புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவத் துளிகள்
Page 11 of 11 •
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
உலகத்தில் பல வகையான மனிதர்களை நாம் காணலாம். முதலில் தெய்வ மனிதர்கள். இவர்களின் தன்னல மறுப்பு பரிபூரணமானது. தங்கள் உயிரைக்கொடுத்தும் பிறருக்கு நன்மைகளை மட்டுமே செய்பவர்கள் இவர்கள். இவர்களே மனிதர்களுள் உயர்ந்தவர்கள் . இத்தகையோர் ஒரு நாட்டில் நூறு பேர் இருந்தாலும் போதும் அந்த நாடு எதற்கும் கவலை பட வேண்டியதில்லை.>>> சுவாமி விவேகானந்தர்.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
52. ஆவினத்தின் அவதி!
(அளவியல் இன்னிசை வெண்பா)
அனுதினமும் மாலையில் ஆவினம் மூன்று
கனமாக வாசலில் காட்சிதர வல்லவி
காய்கனித்தோல் தந்தே கனிவோ டவைமூன்றும்
ஆய்ந்துண்ணல் காணும் அழகு. ... 1
[வல்லவி = மனைவி]
நானுமென் பங்கிற்கு நாலைந்து மாங்கொப்பு
கூனியே கம்பிவழிக் கொட்டுவேன் - காவிநுதல்
மெல்லத் தடவியவை மேனி சிலிர்ப்பதில்
சொல்லத் தெரியாச் சுகம். ... 2
போக்கிடம் இன்றிப் பொழிந்தநீர் வெள்ளத்தில்
சாக்கடை மூடிவழிச் சாய்ந்தவை சென்றே
பழைய கருவோலைப் பந்தல் பிரிப்பைத்
தழையெனக் கொள்ளும் தவிப்பு. ... 3
--ரமணி, 23/11/2015
*****
(அளவியல் இன்னிசை வெண்பா)
அனுதினமும் மாலையில் ஆவினம் மூன்று
கனமாக வாசலில் காட்சிதர வல்லவி
காய்கனித்தோல் தந்தே கனிவோ டவைமூன்றும்
ஆய்ந்துண்ணல் காணும் அழகு. ... 1
[வல்லவி = மனைவி]
நானுமென் பங்கிற்கு நாலைந்து மாங்கொப்பு
கூனியே கம்பிவழிக் கொட்டுவேன் - காவிநுதல்
மெல்லத் தடவியவை மேனி சிலிர்ப்பதில்
சொல்லத் தெரியாச் சுகம். ... 2
போக்கிடம் இன்றிப் பொழிந்தநீர் வெள்ளத்தில்
சாக்கடை மூடிவழிச் சாய்ந்தவை சென்றே
பழைய கருவோலைப் பந்தல் பிரிப்பைத்
தழையெனக் கொள்ளும் தவிப்பு. ... 3
--ரமணி, 23/11/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
53. சின்ன வயதில் சேமிப்பு!
(அளவியல் இன்னிசை வெண்பா)
ஓட்டையாய்க் காலணா ஒவ்வோர் விரலிலும்
பாட்டுடன் தாளம் தகரடப் பாவிலே
மெட்டியாய்க் கால்விரல் போட்டேன் - தலையிலே
குட்டுவாங் கிக்கண் குளம். ... 1
நயாபைசாச் சட்டை அணிந்தே நடந்தோம்
தயாராய்க்கை பற்றியே தந்தையார் தந்ததைக்
கண்ணிலே ஒற்றிக் கரத்தால் வருடிமண்
உண்டியலில் சேர்த்தோம் உடன். ... 2
உண்டியல்வாய் முட்ட உடைத்தே தகப்பனார்
கண்படும் காசுகள் கட்டித் தொகுப்பார்
வகைக்கொரு பத்தாய் வளர்ந்துநிற்கும் தூணாய்த்
தகைத்திடுவார் காகிதத் தால். ... 3
தூண்களாய் நாணயம் தூங்குமோர் பெட்டியில்
நீண்டநாள் ஆக நெகிழ்த்தியே தந்தை
பலவகை யான பரிசுகள் ஆக்கக்
குலவும் மனத்திலே கூத்து. ... 4
--ரமணி, 24/11/2015
*****
(அளவியல் இன்னிசை வெண்பா)
ஓட்டையாய்க் காலணா ஒவ்வோர் விரலிலும்
பாட்டுடன் தாளம் தகரடப் பாவிலே
மெட்டியாய்க் கால்விரல் போட்டேன் - தலையிலே
குட்டுவாங் கிக்கண் குளம். ... 1
நயாபைசாச் சட்டை அணிந்தே நடந்தோம்
தயாராய்க்கை பற்றியே தந்தையார் தந்ததைக்
கண்ணிலே ஒற்றிக் கரத்தால் வருடிமண்
உண்டியலில் சேர்த்தோம் உடன். ... 2
உண்டியல்வாய் முட்ட உடைத்தே தகப்பனார்
கண்படும் காசுகள் கட்டித் தொகுப்பார்
வகைக்கொரு பத்தாய் வளர்ந்துநிற்கும் தூணாய்த்
தகைத்திடுவார் காகிதத் தால். ... 3
தூண்களாய் நாணயம் தூங்குமோர் பெட்டியில்
நீண்டநாள் ஆக நெகிழ்த்தியே தந்தை
பலவகை யான பரிசுகள் ஆக்கக்
குலவும் மனத்திலே கூத்து. ... 4
--ரமணி, 24/11/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
54. வற்றாத உற்சாகம் சிற்றப்பா!
(அளவியல் நேரிசை/இன்னிசை வெண்பா)
ஒவ்வொரு நாளும் ஒருரூபாய் என்றவர்
செவ்விதின் சேர்த்தேயென் சிற்றப்பா - அவ்விதம்
பார்த்த பணத்தில் பலவூர்ப் பயணமாம்
சேர்ந்தே குடும்பத் துடன். ... 1
கோடையில் கானலோ கூனூரோ ஊட்டியோ
வாடையில் சென்னைபோல் வாரிக் கரையூர்
வருடம் ஒருமுறை வாகாய் அமைத்தார்
திருத்தல யாத்திரை யோடு. ... 2
உலகியல் ஆன்ம ஒழுக்கம் இரண்டின்
கலவையாய் வாழ்ந்தார் கனிவுடன் வாழ்ந்தார்
இனியவர் பார்க்கப் பழகவென வாழ்ந்தார்
இனியவர் நெஞ்சில் என. ... 3
--ரமணி, 25/11/2015
*****
(அளவியல் நேரிசை/இன்னிசை வெண்பா)
ஒவ்வொரு நாளும் ஒருரூபாய் என்றவர்
செவ்விதின் சேர்த்தேயென் சிற்றப்பா - அவ்விதம்
பார்த்த பணத்தில் பலவூர்ப் பயணமாம்
சேர்ந்தே குடும்பத் துடன். ... 1
கோடையில் கானலோ கூனூரோ ஊட்டியோ
வாடையில் சென்னைபோல் வாரிக் கரையூர்
வருடம் ஒருமுறை வாகாய் அமைத்தார்
திருத்தல யாத்திரை யோடு. ... 2
உலகியல் ஆன்ம ஒழுக்கம் இரண்டின்
கலவையாய் வாழ்ந்தார் கனிவுடன் வாழ்ந்தார்
இனியவர் பார்க்கப் பழகவென வாழ்ந்தார்
இனியவர் நெஞ்சில் என. ... 3
--ரமணி, 25/11/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
55. சின்ன வயதுச் சேட்டைகள்!
(அளவியல் இன்னிசை வெண்பா)
ஆதாரப் பள்ளி அறிமுகம்; ஆசிரியர்
தோதாக ஜிப்பாவில் தொங்குகை விட்டே
புகையிலை பிய்த்தவர் பொக்கைவாய் இட்டால்
வகையாய்ப்பா டம்வாய் வரும். ... 1
மூக்குப் பொடியினை மூன்றாம் வகுப்பாசான்
தூக்கி உதறித் துளித்துளியாய் மூக்கில்
நுழைத்தே விரல்கள் நொடித்ததுகண் டேநான்
விழைந்ததில் கண்ணீர் விடை! ... 2
காகித அம்பு களிப்பில் ஒருவன்மேல்
ஏகமாய் எய்ததில் ஒன்று முதல்வர்
அறைசன்னல் உட்புக ஆடிப்போ னேனே
அறைவாங்கா இன்ப அதிர்வு! ... 3
ஐந்தாம் வகுப்பிலே ஆசிரியர் பாடமாய்ப்
பைந்தமிழ்ப் பாவெழுதிப் பக்கம்போய் நின்றவர்
போண்டாவைத் தின்ற பொழுதுகள் இப்போது
தீண்டும் மனத்தில்தித் திப்பு. ... 4
சின்ன வயதிலே செய்தபல சேட்டைகள்
தின்னும் மனத்தில் திகைப்புடன் தித்திப்பும்!
இன்றைய பிள்ளைகள் இத்தகு இன்பமின்றிக்
கன்றிலே ஆவர் கனி. ... 5
--ரமணி, 26/11/2015
*****
(அளவியல் இன்னிசை வெண்பா)
ஆதாரப் பள்ளி அறிமுகம்; ஆசிரியர்
தோதாக ஜிப்பாவில் தொங்குகை விட்டே
புகையிலை பிய்த்தவர் பொக்கைவாய் இட்டால்
வகையாய்ப்பா டம்வாய் வரும். ... 1
மூக்குப் பொடியினை மூன்றாம் வகுப்பாசான்
தூக்கி உதறித் துளித்துளியாய் மூக்கில்
நுழைத்தே விரல்கள் நொடித்ததுகண் டேநான்
விழைந்ததில் கண்ணீர் விடை! ... 2
காகித அம்பு களிப்பில் ஒருவன்மேல்
ஏகமாய் எய்ததில் ஒன்று முதல்வர்
அறைசன்னல் உட்புக ஆடிப்போ னேனே
அறைவாங்கா இன்ப அதிர்வு! ... 3
ஐந்தாம் வகுப்பிலே ஆசிரியர் பாடமாய்ப்
பைந்தமிழ்ப் பாவெழுதிப் பக்கம்போய் நின்றவர்
போண்டாவைத் தின்ற பொழுதுகள் இப்போது
தீண்டும் மனத்தில்தித் திப்பு. ... 4
சின்ன வயதிலே செய்தபல சேட்டைகள்
தின்னும் மனத்தில் திகைப்புடன் தித்திப்பும்!
இன்றைய பிள்ளைகள் இத்தகு இன்பமின்றிக்
கன்றிலே ஆவர் கனி. ... 5
--ரமணி, 26/11/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
57. அகத்தில் குடிவந்த பள்ளி!
(பஃறொடை வெண்பா)
தாத்தாவோர் நாள்பார்த்துத் தக்கசகு னம்பாட்டி
பார்த்துத்தம் பேரனைப் பள்ளிக் கனுப்பப்
புதிய சிலேட்டைப் புதுப்பையில் வைத்தே
புதுப்பையைத் தோளிலே தோகை விரித்தே
முகத்திலே புன்னகை முன்னிற்கப் பள்ளி
அகத்தில் குடிவந்த(து) அன்று. ... 1
முதல்வரவர் சேர்க்கைப் பதிவு முடிக்க
மிதக்குமோர் காகிதநா வாய்போல் கதிரொளி
முற்றத்தில் ஊர்ந்திடச் சுற்றி வகுப்பிலே
உற்றவா சானிடம் ஒப்படைத் தார்தாத்தா
கண்ணாடி ஆசான் கனிவில் பலவகைப்
பண்புடன் நண்பர் பலர். ... 2
பாரதி வாழ்த்திய பாரதம் காலையில்
சாரதி யாயொரு காரிகை பாடச்
சிறுவர் சிறுமியர் சேர்ந்தொலித்த கூத்துடன்
ஏறிப் பறக்கும் மணிக்கொடி ஏற்றியே
திங்கட் கிழமையதைச் சிந்தை நிறைத்தோமே!
தங்கத் தமிழுடன் தாய்நாட்டை மாலையில்
மீண்டுமோர் கூடலில் மீசைக் கவிநினைத்த
ஆண்டுகள் நாட்கள் அசையும் மனத்திலே
வண்ண மலர்கள் மணம்வீசும் பற்பலவாய்
எண்ணநெகிழ்ப் பந்தாய் எழும். ... 3
[நெகிழ்ப் பந்து = பலூன்]
[பள்ளிக் கூடலில் பாடிய பாரதி பாடல்கள்:
காலை: பாரத சமுதாயம் வாழ்கவே
மாலை: வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
திங்கள் காலை: தாயின் மணிக்கொடி பாரீர்]
--ரமணி, 28/11/2015
*****
(பஃறொடை வெண்பா)
தாத்தாவோர் நாள்பார்த்துத் தக்கசகு னம்பாட்டி
பார்த்துத்தம் பேரனைப் பள்ளிக் கனுப்பப்
புதிய சிலேட்டைப் புதுப்பையில் வைத்தே
புதுப்பையைத் தோளிலே தோகை விரித்தே
முகத்திலே புன்னகை முன்னிற்கப் பள்ளி
அகத்தில் குடிவந்த(து) அன்று. ... 1
முதல்வரவர் சேர்க்கைப் பதிவு முடிக்க
மிதக்குமோர் காகிதநா வாய்போல் கதிரொளி
முற்றத்தில் ஊர்ந்திடச் சுற்றி வகுப்பிலே
உற்றவா சானிடம் ஒப்படைத் தார்தாத்தா
கண்ணாடி ஆசான் கனிவில் பலவகைப்
பண்புடன் நண்பர் பலர். ... 2
பாரதி வாழ்த்திய பாரதம் காலையில்
சாரதி யாயொரு காரிகை பாடச்
சிறுவர் சிறுமியர் சேர்ந்தொலித்த கூத்துடன்
ஏறிப் பறக்கும் மணிக்கொடி ஏற்றியே
திங்கட் கிழமையதைச் சிந்தை நிறைத்தோமே!
தங்கத் தமிழுடன் தாய்நாட்டை மாலையில்
மீண்டுமோர் கூடலில் மீசைக் கவிநினைத்த
ஆண்டுகள் நாட்கள் அசையும் மனத்திலே
வண்ண மலர்கள் மணம்வீசும் பற்பலவாய்
எண்ணநெகிழ்ப் பந்தாய் எழும். ... 3
[நெகிழ்ப் பந்து = பலூன்]
[பள்ளிக் கூடலில் பாடிய பாரதி பாடல்கள்:
காலை: பாரத சமுதாயம் வாழ்கவே
மாலை: வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
திங்கள் காலை: தாயின் மணிக்கொடி பாரீர்]
--ரமணி, 28/11/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
58. முகிற் கள்வன்!
(அளவியல் இன்னிசை வெண்பா)
முதுகில் முகிலெனும் மூட்டை சுமந்தே
மெதுவாய் நகர்ந்திடும் மேல்வளிக் கள்வனை
எய்த கணையால் இரவி வெருட்டவே
வெய்யிலிற் கொட்டும் விசும்பு.
[மேல்வளி = மேல் காற்று; இரவி = சூரியன்]
--ரமணி, 29/11/2015
*****
(அளவியல் இன்னிசை வெண்பா)
முதுகில் முகிலெனும் மூட்டை சுமந்தே
மெதுவாய் நகர்ந்திடும் மேல்வளிக் கள்வனை
எய்த கணையால் இரவி வெருட்டவே
வெய்யிலிற் கொட்டும் விசும்பு.
[மேல்வளி = மேல் காற்று; இரவி = சூரியன்]
--ரமணி, 29/11/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
59. திரையில் வந்ததால் திரும்பினோம்!
(கலி வெண்பா)
வங்கியில் வேலை வெளிமா நிலத்திலே
அங்கே புதிய சகாக்கள் அறிமுகம்!
ஐதரா பாத்-அது ஆந்திர மாநிலச்
செய்திகள் மிக்க திருத்தலைப் பேரூராம்
நண்பர்கள் மூவருடன் நானாங் கிலப்படம்
கண்தேக்கிப் பார்க்கக் கடுஞ்சினம் கண்மறைக்க
நண்பனின் நானறியா நண்பன் திரையிலே
கண்ணில் நழுவுமோர் கண்ணாடிச் செய்தியிடப்
பாதிப் படத்தில் பதறிவெளி வந்ததிலே
ஏதென்னை விட்டீர்கள் என்றானே பார்க்கலாம்!
நண்பனை நானறியா நண்பனை விட்டின்னோர்
நண்பனுடன் மற்றைநாள் நான்படம் பார்த்தது
கண்களில் இன்றும் களிப்பு.
[பார்த்த ஆங்கிலப்படம்: Close Encounters of the Third Kind;
கண்ணில் நழுவுமோர் கண்ணாடிச் செய்தி = சினிமாத் திரையில்
காட்டும் ஸ்லைட் விளம்பரங்கள், செய்திகள்]
--ரமணி, 29/11/2015
*****
(கலி வெண்பா)
வங்கியில் வேலை வெளிமா நிலத்திலே
அங்கே புதிய சகாக்கள் அறிமுகம்!
ஐதரா பாத்-அது ஆந்திர மாநிலச்
செய்திகள் மிக்க திருத்தலைப் பேரூராம்
நண்பர்கள் மூவருடன் நானாங் கிலப்படம்
கண்தேக்கிப் பார்க்கக் கடுஞ்சினம் கண்மறைக்க
நண்பனின் நானறியா நண்பன் திரையிலே
கண்ணில் நழுவுமோர் கண்ணாடிச் செய்தியிடப்
பாதிப் படத்தில் பதறிவெளி வந்ததிலே
ஏதென்னை விட்டீர்கள் என்றானே பார்க்கலாம்!
நண்பனை நானறியா நண்பனை விட்டின்னோர்
நண்பனுடன் மற்றைநாள் நான்படம் பார்த்தது
கண்களில் இன்றும் களிப்பு.
[பார்த்த ஆங்கிலப்படம்: Close Encounters of the Third Kind;
கண்ணில் நழுவுமோர் கண்ணாடிச் செய்தி = சினிமாத் திரையில்
காட்டும் ஸ்லைட் விளம்பரங்கள், செய்திகள்]
--ரமணி, 29/11/2015
*****
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
61. முதல் தேதி!
(அளவியல் இன்னிசை வெண்பா)
மாதமுதல் தேதி மணக்குமே சம்பளக்கை!
காதலுடன் தந்தை கரன்சி ஒருரூபாய்க்
கட்டினைக் காட்டக் களிப்பில் முகர்ந்தேநான்
கட்டினேன் கோட்டை களை. ... 1
கட்டியல் வாவுடன் காராச்சே வும்கையில்
வெட்டியே உண்டோம் விழிகள் விரிந்திட
சம்பளம் தந்த சலுகை முதல்தேதி
கம்பளத்தில் ரத்தினக் கல்! ... 2
தினமுமொரு ரூபாயில் தீரும் செலவு
மனக்கணக் கில்பூபால் வாங்கும் செலவும்
மளிகைக் கணக்குமுதல் வாரத்தில் தீர்த்தே
தளிகை நடந்த தரம். ... 3
கையிலே சில்லறையாய் மிஞ்சிடும் காசுகள்
செய்யும் சிறப்பு தெரிந்தெம தன்னை
கடுகு மிளகு கடுக்காய்டப் பாவுள்
அடியில்சே மித்தாள் அவள். ... 4
சனிக்கிழமை மாலையில் சாதுவாய் நாங்கள்
பனகல்பூங் காவில் பரவி அமர்ந்து
கொறித்திடுவோம் வேர்க்கடலை கொஞ்சுமொழி பேசி
அறிந்துமறி யாநாள் அவை. ... 5
வீட்டுவா சல்முன்னே வீசிய காற்றிலே
கேட்டறிந்தோம் பேசினோம் கிள்ளையாய்க் காதைபல
பள்ளி அறியாப் பருவத்தின் பாடமின்றும்
பள்ளமும் மேடும் சொலும். ... 6
படுக்கை உதறித் தலையணை தட்டி
வெடிபோலச் சத்தம் விளைவித்தே தந்தை
கனிவுடன் எங்களைக் கண்மூடச் செய்யக்
கனவுலகில் எங்கள் கதி. ... 7
--ரமணி, 09/12/2015
*****
(அளவியல் இன்னிசை வெண்பா)
மாதமுதல் தேதி மணக்குமே சம்பளக்கை!
காதலுடன் தந்தை கரன்சி ஒருரூபாய்க்
கட்டினைக் காட்டக் களிப்பில் முகர்ந்தேநான்
கட்டினேன் கோட்டை களை. ... 1
கட்டியல் வாவுடன் காராச்சே வும்கையில்
வெட்டியே உண்டோம் விழிகள் விரிந்திட
சம்பளம் தந்த சலுகை முதல்தேதி
கம்பளத்தில் ரத்தினக் கல்! ... 2
தினமுமொரு ரூபாயில் தீரும் செலவு
மனக்கணக் கில்பூபால் வாங்கும் செலவும்
மளிகைக் கணக்குமுதல் வாரத்தில் தீர்த்தே
தளிகை நடந்த தரம். ... 3
கையிலே சில்லறையாய் மிஞ்சிடும் காசுகள்
செய்யும் சிறப்பு தெரிந்தெம தன்னை
கடுகு மிளகு கடுக்காய்டப் பாவுள்
அடியில்சே மித்தாள் அவள். ... 4
சனிக்கிழமை மாலையில் சாதுவாய் நாங்கள்
பனகல்பூங் காவில் பரவி அமர்ந்து
கொறித்திடுவோம் வேர்க்கடலை கொஞ்சுமொழி பேசி
அறிந்துமறி யாநாள் அவை. ... 5
வீட்டுவா சல்முன்னே வீசிய காற்றிலே
கேட்டறிந்தோம் பேசினோம் கிள்ளையாய்க் காதைபல
பள்ளி அறியாப் பருவத்தின் பாடமின்றும்
பள்ளமும் மேடும் சொலும். ... 6
படுக்கை உதறித் தலையணை தட்டி
வெடிபோலச் சத்தம் விளைவித்தே தந்தை
கனிவுடன் எங்களைக் கண்மூடச் செய்யக்
கனவுலகில் எங்கள் கதி. ... 7
--ரமணி, 09/12/2015
*****
- Sponsored content
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 11
|
|