புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆகமம் என்றால் என்ன?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
இன்று (16 12 2015) ஆகமவிதிகளின்படிதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆகமம் என்பது பற்றி அரசியல்வாதிகளுக்கோ, பொதுமக்களுக்கோ, வழக்காடுமன்றத்தில் இருப்பவர்களுக்கோ தெரியுமா ?......... என்று கேட்பதைவிட முதலில் கோயில் தொடர்புடையவர்களுக்கு தெரியுமா? என்று கேட்டால்........பதிலை மிகத்தெளிவாகச் சொல்லலாம்.
??????????????????????????????????????????????????????
தெரியாது! தெரியாது!! தெரியாது!!!...................சிலருக்கு ஒருசில தெரியலாம். முழுமையாக தெரிந்தவர்கள் யார் எனில் விரல்விட்டு எண்ணிவிடலாம்.
சரி. கோயில் தொடர்புடையவர்கள் யார்?
அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், கோயில் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள், பத்தர்கள் ....... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இவர்களின் நலனுக்காக ஆகமம் பற்றிய ஒரு சுவையான திரி இது! பின்னூட்டங்கள் அளித்தால் மகிழ்ச்சியாக உங்களோடு நானும் பயணம் செய்வேன்!
(தொடரும்)
இன்று (16 12 2015) ஆகமவிதிகளின்படிதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆகமம் என்பது பற்றி அரசியல்வாதிகளுக்கோ, பொதுமக்களுக்கோ, வழக்காடுமன்றத்தில் இருப்பவர்களுக்கோ தெரியுமா ?......... என்று கேட்பதைவிட முதலில் கோயில் தொடர்புடையவர்களுக்கு தெரியுமா? என்று கேட்டால்........பதிலை மிகத்தெளிவாகச் சொல்லலாம்.
??????????????????????????????????????????????????????
தெரியாது! தெரியாது!! தெரியாது!!!...................சிலருக்கு ஒருசில தெரியலாம். முழுமையாக தெரிந்தவர்கள் யார் எனில் விரல்விட்டு எண்ணிவிடலாம்.
சரி. கோயில் தொடர்புடையவர்கள் யார்?
அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், கோயில் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள், பத்தர்கள் ....... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இவர்களின் நலனுக்காக ஆகமம் பற்றிய ஒரு சுவையான திரி இது! பின்னூட்டங்கள் அளித்தால் மகிழ்ச்சியாக உங்களோடு நானும் பயணம் செய்வேன்!
(தொடரும்)
5) சிவபெருமான் அளித்த அந்த ஆகமங்கள் இப்போது உள்ளனவா?
ஏறத்தாழ மூன்று பெரிய கடற்கோள்களால் அன்று இருந்த தமிழ்நாட்டின் பெரும்பகுதி கடலில் மூழ்கியது.
தி.பி முதல் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் சங்கநூலான “இறையனார் களவியல்” என்ற நூலுக்கு அக்காலத்திய நக்கீரர் எழுதிய உரையில் குமரிக் கண்டத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது.
குமரிக்கண்டமானது தற்போதைய கன்னியாகுமரியிலிருந்து 750 காவதம் அதாவது 7500 மைல் தூரம் தெற்கே பரவியிருந்ததாகவும், அவையெல்லாம் மிகப்பெரிய மூன்று கடற்கோள்களினால் மெல்ல மெல்ல கடலுள் மூழ்கிவிட்டதாகவும் குறிப்புகள் கிடைக்கின்றன. மூழ்கிய நாடுகளின் பெயரும் கிடைக்கின்றன.
இவற்றையெல்லாம் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் தனது உரையில் குறிப்பிட்டு உறுதி செய்கிறார்.
பேரழிவினால் கட்டடங்கள் மறைந்தன; காட்சிகள் மாறின என்பதெல்லாம் ஒரு புறமிருக்க, தமிழர்களின் உயிரோட்டமான பண்பாட்டுக் கூறுகள் அடங்கிய ஆகமம் சிதைந்து சின்னா பின்னமானதே பெருங்கொடுமை. இக்கடல் கோள்களுக்குத் தப்பி உயிர் பிழைத்தோர்கள் நினைவில் தங்கிய ஆகமங்களின் கூறுகளே பின்தொடர்ந்தன. அவையும் காலக்கோளாறினால் பல சிதைவுகளைப் பெற்றன.
இந்த நிலையில் தான் சொன்ன ஆகமத்தை மீண்டும் மீட்டெடுக்க இறைவன் ஒரு உபாயம் செய்தான். அது என்ன?
(தொடரும்)
ஏறத்தாழ மூன்று பெரிய கடற்கோள்களால் அன்று இருந்த தமிழ்நாட்டின் பெரும்பகுதி கடலில் மூழ்கியது.
தி.பி முதல் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் சங்கநூலான “இறையனார் களவியல்” என்ற நூலுக்கு அக்காலத்திய நக்கீரர் எழுதிய உரையில் குமரிக் கண்டத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது.
குமரிக்கண்டமானது தற்போதைய கன்னியாகுமரியிலிருந்து 750 காவதம் அதாவது 7500 மைல் தூரம் தெற்கே பரவியிருந்ததாகவும், அவையெல்லாம் மிகப்பெரிய மூன்று கடற்கோள்களினால் மெல்ல மெல்ல கடலுள் மூழ்கிவிட்டதாகவும் குறிப்புகள் கிடைக்கின்றன. மூழ்கிய நாடுகளின் பெயரும் கிடைக்கின்றன.
இவற்றையெல்லாம் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் தனது உரையில் குறிப்பிட்டு உறுதி செய்கிறார்.
பேரழிவினால் கட்டடங்கள் மறைந்தன; காட்சிகள் மாறின என்பதெல்லாம் ஒரு புறமிருக்க, தமிழர்களின் உயிரோட்டமான பண்பாட்டுக் கூறுகள் அடங்கிய ஆகமம் சிதைந்து சின்னா பின்னமானதே பெருங்கொடுமை. இக்கடல் கோள்களுக்குத் தப்பி உயிர் பிழைத்தோர்கள் நினைவில் தங்கிய ஆகமங்களின் கூறுகளே பின்தொடர்ந்தன. அவையும் காலக்கோளாறினால் பல சிதைவுகளைப் பெற்றன.
இந்த நிலையில் தான் சொன்ன ஆகமத்தை மீண்டும் மீட்டெடுக்க இறைவன் ஒரு உபாயம் செய்தான். அது என்ன?
(தொடரும்)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181318சாமி wrote:
இந்தத் தமிழ் முனிவர்களுக்குத்தான் சிவபெருமான் நான்கு வேதங்களான அறம், பொருள், இன்பம் , வீடு இவற்றின் உட்கிடையான ஆகமங்களைப் போதித்தான். இது பல திருமுறைப்பாடல்களில் பல அருளாளர்களினால் சொல்லப்படுகிறது.
சிவபெருமானுக்கு ‘ஆலமர்ச்செல்வன்’ என்ற பெயர் இருப்பதை நாம் கேள்விப் பட்டிருப்போம். அதாவது ஆலமரநிழலின் கீழிருந்து நான்கு வேதங்களையும் அதன் உட்பொருளான ஆகமத்தையும் சில முனிவர்களுக்கு உபதேசித்தான்.
அருமையான பதிவு ஐயா,பல அரிய சரித்திர தகவலும் நன்றி ஐயா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181342சாமி wrote:
ஏறத்தாழ மூன்று பெரிய கடற்கோள்களால் அன்று இருந்த தமிழ்நாட்டின் பெரும்பகுதி கடலில் மூழ்கியது.
இவற்றையெல்லாம் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் தனது உரையில் குறிப்பிட்டு உறுதி செய்கிறார்.
பேரழிவினால் கட்டடங்கள் மறைந்தன; காட்சிகள் மாறின என்பதெல்லாம் ஒரு புறமிருக்க, தமிழர்களின் உயிரோட்டமான பண்பாட்டுக் கூறுகள் அடங்கிய ஆகமம் சிதைந்து சின்னா பின்னமானதே பெருங்கொடுமை. இக்கடல் கோள்களுக்குத் தப்பி உயிர் பிழைத்தோர்கள் நினைவில் தங்கிய ஆகமங்களின் கூறுகளே பின்தொடர்ந்தன. அவையும் காலக்கோளாறினால் பல சிதைவுகளைப் பெற்றன.
அற்புத விளக்கம் ஐயா,நன்றி.
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
ஆகமத்தை பற்றி தெறிந்து கொள்ளும் அதேவேளையில் தமிழ் குடி யின் வரலாற்றை நாங்கள் அறிந்து கொள்ள இந்த திரி உதவியாக உள்ளது.
நன்றி சுவாமி
நன்றி சுவாமி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
6) ஆகமத்தை மீட்டெடுக்க இறைவன் செய்த உபாயம்:-
இமயமலைச் சாரலிலிருந்து மிகப் பழமையான காலத்தில் ஒரு முனிவர் தெற்கே பொதிகை நோக்கிப் புறப்பட்டார். அவர் பெயர் சுந்தரநாதர். பொதிய மலையில் அக்காலத்திலிருந்த அகத்தியரை அவர் சந்திக்கப் புறப்பட்டார்.
இந்த நெடும்பயணத்தில் தெற்கெ திருவாவடுதுறைக்கு அருகே சாத்தனூர் என்ற ஊர் அருகில் ஒரு மேய்ச்சல் நிலத்தைத் தாண்டி வந்து கொண்டிருக்கும்போது அவருக்கு ஒரு புதுமையான காட்சி தென்பட்டது.
மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் எல்லாம் கூடி ஓர் இடத்தில் வட்டமிட்டு நின்று கொண்டிருந்தன. எட்டிப் பார்த்தபோது நடுவே ஒரு மனிதன் இறந்து கிடந்தான். அவனை இந்த மாடுகள் உடலெங்கும் நக்கிக் கொடுத்தன. அவைகளின் கண்களிலிருந்து நீர் கொட்டிக் கொண்டிருந்தன. இறந்த மனிதன் கையில் கோல் இருந்தது. எனவே, இவன் இந்த மாடுகளை மேய்த்தவனாக இருப்பான் என்றும் திடீரென இறந்துவிட்டதால் அவன்பால் அன்பு கொண்ட மாடுகள் அவன் உடலைச் சூழ்ந்து நின்று நக்கிக் கொடுத்து அவனது பிரிவால் துயருற்று கண்ணீர் சொரிந்தன என்பதை சுந்தரநாதர் ஊகித்தறிந்தார்.
மாடுகள் அந்த இடையன் மீது காட்டிய அன்பு அவரை என்னவோ செய்தது. உடன் அந்தப் பசுக்களின் துயரைப் போக்க எண்ணம் கொண்டார். தனக்குத் தெரிந்த கூடுவிட்டு கூடு பயும் சித்தியை மாடுகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்த முனைந்தார். தமது உடலிலிருந்து அந்த இடையனின் உடலில் புகுந்தார். உடன் எச்சரிக்கையாக தமது உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்துப் பத்திரப் படுத்தினார்.
இடையன் எழுந்து கொண்டான் என மாடுகள் மகிழ்ந்து, அதன் அடையாளமாக வாலை நிமிர்த்தி வானை நோக்கி, ‘அம்மா…. அம்மா…’ என்று பெரு முழக்கம் செய்தன. மாலை வந்தது. மாடுகளை ஓட்டி ஊருக்குச் சென்றார் சுந்தரநாதர்.
ஊரில் இவரைப்பார்த்து மூலன் என்று பிறர் அழைத்தது கண்டு, அந்த இடையனின் பெயரைத் தெரிந்து கொண்டார்.
மூலனது மனைவி மூலராக எழுந்து வந்த சுந்தரநாதரைத் தனது கணவன் என்று நெருங்கினாள். பதைத்துப் போன திருமூலர் (இப்பொழுது இருந்து அவர் பெயர் திருமூலர் ஆயிற்று) ஊர்ப் பெரியவர்களின் துணையோடு நடந்ததைக் கூறி இடையனது மனைவியிடமிருந்து தப்பி மேய்ச்சல் நிலத்திற்கு வந்தார்.
தனது பழைய உடலைத் தேடினார். அது வைத்த இடத்தில் இல்லை. பதறிப் போனார். என்ன செய்வது என்று திகைத்த திருமூலர் தனது நெற்றிக் கண் பார்வையை நாடினார். அதன்மூலம் இறைவனது திட்டத்தை உணர்ந்தார். உடலை மறைத்தது இறைவனே என்று அறிந்தார். இறைவன் அதற்குக் காரணத்தையும் திருமூலர்க்கு உணர்த்தினான்.
ஐயறிவு உயிர்களாகிய பசுக்களின் துயரத்தைப் போக்கியது போல், ஆறறிவுப் பசுக்களாகிய உயிர்கள் (மனிதர்கள்) ஆகமத்தைத் தொலைத்து விட்டுத் துயருறுகின்றன. எனவே அந்த ஆகமத்தை மீண்டும் தமிழில் வகுத்து உலகத்திற்கு இப்போது பெற்ற மூலன் உடலிலிருந்தே உதவுக என்பது இறைவன் கட்டளை என திருமூலர் உணர்ந்து, உடன் அப்பணியில் இறங்கி தமிழாகமம் என்று போற்றப்படும் திருமந்திரத்தை 3000 பாடல்களாக அருளினார். இவ்வாறு இவரது வரலாற்றை பெரியபுராணம் கூறுகிறது.
திருமூலர் இறைவனது கட்டளையை உணர்ந்த பெரியபுராணப் பாடல் பின்வருமாறு:-
தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை
மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப
கண்ணிய அத் திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த உணர்வுடையார் ஈசர்அருள் என உணர்ந்தார்
(இங்கேயும் ஆகமம் முன்னம் அருளியது எனக்கூறப்பட்டுள்ளது அதை திரும்ப அருள வேண்டும் என்பதனால் அது இடையில் ஏதோ காரணத்தினால் மறைந்து போயிற்று என்பதை அறிகிறோம். திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப என்பதனால் முன்னால் அது இறைவன் வாக்கினால் தமிழில் கூறப்பட்டது என்பதை அறிகிறோம். அதை இப்போது திருமூலர் வாக்கினால் தமிழில் கொண்டுவர திட்டமிட்டுள்ளான் என்பது புலனாகிறது).
சரி. திருமந்திரம்தான் ஆகமம் என்பதை அதை அருளிய திருமூலர் சொல்லியிருக்கிறாரா?
(தொடரும்)
இமயமலைச் சாரலிலிருந்து மிகப் பழமையான காலத்தில் ஒரு முனிவர் தெற்கே பொதிகை நோக்கிப் புறப்பட்டார். அவர் பெயர் சுந்தரநாதர். பொதிய மலையில் அக்காலத்திலிருந்த அகத்தியரை அவர் சந்திக்கப் புறப்பட்டார்.
இந்த நெடும்பயணத்தில் தெற்கெ திருவாவடுதுறைக்கு அருகே சாத்தனூர் என்ற ஊர் அருகில் ஒரு மேய்ச்சல் நிலத்தைத் தாண்டி வந்து கொண்டிருக்கும்போது அவருக்கு ஒரு புதுமையான காட்சி தென்பட்டது.
மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் எல்லாம் கூடி ஓர் இடத்தில் வட்டமிட்டு நின்று கொண்டிருந்தன. எட்டிப் பார்த்தபோது நடுவே ஒரு மனிதன் இறந்து கிடந்தான். அவனை இந்த மாடுகள் உடலெங்கும் நக்கிக் கொடுத்தன. அவைகளின் கண்களிலிருந்து நீர் கொட்டிக் கொண்டிருந்தன. இறந்த மனிதன் கையில் கோல் இருந்தது. எனவே, இவன் இந்த மாடுகளை மேய்த்தவனாக இருப்பான் என்றும் திடீரென இறந்துவிட்டதால் அவன்பால் அன்பு கொண்ட மாடுகள் அவன் உடலைச் சூழ்ந்து நின்று நக்கிக் கொடுத்து அவனது பிரிவால் துயருற்று கண்ணீர் சொரிந்தன என்பதை சுந்தரநாதர் ஊகித்தறிந்தார்.
மாடுகள் அந்த இடையன் மீது காட்டிய அன்பு அவரை என்னவோ செய்தது. உடன் அந்தப் பசுக்களின் துயரைப் போக்க எண்ணம் கொண்டார். தனக்குத் தெரிந்த கூடுவிட்டு கூடு பயும் சித்தியை மாடுகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்த முனைந்தார். தமது உடலிலிருந்து அந்த இடையனின் உடலில் புகுந்தார். உடன் எச்சரிக்கையாக தமது உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்துப் பத்திரப் படுத்தினார்.
இடையன் எழுந்து கொண்டான் என மாடுகள் மகிழ்ந்து, அதன் அடையாளமாக வாலை நிமிர்த்தி வானை நோக்கி, ‘அம்மா…. அம்மா…’ என்று பெரு முழக்கம் செய்தன. மாலை வந்தது. மாடுகளை ஓட்டி ஊருக்குச் சென்றார் சுந்தரநாதர்.
ஊரில் இவரைப்பார்த்து மூலன் என்று பிறர் அழைத்தது கண்டு, அந்த இடையனின் பெயரைத் தெரிந்து கொண்டார்.
மூலனது மனைவி மூலராக எழுந்து வந்த சுந்தரநாதரைத் தனது கணவன் என்று நெருங்கினாள். பதைத்துப் போன திருமூலர் (இப்பொழுது இருந்து அவர் பெயர் திருமூலர் ஆயிற்று) ஊர்ப் பெரியவர்களின் துணையோடு நடந்ததைக் கூறி இடையனது மனைவியிடமிருந்து தப்பி மேய்ச்சல் நிலத்திற்கு வந்தார்.
தனது பழைய உடலைத் தேடினார். அது வைத்த இடத்தில் இல்லை. பதறிப் போனார். என்ன செய்வது என்று திகைத்த திருமூலர் தனது நெற்றிக் கண் பார்வையை நாடினார். அதன்மூலம் இறைவனது திட்டத்தை உணர்ந்தார். உடலை மறைத்தது இறைவனே என்று அறிந்தார். இறைவன் அதற்குக் காரணத்தையும் திருமூலர்க்கு உணர்த்தினான்.
ஐயறிவு உயிர்களாகிய பசுக்களின் துயரத்தைப் போக்கியது போல், ஆறறிவுப் பசுக்களாகிய உயிர்கள் (மனிதர்கள்) ஆகமத்தைத் தொலைத்து விட்டுத் துயருறுகின்றன. எனவே அந்த ஆகமத்தை மீண்டும் தமிழில் வகுத்து உலகத்திற்கு இப்போது பெற்ற மூலன் உடலிலிருந்தே உதவுக என்பது இறைவன் கட்டளை என திருமூலர் உணர்ந்து, உடன் அப்பணியில் இறங்கி தமிழாகமம் என்று போற்றப்படும் திருமந்திரத்தை 3000 பாடல்களாக அருளினார். இவ்வாறு இவரது வரலாற்றை பெரியபுராணம் கூறுகிறது.
திருமூலர் இறைவனது கட்டளையை உணர்ந்த பெரியபுராணப் பாடல் பின்வருமாறு:-
தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை
மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப
கண்ணிய அத் திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த உணர்வுடையார் ஈசர்அருள் என உணர்ந்தார்
(இங்கேயும் ஆகமம் முன்னம் அருளியது எனக்கூறப்பட்டுள்ளது அதை திரும்ப அருள வேண்டும் என்பதனால் அது இடையில் ஏதோ காரணத்தினால் மறைந்து போயிற்று என்பதை அறிகிறோம். திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப என்பதனால் முன்னால் அது இறைவன் வாக்கினால் தமிழில் கூறப்பட்டது என்பதை அறிகிறோம். அதை இப்போது திருமூலர் வாக்கினால் தமிழில் கொண்டுவர திட்டமிட்டுள்ளான் என்பது புலனாகிறது).
சரி. திருமந்திரம்தான் ஆகமம் என்பதை அதை அருளிய திருமூலர் சொல்லியிருக்கிறாரா?
(தொடரும்)
7) திருமந்திரம் ஆகமம் என்பதை அதை அருளிய திருமூலர் சொல்லியிருக்கிறாரா?
திருமந்திரத்தைத் திருமூலரே ஆகமம் என்கின்றார். கீழ்வரும் திருமந்திர வரிகள் இதனை உறுதி செய்கின்றன.
“அந்திமதி புனை அரனடி நாள்தொறும்
சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே”
(சந்திரனை தலையில் சூடிய சிவபெருமானது திருவருட் பெருமையை தினமும் இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்த வாற்றால், சிவ ஆகமப் பொருளைக் கூறத்தொடங்கினேன்)
மேலும் தான் படைத்த அந்த ஆகமத்தை முழுத்தமிழில் படைக்கவே தன்னை மூலன் உடலில் படைத்துப் பணித்தான் இறைவன் என்பதையும் திருமூலர் கூறுகின்றார்.
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே”
(இறைவன் என்னைத் தன்னைத் - தன்னை வந்து அடையும் வழியான ஆகமத்தை - தமிழ்மொழியால் நன்றாகப் பாடும் வண்ணம் செவ்விய முறையால் இந்த மூலன் உடலில் படைத்தான்).
மொத்த ஆகமங்களையும் முதன் முதலில் நந்தியம்பெருமான்தான் சிவபெருமானிடம் பெற்றார் என திருமூலர் சொல்கிறார். அதன் பின்தான் ஆலமர்ச் செல்வனாய் மகேந்திரமலையில் தமிழ் முனிவர்களுக்கு ஆகமங்களைக் கற்பித்தான் என அறிகிறோம்.
அப்படியானால் நந்தி பெற்ற மொத்த ஆகமங்கள் எத்தனை?
(தொடரும்)
திருமந்திரத்தைத் திருமூலரே ஆகமம் என்கின்றார். கீழ்வரும் திருமந்திர வரிகள் இதனை உறுதி செய்கின்றன.
“அந்திமதி புனை அரனடி நாள்தொறும்
சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே”
(சந்திரனை தலையில் சூடிய சிவபெருமானது திருவருட் பெருமையை தினமும் இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்த வாற்றால், சிவ ஆகமப் பொருளைக் கூறத்தொடங்கினேன்)
மேலும் தான் படைத்த அந்த ஆகமத்தை முழுத்தமிழில் படைக்கவே தன்னை மூலன் உடலில் படைத்துப் பணித்தான் இறைவன் என்பதையும் திருமூலர் கூறுகின்றார்.
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே”
(இறைவன் என்னைத் தன்னைத் - தன்னை வந்து அடையும் வழியான ஆகமத்தை - தமிழ்மொழியால் நன்றாகப் பாடும் வண்ணம் செவ்விய முறையால் இந்த மூலன் உடலில் படைத்தான்).
மொத்த ஆகமங்களையும் முதன் முதலில் நந்தியம்பெருமான்தான் சிவபெருமானிடம் பெற்றார் என திருமூலர் சொல்கிறார். அதன் பின்தான் ஆலமர்ச் செல்வனாய் மகேந்திரமலையில் தமிழ் முனிவர்களுக்கு ஆகமங்களைக் கற்பித்தான் என அறிகிறோம்.
அப்படியானால் நந்தி பெற்ற மொத்த ஆகமங்கள் எத்தனை?
(தொடரும்)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181564சாமி wrote:
(இங்கேயும் ஆகமம் முன்னம் அருளியது எனக்கூறப்பட்டுள்ளது அதை திரும்ப அருள வேண்டும் என்பதனால் அது இடையில் ஏதோ காரணத்தினால் மறைந்து போயிற்று என்பதை அறிகிறோம். திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப என்பதனால் முன்னால் அது இறைவன் வாக்கினால் தமிழில் கூறப்பட்டது என்பதை அறிகிறோம். அதை இப்போது திருமூலர் வாக்கினால் தமிழில் கொண்டுவர திட்டமிட்டுள்ளான் என்பது புலனாகிறது).
சரி. திருமந்திரம்தான் ஆகமம் என்பதை அதை அருளிய திருமூலர் சொல்லியிருக்கிறாரா?
திருமூலர் அருளிய திருமந்திரம் தான் ஆகமம் என்பதில் ஐயமில்லை நன்றி ஐயா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181731சாமி wrote:
மொத்த ஆகமங்களையும் முதன் முதலில் நந்தியம்பெருமான்தான் சிவபெருமானிடம் பெற்றார் என திருமூலர் சொல்கிறார். அதன் பின்தான் ஆலமர்ச் செல்வனாய் மகேந்திரமலையில் தமிழ் முனிவர்களுக்கு ஆகமங்களைக் கற்பித்தான் என அறிகிறோம்.
அப்படியானால் நந்தி பெற்ற மொத்த ஆகமங்கள் எத்தனை?
முதலில் ஆகமம் அறிந்தது நந்தி தேவன் என்பதை அறிந்து கொண்டேன்.அருமை,நன்றி ஐயா.
8) ஆகமங்கள் மொத்தம் எத்தனை?
ஆகமங்கள் மொத்தம் ஒன்பது என்கிறார் திருமூலர். மொத்த ஆகமங்களையும் முதலில் நந்தியெம் பெருமான்தான் சிவபெருமானிடம் பெற்றார். அதன் பின்தான் ஆலமர்ச் செல்வனாய் தமிழ் முனிவர்கள் இடையே ஆகமத்தைத் தோற்றுவித்தான் என நாம் அறிகிறோம்.
சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே " - எனப்பாடுகிறார் திருமூலர்.
அந்த ஒன்பது ஆகமங்கள் எவையெவை எனவும் சொல்கிறார்.
பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.
நந்தி பெற்ற ஆகமங்களின் பட்டியல்:-
இந்தப் பெயர்களை எல்லாம் பார்த்தவுடன் இவை அனைத்தும் வடமொழிப் பெயர்கள் என்பது கூறாமலே விளங்கும். எனவே இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது. நன்றாகத் தமிழ் செய்யுமாறு இறைவன் கட்டளை இட, அதை ஏற்றுப் பாடிய திருமூலர் வேண்டுமென்றே வடமொழிப் பெயர்களைக் கூறிப் பாடி இருக்க மாட்டார். எனவே இது பிற்காலத்திய சான்றோர் ஒருவர் பழைய தமிழ் திருமந்திரப் பாடலுக்குப் பதில் வடமொழிப் பெயரில் பாடி திருமந்திரத்தில் நுழைத்து இருக்க வேண்டும்.
(இது ஆரியர்கள் வழக்கமாகச் செய்யக்கூடிய விஷயம். கோயில் பெயர்களையும் இறைவன் இறைவிப் பெயர்களையும் வடமொழியில் மாற்றிச் சொல்வது அவர்களுக்கு கைவந்த கலை. அதேபோல் பல இலக்கிய நூல்களிலும் தங்களுடைய வேலைகளைக் காட்டியிருப்பார்கள். திருமந்திரம் அருளிய திருமூலரே தான் 3000 பாடல்கள் தான் பாடி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே .
ஆனால் இன்று கிடைக்கின்ற பாடல்களோ 3000 க்கும் மேல்.)
இந்த ஒன்பது ஆகமங்களின் பிழிவாகத்தான் ஒன்பது தந்திரங்களாக (ஒன்பது பகுதிகளாக) திருமந்திரம் பாடப்பட்டது என சான்றோர்கள் கூறுகிறார்கள்.
ஆகமங்கள் மொத்தம் 28 என சிலர் கூறுகிறார்களே! எது உண்மை ... ஆகமங்கள் ஒன்பதா? அல்லது இருபத்தெட்டா?
(தொடரும்)
ஆகமங்கள் மொத்தம் ஒன்பது என்கிறார் திருமூலர். மொத்த ஆகமங்களையும் முதலில் நந்தியெம் பெருமான்தான் சிவபெருமானிடம் பெற்றார். அதன் பின்தான் ஆலமர்ச் செல்வனாய் தமிழ் முனிவர்கள் இடையே ஆகமத்தைத் தோற்றுவித்தான் என நாம் அறிகிறோம்.
சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே " - எனப்பாடுகிறார் திருமூலர்.
அந்த ஒன்பது ஆகமங்கள் எவையெவை எனவும் சொல்கிறார்.
பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.
நந்தி பெற்ற ஆகமங்களின் பட்டியல்:-
இந்தப் பெயர்களை எல்லாம் பார்த்தவுடன் இவை அனைத்தும் வடமொழிப் பெயர்கள் என்பது கூறாமலே விளங்கும். எனவே இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது. நன்றாகத் தமிழ் செய்யுமாறு இறைவன் கட்டளை இட, அதை ஏற்றுப் பாடிய திருமூலர் வேண்டுமென்றே வடமொழிப் பெயர்களைக் கூறிப் பாடி இருக்க மாட்டார். எனவே இது பிற்காலத்திய சான்றோர் ஒருவர் பழைய தமிழ் திருமந்திரப் பாடலுக்குப் பதில் வடமொழிப் பெயரில் பாடி திருமந்திரத்தில் நுழைத்து இருக்க வேண்டும்.
(இது ஆரியர்கள் வழக்கமாகச் செய்யக்கூடிய விஷயம். கோயில் பெயர்களையும் இறைவன் இறைவிப் பெயர்களையும் வடமொழியில் மாற்றிச் சொல்வது அவர்களுக்கு கைவந்த கலை. அதேபோல் பல இலக்கிய நூல்களிலும் தங்களுடைய வேலைகளைக் காட்டியிருப்பார்கள். திருமந்திரம் அருளிய திருமூலரே தான் 3000 பாடல்கள் தான் பாடி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே .
ஆனால் இன்று கிடைக்கின்ற பாடல்களோ 3000 க்கும் மேல்.)
இந்த ஒன்பது ஆகமங்களின் பிழிவாகத்தான் ஒன்பது தந்திரங்களாக (ஒன்பது பகுதிகளாக) திருமந்திரம் பாடப்பட்டது என சான்றோர்கள் கூறுகிறார்கள்.
ஆகமங்கள் மொத்தம் 28 என சிலர் கூறுகிறார்களே! எது உண்மை ... ஆகமங்கள் ஒன்பதா? அல்லது இருபத்தெட்டா?
(தொடரும்)
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|