புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Baarushree
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
prajai
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Rutu
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10 
1 Post - 2%
viyasan
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Rutu
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்னாடுடைய சிவனே போற்றி...!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 07, 2016 10:28 pm

First topic message reminder :

மஹா சிவராத்திரி

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 LMgKpZ8XRouwUAfEsunB+IMG-20161202-WA0030


அனலாய் எழுந்த சுடர் தீபம்
அருணாச்சலத்தின் சிவ யோகம்.
ஒளியாய் எழுந்த ஓங்காரம்
உன் கோலம் என்றும் சிங்காரம்.





தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 PjXFmmwS2Wf5mUQu4sTP+0




தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 07, 2016 11:51 pm

216 சிவாலயங்களுக்கு சென்று வர இந்த விவரங்கள் உதவும்.

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 UTmUD0e0TJqiIDlwRq9b+blogger-image--667654830


எண் - கோயில் - இருப்பிடம் - போன் - மாவட்டம்

51. வீரட்டேஸ்வரர் - கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 93456 60711.

52. அதுல்யநாதேஸ்வரர் - அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., - 99651 44849.

53. மருந்தீசர் - டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 04146 - 216 045, 94424 23919.

54. கிருபாபுரீஸ்வரர் - திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., - 93456 60711.

55. சிவலோகநாதர் - கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. - 04146 - 206 700.

56. பனங்காட்டீஸ்வரர் - பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., - 99420 56781.

57. அபிராமேஸ்வரர் - திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., - 04146 - 223 379, 98430 66252.

58. சந்திரமவுலீஸ்வரர் - திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., - 0413 - 268 8949.

59. அரசலீஸ்வரர் - ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 - 235 472.

60. மகாகாளேஸ்வரர் - இரும்பை. புதுச்சேரி - திண்டிவனம் வழியில் 12 கி.மீ., - 0413 - 268 8943, 98435 26601.
நாமக்கல் மாவட்டம்

61. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., - 04288 - 255 925, 93642 29181.
ஈரோடு மாவட்டம்

62. சங்கமேஸ்வரர் - பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., - 04256 - 230 192, 98432 48588.

63. மகுடேஸ்வரர், - கொடுமுடி,ஈரோடு - கரூர் ரோட்டில் 47 கி.மீ., - 04204 - 222 375.
திருப்பூர் மாவட்டம்

64. அவிநாசி ஈஸ்வரர் - அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., - 04296 - 273 113, 94431 39503.

65. திருமுருகநாதர் - திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., - 04296 - 273 507.
திருச்சி மாவட்டம்

66. சத்தியவாகீஸ்வரர் - அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., - 0431 - 254 4927.

67. ஆம்ரவனேஸ்வரர் - மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., - 99427 40062, 94866 40260.

68. ஆதிமூலேஸ்வரர் - திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. - 0431 - 246 0455.

69. ஜம்புகேஸ்வரர் - திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., - 0431 - 223 0257.

70. ஞீலிவனேஸ்வரர் - திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., - 0431 - 256 0813.

71. மாற்றுரைவரதர் - திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., - 94436 - 92138.

72. மரகதாசலேஸ்வரர் - ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., - 04326 - 262 744, 94439 50031.

73. பராய்த்துறைநாதர் - திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. - 99408 43571.

74. உஜ்ஜீவநாதர் - உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி - வயலூர் வழியில் 7 கி.மீ., - 94431 50332, 94436 50493.

75. பஞ்சவர்ணேஸ்வரர் - உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் - 0431 - 276 8546, 94439 19091.

76. தாயுமானவர் - திருச்சி. மலைக்கோட்டை - 0431 - 270 4621, 271 0484.

77. எறும்பீஸ்வரர் - திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. - 98429 57568.

78. திருநெடுங்களநாதர் - திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. - 0431 - 252 0126.
அரியலூர் மாவட்டம்

79. வைத்தியநாதசுவாமி - திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., - 04329 -292 890, 97862 05278.

80. ஆலந்துறையார் - கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. - 99438 82368.
கரூர் மாவட்டம்

81. ரத்தினகிரீஸ்வரர் - அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., - 04323 - 245 522.

82. கடம்பவனேஸ்வரர் - குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., - 04323 - 225 228

83. கல்யாண விகிர்தீஸ்வரர் - வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., - 04324 - 262 010, 99435 27792.

84. பசுபதீஸ்வரர் - கரூர் - 04324 - 262 010.
புதுக்கோட்டை மாவட்டம்

85. விருத்தபுரீஸ்வரர் - அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., - 04371 - 239 212
தஞ்சாவூர் மாவட்டம்

86. பசுபதீஸ்வரர் - பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., - 98657 78045. 0435 - 2450 595.

87. அக்னீஸ்வரர் - கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை - 0435 - 247 3737.

88. கோடீஸ்வரர் - திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., - 94866 70043.

89. பிராணநாதேஸ்வரர் - திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) - 0435 - 247 0480.

90. அருணஜடேஸ்வரர் - திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., - 94431 16322, 0435 - 245 6047.

91. பாலுகந்தநாதர் - திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., - 94421 67104.

92. சத்தியகிரீஸ்வரர் - சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) - 93459 82373, 0435 - 2457 459.

93. யோகநந்தீஸ்வரர் - திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. - 0435 - 200 0679, 94447 47142.

94. கற்கடேஸ்வரர் - திருந்துதேவன்குடி. கும்பகோணம் - சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., - 99940 15871, 0435 - 200 0240.

95. கோடீஸ்வரர் - கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., - 0435 - 245 4421.

96. எழுத்தறிநாதர் - இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., - 96558 64958, 0435 - 200 0157.

97. சாட்சி நாதேஸ்வரர் - திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) - 94446 26632, 0435 - 245 9519.

98. விஜயநாதேஸ்வரர் - திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) - 0435 - 294 1912, 94435 86453.

99. வில்வ வனேஸ்வரர் - திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., - 94435 86453, 96552 61510.

100. தயாநிதீஸ்வரர் - வடகுரங்காடுதுறை. கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. - 04374 - 240 491, 244 191.



தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 UPbUHKWMRSyoc1fW7UDa+0




தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 08, 2016 12:29 am

தேன் அபிஷேகம் செய்து, அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்றி, மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்ய, மூன்றாம் ஜாம பூஜையும் துவங்கியாயிற்று.

ஓம் நமசிவாயம்!





தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 UPbUHKWMRSyoc1fW7UDa+0




தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 08, 2016 12:32 am

216 சிவாலயங்களுக்கு சென்று வர இந்த விவரங்கள் உதவும்.

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 CSjXvUtjRwuUWBxZekq5+img1120921039_1_1


எண் - கோயில் - இருப்பிடம் - போன் - மாவட்டம்

101. ஆபத்சகாயர் - திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் - 04362 - 326 668.

102. ஐயாறப்பர் - திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., - 0436 - 2260 332.

103. நெய்யாடியப்பர் - தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., - 04362 - 260 553.

104. வியாக்ரபுரீஸ்வரர் - திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. - 94434 47826, 94427 29856.

105. செம்மேனிநாதர் - திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., - 04362 - 320 067, 93450 09344.

106. அக்னீஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., - 94423 47433.

107. ஆத்மநாதேஸ்வரர் - திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., - 04365 - 284 573.

108. புஷ்பவனேஸ்வரர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., - 94865 76529.

109. பிரம்மசிரகண்டீசுவரர் - கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., - 04362 - 261 100, 262 222.

110. சோற்றுத்துறை நாதர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., - 99438 84377.

111. வேதபுரீஸ்வரர் - திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., - 93451 04187, 04362 - 262 334.

112. பசுபதீஸ்வரர் - பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 97914 82102.

113. வசிஷ்டேஸ்வரர் - தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., - 04362 - 252 858.

114. கரவாகேஸ்வரர் - கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,

115. முல்லைவனநாதர் - திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., - 04374 - 273 502, 273 423.

116. பாலைவனேஸ்வரர் - பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., - 94435 24410.

117. கல்யாண சுந்தரேஸ்வரர் - நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., - 93631 41676.

118. பசுபதீஸ்வரர் - ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., - 94863 03484.

119. சிவக்கொழுந்தீசர் - திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., - 94436 78575, 04374 - 267 237.

120. பட்டீஸ்வரர் - பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., - 0435 - 241 6976.

121. சோமநாதர் - கீழபழையாறை வடதளி.கும்பகோணம் - ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் - 98945 69543.

122. திருவலஞ்சுழிநாதர் - திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., - 0435 - 245 4421, 245 4026.

123. கும்பேஸ்வரர் - கும்பகோணம். - 0435 - 242 0276.

124. நாகேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே - 0435 - 243 0386.

125. சோமேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை - 0435 - 243 0349.

126. நாகநாதர் - திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., - 94434 89839, 0435 - 246 3354,

127. மகாலிங்க சுவாமி - திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 - 246 0660.

128. ஆபத்சகாயேஸ்வரர் - ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., - 94434 63119, 94424 25809.

129. நீலகண்டேஸ்வரர் - திருநீலக்குடி. கும்பகோணம் - காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., - 94428 61634. 0435 - 246 0660.

130. கோழம்பநாதர் - திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., - 04364 - 232 055, 232 005.

131. சிவானந்தேஸ்வரர் - திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., - 94436 50826, 0435 - 244 8138.

132. சித்தநாதேஸ்வரர் - திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., - 0435 - 246 7343, 246 7219.

133. படிக்காசுநாதர் - அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., - 99431 78294, 0435 - 246 6939.

134. அமிர்தகடேஸ்வரர் - சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 98653 06840, 0435 - 241 4453.

135. சிவகுருநாதசுவாமி - சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., - 98653 06840.

136. சற்குணலிங்கேஸ்வரர் - கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் - மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 99435 23852

137. சாரபரமேஸ்வரர் - திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,

138. ஞானபரமேஸ்வரர் - திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., - 94439 59839.

139. ஆபத்சகாயேஸ்வரர் - ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., - 04374 - 269 407.

140. பாஸ்கரேஸ்வரர் - பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) - 0437 - 256 910.
திருவாரூர் மாவட்டம்

141. தியாகராஜர் - திருவாரூர். - 04366 - 242 343.

142. அசலேஸ்வரர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் - 04366 - 242 343.

143. தூவாய் நாதர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி - 99425 40479, 04366 - 240 646.

144. பதஞ்சலி மனோகரர் - விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98947 81778, 94894 79896.

145. கரவீரநாதர் - கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் - 04366 - 241 978.

146. வீரட்டானேஸ்வரர் - திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். - 94439 21146.

147. வர்த்தமானீஸ்வரர் - திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., - 94431 13025, 04366 - 292 300.

148. ராமநாதசுவாமி - திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 292 300.

149. கணபதீஸ்வரர் - திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 270 278.

150. கேடிலியப்பர் - கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. - 04366 - 276 733.



தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 UPbUHKWMRSyoc1fW7UDa+0




தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 08, 2016 12:44 am

போற்றித் திருத்தாண்டகம் : திருநாவுக்கரசர்

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 CfmKBixKRIyQZ3LWWH08+Lord-Siva-With-Goddess-Parvati

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி

பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி

திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி

நீராவி ஆன நிழலே போற்றி
நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவர் அறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி

பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி

விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

இமையா(து) உயிரா(து) இருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாகம் ஆகத்(து) அணைத்தாய் போற்றி
ஊழிஏ(ழு) ஆன ஒருவா போற்றி

அமையா வருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழும் தேவே போற்றி
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி

ஆவாய் அடியேனுக்(கு) எல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகலம் உடையாய் போற்றி
அடியும் முடியும் இகலிப் போற்றி
அங்கொன்(று) அறியாமை நின்றாய் போற்றி

கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

உண்ணா(து) உறங்கா(து) இருந்தாய் போற்றி
ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி

பண்ணார் இசையின்சொல் கேட்டாய் போற்றி
பண்டேஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.



தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 UPbUHKWMRSyoc1fW7UDa+0




தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 08, 2016 1:03 am

பள்ளி கொண்டீஸ்வரர் - சுருட்டப்பள்ளி

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 GHp27XRaKnoLn8LTFp3Q+26

பரந்தாமனான மகாவிஷ்ணுவைத்தான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் தரிசிக்க முடியும். ஆனால், சுருட்டப்பள்ளிக்குச் சென்றால் பரமேஸ்வரனும் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.

தமிழக – ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் `பள்ளி கொண்டீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு சிவபெருமான், உமாதேவியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கும் திருக்கோலத்தை காணும்போது நம்மை அறியாமலேயே பக்தி பரவசத்தில் திளைக்கிறோம்.

பள்ளி கொண்டுள்ள இறைவனுக்கு அருகில் மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், பிருகு முனிவர், பிரம்மா ஆகியோர் வணங்கி நிற்கிறார்கள். அவர்களுக்கு அருகில் சூரிய, சந்திரர்கள், குபேரன், சப்த ரிஷிகள் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர், கிம்புருடர் போன்றோரும் சிவனை வணங்கி பிரார்த்தனை செய்கிறார்கள்.

கோவில் தல வரலாறு:

தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தபோது அமுதம் வருவதற்கு முன் ஆலகால விஷம் வந்தது. அனைவரும் அஞ்சி ஓடியபோது மகாவிஷ்ணு அருகில் சென்றார். விஷ நெடி தாக்கியதில் அவரது மேனி நீல நிறமானது. இதுபற்றி அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டார்கள்.

அதன்தொடர்ச்சியாக சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தினார். பக்கத்தில் இருந்த பார்வதிதேவி, பதறிப் போனாள். தன் கணவனின் கழுத்தை இறுக்கி பிடித்தாள். இதனால் ஆலகால விஷம் அவரது கழுத்தைத் தாண்டாமல் கண்டமாகிய கழுத்தில் நீல நிறத்தில் நின்று விட்டது. சிவனும் `திருநீலகண்டன்’ ஆனார்.

இதன்பிறகு, சிவபெருமானும் அன்னை பார்வதிதேவியும் கைலாயம் நோக்கி புறப்பட்டார்கள். செல்லும் வழியில் சோலைகள் நிறைந்த இன்றைய சுருட்டப்பள்ளியில் இருவரும் தங்கினார்கள். விஷ மயக்கம் தீராமல் இருக்கவே… சிவபெருமான், உமாதேவியின் மடியில் தலை வைத்து சிறிது நேரம் கண் அயர்ந்தார்.

பரமன் பள்ளி கொண்டது தெரிய வந்ததும் இந்த அதிசயத்தைப் பார்த்து வணங்கத் தேவர்கள் அனைவரும் சுருட்டப்பள்ளிக்கு விரைந்து வந்து விட்டார்கள். அவர்களிடம் நந்தி பகவான், மயக்கம் தெளிந்தபின் பரமேஸ்வரனை வழிபடலாம் என்று அறிவுறுத்தினார்.

தன்னை நாடி வந்தோருக்காக சிவபெருமான் இந்த மாலைக் காலத்தில்-சந்தியா நேரத்தில் எழுந்தருளினார். ஆனந்த நடனம் ஆடினார். தேவர்கள் அவரை தரிசித்து மகிழ்ந்தார்கள் என்கிறது இக்கோவில் தல வரலாறு.

பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனை தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்கிறார்கள்.

விஜய நகரத்து மன்னர் ஹரிஹர புக்கரால் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இத்திருக்கோயில் கட்டப்பட்டதால் சைவத்திருமறையில் இடம்பெறவில்லை.

வால்மீகேஸ்வரர்(வால்மீகி பூஜித்த லிங்கம்) ராமலிங்கேஸ்வரர் (ராமர் பூஜித்த லிங்கம்) லிங்கோத்பவர்( லிங்கதில் சிவன் நிற்கிறார்) ,கௌரி ஸ்மேத தக்சிணாமூர்த்தி மற்றும் சப்த மாதாக்களும் இத்திருக்கோயிலின் சிறப்பு.

இத்திருக்கோயிலில் பள்ளிக்கொண்டீஸ்வரர் சர்வமங்கள (பார்வதி) மடியில் சயனத்தில் காட்சியளிக்கிறார்.இதே போல் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை பார்க்கலாம்.சிவனை இங்கே (சுருட்டப்பள்ளி) மட்டும் தான் காண முடியும்.

சுருட்டப்பள்ளி ஆலயம் பல்வேறு வகைகளில் பிரசித்தி பெற்றது.  இறைவன் சுருண்டு பள்ளிகொண்டதால் சுருட்டப்பள்ளி என்ற பெயர் பெற்றதாம்.

திருமாலை மட்டுமே பள்ளிகொண்ட நிலையில் 108 திவ்ய தேசங்களிலும், பிற வைணவ ஆயலங்களிலும் தரிசிக்க முடியும்.

ஆனால் சிவபெருமான் பள்ளிகொண்டு பள்ளிகொண்டீசராகக் காட்சி தரும் ஒரே தலம் இந்தியாவில் சுருட்டப்பள்ளிதான்.

பிரதோஷ வழிபாடு தோன்றிய இடம்-

இறைவன் பள்ளிகொண்டிருப்பதால் பிரதோஷ பூஜையின்போது செய்யப்படும் சோமசூக்தப் பிரதட்சிணம் இல்லாத தலம்-

துவாரபாலர்களுக்கு பதில் குபேரனோடு சங்க நிதி, பதும நிதி உள்ள தலம்-.

அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராகக் காட்சி தருகின்ற தலம்-

நவகிரக சந்நிதி இல்லாத தலம்-

சிவாலயமாக இருந்தும்கூட தீர்த்தப் பிரசாதமும் சடாரியும் உள்ள தலம் என்று பல சிறப்புகள் சுருட்டப்பள்ளித் தலத்திற்கு உண்டு.



தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 DO9Z2mYNQo2UFlydUTUv+0




தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 08, 2016 1:13 am

216 சிவாலயங்களுக்கு சென்று வர இந்த விவரங்கள் உதவும்.

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 XotFD85SYy0AjV4BuRGh+p65

எண் - கோயில் - இருப்பிடம் - போன் - மாவட்டம்

151. தேவபுரீஸ்வரர் - தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., - 94862 78810, 04366 - 276 113.

152. திருநேத்திரநாதர் - திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., - 98658 44677, 04366 - 244 714.

153. பசுபதீஸ்வரர் - திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., - 04366 - 228 033.

154. சவுந்தரேஸ்வரர் - திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., - 04366 - 237 007.

155. ஐராவதீஸ்வரர் - திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) - காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. - 04368 - 261 447.

156. பிரம்மபுரீஸ்வரர் - அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., - 04366 - 238 973.

157. மகாகாளநாதர் - திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. – 94427 66818, 04366 - 291 457.

158. மேகநாதசுவாமி - திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.

159. சகல புவனேஸ்வரர் - திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.

160. முக்தீஸ்வரர் - செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., - 04366 – 238 818, 239 700, 94427 14055.

161. வெண்ணிகரும்பேஸ்வரர் - கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., - 98422 94416.

162. சேஷபுரீஸ்வரர் - திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. - 94439 43665, 0435 - 246 9555.

163. சூஷ்மபுரீஸ்வரர் - செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. - 04366 - 291 646.

164. அபிமுக்தீஸ்வரர் - மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ.,

165. நர்த்தனபுரீஸ்வரர் - திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 94435 00235, 04366 - 269 235.

166. கோணேஸ்வரர் - குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., - 94439 59839.

167. சொர்ணபுரீஸ்வரர் - ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., - 04374 - 265 130.

168. பாதாளேஸ்வரர் - அரித்துவாரமங்கலம், கும்பகோணம் - அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., - 94421 75441, 04374 - 264 586

169. சாட்சிநாதர் - அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., - 04374 - 275 441.

170. வீழிநாதேஸ்வரர் - திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., - 04366 - 273 050, 94439 24825148.

171. சதுரங்க வல்லபநாதர் - பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். - 94423 99273. 172. நாகநாதர் - பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., - 93606 85073.

173. பாரிஜாதவனேஸ்வரர் - திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., - 04367 - 279 374.

174. பொன்வைத்த நாதர் - சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) - 94427 67565.

175. மந்திரபுரீஸ்வரர் - கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., - 99420 39494, 04369 - 262 014.

176. சற்குணநாதர் - இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 349.

177. கற்பக நாதர் - கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 632.

178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) - தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., - 98658 44677.

179. கொழுந்தீஸ்வரர் - கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 97861 51763, 04367 - 279 781.

180. வண்டுறைநாதர் - திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் - 04367 - 294 640.

181. வில்வாரண்யேஸ்வரர் - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் - 04366 - 262 239.

182. ஜகதீஸ்வரர் - ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) - 04367 - 237 692.

183. அக்னீஸ்வரர் - திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., - 04369 - 237 454.

184. நெல்லிவனநாதர் - திருநெல்லிக்காவல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., - 04369 - 237 507, 237 438.

185. வெள்ளிமலைநாதர் - திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., - 94443 54461, 04369 - 237 454.

186. கண்ணாயிரநாதர் - திருக்காரவாசல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., - 94424 03391, 04366 - 247 824.

187. நடுதறியப்பர் - கண்ணாப்பூர், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., - 94424 59978, 04365 - 204 144.

188. கைச்சினநாதர் - கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 94865 33293

189. ரத்தினபுரீஸ்வரர் - திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) - 94438 06496, 04367 - 237 707.

190. அக்னிபுரீஸ்வரர் - வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., - 0435 - 244 9578

191. சற்குணேஸ்வரர் - கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் - 94429 32942, 04366 - 273 900

192. மதுவனேஸ்வரர் - நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., - 94426 82346, 99432 09771

193. வாஞ்சிநாதேஸ்வரர் - ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் - 94424 03926, 04366 - 228 305

194. மனத்துணைநாதர் - திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) - 04366 - 205 636

195. கோளிலிநாதர் - திருக்குவளை. திருத்துறைபூண்டி - எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) - 04366 - 245 412

196. வாய்மூர்நாதர் - திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., - 97862 44876
நாகப்பட்டினம் மாவட்டம்

197. சிவலோகத்தியாகர் - ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., - 04364 - 278 272.

198. திருமேனியழகர் - மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., - 04364 - 292 309.

199. முல்லைவனநாதர் - திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., - 94865 24626.

200. சுந்தரேஸ்வரர் - அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., - 93605 77673, 97879 29799.

201. சாயாவனேஸ்வரர் - சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., - 04364 - 260 151

202. பல்லவனேஸ்வரர் - பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., - 94437 19193.

203. சுவேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., - 04364 - 256 424

204. ஆரண்யேஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., - 94439 85770, 04364 - 256 273.

205. வெள்ளடைநாதர் - திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., - 92456 12705.

206. சட்டைநாதர் - சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., - 04364 - 270 235.

207. சப்தபுரீஸ்வரர் - திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., - 04364 - 274 175.

208. வைத்தியநாதர் - வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., - 04364 - 279 423.

209. கண்ணாயிரமுடையார் - குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. - 94422 58085

210. கடைமுடிநாதர் - கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., - 94427 79580, 04364 - 283 261,

211. மகாலட்சுமிபுரீஸ்வரர் - திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., - 94861 41430.

212. சிவலோகநாதர் - திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., - 94867 17634.

213. சோமநாதர் - நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., - 99436 68084, 04364 - 250 424,

214. ஆபத்சகாயேஸ்வரர் - பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., - 04364 250 758.

215. கல்யாண சுந்தரேஸ்வரர் - திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., - 04364 - 235 462.

216. ஐராவதேஸ்வரர் - மேலத்திருமணஞ்சேரி.



தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 UPbUHKWMRSyoc1fW7UDa+0




தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 08, 2016 1:24 am





தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 UPbUHKWMRSyoc1fW7UDa+0




தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 08, 2016 1:29 am

இலிங்கோத்பவர்

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 VsamREQHyLIcsqz7FoQA+cmmbmbm

இலிங்கோத்பவர் மூர்த்தி மகேஸ்வர வடிவங்களில் ஒன்றாகும்.

ஒருமுறை, நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது.

அப்போது அங்கே பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத்தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர்.

நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவதெனவும் ஒத்துக் கொண்டனர். தம்பத்தின் முடியைக் காண அன்னமாகி நான்முகன் மேலே பறந்து செல்லலானார்.

திருமாலும் வராக(பன்றி) வடிவேற்று பூமிக்குள் சென்று அடி தேடலானார். பல காலம் இருவரது முயற்சியும் தொடர்ந்து நடந்தது.

பறந்து சென்ற அன்னமாகிய நான்முகன் தனது வானவழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ தான் ஜோதித்தம்பத்தின் உச்சியிலிருந்து புறப்பட்டுப் பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாயும் கூறியது.

நான்முகன் தாழம்பூவைத் தன்பால் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார்.

திருமால் பலகாலும் முயன்றும் தாம் தம்பத்தின் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார்.

இருவரும் ஜோதித்தம்பமாக விளங்குபவர் சிவபெருமானே என அறிந்து தம்பேதைமையொழிந்து பணிந்தனர். அவ்விருவர் அகந்தையையும் போக்கிச் சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.

இதன் தத்துவம்

நான்முகன் அறிவு வடிவானவர். திருமால் செல்வத்தின் நாயகர். அறிவும் செல்வமும் இறுமாப்பைத் தரவல்லன. அகந்தை மிகச் செய்வன. ஆனால் அறிவினாலும் செல்வத்தாலும் இறைவனைக் காண முடியாது என்பதே லிங்கோத்பவர் உணர்த்தும் தத்துவம்.



தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 UPbUHKWMRSyoc1fW7UDa+0




தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 08, 2016 1:43 am

மார்க்கண்டேயன்

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EDts7M5pQh2IgmAjJw0n+10351523_1518190215110620_772832594409375581_n

மிருகண்டு என்பவர் பெருந்தவ முனிவர். அவருக்கும் அவரது பத்தினியார் மித்ராவதிக்கும் வாழ்க்கையில் பெருங்குறை! அதுதான் அவர்களுக்குப் புத்திரப்பேறு இல்லாமை.

இவர்கள் இருவரும் காசிக்குச் சென்று மணிகர்ணிகையில் நீராடி, விஸ்வநாதரை நினைத்து, ஓராண்டு காலம் கடுந்தவமியற்றினர். அந்த தவத்திற்கு மகிழ்ந்து சர்வேஸ்வரன் அவர்முன் தோன்றி, ""யாது வரம் வேண்டும்?'' என வினவ, முனிவர் புத்திரப்பேறு வேண்டும் என்று வேண்டினார்.

முனிவருக்கு புத்திரப்பேறு வரத்தை அளிக்கும் முன் சிவன், ""நூறு வயது வரை வாழும் பிள்ளை வேண்டுமா, அல்லது பதினாறு வயதே வாழக்கூடிய புத்திரன் வேண்டுமா?

இதில் நூறு வயது வரை வாழும் பிள்ளைக்கு ஊமை, செவிடு, முடம், வியாதி, சகல தீக்குணங்களும் இருக்கும். பதினாறு வயது வரை வாழும் புதல்வனோ மகா அழகனாய் இருப்பான். சகல கலைகளிலும் வல்லவனாய் இருப்பான். என் மீது மட்டற்ற பக்தி பூண்டு வாழ்வான்.

இவர்களில் எந்த மாதிரி புத்திரன் உனக்கு வேணடும்?'' என்றார்.

முனிவர் எந்தப் புத்திரனை வேண்டுவார்..! நூறு வயது வரை செவிடாகவும் குருடனாகவும் வியாதியஸ்தனாகவும் இருக்கும் பிள்ளையை எவர்தான் வேண்டுவார்?

குறைந்த வயது வாழும் புத்திரனையே தேர்வு செய்து வேண்டினார் அவர். ""தந்தேன்'' என்று புத்திரப்பேற்றை நல்கி விட்டு மறைந்தார் விஸ்வநாதர்.

காசியில் தவம் முடித்ததும் பத்து மாதத்தில், முனிவரின் பத்தினி அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றார். இளஞ்சூரியனைப் போல ஒளி வீசினான் அவன். பிரம்ம தேவரே வந்து குழந்தைக்கு "மார்க்கண்டேயன்' என்று பெயர் சூட்டினார்.

குழந்தை மகா புத்திமானாக இருந்தான். ஐந்து வயது ஆவதற்குள்ளாகவே சகல கலைகளையும் கற்று வளர்ந்து விட்டான்! அதோடு, அறிவு, அடக்கம், பெரியவர்களை மதித்தல், அளவிடா சிவபக்தி ஆகியவையோடு கண்டார் வியக்கும் வண்ணம் வாழ்ந்தான்.

ஆயிற்று... அவனுக்கும் பதினைந்து வயது முடிந்து பதினாறு வயது பிறந்தது! இதுவரை தன் மகனைக் கண்டு ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்திருந்த மிருகண்டு முனிவருக்கும் அவர் பத்தினிக்கும் இப்போது கவலை பிறந்தது.

"இன்னும் ஓராண்டுதானே நமது அருமை மகன் ஜீவித்திருப்பான்?' அதை எண்ணும்போதே தம்பதியர் விசனக்கடலில் மூழ்கினர். தமது பெற்றோரின் இந்த வருத்தத்திற்கு என்ன காரணம் என்று புரியாமல் தத்தளித்த மார்க்கண்டேயன், அதற்கான காரணம் என்ன என்று பெற்றோரைத் துளைத்து எடுத்தான்.

அவர்களும் வேறு வழியின்றி சிவபெருமான் அளித்த வரத்தின் விளைவாக அவன் இன்னும் ஓராண்டே வாழ முடியும் என்பதைக் கூறி வருந்தினர்.

இதைக்கேட்ட மார்க்கண்டேயன், ""தந்தையே! நீங்கள் இதற்காகத் துளியும் வருந்த வேண்டாம். நமசிவாய மந்திரமும் திருநீறும் நமக்குத் துணையிருக்கும். நம்மைக் காக்கும் சிவன் நம்மைக் கைவிடார். எனவே துணிவோடு இருங்கள்!'' என்றுகூறி விடைபெற்று காசிக்குச் சென்று மணிகர்ணிகையில் நீராடி, சிவலிங்கம் ஒன்றை நிறுவி அதற்கு நறுமலர் சாத்திவணங்கி தவம் செய்யலானான்.

சிவபெருமானும் அவனது தவத்தில் இன்புற்று அவன் முன் தேன்றி ""யாது வரம் வேண்டும்?'' என்று வினவ, மார்க்கண்டேயன் அவர் காலடியில் விழுந்து வணங்கி அவரைப் பலவாறு போற்றித் துதித்துத் தன்னைக் காலன் கைப்படாவண்ணம் காத்தருள வேண்டுகிறான்.

அவரும் ""மார்க்கண்டேயா! நீ அஞ்ச வேண்டாம். அந்தகனின் பிடியிலிருந்து நம் அருள் உன்னைக் காப்பாற்றும்!'' என்று வரமருளி மறைந்தார்.

மார்க்கண்டேயர் தன் வாழ்நாளைப் பற்றிக் கவலைப்படாமல் சதா சிவபூஜையில் திளைத்திருந்தார். பதினாறு ஆண்டு முடிந்தது. யமதூதன் சிவபூஜையிலிருந்த மார்க்கண்டேயனை அணுக அஞ்சி, மேல் உலகு சென்று யமனிடம் விஷயத்தைக் கூறுகிறான்.

யமன் தன் கணக்கரான சித்திரகுப்தனை விளித்து மார்க்கண்டேயனது கணக்கைக் கூறுமாறு கேட்கிறான்!

சித்திரகுப்தனோ, ""பிரபு! மார்க்கண்டேயனுக்கு ஈசன் தந்த பதினாறு ஆண்டுகாலம் முடிந்தது. விதியை வென்றவர் எவருமிலர். மார்க்கண்டேயரின் சிவபூஜையின் பலனாய் அவருடைய புண்ணியம் மிக அதிகரித்து விட்டது.

அதனால் அவர் நமது உலகிற்கு வர நியாயமில்லை. நேராகக் கைலாயம் செல்ல தயாராய் இருக்கிறார்!'' என்றார்.

உடனே யமன் தனது அமைச்சனான காலனை அழைத்து மார்க்கண்டேயனைப் பிடித்து வரும்படி ஆணையிடுகிறான். காலன் மார்க்கண்டேயனிடம் சென்று மிகவும் நயமாகத் தன்னுடன் வந்து விடுமாறு அழைக்கிறான்.

தன்னுடன் வந்தால் மார்க்கண்டேயனுக்கு யமன் இந்திரப்பதவி வாங்கித் தருவார் என்றும் ஆசை காட்டுகிறான்.

ஆனால் மார்க்கண்டேயனோ, ""போம் அய்யா! சிவனடிக்கு அன்பு செய்தோர் இந்திரப் பதவி என்ன, வேறு எந்தப் பதவியையும் விரும்பார். போய் உம் எஜமானிடம் சொல்லும்!'' என்று கூறி விடுகிறான்.

இதனையறிந்த யமதர்மராஜனுக்கு கடுங்கோபம் வந்தது. அவனோ தன் வாகனமேறி பாசக்கயிற்றைச் சுழற்றியபடி மார்க்கண்டேயனை அடைந்து, ""மார்க்கண்டேயா! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ? ஈசனார் தந்தது உனக்கு பதினாறு வயதுதான் என்பதை மறந்தாயா? நீ புரியும் சிவபூஜை உன் பாவத்தை நீக்குமேயன்றி நான் வீசும் பாசக்கயிற்றைத் தடுக்காது.

பிறப்பு, இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்குமுண்டு. எனக்குமுண்டு. பிறப்பு, இறப்பு அற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர், மூவர் மற்றும் எவர் உன்னைக் காப்பாற்ற முயன்றாலும் உன் உயிரைக் கொண்டு போகாமல் நான் திரும்ப மாட்டேன்!'' என்று அனல் பறக்கக் கூறினான்.

ஆனால் மார்க்கண்டேயனோ, ""எமதர்மராஜனே! சிவனடியார் பெருமையை நீ உணரவில்லை. முடிவு ஏற்பட்டாலும் நான் சிவபதமடைவேனே தவிர உன்னுடன் வரமாட்டேன்!'' என்று கூறி ஆலயத்தினுள் சென்று சிவலிங்கத்தைத் தழுவி நின்றான்.

யமனும் உள்ளே சென்று மார்க்கண்டேயனை அவன் அணைத்திருந்த சிவலிங்கத்தோடு தன் பாசக்கயிற்றை வீசி இழுத்தான். உடனே சிவபெருமான் சிவலிங்கத்தினின்று வெளிப்பட்டு, ""மார்க்கண்டேயா! நீ அஞ்சாதே..!'' என்று கூறி தன் இடது பாதத்தைத் தூக்கி எமதர்மராஜனை உதைக்க அவன் தன் பரிவாரங்களுடன் உயிர் துறந்தான்.

சிவபெருமான் மார்க்கண்டேயனுக்கு அந்தமிலா ஆயுளை வழங்கி மறைந்தார். மார்க்கண்டேயர் மகிழ்வுடன் இல்லம் ஏகி தன் பெற்றோரிடம் நடந்த விஷயங்களைக் கூற, அவர்கள் சிவபெருமானின் கருணையை எண்ணி எண்ணிக் கண்ணீர் மல்கினர்.

இது இப்படி இருக்க யமதர்மராஜன் உயிர் இழந்ததால் பூமியில் எவருக்கும் மரணமேயில்லாமல் போய்விட்டது! அதனால் மக்கள் பெருக்கம் அதிகமாகி பூமி அந்த பாரத்தால் நிலை தடுமாரியது. இதனைக்கண்ட தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் வேண்ட, அவர் யமனை உயிர்ப்பித்து அவன் தொழிலைத் தொடருமாறு பணித்தார்!



தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 UPbUHKWMRSyoc1fW7UDa+0




தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 08, 2016 2:07 am

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 DRX4h4hfTsqot2Kgh0bQ+mallikarjuna

தேவலோக அழகனான மன்மதன், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு நல்ல காரியத்திற்காக தவம் செய்து கொண்டிருந்த சிவனை எழுப்ப முயற்சித்தான். தன் மலர் அம்பை அவர் மீது எய்தான். விழித்த சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து, அவனை எரித்து சாம்பலாக்கி விட்டார்.

இவர் அடிக்கடி கோபப்பட்டால் உலகம் தாங்காது என்பதால், பிரம்மா சிவனின் கோபத்தை அனலாக திரட்டி கடலுக்குள் புகுத்தி விட்டார். அந்த கோப அனல் குழந்தையாக மாறியது. பிரம்மா அந்த குழந்தைக்கு ஜலந்திரன் என பெயரிட்டார்.

அவன் முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் மிகவும் தொந்தரவு கொடுத்தான். இதை தேவர்கள் திருமாலிடம் தெரிவித்தனர். ஜலந்திரனின் சக்திக்கு காரணமே அவனது மனைவி தான். அவளது பதிபக்தியால் தான் அவன் தப்பி வந்தான். ஜலந்திரனை அழிக்க வேண்டுமானால் அவனது மனைவி பிருந்தையின் பதி விரதத்தை அழிக்கவேண்டும் என திருமால் உணர்ந்தார். (பிருந்தை என்றால் துளசி என்று பொருள்).

எனவே திருமாலே ஜலந்திரன் போல உருவெடுத்து பிருந்தையிடம் சென்றார். வந்திருப்பது திருமால் என்பதையும், தனது பதி விரதத்தை சோதிக்க அவர் வந்திருப்பதையும் அறிந்த பிருந்தை தீயில் புகுந்து உயிரை விட்டாள்.

பிருந்தை இறந்தவுடன் ஜலந்திரன் தன் வலிமையை இழந்து விட்டான். பிருந்தையை வலுக்கட்டாயமாக கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், வருந்திய திருமால் சாம்பலாக மாறி பிருந்தையின் சாம்பலுடன் கலந்து விட்டார்.

திருமால் இல்லாத வைகுண்டம் இருண்டது. திருமகளான லட்சுமிதேவி வருந்தினாள். இதனை அறிந்த பார்வதி, லட்சுமியிடம், “பூமியில் உள்ள பாரிஜாத வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் புற்றிடங்கொண்டார் என்னும் சிவலிங்க மூர்த்தியை வில்வ இலை துாவி வழிபட்டால் உன் கணவனை அடையலாம், என்றாள்.

திருமகளும் அவ்வாறே செய்ய திருமால் சுயரூபம் பெற்றார். சிவன் மகிழ்ந்து திருமகளுக்கும் திருமாலுக்கும் காட்சி தந்தார். “சிவனை வில்வ இலை துாவி வணங்கினால் டாடா பிர்லா போல வாழலாம், என்று வாரியார் சுவாமி தன் சொற்பொழிவின் போது சொல்வார்.

சிவன் சில விதைகளை திருமாலிடம் கொடுத்து பிருந்தையின் சாம்பலில் துாவ சொன்னார். அதன்படியே செய்ய அதிலிருந்து துளசி தோன்றியது. திருமால் அந்த துளசியை எடுத்து சிவனை அர்ச்சித்து விட்டு மீதியை மாலையாக்கி கழுத்தில் அணிந்து கொண்டார். சிவனுக்கு வில்வமும், திருமாலுக்கு துளசியும் மாலையான கதை இதுதான்.

தண்ணீர் இல்லாமலே குளிக்கலாம்: மார்க்கண்டேயரின் ஆயுள் 16 வரையே என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவருக்குரிய மரண நாள் வந்ததும், எமன் அவரது உயிரைக் கவர்ந்து செல்ல வந்தான். மார்க்கண்டேயர் உடல் நிறைய திருநீறு பூசி, திருக்கடையூரிலுள்ள சிவனை சரணடைந்து லிங்கத்தை கட்டியணைத்துக் கொண்டார். ஆனாலும் எமன் விடவில்லை. சன்னிதிக்குள் வரும் முன்பே, எமனைக் காலால் உதைத்து தள்ளினார் சிவன்.

இதன்பின் எமன் தன் துாதர்களிடம், “திருநீறு பூசிய பக்தர்களை கண்டால் வணங்கிச் செல்ல வேண்டும்,” என உத்தரவிட்டான். திருநீறுக்கு காப்பு, ரட்சை என்று பெயருண்டு. இதற்கு பாதுகாப்பது என்று பொருள். சம்பந்தர் மதுரை சோமசுந்தரர் மீது பாடிய மந்திரமாவது நீறு திருநீற்றின் மகிமையை விளக்குகிறது.

திருநீற்றை சுட்டுவிரல், நடுவிரல், மோதிரவிரல் மூன்றாலும் எடுக்க வேண்டும். கீழே சிந்தாமல் சிவாயநம என்று சொல்லி நெற்றியில் அணிய வேண்டும். இதற்கு பஸ்ம ஸ்நானம் அல்லதுதிருநீற்றுக்குளியல் என்று பெயர்.




தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 UPbUHKWMRSyoc1fW7UDa+0




தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக