புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
prajai | ||||
Baarushree | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
manikavi | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
இனிமேல் பைக்கில் கிளம்பும்போது லைசென்ஸ், ஆர்.சி புத்தகம், இன்ஷூரன்ஸ் - இவற்றோடு ஹெல்மெட்டையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த ஹெல்மெட்டை தலையில் மாட்டிய பிறகே, பைக்கை ஸ்டார்ட் செய்யுங்கள். டேங்க்கில் தொடையிடுக்கில் வைத்துக்கொண்டோ, ரியர்வியூ மிரரில் சொருகியபடியோ ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு பயணிப்பது - சட்டத்தை மட்டுமல்ல; உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஏமாற்றுவதற்குச் சமம்!
‘ஹெல்மெட் இல்லையென்றால் லைசென்ஸ் பறிக்கப்படும்; வாகனம் சீஸ் செய்யப்படும்’ போன்ற கடுமையான சட்ட திட்டத்தையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள்; ‘ஹெல்மெட் போட்டா காது கேட்கவில்லை... வேர்த்துக் கொட்டுது பாஸ்... முடி போச்சுன்னா மொத்தமும் போச்சு’ என்று ஃபீலிங் டேக்கா விடுபவர்கள் அனைவருக்கும், ஹெல்மெட் விஷயத்தில் ஆப்ஷன் இருக்கிறது.
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
எல்லோருக்கும் பொதுவான பயம் இதுதான். தலைவலி, நீர் கோர்த்தல், காது கேட்கவில்லை போன்ற உடல் உபாதைகள் வருவதாகச் சொல்லித்தான் பலர் ஹெல்மெட்டைத் தவிர்க்கின்றனர். ஆனால், இவை எல்லாமே பொய் இல்லை. பல நாள் துவைக்காத அழுக்குச் சட்டை போட்டால், எப்படி நம் உடம்பில் அரிப்பு ஏற்படுமோ, அதுபோலத்தான் ஹெல்மெட்டும். தினசரி துவைத்த காட்டன் கேப் அல்லது கர்ச்சீஃப்பைத் தலையில் கட்டிக்கொண்டு ஹெல்மெட் அணிந்தால், எந்தப் பிரச்னையும் வராது. சேவியர், ஆக்ஸர், வேகா போன்ற பிராண்டுகளில் ஹெல்மெட்டின் உள்பக்கத்தை அகற்றி, துவைத்துப் பயன்படுத்தலாம். துவைத்த இன்டீரியரை வெயிலில் அரை நாள் காயவைத்து அணிந்தால், தலையில் அரிப்பு ஏற்படுவது நிற்பதுடன், முடி உதிர்தலும் தடைப்படும். அகற்ற முடியாத உள்பக்கம் கொண்ட ஹெல்மெட் வாங்குபவர்கள், தினசரி கர்ச்சீப் அல்லது கேப் மாற்ற வேண்டும். மேலும், வாரம் ஒருமுறை ஹெல்மெட்டின் உள்பக்கம் வெயிலில் படுவதுபோல அரை மணி நேரம் வைக்க வேண்டும்.
‘ரொம்ப வேர்க்குதுங்க’ என்று சாக்கு போக்கு சொல்பவர்கள், வென்ட்டிலேஷன் உள்ள ஹெல்மெட்டுகள் பயன்படுத்தலாம். 6 முதல் 8 ஏர் வென்ட்டுகள் உள்ள ஹெல்மெட்டுகள் இப்போது மார்க்கெட்டில் இருக்கின்றன. ஏர் வென்ட் என்றவுடன், குபுகுபுவென காற்று அடிக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம். உள்ளே வரும் சூடான காற்றை வெளியே தள்ளும் வசதிதான் இது. பைக் ஓட்டும்போது, மறக்காமல் ஹெல்மெட் வென்ட் திறந்திருக்கிறதா என்று கவனியுங்கள். அதேபோல், மழை நேரங்களில் பைக் ஓட்டுபவர்களுக்கும் வசதியான ஹெல்மெட்டுகள் இருக்கின்றன. வேகா, ஸ்டட்ஸ் போன்ற பிராண்டுகளில், ஹெல்மெட்டின் முன் பக்கம் நீண்டுள்ள ஷேட் வழியாக மழை நீர் வடிந்துவிடும் என்பதால், மழை நீர் நேராக வைஸரில் அறைந்து பார்வையை மறைப்பதை இது தவிர்க்கும். இவற்றுக்கு ‘ரெயின் ரெசிஸ்ட் ஹெல்மெட்’ என்று பெயர்.
ஹெல்மெட்டுகளில் எத்தனை வகை உள்ளன?
இந்தியாவின் தரம் வாய்ந்த ஹெல்மெட்டுகளான ஸ்டீல்பேர்டு, வேகா, ஸ்டட்ஸ், சேவியர் போன்ற ஹெல்மெட்டுகளின் சென்னை டீலர்களான ஜவஹர் அரோரா-வித்யா தம்பதியர், ஹெல்மெட்டுகளில் உள்ள வகைகள் பற்றிச் சொன்னார்கள்.
“உலகம் முழுக்க ஃபுல்ஃபேஸ், ஓப்பன் ஃபேஸ், ஃப்ளிப்-அப், டூயல் பர்பஸ், த்ரீ குவார்ட்டர், மாடுலர், ஹாஃப், மோட்டோகிராஸ் என்று 8 வகைகள் ஹெல்மெட்டில் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் புழக்கத்தில் இருப்பவை நான்கு வகைகள்தான்.
1. ஓப்பன் ஃபேஸ் - அதாவது திறந்த வகை ஹெல்மெட். இதுதான் பேஸிக் மாடல். பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இதை லேடீஸ் ஹெல்மெட் என்கிறார்கள். ஆனால், இதை ஆண்களும் பயன்படுத்தலாம். வேகமாகப் பயணிக்காத வர்களுக்கு, இது பெஸ்ட். தலைப் பகுதி முழுவதையும் இது பாதுகாத்தாலும், முகத்துக்கு வைஸர் மட்டுமே பாதுகாப்பு.
2. ஃபுல் ஃபேஸ் - பொதுவாக, நாம் அனைவரும் பயன்படுத்தும் ஹெல்மெட் இது. தாடை முதல் தலை முழுவதையும் பாதுகாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய ஃபுல் ஃபேஸ் மாடலில், ஏர் வென்ட்டுகள் இல்லாமல் இருந்தன. இப்போது வரும் அனைத்து மாடல்களிலும் ஏர் வென்ட்டுகள் இருப்பதால், வியர்க்குமோ என்று பயப்படத் தேவை இல்லை
3. ஃப்ளிப் அப் - இதுவும் ஃபுல் பேஸ் மாடல்தான். ஆனால், வெயிலில் முகம் வியர்க்கக் கூடாது என்று விரும்புபவர்கள், கீழே உள்ள பட்டனைப் பயன்படுத்தி, தாடைப் பகுதியை மேலே ஏற்றிக்கொள்ளலாம். இது, பார்ப்பதற்கு ஓரளவு ஓப்பன் ஃபேஸ் மாடல் போல இருக்கும். இதிலேயே ஆட்டோ கூலிங் ஆப்ஷனும் உண்டு. அதாவது, வெயிலில் செல்பவர்களுக்கு வைஸர் இல்லாமல், கண்களை மட்டும் கவர் செய்யுமாறு கூலிங் கிளாஸை இறக்கிக்கொள்ளலாம். இரவில் வெளிச்சமாகவும், பகலில் கூலிங்காகவும் இது இருப்பதால், ஓட்டுவதற்கு சுகானுபவமாக இருக்கும். ஆனால், ஆபத்து நேரத்தில் இதில் முழுப் பாதுகாப்பு கிடைக்காது.
4. மோட்டோ கிராஸ் - இதுவும் ஒரு வகையில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்தான். இதில் தாடைப் பகுதிக்கென்று சிறப்புப் பாதுகாப்பு இருக்கும். இதை ‘ஸ்கெலிட்டன் ஹெல்மெட்’ என்றும் சொல்கிறார்கள். பைக் ஓட்டும்போது கீழே விழ நேர்ந்தால், முகம் தரையில் அடிபட வாய்ப்பு இருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில், இந்த மோட்டோ கிராஸ் ஹெல்மெட் உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும். முன்பு டர்ட் பைக் ரேஸ்களில்தான் இதைப் பெரிதும் பயன்படுத்தினார்கள். இது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், இப்போதைய இளைஞர்களை இது மிகவும் கவரும். இதில், தலைக்கு மேலே சன் ஷேடு இருப்பதால், வெயில் மற்றும் மழை உங்களை நேரடியாகத் தாக்காது!” என்றனர்.
ஹெல்மெட்டுகள் எப்படித் தயாராகின்றன?
இந்தியாவில், முழுக்க முழுக்க பாலி கார்பனேட் கலவையால் ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் சேர்ந்த கலவைதான் பாலிமர். தரமான ஹெல்மெட்டுகளில் இந்தத் தடிமனான பகுதிக்குக் கீழே 7 அடுக்குகளால் ஆன ஃபைபர் லேயர்கள் இருக்கும். இவை தரையில் மோதும்போது கிடைக்கும் அழுத்தத்தை ஈஸியாக்கும். லைட் வெயிட்டுக்கும், ஃப்ளெக்ஸிபிளிட்டிக்கும் பாலிமர்தான் பெஸ்ட். இதற்கு அடுத்த தரம், ஃபைபர் கிளாஸ் மெட்டீரியல். MT, AGV போன்ற இத்தாலியன் ஹெல்மெட்டுகளில் ஃபைபர் கிளாஸ் பயன்படுத்தப்படுகின்றன. இது, மோதும்போது ஏற்படும் வேகத்தைக் குறைக்கும் தன்மைகொண்டவை. உச்சபட்சமாக, கார்பன் ஃபைபர் மெட்டீரியல் கொண்டு தயாரிக்கப்படும் ஹெல்மெட்டுகள்தான் உலகத் தரம் வாய்ந்தவை. மோட்டோ ஜீபி, ஃபார்முலா-1 போன்ற ரேஸ்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்டுகள் அனைத்தும் கார்பன் ஃபைபர் கொண்டு தயாரிக்கப்பட்டவை. சில கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகளின் எடை 1.3 கிலோ அளவுதான் இருக்கும். ஆனால், பாதுகாப்பில் இவைதான் பெஸ்ட். நம் நாட்டில் நெக்ஸ், AGV போன்ற கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகள் 28,000 ரூபாய் முதல் கிடைக்கின்றன.
எப்படி வாங்க வேண்டும்?
ஹெல்மெட், நம் தலையோடு மிக இறுக்கமாகவும் இருக்கக் கூடாது; மிகத் தளர்வாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் போட்டுக்கொண்ட பிறகு, தலையை இட வலமாக அசைத்துப் பாருங்கள். லேசாக நகர்ந்தால், அது உங்களுக்குச் சரியான ஹெல்மெட். அதிகமாக நகர்ந்தால், மிகவும் தளர்வாக இருக்கிறது என்று பொருள். காது கேட்க வேண்டும்; காற்று வர வேண்டும் என நீங்கள் தளர்வாக ஹெல்மெட் அணிந்தால், ஸ்பீடு பிரேக்கர்களில் ஹெல்மெட் திரும்ப வாய்ப்பு உண்டு. அதேபோல், இறுக்கமாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் அணியும்போது, இரு பக்கமும் உள்ள ஸ்ட்ராப்புகளை நன்கு இழுத்து லாக் செய்ய வேண்டும். இதுதான் ஹெல்மெட் அணிய வேண்டிய சரியான முறை.
ஹெல்மெட் ஏன் அணிய வேண்டும்?
இந்தியாவில் 45 சதவிகித விபத்துகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகளே! தலையில் மட்டும் அடிபட்டு மூளைச் சாவு ஏற்பட்டு வாழ்வை இழப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபம். ஹெல்மெட் அணிந்து பைக்கில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஒருவர், தலைக்கு மேலே சாய்ந்து விழுந்த மின் கம்பத்தில் இருந்து உயிர் தப்பிய கதையும் உண்டு. எனவே, சாலை விபத்துகளில் மட்டுமின்றி, பொதுவாகவும் நம் அழகான முகம் பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அவசியம்! ஹெல்மெட்டை சுமையாக நினைக்காதீர்கள்; சுகமாக அனுபவியுங்கள்!
தரமான ஹெல்மெட்டை எப்படிக் கண்டுபிடிப்பது
ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம். காஸ்ட்லியாக வாங்க விரும்புபவர்கள் ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த இம்போர்ட்டட் ஹெல்மெட்டுகள் வாங்கலாம். ஐரோப்பா பிராண்டுகளில் ECE குறியீடு இருக்கும். Economic Commissions for Europe என்பதுதான் இதன் சுருக்கம். இதை கவர்ன்மென்ட் ஆஃப் யுகே வெப்சைட்டில் செக் செய்து கொள்ளலாம். வட, தென் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஹெல்மெட்டுகளில் DOT (Department of Transportation) எனும் கோட் நம்பரும் சர்ட்டிஃபிகேட்டும் இருக்கிறதா என்று செக் செய்துகொள்ளுங்கள்.
நம் ஊர்களில் DOT ஸ்டிக்கர்கள் டூப்ளிகேட்டாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரிஜினல் ஹெல்மெட்களில் DOT கோடு, மோல்டு செய்யப்பட்டிருப்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். ஜெர்மன் தயாரிப்பில் SCHNELL என்ற குறியீட்டை வைத்துக் கண்டுபிடிக்கலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு ISI முத்திரை. இதிலும் நிறைய போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதால், கவனம் தேவை.
ISI முத்திரை உண்மைதானா என்பதைக் கண்டறிய, 044-22541442, 22541216 ஆகிய எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.
அல்லது
www.bis.org.in
என்ற இணையதளத்தில், ISI மற்றும் CM/L நம்பரை வைத்துச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
இனிமேல் பைக்கில் கிளம்பும்போது லைசென்ஸ், ஆர்.சி புத்தகம், இன்ஷூரன்ஸ் - இவற்றோடு ஹெல்மெட்டையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த ஹெல்மெட்டை தலையில் மாட்டிய பிறகே, பைக்கை ஸ்டார்ட் செய்யுங்கள். டேங்க்கில் தொடையிடுக்கில் வைத்துக்கொண்டோ, ரியர்வியூ மிரரில் சொருகியபடியோ ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு பயணிப்பது - சட்டத்தை மட்டுமல்ல; உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஏமாற்றுவதற்குச் சமம்!
‘ஹெல்மெட் இல்லையென்றால் லைசென்ஸ் பறிக்கப்படும்; வாகனம் சீஸ் செய்யப்படும்’ போன்ற கடுமையான சட்ட திட்டத்தையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள்; ‘ஹெல்மெட் போட்டா காது கேட்கவில்லை... வேர்த்துக் கொட்டுது பாஸ்... முடி போச்சுன்னா மொத்தமும் போச்சு’ என்று ஃபீலிங் டேக்கா விடுபவர்கள் அனைவருக்கும், ஹெல்மெட் விஷயத்தில் ஆப்ஷன் இருக்கிறது.
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
எல்லோருக்கும் பொதுவான பயம் இதுதான். தலைவலி, நீர் கோர்த்தல், காது கேட்கவில்லை போன்ற உடல் உபாதைகள் வருவதாகச் சொல்லித்தான் பலர் ஹெல்மெட்டைத் தவிர்க்கின்றனர். ஆனால், இவை எல்லாமே பொய் இல்லை. பல நாள் துவைக்காத அழுக்குச் சட்டை போட்டால், எப்படி நம் உடம்பில் அரிப்பு ஏற்படுமோ, அதுபோலத்தான் ஹெல்மெட்டும். தினசரி துவைத்த காட்டன் கேப் அல்லது கர்ச்சீஃப்பைத் தலையில் கட்டிக்கொண்டு ஹெல்மெட் அணிந்தால், எந்தப் பிரச்னையும் வராது. சேவியர், ஆக்ஸர், வேகா போன்ற பிராண்டுகளில் ஹெல்மெட்டின் உள்பக்கத்தை அகற்றி, துவைத்துப் பயன்படுத்தலாம். துவைத்த இன்டீரியரை வெயிலில் அரை நாள் காயவைத்து அணிந்தால், தலையில் அரிப்பு ஏற்படுவது நிற்பதுடன், முடி உதிர்தலும் தடைப்படும். அகற்ற முடியாத உள்பக்கம் கொண்ட ஹெல்மெட் வாங்குபவர்கள், தினசரி கர்ச்சீப் அல்லது கேப் மாற்ற வேண்டும். மேலும், வாரம் ஒருமுறை ஹெல்மெட்டின் உள்பக்கம் வெயிலில் படுவதுபோல அரை மணி நேரம் வைக்க வேண்டும்.
‘ரொம்ப வேர்க்குதுங்க’ என்று சாக்கு போக்கு சொல்பவர்கள், வென்ட்டிலேஷன் உள்ள ஹெல்மெட்டுகள் பயன்படுத்தலாம். 6 முதல் 8 ஏர் வென்ட்டுகள் உள்ள ஹெல்மெட்டுகள் இப்போது மார்க்கெட்டில் இருக்கின்றன. ஏர் வென்ட் என்றவுடன், குபுகுபுவென காற்று அடிக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம். உள்ளே வரும் சூடான காற்றை வெளியே தள்ளும் வசதிதான் இது. பைக் ஓட்டும்போது, மறக்காமல் ஹெல்மெட் வென்ட் திறந்திருக்கிறதா என்று கவனியுங்கள். அதேபோல், மழை நேரங்களில் பைக் ஓட்டுபவர்களுக்கும் வசதியான ஹெல்மெட்டுகள் இருக்கின்றன. வேகா, ஸ்டட்ஸ் போன்ற பிராண்டுகளில், ஹெல்மெட்டின் முன் பக்கம் நீண்டுள்ள ஷேட் வழியாக மழை நீர் வடிந்துவிடும் என்பதால், மழை நீர் நேராக வைஸரில் அறைந்து பார்வையை மறைப்பதை இது தவிர்க்கும். இவற்றுக்கு ‘ரெயின் ரெசிஸ்ட் ஹெல்மெட்’ என்று பெயர்.
ஹெல்மெட்டுகளில் எத்தனை வகை உள்ளன?
இந்தியாவின் தரம் வாய்ந்த ஹெல்மெட்டுகளான ஸ்டீல்பேர்டு, வேகா, ஸ்டட்ஸ், சேவியர் போன்ற ஹெல்மெட்டுகளின் சென்னை டீலர்களான ஜவஹர் அரோரா-வித்யா தம்பதியர், ஹெல்மெட்டுகளில் உள்ள வகைகள் பற்றிச் சொன்னார்கள்.
“உலகம் முழுக்க ஃபுல்ஃபேஸ், ஓப்பன் ஃபேஸ், ஃப்ளிப்-அப், டூயல் பர்பஸ், த்ரீ குவார்ட்டர், மாடுலர், ஹாஃப், மோட்டோகிராஸ் என்று 8 வகைகள் ஹெல்மெட்டில் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் புழக்கத்தில் இருப்பவை நான்கு வகைகள்தான்.
1. ஓப்பன் ஃபேஸ் - அதாவது திறந்த வகை ஹெல்மெட். இதுதான் பேஸிக் மாடல். பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இதை லேடீஸ் ஹெல்மெட் என்கிறார்கள். ஆனால், இதை ஆண்களும் பயன்படுத்தலாம். வேகமாகப் பயணிக்காத வர்களுக்கு, இது பெஸ்ட். தலைப் பகுதி முழுவதையும் இது பாதுகாத்தாலும், முகத்துக்கு வைஸர் மட்டுமே பாதுகாப்பு.
2. ஃபுல் ஃபேஸ் - பொதுவாக, நாம் அனைவரும் பயன்படுத்தும் ஹெல்மெட் இது. தாடை முதல் தலை முழுவதையும் பாதுகாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய ஃபுல் ஃபேஸ் மாடலில், ஏர் வென்ட்டுகள் இல்லாமல் இருந்தன. இப்போது வரும் அனைத்து மாடல்களிலும் ஏர் வென்ட்டுகள் இருப்பதால், வியர்க்குமோ என்று பயப்படத் தேவை இல்லை
3. ஃப்ளிப் அப் - இதுவும் ஃபுல் பேஸ் மாடல்தான். ஆனால், வெயிலில் முகம் வியர்க்கக் கூடாது என்று விரும்புபவர்கள், கீழே உள்ள பட்டனைப் பயன்படுத்தி, தாடைப் பகுதியை மேலே ஏற்றிக்கொள்ளலாம். இது, பார்ப்பதற்கு ஓரளவு ஓப்பன் ஃபேஸ் மாடல் போல இருக்கும். இதிலேயே ஆட்டோ கூலிங் ஆப்ஷனும் உண்டு. அதாவது, வெயிலில் செல்பவர்களுக்கு வைஸர் இல்லாமல், கண்களை மட்டும் கவர் செய்யுமாறு கூலிங் கிளாஸை இறக்கிக்கொள்ளலாம். இரவில் வெளிச்சமாகவும், பகலில் கூலிங்காகவும் இது இருப்பதால், ஓட்டுவதற்கு சுகானுபவமாக இருக்கும். ஆனால், ஆபத்து நேரத்தில் இதில் முழுப் பாதுகாப்பு கிடைக்காது.
4. மோட்டோ கிராஸ் - இதுவும் ஒரு வகையில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்தான். இதில் தாடைப் பகுதிக்கென்று சிறப்புப் பாதுகாப்பு இருக்கும். இதை ‘ஸ்கெலிட்டன் ஹெல்மெட்’ என்றும் சொல்கிறார்கள். பைக் ஓட்டும்போது கீழே விழ நேர்ந்தால், முகம் தரையில் அடிபட வாய்ப்பு இருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில், இந்த மோட்டோ கிராஸ் ஹெல்மெட் உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும். முன்பு டர்ட் பைக் ரேஸ்களில்தான் இதைப் பெரிதும் பயன்படுத்தினார்கள். இது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், இப்போதைய இளைஞர்களை இது மிகவும் கவரும். இதில், தலைக்கு மேலே சன் ஷேடு இருப்பதால், வெயில் மற்றும் மழை உங்களை நேரடியாகத் தாக்காது!” என்றனர்.
ஹெல்மெட்டுகள் எப்படித் தயாராகின்றன?
இந்தியாவில், முழுக்க முழுக்க பாலி கார்பனேட் கலவையால் ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் சேர்ந்த கலவைதான் பாலிமர். தரமான ஹெல்மெட்டுகளில் இந்தத் தடிமனான பகுதிக்குக் கீழே 7 அடுக்குகளால் ஆன ஃபைபர் லேயர்கள் இருக்கும். இவை தரையில் மோதும்போது கிடைக்கும் அழுத்தத்தை ஈஸியாக்கும். லைட் வெயிட்டுக்கும், ஃப்ளெக்ஸிபிளிட்டிக்கும் பாலிமர்தான் பெஸ்ட். இதற்கு அடுத்த தரம், ஃபைபர் கிளாஸ் மெட்டீரியல். MT, AGV போன்ற இத்தாலியன் ஹெல்மெட்டுகளில் ஃபைபர் கிளாஸ் பயன்படுத்தப்படுகின்றன. இது, மோதும்போது ஏற்படும் வேகத்தைக் குறைக்கும் தன்மைகொண்டவை. உச்சபட்சமாக, கார்பன் ஃபைபர் மெட்டீரியல் கொண்டு தயாரிக்கப்படும் ஹெல்மெட்டுகள்தான் உலகத் தரம் வாய்ந்தவை. மோட்டோ ஜீபி, ஃபார்முலா-1 போன்ற ரேஸ்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்டுகள் அனைத்தும் கார்பன் ஃபைபர் கொண்டு தயாரிக்கப்பட்டவை. சில கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகளின் எடை 1.3 கிலோ அளவுதான் இருக்கும். ஆனால், பாதுகாப்பில் இவைதான் பெஸ்ட். நம் நாட்டில் நெக்ஸ், AGV போன்ற கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகள் 28,000 ரூபாய் முதல் கிடைக்கின்றன.
எப்படி வாங்க வேண்டும்?
ஹெல்மெட், நம் தலையோடு மிக இறுக்கமாகவும் இருக்கக் கூடாது; மிகத் தளர்வாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் போட்டுக்கொண்ட பிறகு, தலையை இட வலமாக அசைத்துப் பாருங்கள். லேசாக நகர்ந்தால், அது உங்களுக்குச் சரியான ஹெல்மெட். அதிகமாக நகர்ந்தால், மிகவும் தளர்வாக இருக்கிறது என்று பொருள். காது கேட்க வேண்டும்; காற்று வர வேண்டும் என நீங்கள் தளர்வாக ஹெல்மெட் அணிந்தால், ஸ்பீடு பிரேக்கர்களில் ஹெல்மெட் திரும்ப வாய்ப்பு உண்டு. அதேபோல், இறுக்கமாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் அணியும்போது, இரு பக்கமும் உள்ள ஸ்ட்ராப்புகளை நன்கு இழுத்து லாக் செய்ய வேண்டும். இதுதான் ஹெல்மெட் அணிய வேண்டிய சரியான முறை.
ஹெல்மெட் ஏன் அணிய வேண்டும்?
இந்தியாவில் 45 சதவிகித விபத்துகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகளே! தலையில் மட்டும் அடிபட்டு மூளைச் சாவு ஏற்பட்டு வாழ்வை இழப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபம். ஹெல்மெட் அணிந்து பைக்கில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஒருவர், தலைக்கு மேலே சாய்ந்து விழுந்த மின் கம்பத்தில் இருந்து உயிர் தப்பிய கதையும் உண்டு. எனவே, சாலை விபத்துகளில் மட்டுமின்றி, பொதுவாகவும் நம் அழகான முகம் பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அவசியம்! ஹெல்மெட்டை சுமையாக நினைக்காதீர்கள்; சுகமாக அனுபவியுங்கள்!
தரமான ஹெல்மெட்டை எப்படிக் கண்டுபிடிப்பது
ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம். காஸ்ட்லியாக வாங்க விரும்புபவர்கள் ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த இம்போர்ட்டட் ஹெல்மெட்டுகள் வாங்கலாம். ஐரோப்பா பிராண்டுகளில் ECE குறியீடு இருக்கும். Economic Commissions for Europe என்பதுதான் இதன் சுருக்கம். இதை கவர்ன்மென்ட் ஆஃப் யுகே வெப்சைட்டில் செக் செய்து கொள்ளலாம். வட, தென் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஹெல்மெட்டுகளில் DOT (Department of Transportation) எனும் கோட் நம்பரும் சர்ட்டிஃபிகேட்டும் இருக்கிறதா என்று செக் செய்துகொள்ளுங்கள்.
நம் ஊர்களில் DOT ஸ்டிக்கர்கள் டூப்ளிகேட்டாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரிஜினல் ஹெல்மெட்களில் DOT கோடு, மோல்டு செய்யப்பட்டிருப்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். ஜெர்மன் தயாரிப்பில் SCHNELL என்ற குறியீட்டை வைத்துக் கண்டுபிடிக்கலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு ISI முத்திரை. இதிலும் நிறைய போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதால், கவனம் தேவை.
ISI முத்திரை உண்மைதானா என்பதைக் கண்டறிய, 044-22541442, 22541216 ஆகிய எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.
அல்லது
www.bis.org.in
என்ற இணையதளத்தில், ISI மற்றும் CM/L நம்பரை வைத்துச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஹெல்மெட் அதிக விலைக்கு விற்றால் புகார் செய்ய செல்போன் எண்கள் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால் புகார் செய்வதற்காக செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, ஹெல்மெட் வாங்குவதற்காக ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, ஹெல்மெட் கடைகள் ஹெல்மெட்டுகளின் விலையை இரண்டு மடங்கு அதிகமாக்கி விற்பனை செய்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை ஆணையர் கூறியுள்ளார். மேலும், அதிக விலைக்கு விற்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், தொழிலாளர் துறை ஆய்வர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 30 ஊர்களில் உள்ள மாவட்ட தொழிலாளர் ஆய்வர்களிடம் புகார் அளிக்கலாம் எனவும், அந்தந்த ஊர் ஆய்வர்களின் செல்போன் எண்களையும் ஆணையர் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
1. சென்னை 1வது வட்டம் 94453 98738
2. சென்னை 2வது வட்டம் 94453 98739
3. சென்னை 3வது வட்டம் 94453 98740
4. காஞ்சிபுரம் 94453 98743
5. திருவள்ளூர் 94453 98745
6. கடலூர் 94453 98746
7. வேலூர் 94453 98741
8. விழுப்புரம் 94453 98747
9. திருவண்ணாமலை 94453 98742
10. திருச்சி 94453 98756
11. தஞ்சை 94453 98757
12. திருவாரூர் 94453 98758
13. பெரம்பலூர் 94453 98759
14. திண்டுக்கல் 94453 98760
15. கரூர் 94453 98754
16. தேனி 94453 98762
17. மதுரை 94453 98761
18. விருதுநகர் 94453 98763
19. சிவகங்கை 94453 98767
20. ராமநாதபுரம் 94453 98764
21. திருநெல்வேலி 94453 98768
22. தூத்துக்குடி 94453 98769
23. நாகர்கோவில் 94453 98771
24. கோவை 94453 98752
25. திருப்பூர் 94453 98772
26. கிருஷ்ணகிரி 94453 98748
27. குன்னூர் 94453 98753
28. சேலம் 94453 98749
29. ஈரோடு 94453 98751
30. நாமக்கல் 94453 98750
சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால் புகார் செய்வதற்காக செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, ஹெல்மெட் வாங்குவதற்காக ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, ஹெல்மெட் கடைகள் ஹெல்மெட்டுகளின் விலையை இரண்டு மடங்கு அதிகமாக்கி விற்பனை செய்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை ஆணையர் கூறியுள்ளார். மேலும், அதிக விலைக்கு விற்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், தொழிலாளர் துறை ஆய்வர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 30 ஊர்களில் உள்ள மாவட்ட தொழிலாளர் ஆய்வர்களிடம் புகார் அளிக்கலாம் எனவும், அந்தந்த ஊர் ஆய்வர்களின் செல்போன் எண்களையும் ஆணையர் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
1. சென்னை 1வது வட்டம் 94453 98738
2. சென்னை 2வது வட்டம் 94453 98739
3. சென்னை 3வது வட்டம் 94453 98740
4. காஞ்சிபுரம் 94453 98743
5. திருவள்ளூர் 94453 98745
6. கடலூர் 94453 98746
7. வேலூர் 94453 98741
8. விழுப்புரம் 94453 98747
9. திருவண்ணாமலை 94453 98742
10. திருச்சி 94453 98756
11. தஞ்சை 94453 98757
12. திருவாரூர் 94453 98758
13. பெரம்பலூர் 94453 98759
14. திண்டுக்கல் 94453 98760
15. கரூர் 94453 98754
16. தேனி 94453 98762
17. மதுரை 94453 98761
18. விருதுநகர் 94453 98763
19. சிவகங்கை 94453 98767
20. ராமநாதபுரம் 94453 98764
21. திருநெல்வேலி 94453 98768
22. தூத்துக்குடி 94453 98769
23. நாகர்கோவில் 94453 98771
24. கோவை 94453 98752
25. திருப்பூர் 94453 98772
26. கிருஷ்ணகிரி 94453 98748
27. குன்னூர் 94453 98753
28. சேலம் 94453 98749
29. ஈரோடு 94453 98751
30. நாமக்கல் 94453 98750
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஹெல்மெட்டில் ப்ளட் குரூப், அவசர தொடர்பு எண்: இளைஞரின் புத்திசாலித்தனம்!
கோவை: ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் தனது ஹெல்மெட்டில் பெயர், ப்ளட் குரூப் மற்றும் அவசர தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பதிந்து வலம் வருகிறார் இளைஞர் ஒருவர்.
தமிழகத்தில் இன்று முதல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக மிகப்பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்களை இயக்க துவங்கியுள்ளனர். இருப்பினும், ஹெல்மெட் அணிவதற்கு எதிரான மனநிலையில் பலர் இருப்பதையும் உணர முடிகிறது.
இந்த சூழலில் ஹெல்மெட் அணிவதோடு, அதில் தன் ப்ளட் குரூப், அவசர தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பதிந்துள்ளார் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
கோவை, சிங்காநல்லூர், மசக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். தனியார் நிறுவன அச்சகத்தில் பணியாற்றி வரும் இவர், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது, தனது ஹெல்மெட்டில் தனது பெயர், ப்ளட் குரூப், அவசர தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக விஸ்வநாதன் கூறுகையில், "நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பைக் வாங்கினேன். பைக் உடன் ஹெல்மெட்டையும் வாங்கினேன். அன்று முதல் இதுவரைக்கும் நான் ஹெல்மெட் போட்டுதான் வாகனம் ஓட்டுகிறேன்.
போன மாசம் நான் பைக்ல வந்துட்டு இருந்தப்போ, ஒருத்தர் ஆக்சிடென்ட்ல அடிபட்டார். அதுல அவர் செல்போன் உடைஞ்சு போச்சு. அவரைப்பத்தின எந்த விவரமும் தெரியலை. அவர் அங்கேயே இறந்துட்டார். இது மாதிரியான நேரத்துல அவங்க ப்ளட் குரூப், அவசர தொடர்பு எண் இருந்தா அது உபயோகமாக இருக்கும்னு பட்டுச்சு. அதனால என் ஹெல்மெட்டுல என் பெயர், ப்ளட் குரூப், அவசர தொடர்பு எண்ணா என் வீட்டு நம்பரை போட்டுட்டேன். என் வண்டியிலயும் இந்த விவரத்தை பதிவு செஞ்சிருக்கேன்" என்றார்.
இரு சக்கர வாகனம் ஓட்டுற எல்லாரும் இந்த நல்ல யோசனையை பின்பற்றலாமே...
கோவை: ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் தனது ஹெல்மெட்டில் பெயர், ப்ளட் குரூப் மற்றும் அவசர தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பதிந்து வலம் வருகிறார் இளைஞர் ஒருவர்.
தமிழகத்தில் இன்று முதல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக மிகப்பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்களை இயக்க துவங்கியுள்ளனர். இருப்பினும், ஹெல்மெட் அணிவதற்கு எதிரான மனநிலையில் பலர் இருப்பதையும் உணர முடிகிறது.
இந்த சூழலில் ஹெல்மெட் அணிவதோடு, அதில் தன் ப்ளட் குரூப், அவசர தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பதிந்துள்ளார் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
கோவை, சிங்காநல்லூர், மசக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். தனியார் நிறுவன அச்சகத்தில் பணியாற்றி வரும் இவர், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது, தனது ஹெல்மெட்டில் தனது பெயர், ப்ளட் குரூப், அவசர தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக விஸ்வநாதன் கூறுகையில், "நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பைக் வாங்கினேன். பைக் உடன் ஹெல்மெட்டையும் வாங்கினேன். அன்று முதல் இதுவரைக்கும் நான் ஹெல்மெட் போட்டுதான் வாகனம் ஓட்டுகிறேன்.
போன மாசம் நான் பைக்ல வந்துட்டு இருந்தப்போ, ஒருத்தர் ஆக்சிடென்ட்ல அடிபட்டார். அதுல அவர் செல்போன் உடைஞ்சு போச்சு. அவரைப்பத்தின எந்த விவரமும் தெரியலை. அவர் அங்கேயே இறந்துட்டார். இது மாதிரியான நேரத்துல அவங்க ப்ளட் குரூப், அவசர தொடர்பு எண் இருந்தா அது உபயோகமாக இருக்கும்னு பட்டுச்சு. அதனால என் ஹெல்மெட்டுல என் பெயர், ப்ளட் குரூப், அவசர தொடர்பு எண்ணா என் வீட்டு நம்பரை போட்டுட்டேன். என் வண்டியிலயும் இந்த விவரத்தை பதிவு செஞ்சிருக்கேன்" என்றார்.
இரு சக்கர வாகனம் ஓட்டுற எல்லாரும் இந்த நல்ல யோசனையை பின்பற்றலாமே...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஹெல்மெட் திருட்டு ஓகோ...!
தமிழகத்தில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம் என்று அரசு அறிவித்தது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்தமுறை அபராதம் கிடையாது. அதற்கு மேலாக வாகனத்தின் ஆவணங்கள், லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்ற அரசின் அறிவிப்பால், எப்போதும் வெறிச்சோடி கிடந்த ஹெல்மெட் கடைகளில் தற்போது கூட்டம் அலைமோதுகிறது.
இதுதான் பணம் வசூலிக்க சரியான நேரம் என்று கடை உரிமையாளர்கள், மிகவும் மட்டமான ஹெல்மெட்டுகளை மட்டுமின்றி, பழைய ஹெல்மெட்டுகளையும் அதிகமாக விற்பனைக்கு வைத்துள்ளனர். 350 ரூபாய் இருந்த ஹெல்மெட், தற்போது 750 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வேறு வழியின்றி அதையும் பொதுமக்கள் வேதனையுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இது ஒருபுறம் நடந்தாலும் மற்றொரு புறம் ஹெல்மெட் திருட்டுகள் அதிகமாக நடந்து வருகிறது. ஹெல்மெட்டை பாதுகாக்க வாகனங்களில் பூட்டி வைக்கப்படுகிறது. திரையரங்கு பார்க்கிங், வணிக வளாகத்தில் உள்ள பார்க்கிங், மருத்துவமனை பார்க்கிங், ரயில், பேருந்து நிலையங்களில் வாகன பார்க்கிங் உள்ளிட்டவற்றை குறிவைத்து கொள்ளையர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இங்குதான் அதிகமாக ஹெல்மெட் இருக்கும் என்பதால் கொள்ளையர்கள் இங்கு வாகனங்களை நிறுத்துவதுபோல் ஹெல்மெட்டுகளை திருடி சென்று விடுகின்றனர்.
ஹெல்மெட்டை இழந்த ஒருவர் கூறுகையில், "சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையங்குக்கு இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் சென்றேன். வாகனத்தை பார்க்கிங் செய்துவிட்டு படம் பார்க்க சென்றேன். படம் முடிந்து வாகனத்தை எடுக்க முயன்றபோது அதில் இருந்த ஹெல்மெட்டை காணவில்லை. இது குறித்து பணம் வசூலிப்பவரிடம் கேட்டபோது, வாகனத்தைதான் பாதுகாப்போம், ஹெல்மெட்டை அல்ல என அஜாக்கிரதையுடன் பதில் அளித்தார். வேறுவழியின்றி ஹெல்மெட் இல்லாமல் வீடு வந்து சேர்ந்தேன்" என்றார் வேதனையுடன்.
தமிழகத்தில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம் என்று அரசு அறிவித்தது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்தமுறை அபராதம் கிடையாது. அதற்கு மேலாக வாகனத்தின் ஆவணங்கள், லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்ற அரசின் அறிவிப்பால், எப்போதும் வெறிச்சோடி கிடந்த ஹெல்மெட் கடைகளில் தற்போது கூட்டம் அலைமோதுகிறது.
இதுதான் பணம் வசூலிக்க சரியான நேரம் என்று கடை உரிமையாளர்கள், மிகவும் மட்டமான ஹெல்மெட்டுகளை மட்டுமின்றி, பழைய ஹெல்மெட்டுகளையும் அதிகமாக விற்பனைக்கு வைத்துள்ளனர். 350 ரூபாய் இருந்த ஹெல்மெட், தற்போது 750 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வேறு வழியின்றி அதையும் பொதுமக்கள் வேதனையுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இது ஒருபுறம் நடந்தாலும் மற்றொரு புறம் ஹெல்மெட் திருட்டுகள் அதிகமாக நடந்து வருகிறது. ஹெல்மெட்டை பாதுகாக்க வாகனங்களில் பூட்டி வைக்கப்படுகிறது. திரையரங்கு பார்க்கிங், வணிக வளாகத்தில் உள்ள பார்க்கிங், மருத்துவமனை பார்க்கிங், ரயில், பேருந்து நிலையங்களில் வாகன பார்க்கிங் உள்ளிட்டவற்றை குறிவைத்து கொள்ளையர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இங்குதான் அதிகமாக ஹெல்மெட் இருக்கும் என்பதால் கொள்ளையர்கள் இங்கு வாகனங்களை நிறுத்துவதுபோல் ஹெல்மெட்டுகளை திருடி சென்று விடுகின்றனர்.
ஹெல்மெட்டை இழந்த ஒருவர் கூறுகையில், "சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையங்குக்கு இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் சென்றேன். வாகனத்தை பார்க்கிங் செய்துவிட்டு படம் பார்க்க சென்றேன். படம் முடிந்து வாகனத்தை எடுக்க முயன்றபோது அதில் இருந்த ஹெல்மெட்டை காணவில்லை. இது குறித்து பணம் வசூலிப்பவரிடம் கேட்டபோது, வாகனத்தைதான் பாதுகாப்போம், ஹெல்மெட்டை அல்ல என அஜாக்கிரதையுடன் பதில் அளித்தார். வேறுவழியின்றி ஹெல்மெட் இல்லாமல் வீடு வந்து சேர்ந்தேன்" என்றார் வேதனையுடன்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
திரும்பிய இடமெல்லாம் ஹெல்மெட் வாங்க அலை மோதும் மக்களின் கூட்டம், ஹெல்மெட் பற்றிய விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி விட்டது என்று நினைக்கும் வேளையில், தலைக்கவசத்தால் தலையை மட்டுமே பாதுகாக்க முடியுமே தவிர அலட்சியமான, ஆபத்தான வேகத்தால் உடலின் கை, கால், கழுத்துப் பகுதிகளுக்கு விபத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதும் உண்மை.
ஹெல்மெட் போட்டாலும் விபத்தை தவிர்க்க முடியாத நிலையில், வாகன ஒட்டுனர்களாகிய நாம் விபத்தை தவிர்க்கும் முறையை பார்ப்போம்.....
1. மது அருந்திவிட்டு ஹெல்மெட்டுடன் வண்டி ஓட்டினாலும், போலீசுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு தப்பித்தாலும் எமனிடம் தப்பிப்பது ஜாதகத்தில் கண்டச் சனியின் ஆயுள் பாவத்தை பொறுத்தே. குடித்து விட்டு சாலைக்கு நடந்தும் கூட வரக்கூடாது.
2. என்னதான் ஹெல்மெட் போட்டாலும் இரு சக்கர வண்டிகள் 50 கிமீக்கு மேல் செல்வது ஆபத்தானது. நாம்தான் ஹெல்மெட் போட்டு இருக்கின்றோம் என்ற தவறான நம்பிக்கையில் வேகமுடன் செல்வது, நெஞ்சில் ஏறி நிற்கும் வாகனத்திற்கு வாய்ப்பாக அமைந்து விடும். நம்மூரில் மாடுகள், நாய்கள், அரசு வாகனங்கள் எல்லாம் ஓய்வெடுக்கும் இடமே சாலைகள்தான் எனபதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வேகம் வேதனையைத் தரும். அதே போல சிக்னல் போடும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். சிவப்பு விளக்கு எரியும் போது போக்குவரத்து போலீசார்தான் யாரும் இல்லையே என நினைத்து வேகமுடன் செல்வது, நம் உடலில் உள்ள சிவப்பு ரத்தத்தை பார்க்க வைத்து விடும்.
3. வலது,இடது புறம் திரும்பும் முன் 50 அடிக்கு முன்பே பக்க ஒளி விளக்கையும், கையையும் காட்டி சைகை செய்ய வேண்டும். திடீர் என்று திரும்புவது, பின்னால் வரும் வாகனத்தின் வேகத்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இரவில் போக்குவரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
4. குடி போதையுடன் அசுர வேகத்தில் வரும் ஆட்டோக்கள், லாரிகள் போன்றவற்றுடன் போட்டி போடாமல் ஒதுங்கி கவனமுடன் செல்ல வேண்டும்.
6.. பக்கச் சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வரும் போது நிதானமுடன் ஒலி எழுப்பி வர வேண்டும். முக்குத்து , நாற்புறமும் பிரியும் சாலைகளில் மெதுவாகச் செல்ல வேண்டும்.
7. முந்திச் செல்லும்போது எதிரே வரும் வாகனத்திற்கு இடையூறு இல்லாத வகையில் முந்த வேண்டும். அவசரத்தில் முந்திச் செல்லும்போது எதிரே வரும் வண்டியின் மீது மோதி சாவில் முந்தி விடுகிறார்கள்.
8. சாலை விதிகளை மறக்காமல் கண்ணியமுடன் வண்டி ஓட்ட வேண்டும். பந்தயம் போல சாலையை நினைத்தால் பத்து நிமிடத்தில் 108 கண் முன் தெரியும்.
9. கண்கள் கூசும் அளவிற்கு நான்கு சக்கர வாகனங்கள் வரும். முடிந்த அளவிற்கு கவனமுடன் உங்கள் விளக்கை குறைத்து சைகை காண்பியுங்கள். முன்னால் செல்லும் வாகனம் தெரியாத பட்சத்தில் நிதானமுடன் நின்று செல்வது புத்திசாலித்தனம்.
10 . ஒரு வண்டியில் மொத்த குடும்பமே செல்வது போல குடும்ப வாகனமாக இரு சக்கர வண்டியை நினைக்க கூடாது.
11. தேவை அற்ற இடங்களில், நடு ரோட்டில் அரசு வாகனம் நிற்கும், போலீசார் வாகனம் நிற்கும். நாமும் அதே போல இடையூறாக வண்டியை நிறுத்தி பேசுவது பின்னால் வரும் வாகனம் மோதுவதற்கு வாய்ப்பாக அமையும்.
12. குறுக்கு வழியில் அவசரமாக செல்ல வேண்டும் என்பதற்காக தெரியாத, புதிய வழித்தடத்தில் அதி வேகமாக செல்ல நினைத்து, அரசு ஊழியரால் "கடமையுணர்வுடன்" தோண்டப்பட்டுள்ள திடீர் குழிக்குள் விழாமல் கவனத்துடன் செல்ல வேண்டும்.
13. குடும்ப பிரச்னைகளை சாலையில் வண்டி ஓட்டும் போது நினைக்கக் கூடாது. சாலையில் வந்து குடும்பத்தை நினைத்தால் குடும்பத்தை விட்டு பிரிக்கப்படுவோம் என்பதே உண்மை.
இன்னமும் எத்தனையோ கரணங்கள் விபத்திற்கு காரணமாக இருந்தாலும், நம் குடும்பத்தை நினைத்து குடிக்காமல், போதை பழக்கமில்லாமல் நிதானமுடன் சென்று வருவது நம் ஆயுளுக்கு நாமே கொடுக்கும் காப்பீடு.
வேகமாகச் செல்வதை விட பாதுகாப்பாகச் செல்வதே முக்கியம். எதிர்பாராமல் நடப்பதே விபத்து என்று சொன்னாலும், விபத்தை நினைத்து பயத்துடன் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
வாகன நெரிசல் தவிர்க்க, விபத்தை தவிர்க்க நீதிமன்றம் விபத்திற்கு விடுதலை கொடுக்கும் விதமாக வாகனக்கட்டுப்பாடு, வேகக் கட்டுப்பாடு கொண்ட வாகன வடிவமைப்பு, சாலை ஆக்கிரமிப்பு அகற்றல், போக்குவரத்து மேம்பாட்டிற்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நியமனம் போன்ற நடவடிக்கைகளோடு நம் வண்டியின் வேகமும் குறைந்தால் விபத்திற்கு விடுதலை உறுதி.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
தங்கத்தில் ’மைக்ரோ ஹெல்மெட்’: இளைஞரின் வித்தியாச விழிப்பு உணர்வு முயற்சி!
கோவை: விபத்தினை தவிர்க்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, கால் கிராமில் மைக்ரோ அளவிலான ஹெல்மெட் தயாரித்து சாதனை படைத்துள்ளார் கோவையைச் சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி.
கோவை, செட்டி வீதி, அசோக் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். நகை பட்டறை தொழிலாளியான இவர், மைக்ரோ அளவில் நகைகளை வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டவர்.
ஏற்கனவே உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது 100 மில்லி கிராமில் உலக கோப்பையின் மாதிரியையும், கோவை கோணியம்மன் கோவில் திருவிழாவின் போது 2 கிராம் தங்கத்தில் கோணியம்மன் கோவில் தேர் மாதிரியையும், சி.எஸ்.ஐ. சர்ச் நூற்றாண்டு விழாவின்போது 5 கிராமில் சர்ச் மாதிரியையும் மைக்ரோ அளவில் வடிவமைத்து சாதனை படைத்தவர்.
தமிழக அரசு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், தற்போது மைக்ரோ அளவில் ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளார் மாரியப்பன். 250 மில்லி கிராமில் (கால் கிராம்) ஹெல்மெட் தயாரித்துள்ள இவர், அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வுக்காக இதை வடிவமைத்துள்ளதாக கூறுகிறார்.
இது தொடர்பாக மாரியப்பன் கூறுகையில், “மைக்ரோ அளவில் நகைகள் வடிவமைப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். அதன் காரணமாக அவ்வப்போது இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். அனைவரும் தரமான ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இதை வடிவமைத்துள்ளேன்” என்றார்.
4 முறை மைக்ரோ ஹெல்மெட் தயாரிக்க முயன்று, 5வது முறை இந்த ஹெல்மெட்டை மாரியப்பன் தயாரித்துள்ளார். இது போன்ற மைக்ரோ அளவிலான வடிவமைப்புகளை அதிகபட்சம் ஒரே நாளில் தயாரித்து விடுவேன் என்கிறார் மாரியப்பன்.
கோவை: விபத்தினை தவிர்க்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, கால் கிராமில் மைக்ரோ அளவிலான ஹெல்மெட் தயாரித்து சாதனை படைத்துள்ளார் கோவையைச் சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி.
கோவை, செட்டி வீதி, அசோக் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். நகை பட்டறை தொழிலாளியான இவர், மைக்ரோ அளவில் நகைகளை வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டவர்.
ஏற்கனவே உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது 100 மில்லி கிராமில் உலக கோப்பையின் மாதிரியையும், கோவை கோணியம்மன் கோவில் திருவிழாவின் போது 2 கிராம் தங்கத்தில் கோணியம்மன் கோவில் தேர் மாதிரியையும், சி.எஸ்.ஐ. சர்ச் நூற்றாண்டு விழாவின்போது 5 கிராமில் சர்ச் மாதிரியையும் மைக்ரோ அளவில் வடிவமைத்து சாதனை படைத்தவர்.
தமிழக அரசு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், தற்போது மைக்ரோ அளவில் ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளார் மாரியப்பன். 250 மில்லி கிராமில் (கால் கிராம்) ஹெல்மெட் தயாரித்துள்ள இவர், அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வுக்காக இதை வடிவமைத்துள்ளதாக கூறுகிறார்.
இது தொடர்பாக மாரியப்பன் கூறுகையில், “மைக்ரோ அளவில் நகைகள் வடிவமைப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். அதன் காரணமாக அவ்வப்போது இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். அனைவரும் தரமான ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இதை வடிவமைத்துள்ளேன்” என்றார்.
4 முறை மைக்ரோ ஹெல்மெட் தயாரிக்க முயன்று, 5வது முறை இந்த ஹெல்மெட்டை மாரியப்பன் தயாரித்துள்ளார். இது போன்ற மைக்ரோ அளவிலான வடிவமைப்புகளை அதிகபட்சம் ஒரே நாளில் தயாரித்து விடுவேன் என்கிறார் மாரியப்பன்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
'எதிர்வாதம் செய்யாமல் ஹெல்மெட் அணியுங்கள்!'- கமல் வேண்டுகோள்
சினிமாவில் சூப்பர் மேன் வானத்தில் பறக்கிறார். உங்களால பறக்க முடியுமா? சினிமாவைப் பார்த்து ரசிகர்கள் உயிரிழந்துவிடக்கூடாது என்பதற்காக, ஹெல்மெட் பற்றிய விழிப்பு உணர்வு கொள்ளும் விதமாக ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் கமல்ஹாசன்.
"இருசக்கர வாகனத்தில் போகும்போது ஹெல்மெட் போட்டுக்கொண்டு போகவேண்டும் என்று நாங்கள் கூறினால், 'சினிமாவில் நீங்க போடுவதில்லையே...?' என்று எதிர்வாதமாக வைக்கப்படுகிறது. சர்க்கஸ் பார்க்கும் போது பார்ல தொங்குவாங்க. அதுமாதிரி வீட்டு பைப்புகளில் செய்து பார்க்க முடியாது.
அதுமாதிரி சினிமாவில் நடிப்பவர்களுக்கு அருகில் எத்தனை பேர் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள் என்று உங்களுக்கு படத்தில் தெரியாது. ஆனால் அந்த பாதுகாப்புடன்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதையெல்லாம் பார்த்துவிட்டு, நீங்கள் பாதுகாப்பில்லாமல், தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் பைக் ஓட்ட வேண்டாம். சினிமாவில் சூப்பர் மேன் பறக்குறார். உங்களால முடியுமா? அதுமாதிரிதான் இதுவும். தயவு செய்து ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டுங்க. உங்க உயிரை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
சினிமாவில் சூப்பர் மேன் வானத்தில் பறக்கிறார். உங்களால பறக்க முடியுமா? சினிமாவைப் பார்த்து ரசிகர்கள் உயிரிழந்துவிடக்கூடாது என்பதற்காக, ஹெல்மெட் பற்றிய விழிப்பு உணர்வு கொள்ளும் விதமாக ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் கமல்ஹாசன்.
"இருசக்கர வாகனத்தில் போகும்போது ஹெல்மெட் போட்டுக்கொண்டு போகவேண்டும் என்று நாங்கள் கூறினால், 'சினிமாவில் நீங்க போடுவதில்லையே...?' என்று எதிர்வாதமாக வைக்கப்படுகிறது. சர்க்கஸ் பார்க்கும் போது பார்ல தொங்குவாங்க. அதுமாதிரி வீட்டு பைப்புகளில் செய்து பார்க்க முடியாது.
அதுமாதிரி சினிமாவில் நடிப்பவர்களுக்கு அருகில் எத்தனை பேர் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள் என்று உங்களுக்கு படத்தில் தெரியாது. ஆனால் அந்த பாதுகாப்புடன்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதையெல்லாம் பார்த்துவிட்டு, நீங்கள் பாதுகாப்பில்லாமல், தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் பைக் ஓட்ட வேண்டாம். சினிமாவில் சூப்பர் மேன் பறக்குறார். உங்களால முடியுமா? அதுமாதிரிதான் இதுவும். தயவு செய்து ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டுங்க. உங்க உயிரை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
எங்க போனாலும் ஹெல்மட் ஹெல்மட் ஹெல்மட்.....மிடியல!
எங்க போனாலும் ஹெல்மெட்… ஹெல்மெட்… ஹெல்மெட்…டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்கா ஏகாதிபத்தியத்தையும், இந்தியா பொருளாதாரத்தையும் பேசிக் கொண்டிருந்த பெரிய பெரிய மகான்கள் கூட இப்பொழுது ஹெல்மெட்டை பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க.
இது போதாதுன்னு வாட்ஸ் அப்- ல இவங்க பண்ற அலம்பல் அய்யய்யய்யோ…. "15,000 ரூபாய் லேப்டாப்ப இலவசமா கொடுக்கற கவர்மெண்ட், ஹெல்மெட்டை இலவசமா கொடுக்காதா" ன்னு மெஸேஜ் பண்ணியே சாவடிக்கிறானுக! கவர்மெண்ட் ஊட்டிவிட்டாதான் சாப்பிடுவேன்னு வருங்காலத்துல சொன்னாலும் சொல்லுவாங்க போல?!
எந்த ஒரு சட்டம் வந்தாலும் மொதல்ல பாதிக்கப்படுறது நம்ம இளைஞர் பட்டாளம்தான். ஏற்கனவே தொப்பையை குறைக்கணும்னு படாதபாடு படுறாங்க!, இதுல சொட்ட வேறயா? கூடிய சீக்கிரம் அமேசான் காடுகளில் விளையக்கூடிய மூலிகை எல்லாத்தையும் நம்ம பயகதான் காலி பண்ணுவாங்க போல.
இந்த ஹெல்மெட் கட்டாயத்துல ரொம்பவே பாதிக்கப்படுறது மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ்களும், மார்க்கெட்டிங் பீல்டுல ஒர்க் பண்றவங்களும்தான். ஏற்கனவே பார்க்கிங்க்கு இடம் கிடைக்காம, வெயில்ல வெந்தும் வேகாத ஆப்பாயில் மாதிரி கடுகடுத்து, தெருவுக்கு தெரு, கடைக்கு கடை கையில பேக்கு, பைல்லுன்னு ஏறி இறங்குவாங்க. இப்ப இதுல புள்ளதாச்சி மாதிரி ஹெல்மெட்டும் சேர்ந்து போச்சு!
இந்த சட்டத்துலயும் பொண்ணுங்க கிரேட் எஸ்கேப்! ஹெல்மேட் கையில எடுத்துட்டு போறது சிரமமான விஷயம் கிடையாது, வழக்கம்போல எங்க போனாலும் அவிங்களோட ஸ்கூட்டி டிக்கியில ஹெல்மெட்ட வெச்சிட்டு போயிருவாங்க, 18 முதல் 36 வயதினிலே உள்ள ராசாத்திக்கள் பெட்ரோல் அடிக்கறப்ப ஒரு அலம்பல் பண்ணுவாங்க பாருங்க,....
வண்டிய நிறுத்தி சைடு ஸ்டேன்டு போட்டு, பெரிய பேக் எடுத்து, அதுல ஒரு பர்ஸ எடுத்து, அதுக்குள்ள ஒரு குட்டி பர்ஸ எடுத்து காசு கொடுத்து, சில்லறையை வாங்கி, மறுபடியும் அத பேக்ல வெச்சிட்டு, சைடு ஸ்டேண்டு எடுத்து ஜங்குன்னு உட்கார்ந்து, வண்டிய ஸ்டார்ட் பண்ணி நமக்கு வழி விடுறதுக்குள்ள உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…… இதுல இப்ப ஹெல்மெட்ட வெச்சி வேற வெறியேத்துவாங்க! நமக்கு சோடா குடிக்கறப்ப கூட நம்ம மூஞ்சி அப்படி இருக்காது பாஸ்!
இந்த சட்டத்துல பெரிய கடுப்பு என்னன்னா? பின்னாடி இருக்கறவிங்களும் ஹெல்மெட் போடணும், சும்மாவே லிப்ட் தரமாட்டாங்க. இனி நடந்து போறவிங்களும் ஒரு ஹெல்மெட்ட கையில வெச்சுக்கணும் போல ஹும்.. வீட்டுக்கு தெரியாம டாவடிக்கிற எல்லாருக்கும் உண்மை யிலேயே இந்த சட்டம் ஒரு வரப்பிரசாதம்!
ஏற்கனவே முட்டுச் சந்துகளிலும், ஸ்பீடு பிரேக்குகளிலும் அயராமல் உழைக்கும் நம் காவல்துறைக்கு, 5 -ம் தேதி ஆரம்பிக்க வேண்டிய குருப்பெயர்ச்சி பலன்கள் 1-ம் தேதியே ஆரம்பிக்குது, சம்பள பணம் இனி அக்கௌண்ட் டில் அப்படியே இருக்கும். ஏன்னா காது கிழிய கத்தினாலும் எப்படியும் நூத்துக்கு பத்து பேரு ஹெல்மெட் போடாமத்தான் வரப்போறாய்ங்க.
நம்மாளுக டிசைன் அப்படி!
எங்க போனாலும் ஹெல்மெட்… ஹெல்மெட்… ஹெல்மெட்…டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்கா ஏகாதிபத்தியத்தையும், இந்தியா பொருளாதாரத்தையும் பேசிக் கொண்டிருந்த பெரிய பெரிய மகான்கள் கூட இப்பொழுது ஹெல்மெட்டை பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க.
இது போதாதுன்னு வாட்ஸ் அப்- ல இவங்க பண்ற அலம்பல் அய்யய்யய்யோ…. "15,000 ரூபாய் லேப்டாப்ப இலவசமா கொடுக்கற கவர்மெண்ட், ஹெல்மெட்டை இலவசமா கொடுக்காதா" ன்னு மெஸேஜ் பண்ணியே சாவடிக்கிறானுக! கவர்மெண்ட் ஊட்டிவிட்டாதான் சாப்பிடுவேன்னு வருங்காலத்துல சொன்னாலும் சொல்லுவாங்க போல?!
எந்த ஒரு சட்டம் வந்தாலும் மொதல்ல பாதிக்கப்படுறது நம்ம இளைஞர் பட்டாளம்தான். ஏற்கனவே தொப்பையை குறைக்கணும்னு படாதபாடு படுறாங்க!, இதுல சொட்ட வேறயா? கூடிய சீக்கிரம் அமேசான் காடுகளில் விளையக்கூடிய மூலிகை எல்லாத்தையும் நம்ம பயகதான் காலி பண்ணுவாங்க போல.
இந்த ஹெல்மெட் கட்டாயத்துல ரொம்பவே பாதிக்கப்படுறது மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ்களும், மார்க்கெட்டிங் பீல்டுல ஒர்க் பண்றவங்களும்தான். ஏற்கனவே பார்க்கிங்க்கு இடம் கிடைக்காம, வெயில்ல வெந்தும் வேகாத ஆப்பாயில் மாதிரி கடுகடுத்து, தெருவுக்கு தெரு, கடைக்கு கடை கையில பேக்கு, பைல்லுன்னு ஏறி இறங்குவாங்க. இப்ப இதுல புள்ளதாச்சி மாதிரி ஹெல்மெட்டும் சேர்ந்து போச்சு!
இந்த சட்டத்துலயும் பொண்ணுங்க கிரேட் எஸ்கேப்! ஹெல்மேட் கையில எடுத்துட்டு போறது சிரமமான விஷயம் கிடையாது, வழக்கம்போல எங்க போனாலும் அவிங்களோட ஸ்கூட்டி டிக்கியில ஹெல்மெட்ட வெச்சிட்டு போயிருவாங்க, 18 முதல் 36 வயதினிலே உள்ள ராசாத்திக்கள் பெட்ரோல் அடிக்கறப்ப ஒரு அலம்பல் பண்ணுவாங்க பாருங்க,....
வண்டிய நிறுத்தி சைடு ஸ்டேன்டு போட்டு, பெரிய பேக் எடுத்து, அதுல ஒரு பர்ஸ எடுத்து, அதுக்குள்ள ஒரு குட்டி பர்ஸ எடுத்து காசு கொடுத்து, சில்லறையை வாங்கி, மறுபடியும் அத பேக்ல வெச்சிட்டு, சைடு ஸ்டேண்டு எடுத்து ஜங்குன்னு உட்கார்ந்து, வண்டிய ஸ்டார்ட் பண்ணி நமக்கு வழி விடுறதுக்குள்ள உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…… இதுல இப்ப ஹெல்மெட்ட வெச்சி வேற வெறியேத்துவாங்க! நமக்கு சோடா குடிக்கறப்ப கூட நம்ம மூஞ்சி அப்படி இருக்காது பாஸ்!
இந்த சட்டத்துல பெரிய கடுப்பு என்னன்னா? பின்னாடி இருக்கறவிங்களும் ஹெல்மெட் போடணும், சும்மாவே லிப்ட் தரமாட்டாங்க. இனி நடந்து போறவிங்களும் ஒரு ஹெல்மெட்ட கையில வெச்சுக்கணும் போல ஹும்.. வீட்டுக்கு தெரியாம டாவடிக்கிற எல்லாருக்கும் உண்மை யிலேயே இந்த சட்டம் ஒரு வரப்பிரசாதம்!
ஏற்கனவே முட்டுச் சந்துகளிலும், ஸ்பீடு பிரேக்குகளிலும் அயராமல் உழைக்கும் நம் காவல்துறைக்கு, 5 -ம் தேதி ஆரம்பிக்க வேண்டிய குருப்பெயர்ச்சி பலன்கள் 1-ம் தேதியே ஆரம்பிக்குது, சம்பள பணம் இனி அக்கௌண்ட் டில் அப்படியே இருக்கும். ஏன்னா காது கிழிய கத்தினாலும் எப்படியும் நூத்துக்கு பத்து பேரு ஹெல்மெட் போடாமத்தான் வரப்போறாய்ங்க.
நம்மாளுக டிசைன் அப்படி!
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
'அந்த இன்னொரு ஹெல்மெட் தாண்ணே... இது!'
ஹெல்மெட் பற்றி நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவிக்க ஹெல்மட் கடைகள் வாகனங்கள் நிறுத்தமுடியாத அளவுக்கு கூட்டத்தால் சிக்கித் திணறுகிறது. இந்த நேரத்தில் செந்திலுக்கு ஹெல்மட் பற்றி தெரியாமல் விழிபிதுங்க கவுண்டமணியிடம் ஓடிவருகிறார்.
அப்போது அவர்களுக்கிடையில் நிகழும் ( கற்பனை) உரையாடல் இது....
செந்தில் கவுண்டமணியிடம்: அண்ணே, என்னண்ணே எல்லாரும் ஹெல்மெட் ஹெல்மெட் னு பேசிக்கிறாங்க....கிளாஸ் மேட் தெரியும் ,ரூம் மேட் தெரியும் ஹெல்மெட் தெரியலியே, அதை காசு கொடுத்து வாங்கணுமா... ?
கவுண்டமணி : அடேய் ,ஹெல்மெட் தலையா! சுருக்கமா சொல்றேன் கேட்டுக்கோ. நீ உன் 2 வீலரில் போகும்போது இதை மண்டையில போட்டுகிட்டாதான் நீ மண்டைய போடாம இருப்ப. நெக்ஸ்ட் கொசின்?
செந்தில் : விளங்கிடுச்சு அண்ணே, ஆனா இதை காசு கொடுத்து வாங்கணுமுன்னு சொல்றாங்களே ,அதுதான் நம்ம பரம்பரையிலே கிடையாதே.. என்னண்ணே பண்றது?
கவுண்டமணி : யு டோன்ட் வொர்ரி ஓசி கிராக்கி...! இலவச கிரைண்டர், மிக்சி மாதிரி அம்மா இலவச ஹெல்மெட் திட்டம் வருதான்னு பார்க்கலாம் கண்ணு.
செந்தில் : அண்ணே ,இதனால வேற என்ன யூஸ் அண்ணே?
கவுண்டமணி : டே டூ வீலர் இஞ்சின் தலையா, இந்த ஹெல்மெட் போடுறதால இப்போ உன் கட்சித்தலைவர் உன் மண்டையிலே குட்டுறதை இனிமே நிப்பாட்டிடுவார். இன்னொரு யூஸ் கேட்டுக்கோ, திருப்பி வெச்சா குப்பை கூடையா வைச்சுக்கலாம். எல்லாத்தையும் விட பெரிய விஷயம் இனிமே உன் மண்டையில என்ன இருக்குன்னு ஒரு பய உன்னை கேக்க மாட்டான். அதைவிட முக்கியமான விஷயம், இனி நீ யார்ட்டவேண்டுமானாலும் கடன் வாங்கிட்டு கடன்கொடுத்தவன் வீட்டுப்பக்கம் தைரியமா சுத்தலாம்.
செந்தில் : புல்லரிக்குது அண்ணே. .பணம் கொடுங்க, நான் உங்களுக்கு ஒன்னு, உங்க பொண்டாட்டிக்கு ஒண்ணுன்னு, 2 வாங்கியாறேன் . (பணத்தை வாங்கிகொண்டு செந்தில் ஒரு ஹெல்மெட் வாங்கி கவுண்டமணியிடம் நீட்டுகிறார்)
கவுண்டமணி : ஏண்டா மிஸ்ஸிங் மூளையா, நான் 2 ஹெல்மெட் வாங்க பணம் கொடுத்தேன். ஒண்ணு இங்க இருக்கு; இன்னொன்னு எங்கேடா ?
செந்தில் :அந்த இன்னொன்னுதாண்ணே இது.
(' அடேய்...!' என்றபடியே கவுண்டமணி அடிக்க வர... செந்தில் ஓடுகிறார்.)
ஹெல்மெட் பற்றி நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவிக்க ஹெல்மட் கடைகள் வாகனங்கள் நிறுத்தமுடியாத அளவுக்கு கூட்டத்தால் சிக்கித் திணறுகிறது. இந்த நேரத்தில் செந்திலுக்கு ஹெல்மட் பற்றி தெரியாமல் விழிபிதுங்க கவுண்டமணியிடம் ஓடிவருகிறார்.
அப்போது அவர்களுக்கிடையில் நிகழும் ( கற்பனை) உரையாடல் இது....
செந்தில் கவுண்டமணியிடம்: அண்ணே, என்னண்ணே எல்லாரும் ஹெல்மெட் ஹெல்மெட் னு பேசிக்கிறாங்க....கிளாஸ் மேட் தெரியும் ,ரூம் மேட் தெரியும் ஹெல்மெட் தெரியலியே, அதை காசு கொடுத்து வாங்கணுமா... ?
கவுண்டமணி : அடேய் ,ஹெல்மெட் தலையா! சுருக்கமா சொல்றேன் கேட்டுக்கோ. நீ உன் 2 வீலரில் போகும்போது இதை மண்டையில போட்டுகிட்டாதான் நீ மண்டைய போடாம இருப்ப. நெக்ஸ்ட் கொசின்?
செந்தில் : விளங்கிடுச்சு அண்ணே, ஆனா இதை காசு கொடுத்து வாங்கணுமுன்னு சொல்றாங்களே ,அதுதான் நம்ம பரம்பரையிலே கிடையாதே.. என்னண்ணே பண்றது?
கவுண்டமணி : யு டோன்ட் வொர்ரி ஓசி கிராக்கி...! இலவச கிரைண்டர், மிக்சி மாதிரி அம்மா இலவச ஹெல்மெட் திட்டம் வருதான்னு பார்க்கலாம் கண்ணு.
செந்தில் : அண்ணே ,இதனால வேற என்ன யூஸ் அண்ணே?
கவுண்டமணி : டே டூ வீலர் இஞ்சின் தலையா, இந்த ஹெல்மெட் போடுறதால இப்போ உன் கட்சித்தலைவர் உன் மண்டையிலே குட்டுறதை இனிமே நிப்பாட்டிடுவார். இன்னொரு யூஸ் கேட்டுக்கோ, திருப்பி வெச்சா குப்பை கூடையா வைச்சுக்கலாம். எல்லாத்தையும் விட பெரிய விஷயம் இனிமே உன் மண்டையில என்ன இருக்குன்னு ஒரு பய உன்னை கேக்க மாட்டான். அதைவிட முக்கியமான விஷயம், இனி நீ யார்ட்டவேண்டுமானாலும் கடன் வாங்கிட்டு கடன்கொடுத்தவன் வீட்டுப்பக்கம் தைரியமா சுத்தலாம்.
செந்தில் : புல்லரிக்குது அண்ணே. .பணம் கொடுங்க, நான் உங்களுக்கு ஒன்னு, உங்க பொண்டாட்டிக்கு ஒண்ணுன்னு, 2 வாங்கியாறேன் . (பணத்தை வாங்கிகொண்டு செந்தில் ஒரு ஹெல்மெட் வாங்கி கவுண்டமணியிடம் நீட்டுகிறார்)
கவுண்டமணி : ஏண்டா மிஸ்ஸிங் மூளையா, நான் 2 ஹெல்மெட் வாங்க பணம் கொடுத்தேன். ஒண்ணு இங்க இருக்கு; இன்னொன்னு எங்கேடா ?
செந்தில் :அந்த இன்னொன்னுதாண்ணே இது.
(' அடேய்...!' என்றபடியே கவுண்டமணி அடிக்க வர... செந்தில் ஓடுகிறார்.)
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
பைக் ஓட்டிய குரங்கு விபத்தில் சிக்கியது... ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பியது!
இரு சக்கர வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்பட்டால், விபத்தில் சிக்குபவர்களை காப்பதில் ஹெல்மெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு. விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலில் தலையில்தான் அடிபட வாய்ப்பு அதிகம். அதனை தடுப்பது ஹெல்மெட்தான்.
எனவே இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அவசியம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். இங்கே குட்டி பைக்கை ஓட்டும் குரங்கு ஒன்று விபத்தில் சிக்குகிறது. ஆனால் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அந்த குரங்கு அடிபடாமல் தப்பியது. எனவே ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
இந்தோனேஷியாவை சேர்ந்த மார்வன் கார்னியல் என்பவர் தனது ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்திருந்த வீடியோ காட்சி இது.
இரு சக்கர வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்பட்டால், விபத்தில் சிக்குபவர்களை காப்பதில் ஹெல்மெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு. விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலில் தலையில்தான் அடிபட வாய்ப்பு அதிகம். அதனை தடுப்பது ஹெல்மெட்தான்.
எனவே இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அவசியம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். இங்கே குட்டி பைக்கை ஓட்டும் குரங்கு ஒன்று விபத்தில் சிக்குகிறது. ஆனால் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அந்த குரங்கு அடிபடாமல் தப்பியது. எனவே ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
இந்தோனேஷியாவை சேர்ந்த மார்வன் கார்னியல் என்பவர் தனது ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்திருந்த வீடியோ காட்சி இது.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
கட்டாய ஹெல்மெட்: நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் கேள்விகள்!
ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. தவறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து என்ற கடுமையான உத்தரவும் மக்களை திசை திருப்பியும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. பள்ளிக் கல்விக்கே பல ஆயிரங்களை இழந்து நிம்மதியைத் தொலைத்த மக்கள் மீண்டும் ஹெல்மெட் மூலம் நிம்மதி இழக்கின்றனர்.
நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், சட்டத்துக்கு உட்பட்டே வாழ்கிறோம் என்று சொல்லும் நடுத்தர வர்க்கம் அதிகம் உபயோகிக்கும் வாகனமான இரு சக்கர வாகனத்திற்கு இவ்வளவு கட்டுப்பாடா? இரு சக்கர வாகனத்தில் இருந்து கடன் வாங்கியாவது கார் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கார் விற்பனை மேலும் உயரும். இதனால், மேலும் போக்குவரத்து சிக்கல் ஏற்படும் எனபதே உண்மை.
குருப்பெயர்ச்சி ஜூலை 12. ஆனால், போக்குவரத்து போலீசுக்கு குரு பகவான் ஜூலை 1 முதலே பண மழையில் மிதக்க விடப்போகிறார். தீர்ப்பு சொன்ன நாளில் இருந்தே எப்போது ஜூலை 1 வரும் என போக்குவரத்து போலீசார் அபராத 'வசூல் கடமை' செய்ய தயாராகி வருகின்றனர். வண்டிச் சாவி பறிப்பு, ஒருமையில் தரக்குறைவாக பேச்சு, முதியவர்களிடம் வீரம், தீவிரவாதியிடம் காட்ட வேண்டிய வீரத்தை அப்பாவிகளிடம் காட்டுவது என போலீஸ் 'சாதனைகள்' தொடர இருக்கின்ற நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு சில கேள்விகள்.
1. சுமார் 1.5 கோடி இரு சக்கர வாகனங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் 25% சென்னையில் மட்டும் இயக்கப்படுகிறது. 2013 டிசம்பர் ஆய்வறிக்கையின் படி பேருந்தால் 2000 பேர் இறந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.19%. சரக்கு லாரிகள் மூலம் சுமார் 3000 பேர் இறந்துள்ளனர். இதர கார், ஜீப், டாக்ஸி மூலமாக 3708 பேர் இறந்துள்ளனர். மூன்று சக்கர வாகனம் மூலம் 415 பேரும், 1.5 கோடிகள் உள்ள இரு சக்கர வாகனம் மூலம் 4467 பேர் இறந்துள்ளனர். ஆக இறப்பு விகிதம் 0.031% மட்டுமே. வாகன விபத்தில், எண்ணிக்கையைப் பொறுத்தவரை இரு சக்கர வாகனம் அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் குறைவு தான் என அறிய முடிகிறது. இதில் எப்படி இரு சக்கர வாகனம் மீது மட்டுமே குறை சொல்ல முடியும்? மேலும் இரு சக்கர வாகனம் மீது மோதும் கனரக வாகனத்தின் அத்துமீறலை ஏன் கண்டுகொள்ளவில்லை?
2. வாகன ஓட்டிகள் மீது அக்கறை கொண்ட நீதிமன்றம், விபத்திற்கு காரணமாகும் டாஸ்மாக் சரக்கை ஏன் ஒழிக்க உத்தரவு போடக் கூடாது? டாஸ்மாக்கை யாராலும் நெருங்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. குறைந்த பட்சம் டாஸ்மாக் கடை முன் இரு சக்கர வாகனம், ஏன் எந்தவிதமான வாகனமும் நிறுத்த தடை விதிக்க முடியுமா? குடித்து விட்டு வண்டியை ஒட்டி போலீசுக்கு, சட்டத்திற்கு பயப்படாமல் தைரியமாக உள்ளவர்களில், இந்த நீதிமன்றம் இதுவரை எத்தனைப் பேர் ஓட்டுனர் உரிமத்தை பறித்துள்ளது? ஒரு கையில் மதுவுடன் ஓட்டிய ஆம்னி பஸ் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை?
3. ஆண்டு 2005 முதல் 2015 மே மாதம் வரை 1.80 லட்சம் ஆட்டோக்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு நெரிசலான சாலைக்கு லட்சக்கணக்கான ஆடோக்கள் அனுமதியை நீதிமன்றம் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும்? அதிலும் ஹெல்மெட் சட்டம் கடுமையாக இருந்த 2010-11ல் மட்டும் 60,000 ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டு தமிழக சாலையை ஸ்தம்பிக்க வைக்க களமிறக்கப்பட்டுள்ளன.
4. 2000-2013 வரை தமிழக அரசு போக்குவரத்து வாகனங்கள் மூலமாக சுமார் 20,672 கோடிகள் வசூல் செய்துள்ளன. ஆண்டுக்காண்டு வாகனப் பதிவின் மூலமாக, சாலை வரி மூலமாக பல கோடிகள் வருமானம் பார்க்கும் அரசு சாலையின் நெரிசலை கண்டுகொள்ளாமல் வாகனப்போட்டியை ஏற்படுத்துவது பற்றி அரசிடம் நீதிமன்றம் கேள்விகேட்காதது ஏன்? தமிழகத்தில் நடக்கும் வாகனப்பதிவில் 20% சென்னையில் மட்டும் நடக்கிறது.
5. பொதுப்பணித்துறையில் 45% கமிஷன் தொகை போக மீதமுள்ள 55% தொகையில் போடப்பட்ட சாலைகள் ஐந்தே நாளில் அரை மணி நேர மழைக்கு மறைந்து போன சாலை என 'கின்னஸ்' சாதனைக்கு அனுப்பும் அளவில் ஊழல் மூலம் போடப்பட்ட தரமற்ற சாலையால் விபத்து விகிதம் கூடும் நிலையில் நீதிமன்றம் ஏன் கண்டுகொள்ளவில்லை?
6. 1993 முதல் 2013 வரை சுமார் 2 லட்சம் பேர் தமிழக சாலை விபத்தில் இறந்துள்ளனர். மோசமான, குறுகலான சாலை வசதி விபத்தின் எண்ணிக்கை உயர்வதால் புதிய வாகனப் பதிவை நீதிமன்றம் நிறுத்த முடியுமா? இந்தியாவில் அதிகமான கார் உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை 4வது இடத்தில் உள்ளது. அதாவது, 100 பேரில் 43 பேர் கார் வைத்துள்ளார்கள். கோவை 9வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பெருகி வரும் கார் கலாசாரத்திற்கு, நீதிமன்றம் என்ன பதில் தர முடியும்?
7. இருசக்கர வாகன ஓட்டி தலைக்கவசம் போட்டு ஒட்டியும் நெஞ்சில் ஏறி உயிர் பறிக்கும் கனரக வாகனத்தின் வேகத்திற்கு நீதிமன்றம் என்ன பதில் சொல்ல முடியும்? தலைக்கவசம் போட்டும் விபத்தில் இறந்தால் புல்லெட் ப்ரூப் போட வேண்டிய நிலை வருமா?
8. அதிகமான நபர்களை ஏற்றிச் சென்று போக்குவரத்து விதி மீறும் அரசுப்பேருந்தால் 13% விபத்துக்கள் நடந்துள்ளது. அரசு பேருந்தின் விபத்து தடுப்பு பற்றி நீதிமன்றம் என்ன தீர்ப்பு தரப்போகிறது? போக்குவரத்து விதிப்படி அரசு பேருந்து ஆட்களை ஏற்றிச் செல்கின்றதா? படியில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் நிலை?
9. 50 கி.மீ.க்கு மேல் வேகமாச் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை நீதிமன்றம் ஏன் தடை செய்ய முன்வரவில்லை? அதிவேக பைக்குகள் தயாரிக்கும் பத்து நிறுவனத்தை நீதிமன்றம் 50 கி.மீ.க்கு மட்டுமே வாகனத்தை வடிவமைத்து வேக கட்டுப்பாடு கொண்டு வர சட்டம் இயற்ற முடியுமா? மீறினால் வாகனத்தை பறிமுதல் செய்வதாக அதிரடி உத்தரவிட முடியுமா?
10. இரு சக்கர வாகனத்திற்கு அடுத்தபடியாக, லாரி போன்ற கனரக வாகனங்கள் வருகின்றன. நின்ற லாரி மீது மோதிய வாகனம் என்ற மரணச் செய்தி தினமும் வருகிறது. குடும்பம் குடும்பமாக விபத்தில் கொல்லப்படும் அவலத்திற்கு என்ன தீர்வு?
11. போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும் ஊர்வலம் போன்ற இரு நூறு கார்களில் பவனி வரும் அரசியல்வாதிகளை நீதிமன்றம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. அவர்களை முறைப்படுத்த முடியுமா? செயற்கையான வாகன நெரிசலை ஏற்படுத்தி விட்டு நம்மை பாதுகாப்பாக இருக்கச் சொல்வது ஏன்?
12. பைக்கின் வேகத்தை இஷ்டப்படி வாகன நிறுவனம் வடிவமைக்கும், ஷேர் ஆட்டோ எட்டு போட்டு ஓடும், தரமற்ற சாலையை அரசு போடும், நடுரோட்டில் மாடுகள் ஓடும், குடி போதையில் தனியார் பேருந்து ஓடும், ஆனால், இரு சக்கர வாகனம் ஓட்டுவோரை மட்டும் நீதிமன்றம் ஹெல்மெட் போட உட்படுத்தும். உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க ஹெல்மெட் என்றால், சாலையின் பாதுகாப்பிற்கு என்ன சட்டம்? பல்வேறு அடிப்படையான காரணிகளை கண்டுகொள்ளாமல் இருசக்கர வாகன ஓட்டிகளை மட்டுமே குறி வைப்பது ஏன்?
13. தரமில்லாத, நெரிசலான, பாதுகாப்பு குறைவான சாலையில், நாம் வண்டி ஓட்ட ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஹெல்மெட் நம் ஆயுளை எப்படி தீர்மானிக்க முடியும்? விபத்து ஏற்பட்டால் தலைக்கு மட்டும் ஹெல்மெட் உத்தரவாதம் என்றால் பிற உறுப்புகளில் அடிபட்டு செத்துபோக நேர்ந்தால்?
14. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் 25% விபத்தில் இறக்கின்றனர் என்றால், மீதமுள்ள 75% விபத்து பிற வாகனங்களால ஏற்படுவதற்கு நீதிமன்றம் என்ன பாதுகாப்பு கவசம் அளிக்க முடியும். கொத்துக் கொத்தாய் செத்துப்போகும் பஸ் பயணிகள் பாதுகாப்பு பற்றி நீதிமன்றம் கேள்வி கேட்காதது ஏன்? ஆக, விபத்து நேர்வதற்கு அசுர வேகம், அலட்சியம், குடிபோதை, தரமற்ற சாலையே காரணம்.
15. தேசிய குற்றப் புலனாய்வு (NCRB) அறிக்கையின் படி சென்ற வருடம் இந்தியாவில் 11,571 பாதசாரிகள் விபத்தில் இறந்துள்ளனர். பாதசாரிகளுக்கு என்ன பாதுகாப்பு கவசம் போடச் சொல்ல முடியும்? நகர் எல்லைக்குள் மட்டுமே விபத்து விகிதம் அதிகம் என்பதால் அரசு, நீதிமன்றம் பொதுமக்கள் உயிர் காக்க நகரில் இடங்களை கையகப்படுத்தி சாலை விரிவாக்கத்திற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
தலைக்கவசம் உயிர் காக்கும்(?) என்று சொல்வது நியாயமாக இருந்தாலும், விபத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தலைக்கவசம் மூலம் உயிருக்கு தீர்வு என்று சொல்வது, தட்டு நிறைய விஷமுள்ள சாப்பாடு சாப்பிட வைத்து பக்கத்தில் 108 வண்டியை நிறுத்திய கதை தான், நம் தலைக்கவசம் உத்தரவு என்றால் மிகையாகாது. தலைக்கவசம் இல்லாதவர்களுக்கு அபராதம் போட ஜீப்பில் வரும் போலீசார் சீட் பெல்ட் அணியவில்லை, எஸ்.ஐ. இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடவில்லை என்பதை யார் தான் சொல்ல முடியும்?
இதற்கு முன் இதேபோல ஹெல்மெட் சட்டம் போட்டபோது கூட விபத்துக்கள், சாவுகள் குறையவில்லை எனபதே உண்மை. இவ்வளவு வருடமாக ஹெல்மெட் விழிப்புணர்வு கொடுத்தும் விபத்து குறையாமல் இருக்க காரணம் வாகன நெரிசல், வேகமே. ஹெல்மெட் போட்டதால் விபத்து குறைவு என்பதை விட, அபராத வசூல் வேட்டையில் போலீஸ் பணியில் சிறப்புடன் களம் இறங்கியதால் வாகன நெரிசல் இல்லாமல் விபத்துக்கள் குறைந்தது என்பதே உண்மை.
வாகன நெருக்கம் (டென்சிட்டி) இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிகம். அதற்கு அடுத்தபடியாக புனே, மும்பை உள்ளது. சென்னையை விட பல மடங்கு பெரிய நகரங்களான டெல்லி, மும்பையில் வாகன நெருக்கம் குறைவு. சென்னையை விட டெல்லியில் வாகனத்தின் மடங்கு இரு மடங்கு அதிகம். ஆனால், வாகன நெரிசல் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விபத்திற்கு விடுதலை கொடுக்காமல் விபத்தை தடுப்பதற்கு தேவையான தரமான நெரிசலற்ற சாலை வசதி, வாகன பெருக்கத் தடை, குடிபோதை கலாசார ஒழிப்பு, அதிவேக வாகனத் தடை, கண்ணைப்பறிக்கும் ஹெட் லைட்டுகள் தடை என விபத்து தடுப்பு நடவடிக்கை எடுப்பதையே நீதிமன்றத்திடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. தவறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து என்ற கடுமையான உத்தரவும் மக்களை திசை திருப்பியும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. பள்ளிக் கல்விக்கே பல ஆயிரங்களை இழந்து நிம்மதியைத் தொலைத்த மக்கள் மீண்டும் ஹெல்மெட் மூலம் நிம்மதி இழக்கின்றனர்.
நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், சட்டத்துக்கு உட்பட்டே வாழ்கிறோம் என்று சொல்லும் நடுத்தர வர்க்கம் அதிகம் உபயோகிக்கும் வாகனமான இரு சக்கர வாகனத்திற்கு இவ்வளவு கட்டுப்பாடா? இரு சக்கர வாகனத்தில் இருந்து கடன் வாங்கியாவது கார் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கார் விற்பனை மேலும் உயரும். இதனால், மேலும் போக்குவரத்து சிக்கல் ஏற்படும் எனபதே உண்மை.
குருப்பெயர்ச்சி ஜூலை 12. ஆனால், போக்குவரத்து போலீசுக்கு குரு பகவான் ஜூலை 1 முதலே பண மழையில் மிதக்க விடப்போகிறார். தீர்ப்பு சொன்ன நாளில் இருந்தே எப்போது ஜூலை 1 வரும் என போக்குவரத்து போலீசார் அபராத 'வசூல் கடமை' செய்ய தயாராகி வருகின்றனர். வண்டிச் சாவி பறிப்பு, ஒருமையில் தரக்குறைவாக பேச்சு, முதியவர்களிடம் வீரம், தீவிரவாதியிடம் காட்ட வேண்டிய வீரத்தை அப்பாவிகளிடம் காட்டுவது என போலீஸ் 'சாதனைகள்' தொடர இருக்கின்ற நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு சில கேள்விகள்.
1. சுமார் 1.5 கோடி இரு சக்கர வாகனங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் 25% சென்னையில் மட்டும் இயக்கப்படுகிறது. 2013 டிசம்பர் ஆய்வறிக்கையின் படி பேருந்தால் 2000 பேர் இறந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.19%. சரக்கு லாரிகள் மூலம் சுமார் 3000 பேர் இறந்துள்ளனர். இதர கார், ஜீப், டாக்ஸி மூலமாக 3708 பேர் இறந்துள்ளனர். மூன்று சக்கர வாகனம் மூலம் 415 பேரும், 1.5 கோடிகள் உள்ள இரு சக்கர வாகனம் மூலம் 4467 பேர் இறந்துள்ளனர். ஆக இறப்பு விகிதம் 0.031% மட்டுமே. வாகன விபத்தில், எண்ணிக்கையைப் பொறுத்தவரை இரு சக்கர வாகனம் அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் குறைவு தான் என அறிய முடிகிறது. இதில் எப்படி இரு சக்கர வாகனம் மீது மட்டுமே குறை சொல்ல முடியும்? மேலும் இரு சக்கர வாகனம் மீது மோதும் கனரக வாகனத்தின் அத்துமீறலை ஏன் கண்டுகொள்ளவில்லை?
2. வாகன ஓட்டிகள் மீது அக்கறை கொண்ட நீதிமன்றம், விபத்திற்கு காரணமாகும் டாஸ்மாக் சரக்கை ஏன் ஒழிக்க உத்தரவு போடக் கூடாது? டாஸ்மாக்கை யாராலும் நெருங்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. குறைந்த பட்சம் டாஸ்மாக் கடை முன் இரு சக்கர வாகனம், ஏன் எந்தவிதமான வாகனமும் நிறுத்த தடை விதிக்க முடியுமா? குடித்து விட்டு வண்டியை ஒட்டி போலீசுக்கு, சட்டத்திற்கு பயப்படாமல் தைரியமாக உள்ளவர்களில், இந்த நீதிமன்றம் இதுவரை எத்தனைப் பேர் ஓட்டுனர் உரிமத்தை பறித்துள்ளது? ஒரு கையில் மதுவுடன் ஓட்டிய ஆம்னி பஸ் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை?
3. ஆண்டு 2005 முதல் 2015 மே மாதம் வரை 1.80 லட்சம் ஆட்டோக்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு நெரிசலான சாலைக்கு லட்சக்கணக்கான ஆடோக்கள் அனுமதியை நீதிமன்றம் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும்? அதிலும் ஹெல்மெட் சட்டம் கடுமையாக இருந்த 2010-11ல் மட்டும் 60,000 ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டு தமிழக சாலையை ஸ்தம்பிக்க வைக்க களமிறக்கப்பட்டுள்ளன.
4. 2000-2013 வரை தமிழக அரசு போக்குவரத்து வாகனங்கள் மூலமாக சுமார் 20,672 கோடிகள் வசூல் செய்துள்ளன. ஆண்டுக்காண்டு வாகனப் பதிவின் மூலமாக, சாலை வரி மூலமாக பல கோடிகள் வருமானம் பார்க்கும் அரசு சாலையின் நெரிசலை கண்டுகொள்ளாமல் வாகனப்போட்டியை ஏற்படுத்துவது பற்றி அரசிடம் நீதிமன்றம் கேள்விகேட்காதது ஏன்? தமிழகத்தில் நடக்கும் வாகனப்பதிவில் 20% சென்னையில் மட்டும் நடக்கிறது.
5. பொதுப்பணித்துறையில் 45% கமிஷன் தொகை போக மீதமுள்ள 55% தொகையில் போடப்பட்ட சாலைகள் ஐந்தே நாளில் அரை மணி நேர மழைக்கு மறைந்து போன சாலை என 'கின்னஸ்' சாதனைக்கு அனுப்பும் அளவில் ஊழல் மூலம் போடப்பட்ட தரமற்ற சாலையால் விபத்து விகிதம் கூடும் நிலையில் நீதிமன்றம் ஏன் கண்டுகொள்ளவில்லை?
6. 1993 முதல் 2013 வரை சுமார் 2 லட்சம் பேர் தமிழக சாலை விபத்தில் இறந்துள்ளனர். மோசமான, குறுகலான சாலை வசதி விபத்தின் எண்ணிக்கை உயர்வதால் புதிய வாகனப் பதிவை நீதிமன்றம் நிறுத்த முடியுமா? இந்தியாவில் அதிகமான கார் உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை 4வது இடத்தில் உள்ளது. அதாவது, 100 பேரில் 43 பேர் கார் வைத்துள்ளார்கள். கோவை 9வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பெருகி வரும் கார் கலாசாரத்திற்கு, நீதிமன்றம் என்ன பதில் தர முடியும்?
7. இருசக்கர வாகன ஓட்டி தலைக்கவசம் போட்டு ஒட்டியும் நெஞ்சில் ஏறி உயிர் பறிக்கும் கனரக வாகனத்தின் வேகத்திற்கு நீதிமன்றம் என்ன பதில் சொல்ல முடியும்? தலைக்கவசம் போட்டும் விபத்தில் இறந்தால் புல்லெட் ப்ரூப் போட வேண்டிய நிலை வருமா?
8. அதிகமான நபர்களை ஏற்றிச் சென்று போக்குவரத்து விதி மீறும் அரசுப்பேருந்தால் 13% விபத்துக்கள் நடந்துள்ளது. அரசு பேருந்தின் விபத்து தடுப்பு பற்றி நீதிமன்றம் என்ன தீர்ப்பு தரப்போகிறது? போக்குவரத்து விதிப்படி அரசு பேருந்து ஆட்களை ஏற்றிச் செல்கின்றதா? படியில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் நிலை?
9. 50 கி.மீ.க்கு மேல் வேகமாச் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை நீதிமன்றம் ஏன் தடை செய்ய முன்வரவில்லை? அதிவேக பைக்குகள் தயாரிக்கும் பத்து நிறுவனத்தை நீதிமன்றம் 50 கி.மீ.க்கு மட்டுமே வாகனத்தை வடிவமைத்து வேக கட்டுப்பாடு கொண்டு வர சட்டம் இயற்ற முடியுமா? மீறினால் வாகனத்தை பறிமுதல் செய்வதாக அதிரடி உத்தரவிட முடியுமா?
10. இரு சக்கர வாகனத்திற்கு அடுத்தபடியாக, லாரி போன்ற கனரக வாகனங்கள் வருகின்றன. நின்ற லாரி மீது மோதிய வாகனம் என்ற மரணச் செய்தி தினமும் வருகிறது. குடும்பம் குடும்பமாக விபத்தில் கொல்லப்படும் அவலத்திற்கு என்ன தீர்வு?
11. போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும் ஊர்வலம் போன்ற இரு நூறு கார்களில் பவனி வரும் அரசியல்வாதிகளை நீதிமன்றம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. அவர்களை முறைப்படுத்த முடியுமா? செயற்கையான வாகன நெரிசலை ஏற்படுத்தி விட்டு நம்மை பாதுகாப்பாக இருக்கச் சொல்வது ஏன்?
12. பைக்கின் வேகத்தை இஷ்டப்படி வாகன நிறுவனம் வடிவமைக்கும், ஷேர் ஆட்டோ எட்டு போட்டு ஓடும், தரமற்ற சாலையை அரசு போடும், நடுரோட்டில் மாடுகள் ஓடும், குடி போதையில் தனியார் பேருந்து ஓடும், ஆனால், இரு சக்கர வாகனம் ஓட்டுவோரை மட்டும் நீதிமன்றம் ஹெல்மெட் போட உட்படுத்தும். உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க ஹெல்மெட் என்றால், சாலையின் பாதுகாப்பிற்கு என்ன சட்டம்? பல்வேறு அடிப்படையான காரணிகளை கண்டுகொள்ளாமல் இருசக்கர வாகன ஓட்டிகளை மட்டுமே குறி வைப்பது ஏன்?
13. தரமில்லாத, நெரிசலான, பாதுகாப்பு குறைவான சாலையில், நாம் வண்டி ஓட்ட ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஹெல்மெட் நம் ஆயுளை எப்படி தீர்மானிக்க முடியும்? விபத்து ஏற்பட்டால் தலைக்கு மட்டும் ஹெல்மெட் உத்தரவாதம் என்றால் பிற உறுப்புகளில் அடிபட்டு செத்துபோக நேர்ந்தால்?
14. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் 25% விபத்தில் இறக்கின்றனர் என்றால், மீதமுள்ள 75% விபத்து பிற வாகனங்களால ஏற்படுவதற்கு நீதிமன்றம் என்ன பாதுகாப்பு கவசம் அளிக்க முடியும். கொத்துக் கொத்தாய் செத்துப்போகும் பஸ் பயணிகள் பாதுகாப்பு பற்றி நீதிமன்றம் கேள்வி கேட்காதது ஏன்? ஆக, விபத்து நேர்வதற்கு அசுர வேகம், அலட்சியம், குடிபோதை, தரமற்ற சாலையே காரணம்.
15. தேசிய குற்றப் புலனாய்வு (NCRB) அறிக்கையின் படி சென்ற வருடம் இந்தியாவில் 11,571 பாதசாரிகள் விபத்தில் இறந்துள்ளனர். பாதசாரிகளுக்கு என்ன பாதுகாப்பு கவசம் போடச் சொல்ல முடியும்? நகர் எல்லைக்குள் மட்டுமே விபத்து விகிதம் அதிகம் என்பதால் அரசு, நீதிமன்றம் பொதுமக்கள் உயிர் காக்க நகரில் இடங்களை கையகப்படுத்தி சாலை விரிவாக்கத்திற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
தலைக்கவசம் உயிர் காக்கும்(?) என்று சொல்வது நியாயமாக இருந்தாலும், விபத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தலைக்கவசம் மூலம் உயிருக்கு தீர்வு என்று சொல்வது, தட்டு நிறைய விஷமுள்ள சாப்பாடு சாப்பிட வைத்து பக்கத்தில் 108 வண்டியை நிறுத்திய கதை தான், நம் தலைக்கவசம் உத்தரவு என்றால் மிகையாகாது. தலைக்கவசம் இல்லாதவர்களுக்கு அபராதம் போட ஜீப்பில் வரும் போலீசார் சீட் பெல்ட் அணியவில்லை, எஸ்.ஐ. இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடவில்லை என்பதை யார் தான் சொல்ல முடியும்?
இதற்கு முன் இதேபோல ஹெல்மெட் சட்டம் போட்டபோது கூட விபத்துக்கள், சாவுகள் குறையவில்லை எனபதே உண்மை. இவ்வளவு வருடமாக ஹெல்மெட் விழிப்புணர்வு கொடுத்தும் விபத்து குறையாமல் இருக்க காரணம் வாகன நெரிசல், வேகமே. ஹெல்மெட் போட்டதால் விபத்து குறைவு என்பதை விட, அபராத வசூல் வேட்டையில் போலீஸ் பணியில் சிறப்புடன் களம் இறங்கியதால் வாகன நெரிசல் இல்லாமல் விபத்துக்கள் குறைந்தது என்பதே உண்மை.
வாகன நெருக்கம் (டென்சிட்டி) இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிகம். அதற்கு அடுத்தபடியாக புனே, மும்பை உள்ளது. சென்னையை விட பல மடங்கு பெரிய நகரங்களான டெல்லி, மும்பையில் வாகன நெருக்கம் குறைவு. சென்னையை விட டெல்லியில் வாகனத்தின் மடங்கு இரு மடங்கு அதிகம். ஆனால், வாகன நெரிசல் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விபத்திற்கு விடுதலை கொடுக்காமல் விபத்தை தடுப்பதற்கு தேவையான தரமான நெரிசலற்ற சாலை வசதி, வாகன பெருக்கத் தடை, குடிபோதை கலாசார ஒழிப்பு, அதிவேக வாகனத் தடை, கண்ணைப்பறிக்கும் ஹெட் லைட்டுகள் தடை என விபத்து தடுப்பு நடவடிக்கை எடுப்பதையே நீதிமன்றத்திடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|