புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
50 Posts - 45%
ayyasamy ram
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
46 Posts - 41%
prajai
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
4 Posts - 4%
Jenila
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
2 Posts - 2%
kargan86
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
1 Post - 1%
jairam
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
93 Posts - 56%
ayyasamy ram
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
8 Posts - 5%
prajai
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
6 Posts - 4%
Jenila
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
1 Post - 1%
jairam
இஞ்சியும் சுக்கும் ! Poll_c10இஞ்சியும் சுக்கும் ! Poll_m10இஞ்சியும் சுக்கும் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஞ்சியும் சுக்கும் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 1:02 am

இஞ்சியும் சுக்கும் !

இஞ்சியும் சுக்கும் ! 3seddVCtT2eMeBaGb3E7+ginger-300x200

இஞ்சி ஒரு சர்வரோக நிவாரணியாக கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் எல்லா கால நிலையிலும் விளையக்கூடிய இஞ்சி, கேரளாவில் தான் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது.

இரும்பு, விட்டமின் சி, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களைக் கொண்ட இஞ்சியை பச்சையாக அல்லது உலர வைத்து சாப்பிட்டால் தலைவலி, ஜலதோஷம், முச்சு அடைப்பு, தலை சுற்று போன்ற நோய்களுக்கு ஒரு இணையற்ற மருந்தாக அமையும். ஆனால், இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் விஷம்.

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு.

நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.

இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு.

மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும்.

கல்லீரலை சுத்தப்படுத்தும்.

மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.

பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும்.

கஷாயம் பிடிக்கதவர்கள் இஞ்சி டீ போட்டு குடித்தாலும் போதும் ஜலதோஷம் குணமாகும்.


தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.

மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ​

"இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது.

கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று.

இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது.

இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது." என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.​


இது சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.​

இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.​

மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.​

செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.​

மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.​

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

இஞ்சி முரப்பா செய்தும் சாப்பிடலாம். அஜீரணத்தைப் போக்கும்.​

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 02, 2016 7:04 am

" இஞ்சியும் சுக்கும் " என்ற தலைப்பில் சுக்கைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Apr 02, 2016 8:14 am

நல்ல பகிர்வு அம்மா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 02, 2016 10:46 am

M.Jagadeesan wrote:" இஞ்சியும் சுக்கும் " என்ற தலைப்பில் சுக்கைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1200317

அதனால் என்ன , நாம் பூர்த்தி செய்து விடலாம் .

"காலையில் இஞ்சி ,
கடும் பகலில் சுக்கு ,
மாலையில் கடுக்காய்,
மண்டலம் உண்ண,
கோலூன்றி நடக்கும் கிழவரும் ,
கோலை வீசியே ,
குலாவி நடப்பாரே "
 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 12:29 pm

M.Jagadeesan wrote:" இஞ்சியும் சுக்கும் " என்ற தலைப்பில் சுக்கைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே !

மன்னிக்கணும் ஐயா, பதிவின் நீளம் கருதி ஒரு பாதி போட்டேன், மறுபாதி விட்டு விட்டேன், சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.........இதோ சுக்கு பத்தி போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 12:35 pm

இஞ்சியும் சுக்கும் ! 8fDsmYLbTcSuABBciskb+su1

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger), மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

21. தயிர் சாதம் கலக்கும்போதும், காஞ்சீபுரம் இட்லி செய்யும் போதும், பானகம் கரைக்கும் போதும், சுக்குப் பொடி போடுவது , அவற்றின் சுவையைக் கூட்டும்.

22. சுக்கு காப்பி அருமையான ஒன்று . அதன் செய்முறையை அடுத்த பதிவில் தருகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 12:37 pm

சளி, இருமல் போன்றவற்றிற்கு சுக்கு மல்லி காபி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் நின்றுவிடும்.

சுக்கு காபி பொடிக்கு :

சுக்கு - 1/2 கப்
மல்லி - 1/4 கப்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

சுக்கு காபிக்கு தேவையான பொருட்கள் :

தண்ணீர் - 2 கப்
சுக்கு காபி பொடி - 2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - தேவையான அளவு

செய்முறை:

• முதலில் சுக்கு மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

• ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

• அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால், சுக்கு மல்லி காபி ரெடி!!!

• பனங்கற்கண்டுக்கு பதிலாக தேன் அல்லது கருப்பட்டியும் சேர்த்து கொள்ளலாம்.

சிலர் சீரகம் சேர்ப்பது இல்லை புன்னகை..முயன்று பாருங்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 12:38 pm

சசி wrote:நல்ல பகிர்வு அம்மா.

மிக்க நன்றி சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 12:39 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:" இஞ்சியும் சுக்கும் " என்ற தலைப்பில் சுக்கைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1200317

அதனால் என்ன , நாம் பூர்த்தி செய்து விடலாம் .

"காலையில் இஞ்சி ,
கடும் பகலில் சுக்கு ,
மாலையில் கடுக்காய்,
மண்டலம் உண்ண,
கோலூன்றி நடக்கும் கிழவரும் ,
கோலை வீசியே ,
குலாவி நடப்பாரே "
 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200352

மிக்க நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக