புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
26 Posts - 39%
prajai
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Jenila
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Jenila
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_m10பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 24, 2016 4:43 pm

First topic message reminder :


நேற்றைய தினம் இரவு இணையத்தில் படித்ததில் பிடித்த, இந்தப் பாடலில் சில விசயங்கள் உண்டு. அவை அப்புறம்,முதலில் பொருள் என்ன? உங்களால் இப்படி கவிதை படைக்க முடியுமா? யார் எழுதிய பாடல்?

அலக கசட தடர ளகட
கலக சயச கதட - சலச
தரள சரத தரத ததல
கரள சரள கள

அலக கசடது அடர் அளம் கட 
கல் அக சய சக தட  - சலச 
தரள சர தத ரத ததல 
கரள சரள கள 



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 10:01 pm

உதடு ஒட்டாத குறள்..!
-

திருக்குறளை வாசிக்கும் போது உதடு ஒட்டாத குறள் எது ?

விடை:

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : 35

குறள் எண் : 341

குறள் :
-
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
-
-----------------
விளக்கம் : ஒருவன் எந்தப்பொருளின் மீது ஆசையை நீக்கினானோ
அவன் அந்தப் பொருளால் துன்பம் அடைய மாட்டான்

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 24, 2016 10:03 pm

நன்றி ராம் ஐயா.

சேதுபதியின் அவைக்களப் புலவராக இருந்த கவிச்சிங்க நாவலரிடம் பொன்னுச்சாமித்தேவர்  வைத்த கோரிக்கை,

"கால், கொம்பு, விசிறி, ஒற்று, ஙகரம், ஞகரம், பகரம், மகரம் ஆகியவை நீங்கிய அநாசிக நிரோட்டக வெண்பாவை இயற்றவேண்டும். அதையும் பத்தே பத்து நிமிடங்களில் இயற்றவேண்டும்".
இந்தச் சவாலை ஏற்றுப் பாடிய பாடலே அதுவாகும்.

நிரோட்டகம் என்பது சமஸ்கிருதச் சொல், நிர் + ஓட்டகம், அதாவது, உதடுகள் ஒட்டாமல் பாடப்படுகிற பாடல்.ஓஷ்டம் என்றால் வட மொழியில் உதடு என்று பொருள்.  நிர் ஓஷ்டா (நிரோஷ்டா) என்றால், உதடு இல்லை / உதடு சேராது என்று பொருள்.

நிரோட்டகம் என்பது- இதழ்களின் முயற்சியால் பிறக்கும் குறிப்பிட்ட மெய், உயிர், உயிர் மெய் எழுத்துக்கள் செய்யுளில் வாராமல் பாடுவது.  பாடல்களைப் படிக்கும் போது மேல் உதடும் கீழ் உதடும் ஒன்றொடு ஒன்று ஒட்டாது. இது ஒரு அரிய முயற்சியாக அமைந்துள்ளது. சிவப்பிரகாச சுவாமிகள் இதைக் கையாண்டுள்ளார்.(நன்றி.இணையப் பல்கலைக்கழகம்.)

உ, ஊ, ஒ, ஓ, ப, ம, வ ஆகிய எழுத்துகள் வராதலால் உதடுகள் குவியாமலும், ஒட்டாமலும் இதைப் படிக்க முடிகிறது. இதில் உ, ஊ, ஒ, ஓ, ஔ, என்ற உயிரெழுத்துகள் ஐந்தும் இதழ் குவியும் முயற்சியில் பிறக்கும்.இது பண்டு நிரோட்டகம் எனவும் இதழகல் என்றும் சொல்லப்படுகிறது.தமிழில் பல பாடல்களை எடுத்துக் காட்டலாம்.

தமிழில் உச்சரிக்கும்போது உதடு ஒட்டுகிற எழுத்துகள் குறைவுதான். ப், ம் மற்றும் வ் என்ற மெய்யெழுத்துகள், இவை இடம்பெறுகிற உயிர்மெய் எழுத்துகள், இவற்றைமட்டும் தவிர்த்துவிட்டு மீதமிருக்கும் தமிழ் எழுத்துகளை வைத்து பாடல் எழுதவேண்டும்.
பல குறட்பாக்கள் இப்படி அமைந்திருக்கின்றன.இதற்கு எடுத்துக்காட்டாக  இந்தக் குறட்பாவையும் சொல்லலாம். (தகவல்-முனைவர் மு.இளங்கோவன்)

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

சினிமாவில் இளையராஜா இசையில் வாலி அவர்களால்  வில்லுப்பாட்டுக்காரன் படத்திற்காக எழுதப்பட்ட, தந்தேன் தந்தேன்................... என்று தொடங்கும் இந்தப் பாடலை மறைந்த மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். நிரோட்டா இராகத்தில் பாடப்பட்ட இந்தப் பாடல் நிரோட்டா வகையைச் சேர்ந்தது.(பாடல் கிடைக்கவில்லை.)

கர்நாடக இசையில் ம - ப (மத்தியமம்,பஞ்சமம்) என்ற சுவரங்களை உதட்டை ஒட்டினால் தான் உச்சரிக்க முடியும்! எனவே இந்த ப -ம சுவரங்களை நீக்கி, ச ரி க த நி ச – ச நி த க ரி ச என்று பாடும் போது உதடு ஒட்டாது!



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 10:11 pm

பயனுள்ள தகவல் பகிர்வு
-
தந்தேன் தந்தேன் பாடல் காணொளி
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 10:11 pm

பதிவு எண் # 8 முதல் # 12 வரை
முத்தான சத்தான விஷயங்கள் . பகிர்ந்து கொண்ட
திருவாளர்கள் ayyasami ram , M jagadeesan ,ராமலிங்கம் K ,மூர்த்தி
யாவருக்கும் எந்தன்  பணிவான வணக்கம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஈகரை பதிவர்கள் இவர்கள் என கூறுவதில் பெருமை படுகிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 10:18 pm

படம் - வில்லுப்பாட்டுக்காரன் (1992)
இசை - இளையராஜா
பாடலாசிரியர் - கவிஞர் வாலி
பாடியவர் - மலேசிய வாசுதேவன்
-

-------------------------------

மூன்று தலைமுறை பாடலாசிரியர் கவிஞர் வாலி.
புதுமையாக எழுதக் கூடியவர். அவர் எழுதிய பாடல்களில்
இதுவும் ஒன்று. வித்தியாசமான பாடல் இது. படித்துப்
பாருங்களேன்.
-----------------
-
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே
-
ஆனந்த ராகங்களை கிளியே இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே எங்கிட்ட ஏதுக்கடி
-
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே
-
ஏழைகள் காதுகளில்
செந்தேனள்ளி சேர்க்குற கலைஞனடி
தென்னாட்டுல இருக்கிற இதயங்களை
சங்கீதத்தில் ஈர்க்கிற இளைஞனடி
நாட்டுல கேட்டுக்கடி
இசையில் இங்கு நான் செஞ்ச சாதனைதான்
நாக்குல இருக்குதடி
எடுத்து தர ஆயிரம் கீர்த்தனைதான்
அலை அடிக்க அதை தடுக்க அணை எடுக்க
நினைத்ததென்ன
தள்ளு எட்டி நில்லு
எல்ல தாண்டுற சீண்டுற ஏண்டி நீ அளக்குற
-
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே
-
ஆனந்த ராகங்களை கிளியே இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே எங்கிட்ட ஏதுக்கடி
-
நீ இங்கு கேட்டதில்ல
அந்நாளிலே கிந்தனின் சரித்திரத்தை
திண்டாடிய நாட்டுக்கு இசையினிலே
தந்தாரடி என் எஸ் கே தன் கருத்தை
தேசத்தை திருத்திடத்தான்
கலைகள் என்று தெரிந்தது சேதியடி
நான் அந்த கலைஞனையே
நினைத்து இங்கு நடக்கிற ஜாதியடி
எனை அடக்க சிறை எடுக்க
சிறகடித்த இளைய கிளி
இன்று எதிர் நின்று
இந்த காலையை கங்கையில்
கால் கைகள் நடுங்குது
-
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே
-
ஆனந்த ராகங்களை கிளியே இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே எங்கிட்ட ஏதுக்கடி
-
------------------------------------

இந்தப் பாடலில் இருக்கும் சிறப்பு பலருக்கும் தெரியாதது.
உங்களுக்கு தெரியும் என்றால் மகிழ்ச்சியே.
தெரியாதவர்கள் பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப்
பாருங்கள்.
அப்படியும் தெரியவில்லை என்றால் அடுத்த வரியை
படிக்கவும்.
-

இது ஒரு 'உதடு ஒட்டாத' பாடல். அதாவது 'ப' 'ம'
தமிழ் எழுத்துக்கள் இந்த பாடலில் இல்லை. ஆச்சரியமாக
இருக்கிறதா... மீண்டும் இந்த பாடலை படித்து பார்க்க வேண்டும்
என்று தோன்றுமே... நிற்க...
-
இந்த பாடலில் 'வ' எழுத்தும் பயன்படுத்தப் படவில்லை.
அந்த வகையில் இது 'உதடு கடிக்காத' பாடலும் கூட.
-
ஆங்கில வார்த்தைகளும் அர்த்தமற்ற வார்த்தைகளும்
பயன்படுத்தும் கவிஞராக அவ்வப்போது விமர்சிக்கப் படும்
வாலியின் சிறந்த படைப்புகளுக்கு இந்த பாடல் ஒரு சோறு
பதம்.
-
நன்றி
Vinoth Selvarajan

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 24, 2016 10:22 pm

ayyasamy ram wrote:உதடு ஒட்டாத குறள்..!
-

திருக்குறளை வாசிக்கும் போது உதடு ஒட்டாத குறள் எது ?

விடை:

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : 35

குறள் எண் : 341

குறள் :
-
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
-
-----------------
விளக்கம் : ஒருவன் எந்தப்பொருளின் மீது ஆசையை நீக்கினானோ
அவன் அந்தப் பொருளால் துன்பம் அடைய மாட்டான்
மேற்கோள் செய்த பதிவு: 1222632

இந்தக்குறள் " துறவு " என்ற அதிகாரத்தில் முதல் குறட்பா . துறவு என்று வந்துவிட்டால் எந்தப் பொருளிடத்தும் ஓட்டோ , உறவோ இருக்கக்கூடாது என்பதற்காகவே உதடு ஒட்டாமல் இக்குறட்பாவை வள்ளுவர் முதலில் வைத்தார் என்று சிலர் கூறுவார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக