புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-
–
உலகில் மாற்றம் நிலையானது என்பார்கள்.
பிரதமர் நரேந்திரமோடி மாற்றத்தைச் சொல்லும்போது,
‘‘மாற்றத்தை எதிர்ப்பவர்கள் 21–ம் நூற்றாண்டுக்கு
பொருந்தாதவர்கள்’’ என்றார்.
மாற்றம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கலாசாரத்துக்கும் பொருந்தும். அந்த வகையில்,
ஆதிகாலத்தில் இருந்து உடைகளில் சமுதாயம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களை சந்தித்து
வருகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த கால
கட்டங்களின் நாகரீகத்துக்கும், வசதிக்கும், வாழ்க்கை
முறைக்கும் ஏற்ப மாறிவருவதால், அனைவரும்
அதற்கேற்ற வகையில் ஆடைகளை அணியத்
தொடங்கிவிடுகிறார்கள்.
ஆதிகாலத்தில் இலை தழைகளை ஆடையாக
அணிந்துவந்த பெண்கள், அதன்பிறகு அந்தந்த
நாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்பவும், தட்பவெட்ப
நிலைக்கேற்பவும், தங்கள் ஆடைகளை மாற்றிக்
கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் நமது முன்னோர்களான
பெண்கள், உடல் முழுவதும் ஒரே சேலையைக் கட்டிக்
கொண்டு இருந்தார்கள். அதன்பிறகு ஜாக்கெட்,
உள்ளாடைகள் அணியும் பழக்கம் வந்தது.
பின்னாட்களில் இளம்பெண்கள் தாவணி அணிந்தார்கள்.
பிறகு சல்வார் கமீஸ், தொடர்ந்து சுடிதார் வந்தது.
பிறகு ஜீன்ஸ்– டீ சர்ட் வந்தது. ஒவ்வொரு முறையும் புது
நாகரீக ஆடைகள் வரும்போதெல்லாம் கடும்
கண்டனங்கள் எழுவது வாடிக்கை.
பழமையில் ஊறிப்போனவர்களால் இந்த புதுமையின்
மாற்றத்தை ஏற்கமுடியவில்லை.
இப்போது பனியன் போன்ற துணிகளாலான, மெல்லிய
பருத்தித்துணியாலான ‘லெக்கின்ஸ்’ ஆடையும்,
மேலே நீண்ட குர்தா, கமீஸ் போன்ற ‘டாப்ஸ்’ அணிவதும்
வழக்கமாகிவிட்டது.
ஆண்டாண்டு காலமாக சர்க்கஸ்களில் பார்
விளையாடுபவர்கள் போன்ற கலைஞர்கள் வெள்ளை
நிறத்தில் இந்த ‘லெக்கின்சை’ அணிந்து வந்தனர்.
ஆனால், இப்போது வெளியே அணியும் இந்த ‘லெக்கின்ஸ்’
ஆடைகள், நீண்ட நெடும் ஆண்டுகளுக்கு முன்பே குளிர்
பிரதேசங்களில் ஆண்களும், பெண்களும் தாங்கள்
அணியும் ஆடைகளுக்கு உள்ளே மெல்லிய கம்பளி
அல்லது நைலானாலான லெக்கின்ஸை அணிந்தார்கள்.
இப்போது அது பெண்களுக்கான வசதியான ஆடையாகி
விட்டது. சமீபத்தில் சில கல்லூரிகளில் ‘லெக்கின்ஸ்’
ஆடை அணிந்துவரக்கூடாது என்று உடை கட்டுப்பாடு
தடைவிதித்ததும், சில பத்திரிகைகளில் ஆபாசமான
‘லெக்கின்ஸ்’ தேவையா? என்று கட்டுரைகள் வந்ததும்,
பெண்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பிவிட்டது.
இது என்ன பெண்கள் அணியும் ஆடைகள் மட்டும்
எல்லோருடைய கண்களையும் உறுத்துகிறது. அழகு
என்பது பார்ப்பவர்களின் கண்களில்தான் இருக்கிறது
என்பார்கள். அதுபோலத்தான் ஆபாசமும் பார்ப்பவர்கள்
கண்களில்தான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும்
பெண்கள் ஆடை மாறும்போது நிச்சயமாக கண்டன
கனைகள் வீசப்படுகிறது.
சுடிதார் வந்தபோதே இதென்ன சேலை எவ்வளவு
கண்ணியமான உடை, அதை விட்டுவிட்டு சினிமாவில்
போட்டுக்கொண்டு வருவதுபோல, இப்படி ஒரு ஆடை
என்றார்கள்.
இப்போது ‘லெக்கின்ஸ்’ வந்துவிட்டது. கருப்பு, பச்சை,
சிவப்பு, வெள்ளை, நீலம் என்று பொதுவான கலர்களில்
‘லெக்கின்ஸ்’ வாங்கி போட்டுவிட்டால் துவைப்பதற்கும்
வசதி, இஸ்திரி போடவேண்டிய தேவையும் இல்லை,
ஒரு நீண்ட குர்தா போன்ற மேலாடை அணிந்துவிடுவது
வசதியாக இருக்கிறது என்று சொல்லும் பெண்கள்,
அது சரி பெண்கள் ஆடைபற்றி விமர்சனம் செய்வோர்,
கால் சட்டைகளை அணிந்து வலம் வரும் ஆண்கள்
பற்றியோ, வேட்டியை, லுங்கியை மடித்து அண்டர்வேர்
தெரிய அணியும் ஆண்கள் பற்றி மட்டும் எதுவும்
சொல்லாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்
என்கிறார்கள்.
நியாயமான கேள்வி. மொத்தத்தில், ஆடை என்பது
அவரவர் தனி சுதந்திரம், இதில் தேவையற்ற கட்டுப்பாடோ,
தேவையற்ற விமர்சனங்களோ தேவையில்லை
என்பதுதான் பொதுவான கருத்து.
–
————————————–
தினத்தந்தி
-
–
உலகில் மாற்றம் நிலையானது என்பார்கள்.
பிரதமர் நரேந்திரமோடி மாற்றத்தைச் சொல்லும்போது,
‘‘மாற்றத்தை எதிர்ப்பவர்கள் 21–ம் நூற்றாண்டுக்கு
பொருந்தாதவர்கள்’’ என்றார்.
மாற்றம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கலாசாரத்துக்கும் பொருந்தும். அந்த வகையில்,
ஆதிகாலத்தில் இருந்து உடைகளில் சமுதாயம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களை சந்தித்து
வருகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த கால
கட்டங்களின் நாகரீகத்துக்கும், வசதிக்கும், வாழ்க்கை
முறைக்கும் ஏற்ப மாறிவருவதால், அனைவரும்
அதற்கேற்ற வகையில் ஆடைகளை அணியத்
தொடங்கிவிடுகிறார்கள்.
ஆதிகாலத்தில் இலை தழைகளை ஆடையாக
அணிந்துவந்த பெண்கள், அதன்பிறகு அந்தந்த
நாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்பவும், தட்பவெட்ப
நிலைக்கேற்பவும், தங்கள் ஆடைகளை மாற்றிக்
கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் நமது முன்னோர்களான
பெண்கள், உடல் முழுவதும் ஒரே சேலையைக் கட்டிக்
கொண்டு இருந்தார்கள். அதன்பிறகு ஜாக்கெட்,
உள்ளாடைகள் அணியும் பழக்கம் வந்தது.
பின்னாட்களில் இளம்பெண்கள் தாவணி அணிந்தார்கள்.
பிறகு சல்வார் கமீஸ், தொடர்ந்து சுடிதார் வந்தது.
பிறகு ஜீன்ஸ்– டீ சர்ட் வந்தது. ஒவ்வொரு முறையும் புது
நாகரீக ஆடைகள் வரும்போதெல்லாம் கடும்
கண்டனங்கள் எழுவது வாடிக்கை.
பழமையில் ஊறிப்போனவர்களால் இந்த புதுமையின்
மாற்றத்தை ஏற்கமுடியவில்லை.
இப்போது பனியன் போன்ற துணிகளாலான, மெல்லிய
பருத்தித்துணியாலான ‘லெக்கின்ஸ்’ ஆடையும்,
மேலே நீண்ட குர்தா, கமீஸ் போன்ற ‘டாப்ஸ்’ அணிவதும்
வழக்கமாகிவிட்டது.
ஆண்டாண்டு காலமாக சர்க்கஸ்களில் பார்
விளையாடுபவர்கள் போன்ற கலைஞர்கள் வெள்ளை
நிறத்தில் இந்த ‘லெக்கின்சை’ அணிந்து வந்தனர்.
ஆனால், இப்போது வெளியே அணியும் இந்த ‘லெக்கின்ஸ்’
ஆடைகள், நீண்ட நெடும் ஆண்டுகளுக்கு முன்பே குளிர்
பிரதேசங்களில் ஆண்களும், பெண்களும் தாங்கள்
அணியும் ஆடைகளுக்கு உள்ளே மெல்லிய கம்பளி
அல்லது நைலானாலான லெக்கின்ஸை அணிந்தார்கள்.
இப்போது அது பெண்களுக்கான வசதியான ஆடையாகி
விட்டது. சமீபத்தில் சில கல்லூரிகளில் ‘லெக்கின்ஸ்’
ஆடை அணிந்துவரக்கூடாது என்று உடை கட்டுப்பாடு
தடைவிதித்ததும், சில பத்திரிகைகளில் ஆபாசமான
‘லெக்கின்ஸ்’ தேவையா? என்று கட்டுரைகள் வந்ததும்,
பெண்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பிவிட்டது.
இது என்ன பெண்கள் அணியும் ஆடைகள் மட்டும்
எல்லோருடைய கண்களையும் உறுத்துகிறது. அழகு
என்பது பார்ப்பவர்களின் கண்களில்தான் இருக்கிறது
என்பார்கள். அதுபோலத்தான் ஆபாசமும் பார்ப்பவர்கள்
கண்களில்தான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும்
பெண்கள் ஆடை மாறும்போது நிச்சயமாக கண்டன
கனைகள் வீசப்படுகிறது.
சுடிதார் வந்தபோதே இதென்ன சேலை எவ்வளவு
கண்ணியமான உடை, அதை விட்டுவிட்டு சினிமாவில்
போட்டுக்கொண்டு வருவதுபோல, இப்படி ஒரு ஆடை
என்றார்கள்.
இப்போது ‘லெக்கின்ஸ்’ வந்துவிட்டது. கருப்பு, பச்சை,
சிவப்பு, வெள்ளை, நீலம் என்று பொதுவான கலர்களில்
‘லெக்கின்ஸ்’ வாங்கி போட்டுவிட்டால் துவைப்பதற்கும்
வசதி, இஸ்திரி போடவேண்டிய தேவையும் இல்லை,
ஒரு நீண்ட குர்தா போன்ற மேலாடை அணிந்துவிடுவது
வசதியாக இருக்கிறது என்று சொல்லும் பெண்கள்,
அது சரி பெண்கள் ஆடைபற்றி விமர்சனம் செய்வோர்,
கால் சட்டைகளை அணிந்து வலம் வரும் ஆண்கள்
பற்றியோ, வேட்டியை, லுங்கியை மடித்து அண்டர்வேர்
தெரிய அணியும் ஆண்கள் பற்றி மட்டும் எதுவும்
சொல்லாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்
என்கிறார்கள்.
நியாயமான கேள்வி. மொத்தத்தில், ஆடை என்பது
அவரவர் தனி சுதந்திரம், இதில் தேவையற்ற கட்டுப்பாடோ,
தேவையற்ற விமர்சனங்களோ தேவையில்லை
என்பதுதான் பொதுவான கருத்து.
–
————————————–
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
லங்கோடு ஆண்களுக்கு உடல் நலம் பேணும் ஒரு ஆடை .
அதை சிறிதே அழகு படுத்தி இன்றைய ஜட்டி உருவானது .
அந்த காலங்களில் வயல்வெளிகளில் வேலைசெய்தவர்
லங்கோடு அணிந்தாலும் மேலே வேட்டியை சுற்றிக்கொண்டே
வயல் வேலைகளில் ஈடுபட்டனர் .
லங்கோடு உடுத்தியே குஸ்தி பயிலும் பயில்வான்கள் கோதாவில்
இறங்குவார்கள் . பாதுகாப்புக் கருதி .
நவீன கால பெண்கள் Women Liberation குருப் என்ற பெயரில்
கச்சையின்றி / கச்சை துறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டது
25/30 வருடங்களுக்கு மிகவும் பிரசித்தம் , நீங்களும் அறிந்திருப்பீர் .
இன்றைக்கும் பேஷன் பெரெட்டில் ரிப்பன் கட்டி உலா வரும் பெண்களும் உண்டு .
காலத்திற்கேற்ப ஆடை மாற்றம் வரவேற்கலாம்
ஆபாசத்தை வெளிகாட்டாத வரையில் /தூண்டதவரையிலும் வரவேற்கத்தக்கதே .
இது இரு சாராருக்கும் பொருந்தும் .
ரமணியன்
அதை சிறிதே அழகு படுத்தி இன்றைய ஜட்டி உருவானது .
அந்த காலங்களில் வயல்வெளிகளில் வேலைசெய்தவர்
லங்கோடு அணிந்தாலும் மேலே வேட்டியை சுற்றிக்கொண்டே
வயல் வேலைகளில் ஈடுபட்டனர் .
லங்கோடு உடுத்தியே குஸ்தி பயிலும் பயில்வான்கள் கோதாவில்
இறங்குவார்கள் . பாதுகாப்புக் கருதி .
நவீன கால பெண்கள் Women Liberation குருப் என்ற பெயரில்
கச்சையின்றி / கச்சை துறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டது
25/30 வருடங்களுக்கு மிகவும் பிரசித்தம் , நீங்களும் அறிந்திருப்பீர் .
இன்றைக்கும் பேஷன் பெரெட்டில் ரிப்பன் கட்டி உலா வரும் பெண்களும் உண்டு .
காலத்திற்கேற்ப ஆடை மாற்றம் வரவேற்கலாம்
ஆபாசத்தை வெளிகாட்டாத வரையில் /தூண்டதவரையிலும் வரவேற்கத்தக்கதே .
இது இரு சாராருக்கும் பொருந்தும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவியருவி ம.ரமேஷ் wrote:(படம் ஆபாசமாக இருக்கிறதென்றால் என் பதிவை நீக்கிவிடலாம்)
முகநூலில் பார்த்து ... இந்தம்மா லெக்கின்ஸ் போட்டிருக்காங்க. உத்து பாருங்க.
பெண்ணின் சுதந்திரத்தைப் பாராட்டலாம்தானே!
படுமோசம் ரமேஷ்....whatsup இல் கூட வந்தது இந்த போட்டோ................பெங்களூரில் இது போல நிறைய பார்க்கலாம்............அதிர்ந்தும் போகலாம்............இவங்க வீட்டில் எல்லாம் ஆண்களே இல்லையோ என்றுஎனக்கு எண்ணத்தோன்றும்...................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:
அடக்கடவுளே! இப்படியெல்லாமா வெளியில் வருகிறார்கள்?
இதைவிட மோசமாகக்கூட வராங்க விமந்தனி ..............கொஞ்சம் பார்த்து வரக்கூடாதா என்று நாம் கேட்டால்...அல்லது பெண்களின் உடைகளாலும் அவர்களுக்கு ஆபத்து வருகிறது என்று நாம் சொன்னால்.....போச்சு..................நம்மையும் 1930 என்று சொல்வார்கள் ............
.
.
.
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கரின் தினமலர் கட்டுரையை பாருங்களேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காஞ்சிப் பட்டுடுத்தி, கஸ்துாரிப் பொட்டு வைச்சு' என்ற ஜேசுதாசின், அந்நாளையப் பாடலை, யாரேனும், 'காட்டன் லெக்கின்ஸ் உடுத்தி, கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு வெச்சு தேவதை போல், நீ நடந்து வர வேண்டும்' என, ரீ-மிக்ஸ் செய்தாலும் செய்யலாம். இன்று, 'லெக்கின்ஸ்' அந்த அளவு பெண்களுக்கு பிடித்த உடை.
எல்லா உடைகளுக்கும், ஒரு வரலாறும், ஒரு பின்புலமும் இருப்பது போலவே, லெக்கின்சிற்கும் ஒரு சரித்திரம் உண்டு. லெக்கின்ஸ் என்பது ஆண் - பெண் இருவருக்குமான உடையாகத் தான், ஆரம்பத்தில் இருந்தது. 16ம் நுாற்றாண்டிலிருந்து வலம் வரும் உடை இது. ஐரோப்பாவில் குளிர் தாங்காத ஆண்களும், பெண்களும் தங்கள் கால் சாராய் அல்லது பாவாடைகளுக்கு உள்ளே அணிந்து கொள்ளக் கண்டுபிடித்த உடையே லெக்கின்ஸ். அப்போதெல்லாம் ஒரு காலுக்கு ஒன்று என்று, இந்த உடைக்கு இரு பகுதிகள் இருக்கும். ஒருவழியாக, 1960க்கு பின், அமெரிக்காவில், இன்று இருப்பது போன்ற லெக்கின்ஸ் வடிவமைப்பு வந்தது. குளிர் தேசங்களுக்காக, நைலானில் மட்டுமே உருவாக்கப்பட்ட லெக்கின்ஸ், காட்டன் மற்றும் இன்ன பிற சன்னமான இழைகளால் உருவாக ஆரம்பித்ததும், இதே கால கட்டத்தில்தான்.
பின், கிழக்காசிய சந்தையில் ஊடுருவிய இந்த உடை, இந்தியப் பெண்களுக்கு பிடித்தமான உடையாகிப் போனது, கடந்த, 4 - 5 ஆண்டுகளில் தான். சென்னை போன்ற பெரு நகரங்களில், கடந்த இரு ஆண்டுகளாக!சல்வார் கமீஸ் என்கிற உடை, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பின், அதை அணியும் பெண்களுக்கு, ஒரு பெரிய பிரச்னை வந்தது. 'கமீஸ்' எனப்படும் மேல்சட்டை சரியாக அமைந்து விடும். கால் பகுதிக்கான, சல்வார் அல்லது சுரிதார் சரியாக அமையாது. 'சல்வாருக்கும், சுரிதாருக்கும் வித்தியாசம் தெரியாத பாவப்பட்டவர்களுக்கு, சல்வார் லொட லொட என்று இருக்கும். சுரிதார் வளையம் வளையமாக கால்களில் இறுக்கி இருக்கும்; 'ச்சூரி' என்றால், இந்தியில் வளையல். இந்தப் பிரச்னையை லெக்கின்ஸ் தீர்த்தது.
கறுப்பு, பச்சை, சிவப்பு என்று பொத்தாம் பொதுவான நிறங்களில், 5, 6 லெக்கின்ஸ் வாங்கி, கொடியில் தொங்கப் போட்டு விட்டால், கையில் கிடைக்கும் சல்வார் டாப்பை உருவி எடுத்து, 'மேட்ச்சிங்' லெக்கின்ஸ் அணிந்தால், பிரச்னை போயே போச்சு. காலைத் துாக்கி வண்டியில் போட சவுகரியம். உடலில் உறுத்தாத மென்மையான உடை என்கிற சவுகரியம். 'அயர்ன்' செய்ய வேண்டாம். இவை தான் இடைத்தேர்தலில் நிற்கிற ஆளுங்கட்சி மாதிரி, லெக்கின்ஸ் போட்டியின்றி ஜெயித்த காரணங்கள்.லெக்கின்ஸ் அணியலாமா என்று படம் பிடித்து போட்ட பத்திரிகைகள் யாவும், தம் பருத்த கால்களில், முக்கால் அளவு வெளியே தெரிய, அரை டிராயர் அணிந்து வரும் ஆண்களை அல்லது லுங்கியை துாக்கி, உள்ளே இருக்கும் பட்டா பட்டி உள் ஆடையை வெளிப்படுத்தும் ஆண்களை, படம் பிடித்து போடவே மாட்டார்கள்.
ஏனெனில், இவை எல்லாம் எவ்வளவு ஆபாசமேயானாலும், விற்பனை பொருளல்ல. பெண் உடல் சம்பந்தப்பட்ட எதுவும் தான் விற்பனை பொருள். இந்த விவாதங்கள் வரும் போது, 'நாங்க எதை போட்டுகிட்டா உங்களுக்கு என்ன; உங்க பார்வையை சரியா பாருங்க...' என்று பெண்கள் தரப்பும், 'உங்க பாதுகாப்புக்காகத் தான் நாங்க பேசறோம்...' என்று ஆண்கள் தரப்பும் எப்போதும் சப்தமிடுவர்ஜீன்ஸ் அணிந்த பெண், நீதிமன்றத்தில் நுழையலாமா? நீளக் குர்த்தி அணிந்திருந்தாலும், மேலே துப்பட்டா அணியாத பெண், கல்வி மன்றங்களில் நுழையலாமா? லெக்கின்ஸ் அணியலாமா கூடாதா? ஓயாத சர்ச்சைகள் பெண் உடைகள் பற்றி. டில்லி பஸ்சில் நடந்த, 'நிர்பயா' சம்பவத்திற்கு பின், பொறுப்பில் உள்ள ஒரு பிரமுகர், 'பெண்கள், நீண்ட கோட் மாதிரி உடைக்கு மேலே அணிந்தால், அவர்களுக்கு அது பாதுகாப்பு' எனக் கூறினார்.
இன்னமும், சிலர் வழங்கிய அறிவுரைகள், 'பெண்கள் ஒழுங்கா டிரஸ் செய்துக்கிட்டா, பாதி குற்றங்கள் நடக்காது!' பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரைகளும், குற்றவாளிகளுக்கு வாய்தாவும் வழங்கி கொண்டிருக்கும் நம் அமைப்பின் விசித்திரங்களில் அந்த அறிவுரைகளும் அடக்கம்.
லெக்கின்ஸ் உண்மையாகவே ஆபாச உடையா? நம் பண்பாட்டின் சின்னமாக போற்றப்படும் புடவையை கூட, மிக ஆபாசமாக அணிய சில பெண்களால் முடியும். தன்னை வெளிப்படுத்தி கொள்வதில் ஆர்வமும், தன்னை பார்த்து விரியும் ஆணின் கண்களில் தன் முக்கியத்துவத்தை உணரும் இச்சையும் கொண்ட சில பெண்களால், எந்த பவித்திரமான உடையையும் ஆபாசமாக்கி விட முடியும்.
ஐரோப்பாவில் லெக்கின்ஸ் விற்கப்பட்ட, 18 - 19ம் நுாற்றாண்டுகளில், 'உள்ளாடைகளின் விளிம்புகள் வெளியே தெரியக்கூடும்' என்ற எச்சரிக்கை வாசகம் விற்பனை அட்டைகளில் இருந்ததாய் சிலர் கூறுகின்றனர்.உடைகளில் கவுரவம் என்பது, பெண்ணின் கருத்தோற்றத்திலும், பெண்ணை வெறித்துப் பார்க்கக் கூடாது என்ற கண்ணியம், ஆணின் கண்ணோட்டத்திலும் இயல்பாக வளர வேண்டியதே ஒரு நாகரிக சமூகத்தின், சரியான அளவுகோல். படங்கள் ஏற்படுத்தும் பரபரப்புகள் ஓய்ந்து விடும். ஏனெனில், உடை சார்ந்த மதிப்பீடுகள் காலத்திற்கு காலம் மாறுபவை. ஆனால், மாறாத மானுட மதிப்பீடு என்பது, ஆண் - பெண்ணை பார்க்கும் பார்வை. இவள் உடல் மட்டுமல்ல, ஒரு உயிர், ஒரு அறிவு, ஒரு ஆன்மா என்ற பார்வை இந்த மதிப்பீட்டை வளர் பருவ ஆணிடமும், பெண்ணிடமும் ஏற்படுத்த குடும்பங்கள், ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள், ஊடகங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நமக்கு வேறு என்ன தான் வழி?
இமெயில்: bharathy.பாஸ்கர் @ gmail.com
-- பாரதி பாஸ்கர்,
பேச்சாளர்,
சமூக ஆர்வலர்
எல்லா உடைகளுக்கும், ஒரு வரலாறும், ஒரு பின்புலமும் இருப்பது போலவே, லெக்கின்சிற்கும் ஒரு சரித்திரம் உண்டு. லெக்கின்ஸ் என்பது ஆண் - பெண் இருவருக்குமான உடையாகத் தான், ஆரம்பத்தில் இருந்தது. 16ம் நுாற்றாண்டிலிருந்து வலம் வரும் உடை இது. ஐரோப்பாவில் குளிர் தாங்காத ஆண்களும், பெண்களும் தங்கள் கால் சாராய் அல்லது பாவாடைகளுக்கு உள்ளே அணிந்து கொள்ளக் கண்டுபிடித்த உடையே லெக்கின்ஸ். அப்போதெல்லாம் ஒரு காலுக்கு ஒன்று என்று, இந்த உடைக்கு இரு பகுதிகள் இருக்கும். ஒருவழியாக, 1960க்கு பின், அமெரிக்காவில், இன்று இருப்பது போன்ற லெக்கின்ஸ் வடிவமைப்பு வந்தது. குளிர் தேசங்களுக்காக, நைலானில் மட்டுமே உருவாக்கப்பட்ட லெக்கின்ஸ், காட்டன் மற்றும் இன்ன பிற சன்னமான இழைகளால் உருவாக ஆரம்பித்ததும், இதே கால கட்டத்தில்தான்.
பின், கிழக்காசிய சந்தையில் ஊடுருவிய இந்த உடை, இந்தியப் பெண்களுக்கு பிடித்தமான உடையாகிப் போனது, கடந்த, 4 - 5 ஆண்டுகளில் தான். சென்னை போன்ற பெரு நகரங்களில், கடந்த இரு ஆண்டுகளாக!சல்வார் கமீஸ் என்கிற உடை, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பின், அதை அணியும் பெண்களுக்கு, ஒரு பெரிய பிரச்னை வந்தது. 'கமீஸ்' எனப்படும் மேல்சட்டை சரியாக அமைந்து விடும். கால் பகுதிக்கான, சல்வார் அல்லது சுரிதார் சரியாக அமையாது. 'சல்வாருக்கும், சுரிதாருக்கும் வித்தியாசம் தெரியாத பாவப்பட்டவர்களுக்கு, சல்வார் லொட லொட என்று இருக்கும். சுரிதார் வளையம் வளையமாக கால்களில் இறுக்கி இருக்கும்; 'ச்சூரி' என்றால், இந்தியில் வளையல். இந்தப் பிரச்னையை லெக்கின்ஸ் தீர்த்தது.
கறுப்பு, பச்சை, சிவப்பு என்று பொத்தாம் பொதுவான நிறங்களில், 5, 6 லெக்கின்ஸ் வாங்கி, கொடியில் தொங்கப் போட்டு விட்டால், கையில் கிடைக்கும் சல்வார் டாப்பை உருவி எடுத்து, 'மேட்ச்சிங்' லெக்கின்ஸ் அணிந்தால், பிரச்னை போயே போச்சு. காலைத் துாக்கி வண்டியில் போட சவுகரியம். உடலில் உறுத்தாத மென்மையான உடை என்கிற சவுகரியம். 'அயர்ன்' செய்ய வேண்டாம். இவை தான் இடைத்தேர்தலில் நிற்கிற ஆளுங்கட்சி மாதிரி, லெக்கின்ஸ் போட்டியின்றி ஜெயித்த காரணங்கள்.லெக்கின்ஸ் அணியலாமா என்று படம் பிடித்து போட்ட பத்திரிகைகள் யாவும், தம் பருத்த கால்களில், முக்கால் அளவு வெளியே தெரிய, அரை டிராயர் அணிந்து வரும் ஆண்களை அல்லது லுங்கியை துாக்கி, உள்ளே இருக்கும் பட்டா பட்டி உள் ஆடையை வெளிப்படுத்தும் ஆண்களை, படம் பிடித்து போடவே மாட்டார்கள்.
ஏனெனில், இவை எல்லாம் எவ்வளவு ஆபாசமேயானாலும், விற்பனை பொருளல்ல. பெண் உடல் சம்பந்தப்பட்ட எதுவும் தான் விற்பனை பொருள். இந்த விவாதங்கள் வரும் போது, 'நாங்க எதை போட்டுகிட்டா உங்களுக்கு என்ன; உங்க பார்வையை சரியா பாருங்க...' என்று பெண்கள் தரப்பும், 'உங்க பாதுகாப்புக்காகத் தான் நாங்க பேசறோம்...' என்று ஆண்கள் தரப்பும் எப்போதும் சப்தமிடுவர்ஜீன்ஸ் அணிந்த பெண், நீதிமன்றத்தில் நுழையலாமா? நீளக் குர்த்தி அணிந்திருந்தாலும், மேலே துப்பட்டா அணியாத பெண், கல்வி மன்றங்களில் நுழையலாமா? லெக்கின்ஸ் அணியலாமா கூடாதா? ஓயாத சர்ச்சைகள் பெண் உடைகள் பற்றி. டில்லி பஸ்சில் நடந்த, 'நிர்பயா' சம்பவத்திற்கு பின், பொறுப்பில் உள்ள ஒரு பிரமுகர், 'பெண்கள், நீண்ட கோட் மாதிரி உடைக்கு மேலே அணிந்தால், அவர்களுக்கு அது பாதுகாப்பு' எனக் கூறினார்.
இன்னமும், சிலர் வழங்கிய அறிவுரைகள், 'பெண்கள் ஒழுங்கா டிரஸ் செய்துக்கிட்டா, பாதி குற்றங்கள் நடக்காது!' பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரைகளும், குற்றவாளிகளுக்கு வாய்தாவும் வழங்கி கொண்டிருக்கும் நம் அமைப்பின் விசித்திரங்களில் அந்த அறிவுரைகளும் அடக்கம்.
லெக்கின்ஸ் உண்மையாகவே ஆபாச உடையா? நம் பண்பாட்டின் சின்னமாக போற்றப்படும் புடவையை கூட, மிக ஆபாசமாக அணிய சில பெண்களால் முடியும். தன்னை வெளிப்படுத்தி கொள்வதில் ஆர்வமும், தன்னை பார்த்து விரியும் ஆணின் கண்களில் தன் முக்கியத்துவத்தை உணரும் இச்சையும் கொண்ட சில பெண்களால், எந்த பவித்திரமான உடையையும் ஆபாசமாக்கி விட முடியும்.
ஐரோப்பாவில் லெக்கின்ஸ் விற்கப்பட்ட, 18 - 19ம் நுாற்றாண்டுகளில், 'உள்ளாடைகளின் விளிம்புகள் வெளியே தெரியக்கூடும்' என்ற எச்சரிக்கை வாசகம் விற்பனை அட்டைகளில் இருந்ததாய் சிலர் கூறுகின்றனர்.உடைகளில் கவுரவம் என்பது, பெண்ணின் கருத்தோற்றத்திலும், பெண்ணை வெறித்துப் பார்க்கக் கூடாது என்ற கண்ணியம், ஆணின் கண்ணோட்டத்திலும் இயல்பாக வளர வேண்டியதே ஒரு நாகரிக சமூகத்தின், சரியான அளவுகோல். படங்கள் ஏற்படுத்தும் பரபரப்புகள் ஓய்ந்து விடும். ஏனெனில், உடை சார்ந்த மதிப்பீடுகள் காலத்திற்கு காலம் மாறுபவை. ஆனால், மாறாத மானுட மதிப்பீடு என்பது, ஆண் - பெண்ணை பார்க்கும் பார்வை. இவள் உடல் மட்டுமல்ல, ஒரு உயிர், ஒரு அறிவு, ஒரு ஆன்மா என்ற பார்வை இந்த மதிப்பீட்டை வளர் பருவ ஆணிடமும், பெண்ணிடமும் ஏற்படுத்த குடும்பங்கள், ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள், ஊடகங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நமக்கு வேறு என்ன தான் வழி?
இமெயில்: bharathy.பாஸ்கர் @ gmail.com
-- பாரதி பாஸ்கர்,
பேச்சாளர்,
சமூக ஆர்வலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1166231ayyasamy ram wrote:நம் ஊரிலும் பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தில்
பெண்கள் ரவிக்கை இன்றி திரிந்த காலங்கள் உண்டு.
ஆண்களும் ஒரு லங்கோடுடன் திரிந்தனர்.
ஆக காலத்திற்கேற்ப, தேவைகளுக்கேற்ப உடைகளும்
மாறி வந்துள்ளன.
-
அதுக்காக இப்படியா ராம் அண்ணா .....முன்னேரூவதர்க்கு பதில் பின்னோக்கி போகிறோமே அடுத்தது கற்கால மனிதனின் உடைதானா?.......................கோபிக்காதீங்க ........ரொம்ப வருத்தமாய் இருக்கு
- VYASARபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 03/10/2015
நாம் என்ன செய்கின்றோம் என்று அவர்களை அறியாமலே செய்யும் செயல், சமுதாயத்தில் ஒரு தவறான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, தாங்கள் கேட்டுக் கொண்டபடி காலோடு இறுக்கிய ஆடை அணிவது குறித்த ஆங்கிலத்திலான கருத்தின் தமிழாக்கத்தை கீழே அளித்துள்ளேன்.
“காலோடு இறுக்கிய ஆடையை ஒரு உடையாக அணிவதாலான அபாயகரமான வெளிப்புறத்தோற்றத்தினை நீங்கள் அறியவில்லை. காலோடு இறுக்கிய ஆடை என்பது, அணிந்துகொண்டு தெருவில் நடக்கக்கூடிய ஒரு உடை அல்ல. அது உள்ளுக்குள் அணியக்கூடிய ஒரு தோலாடை. அது அடுத்தவர்களுக்கு காட்டக்கூடாது. அது உடல் அமைப்பின் வெளிவளைவுகளை மிகத்துல்லியமாக காட்டுகின்றது. காலோடு இறுக்கிய ஆடையை அணிவதன் மூலம், ஒரு பெண்ணை உடலில் ஆடை இல்லாமல் இயற்கையான நிறத்தில் பார்பதற்கு பதிலாக, ஒரு வித்தியாசமான நிறத்தில் காட்சியளிக்கின்றது. அது எந்த துணியாக இருந்தாலும், உடலோடு இறுக்கிய ஆடையானது ஒரு தோலாடை மட்டுமே, அது அடுத்தவரின் நேரடிப் பார்வைக்கு, தெரியக்கூடாத பெண்ணின் உள் உடற்பகுதியை காட்டும். நிர்வாணத்திற்கும், காலோடு இறுக்கிய ஆடையை அணிவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மற்றவர்கள்(ஆண்கள்) எப்படி உடை அணிகிறார்கள் என்று கவலைப்படவேண்டாம். அவர்கள் நிர்வாணமாகச் சென்றாலும் அது அவர்களை பாதிக்காது. ஆனால், பெண்ணின் விஷயத்தில் இது அவ்வாறு இல்லை. நினைத்து புத்தியுடன் உடை அணியுங்கள். இது, உடல் அமைப்பின் வெளிவளைவுகளை நிர்வாணமாக வெளிக்காட்டுகின்ற, காலோடு இறுக்கிய ஆடையை பெண்கள் அணிந்து வெளியே வர அனுமதித்த அவர்களின் பெற்றோர்களின் குற்றம். ஆடை தயாரிப்பாளர்களுக்கு, எப்படி மக்களை கவர்ந்து தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்வது என்ற கவலை தான் அவர்களுக்கு. மக்கள் தான் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும், இப்படிப்பட்ட உடைகளை ஏங்கே அணியவேண்டும் என்றும் நினைக்கவேண்டும். இதை ஒரு உள்ளாடையாக மட்டுமே பயன்படுத்த முடியும். இது சாதாரணமாக பொது மக்களுக்கானது அல்ல, மனமகிழ் மன்றத்தில் ஆட விரும்புபவர் அணிவது. இதை மட்டுமே அணிந்து பொது இடத்தில் வெளியே வருமளவான ஒப்பற்ற உடை இது அல்ல என்பதே உண்மை. அறிவுக்கூர்மையோடு சிந்தியுங்கள். உடை என்பது உடலை மூடுவதற்கு. அது உங்களின் உடல் உறுப்புக்களை நேரடியாக வெளிப்பார்வையில் மற்றவர்களின் உணர்வுகளை தவறாக தூண்டும்படி காட்டக்கூடாததாக இருக்க வேண்டும். அது மற்றவர்களின் குற்றம் அல்ல. ஆனால் அது இயற்கை ஈர்ப்பு. பெண்களுக்கு நேரடியாக அபாயகரமான வழிக்கு இட்டுச் செல்லும் அத்தகைய சூழ்நிலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்க்க முயற்சியுங்கள்”.
வியாசர்_குரல்
“காலோடு இறுக்கிய ஆடையை ஒரு உடையாக அணிவதாலான அபாயகரமான வெளிப்புறத்தோற்றத்தினை நீங்கள் அறியவில்லை. காலோடு இறுக்கிய ஆடை என்பது, அணிந்துகொண்டு தெருவில் நடக்கக்கூடிய ஒரு உடை அல்ல. அது உள்ளுக்குள் அணியக்கூடிய ஒரு தோலாடை. அது அடுத்தவர்களுக்கு காட்டக்கூடாது. அது உடல் அமைப்பின் வெளிவளைவுகளை மிகத்துல்லியமாக காட்டுகின்றது. காலோடு இறுக்கிய ஆடையை அணிவதன் மூலம், ஒரு பெண்ணை உடலில் ஆடை இல்லாமல் இயற்கையான நிறத்தில் பார்பதற்கு பதிலாக, ஒரு வித்தியாசமான நிறத்தில் காட்சியளிக்கின்றது. அது எந்த துணியாக இருந்தாலும், உடலோடு இறுக்கிய ஆடையானது ஒரு தோலாடை மட்டுமே, அது அடுத்தவரின் நேரடிப் பார்வைக்கு, தெரியக்கூடாத பெண்ணின் உள் உடற்பகுதியை காட்டும். நிர்வாணத்திற்கும், காலோடு இறுக்கிய ஆடையை அணிவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மற்றவர்கள்(ஆண்கள்) எப்படி உடை அணிகிறார்கள் என்று கவலைப்படவேண்டாம். அவர்கள் நிர்வாணமாகச் சென்றாலும் அது அவர்களை பாதிக்காது. ஆனால், பெண்ணின் விஷயத்தில் இது அவ்வாறு இல்லை. நினைத்து புத்தியுடன் உடை அணியுங்கள். இது, உடல் அமைப்பின் வெளிவளைவுகளை நிர்வாணமாக வெளிக்காட்டுகின்ற, காலோடு இறுக்கிய ஆடையை பெண்கள் அணிந்து வெளியே வர அனுமதித்த அவர்களின் பெற்றோர்களின் குற்றம். ஆடை தயாரிப்பாளர்களுக்கு, எப்படி மக்களை கவர்ந்து தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்வது என்ற கவலை தான் அவர்களுக்கு. மக்கள் தான் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும், இப்படிப்பட்ட உடைகளை ஏங்கே அணியவேண்டும் என்றும் நினைக்கவேண்டும். இதை ஒரு உள்ளாடையாக மட்டுமே பயன்படுத்த முடியும். இது சாதாரணமாக பொது மக்களுக்கானது அல்ல, மனமகிழ் மன்றத்தில் ஆட விரும்புபவர் அணிவது. இதை மட்டுமே அணிந்து பொது இடத்தில் வெளியே வருமளவான ஒப்பற்ற உடை இது அல்ல என்பதே உண்மை. அறிவுக்கூர்மையோடு சிந்தியுங்கள். உடை என்பது உடலை மூடுவதற்கு. அது உங்களின் உடல் உறுப்புக்களை நேரடியாக வெளிப்பார்வையில் மற்றவர்களின் உணர்வுகளை தவறாக தூண்டும்படி காட்டக்கூடாததாக இருக்க வேண்டும். அது மற்றவர்களின் குற்றம் அல்ல. ஆனால் அது இயற்கை ஈர்ப்பு. பெண்களுக்கு நேரடியாக அபாயகரமான வழிக்கு இட்டுச் செல்லும் அத்தகைய சூழ்நிலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்க்க முயற்சியுங்கள்”.
வியாசர்_குரல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இது ஒரு விவாத பிரச்சனை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
கருத்து உண்டு, அது தான் சரியென்றுவிவாதிக்கவும்
தோன்றும் ,எனவே இதை அவரவர் அவரவர்
விருப்பத்திற்கே விட்டு விடுவோம்.
- VYASARபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 03/10/2015
நீங்கள் சமுதாய நோக்கோடு மிகச்சரியான, தேவையான நேரத்தில் இந்த தலைப்பை கொண்டுவந்துள்ள உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஏதோ நாமும் விவாதத்தில் பங்கு கொள்ளலாம் என்று வரவில்லை. நான் பாரத நாட்டியம் மேடைகளில் ஆடியிருக்கின்றேன். அவ்வாறு ஆட பரதநாட்டிய ஆடை அணியும் முன்பாக , பாதுகாப்பு கருதி உள்ளுக்குள் உடலோடு ஒட்டிய முழங்கால் வரையான உள்ளாடை அணிந்து கொள்வோம். இது மற்றவர் முன்பாக ஒரு அறையில் ஆடைமாற்றும்போது தேவை என்பதற்காக அணிவது. அத்தகைய ஒரு ஆடையை கணுக்கால் வரை அணிந்து, அந்த உடையோடு தெருவில் வருவது என்பது எப்படிப்பட்டது என்பதை உணரவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது. இது அவர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்தில் உள்ள மக்கள் சம்பந்தப்பட்டது. தங்கள் விரும்பிய வாறெல்லாம் உடை அணிய முடியாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1181853VYASAR wrote:நீங்கள் சமுதாய நோக்கோடு மிகச்சரியான, தேவையான நேரத்தில் இந்த தலைப்பை கொண்டுவந்துள்ள உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஏதோ நாமும் விவாதத்தில் பங்கு கொள்ளலாம் என்று வரவில்லை. நான் பாரத நாட்டியம் மேடைகளில் ஆடியிருக்கின்றேன். அவ்வாறு ஆட பரதநாட்டிய ஆடை அணியும் முன்பாக , பாதுகாப்பு கருதி உள்ளுக்குள் உடலோடு ஒட்டிய முழங்கால் வரையான உள்ளாடை அணிந்து கொள்வோம். இது மற்றவர் முன்பாக ஒரு அறையில் ஆடைமாற்றும்போது தேவை என்பதற்காக அணிவது. அத்தகைய ஒரு ஆடையை கணுக்கால் வரை அணிந்து, அந்த உடையோடு தெருவில் வருவது என்பது எப்படிப்பட்டது என்பதை உணரவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது. இது அவர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்தில் உள்ள மக்கள் சம்பந்தப்பட்டது. தங்கள் விரும்பிய வாறெல்லாம் உடை அணிய முடியாது.
நீங்கள் சொல்வது முற்றிலும் ஒப்புக்கொள்ளக்கூடியதே .குளிர் காலத்தில் பாண்ட் அல்லது சுடிதாரின் உள்ளே போட்டுக் கொள்ள வேண்டிய உடையை வெளியே போட்டுக்கொண்டு வருவதால் நேரும் கொடுமை இது
.
.
.
உங்களைப்பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே !
VYASAR wrote:நீங்கள் சமுதாய நோக்கோடு மிகச்சரியான, தேவையான நேரத்தில் இந்த தலைப்பை கொண்டுவந்துள்ள உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஏதோ நாமும் விவாதத்தில் பங்கு கொள்ளலாம் என்று வரவில்லை. நான் பாரத நாட்டியம் மேடைகளில் ஆடியிருக்கின்றேன். அவ்வாறு ஆட பரதநாட்டிய ஆடை அணியும் முன்பாக , பாதுகாப்பு கருதி உள்ளுக்குள் உடலோடு ஒட்டிய முழங்கால் வரையான உள்ளாடை அணிந்து கொள்வோம். இது மற்றவர் முன்பாக ஒரு அறையில் ஆடைமாற்றும்போது தேவை என்பதற்காக அணிவது. அத்தகைய ஒரு ஆடையை கணுக்கால் வரை அணிந்து, அந்த உடையோடு தெருவில் வருவது என்பது எப்படிப்பட்டது என்பதை உணரவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது. இது அவர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்தில் உள்ள மக்கள் சம்பந்தப்பட்டது. தங்கள் விரும்பிய வாறெல்லாம் உடை அணிய முடியாது.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|