புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_m10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10 
78 Posts - 52%
heezulia
ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_m10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_m10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen
ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_m10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_m10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_m10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_m10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10 
120 Posts - 55%
heezulia
ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_m10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10 
80 Posts - 37%
T.N.Balasubramanian
ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_m10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_m10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_m10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_m10ஆத்திசூடி மூலமும் உரையும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்திசூடி மூலமும் உரையும்


   
   
editorvalavan
editorvalavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/02/2016
http://www.editorvalavan.com/

Posteditorvalavan Wed Mar 30, 2016 3:27 pm

ஆத்திசூடி என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த 'ஒளவையார்' என்னும் மெல்லியலார் அருளிய நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும், ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக் குறித்து எத்தனையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுகள் புறநானூறு முதலிய சங்க நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் அதியமான் என்னும் வள்ளல் அளித்த அமுதமயமான நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்தனரெனச் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சங்ககாலத்து ஒளவையாரும் வேறு; கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும்.

தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவையென்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சி யுடையாரெவரும் ஒளவையாரின் நீதிநூல்களுள் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துகளும் ஆத்திசூடியிலும், கொன்றைவேந்தனிலும் சிறு சிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன. இளம்பருவத்தினர் எளிதாய்ப் பாடஞ்செய்து நினைவில் வைத்துக் கொள்ளும்படி, அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக, இவற்றின் சூத்திரம் போலுஞ் சொற்றொடர்கள் அமைந்துள்ளன. ஆத்திசூடி மிகச்சிறிய சொற்றொடர்களாலும், கொன்றைவேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களாலும், ஆக்கப்பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டுமென்னும் கருத்துப்பற்றியேயாகும். மிக்க இளம்பருவத்தினராயிருக்கும்பொழுதே, பிள்ளைகளின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்க வேண்டுமென்னும் பெருங் கருணையுடனும், பேரறிவுடனும் 'அறஞ்செய விரும்பு' என்று தொடங்கி ஆக்கப்பெற்றுள்ள ஆத்திசூடியின் மாண்பு அளவிடற்பாலதன்று. இங்ஙனம் உலகமுள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன்பெறும் முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண்மக்களுள் ஒருவரென்னும் பெருமை தமிழ்நாட்டிற்கு உரியதாகின்றது.

ஆத்திசூடி உரைப்பதிப்புகள் வேறு பல இருப்பினும், இப்பதிப்பு மூலபாடம் தனியே சேர்க்கப்பெற்றும், பதவுரையும் பொழிப்புரையும் திருத்தமாக எழுதப்பெற்றும் சிறந்து விளங்குவது காணலாம்.

ந. மு. வே.

கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே

சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை நாம் பலகாலும் துதித்து வணங்குவோம். விநாயகக் கடவுள் சிவபெருமானுக்கு மூத்த பிள்ளையார் ஆதலின், சிவபெருமான் விரும்பிய தேவன் என்று கூறப்பட்டார். ஏ: ஈற்றசை.

ஆத்திசூடி மூலமும் உரையும்
1. அறஞ்செய விரும்பு.
நீ தருமம் செய்ய ஆசைப்படு.
2. ஆறுவது சினம்.
கோபம் தணியத் தகுவதாம்.
3. இயல்வது கரவேல்.
கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு.
4. ஈவது விலக்கேல்.
ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே.
5. உடையது விளம்பேல்.
உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே.
உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.

6. ஊக்கமது கைவிடேல்.
நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே. (அது: பகுதிப்பொருள் விகுதி.)
7. எண்ணெழுத் திகழேல்.
கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். (கணிதம் - கணக்கு.)
8. ஏற்ப திகழ்ச்சி.
இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே.
9. ஐய மிட்டுண்.
இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண்ணு.
ஏழைகட்கும், குருடர் முடவர் முதலானவர்கட்கும் பிச்சையிட வேண்டும்.
10. ஒப்புர வொழுகு.
உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.
11. ஓதுவ தொழியேல்
அறிவு தரும் நல்ல நூல்களை நீ எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. ஒளவியம் பேசேல்.
நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.
13. அஃகஞ் சுருக்கேல்.
மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே.
14. கண்டொன்று சொல்லேல்.
கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே. (பொய்ச்சாட்சி சொல்லலாகாது.)
15. ஙப்போல் வளை.
ங என்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள்.
[ஙா முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவது போல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.]
16. சனிநீ ராடு.
சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு.(புதன்கிழமைகளிலும் முழுகலாம்.)
17. ஞயம்பட வுரை.
கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு. [நயம் என்பதன் போலி.]
18. இடம்பட வீடெடேல்
அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே. ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.
19. இணக்கமறிந் திணங்கு
நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய.
20. தந்தைதாய்ப் பேண்
உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.
21. நன்றி மறவேல்.
உனக்குப் பிறர் செய்த நன்மையை எப் பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு.
உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்தலாகாது.
22. பருவத்தே பயிர்செய்.
விளையும் பருவமறிந்து பயிரிடு.
எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப்படவேண்டும்.
23. மன்றுபறித் துண்ணேல்.
நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே.
'மண்பறித் துண்ணேல்' என்று பாடமிருந்தால் பிறர் நிலத்தைக் கவர்ந்து வாழாதே என்று பொருளாம்.
24. இயல்பலா தனசெயேல்.
நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.
25. அரவ மாட்டேல்.
பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே.
26. இலவம்பஞ்சிற் றுயில்.
இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு.
27. வஞ்சகம் பேசேல்.
கபடச் சொற்களைப் பேசாதே.
28. அழகலா தனசெயேல்.
இழிவான செயல்களைச் செய்யாதே.
29. இளமையிற் கல்.
இளமைப் பருவத்திலேயே படிக்கத்தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள்.
30. அறனை மறவேல்.
தருமத்தை எப்பொழுதும் மறவாமல் செய்.
31. அனந்த லாடேல்.
மிகுதியாகத் தூங்காதே.
32. கடிவது மற.
யாரையும் கோபத்தாற் கடிந்து பேசாதே.
33. காப்பது விரதம்.
பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும்.
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம்.
34. கிழமைப் படவாழ்.
உன் உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு.
35. கீழ்மை யகற்று.
இழிவான குணஞ் செயல்களை நீக்கு.
36. குணமது கைவிடேல்.
நற்குணங்களைக் கைசோரவிடாதே. நன்மை தருவ தென்று கண்டறிந்ததைக் கைவிடாதே. அது: பகுதிப்பொருள் விகுதி.
37. கூடிப் பிரியேல்.
நல்லவரோடு நட்புச் செய்து பின்பு அவரை விட்டுப் பிரியாதே.
38. கெடுப்ப தொழி.
பிறருக்குக் கெடுதி செய்வதை விட்டுவிடு (கேடு விளைக்கும் காரியத்தைச் செய்யாதே.)
39. கேள்வி முயல்.
கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற் பொருளைக்கேட்க முயற்சி செய்.
40. கைவினை கரவேல்.
உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய்.
(ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.)

ஆத்திசூடி மூலமும் உரையும் தொடரும் ...

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 30, 2016 5:21 pm

நல்ல முயற்சி ! தொடருங்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 31, 2016 12:24 pm

அருமை அருமை அருமை...........மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
.
.

.

.ஆனால் பதிவின் நீளத்தை கொஞ்சம் குறையுங்கள், இடம் விட்டு பதிவு செய்யுங்கள், படிக்க வசதியாக இருக்கும் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
editorvalavan
editorvalavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/02/2016
http://www.editorvalavan.com/

Posteditorvalavan Thu Mar 31, 2016 4:12 pm

41. கொள்ளை விரும்பேல்
பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே.



42. கோதாட் டொழி.
குற்றமான விளையாட்டை விட்டுவிடு.


கோதாட்டொழி என்பதன்பின் 'கௌவை யகற்று, என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. 'துன்பத்தை நீக்கு' என்பது இதன் பொருள்.

43. சக்கர நெறிநில்.
அரசன் கட்டளை வழியில் அடங்கி நட.

44. சான்றோ ரினத்திரு.


அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.

45. சித்திரம் பேசேல்.
பொய் வார்த்தைகளை மெய்போலப் பேசாதே.

46. சீர்மை மறவேல்.


புகழுக்குக் காரணமானவற்றை மறந்துவிடாதே.

47. சுளிக்கச் சொல்லேல்.
கேட்பவர்க்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதே.

48. சூது விரும்பேல்.


ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே.

49. செய்வன திருந்தச்செய்.
செய்யுஞ் செயல்களைத், திருத்தமாகச் செய்.

50. சேரிடமறிந்து சேர்.
சேரத்தக்க நல்லிடத்தை ஆராய்ந்தறிந்து சேர்.



51. சையெனத் திரியேல்.
பெரியோர் சீ என்று வெறுக்கும்படி வீணாய்த் திரியாதே

52. சொற்சோர்வு படேல்.
நீ பிறருடன் பேசும்பொழுதும் மறந்து குற்றமுண்டாகப் பேசாதே



53. சோம்பித் திரியேல்.
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

54. தக்கோ னெனத்திரி.
பெரியோர்கள் உன்னைத் தக்கவன் என்று புகழும்படி நடந்துகொள்.



55. தானமது விரும்பு.
தக்கவர்களுக்குத் தானங்கொடுத்தலை விரும்பு.அது: பகுதிப்பொருள் விகுதி

56. திருமாலுக் கடிமை செய்.
நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்.



57. தீவினை யகற்று.
பாவச் செயல்களைச் செய்யாமல் விலக்கு.

58. துன்பத்திற் கிடங்கொடேல்.
துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே.முயற்சி செய்யும்பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டுவிடலாகாது


59. தூக்கி வினைசெய்.
முடிக்கத் தகுந்த உபாயத்தை ஆராய்ந்தறிந்து ஒரு காரியத்தைச் செய்.

60. தெய்வ மிகழேல்.
கடவுளை இகழ்ந்து பேசாதே


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 12:11 am

அருமை, ஆனால் இதை முன் திரி யுடன் இணைத்து விடுகிறேன், தொடர்ந்து படிக்க, பதிவிட சுலபமாய் இருக்கும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 12:14 am

அழகாய் தள்ளி தள்ளி இடைவெளி விட்டு பதிவு போட்டிருக்கிங்க....சூப்பர் !.............இந்த திரி இலேயே பதிவுகளைத் தொடருங்கள் புன்னகை........வாழ்த்துகள் !........... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக