புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
48 Posts - 45%
heezulia
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
jairam
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
14 Posts - 4%
prajai
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
jairam
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 5:04 pm

First topic message reminder :

ஸ்ரீகுருவே நம:
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்

உலகின் ஞான பீடம், நமது பாரததேசம் என்பதில் ஐயம் இருக்க முடியாது. நமது பரத கண்டத்தில் எங்கேனும் ஓர் இடத்தில் எப்போதும் உலக மக்களுக்கு நமது கொடையாகும் வேதங்கள் ஒலித்துக் கொண்டே இருப்பவை என்பதிலும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை.

ரிக், யஜுர், சாம , அதர்வணம் என வேதங்கள் நான்கு. இவை சதுர்வேதம் என்னும் ஒரே சொல்லால் குறிப்பிடப்படுபவை. நம் அமுதத்தமிழ் சதுர்வேதத்தை நான்மறை என நவிலும் . பொதுவாக மறை என்றும் வேதங்கள் , குறிப்பிடப்படுபவை.

மறை நான்கிலும் உரைக்கப்பட்ட செய்யுளாகட்டும், உரைநடையாகட்டும் அல்லது உரையாடல்களாகட்டும் அனைத்தும் மந்திரம் என்றே பெயர் பெறுபவை. மற்ற நூல்களுக்கு இத்தகைய உயர்வு இல்லை.

நிறைமொழி மாந்தர் சிந்தையிற் கிளர்ந்த மறைமொழிதான் மந்திரம். மனதால் திரும்பத் திரும்ப தியானிப்பதும் மந்திரம்.

வேதம் என்றால் அறிவு என்று பொருள். ஆழ்ந்து பார்த்தால் அறிவின் களஞ்சியம்தான் வேதங்கள். வேதங்கள் ஒரு பூங்கா என்றால் அதில் மலர்ந்த மலர்களே மந்திரங்கள். அற்புத அறிவை தெள்ளத்தெளிவாக அருளும் அந்த அமுத மொழிகளை நாமும் நமது கோவில்களிலும், வீட்டின் அனைத்து காரியங்களிலும் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றோம்- பொருள் விளங்காமல்.

மந்திரங்கள் சிலவற்றின் பொருளைப் புரிந்து கொண்டால் தெய்வ வழிபாட்டின் போதும் இதர பிற நிகழ்வுகளின் போதும் அவை நமது மனத்திற்கு நிம்மதியையும் நன்மையையும் அளிப்பதாக இருக்கலாம் என்னும் நம்பிக்கையில் மந்திரப் பொருள் காணும் நோக்கமே , “மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்” என்னும் தலைப்பிட்ட இப்பதிவு. இனி மந்திர மலர்களின் அழகு, வண்ணம், அலர்வு, மணம் , அவற்றால் நமக்கு ஆகும் இன்பம் ஆகியனவற்றை ஒவ்வொன்றாக அறிவுப் பூர்வமாகக் காண்போம்.

முதலில் :

ॐ असतो मा सदगमय ।
तमसो मा ज्योतिर्गमय ॥
मृत्योर्मामृतम् गमय ।
ॐ सानति ॐ सानति ॐ सानतिः

அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதி: கமய
ம்ருத்யோ: மா அம்ருதம் கமய
ஓம் ஸாந்தி ஓம் ஸாந்தி ஓம் ஸாந்தி:

இதற்கு அப்யாரோஹ மந்திரம் என்றும் பெயர். அதாவது அபி+ஆரோஹ = அப்யாரோஹ என்றால் உயர்த்துதல் என்று பொருள். இந்த மந்திரம் ஜபிப்பவரின் நிலையை உயர்த்துவதாவது.
இது சுக்ல யஜுர் வேதத்தில் வரும் ப்ரஹதாரண்யக உபநிஷத்தின் சாந்தி மந்திரம்.

பதப்பொருள்:

ॐ - ஓம் – அவ்வாறே ஆகட்டும்.
असतः –அஸத: - மாயை என்னும் மாற்றத்திற்கு உட்பட்டது
मा – மா - என்னை
सत् – சத்- மாறாத உண்மை.
गमय -கமய –அழைத்துச் செல்க
तमसः –தமஸ: - அறியாமையாகிய இருள்
मा – மா - என்னை
ज्योतिः – ஜோதி: - அறிவுடைமை யாகிய ஒளி.
गमय -கமய –அழைத்துச் செல்க
मृत्योः – ம்ருத்யோ: - மனத்தின் மயக்கம்
मा – மா - என்னை
अमृतम् – அம்ருதம் – மனத்தெளிவு.
गमय -கமய –அழைத்துச் செல்க
सानति –சாந்தி - நிம்மதி அடிப்பொருள் விளக்கம்

பதவுரை :

முதல் அடி:

असतः मा सत् गमय - அசத: மா சத் கமய –

மாயை என்னும் மாற்றத்திற்கு உட்பட்டநிலையில் இருந்து என்னை மாறாத உண்மைக்கு அழைத்துச் செல் ( அதாவது ஆன்ம விடுதலையை எனக்கு அளி)

இரண்டாவது அடி :

तमसः मा ज्योतिः गमय - தமஸ: மா ஜ்யோதி: கமய -

அறியாமையாகிய இருளில் இருந்து என்னை அறிவுடைமை யாகிய ஒளிக்கு அழைத்துச் செல்
( அதாவது எனது அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞ்ஞானத்தை எனக்கு அளி)

மூன்றாவது அடி :

मृत्योः मा अमृतम् गमय – ம்ருத்யோ: மா அம்ருதம் கமய –

மனத்தின் மயக்கத்திலிருந்து என்னை மனத்தெளிவிற்கு அழைத்துச் செல்
( அதாவது எனது மனமயக்கதை அகற்றி எனக்கு மனத்தெளிவை அளி)

நான்காவது அடி:

ॐ सानति ॐ सानति ॐ सानतिः - ஓம் ஸாந்தி ஓம் ஸாந்தி ஓம் ஸாந்தி:-

என்னிடம் இருந்தும், எனக்கு அப்பால் இருந்தும் , இயற்கையிடமிருந்தும் ஆக மூவகையிலும் எனக்கு நிம்மதி உண்டாகட்டும் – அவ்வாறே ஆகட்டும்.

தெளிவுரை :
1. மாயை என்னும் மாற்றத்திற்கு உட்பட்டநிலையில் இருந்து என்னை மாறாத உண்மைக்கு அழைத்துச்
செல் ( அதாவது ஆன்ம விடுதலையை எனக்கு அளி);

2. அறியாமையாகிய இருளில் இருந்து என்னை அறிவுடைமை யாகிய ஒளிக்கு அழைத்துச் செல்
( அதாவது எனது அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞ்ஞானத்தை எனக்கு அளி);

3. மனத்தின் மயக்கத்திலிருந்து என்னை மனத்தெளிவிற்கு அழைத்துச் செல்
( அதாவது எனது மனமயக்கதை அகற்றி எனக்கு மனத்தெளிவை அளி);

4. என்னிடம் இருந்தும், எனக்கு அப்பால் இருந்தும் , இயற்கையிடமிருந்தும் ஆக மூவகையிலும் எனக்கு
நிம்மதி உண்டாகட்டும் – அவ்வாறே ஆகட்டும்.







+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 6:07 pm

தெரிந்த மந்திரம் - தெரிந்து கொள்ளாத பொருள்

(மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்)

8. மரணத்தை ( அஞ்ஞானத்தை ) வெல்லும் மந்திரம்.

महामृत्युञ्जय मन्त्रः

ऊँ त्रयम्बकम् यजामहे सुगन्धिंपुष्टि वर्धनम् ।
उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीय मामृतात् ।। - शुक्ल यजुर्वेद सम्हिता ३.६०

மஹா ம்ருத்துஞ்ஜெய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்|
உர்வாருகமிவ பந்தநாத் ம்ருத்யோர்முக்ஷீய மாம்ருதாத்|| – சுக்ல யஜுர் வேத மந்திரம் 3.60

பதப் பொருள்:

முதல் அடி

ऊँ - ஓம் - அப்படியே ஆகட்டும்
त्रयम्बकम् – த்ரயம்பகம் - மூவுலகிலும் பரவி நிற்றல்
यजामहे –யஜாமஹே – உயர்ந்ததாக வணங்குகிறோம்.
सुगन्धिम् -சுகந்திம் - நற்குணமுடையதும்
पुष्टि –புஷ்டி- செல்வத்தைக் கொடுப்பதும்
वर्धनम् – பலத்தை அளிப்பது

இரண்டாவது அடி

उर्वारुकम् –உர்வாருகம் -வெள்ளரிப் பழம் தன் கொடிக் காம்பிலுருந்து தன்னை விடுவித்தல்
इव -இவ - போல
बन्धनात् – பந்தநாத் - ஆசை என்னும் பற்றுக் களில் இருந்து
मृत्योः –ம்ருத்யோஹோ – மயக்கமாகிய அஞ்ஞானத்தினுடைய
मुक्षीय –முக்ஷீய - விடுவித்து
मा – மா -என்னை
अमृतात्- அம்ருதாத் – மெய்ஞ்ஞானமாகிய தெளிந்த அறிவிலிருந்து.

(மரணம் என்றால் சம்ஸ்க்ருதத்தில் ம்ருத்யு: அதாவது மயக்கம், அறியாமை என்றும் பொருள்)

தெளிவுரை:

(கடந்தகாலம் – நிகழ்காலம் –எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் நிலவுகின்ற) மூவுலகிலும் பரவி நிற்பதும் , நற்குணமுடையதும், செல்வத்தைக் கொடுப்பதும் பலத்தை அளிப்பதும் ஆகிய பரம்பொருளை (பிரபஞ்சப் பேராற்றலை) அனைத்திலும் உயர்ந்ததாகக் கருதி வணங்குகிறோம்.

வெள்ளரிப்பழம் முழுமையாகப் பழுத்தவுடன் தன்னைத் தன் கொடிக் காம்பிலுருந்து விடுவித்துக் கொள்ளுதல் போல , மயக்கத்தை அளிக்கும் அஞ்ஞானமாகிய ஆசை என்னும் உலகப் பற்றுக்களில் இருந்து என்னை நான் விடுவித்துக் கொள்ளுமாறு மெய்ஞ்ஞானமாகிய தெளிந்த அறிவை எனக்கு அளிப்பாயாக.

அப்படியே ஆகட்டும்.


விளக்கவுரை :

இந்த மந்திரம் மாயையாகிய உலகப் பற்றுக்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, உண்மை அறிவை அளிக்கப் பரம்பொருளை வேண்டுகின்றது. அதாவது விடுவிக்கக் கூட வேண்டவில்லை. வெள்ளரிப்பழம் விளைந்து பழுத்த பின், தானே கொடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளுதல் போல் தன்னைத்தானே உலகப் பற்றுக்களில் இருந்து விடுவித்துக் கொள்ளும் அறிவு வேண்டப்படுகிறது.

ஆனால், அறியாமையில் சஷ்ட்டியப்த பூர்த்தி(அறுபது வயது நிறைவு), பீமரத சாந்தி ( 80 வயது நிறைவு) சதாபிஷேகம்(100 வயது நிறைவு) ஆகிய நாட்களில் தனக்கு மரணம் என்பதே வராமல் இருக்க வேண்டும் என்று நம் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் சந்நிதியில் இந்த மந்திரத்தைச் சொல்லி யாகம் செய்து, தனக்கு மரணத்தை வெல்ல வகை செய்ய வேண்டும் என்று வேண்டப்படுவதை என்னென்பது !

பிறந்த அத்தனையும் மரணிக்க வேண்டும் என்பது இயற்கை. இந்த இயற்கை விதியை எந்த கடவுளாலும் மாற்ற முடியாது. இத்தகைய மூவகை யாகங்களை முறையாகச் செய்வித்த அத்தனை பேர்களும் நம் கண் முன்பாகவே மரணிகின்றார்கள். ஆனால் யோகாசனங்களோடு கூடிய பிராணாயாம வித்தை வாழ்நாள் காலத்தை உடல் ஆரோக்கியத்துடன் கொஞ்ச காலம் நீட்டிக்கலாம் - அதுவும் விதியின் பதிவிற்கு உட்பட்டு.

பின், இந்த மந்திரம் என்னதான் சொல்கிறது !
மரணத்தின் மீது பயம் கொள்ளாதே –அது இயற்கை.
உலகப் பற்றுக்களில் இருந்து நீயே விலகிக் கொண்டால் உனக்கு மரணத்தைப் பற்றிய பயம் இருக்காது என்கிறது

ஸ்ரீகுருவே நம:




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2016 9:03 pm

மரணத்தின் மீது பயம் கொள்ளாதே –அது இயற்கை.
உலகப் பற்றுக்களில் இருந்து நீயே விலகிக் கொண்டால் உனக்கு மரணத்தைப் பற்றிய பயம் இருக்காது என்கிறது

உண்மைதான்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 7:40 pm

தெரிந்த மந்திரம் - தெரிந்து கொள்ளாத பொருள்
(மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்)
கடோபநிஷத், சுவேடாஸ்வதர உபநிஷத், மற்றும் மஹாநாராயண உபநிஷத்                             ஆகியனவற்றின் சாந்தி மந்திரம்

9.

ॐ सह नाववतु ।  
सह नौ भुनक्तु ।
सह वीर्यं करवावहै ।
तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

சஹ நாவவது |
சஹ நௌ புனக்து |
சஹ வீர்யம் கரவாவஹை:
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

பதப்பொருள் :

ॐ  - ஓம் – அப்படியே ஆகட்டும்  
सह – சஹ - சேர்ந்து
नौ – நௌ – நாம் இருவரும் ( குருவும் சீடனும்)
अवतु  – அவது – ஒருவரையொருவர் நேசிப்போமாக .
सह- சஹ - சேர்ந்து
नौ – நௌ – நாம் இருவரும் ( குருவும் சீடனும்)
भुनक्तु  – புனக்து –ஆனந்தித்து அனுபவிப்போமாக.
सह -சஹ - சேர்ந்து
वीर्यं – வீர்யம் - ஊக்கம்
करवावहै- கரவாஹை - செய்வோமாக
तेजस्वि –தேஜஸ்வி – உணர்வுப் பூர்வமாக்.
नौ – நௌ – நாம் இருவரும் ( குருவும் சீடனும்).
अधीतम् – அதீதம் – முழுமையாக.
अस्तु – அஸ்து – இருக்கட்டும்.
मा विद्विषावहै – மாவித்விஷாவகை – கற்பதில் கருத்து வேறுபாடு கொள்ளாமல் இருப்போமாக.
ॐ शान्तिः शान्तिः शान्तिः -ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: -மூவகையிலும் இடரின்றி நிம்மதி நமக்கு அமையட்டும்.

தெளிவுரை:

கல்வி கற்பிப்பதிலும் கற்பதிலும்  குருவும் சீடனும் ஆகிய நாம் இருவரும் சேர்ந்து ஒருவருக்கொருவர் நேசமுடன் இருப்போமாக!
நாம் இருவரும் சேர்ந்து இந்த கற்பிப்பதையும் கற்பதையும் ஒரு ஆனந்த அனுபவமாக்குவோமாக !
கற்பித்தலையும் கற்பதையும் ஊக்கமுடன் செய்வோமாக!
இக்கல்விகற்றல் எனக்கு (சீடனுக்கு)  உணர்வுபூர்வமாகவும் முழுமையாகவும் அமையட்டும் !
கற்கும் காலத்தில் கல்வியை விளக்குப்படுவதிலும் விளங்கிக் கொள்வதிலும் கருத்துவேறுபாடு இல்லாமல் இருப்போமாக.
நமக்குள் நம் உடலாலும், சுற்றுச் சூழலாலும் , இயற்கையாலும் ஆகிய மூவகையிலும் இடரின்றி நிம்மதி நமக்கு அமையட்டும்.
அவ்வாறே ஆகட்டும்.

விளக்கம்:

குருகுலத்தில் கல்வி கற்பிக்கத்துவங்குமுன் ஒவ்வொரு நாளும் இந்த சாந்தி மந்திரம் பாடப்படும். எவ்வளவு பொருளாழம் கொண்டதாக இப்பாடல் அமைந்துள்ளது . வேதகால குருமார்கள் அல்லவா ! அதுதான் இந்த அற்புதம்.
ஸ்ரீ குருவே நம:



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 7:23 am

தெரிந்த மந்திரம் - தெரிந்து கொள்ளாத பொருள்
(மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்)

10.
सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।
विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி|
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா||

பதப்பொருள் :

सरस्वति– சரஸ்வதி –அனைத்துக் கல்வியும் அறிவுமாகிய பரம்பொருள்.
नमः – நம : வணக்கம்.
तुभ्यं – துப்யம் - உனக்கு.
वरदे – வரதே – முக்காலத்திலும் மாறாத நிலைத்த சான்றாண்மையே !
कामरूपिणि – காமரூபிணி - அன்பின் வடிவம்.
विद्यारम्भं - வித்யாரம்பம்- கல்விகற்கத் துவக்கம்.
करिष्यामि –கரிஷ்யாமி - செய்கிறேன் .
सिद्धिः –சித்தி: - புரிந்து விளங்கிக் கொள்ளுதல்.
भवतु-பவது – அமையவேண்டும் .
मे- மே - எனக்கு
सदा –சதா – எக்காலத்திலும்.

தெளிவுரை:

அனைத்துக் கல்வியும் அறிவுமாகிய பரம்பொருளே!
முக்காலத்திலும் மாறாத நிலைத்த சான்றாண்மையே !!
அன்பின் வடிவே!!!
உனக்கு வணக்கம்.
கல்வி பயிலத் துவங்குகிறேன்.
நான் புரிந்து விளங்கிக் கொள்ளுமாறு இக்கல்வி எல்லாகாலத்திலும் எனக்கு அமையட்டும்.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 7:32 am

நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக