய் அவரை வேண்டாதவராய்ப் பார்க்க, “ஐம் டாக்டர் மனோகரன். இங்கே சீனியர்,” என்று கை கொடுத்தார். “உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, என் அறைக்கு வந்தால் எல்லாத்தையும் உங்களுக்கு நான் விளக்கமாகச் சொல்ல முடியும்.”
“வித் ப்ளஷர்” என்று விஜ்ய் அவரைப் பின் தொடர்ந்தான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
19
டாக்டர் மனோகரன் தன் அறையில் ஏ.ஸி.யை ஆன் பண்ணிவிட்டு, “ப்ளீஸ், டேக் யுவர் சீட்!” என்றார். “சுரேஷ் நீயும்தான்!” அவன் தயங்க, “ஜூனியர்னா என்ன... பரவாயில்லே உட்கார்” என்று அழைப்பு மணியை அழுத்தினார்.
பளிச்சென, பளபளப்பாய் எட்டிப் பார்த்த மலையாள நர்சிடம். “கொஞ்ச நேரத்திற்கு நோ பேஷன்ட்ஸ் ப்ளீஸ்!”
“ஓ.கே. டாக்டர்!”
“இன்ஸ்பெக்டர் என்ன யோசனை? உங்க சந்தேகம் தழும்புதானே?”
“யெஸ் டாக்டர். கெமிக்கல் போட்டு பதப்படுத்திதானே பாடி அனாடமிக்கு வரும்? அப்புறம் தழும்பு எப்படி?”
“கெமிக்கல் அதாவது பார்மால்ஹைட் திரவம் குறிப்பிட்ட அடர்த்தியில் சில பிரத் யேக்க் கருவிகளை வெச்சு உடம்புல இன்ஜெக்ட் பண்ணுவாங்க அது எதுக்குன்னா, இறந்துபோன உடல்ல இருக்கிற இன்டர்னல் ஆர்கன்ஸ் கெடாமல் இருப்பதற்கு. அது இல்லேன்னா ரத்தத்துல இருக்கிற பாக்டீரியா சிதைஞ்சு நாத்தம் எடுக்க ஆரம்பிச்சிரும். இந்த கெமிக்கல் ரத்த நாளங்களில் பரவி ரத்தம் சிதையாம பார்த்துக்கும்.
அதனால் அடிபட்ட ரத்தம் வந்திருந்தாலும்கூட ரத்தம் வெளியே இப்போ வராது. ஆனால் அடிபட்ட தழும்பு வெளிப்புறத்தல அப்படியேதானிருக்கும். இந்த மாதிரி கெமிக்கல் இன்ஜெக்ட் பண்றதை எம்பால்மிங்னு சொல்லுவாங்க. இதை வெளியே அவ்வளவு எளிதாய் செஞ்சுட முடியாது.”
“இந்த பார்மால்டிஹைட் கெமிக்கல் உள்ளே கொடுக்க மட்டும் தானா டாக்டர்...?”
“இல்லை. கொஞ்சம் கான்ஸன்ட்ரேஷன் குறைச்சு இறந்து போன உடம்புல வெளியேயும் தடவுவதுண்டு, இதன் மூலம் தோல் கெடாமல் இருப்பதுடன் நாற்றமடிக்காமலும் பாதுகாக்கப்படுது.”
“அனாடமிக்கு இந்த மாதிரி உடல்கள் எங்கிருந்து கிடைக்குது டாக்டர்?”
“பெரும்பாலும் ஜி.எச்.சில் இருந்து சப்ளையாகும். விபதுல இறந்தவங்க, அனாதைங்க பிணத்தை வாங்கிக் ஆள் இல்லாம இருந்தா அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிச்சிடுவாங்க. அப்புறம் ரத்ததானம், கண்தானம் போல உடல் தானம் செய்றவங்களும் உண்டு.”
“இந்தச் செண்பகத்தம்மாவோட உடல் எப்படி? ஜி.எச்.சில் இருந்துதான் வந்ததா...?”
“தெரியல. விசாரிக்கணும். பெரும்பாலும் அரசாங்க மருத்துவமனைகளில் இறந்த உடல்களுக்குப் பிரச்சினையிருக்காது. எங்களை மாதிரி தனியார் கல்லூரிகளில்தான் பிரச்சினை. டிமாண்ட் அதிகம். பாடி சப்ளை பண்ணுவதுக்குன்னு மீடியேட்டர்கள், புரோக்கர்கள் இருக்கிறார்கள். சமயத்தில் மாணவர்களே கூட அவர்களுடைய முயற்சியில் ஏற்பாடு செய்வதுண்டு. இப்போ இந்தம்மாவின் மண்டையில் அடிபட்ட தழும்பு இருக்கும்பட்சத்தில் அது கொலைதான்னு எப்படி எடுத்துக்க முடியும்? தவறிக் கீழே விழுந்து மண்டையில் அடிபடவும் வாய்ப் பிருக்கில்லே?”
“இருக்கு. போஸ்ட்மார்ட்டம் செஞ்சு பார்த்திருப்பாங்களே!”
ஒரு வாரம் மாணவர்களிடையே பரபரப்பாயும் திரில்லாகவும் ஓடிப் போயிருந்தது. போஸ்ட்மார்ட்டம் செண்பகத்தின் மண்டையில் தாக்கப்பட்டு அவள் மூர்ச்சையாகி விழுந்து இறந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என வானிலை அறிக்கைபோல குழப்பிற்று.
அந்த உடல் அரசு மருத்துவமனையிலிருந்து பெறப்பட வில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
பிறகு எப்படி?
விஜய், அனாடமி அசிஸ்டென்ட்டை குடைய, “இது ஒரு வாரம் முன்புதான் சார் எங்களுக்குக் கிடைத்தது” என்றார்.
“எப்படி?”
“அட்டெண்டருக்குத்தான் அந்த விவரம் தெரியும்.”
“அட்டெண்டர் எங்கே?”
“அவர் லீவு சார்!”
“எப்போதிருந்து?”
சுஷ்மா மயங்கி விழுந்து விஷயம் வெளியான நாளுக்கு மறுதினத்தில் இருந்து அவர் எமர்ஜென்ஸி விடுப்பில் சென்றிருப்பதும் தெரிந்தது.
“அட்டெண்டரோட வீட்டு விலாசம் தர முடியுமா?”
டாக்டர் மனோகரன் தன் அறையில் ஏ.ஸி.யை ஆன் பண்ணிவிட்டு, “ப்ளீஸ், டேக் யுவர் சீட்!” என்றார். “சுரேஷ் நீயும்தான்!” அவன் தயங்க, “ஜூனியர்னா என்ன... பரவாயில்லே உட்கார்” என்று அழைப்பு மணியை அழுத்தினார்.
பளிச்சென, பளபளப்பாய் எட்டிப் பார்த்த மலையாள நர்சிடம். “கொஞ்ச நேரத்திற்கு நோ பேஷன்ட்ஸ் ப்ளீஸ்!”
“ஓ.கே. டாக்டர்!”
“இன்ஸ்பெக்டர் என்ன யோசனை? உங்க சந்தேகம் தழும்புதானே?”
“யெஸ் டாக்டர். கெமிக்கல் போட்டு பதப்படுத்திதானே பாடி அனாடமிக்கு வரும்? அப்புறம் தழும்பு எப்படி?”
“கெமிக்கல் அதாவது பார்மால்ஹைட் திரவம் குறிப்பிட்ட அடர்த்தியில் சில பிரத் யேக்க் கருவிகளை வெச்சு உடம்புல இன்ஜெக்ட் பண்ணுவாங்க அது எதுக்குன்னா, இறந்துபோன உடல்ல இருக்கிற இன்டர்னல் ஆர்கன்ஸ் கெடாமல் இருப்பதற்கு. அது இல்லேன்னா ரத்தத்துல இருக்கிற பாக்டீரியா சிதைஞ்சு நாத்தம் எடுக்க ஆரம்பிச்சிரும். இந்த கெமிக்கல் ரத்த நாளங்களில் பரவி ரத்தம் சிதையாம பார்த்துக்கும்.
அதனால் அடிபட்ட ரத்தம் வந்திருந்தாலும்கூட ரத்தம் வெளியே இப்போ வராது. ஆனால் அடிபட்ட தழும்பு வெளிப்புறத்தல அப்படியேதானிருக்கும். இந்த மாதிரி கெமிக்கல் இன்ஜெக்ட் பண்றதை எம்பால்மிங்னு சொல்லுவாங்க. இதை வெளியே அவ்வளவு எளிதாய் செஞ்சுட முடியாது.”
“இந்த பார்மால்டிஹைட் கெமிக்கல் உள்ளே கொடுக்க மட்டும் தானா டாக்டர்...?”
“இல்லை. கொஞ்சம் கான்ஸன்ட்ரேஷன் குறைச்சு இறந்து போன உடம்புல வெளியேயும் தடவுவதுண்டு, இதன் மூலம் தோல் கெடாமல் இருப்பதுடன் நாற்றமடிக்காமலும் பாதுகாக்கப்படுது.”
“அனாடமிக்கு இந்த மாதிரி உடல்கள் எங்கிருந்து கிடைக்குது டாக்டர்?”
“பெரும்பாலும் ஜி.எச்.சில் இருந்து சப்ளையாகும். விபதுல இறந்தவங்க, அனாதைங்க பிணத்தை வாங்கிக் ஆள் இல்லாம இருந்தா அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிச்சிடுவாங்க. அப்புறம் ரத்ததானம், கண்தானம் போல உடல் தானம் செய்றவங்களும் உண்டு.”
“இந்தச் செண்பகத்தம்மாவோட உடல் எப்படி? ஜி.எச்.சில் இருந்துதான் வந்ததா...?”
“தெரியல. விசாரிக்கணும். பெரும்பாலும் அரசாங்க மருத்துவமனைகளில் இறந்த உடல்களுக்குப் பிரச்சினையிருக்காது. எங்களை மாதிரி தனியார் கல்லூரிகளில்தான் பிரச்சினை. டிமாண்ட் அதிகம். பாடி சப்ளை பண்ணுவதுக்குன்னு மீடியேட்டர்கள், புரோக்கர்கள் இருக்கிறார்கள். சமயத்தில் மாணவர்களே கூட அவர்களுடைய முயற்சியில் ஏற்பாடு செய்வதுண்டு. இப்போ இந்தம்மாவின் மண்டையில் அடிபட்ட தழும்பு இருக்கும்பட்சத்தில் அது கொலைதான்னு எப்படி எடுத்துக்க முடியும்? தவறிக் கீழே விழுந்து மண்டையில் அடிபடவும் வாய்ப் பிருக்கில்லே?”
“இருக்கு. போஸ்ட்மார்ட்டம் செஞ்சு பார்த்திருப்பாங்களே!”
ஒரு வாரம் மாணவர்களிடையே பரபரப்பாயும் திரில்லாகவும் ஓடிப் போயிருந்தது. போஸ்ட்மார்ட்டம் செண்பகத்தின் மண்டையில் தாக்கப்பட்டு அவள் மூர்ச்சையாகி விழுந்து இறந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என வானிலை அறிக்கைபோல குழப்பிற்று.
அந்த உடல் அரசு மருத்துவமனையிலிருந்து பெறப்பட வில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
பிறகு எப்படி?
விஜய், அனாடமி அசிஸ்டென்ட்டை குடைய, “இது ஒரு வாரம் முன்புதான் சார் எங்களுக்குக் கிடைத்தது” என்றார்.
“எப்படி?”
“அட்டெண்டருக்குத்தான் அந்த விவரம் தெரியும்.”
“அட்டெண்டர் எங்கே?”
“அவர் லீவு சார்!”
“எப்போதிருந்து?”
சுஷ்மா மயங்கி விழுந்து விஷயம் வெளியான நாளுக்கு மறுதினத்தில் இருந்து அவர் எமர்ஜென்ஸி விடுப்பில் சென்றிருப்பதும் தெரிந்தது.
“அட்டெண்டரோட வீட்டு விலாசம் தர முடியுமா?”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தந்தார்கள். ஆனால் இன்ஸ்பெக்டர் விஜய்க்கு அங்கே ஏமாற்றமே மிச்சம். அவர் குடும்பத்துடன் ஊருக்குப் போய் விட்டதாய் அக்கம் பக்க வீட்டினர் தெரிவித்து, “என்ன விஷயம் சார்?” என்று ஊர் வம்பிற்கு அலைந்தனர்.
இந்த ரூட் இனி சரிப்படாது. வேறு மார்க்கத்தில் விசாரணையைத் தொடரவேண்டும். எங்கே ஆரம்பிப்பது? எப்படி கொண்டு போவது?
சுஷ்மா ஒரு வாரமாய் மிகவும் உடைந்து போயிருந்தாள். எதிலும் சிரத்தையில்லாமல் வகுப்பிலும் கவனமல்லாமல் இருந்தவளைப் பார்க்க சுரேஷிற்குக் கஷ்டமாயிற்று.
‘அம்மா, அம்மா’ என்று உருகுகிறாள். அம்மாவைப் பார்த்துவிட்ட சந்தோஷத்தில் மிதந்தாள். கைக் கொட்டியது வாய்க்கெட்டாமல் போயிற்று. இதற்கு அவளைப் பார்க்காமலே இருந்திருக்கலாம்.
மலேசியாவிலுள்ள முகுந்தனுக்குத் தகவல் போய் அவர் அடுத்த விமானத்தைப் பிடித்து வந்திருந்தார். செண்பகத்தின் உடலைப் பார்த்துப் பொங்கி அவர் அழுத்து சங்கடமாயிற்று.
பெரியவர், பணக்காரர், பிசினஸ்மேன், எவ்வளவோ பேர்களுக்கு வேலை கொடுப்பவர், இத்தனை சாதுவா என வியப்பு.
“சுரேஷ், என்ன இதெல்லாம்? நீங்க இருக்கீங்கங்கிற தெம்பில் இருந்தேன். எப்படி? என் மனைவிக்கு இப்படி?”
“தெரியல சார். போலீஸ் தீவிரமாய் விசாரிச்சுக்கிட்டிருக்கு.”
“இல்லை. போலீசை மட்டும் நம்பி பிரயோஜனமில்லை. நீங்களும் களத்தில் இறங்கணும். எனக்கு மனைவி இல்லேங்கிறது ஏற்கனவே முடிவாகிப் போச்சு. நான் கவலைப்படறதெல்லாம் சுஷ்மாவுக்காகத்தான். அவளோட கண்ணீர் என்னைக் கலக்குது. கரைக்குது. மீண்டும் அவளை நான் புத்துணர்வோட பார்க்கணும்.”
அன்று மாலை.
சுரேஷ், சுஷ்மாவைத் தன் குவார்ட்டர்ஸிற்கு அழைத்திருந்தான். முன்பெல்லாம் அவள் வந்தால் யாராவது பார்த்தால் தப்பாய் பேசுவார்கள் என்கிற பயமிருக்கும்.
இப்போது அதில்லை. யாருக்குப் பயப்படணும்? அவளது தந்தையே அவளை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்.
வீட்டுக்கு வந்ததும் சுஷ்மா சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏய், என்ன இது? இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படி?”
அவள் பதில் சொல்லவில்லை.
“காலேஜ் மேகஸின் வேலையெல்லாம் அப்படியே இருக்காமே... பிரன்சிபால் ரொம்ப வருத்தப்பட்டார்”
“சுரேஷ்... என் அம்மா...”
“சின்னக் குழந்தையா நீ? தோ பார், நீ அழுதா நல்லாயில்லே. உனக்கு ஆண்டவன் அழகைக் கொடுத்திருக்கான். அறிவைக் கொடுத்திருக்கான். அதைக் காப்பாத்திக்கணும். எப்போதும் மலர்ச்சியா இருக்கணும். அதைவிட முக்கியமா நான் நினைக்கிறது உன் திறமை! பாட்டு, எழுத்து, நடனம், பேச்சு, ஓவியம்னு உங்கிட்ட உள்ள திறமைகள் தானே வந்த்ததில்லை. நீயே கஷ்டப்பட்டு, ஆர்வப்பட்டு முயற்சி பண்ணி உருவாக்கினது. உன் அழகைவிட ஐ அட்மையர் யுவர் டேலன்ட்ஸ். அது எக்காரணம் கொண்டும் பாழாகிடக் கூடாது.”
சுரேஷ் அவளிடம் ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தபோது செல்போன் அலறிற்று. எதிர்முனையில் இன்ஸ்பெக்டர் விஜய், “டாக்டர், அந்தம்மா கேஸில் ஒரு புது திருப்பம்” என்றார்.
இந்த ரூட் இனி சரிப்படாது. வேறு மார்க்கத்தில் விசாரணையைத் தொடரவேண்டும். எங்கே ஆரம்பிப்பது? எப்படி கொண்டு போவது?
சுஷ்மா ஒரு வாரமாய் மிகவும் உடைந்து போயிருந்தாள். எதிலும் சிரத்தையில்லாமல் வகுப்பிலும் கவனமல்லாமல் இருந்தவளைப் பார்க்க சுரேஷிற்குக் கஷ்டமாயிற்று.
‘அம்மா, அம்மா’ என்று உருகுகிறாள். அம்மாவைப் பார்த்துவிட்ட சந்தோஷத்தில் மிதந்தாள். கைக் கொட்டியது வாய்க்கெட்டாமல் போயிற்று. இதற்கு அவளைப் பார்க்காமலே இருந்திருக்கலாம்.
மலேசியாவிலுள்ள முகுந்தனுக்குத் தகவல் போய் அவர் அடுத்த விமானத்தைப் பிடித்து வந்திருந்தார். செண்பகத்தின் உடலைப் பார்த்துப் பொங்கி அவர் அழுத்து சங்கடமாயிற்று.
பெரியவர், பணக்காரர், பிசினஸ்மேன், எவ்வளவோ பேர்களுக்கு வேலை கொடுப்பவர், இத்தனை சாதுவா என வியப்பு.
“சுரேஷ், என்ன இதெல்லாம்? நீங்க இருக்கீங்கங்கிற தெம்பில் இருந்தேன். எப்படி? என் மனைவிக்கு இப்படி?”
“தெரியல சார். போலீஸ் தீவிரமாய் விசாரிச்சுக்கிட்டிருக்கு.”
“இல்லை. போலீசை மட்டும் நம்பி பிரயோஜனமில்லை. நீங்களும் களத்தில் இறங்கணும். எனக்கு மனைவி இல்லேங்கிறது ஏற்கனவே முடிவாகிப் போச்சு. நான் கவலைப்படறதெல்லாம் சுஷ்மாவுக்காகத்தான். அவளோட கண்ணீர் என்னைக் கலக்குது. கரைக்குது. மீண்டும் அவளை நான் புத்துணர்வோட பார்க்கணும்.”
அன்று மாலை.
சுரேஷ், சுஷ்மாவைத் தன் குவார்ட்டர்ஸிற்கு அழைத்திருந்தான். முன்பெல்லாம் அவள் வந்தால் யாராவது பார்த்தால் தப்பாய் பேசுவார்கள் என்கிற பயமிருக்கும்.
இப்போது அதில்லை. யாருக்குப் பயப்படணும்? அவளது தந்தையே அவளை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்.
வீட்டுக்கு வந்ததும் சுஷ்மா சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏய், என்ன இது? இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படி?”
அவள் பதில் சொல்லவில்லை.
“காலேஜ் மேகஸின் வேலையெல்லாம் அப்படியே இருக்காமே... பிரன்சிபால் ரொம்ப வருத்தப்பட்டார்”
“சுரேஷ்... என் அம்மா...”
“சின்னக் குழந்தையா நீ? தோ பார், நீ அழுதா நல்லாயில்லே. உனக்கு ஆண்டவன் அழகைக் கொடுத்திருக்கான். அறிவைக் கொடுத்திருக்கான். அதைக் காப்பாத்திக்கணும். எப்போதும் மலர்ச்சியா இருக்கணும். அதைவிட முக்கியமா நான் நினைக்கிறது உன் திறமை! பாட்டு, எழுத்து, நடனம், பேச்சு, ஓவியம்னு உங்கிட்ட உள்ள திறமைகள் தானே வந்த்ததில்லை. நீயே கஷ்டப்பட்டு, ஆர்வப்பட்டு முயற்சி பண்ணி உருவாக்கினது. உன் அழகைவிட ஐ அட்மையர் யுவர் டேலன்ட்ஸ். அது எக்காரணம் கொண்டும் பாழாகிடக் கூடாது.”
சுரேஷ் அவளிடம் ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தபோது செல்போன் அலறிற்று. எதிர்முனையில் இன்ஸ்பெக்டர் விஜய், “டாக்டர், அந்தம்மா கேஸில் ஒரு புது திருப்பம்” என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
20
“சுரேஷ் ஆவல் தாங்காமல், “என்ன... என்ன அது திருப்பம்?” என்றான்.
மறுமுனையில் இன்ஸ்பெக்டர் விஜய் சிரித்தபடி, “புதுத் தகவல் கிடைச்சிருக்கு... எனக்கென்னவோ நம் விசாரணைக்கு இது பயன்படும்னு தோணுது!”
“என்ன அதுன்னு இன்னும் நீங்க சொல்லலே!”
“அவசரமா நான் வெளியே கிளம்பிக்கிட்டிருக்கேன். நேரில் பேசுவோமே!” அவர் வைத்துவிட. சுரேஷிற்கு ஏமாற்றம்.
சுஷ்மா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்குக் கூசிற்று.
அந்தப் பார்வையில் ஒரு வீச்சு இருந்த்து. இவன் என்னவன், எனக்குரியவன். இவனிடம் என்னையே தரலாம். ‘தரலாமா...’ என்று கேட்கிற பாவம்.
பார்வை, பார்வை, கொல்கிறாள். இவர்களுக்கு இநத் வசீகரம் எங்கிருந்து வருகிறது? யார் சொல்லித் தருகிறார்கள்? எங்கே பயிற்சி பெறுகிறார்கள்?
சுரேஷ் பேச்சை மாற்ற வேண்டி, “சுஷ், உடங்கம்மாவின் மரணம் இயற்கையானதில்லை. கொலை எனும் பட்சத்தில் அதைச் செய்தவர்களைக் கண்டுபிடிப்பதில் உனக்கும் ஆர்வம்தானே!”
“ஷ்யூர்... இதென்ன கேள்வி?”
“அதுக்கு உன் உதவியும் தேவைப்படுது.”
“என்ன செய்யணும் சொல்லுங்க?” என்று அவனை உரசிக்கொண்டு எழுந்தாள்.
“அன்னிக்கு ஒருநாள் பசங்க காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து... அவர்களை நான் பிடித்து... அவர்கள் என்னைத் தாக்கி ஆஸ்பத்திரி.... ஞாபகமிருக்கா? நீ கூட அவர்களை அழைத்து வந்து ஸாரி சொல்ல வைத்தாயே!” என்று தன் நெற்றியைத் தடவிக்கொண்டு புன்னகைத் தான்.
“யெஸ்ஸ்.... ஸ்....” என்று நாணினாள். “அன்னிக்கு என்னையு மறியாமல் ஒரு உந்துதல். பசங்க அப்புறமாய் நிறைய கிண்டல் பண்ணாங்க. அதுக்கென்ன இப்போ?”
“காம்பவுண்ட் தாண்டினதுக்கு அன்று அவர்கள் சொன்ன காரணம். அனாடமிக்காகப் பிணம் தேடப் போனோம் என்பது.”
“யெஸ்.... யெஸ்... ஐ ரிமம்பர்! அதுனால?”
“போன மாதம் விடுமுறைக்கு முன்வரை அனாடமிக்கு பாடி இல்லை. அதுக்குப் பிறகு இரண்டு வாரத்தில் கிடைச்சிருக்கு. உங்கம்மா காணாமல் போயும் இரண்டு வாரங்கள். எனக் கென்னவோ. அந்தப் பசங்களை விசாரிச்சா....”
“சேச்சே, பசங்கள கொலை வரை போவாங்கன்னு நான் நினைக்கலே. எங்கம்மாவைக் கொலை செய்ய அவங்களுக்கு என்ன மோட்டிவ்?”
“பல சமயங்களில் மோட்டிவ் இல்லாமலேயே குற்றங்கள் நடக்கின்றன. எதிர்பாரா நிகழ்வு. அவர்களைக் கொஞ்சம் வரச் சொல்றியா? பேசுவோம்!”
“நீங்கள் கூப்பிடலாமே!”
“இல்லை, வேணாம். பசங்க பதுங்க அல்லது தயங்கக்கூடும். நீயே சும்மா காபி ஷாப்புக்குக் கூப்பிடு.”
அன்று மாலை.
ஜானி, கணேஷ் தன் நண்பர்களுடன் காபி ஷாப்பில் ஆஜர். சுஷ்மா அங்கே வரவேற்க, “என்ன விசேஷம்? உனக்குப் பிறந்த நாளா?”
“இல்லை, எனக்கு!” என்று சுரேஷ் மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் கணேஷ் பதறின மாதிரி, பயந்த மாதிரி தெரிந்த்து. அதை மறைத்துக் கொண்டு, “மெனி, மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் த டே சார்!” என்றான்.
“ரொம்ப நன்றி. வாழ்த்தோட நிறுத்திக்காம அப்படியே இவங்கம்மாவோட பாடி எங்கே கிடைச்சதுன்னும் சொல்லிட்டா இன்னும் அதிக நன்றி உடையவனா இருப்பேன்.”
“சார், பாடியா?” என்று மிரண்டார்கள். “சத்தியமா எங்களுக்கு எதுவும் தெரியாது.”
அவர்கள் ‘காபியும் வேணாம், ஒண்ணும் வேணாம்’ என்று கிளம்ப முயல, “ஏய், வெயிட்... வெயிட். அனாவசியமா காம்பஸுக்குள்ளே போலீஸைக் கொண்டுவர வேணாம்னு பார்த்தேன்!”
போலீஸ் என்றதும் அவர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாய் வியர்த்தது. “சார்! நீங்க எங்க மேல சந்தேகப்படறீங்கன்னு புரியுது. அன்னைக்கு ‘பாடி’ தேடப் போனோம்னு நாங்க சொன்னது பொய். வெளியே கிளப்புக்குப் போயிட்டு வந்தப்போதான் உங்கக்கிட்ட மாட்டிக்கிட்டோம்! ஏற்கனவே உங்களைத் தாக்கியாச்சு. அதோட ரெண்டாவது குற்றமா கிளப்பும் சேர்க்கப்படும்னு தான் மறைச்சோம்! சுஷ்மா! இதுதான் உண்மை! சாருக்கு எடுத்துச் சொல்லு. நீ சொன்னா கேட்பார்!”
“சுரேஷ் ஆவல் தாங்காமல், “என்ன... என்ன அது திருப்பம்?” என்றான்.
மறுமுனையில் இன்ஸ்பெக்டர் விஜய் சிரித்தபடி, “புதுத் தகவல் கிடைச்சிருக்கு... எனக்கென்னவோ நம் விசாரணைக்கு இது பயன்படும்னு தோணுது!”
“என்ன அதுன்னு இன்னும் நீங்க சொல்லலே!”
“அவசரமா நான் வெளியே கிளம்பிக்கிட்டிருக்கேன். நேரில் பேசுவோமே!” அவர் வைத்துவிட. சுரேஷிற்கு ஏமாற்றம்.
சுஷ்மா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்குக் கூசிற்று.
அந்தப் பார்வையில் ஒரு வீச்சு இருந்த்து. இவன் என்னவன், எனக்குரியவன். இவனிடம் என்னையே தரலாம். ‘தரலாமா...’ என்று கேட்கிற பாவம்.
பார்வை, பார்வை, கொல்கிறாள். இவர்களுக்கு இநத் வசீகரம் எங்கிருந்து வருகிறது? யார் சொல்லித் தருகிறார்கள்? எங்கே பயிற்சி பெறுகிறார்கள்?
சுரேஷ் பேச்சை மாற்ற வேண்டி, “சுஷ், உடங்கம்மாவின் மரணம் இயற்கையானதில்லை. கொலை எனும் பட்சத்தில் அதைச் செய்தவர்களைக் கண்டுபிடிப்பதில் உனக்கும் ஆர்வம்தானே!”
“ஷ்யூர்... இதென்ன கேள்வி?”
“அதுக்கு உன் உதவியும் தேவைப்படுது.”
“என்ன செய்யணும் சொல்லுங்க?” என்று அவனை உரசிக்கொண்டு எழுந்தாள்.
“அன்னிக்கு ஒருநாள் பசங்க காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து... அவர்களை நான் பிடித்து... அவர்கள் என்னைத் தாக்கி ஆஸ்பத்திரி.... ஞாபகமிருக்கா? நீ கூட அவர்களை அழைத்து வந்து ஸாரி சொல்ல வைத்தாயே!” என்று தன் நெற்றியைத் தடவிக்கொண்டு புன்னகைத் தான்.
“யெஸ்ஸ்.... ஸ்....” என்று நாணினாள். “அன்னிக்கு என்னையு மறியாமல் ஒரு உந்துதல். பசங்க அப்புறமாய் நிறைய கிண்டல் பண்ணாங்க. அதுக்கென்ன இப்போ?”
“காம்பவுண்ட் தாண்டினதுக்கு அன்று அவர்கள் சொன்ன காரணம். அனாடமிக்காகப் பிணம் தேடப் போனோம் என்பது.”
“யெஸ்.... யெஸ்... ஐ ரிமம்பர்! அதுனால?”
“போன மாதம் விடுமுறைக்கு முன்வரை அனாடமிக்கு பாடி இல்லை. அதுக்குப் பிறகு இரண்டு வாரத்தில் கிடைச்சிருக்கு. உங்கம்மா காணாமல் போயும் இரண்டு வாரங்கள். எனக் கென்னவோ. அந்தப் பசங்களை விசாரிச்சா....”
“சேச்சே, பசங்கள கொலை வரை போவாங்கன்னு நான் நினைக்கலே. எங்கம்மாவைக் கொலை செய்ய அவங்களுக்கு என்ன மோட்டிவ்?”
“பல சமயங்களில் மோட்டிவ் இல்லாமலேயே குற்றங்கள் நடக்கின்றன. எதிர்பாரா நிகழ்வு. அவர்களைக் கொஞ்சம் வரச் சொல்றியா? பேசுவோம்!”
“நீங்கள் கூப்பிடலாமே!”
“இல்லை, வேணாம். பசங்க பதுங்க அல்லது தயங்கக்கூடும். நீயே சும்மா காபி ஷாப்புக்குக் கூப்பிடு.”
அன்று மாலை.
ஜானி, கணேஷ் தன் நண்பர்களுடன் காபி ஷாப்பில் ஆஜர். சுஷ்மா அங்கே வரவேற்க, “என்ன விசேஷம்? உனக்குப் பிறந்த நாளா?”
“இல்லை, எனக்கு!” என்று சுரேஷ் மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் கணேஷ் பதறின மாதிரி, பயந்த மாதிரி தெரிந்த்து. அதை மறைத்துக் கொண்டு, “மெனி, மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் த டே சார்!” என்றான்.
“ரொம்ப நன்றி. வாழ்த்தோட நிறுத்திக்காம அப்படியே இவங்கம்மாவோட பாடி எங்கே கிடைச்சதுன்னும் சொல்லிட்டா இன்னும் அதிக நன்றி உடையவனா இருப்பேன்.”
“சார், பாடியா?” என்று மிரண்டார்கள். “சத்தியமா எங்களுக்கு எதுவும் தெரியாது.”
அவர்கள் ‘காபியும் வேணாம், ஒண்ணும் வேணாம்’ என்று கிளம்ப முயல, “ஏய், வெயிட்... வெயிட். அனாவசியமா காம்பஸுக்குள்ளே போலீஸைக் கொண்டுவர வேணாம்னு பார்த்தேன்!”
போலீஸ் என்றதும் அவர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாய் வியர்த்தது. “சார்! நீங்க எங்க மேல சந்தேகப்படறீங்கன்னு புரியுது. அன்னைக்கு ‘பாடி’ தேடப் போனோம்னு நாங்க சொன்னது பொய். வெளியே கிளப்புக்குப் போயிட்டு வந்தப்போதான் உங்கக்கிட்ட மாட்டிக்கிட்டோம்! ஏற்கனவே உங்களைத் தாக்கியாச்சு. அதோட ரெண்டாவது குற்றமா கிளப்பும் சேர்க்கப்படும்னு தான் மறைச்சோம்! சுஷ்மா! இதுதான் உண்மை! சாருக்கு எடுத்துச் சொல்லு. நீ சொன்னா கேட்பார்!”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜானி கண்சிமிட்ட, சுஷ்மா வெட்கப்பட, சுரேஷ் புன்னகைக்க, “ரொம்ப நன்றி சுஷ்மா!” என்று அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
போலீஸ் ஸ்டேஷன்.
சுரேஷ் போனபோது விஜய் போனில் மும்முரம். “ஓ.கே. சார்! நான் இப்போ சொல்லிர்றேன்!” என்று குதூகலித்தான்.
போனை வைத்துவிட்டு, “சுரேஷ்! எங்கூட இப்படிக் கொஞ்சம் வாங்க!” என்று உள் அறைக்கு அழைத்துப் போனான்.
டேபிள் மேலிருந்து தணியை விலக்க அங்கே விரைத்துப்போய் இரண்டு குழந்தைகள்! எத்தனையோ மார்ச்சுவரி, அனாடமிகளைப் பார்த்திருந்த அவனுக்கே அக்குழந்தைகளைப் பார்க்க், தூக்கி வாரிப் போட்டது.
“என்ன சார் இது... பொம்மைகளா....?”
“இல்லை... இறந்த பிணங்கள்!”
“மை காட்! இது எப்படி, எங்கிருந்து கிடைச்சது?”
“ஏர்போர்ட்ல! கஸ்டம்ஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு மயக்க மருந்து கடத்தல்!”
“புரியலே... !”
“விளக்கமாகச் சொல்றேன். இரண்டு பெண்கள் அதோ அந்த அறைக்குள் காவலில் இருக்காங்களே அவங்க இவற்றைத் தங்கள் சொந்தக் குழந்தை மாதிரி சேலை தலைப்புல அரவணைச்சு மலேசியா போக முயற்சி பண்ணாங்க, யதேச்சையா குழந்தையை பரிசோதிச்சப்போ இதன் வயித்துல மயக்க மருந்து பொட்டலங்கள்!
ரெண்டு போடு போட்டப்ப அந்தப் பொம்பளைங்க உண்மையை ஒப்புக்கிட்டாங்க. அவங்க பணத்துக்கு ஆசைப்பட்டு குருவியா கிளம்பினவங்க. இவங்களை செலுத்தினவங்க, குழந்தைக்கு போலியா பாஸ்போர்ட் விசா எடுத்துக் கொடுத்திருக்காங்க. மலேசியாவுல இந்தக் குழந்தைகளைக் கொடுத்துட்டு அங்கே கடைகள்ல இவங்களுக்கு வேலைன்னு சொல்லி இந்த ஏற்பாடு நடந்திருக்கு.”
“யாராம்...?”
“தெரியல. இவங்களுக்கு எதுவுமே தெரியாது. அப்பாவிங்க. கடத்தல்கார்கள் கில்லாடிகள். முன்பு ஒருமுறை கர்ப்பிணிப் பெண்களா அனுப்பினாங்க. அடுத்து இப்போ டெலிவரி ஆகிருச்சு! வெவ்வேறு வேஷங்கள்!
இந்தக் குழந்தைங்க எங்கிருந்து....?”
“கண்டுபிடிக்கணும். மோப்ப நாய் ஆராய்ச்சிக்குக் கிளம்பியிருக்கு!”
“இதுல சுஷ்மாவோட அம்மா எங்கே வாராங்க?”
“சொல்றேன். இறந்த உடலை சுத்தப்படுத்த பார்மால்டிஹைட் கெமிக்கல் உள்ளே செலுத்துறது, வெளியே பூசறதுன்னு டாக்டர் மனோகர் சொன்னாரே, அதைப் பரிசோதிக்கத்தான் உங்களை வரச்சொன்னேன்!”
“யெஸ் சார்... ஸ்மெல்லை வச்சுப் பார்க்கும்போது இதுவும் பார்மால்டி ஹைடுன்னுதான் தெரியுது.”
“அதை இன்ஜெக்ட் பண்ண பிரத்யேக உபகரணங்கள் வேணும். வெளியே அவை எளிதாய்க் கிடைக்காது என்னும்போது இந்தக் குழந்தைகளுக்கு பார்மால்டிஹைட் இன்ஜெக்ட் பண்ணினது யார்? எங்கே வைத்து?”
அப்போது செல்போன் அழைத்தது.
அடுத்து பேசின விஜய்யின் முகத்தில் பிரகாசம்.
“அப்படியா! அங்கேயே இருங்க வந்துடறேன்!” என்று உற்சாகமானான்.
“சுரேஷ், குழந்தைங்க எங்கேயிருந்து கிடைச்சுதுன்னு கேட்டீங்களே, கண்டுபிடிச்சாச்சு. நாய் மோப்பம் பிடிச்சு, அந்த நபரை ரவுண்ட் அப் பண்ணினதுல உண்மையை ஒப்புக்கிட்டாராம்.”
“யார்.... யார் சார் அது?”
“அனாதைப் பிள்ளைகள் ஆசிரம நிர்வாகி!”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
21
ஆசிரமத்தில் போலீஸ்
எதிரே இன்ஸ்பெக்டர் விஜய், டி.எஸ்.பி., சர்க்கிள், கான்ஸ்டபிள்கள் என அணிவகுப்பு. விஜய்யுடன் வந்திருந்த சுரேஷ் நிர்வாகியையே வெறித்துக் கொண்டிடிருந்தான். அவனுடன் சுஷ்மாவும்.
“சார், நீங்க செஞ்சது எத்தனை பெரிய குத்தம்னு தெரியுமா?”ஆசிரம நிர்வாகியை விஜய் கேட்க, “ஸாரி இன்ஸ்பெக்டர். எந்தக் குற்றத்துக்கும் நாங்க துணை போகலே, சந்தர்ப்பச் சூழ்நிலை, இந்த அளவுக்குக் கொண்டுபோய் விடும்னு நாங்க எதிர்பார்க்கலே. ஒரு வருடம், ரெண்டு வருடமில்லை... முப்பது வருடங்கள் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறோம். பணத்திற்காக இல்லை. ஆத்மதிருப்திக்காக. இது மாதிரி எந்த அசம்பாவிதமும் இங்கு நிகழ்ந்ததில்லை.”
“அப்புறம் இப்போது மட்டும் எப்படி?”
“யாரையும் குற்றப்படுத்துனுங்கிறது என் நோக்கமில்லை. அது ஒரு நிர்வாகிக்கு அழகுமல்ல. இருந்தாலும் விஷயம் இந்த அளவுக்கு விபரீதமான பிறகு எதையும் மறைச்சு வச்சு பிரயோஜனமில்லை. தெரிஞ்சோ தெரியாமலோ இந்தப் பிரச்சினைகளுக்கு ஆயா செண்பகத்தம்மாதான் காரணம்.”
“வாட்!” என்று சுஷ்மா பொங்கினாள். “உயிருடன் இல்லைங்கிறதால அவங்க மேல பழி போடறீங்களா?”
“இல்லை, சத்தியமா இல்லை. இவ்ளோ நாளா நாங்க இது பத்தி பேசினோமா? இப்போ பேசவேண்டியதா இருக்கு.”
“எங்கம்மாவை உங்க அஜாக்கிரதையால நான் பறிகொடுத்திட்டு நிக்கறேன். அப்ப நான் கெஞ்சிக்கேட்டப்ப நீங்க அம்மாவை என்கூட அனுப்பியிருந்தீங்கன்னா அவங்களை நான் பிணமா பார்த்திருக்கிற துர்ப்பாக்கிய நிலைமை வந்திருக்காது.”
சுஷ்மா மேலும் பொங்கினாள். சுரேஷ் அவளை அமைதிப்படுத்தினான்.
“சுஷ்மா, அவர் சொல்லி முடிக்கட்டும். யாரும் இடையில் குறுக்கிடக் கூடாது. நீங்க சொல்லுங்க சார்!”
“செண்பகத்தம்மா ரொம்ப பொறுப்பா ஆத்மாத்தமாதான் இருந்தாங்க. மகள் சுஷ்மாவைப் பார்த்த பின்பு அவங்களோட நிம்மதி போச்சு, கவனம் பிசகிச்சு. எப்போதும் புலம்பல், வெறுமை, பைத்தியம் பிடித்த மாதிரி என்ன செய்கிறோம். ஏன் செய்கிறோம்ங்கிறது புரியாம், தெரியாம பலவித குளறுபடிகள்.
அவங்களோட நிலைமை புரிஞ்சு பசங்களுக்குச் சாப்பாடு தயார் பண்றதிலிரந்து விடுவிச்சோம். கொஞ்ச நாளைக்கு ஓய்வா இருக்கட்டும்னு தொட்டில் குழந்தைங்க பகுதிக்கு மாத்தினோம். அங்கே அவ்ளோ வேலை கிடையாது. மொத்தம் பத்து குழந்தைங்க தான். ஒத்தாசைக்கு ஆட்கள் உண்டு.
குழந்தைகளுக்குப் பால், மருந்து மட்டும் கொடுத்தாப்போதும். ஆனா அங்கேயும் இவங்களால முடியலே. எப்படி நடந்தது. என்ன நடந்த்துன்னு தெரியலே ஒருநாள் குழந்தைகளெல்லாம் வாந்தி, மயக்கம். எங்க ஆசிரமத்து டாக்டர்கள் எத்தனையோ முயற்சி பண்ணியும் கூட மூணு குழந்தைகளைக் காப்பாத்த முடியாமப் போச்சு. புட் பாய்சன்ல இறந்து போச்சுங்க.
அந்தக் குழந்தைகளைப் பின்னால் உள்ள மயானத்துல முறைப் படி அடக்கம் பண்ணோம். அதுக்குப் பின்னாடி செண்பகத்தோட நிலைமை இன்னும் மோசமாப் போச்சு. தன்னாலதான் இப்படி ஆயிருச்சுன்னு ஒரே புலம்பல். அவங்களோட பரிதாப நிலைமையைப் பார்த்துட்டு நானே அவங்கக்கிட்ட நீங்க வேணும்ன உங்க மகள் கிட்ட போறீங்களா‘ன்னா கேட்டேன். வெறிச்சுப் பார்த்துட்டு பதில் சொல்லாம இருந்துட்டாங்க. இந்த நிலைமையில தான் திடீர்னு ஒருநாள் அந்தம்மாவைக் காணலை. அதுக்கப்புறம் மருத்துவக் கல்லூரியில அவங்க பாடி கிடக்கிற விஷயம் நீங்க சொல்லித்தான் தெரியும். பாவம் செண்பகம்! இங்கு நிறையவே தொண்டாற்றியிருக்காங்க”!
அவர் முடிக்க, இன்ஸ்பெக்டர் தன் மேலதிகாரிகளைப் பார்த்தார்.
“சார், உங்களோட சேவையைக் கருத்தில் கொண்டு நீங்க சொல்ற விஷயங்களை நம்ப வேண்டியிருக்கு. இருந்தாலும் குழந்தைங்க இறந்ததையோ, செண்பகத்தம்மா காணாமல் போனதையோ ஏன் போலீஸில் தெரிவிக்கலே?”
“இதோ பாருங்க. எதையும் மறைக்கணும்னு செய்யலே. அந்தக் குழந்தைங்களோட இழப்பும், ஆயாவோட நிலைமையம எங்களை பலவீனப்படுத்திடுச்சு, பிறந்தவுடனே தூக்கி எறியப்படற குழந்தைகளை வளர்த்து ஆளாக்கணும்னுதான் இங்கே கொண்டு வரோம். கவனக்குறைவால் பாலில் பிரச்சினை. அதனால குழந்தைகள் இறப்புன்னு இதுவும் ஒரு வகையில் இயற்கை மரணமே. வீடுகள்ல புட்பாய்சன் ஏறப்டறதில்லையா? குழந்தைகள பத்தி புகார் சொன்னா மீடியாக்கள் வரும். ஆசிரமத்துப் பெயர் கெடும். மேற்கொண்டு சேவை செய்யறதுக்குத் தான் பிரச்சினை. அதனால்தான் அமைதி காத்தோம். ஆயாவும் எங்கேயாவது சுத்திட்டு வந்திருவாங்கன்னுதான் நினைச்சோம். ஆனா முறைப்படி புதைத்து குழந்தைங்களைத் தோண்டி எடுத்து இப்படி அநியாயமாய் கடத்தலுக்குப் பயன்படுத்து வாங்கன்னு யாருக்குத் தெரியும்? மனசாட்சியில்லாத கிரிமினல்கள்.”
“குழந்தைகளைப் புதைத்து இடங்களைப் பார்க்கலாமா?”
நிர்வாகி அவர்களை அங்கே அழைத்துச் செல்ல, அவர்களுக்கு முன்பு மோப்ப நாய்கள் ஓடி அந்தக் குழந்தைகள் அடக்கம் பண்ணப் பட்ட இடத்தைப் பிராண்டின, குரைத்தன.
ஆசிரமத்தில் போலீஸ்
எதிரே இன்ஸ்பெக்டர் விஜய், டி.எஸ்.பி., சர்க்கிள், கான்ஸ்டபிள்கள் என அணிவகுப்பு. விஜய்யுடன் வந்திருந்த சுரேஷ் நிர்வாகியையே வெறித்துக் கொண்டிடிருந்தான். அவனுடன் சுஷ்மாவும்.
“சார், நீங்க செஞ்சது எத்தனை பெரிய குத்தம்னு தெரியுமா?”ஆசிரம நிர்வாகியை விஜய் கேட்க, “ஸாரி இன்ஸ்பெக்டர். எந்தக் குற்றத்துக்கும் நாங்க துணை போகலே, சந்தர்ப்பச் சூழ்நிலை, இந்த அளவுக்குக் கொண்டுபோய் விடும்னு நாங்க எதிர்பார்க்கலே. ஒரு வருடம், ரெண்டு வருடமில்லை... முப்பது வருடங்கள் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறோம். பணத்திற்காக இல்லை. ஆத்மதிருப்திக்காக. இது மாதிரி எந்த அசம்பாவிதமும் இங்கு நிகழ்ந்ததில்லை.”
“அப்புறம் இப்போது மட்டும் எப்படி?”
“யாரையும் குற்றப்படுத்துனுங்கிறது என் நோக்கமில்லை. அது ஒரு நிர்வாகிக்கு அழகுமல்ல. இருந்தாலும் விஷயம் இந்த அளவுக்கு விபரீதமான பிறகு எதையும் மறைச்சு வச்சு பிரயோஜனமில்லை. தெரிஞ்சோ தெரியாமலோ இந்தப் பிரச்சினைகளுக்கு ஆயா செண்பகத்தம்மாதான் காரணம்.”
“வாட்!” என்று சுஷ்மா பொங்கினாள். “உயிருடன் இல்லைங்கிறதால அவங்க மேல பழி போடறீங்களா?”
“இல்லை, சத்தியமா இல்லை. இவ்ளோ நாளா நாங்க இது பத்தி பேசினோமா? இப்போ பேசவேண்டியதா இருக்கு.”
“எங்கம்மாவை உங்க அஜாக்கிரதையால நான் பறிகொடுத்திட்டு நிக்கறேன். அப்ப நான் கெஞ்சிக்கேட்டப்ப நீங்க அம்மாவை என்கூட அனுப்பியிருந்தீங்கன்னா அவங்களை நான் பிணமா பார்த்திருக்கிற துர்ப்பாக்கிய நிலைமை வந்திருக்காது.”
சுஷ்மா மேலும் பொங்கினாள். சுரேஷ் அவளை அமைதிப்படுத்தினான்.
“சுஷ்மா, அவர் சொல்லி முடிக்கட்டும். யாரும் இடையில் குறுக்கிடக் கூடாது. நீங்க சொல்லுங்க சார்!”
“செண்பகத்தம்மா ரொம்ப பொறுப்பா ஆத்மாத்தமாதான் இருந்தாங்க. மகள் சுஷ்மாவைப் பார்த்த பின்பு அவங்களோட நிம்மதி போச்சு, கவனம் பிசகிச்சு. எப்போதும் புலம்பல், வெறுமை, பைத்தியம் பிடித்த மாதிரி என்ன செய்கிறோம். ஏன் செய்கிறோம்ங்கிறது புரியாம், தெரியாம பலவித குளறுபடிகள்.
அவங்களோட நிலைமை புரிஞ்சு பசங்களுக்குச் சாப்பாடு தயார் பண்றதிலிரந்து விடுவிச்சோம். கொஞ்ச நாளைக்கு ஓய்வா இருக்கட்டும்னு தொட்டில் குழந்தைங்க பகுதிக்கு மாத்தினோம். அங்கே அவ்ளோ வேலை கிடையாது. மொத்தம் பத்து குழந்தைங்க தான். ஒத்தாசைக்கு ஆட்கள் உண்டு.
குழந்தைகளுக்குப் பால், மருந்து மட்டும் கொடுத்தாப்போதும். ஆனா அங்கேயும் இவங்களால முடியலே. எப்படி நடந்தது. என்ன நடந்த்துன்னு தெரியலே ஒருநாள் குழந்தைகளெல்லாம் வாந்தி, மயக்கம். எங்க ஆசிரமத்து டாக்டர்கள் எத்தனையோ முயற்சி பண்ணியும் கூட மூணு குழந்தைகளைக் காப்பாத்த முடியாமப் போச்சு. புட் பாய்சன்ல இறந்து போச்சுங்க.
அந்தக் குழந்தைகளைப் பின்னால் உள்ள மயானத்துல முறைப் படி அடக்கம் பண்ணோம். அதுக்குப் பின்னாடி செண்பகத்தோட நிலைமை இன்னும் மோசமாப் போச்சு. தன்னாலதான் இப்படி ஆயிருச்சுன்னு ஒரே புலம்பல். அவங்களோட பரிதாப நிலைமையைப் பார்த்துட்டு நானே அவங்கக்கிட்ட நீங்க வேணும்ன உங்க மகள் கிட்ட போறீங்களா‘ன்னா கேட்டேன். வெறிச்சுப் பார்த்துட்டு பதில் சொல்லாம இருந்துட்டாங்க. இந்த நிலைமையில தான் திடீர்னு ஒருநாள் அந்தம்மாவைக் காணலை. அதுக்கப்புறம் மருத்துவக் கல்லூரியில அவங்க பாடி கிடக்கிற விஷயம் நீங்க சொல்லித்தான் தெரியும். பாவம் செண்பகம்! இங்கு நிறையவே தொண்டாற்றியிருக்காங்க”!
அவர் முடிக்க, இன்ஸ்பெக்டர் தன் மேலதிகாரிகளைப் பார்த்தார்.
“சார், உங்களோட சேவையைக் கருத்தில் கொண்டு நீங்க சொல்ற விஷயங்களை நம்ப வேண்டியிருக்கு. இருந்தாலும் குழந்தைங்க இறந்ததையோ, செண்பகத்தம்மா காணாமல் போனதையோ ஏன் போலீஸில் தெரிவிக்கலே?”
“இதோ பாருங்க. எதையும் மறைக்கணும்னு செய்யலே. அந்தக் குழந்தைங்களோட இழப்பும், ஆயாவோட நிலைமையம எங்களை பலவீனப்படுத்திடுச்சு, பிறந்தவுடனே தூக்கி எறியப்படற குழந்தைகளை வளர்த்து ஆளாக்கணும்னுதான் இங்கே கொண்டு வரோம். கவனக்குறைவால் பாலில் பிரச்சினை. அதனால குழந்தைகள் இறப்புன்னு இதுவும் ஒரு வகையில் இயற்கை மரணமே. வீடுகள்ல புட்பாய்சன் ஏறப்டறதில்லையா? குழந்தைகள பத்தி புகார் சொன்னா மீடியாக்கள் வரும். ஆசிரமத்துப் பெயர் கெடும். மேற்கொண்டு சேவை செய்யறதுக்குத் தான் பிரச்சினை. அதனால்தான் அமைதி காத்தோம். ஆயாவும் எங்கேயாவது சுத்திட்டு வந்திருவாங்கன்னுதான் நினைச்சோம். ஆனா முறைப்படி புதைத்து குழந்தைங்களைத் தோண்டி எடுத்து இப்படி அநியாயமாய் கடத்தலுக்குப் பயன்படுத்து வாங்கன்னு யாருக்குத் தெரியும்? மனசாட்சியில்லாத கிரிமினல்கள்.”
“குழந்தைகளைப் புதைத்து இடங்களைப் பார்க்கலாமா?”
நிர்வாகி அவர்களை அங்கே அழைத்துச் செல்ல, அவர்களுக்கு முன்பு மோப்ப நாய்கள் ஓடி அந்தக் குழந்தைகள் அடக்கம் பண்ணப் பட்ட இடத்தைப் பிராண்டின, குரைத்தன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் பட்டுப்போய்க் கிடக்க, புதர்களும் நாணல்களும் மண்டிக்கிடக்க, மயானம் வெறிச் சோடிக் கிடந்த்து. அங்கே திட்டுத்திட்டாய் புதைக்கப்பட்ட பிணங்கள்.
குழந்தைகள் அடக்கம் பண்ணப்பட்ட மண்மேடுகளை நாய்கள், தங்கள் கால்களால் பிராண்டி, மோப்பம் பிடித்து சங்கிலியை இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தன.
“வாங்க நாமும் அவற்றை பாலோ பண்ணுவோம்.”
நாய்களைப் பிடித்துக்கொண்டு கான்ஸ்டபிள்கள் ஓட, அவர்கள் ஜீப்பில் ஏறிப் பின் தொடர்ந்தனர்.
ஓடி ஓடி மூச்சு வாங்கி அந்த நாய்கள் பங்களா ஒன்றின் பின்பக்கம் போய் குரைத்தன. காம்பவுண்ட் கேட்டை முட்டின.
சுஷ்மா அதற்குள் அரண்டு போயிருந்தாள். “சார், இது எங்க பங்களா!”
“வாட்!”
அதற்குள் பூட்டு உடைக்கப்பட்டு எல்லோரும் உள்ளே பிரவேசித்தனர். நாய் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி வந்து ஒரு மூலையிலிருந்த கதவின் மேல் தாவ...
அதையும் உடைத்து உள்ளே பிரவேசித்தால் அதன் கீழ்த்தளத்தில் அங்கங்கே மரப்பெட்டிகள். பேக்கிங் சாமான்கள். வெள்ளை பாக்கெட்களில் மயக்க மருந்து பவுடர்கள்.
சுஷ்மாவிற்கு அவற்றைப் பார்க்கப் பார்க்க அழுகையாய் வந்தது. பாவிகள் அப்பா கஷ்டப்பட்டு எனக்காக்க் கட்டிய பங்களாவில் கிரிமினல்கள் யார் அது? யார் அந்த அயோக்கியர்கள்?
மறு அறையில் சுரேஷ், “சார் இதுதான் அந்த மெஷின்கள். இதை வைத்துத்தான் பார்மால்டிஹைட் திரவத்தை இறந்த் உடலில் செலுத்துவார்கள். எங்கள் மருத்துவக் கல்லூரி உபகாரணம் இங்கே எப்படி?” என்று அவன் வியந்தபோது.
உள் அறையில் உறக்கத்திலிருந்த கல்லூரி அட்டெண்டரும், சுஷ்மாவின் மாமா விவேக்கும் சுற்றி வளைக்கப்பட்டனர்.
அங்கு எந்த சால்ஜாப்பும் எடுபடாது என்பது புரியவே. உடம்பு புண்ணாகும் முன்பு விவேக் தன் குற்றங்களையெல்லாம் ஒப்புக் கொண்டான்.
“செண்பகத்தம்மாவை மண்டையில் அடித்துக் கொன்று மருத்துவக் கல்லூரிக்கு இந்த அட்டெண்டர் மூலம் அனுப்பினது நான்தான். கொஞ்ச நாட்களாகவே, கஞ்சா, மயக்க மருந்துகளைப் பல வெளிநாடுகளுக்கும் கடத்தி வருகிறேன். கொஞ்ச நாள் முன்பு கர்ப்பிணிப் பெண்கள் போல ஜோடித்து அனுப்பப்பட்டவர்கள் பிடிபட்டு எனக்குப் பெருத்த நஷ்டம். அதைச் சரி பண்ண குழந்தைகள் மூலம் கடத்தலாம் என யோசனை வந்தது.
ஒருநாள் அநத் ஆசிரம மயானம் பக்கம் போனபோது குழந்தைகளைப் புதைப்பது தெரிந்தது. அதைப் பார்த்த பின்பு சட்டென யோசனை. அவற்றைச் சுத்தம் பண்ணி கெமிக்கல் செலுத்தி, உயிருள்ள குழந்தைகளைத் தூக்கிப்போவது போல, பெண்களை ஏற்பாடு பண்ணினேன். அந்தக் குழந்தைகளைச் சுத்தம் பண்ணி கெமிக்கல் செலுத்த இந்த அட்டெண்டர் உதவினாள். குழந்தையின் வயிற்றைக் கிழித்து உள்ளே கஞ்சாப் பொட்டலங்களை வைத்து தைத்து அவர்களுக்கு போலி பாஸ்போர்ட், விசாக்கள் எல்லாம் ரெடி பண்ணியும்கூட என் கெட்ட நேரம் அவர்கள் பிடிபட்டு விட்டார்கள்.!”
“அயோக்கிய ராஸ்கல்! எங்கம்மா உனக்கு என்ன பாவம் பண்ணாங்கன்னு அவங்களைக் கொலை செய்தே?”
சுஷ்மா ஆவேசப்பட, “என்னை மன்னிச்சிரு சுஷ். சத்தியமா அது உங்க அம்மான்னு தெரியாது. அன்று இரவு குழந்தை பிணங்களைத் தோண்டி எடுக்கும்போது இந்தம்மா அந்தப் பக்கம் வந்துட்டாங்க. அவங்க கத்தி கூப்பாடு போட, கையில் கிடைத்த தடியை எடுத்து அவங்க மண்டைல அடி! உடனே தரையில விழுந்து அவங்க மரணம்! அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலே. உடலை அப்புறப்படுத்தலாம்னு வண்டில தூக்கிப் போட்டுக்கிட்டு வந்தப்பதான் இந்த அட்டெண்டர் அனாடமிக்குப் பிணம் வேணும்ன எப்போதோ சொன்னது ஞாபகத்திற்க வந்தது. சரின்னு இவன்கிட்ட ஒப்படைச்சேன்.”
விவேக் சொல்லிவிட்டு போலீஸ்களைப் பார்த்து மிரள....
“அ....ம்...மா., கடைசியில உனக்கு இப்படி ஒரு மரணமா... அம்மா..” என சுஷ்மா விசும்ப... சுரேஷ் அவளை ஆறுதல்படுத்தித் தன் தோளில் அரவணைத்துக் கொண்டான்.
முற்றும்
குறிப்பு: மயக்க மருந்து கடத்தி, குவைத் நாட்டில் குற்றவாளிகள் பிடிபட்ட உண்மைச் சம்பவத்தை வைத்துப் புனையப்பட்டதே இந்தப் புதினம். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக் குறிப்புகள் தந்த டாக்டர் மனோகர் மற்றும் டாக்டர் பிஜீ. டாக்டர் தேவிபிரியாவுக்கு நன்றி!
எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு பத்தி தான் படித்தேன் சிவா, முழுவதும் படிக்கணும்...அருமையான பகிர்வு !..நன்றி !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
பொறுமையாய் ... ஒரு நாள், முழுதும் படிக்கணும் ...
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|