புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
5 Posts - 4%
prajai
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
2 Posts - 2%
jairam
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
2 Posts - 2%
kargan86
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
9 Posts - 5%
prajai
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
2 Posts - 1%
jairam
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையில் மனித மனம்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 19, 2009 12:25 pm

கீதையில் மனித மனம்




‘கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலிலிருந்து
அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.
மனிதனின் மனதைப் பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.
கண்ணன் சொல்கிறான் :
“அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப – துன்பங்கள்
இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.”
அர்ஜுனன் கேட்கிறான் :
“மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின்
ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை. காரணம், உள்ளம் சஞ்சலமுடையது.”
“கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது,”
பகவான் கூறுகிறான் :
“தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில்
ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்க முடியும்.”
இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார் :
“கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகு சிரமம். அதுபோலப் பல
திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால்
வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்.”
- மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது என்பதுபற்றி
பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியானயோகமாகும்.
சகல காரியங்களுக்கும் – இன்பத்திற்கும் துன்பத்திற்கும், நன்மைக்கும்
தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும்,
புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம்.
மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.
பகுத்தறிவையும் மனம் ஆக்ரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.
கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான். கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.
அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது. அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.
எந்த அனுபவங்களையும் கொண்டு வருவது மனம் தான்.
இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்களை அழித்துவிடுகின்றன.
உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.
என்ன இந்த மனது?
காலையில் துடிக்கிறது. மதியத்தில் சிரிக்கிறது. மாலையில் ஏங்குகிறது. இரவில் அழுகிறது.
“இன்பமோ, துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்.” என்றிருக்க
மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.
எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.
கடிவாளம் இல்லாத இந்த மனக் குதிரையை அடக்குவது எப்படி?
“வைராக்கியத்தால் முடியும்” என்கிறது கீதை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Nov 19, 2009 4:10 pm

வணக்கம்
ந்ல்ல பதிவினைத் தந்த சகோதரிக்கு நன்றி. நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் காலை எனது பேராசிரியர் கூறியதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

பாரதப் போர் முடிவடைந்து விட்டது. தர்ம புத்திரனின் வேள்வியும் முற்றுப் பெற்று விட்டது. துவராபதியில் கண்ணன் ஒரு சோலையில் வாடிய முகத்துடன் அமர்ந்திருக்கிறான். கண்ணனுடைய உயிர்த்தோழர் உத்தவர் வருகிறார். அவர் ஒரு பிறவிக் குருடர்.

அவருக்கும் கண்ணனுக்கும் நடந்த உரையாடல்

உத்தவர்: கண்ணா! எவ்வளவு துயர் மிக்க சம்பவம் நடந்து விட்டது! துரோணர்,பீஷ்மர்,கர்ணன்,அபிமன்யு,கடோத்கஜன் போன்ற மாவீரர்கள் மாண்டுவிட்டனரே. இதைத் தடுத்து நிறுத்தி இருக்கக் கூடாதா கண்ணா ?

கண்ணன்: என்னால் முடியவில்லையே உத்தவா? நான் என்ன செய்வது?

உத்தவர்: என்ன? உன்னால் முடியவில்லையா?

கண்ணன்: ஆம். என்னால் முடியாமல் போய் விட்டது.

உத்தவர்: கண்ணா! விளக்கமாகச் சொல்வாயா?

கண்ணன்: உத்தவா! கவனமாகக்கேள்! நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் இது பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையில் நடந்த போர் என்று. அது உண்மையன்று. இது எனக்கும் சகுனிக்கும் நடந்த
போர்.

எல்லாம் சூதாட்டத்திலே தானே ஆரம்பமாயிற்று? துரியோதனன் தனக்குப் பதிலாகத் தன் மாமன் சகுனி ஆடுவான் என்று சொன்ன பொழுது தருமன் என்ன செய்திருக்க வேண்டும். தனக்குப் பதிலாகக் கண்ணன் ஆடுவான் என்று சொல்லி இருக்க வேண்டாமா? செய்ய வில்லையே? கண்ணா காப்பாற்று என்றாவது கேட்டிருக்கலாமல்லவா? திரெளபதிக்கு உதவவில்லையா? அக்ஞாத வாசத்தின் போது வந்த துர்வாசர் கோபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்ற எச்சிற் சோற்றினை நான் உண்ண வில்லையா? அவை போகட்டும். தம்பிகளை வைத்து ஆடினான். தாரத்தை வைத்து ஆடினான். நாட்டை வைத்து ஆடினான், அப்பொழுது கூட என் நினைவு வரவில்லையே. கண்ணனை வைத்து ஆடுகிறேன் என்று ஒரு சொல் சொல்லி இருந்தாலும் கூட அந்தச் சதுரங்கக் காயகளுக்குள் புகுந்து காப்பாற்றி இருப்பேனே. செய்ய வில்லையே. இப்பொழ்து கூறு உத்தவா! என் மேலென்ன தவறு?

இது என்னுடைய பேராசிரியர் கூறியது. ஆதார பூர்வம் உள்ளதோ இல்லையோ தெரியாது. ஆனால் நல்லதொரு உண்மை உள்ளே புதைந்து இருக்கிறது அதனால் பதிவு செய்தேன்.
அன்புடன்
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 19, 2009 4:53 pm

அபி நல்ல தகவல்... நந்திதா அக்கா நல்ல விளக்கம்.... [You must be registered and logged in to see this image.]

நன்றி அபி, அக்கா.... [You must be registered and logged in to see this image.]

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 19, 2009 4:57 pm

மிகவும் உண்மையான கருத்து உண்மையில் எந்த ஒரு செயலையும் செய்யும் பொழுது ஒரு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் நன்றி அக்கா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக