புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
3 Posts - 2%
bala_t
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
1 Post - 1%
prajai
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
1 Post - 1%
Kavithas
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
280 Posts - 42%
heezulia
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
6 Posts - 1%
prajai
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
5 Posts - 1%
manikavi
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் வலி ஏற்பட வாயு காரணமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 591
இணைந்தது : 19/06/2016

Postprajai Sun Sep 25, 2016 11:28 pm

பொதுநல மருத்துவர் டாக்டர் கு.கணேசன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை.

வயிற்று வலி, நெஞ்சு வலி, தசை வலி என எல்லா உடல் வலிகளுக்கும் வாயுக் கோளாறு ஒரு காரணம் என்கிறார்கள். இது சரியா?

சரியில்லை.

இந்த இடத்தில் பொருத்தமான ஓர் உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம். என் நண்பரின் தந்தைக்குத் திடீரென நெஞ்சில் வலி வந்தது. அவரோ, அது ‘கேஸ் டிரபி’ளாக இருக்கும் என நினைத்துக் கவனிக்காமல் விட்டுவிட்டார். நாளாக ஆக வலி அதிகரித்தது, நண்பர் வலுக்கட்டாயமாக என்னிடம் அவரை அழைத்துவந்தார். பரிசோதித்துப் பார்த்தபோது, அவருக்கு இதயத் தமனிகளில் மூன்று அடைப்புகள் இருந்தன. தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல்நலம் தேறிவிட்டார். வாயுக் கோளாறு என இன்னும் சிறிது காலம் அவர் அலட்சியமாக இருந்திருந்தால், அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும்.

உடலில் வலி ஏற்படுவதற்கும் வாயுக்கும் தொடர்பில்லை என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் பிரச்சினையை ‘வாயுத் தொல்லை’ (Flatulence) என்கிறோம். இது வயிற்றில் மட்டுமே ஏற்படக்கூடிய பிரச்சினை. ஆனால், பொதுவாக வாயுவுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சு வலி, முதுகு வலி, முழங்கால் மூட்டு வலி, விலா வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி என உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.

வாயு எப்படி உற்பத்தியாகிறது எனும் அறிவியலைத் தெரிந்துகொண்டால் இதன் உண்மை புரியும். நம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதையிலும் உணவுப் பாதையிலும் மட்டுமே வாயு இருக்க முடியும். பலரும் நினைத்துக்கொண்டிருப்பது போலத் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டிருப்பது இல்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.

நாம் அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப்பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையில் இருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

குடலில் உணவு செரிக்கும்போது அங்குள்ள தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் மூலம் பல வேதிமாற்றங்களை ஏற்படுத்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இப்படி நாள்தோறும் சுமார் ஏழு லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, ரத்தத்தில் இது உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாகக் குடலில் 600 மி.லி. வாயு இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நல்லதுதான்.

சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் பிரியும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்க்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாகக் கெட்ட வாடையுடன் வெளியேறும்.

புரத உணவுகள், கிழங்குகள், வெங்காயம், முட்டைக்கோஸ், பீன்ஸ், காலிஃபிளவர் போன்ற காய்களை அதிகமாகச் சாப்பிடுவதாலும், மலச்சிக்கல், அமீபியாசிஸ், குடல் காசநோய், புற்றுநோய் போன்றவற்றாலும் வாயு அதிகமாகலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 26, 2016 5:54 am

உடல் வலி ஏற்பட வாயு காரணமா? 103459460 உடல் வலி ஏற்பட வாயு காரணமா? 3838410834
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 27, 2016 5:32 pm

நல்ல தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 27, 2016 6:03 pm


ஐயா !

இவை மருத்துவ ரீதியிலாகும் காரணமாகலாம்.

ஆனால் யோகம் என்னும் மெய்ஞ்ஞானம் வேறுவிதமாகக் கூறுகிறது. இதற்கு விஞ்ஞான விளக்கம் கேட்டால் கிடைக்காது. ஏனெனில் அது மெய்ஞ்ஞானம். மெய்ஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது.

சுவாசித்தலால் காற்று உடலுக்குள் புகுகிறது. இது மனித உடலுக்குள் பத்தாகக் கிளைக்கின்றது. அவை:
1.பிராணன்; 2. அபானன், 3. சமானன், 4.உதானன், 5. வியானன், 6. நாகன், 7.கூர்மன், 8. கிரீதரன், 9. தேவதத்தன், 10.தனஞ்செயன் என தச வாயுக்கள் என்ற பெயரும் பெறுபவை.

இவற்றின் பணிகள் மனித உடலில் அளப்பரியனவாம். விளக்கம் நெடிதாகும் .ஆதலால் தவிர்த்தோம். வாயுத்தொல்லை என்பது அபான வாயுவின் ஆதிக்கத்தால் விளைவதாம் என்பது யோகபாடத்தில் நமக்கு எம் ஸ்ரீகுருதேவரால் கற்பிக்கப்பட்டது. அவை சரிதான் என்று ஆராய்ந்து அறிந்து அடியனால் ஏற்கப்பட்டவை.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Tue Sep 27, 2016 6:48 pm

அதிகமான அசதி, உடல் வலி, சோம்பேறித்தனம், களைப்பு  ஆகியவற்றிக்கு   ஹீமோகுளோபின் குறைபாடும்  ஒரு காரணம்.

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 591
இணைந்தது : 19/06/2016

Postprajai Tue Sep 27, 2016 7:20 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1222883

SRINIVASAN GOVINDASWAMY wrote:அதிகமான அசதி, உடல் வலி, சோம்பேறித்தனம், களைப்பு  ஆகியவற்றிக்கு   ஹீமோகுளோபின் குறைபாடும்  ஒரு காரணம்.
மேற்கோள் செய்த பதிவு: 1222892

நன்றி! "ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் உணவில் சிறிதளவு வெந்தயம் மற்றும் துளசி போன்றவற்றி சேர்த்துக் கொள்வதால் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியும்." என்று "மனிதன்" என்ற தளம் கூறுகிறது.

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 591
இணைந்தது : 19/06/2016

Postprajai Tue Sep 27, 2016 7:22 pm

Ramalingam K wrote:
ஐயா !  

இவை மருத்துவ ரீதியிலாகும் காரணமாகலாம்.

ஆனால் யோகம் என்னும் மெய்ஞ்ஞானம் வேறுவிதமாகக் கூறுகிறது. இதற்கு விஞ்ஞான விளக்கம் கேட்டால் கிடைக்காது. ஏனெனில் அது மெய்ஞ்ஞானம். மெய்ஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது.

சுவாசித்தலால் காற்று உடலுக்குள் புகுகிறது. இது மனித  உடலுக்குள் பத்தாகக் கிளைக்கின்றது. அவை:
1.பிராணன்; 2. அபானன், 3. சமானன், 4.உதானன், 5. வியானன், 6. நாகன், 7.கூர்மன்,                       8. கிரீதரன்,  9. தேவதத்தன், 10.தனஞ்செயன் என தச வாயுக்கள் என்ற பெயரும் பெறுபவை.

இவற்றின் பணிகள் மனித உடலில் அளப்பரியனவாம். விளக்கம் நெடிதாகும் .ஆதலால் தவிர்த்தோம். வாயுத்தொல்லை என்பது அபான வாயுவின் ஆதிக்கத்தால் விளைவதாம் என்பது யோகபாடத்தில் நமக்கு எம் ஸ்ரீகுருதேவரால்  கற்பிக்கப்பட்டது. அவை சரிதான் என்று ஆராய்ந்து அறிந்து அடியனால் ஏற்கப்பட்டவை.
மேற்கோள் செய்த பதிவு: 1222886

நல்லது ஐயா. வாயுத்தொல்லைக்கு யோகம் ஏதாவது பரிகாரம் கூறுகிறதா என்று  தெரிவித்தால் ஆர்வமுள்ளோர்க்குப் பயனுள்ளதாயிருக்கும்.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 27, 2016 7:56 pm

ஆம் ஐயா!

நிலையான உடல் நலத்திற்கு யோகாசனங்கள்;
நீடித்த ஆயுளுக்குப் பிராணாயாமங்கள்;
நிறைவான மனதின் நிம்மதிக்கு தியானம்.

மருந்து மற்றும் மருத்துவம் இன்றியே மனிதனின் உடம்பு, உயிர், மனம் -இவை மூன்றையும் கட்டிக் காத்து நிறைவேற்றி வைப்பத்துதான் அஷ்டாங்க யோகம் என்னும் ஆத்ம வித்யா. இதனை ஒருவருடைய உடல்வாகு, வயது, புரிந்து கொள்ளும் திறன், மேலும் சுலமாக பழகும் விதம் ஆகியவற்றை நேரில் பார்த்து ஒவ்வொருவருக்கும் ஏற்ற ஆசனங்களைக் கற்பித்துப் பழக்கவேண்டும். அவற்றைக் கற்றுப் பழகினால் உடலின் அனைத்து குறைபாடுகளும் நீங்கும் என்பது உண்மை.

ஆனால் கூட்டமாக சேர்த்து Drill class போல் கற்பிக்கப்படுவது அல்ல யோகாசனங்கள். எழுத்திலோ தொலைபேசியிலோ கற்பிக்க இயலாதது. யோகாசனங்கள் நேரில் கற்க வேண்டுவது.

இல்லறத்தாருக்கு 72 தலையாசனங்களும், 163 கிளையாசனங்களும் உள்ளன. இவற்றில் எதனை யாருக்கு அவரைப் பார்க்காமல் கற்பிப்பது.

வாயுத்தொல்லை உள்ளவர் இருவர் வந்தால் அவரவர் உடல்வாகு, வயது, பழகும் பக்குவம் ஆகியனவற்றை நேரில் கற்பித்துத், தேவைப்படும் பட்சத்தில் ஒருவருக்கொருவர் ஆசனங்களை மாற்றியும், வரிசைத் தொடரை மாற்றியும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கொடுக்கவேண்டும். அப்போது பூரண உடல் நலம் நிச்சயம். உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.

நாள் ஒன்றுக்குக் காலையோ அல்லது மாலையோ, பத்து நிமிடம் முதல் 20 நிமிடம் வ்ரையிலான யோகாசனப் பயிற்சி எவருக்கும் 5 வயது முதல் 100 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் கூட ஆண்-பெண் இருபாலருக்கும் யோகாசனங்கள் பொருந்துபவை - நலம் பயப்பவை.

அடியன் ஏதோ கற்பனையில் கூறுவதாகக் கருத வேண்டாம்.

மேலே கூறிய அனைத்தும் உண்மை.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 27, 2016 9:04 pm

தினமும் பிராணாயாமம் செய்தல் /த்யானம் --உடலுக்கு மிகவும் நல்லது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 27, 2016 9:10 pm

நல்ல தகவல் பரிமாறல்கள் . பகிர்ந்தவர் /இணைந்தவர் அனைவருக்கும் நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக