புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_m10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_m10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_m10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_m10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_m10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_m10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_m10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_m10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_m10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_m10பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாபநாசம் – திரை விமர்சனம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 04, 2015 3:30 am

First topic message reminder :

பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 PKJr8gSTFuZADAyWM1g7+Papanasam-Movie-Release-On-July-3rd-Poster-11
-

அந்தக் கண்களைத் தான் முதலில் கேமராவில் பார்க்கிறோம்.
அதில் கடலளவு கனவு, கரை காணாத சந்தோஷம், ஆகப்
பெரிய துயர், ஆனால் அதில் ஒன்று மட்டும் நிச்சயம் இருப்பதில்லை.
அது பயம்.

சுயம்புலிங்கம் (கமல்) ஒரு சாமானியன். அவனுக்கு இரண்டு
கண்களாக விளங்குவது தன் குடும்பம் மற்றும் தொழில்.
சிறு வயதில் தாய் தந்தையரை இழந்த சுயம்புலிங்கம் பெயரைப்
போலவே தன்னை செதுக்கிக்கொண்டவன். அன்பு மனைவி
ராணி (கவுதமி) மற்றும் இரண்டு மகள்களுடன் செல்வி (நிவேதா)
மீனா (எஸ்தர்) அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருப்பவன்.

சுயம்புலிங்கத்தின் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே
சினிமாதான். அந்த ஊரின் கேபிள் டிவி உரிமையாளரான சுயம்புவின்
முழு நேர வேலை படம் பார்ப்பதுதான். அது பாசமலராகட்டும்,
பனிரெண்டு மணிக்கு மேல் காண்பிக்கப்படும் ஏடாகூடமான
படங்களாகட்டும் சினிமா தான் அவனது உயிர் மூச்சு. கேபிள்
அலுவலகமே கதி என்று இருக்கும்போது திடீரென்று வீட்டு நினைவை
வரவழைப்பதும் திரைப்பட காதல் காட்சியொன்றுதான். அந்த அளவுக்கு
சினிமா அவனுக்குள் கலந்திருக்கும் ஒன்று.

ஊர் என்று இருந்தால் டீக்கடை எப்படி இல்லாமல் இருக்கும்.
அரசியல் முதல் சினிமாவரை அலசிக் காயப்போடும் அந்த
டீக்கடைக்கு தினமும் செல்லும் வழக்கமுடையவன் சுயம்பு. கடை
முதலாளி பாய் (எம்.எஸ்,பாஸ்கர்) சுயம்பு இருவருக்குமிடையே
விளக்கப்படாத ஒரு நட்பு இழைந்தோடும்.

டீக்கடைக்கு எதிரேயுள்ள போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளுக்கு
(கலாபவன் மணி). சிலருக்கு சிலரை பிடிக்காது. அவ்வகையில்
நேர்மையாக வாழும் சுயம்புவிற்கு சிறிய வியாபாரிகளிடம் பணம்
பறிக்கும் கான்ஸ்டபிள் மீது நியாயமான கோபம். ஆனால் அதை
நேரிடியாகக் காண்பிக்காமல் நையாண்டிப்பேச்சின் மூலம்
வெளிப்படுத்துவான். இதனால் எரிச்சல் அடையும் கான்ஸ்டபிள்  
சுயம்புவைப் பழிவாங்க சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறான்.

ஆர்ப்பாட்டம் இல்லாத அந்தக் குடும்பத்தில் மூத்த
மகள் செல்வி் பள்ளி இயற்கை சுற்றுலா கிளம்பிச்
செல்ல,பிரச்னை அங்கு ஆரம்பமாகிறது.
அவளை அங்கு பார்க்கும் பணக்கார மாணவன் வருண்
அவளுக்கே தெரியாமல் அவள் குளிப்பதை படமெடுத்து
விடுகிறான். அடுத்த நாள் அதை அவளிடம் காண்பித்து
மிரட்டி வரவழைக்க அவன் செய்யும் முயற்சியில் அவனே
சிக்கி கொலையாகிறான்.

இந்தச் சம்பவங்களின் பின்னனியில் கதையை இழை
இழையாக பின்னியிருக்கிறார்கள். தன்னுடைய
குடும்பத்திற்கு சிறு பாதிப்புக் கூட நேரக் கூடாது என்று
துடிக்கும் சுயம்புவின் ஒவ்வொரு அசைவும் ஆயிரம்
கதைகள் சொல்கின்றன.

ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகவும் விறுவிறுப்பாக
மலையாள மூலம் த்ரிஷ்யம் படத்திற்கு நிகராக சில
சமயங்களில் அதைவிடவும் நேர்த்தியாக படம்
எடுத்துள்ளார்கள். ஐஜி கீதா பிரபாகர் (ஆஷா சரத்) மற்றும்
அவரது கணவர் ஐஏஎஸ் அதிகாரி பிரபாகர்
(அனந்த் மகாதேவன்) இருவரின் நடிப்பும் படத்திற்கு பக்க
பலம். அதுவும் மகனை இழந்து தவிக்கும் ஒரு தாயாக
அதைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற வெறியுடன்
இருக்கும் அதிகாரியாக இரண்டு வகையிலும் நடிப்பில்
அசத்தியுள்ளார் ஆஷா சரத்.

கலாபவன் மணி சுயம்புவின் இளைய மகளை அடித்து
மிதித்து உண்மையை வரவழைக்கும் காட்சியில் தியேட்டரே
அதிர்ந்து கலங்கும் அளவிற்கு நடிப்பில் மிரட்டிவிட்டார்.
இளவரசு, அருள்தாஸ், டெல்லி கணேஷ், சாந்தி வில்லியம்ஸ்
போன்ற துணைப்பாத்திரங்கள் கதைக்கும் தங்கள்
பங்களிப்பை கச்சிதமாக செய்துள்ளனர்.

கஞ்சத்தனமும், கறார்த்தனமுமாக ஒரு நடுத்தர அப்பாவி
கிராமத்தானாக கமல் முதல் பாதியில் அந்தளவுக்கு
தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இடை
வேளைக்குப் பின் குடும்பத்துக்காக போராடும் ஒருவனாக,
தான் பார்த்தப் படங்களிலிருந்து சூழலுக்குத் தேவையான
விஷயங்களை கிரகித்து, தன் மூளையையும்
அனுபவத்தையும் பயன்படுத்தி இறுதிவரை விட்டுக்
கொடுக்காமல் இருக்கும் புத்திசாலியாக, உணர்வுரீதியாக
ஒரு தகப்பன்சாமியாக திரையில் ஜெயித்துவிடுகிறார்.

உலகம் முழுவதும் நடந்து கொண்டேயிருக்கும் ஒரு விஷயம்
நல்லவைக்கு அல்லாதவைக்கும் இடையே நிகழும் துவந்தம்.
மகாபாரதம், ராமாயணக் கதைகளிலிருந்து தற்காலம் வரை
நடக்கும் சமர்களுக்கான காரணம் நல்லவன் கெட்டவன்,
கடவுள் சாத்தான் கருத்தியல் இதற்கிடையே நிகழும்
போராட்டங்கள் தான். மனித மனத்துக்குள கடவுளும்
இருக்கிறான, சாத்தானும் உள்ளான். திட்டமிட்டுச் செய்யப்
படவில்லை எனிலும் அது உயிர் பறித்தல், கொலையையே
செய்துவிட்டு மறைக்கும் ஒரு குடும்பத்தின் மீது நிச்சயம்
யாருக்கும் கோபம் வரும். ஆனால் அதன் காரணம், பின்னனி
தெரிகின்ற போது அவர்கள் பிடிபட்டுவிடக்கூடாது என்று
தான் நினைக்கிறோம். பிரார்த்திக்கிறோம்.

பாபநாசம் க்ளைமேக்ஸ் காட்சிகள் தமிழுக்காக சிறிது
மாற்றம் செய்யப்பட்டுள்ளது உண்மையில் தமிழ்
ரசிகர்களுக்கான பிரத்யேக கவனம் எனக் கொள்ளலாம்.
நெகிழ்ச்சியாக கமல் பேசும் வசனங்கள் மகாநதியை
நினைவுப்படுத்தினாலும் ஒரு கலைஞனாக அவரது பயணம்
முழுக்க பார்க்கும் ஒரு ரசிகனை ஒருபோதும் அவர்
ஏமாற்றுவதில்லை.

கண்கள் மட்டுமல்ல,உடல் மட்டுமல்ல கமலின் ஒவ்வொரு
அங்கமும் குற்றவுணர்விலும் துயரத்திலும் மிகையற்ற
நடிப்பை காண்பிக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமை
சகாப்தம் ஆகச் சிறந்த கலைஞன் கமல் என்றால் இதில்
ஒரு சொல் கூட பொய்யில்லை. அவரது அற்புதமான
நடிப்பிற்கு மற்றொரு உதாரணம் போலீஸ் அவர்கள் வீட்டில்
குழி தோண்டிக்கொண்டிருக்க அனைவரும் பதற்றத்தின்
உச்சியில் இருக்க கமல் மட்டும் சின்னதாக ஒரு கெத்துடன்
இருப்பார். உண்மை தெரிந்ததும் அவர் முகத்தில் தென்படும்
மிக மிகச் சிறிய புன்னகை. இதுவொன்றே போதும் நம்
நாயகன் பல இடங்களில் சிகரம் தொட்டுள்ளார் என்பது.

கமலின் முந்திய சில படங்களின் சாயல் இதில் லேசாகத்
தெரிந்தாலும் இது முற்றிலும் புதிய களம். மகாநதியில்
பாசமுள்ள தகப்பனாக வாழ்ந்திருப்பார். தேவர் மகனில்
ரயில்வே ஸ்டேஷனில் ஆரம்பித்து ரயில்வே ஸ்டேஷனில்
படம் முடியும். அதுபோலவே பாபநாசத்தில் போலீஸ்
ஸ்டேஷனில் ஆரம்பித்து போலீஸ் ஸ்டேஷனில் படத்தை
முடித்திருக்கும் உத்தி உருத்தாமல் இயல்பாகவே உள்ளது.
படத்தின் முக்கியமான மற்றொரு அம்சம் இதில் பிரச்சார
நெடி துளியும் இல்லை.

நினைத்திருந்தால் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி
ஆபத்தானது என்பதில் தொடங்கி இயற்கை விவசாயம்,
குழந்தைகள் வளர்ப்பு என பல விஷயங்களை விலாவரியாகச்
சொல்லியிருக்கலாம். ஆனால் மையக் கருவிலிருந்து இம்மி
பிசகாமல் கதையை நேர்க்கோட்டில் சொல்லியிருப்பது
சிறப்பு. மூன்றுமணி நேரப்படம் என்பதை ஒரு நொடியும்
உணர வைக்காமல் தொய்வின்றி எழுதப்பட்ட திரைக்கதை
இதை சாத்தியப்படுத்தியுள்ளது.

ந.முத்துகுமார் பாடல்களை எழுதியுள்ள இப்படத்தின்
இசையமைப்பாளர் கிப்ரான். மழை ஒரு கதாபாத்திரம்
என்று சொல்லும் அளவிற்கு வலுவாகக் காட்சிப்படுத்தப்
படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவன்.

குக்கிராமத்தை ஆகட்டும் குழந்தைகளின் பயம் கலந்த
உடல்மொழியை, கண்களை என நுணுக்கமாக அதே
சமயம் உறுத்தலில்லாமல் கதையின் நகர்வை பதிவு
செய்துள்ளார். மலையாளத்தில் த்ருஷ்யம் படத்தின்
இயக்குநர் ஜீத்து ஜோசஃப் தான் தமிழிலும் இயக்கியுள்ளார்.
அவருக்கு பக்கபலமாக மலையாள தமிழ் இருமொழிகளில்
விற்பன்னரான எழுத்தாளர் ஜெயமோகன் வசனம்
எழுதியுள்ளார்.

கமலுக்கு நெல்லைத் தழிழைப் பயிற்றுவித்திருப்பவர்
எழுத்தாளர் / இயக்குநர் சுகா. மண்டையிடிக்கி…ஏளா என்று
சின்ன வார்த்தைகளில் கூட அசல் நெல்லைத் தமிழை
திரையில் பேச வைத்ததற்கு நிச்சயம் பாராட்டவேண்டும்.
வழக்கமான ஹீரோவாக இல்லாமல் கமலை அவரின்
நட்சத்திர ஜொலிப்பிலிருந்து சற்று கீழ் இறக்கி சுயம்புவாகவே
முதல் காட்சியிலிருந்து கடைசிவரை ஜித்து ஜோசப்
இயக்கியுள்ளார்.

சிவாஜி ரசிகனாக தன்னை ஒரு காட்சியில் பெருமையாகச்
சொல்லிக் கொள்ளும் கமல் படத்தில் சில இடங்களில்
சிவாஜியின் உடல்மொழியை திரையில் நுட்பமாகப் பதிவு
செய்துள்ளார்.

படத்தில் சின்ன சின்ன குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.
கெளதமிக்கு குரல் கொடுத்த சரண்யா பொன்வண்ணனுக்கு
நெல்லைத் தமிழ் சரளமாகப் பேச வரவில்லை. எப்படியோ
சமாளித்திருக்கிறார். கமல் கெளதமி க்ளோசப் காட்சிகள்.
காதல் மன்னன் என்று தன்னையே பாராட்டிக் கொள்ளும்
சில காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். காதல் காட்சிகளையே
கூட தவிர்க்கலாம்.

மலையடிவாரம், மழை மற்றும் மண்வாசத்துடன் அசலான
ஒரு தமிழ்ப்படம் பார்த்த நிறைவு ஏற்பட்டது மலையாளத்தில்,
இந்தியில், தெலுங்கில்,கன்னடத்தில் என எந்த இந்திய
மொழியிலும் இத்திரைப்படம் நிச்சயம் வெல்லும். காரணம்
நாமெல்லாம் இன்னும் குடும்பங்களை நம்புகிறோம்.
முற்றிலும் அந்நியமாகிவிடவில்லை. இதுபோன்ற திரைப்
படங்கள் வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் நம்பிக்கையை
ஏற்படுத்துகின்றன.
-
---------------------------------
-By உமா ஷக்தி----தினமணி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 06, 2015 7:27 pm

வேல்முருகன் wrote:
T.N.Balasubramanian wrote:அது சரி வேல்முருகன் !
பாபநாசம் என்ற பெயருக்கு பதிலாக
ராமேஸ்வரம் என்று வைத்து இருந்தால் ,
வெற்றி அடைந்திருக்காதா ? சிரி சிரி ஜாலி ஜாலி
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149566

ரெண்டுமே புண்ணிய தளங்கள் தானே கண்டிப்பாக வெற்றி அடைந்திருக்கும் .... குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1149602

ஆம் ,புண்ணிய தலங்கள் !
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 07, 2015 10:24 pm

இன்னும் பார்கவில்லை ... இன்னிமேல் தான் ..

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 08, 2015 9:27 pm

பார்த்துவிட்டேன் .... அருமையான படம் .... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Jul 08, 2015 11:34 pm

shobana sahas wrote:பார்த்துவிட்டேன் .... அருமையான படம் .... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1149984

குடும்பத்துடன் சென்று பார்க்கும் அளவிற்கு உள்ளதா...



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 09, 2015 10:04 pm

வேல்முருகன் wrote:
shobana sahas wrote:பார்த்துவிட்டேன் .... அருமையான படம் .... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1149984

குடும்பத்துடன் சென்று பார்க்கும் அளவிற்கு உள்ளதா...
மேற்கோள் செய்த பதிவு: 1149991

கண்டிப்பாக ... decent movie வேல்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Fri Jul 10, 2015 7:01 am

shobana sahas wrote:
வேல்முருகன் wrote:
shobana sahas wrote:பார்த்துவிட்டேன் .... அருமையான படம் .... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1149984

குடும்பத்துடன் சென்று பார்க்கும் அளவிற்கு உள்ளதா...
மேற்கோள் செய்த பதிவு: 1149991

கண்டிப்பாக ... decent movie வேல்
மேற்கோள் செய்த பதிவு: 1150131

நன்றி.... நன்றி ...இந்தா கிளம்பிட்டேன் ...... சூப்பருங்க அருமையிருக்கு



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 10, 2015 8:52 am

வேல்முருகன் wrote:
shobana sahas wrote:
வேல்முருகன் wrote:
shobana sahas wrote:பார்த்துவிட்டேன் .... அருமையான படம் .... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1149984

குடும்பத்துடன் சென்று பார்க்கும் அளவிற்கு உள்ளதா...
மேற்கோள் செய்த பதிவு: 1149991

கண்டிப்பாக ... decent movie வேல்
மேற்கோள் செய்த பதிவு: 1150131

நன்றி.... நன்றி ...இந்தா கிளம்பிட்டேன் ...... சூப்பருங்க அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1150146

காலேல 7 மணிக்கு கிளம்பி எந்த ஆட்டத்திற்கு போகப் போறீங்க ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jul 10, 2015 9:40 am

பாபநாசம் - சினிமா விமர்சனம்

'நாலாப்பே’ படித்த ஒரு குடும்பத் தலைவன், ஒரு கொலைப் பழியில் இருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றும் இடம்... 'பாபநாசம்’!

நேர்மையும் சிக்கனமுமாக இருந்து வீடு, தொழில், குடும்பம் என 'சுயம்பு’வாக முன்னேறுகிறார் கமல். கேபிள் தொழிலின் இடையே, தினமும் மூன்று சினிமாக்கள் பார்ப்பது மட்டுமே, கமலுக்கு வெளியுலகத்துடனான ஒரே 'டச்’. 'ஆல் இஸ் வெல்’ என இருக்கும்போது கமலின் 'தேன்கூடு’ குடும்பத்தைச் சிதைக்க முயற்சிப்பவனைக் கொன்றுவிடுகிறாள் கமல் மகள். 'சினிமா கிரைம் சீன்’களை ஆதாரமாக யோசித்து, கொலைப் பழியில் இருந்து தன் குடும்பத்தைக் காக்க வியூகம் வகுக்கிறார் கமல். அவருக்கும் போலீஸுக்கும் இடையிலான 'போலீஸ் - திருடன்’ விளையாட்டில் என்ன நடந்தது என்பது... திக் திடுக் திருப்பங்கள்!

மலையாள சினிமா 'த்ரிஷ்யம்’ ரீமேக். மோகன்லால் வேடத்தில் கமலும் அவரின் நெல்லைத் தமிழும் 'பாபநாசம்’ ஸ்பெஷல்!

வழக்கமாக 'ஒன் மேன் ஷோ’ காட்டும் கமல்... இதில் 'காமன் மேன்’! சிவாஜி ரசிகனாக, சிக்கனவாதியாக, மகள்களிடம் பல்பு வாங்குபவராக சிம்பிள் ஷோ காட்டுகிறார். நேர்மை கெத்துடன் போலீஸிடம் மல்லுக்கட்டுவதும், மகள் டூர் புராணம் படிக்கும்போது நாற்காலிக் கைப்பிடிக்காகக் கவலைப்படுவதும், 'ஜீப்ல ஏன்... இங்கேயே...’ என கௌதமியிடம் அசடு வழிவதும், வீட்டுக்கு போலீஸ் வரும்போது, சுவரோடு பம்மிப் பதுங்குவதுமாக... கமலஹாஸம். போலீஸின் அடி, உதை, மிரட்டல்களுக்குக்கூட கல்லாக இறுகியிருந்தவர், மகனுக்காக ஏங்கித் தவிக்கும் பெற்றோரின் சோகம் கேட்டதும் கலங்கி உடையும் இடம்... உருக்கம்!

பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 P10a

'அப்பாவி’ அஸ்திரத்தை மட்டுமே வைத்திருக்கும் கமலுக்கு, படத்தில் செம சவால் கொடுக்கிறார் ஐ.ஜி-யாக வரும் ஆஷா சரத். அசட்டையாக விசாரணையைத் தொடங்கி, பின்னர் ஆக்ரோஷத்துக்குத் தாவி, க்ளைமாக்ஸில் வசனமே இல்லாமல், கமல் முன் நிலைகுலைந்து கலங்கி நிற்கும்போது... நெஞ்சம் கலங்குகிறது!

எப்போதும் 'ரீமேக்’ படங்களில் இருக்கும் ஒரு 'ரீமேக்’தனம் இல்லாமல் தமிழ்ப்படுத்திய வகையில் லைக்ஸ் வாங்குகிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப். அதோடு பாத்திரப் படைப்புகளிலும் கச்சிதம். கமல் பைசா சுத்தமாகக் கணக்குப் பார்க்கக்கூடியவர் என்பது, வெறுமனே பணம் செலவு செய்வதுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. எந்த ஒரு காரியத்தையும் துல்லியமாகச் செய்யக்கூடியவர் என்பதையும் அதன் மூலம் உணர்த்தி, பின்பாதி முடிச்சுகளை நம்மை நம்பவைக்கிறார்.

ஒருவகையில் படம் மிகச் சிக்கலான ஆனால், எவருக்கும் புரியும் சைக்காலஜி புதிர் விளையாட்டு. கதாபாத்திரங்கள் அனைத்தும் தர்க்கரீதியாகச் சிந்திப்பதுதான் கதை. ஒரு கொலையை தர்க்கரீதியாக எப்படி மறைக்க முடியும் என கமல் பாத்திரம் சிந்திக்கிறது. அதற்கான அவரது திட்டமிடலும், மற்றவர்களை தன் 'ஆடு-புலி’ ஆட்டத்தின் பகடைகளாகப் பயன்படுத்துவதும்... பிரில்லியன்ட். தன் குடும்பத்தினருக்கு கமல் பயிற்சி கொடுக்கும்போது, 'நீ குழந்தை... கொஞ்சம் முன்னபின்ன... வேண்டாம், நீ தப்பாதான் சொல்லணும்’ எனச் சொல்வதும், 'அவன் 100 பெர்சன்ட் சரியா இருக்கான். அதான் தப்பா இருக்கு’ என்பதையே ஆஷா சரத் தன் சந்தேகத்துக்கான காரணமாகச் சொல்வதுமாக... எப்போதும் இடிக்காமல் பொருந்துகிறது லாஜிக்.

பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 P10b
'அவர் நல்லவர்தான்... ஆனா, வக்கீலு’, 'படாத இடத்துல பந்து பட்ட மாதிரி ஆடுதவனைத்தானே பிடிக்கும்’, 'லக்ஷ்மில என்ன சின்னது... பெருசு?’ - நக்கலும் கிண்டலுமாகக் கடக்கின்றன ஜெயமோகனின் வசனங்கள்.

படத்தின் மலையாளச் சாயலைத் தக்கவைக்க பாபநாசம், நெல்லைத் தமிழ், கேரளா பார்டர் என்றெல்லாம் மெனக்கெட்டிருப்பது, படத்தின் கேன்வாஸில் ஆல்ரவுண்டு ரம்மியம் சேர்த்திருக்கிறது. ஆனாலும், வசனங்களாலேயே நகரும் முன்பாதியில் கொஞ்சம் மெகா சீரியல் தொனி. 'ஏய்யா என் கோட்டிக்காரா...’ பாடலில் ஜிப்ரான் இசையும் படம் நெடுக பசுமை போர்த்தும், சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவும் ரம்மியம்.

அந்த வில்லன் இளைஞன் மீது அவ்வளவு கோபம் ஊற்றெடுத்தாலும், க்ளைமாக்ஸில் அவன் பெற்றோரின் தவிப்பு கலங்கடிக்கிறது. இழப்பின் வலி சொல்பவர்களுக்கு, 'சின்ன மனிதனாக’ கமல் சொல்லும் பதில்... க்ளாசிக்! வசனமே இல்லாமல் க்ளைமாக்ஸ் முடிச்சை காட்சிகளில் உணர்த்தியிருப்பதும், டைரக்டரின் ஃபினிஷிங் டச்.

தியேட்டரில் செம கைதட்டல்கள் கேட்கின்றன!

பாபநாசம் – திரை விமர்சனம்  - Page 2 P10c

- விகடன் விமர்சனக் குழு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 10, 2015 12:50 pm

வேல்முருகன் wrote:
shobana sahas wrote:பார்த்துவிட்டேன் .... அருமையான படம் .... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1149984

குடும்பத்துடன் சென்று பார்க்கும் அளவிற்கு உள்ளதா...
மேற்கோள் செய்த பதிவு: 1149991

சூப்பர் வேல்...என் பதிவு பார்க்கலையா? ஜாலி ஜாலி ஜாலி ............ரொம்ப நல்ல படம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Jul 11, 2015 6:10 pm

பார்த்துவிட்டேன் .....சூப்பர் ..... சூப்பருங்க சூப்பருங்க



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக