புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Jan 13, 2017 7:04 pm

First topic message reminder :


ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1



முகப்புரை
குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் .

ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை.

திருவள்ளுவரைப்போலவே ஔவைப் பிராட்டியும் இம்மானிடம் உய்வுபெற அரிய கருத்துக்களை இரு அடிகளில் ,குறள் வெண்பாக்களாக மொத்தம் 310 எண்ணிக்கையில் வீட்டு நெறிப்பால் ,திருவருட்பால் ,தன்பால் என்று மூன்று அதிகாராங்களாகப் பிரித்து இயற்றி இருக்கிறார்.

திருக்குறள் எடுத்தியம்பும் அறம் ,பொருள் ,இன்பம் போன்றே இக்குறள்களும் மானுட தேக அமைப்பு ,அதனுள் துலங்கும் ஆதி அறிவு , வாழ்வியல் குறிக்கோள் இவைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.

அத்தனை உலக மதங்களும் வாழ்வின் முடிவில் சொர்க்கம் சென்று சேர்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகையில் ,நமது சனாதன நெறிதானே வீடுபேறு அல்லது முக்தி என்பதை வாழ்வின் இறுதிப பயனாகக் கூறுகிறது .

இதனை அடிப்படையாகக் கொண்டே ஔவையின் குறளும் ஒரு உத்தமமான யோகசாஸ்திரத்தின்,அத்துனை பரிமாணங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது .மனதை ஆராய்ந்து அறியும் கருவியாகக் கொண்டு ,மனதைப் பற்றியும் அதன் தன்மைகளைபற்றியும் ,அதன் மேன்மைகளை அறிந்துகொண்டு ,வாழ்வின் குறிக்கோளை அடைவது எப்படி என்பதை இயம்புகிறது .இன்னும் ஜனன மரணம் என்றால் எனன ? பஞ்சபூத சேர்க்கையால் இந்த உடம்பு எவ்வாறு உருவாகி ,செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ?அதன் தலையாய குறிக்கோள் என்னவாக இருக்கவேண்டும் அதை அடையும் வழி முறைகள் எனன ? வாசியோக நிலை , சரவோடுக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் விளக்குகிறது.

யோகத்தில் திளைத்த பல அனுபவபூதிகள் அருளாளர்கள் காட்டிய மார்கங்களைவிட ,ஔவைக்குறள் மிக இலகுவாக யோகத்தின் தன்மையைப் பற்றி விளக்குகிறது .

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பில் ஏறத்தாழ 457 புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது .கி .மூ இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து கி .பி மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சுமார் நானூறு ஆண்டுகளில் சுமார் ஐநூறு புலவர்கள் பாடிய அருமையான தமிழ் பாடல்கள் தொகுக்கப்பட்டிருப்பதும் ,அத்துணை தகுதி வாய்ந்த புலவர்கள் தொடர்ச்சியாக அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்திருப்பதும் ,தமிழின் சிறப்பினையும் ,அந்த காலகட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழர் தம் அறிவின் திறனையும் ,தகுதியையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வெறும் தமிழ்படித்த புலவர்கள் மட்டுமல்லர் ,அவர்களில் ,சமுதாயத்தின் எல்லா பிரிவினைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் இருந்திருக்கின்றனர் . பாடல்கள் புனைந்திருக்கின்றனர் .அந்தணர் ,வணிகர் ,கணக்கர் ,வேடர் ,குயவர் ,மருத்துவர் எல்லாபிரிவினரும் புலவர்களில் இருந்திருக்கின்றனர் .அத்துனைபேரும் தமிழில் புலமைபெற்று பாடல் புனையும் வல்லமை பெற்றிருக்கின்றனர்.

சங்கப்புலவர்களில் முப்பதுக்கும் மேல்பட்டவர்கள் பெண்கள் .அதாவது ஏறத்தாழ 7 % சதவிகித புலவர்கள் பெண்களாக இருந்திருக்கின்றனர் .அத்துணை உயர்கல்வி படைத்திருந்தனர் .

ஆனால் சங்ககாலம் தாண்டிப் பல்லவர் காலம் ,பாண்டியர் ,சோழர் ,நாயக்கர் ,முகமதியர் ,மராட்டியர் ,மேலை நாட்டவர் ஆட்சிக் காலங்களில் அத்துணை பெண் புலவர்கள் இடம்பெறவில்லை. ஏன் விடுதலைக்குப் பின் கூட அதிக அளவில் பெண் புலவர்கள் இடம் பெறவில்லை என்பது தெரியவில்லை.

ஆனால் சங்ககாலத்தில் ஔவையார் பாரி ,அதியமான் போன்றவர்க்கு அரசவை தூதர் போலும் அறிவுரை கூறிடும் அமைச்சர் போலும் இருந்திருக்கின்றனர் .அச்சமின்றி காடு மேடு சுற்றி அலைந்திருக்கின்றனர்.

தமிழில் பாடி அறநெறிக் காவலர்களாக இருந்திருக்கின்றனர் .ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஔவையார் ,காரைக்கால் அம்மையார,சித்தர்களில் திலோத்தமை மற்றும் பல பெண் ஞானிகள் தமிழ் நாட்டில் வாழ்திருப்பது ஒரு பெருமையளிக்கும் செய்தியே ..

அந்தக் காலகட்டத்தில் உலகின் எந்தப்பகுதியிலும் பெண்கள் இத்துனை உயர்வு பெற்றிருந்தார்களா என்பது சந்தேகமே .ஆனால் இடையில் இங்கு என்னதான் நடந்தது என்பதும் ஆய்வுக்குரியதே .

அந்த சங்ககால ஔவையார் தான் இந்த ஔவையின் ஞானக் குறளை எழுதினாரா என்பது ஆய்வுக்குரியதே . இன்னும் சொல்லப் போனால் விநாயகர் அகவல் எழுதிய ஔவையும் குறள் எழுதிய ஔவையும் ஒருவரேவா ? என்பதுக் கூட உறுதியில்லை.

ஆனால் சங்கக்காலத்தில் திருக்குறள் எழுதப்பட்டது .ஔவையின் குறளும் குறள் வெண்பாவிலே இருக்கிறது .பிற்காலத்தில் ஏனோ குறள் வெண்பாவில் எந்த இலக்கியமும் இயற்றப்படவில்லை.

இவற்றை எல்லாம் புலவர் பெருமக்கள் பார்த்துக்கொள்ளட்டும் .அவர்கள் விடுவிக்கவேண்டிய வரலாற்று புதிர்கள் நிரம்ப இருக்கிறது .நாம் ஔவையின் குறளில் கூறப்பட்டிருக்கும் ஞானத்தை மட்டும் பார்க்க மேலே செல்வோம்.நாம் இவ்வுலகில் வந்த வேலையை விரைவில் பார்க்கவேண்டும் அல்லவா ?

மனிதராய்ப் பிறந்தவர் அனைவரும் மனிதர் ஆகிவிடமுடியுமா ?
மனதை உடையவன் மனிதன் ,ஆனால் அதை கருவியாகப் பயன் படுத்தவேண்டும் .அதன்வழி போகக் கூடாது .உறங்குவது,உண்பது, மக்களைப் பெறுவது, உலாவுவது முதலியவை யாவையும் ,விலங்குகளும் தான் செய்கின்றன .இருவருக்கும் இவை பொதுவானவையே. பின் நாம் எப்படி விலங்கைக்காட்டிலும் மேல்?நினைக்க வேண்டும்.

நான் யார் ,எனது மனம் யார் , எதற்குப் பிறந்தேன் , எங்கிருந்துவந்தேன் , இந்த உடம்பு தானே வந்ததா ,ஒருவன் தந்ததா , அந்த ஒருவன் யார் , அந்த ஒருவன் தன்மை எனன , இவைகளை நினைக்க வேண்டும். இவைகளுக்கு விடையறிய அறவழியில் நிற்கவேண்டும் .நமது பிறப்பே, பிறப்பறுக்கும் வழி காணத்தான் .

விலங்குக்கும் ,மனிதனுக்கும் இருக்கும் எல்லைக் கோடு,இந்த இறைபற்றிய எண்ணம் தான் .விலங்கு இரை மட்டும் தேடுகிறது .மனிதன் இறையைத் தேடுகிறான் .



பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு —திருக்குறள் -358



அஞஞானம தான் பிறப்பைத் தருகிறது ,எனவே பிறப்பையே
அஞஞானம என்கிறார் திருவள்ளுவர் .

மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு
கல்லுண்டு மரமுண்டு
மனிதரிலும் நீர்வாழும் சாதியுண்டு
அநேககுல மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு வானவரும்
மனிதராய் பிறப்பதுண்டு
மனிதரிலே பிறப்பறுக்க வந்ததுவே
அருமைஎன வகுத்தார் முன்னோர்

இது சிவானந்த போதம் அளிக்கும் அறிவு

இனி ஔவை கூறும் உடம்பு எனும் சடப்பொருள் பற்றிய அறிவையும் ,மனம் எனும் சூக்ஷும பொருள் பற்றியும் ,உயிர் எனும் அதிஷுக்ஷும பொருள் பற்றியும் விளக்கும் அறிவியலோடு இணைந்த ஆன்மீகப் பார்வையை அடுத்தப் பகுதியில் இருந்து பார்ப்போமா ? சித்தர்களின் சித்தாந்த தொன்மை விளக்கத்தைப் படிப்படியாகக் காணலாம்.



-தொடரும்


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jun 25, 2017 1:20 pm

 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 PnSWiIHqQfypD3shK92c+avvai91



ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி 10
-அண்ணாமலை சுகுமாரன்

“ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற ஒன்றை உணர்ந்தேனே “
என்று நம்மாழ்வார் புகல்வது போல் ஊனில் உயிரில் மட்டும் இல்லாமல் உணர்வினும் இறையின் இருப்பை உணர்வதே உடம்பைப் பெற்ற பெரும் பயன் என்று முந்தையக் குறளில் பார்த்தோம் .

இந்த உணர்வு என்பது உணர்ச்சி இல்லை. நாம் இனிப்பை உணர்கிறோம், குளிரை உணர்கிறோம், அன்பை உணர்கிறோம், கோபத்தை உணர்கிறோம். அப்படியே அறிவும் உணர்வும் இணைய வேண்டும்.
இறை உணர்வு என்பது உணர்வாக உடம்பில் கலக்க வேண்டும்.

வேதத்தில் இருந்து கூறப்படும் ‘தத்துவமசி’ போன்ற மகா வாக்கியங்கள் போல் புதுவை அன்னையின் மகா வாக்கியம் ஒன்று உள்ளது. அவர்கள் கூறிய அருளுரையில் இருக்கும் இந்த வாக்கியத்தை மகாவாக்கியமாக நான் மதிக்கிறேன்.
அது என்னவெனில் ‘அகவுணர்வுகளின் வெளிப்பாடே நம்மை சுற்றிய புறச்செயல்கள்’ என்பதுவே ஆகும் .

இந்த மகா வாக்கியமே நம்மைச்சுற்றி நடக்கும் அனைத்துக் காரணங்களுக்கும் தகுந்த ஒரு சரியான காரணத்தை கூற வல்லது ஆகும்.

உண்மையில் எல்லோரும் நம்புவது போலோ அல்லது நினைப்பது போல் நாம் என்ன நினைக்கிறோமோ அதைப் பொறுத்தோ ,அல்லது நமது எண்ணங்களை மட்டும் பொறுத்தோ, நமது தேவைகளின் பொறுத்தோ, நமது பிரார்த்தனைகளைப் பொறுத்தோ மட்டும் நமது வாழ்வில் நடக்கும் காரியங்கள் இருப்பதில்லை.

நமது அறிவுக்கும் புலமைக்கும், அனுபவத்திற்கும் நமக்கு நடக்கும் காரியங்களுக்கும் எந்தவித தொடர்பும் இருப்பதில்லை..
இது பல நேரங்களில் நமக்குத் திகைப்பை உண்டாக்குகிறது. காரணக் காரியம் புரியாமல் புலம்புகிறோம்.
ஆனால் உண்மையில் நாம் கொண்டிருக்கும் அக உணர்வின் தன்மையைப் பொறுத்தே வாழ்வின் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
உணர்வு என்பது அறிவு மட்டுமல்ல வேண்டுமானால் அறிவின் விளைவு அதன் நிகழ்வு எனக் கூறலாம்.

எப்படி சந்தோஷமாக எப்போதும் இருப்பது எனத் தெரிந்திருந்தாலும், அந்தத் தெரிந்தது மட்டும் சந்தோசம் ஆகி விடுமா?. சந்தோஷமாக உணரவேண்டும்.
அந்த உணர்வு எங்கிருந்து வருகிறது.
எது உணர்கிறது. மூளையா? மனதா?

மனம் தான் உணரவேண்டும். அதற்கு மனத்திற்கு முன்பே சந்தோசம் என்பது என்ன எனத் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான்அதை உணரமுடியும். சர்க்கரையின் சுவை முன்பே தெரிந்தால் தான் சர்க்கரையை மனம் இனம் காண முடியும். முன்பே தெரிந்தது தான் வாசனை என்பது. அது ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு நாளும் பெறும் அனுபவத்தைச் சேகரம் செய்வது. நமக்கும் இறைக்கும் காலம் காலமாகத் தொடர்பு இருக்கிறது. நம்முள் இறைவன் இருக்கிறான்.
ஔவையும் உடம்பில் இருக்கும் உத்தமனைப் பற்றிக் கூறுகிறார்.
நமது மனம், ஆன்மாவின் இருப்பை உணரும் போது, மனம் உள் நோக்கிக் குவியும் போது, நம்முள் இறை உணர்வு உண்டாகிறது. கோயிலுக்குச் சுற்றுப்பிரயாணம் சென்று சாமியைப் பார்த்து விட்டு, பிரசாதத்தை ருசித்து விட்டு வருவதும், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, அவனே அதுவாகி சாமியைப் பார்ப்பதும் ஒரே ரகமாகி விடுமா.

பாவித்தால் தான் பலன் புரியும்.

அக உணர்வை வளர்த்துக் கொள்வதும் நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்வதும் மிக முக்கியமானதாகும்.
நல்ல உணர்வுகள் என்பது அன்பு, பக்தி, சந்தோசம், பரிவு, பெருந்தன்மை, மன்னிக்கும் குணம் முதலியவையாகும் .
தீய உணர்வுகள் கோபம், பொறாமை, கருமித்தனம், சுயநலம், தன்னை மட்டும் முன்னிலைப் படுத்தல் முதலியவையாகும்.

உணர்வு என்பது மனிதனின் ஆன்மாவிற்கு சொந்தமானது மட்டுமல்ல. ஆன்மாவின் இயல்பே உணர்வு தான் .

பணக்காரனாக வேண்டுமெனில் பணக்காரனாக தன்னை நினைத்தால் மட்டும் போதாது, பணக்காரனாகவேத் தன்னை உணரவேண்டும். உணர்வே கனவை மெய்யாக்கும் வல்லமை கொண்டது .
நாம் நம் உணர்வில் செயல் படும் போது மட்டுமே ஆன்மாவின் ஒளி உணர்வின் மேல் படுகிறது.

இறையுடன் அறிவும், மனமும் ஒருசேர, எந்தவித வினாவும் இன்றிச் சரண் புகும் மனநிலையில் மட்டுமே நமக்கு இறை உணர்வு ஏற்படும்.
இது உணர்வதுவே, உணரப்படுவது மட்டுமே,
எத்தனை முறை விவரித்தாலும் முழுவதும் கூறி விட்டதாகக் கூற முடியாது.
இனி உடம்பின் பயன் எனும் அதிகாரத்தின் அடுத்தக் குறளைப் பார்ப்போம்.
ஒரு பயவாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார்

ஒப்பற்ற உடம்பைப் பெற்றதன் பயன், அத்தகைய பயன் தரும் உடலைத் தந்த சங்கரனைச் சார் என்கிறார் .
இங்கு ஔவைப் பிராட்டி சங்கரன் எனக் குறிப்பிடுவது இறைவனைத் தானே தவிர சிவபிரானையோ, பரமசிவனையோ அல்ல என நினைக்கிறேன்.
ஏன் எனில் இது ஞானத்தைக் கூறவந்த குறள், இங்கே துதி பாடுதல் இருக்கத் தேவை இல்லை.
சங்கரன் என்பவர் மங்கலம் தருபவர். சங்கடங்களைத் தீர்ப்பவர், அத்தகைய இறைவனைச் சார்ந்திருப்பதே, உடம்பினைப் பெற்று அதனால் நாம் வாழ்வின் பயன் என்கிறார்.
முதல் குறளில் உடம்பினுள் இருக்கும் உத்தமனைக் காணச் சொன்னார். இரண்டாவது குறளில் உடம்பின் பயன், அதனால் பெற்ற அறிவின் பயன் என்பது, உணர்வதே என்றார். மூன்றாவது குறளில், உடம்பினைப் பெற்றதன் பயன், அத்தகைய உடம்பினைத் தந்த இறைவனைச் சார்ந்தே, உடம்பினால் பெற்ற வாழ்வு இருக்க வேண்டும் என்கிறார். இனி அடுத்தக் குறளைப் பார்ப்போம்.

பிறப்பினாற் பெற்ற பயனாவதெல்லாம்
துறப்பதாந தூநெறிக்கட் சென்று

தூநெறிக்கட் = உயர்ந்த நெறிகளில். இந்தப் பிறப்பினால் பெற்ற உடம்பின் பயன் எல்லாம் உடம்பைக் கொண்டு வாழும் வாழ்வில் உயர்ந்த நெறிகளில் சென்று, இந்த உடம்பைத் துறப்பதே ஆகும் என்கிறார் .
இந்த உடம்பு, நமக்கு பேறு அளிக்கும் உடம்பு. இந்த உடம்பின் பயன் பேறு நிலை நோக்கிய வாழ்வினை அறிந்து அதன் வழி நடப்பதே.
ஆனால் அத்தகைய பேறு கிடைக்கும் போது இந்த உடம்பை நாம் துறக்கிறோம்.
சீரும் சிறப்புமாகப், போற்றி வளர்த்த இந்த உடம்பு துறப்பதற்காகவே என்பது நமக்கு தெரிய வேண்டும்.

உடம்பின் மேல் பற்றுக் கொள்ளக் கூடாது.
பரிணாமத்தின் அடுத்த நிலைக்கு போகும் போது, உடம்பைத் துறக்கும் பற்றற்ற நிலை வேண்டும்.

பழைய சட்டையை, நாம் வளர்ந்ததும் மாற்றத்தான் வேண்டும். ஆற்றைக்கடக்க ஓடம் தேவைதான்.ஆனால் ஆற்றைக் கடந்ததும் ஓடத்தை கரையில் விட்டு,நாம் மேலே நடக்க வேண்டும். ஓடத்தைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு நடக்கக் கூடாது.
உடம்பின் பயன் பெற்றதும் உடம்பினைத் துறக்க வேண்டும். இதுவே இந்தக் குறளில் ஔவை நமக்கு கூறும் செய்தி.
இனி அடுத்தக் குறளை அடுத்ததில் பார்ப்போமா ?
உள்ளும் புறமுமாய் உடலுக்குள் நீ இருந்தது
எள்ளளவும் நான் அறியாதே இருந்தேனே பூரணமே —
பட்டினத்தார்
என்னில் இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ ?
----சிவவாக்கியர்
அண்ணாமலை சுகுமாரன்
25/6/17

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Jun 30, 2017 8:54 am


 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 GKI1pJjcSrOms9u2j5Uz+avvai10

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி 11
---அண்ணாமலை சுகுமாரன்


‘பிரக்ஞானம் பிரமம்‘ என்கிறது ரிக் வேதம்.
“மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
அஞ்ஞானந்தனை அகல்விக்கும் நல்லறிவே”
என்கிறார் சிவபுராணத்தில் மாணிக்கவாசகர்.
இத்தகைய ஆதியும் அந்தமும் இல்லாத, எல்லையற்ற அறிவுக்கு அறிவான, பேரறிவின் பேருவமே இறைவனின் இயல்பு.

எந்த வாக்கினாலும், எத்தகைய விரிவுரையாலும், பிற பொருள்களைப் போல் அத்துணை எளிதாக அறிய முடியாத அறிவின் மூலப்பொருளே இறையாகிய பரம்பொருள்.

அத்தகைய அறிவு, எவ்வாறு உணர்வாகப் பரிமளிக்கிறது என ஓரளவு விரிவாகச் சென்ற பகுதிகளில் பார்த்தோம்.

பரிணாம வளர்ச்சியில் வேட்டையாடுவதற்கும், வேட்டையாடப் படுவதில் இருந்து காத்துக் கொள்வதற்காகவே அதற்கு உகந்ததாக உலகில் முதலில் தோன்றிய முதுகெலும்புள்ள மீனில் இருந்த, தற்போது உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை விலங்குகளும், பறவைகளும் சிறுகச் சிறுக மாறி மாறி தற்போதைய நிலையை அடைந்து தங்களுக்குரிய வாழ்வை வாழ்ந்து வருகின்றன.

ஆனால் மனிதகுலம் மட்டும் தனது வேட்டையாடும் அடிப்படைக் குணத்தில், இருந்து இரையை மட்டும் நாடுவதை விடுத்து, மனம் என்னும் வஸ்த்து அதனிடம் இருந்ததால், இந்த உடலினைக் கொண்டு மேலும் மேலும் அறிவதையே வாழ்தலின் பயனாகக் கொண்டு வளர்ந்து வருகிறது பரிணாமத்தின் அடுத்த நிலைக்கு உயர்ந்து வருகிறது.

வாழ்தல் என்பது மேலும் மேலும் அறிவதிலேயேக் கழிகிறது. நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் அத்தனையும் அறிவின் பெருக்கமே
சுவாமி சித்பவானந்தரின் பகுப்புப்படி மனித குலத்தின் வாழ்தல் முறை மூன்று வகைப் படுகிறது.
வென்று வாழ்தல்
வகுத்து வாழ்தல்
வழங்கி வாழ்தல்
அநேகமாக மனிதர்களிலும், விலங்குகளிலும் இதில் இருக்கும் முதல் முறையான ‘வென்று வாழ்தல்’ என்பதே மேலோங்கி இருக்கிறது.
அதுவே competion எனப்படுவது, அதையே வாழ்தலின் சாமர்த்தியம் என மேல்நாட்டு மனோபாவ முறை வலியுறுத்துகிறது.
இதில் தங்களுக்குத் தருகின்ற மதிப்பை இத்தகைய வகையினர் பிற உயிர்களுக்குத் தருவதில்லை.

வெற்றிக்கு மட்டுமே இதில் மதிப்பு,
மனிதர்களுக்கு மதிப்பு அல்ல.
பிறரை வென்று வாழ, மற்றவரின் உடமைகளை கவர்ந்து வாழ்தலே மேல் என்று நினைப்பு அவர்களை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் அதை கீழ்த் தரமானதாக நமது தத்துவ முறை வலியுறுத்துகிறது.
உலகின் இறையின் மற்றையப் படைப்புகளை ஏதேனும் ஒரு வகையில் மடக்கி, அடக்கி தங்கள் நலனுக்காகவும், ஜீவனத்துக்காகவும் பயன்படுத்துதல் இத்தகையோரின் குறிக்கோள் ஆகும் .
அவரவர் வலிமைக்கும், வாய்ப்புக்கும் தக்கபடி பிறர் மீது தங்களது ஆளுகையை செலுத்துவது அவர்தம் இயல்பு. இதனால் உலகே போராட்டம் நிறைந்ததாக ஆகிறது, துன்பம் மிகுகிறது. உலகம் நரகம் ஆகிறது. ஒவ்வெருவரும் அப்படியே தங்கள் இயல்பையே பிரதிபலிக்க முயலும் போது, ஒரு வனத்தின் வாழ்வு உலகின் வாழ்வின் முறையாக மாறிவிடுகிறது.

இத்தகைய வாழ்கை முறையை தான் வாழும் வாழ்வில் எதிர் கொண்டாலும், அதைத் தவிர்த்து ‘வகுத்து வாழ்தல்’ என்னும் வாழ்க்கை முறையில் வாழ்வது அதைவிடப் பன் மடங்கு உயர்வானதாகும்.
இதுவே co-operation எனும் சமுதாய வாழ்க்கை முறையாகிறது. தனி நன்மை கூடவே இதில் பொது நன்மைக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

முறையான கட்டுப்பாடு மூலம் தனது நலன் கூடவே பொது நலனுக்கும முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அன்பும் ஆதரவும் இத்தகைய வாழ்வில் இடம் பெறுகிறது.
தன்னலனும் பொதுநலனும் சமமாகப் பேணப்படுகிறது. இறைவகுத்துள்ள விதிவழி வாழ்க்கை இதுவே ஆகும்.

இதில் மூளையை விட உணர்வுக்கு மதிப்பதிகம். நாம் வாழும் வாழ்விலேயே சுவர்க்கத்தின் வாழ்க்கை இந்த முறையிலேயே அமைகிறது.
வாழ்க்கை சுவர்க்கம் ஆகிறது.

மூன்றாம் முறையான இனிய முறை அதனினும் மேம்பட்டது. அது வாழ்க்கையை வேள்வி ஆக்குகிறது. தன்னையே ஆகுதி ஆக்குகிறது. அதுவே’ வழங்கி வாழ்தல்’ இது self dedicated life எனப்படுவது. இதில் பெறுவதை விடக் கொடுப்பது அதிகம்.
தான் ஈட்டும் பொருள் தனக்காகவென்று அதிகம் இல்லாமல் மிகுதியும் மற்றவர்களுக்காகவே, பொது நலனுக்காகவே இத்தகைய முறையில் செலவிடப் பெறுகிறது.
அவர்கள் புரியும் மக்கள் சேவையே ஆண்டவன் சேவையாகிறது.
நரர்களைப் பேணுவதே நாராயண வழிபாடு ஆகிறது.

வாழையும் தென்னையும் போல் பெறுவதை விடத் தருவதே அதிகம் ஆகிறது. இத்தகையோர் சமுதாயத்திற்கு வழங்கி வாழ்கிறார்கள். அத்தகைய மகாத்மாக்கள் இவ்வுலகை மேம்படுத்தத், தங்கள் வாழ்க்கையே இறைக்கு வேள்வியாக அளிக்கிறார்கள். அத்தகையவர்களின் எண்ணிக்கை மேன்மேலும் இவ்வுலகில் உயரும்போது இந்த வாழ்க்கை மட்டுமல்ல வாழும் உலகமே சுவர்க்கமாகிறது.

இத்தகைய வாழ்வின் மாற்றங்கள் வாழ்தலின் புரிதலைப் பொறுத்தே மெதுவாக நடை பெறுகிறது. இதுவே மனித வாழ்வின் மேல்நோக்கிய பரிணாம வளர்ச்சி ஆகிறது. இந்த வளர்ச்சியை அடைவதற்கு அறிவின் மேன்பாடு பிறவிகள் தோறும் வாய்க்க வேண்டும்.

முதலில் பிரபஞ்சத்தையும் பிறகு பரம்பொருளையும் அறிவதே அறிவைப் பெறுவதன் பயனாகும்.
அத்தகைய ஈட்டும் அறிவு அத்தனையும் பிறவிகள் தோறும் சேமிக்கப்பட்டு, அறிவில் தேடுதலுக்கு ஏற்பப் பிறவிகள் அடுத்து அடுத்து ஏற்படுகின்றன.
அதிலேயே பல கொடுக்கல் வாங்கல் கணக்குகளும் தீர்க்கப்படுகின்றன.
அதன் சமன்பாடு எத்தகையக் கணித நிபுணராலும் தீர்க்க இயலாதது. அதற்குத் தேவை வேறுவகையான கணக்கறிவு.
இவ்வகை அறிவு தர்ஷண்ங்கள் மேலும் அறுவகையில் வகுக்கப்படுகிறது.
நியாயம், வைசேஷிகம், மீம்மாம்சம், சாங்கியம், யோகம், வேதாந்தம் எனப் பெயர் பெறுகின்றன.
இத்தகைய தர்ஷனங்கள் தரும் அறிவு, அனுபவ வாயிலாகவும், மீண்டும் மீண்டும் அனுபவங்கள் அறிவாகவும், பெற்ற அறிவு மேலும் நல அனுபவங்களைப் பெறவும், மேலும் பாவிக்கப்படும் அனுபவங்கள் நல உணர்வுகளாகவும் மாற்றம் பெறுகிறது.

அத்தகைய நல உணர்வினை அடைய இந்த உடம்பு இல்லாமல் இயலாது என்கிறது உடம்பின் பயன் எனும் அதிகாரத்தில் உள்ள இந்தக் குறள்.
குறள் எண் 15
உடம்பினாலன்றி உணர்வு தானில்லை
உடம்பினாலுன்னியதே யாம்
இனி அடுத்தக் குறளைக் காண்போமா ?
அண்ணாமலை சுகுமாரன்
30/6/17

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jul 02, 2017 7:33 pm

 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 WvkcjrbS9uuMDhB8NimU+avvai12ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி12
--அண்ணாமலை சுகுமாரன்


இளமையில் கல் என்றால் இளமையில் “கல்” போல இருக்கவேண்டும் என்றா பொருள் கொள்வோம் “கல்” என்றால் கல்வி பெறு என்றுதானே பொருள் கொள்வோம் .

ஆனால் இளமையில் கல் போல் இருந்த நம்மை நல்ல ஒரு மனிதனாக ,தேர்ந்த ஒரு கலைப் பண்புடைய அழகிய சிற்பம் போல் நம் வாழ்க்கையை அமைப்பதற்கு ,அந்தக் கல்லிலே இருந்த வேண்டாத கல்லின் பகுதியை காலம் என்னும் சிற்பி சிறிது சிறிதுசிறிதாக செதுக்கி ,சிறந்ததொரு வாழ்வியல் சிற்பமாக நமது வாழ்வை மாற்றுகிறது .


தேவை இல்லாததை சிறுகச் சிறுக நீக்குவதாலேயே வாழ்வு சிறப்புடையதாகிறது . தேவையானதை சேர்ப்பதையும்,
தேவை இல்லாததை நீக்குவதையும் ஒரு நாளைக்கு 21600 முறை மூச்சு என்ற பெயரில் யாரும் சொல்லித்தராமலேயே செய்து வருகிறோம் . .
அங்ஙனமே நமது செயலில் உள்ள மாசுகளையும் , நம்மில் படிந்துள்ள மலங்களையும் நீக்கினால் வாழ்வில் இறையின் இருப்பை உணரலாம் என்கிறது இந்தக் குறள்.

மாசற்ற கொள்கை மனத்திலடைந்தக்கால்
ஈசனைக் காட்டுமுடம்பு

குற்றம், அழுக்கு மலம் கறை, முதலியன இல்லாத கலகமற்றத் தெளிவான, திடமான, சஞ்சலமற்ற நல்லொழுக்கம் கடைப்பிடிக்கும் திண்மையான, ஒருமுகம் படைத்த மனத்தை அடைந்து விட்டால் அதாவது மலமற்ற மாசற்ற மனதைக் கொண்டு, அதன் மூலம் அதைக் கொண்ட இந்த உடல் மூலம் கடவுளைக் காணலாம் என்கிறது இந்தக் குறள்.

ஐம்பொறிகளையும் ,அந்தக் காரணங்களான மனம் சித்தி புத்தி மற்றும் அகங்காரம் எனப்படும் ”நான்” கொண்டும் அறியப்படுவது ‘இகம்’, அதாவது இவ்வுலக வாழ்க்கை சேர்ந்த கூர்த்த ஞானம் கொண்டு ‘பரம்’ உணரப் படுகிறது.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற்ப்பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்
என்கிறது திருமந்திரம்.
மலம் என்னும் வஸ்து இல்லாமல் “இகம்” என்பது இல்லை.
நல்லதும் கேட்டதும் கலந்ததே வாழ்க்கை.
எந்தகைய இன்பத்திலும், சிறிது துன்பம் உண்டு.
வலி இல்லாமல் எந்தச் சாதனையும் இல்லை.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் யாவையும் அமிர்தமாகவும், மலமாகவும் மாறி மாறி அமைந்து வருகிறது.
பிரபஞ்சம் ஓயாமல் மாறி மாறி அமைத்து வருகிறது.
நாம் உண்ணும் உணவு, உடல் வளர்ச்சிக்குப் பயன்பட்ட பகுதி அமிர்தமாகவும், பயன்படாத பகுதி மலம் என்றும் வெளியேறுகிறது.

மலம் வெளியேறா விட்டால் உடல் நலம் கேடாகும். உண்ட உணவே நஞ்சாகும்.
பருகும் நீர் அமிர்த ரூபம் ஆனது, அதில் பயன்படாத பகுதி சிறுநீர் என வெளியேறுகிறது.
காற்று கரிமிலவாயு எனும் மலமாக அது பயன்படுத்தப் பட்ட பிறகு வெளியேறுகிறது.
உயிர் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது அமிர்தம், உபத்திரமாக அமைவது மலம்.
அமிர்தத்தை ஏற்றுக் கொண்டு மலத்தை வெளியேற்றுவதன் மூலம் உயிர் வாழ்க்கை உறுதி பெறுகிறது. இயற்கையின் அமைப்பிலே அமிர்தமும் மலமும் இணை பிரியாததுதான்.
இது போலவே நமது வாழ்வில் நடைபெறும் அனைத்து அனுபவங்களிலும், அமிர்தமும், மலமும் கலந்தே மனதில் பதிவாகிறது.
அமிர்தத்தை ஏற்று வாழ்வின் மேன்பாடு அமைகிறது. மலம் மனதில் இருந்து வெளியேற்றப் பட வேண்டும்.

வேதாந்தத்தின் கோட்பாடு, மலங்கள் மூன்று என்கிறது. அவை மாயை, கன்மம், ஆணவம். இம் மூன்று மலங்களைப் பற்றி விவரிக்கப் புகின், அது மிக விரிவாகிப் போகும். ஆயினும் மும் மலங்களும் நீக்கப் பட வேண்டியவை. இவை நீங்கினாலேயே இறையின் இருப்பு தெளிவாகும் என்கிறது இந்தக் குறள்.
‘மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே ‘ என்று கூறிக் கொண்டு அடுத்தப் பகுதியை விரைவில் பார்ப்போமா ?
அண்ணாமலை சுகுமாரன்
2/7/17

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Jul 15, 2017 7:39 pm

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -13
அண்ணாமலை சுகுமாரன்

அதிகாரம் 2 =உடம்பின் பயன்

7) ஓசை உணர்வு எல்லாம் தருவிக்கும்
நேசத்தால் ஆய உடம்பு

இந்தக்குறளில் நேசத்தால் ஆய உடம்பு ,ஓசை உணர்வு எல்லாம் தருவிக்கும் என்கிறார்
நேசத்தால் ஆய உடம்பு என்றால் என்ன ?

நேசம் என்பதுஎன்ன என்பது அனைவரும் அறிந்ததே ,
நான் உலகத்தையே நேசிக்கிறேன் ,இந்த உலகத்தில் தான் என்னை யாரும் புரிந்து கொள்வதில்லை என புலம்புகிறீர்களா ?
உங்களை யார் உலகத்தை நேசிக்கச்சொன்னது ?
முதலில் உங்களை முழுமையாக நேசியுங்கள்
உங்களை அறியுங்கள் .,
பிறகு உங்களுக்கு அருகில் உள்ளவர்களை , உங்கள் அடுத்த வீட்டுக்காரை நேசியுங்கள் . இப்படியே அன்பு விரியட்டும்
இப்போது அன்பு செய்வது எப்படி என்றுதெரிந்துவிடும் .
அன்பு என்பது எதையும் எதிர்ப்பார்த்து செய்வதில்லை .அன்பு ஒரு அற்புதமான உணர்வு !
நீங்கள் வெளியேஅன்பை கொடுக்க கொடுக்க ,உங்களுக்கும் ஜீவ சக்தி பெருகிவரும் .
உண்மையில் வெளியே கொடுப்பது என்பது உங்களுக்கு நீங்களே கொடுப்பதுதான் என்பது புரியும்
உடம்பே அன்பு மயமாகும் .
அன்பே சிவம் என்று திருமூலர் ஏன் சொன்னார் என்பது புரிந்துவிடும்
அன்பே உருவாக உடம்பு அமைந்தால் அனைத்தும் கிடைக்குமா ?அத்தகைய உடம்பு அமைத்தால் ஓசை உணர்வு எல்லாம் தருவிக்கும் என்கிறார் ஒவையார் .
ஓசை ஒலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருவையாறு திருத்தாண்டகம் தேவாரத் திருப்பதிகதில்
எனவே ஓசை என்பதும் பரம்பொருளின் ஒரு வடிவு என்பது புரிகிறது
அது என்ன ஓசை என்று ஞானம் தெரிவிக்கும்
நாத பிந்து கலாநிதி என்கிறார் அருணகிறார் .
இந்த பிரபஞ்சமே நாததால் உருவானது .

அடுத்து உணர்வு என்பது என்ன ?
உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு.
மெய்யில் படுவது மெய்ப்பாடு.
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது 6:58 PM 7/15/2017இயல்களில் ஒன்று மெய்ப்பாட்டியல்.
பசி, தாகம், பாலுணர்வு, உறங்குதல், விழித்தல்
முதலானவை உயிரினங்களுக்கு உள்ள பொதுவான அகத்தெழுச்சி உணர்வுகள்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை. நாற்றம் - ஆகிய ஐந்தும் புறத்தாக்க உணர்வுகள்.
ஆயினும் ஒவையார் கூறும் உணர்வு ,மெய்யுணர்வு எனும் தன்னை அறிதல் ஆகும் அது உடல் அன்பு மயமானால் தானே அமையும் என்கிறார் .என்றுதான் புரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறேன்
விரைவில் அடுத்த குறளை பார்க்கலாம்
அண்ணாமலை சுகுமாரன்
16/7/17

 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 2Y1ScBuSnyKFwconor9w+avai

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 16, 2017 7:54 pm

அரியது தந்த வரிவடி வேல ! வாழ்க!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jul 17, 2017 9:18 am



 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 Y5WTPImTfC5O0SbCR6Mn+9

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -14
-அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 2 =உடம்பின் பயன்

8) உயிர்க்குறுதி எல்லாம் உடம்பின் பயன்
அயிர்ப்பின்றி ஆதியை நாடு

இம் முறை ஔவைப் பிராட்டி அயிர்ப்பின்றி அதாவது அயர்வின்றி அல்லும் பகலும் அருள் வழியில் ஆதியை நாடி ஓயாமல் முயன்றால் உடம்பின் பயனான உயிர்க்குறுதி எனும் உயிரைப்பற்றிய அறிவு ஞானமாக உதிக்கும் என்கிறார் .
அதாவது உடம்பின் பயன் உயிரை உணர்வதே என்கிறார் .

ஆதி சங்கரர் கூறியபடி நேதி ,நேதி என்று ( இது இல்லை ,
இது இல்லை)என தெளிந்து இறுதியில் ,
ஒன்றான ஆதியை உடம்பில் உணர்வதேயாகும் .
உடல் வெறும் தசை ,எலும்பு ,நரம்பு குருதி மட்டும்
கொண்ட பிண்டம் அல்ல
உடல் 96 தத்துவங்களால் ஆனது .
உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் ,மூலாக்கினி ,சூரியன் சந்திரன் பிந்து நாதம் இவைகளின் கலைகளை பிராணனுடன் சேர்த்தால் ,பிராணனுடைய பிரகாசத்துடன் இணைந்து பிராணனுக்கு பிரகாசம் அதிகமாவதுடன் ,
பிராணவத்திற்கும் பலத்தைத் தரும் .
கலைகளை எழுப்புவதற்கு பார்வையும் மனமும் ஒன்று கூட்டி லட்சியமாக ஓங்கார உச்சியை பார்க்கவேண்டும் .
இது சுந்தரமாணிக்க யோகீஸ்வரர் கூறிய உரையாகும் .
இதில் இன்னும் முழுமையான தெளிவு பெற திருவடி தவம் என்ற ஒன்றை நாட வேண்டும் .
அண்ணாமலை சுகுமாரன்
17/7/17

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Jul 20, 2017 9:28 am


 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 OHZ6E8MQHSARYbL3Tcb5+8

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -15
-அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 2 -உடம்பின் பயன்

9) உடம்பினால் பெற்ற பயனாவதெல்லாம்
திடம்பட ஈசனைத்தேடு
இந்தக்குற்லில்" உடம்பினால் பெற்ற பயனாவதெல்லாம் "
என்பதற்கு பொருள் ஆனைவரும் அறிந்ததே .
வெறுமையாக ஈசனைத்தேடு எனக்கூறாமல் "திடம்பட "
என திறமையாகக்கூறியிருக்கிறார் ஔவைபிராட்டி
திடம்பட என்றால் உறுதியாக , வைராக்கியத்துடன் என பொருள் கொள்ளலாம் .
உடம்பில் உள்ள ஈசனைக் காண நமக்கு உடம்பைப்பற்றி முழுமையாகத் தெரியவேண்டும் .
மேலும் ஈசனை உடம்பில் எங்கு ,இந்தப்பகுதியில் தேடவேண்டும் என்பது புரியவேண்டும்
நமது உடல் 96 தத்துவங்களால் ஆனது .

நமது உடல் ஐந்து வகைப்படும் , அவை
பருவுடல் ,வளியுடல்,மனஉடல் ,அறிவு உடல் , இன்ப உடல் ஆகும் .இதைத்தான் அன்னமய கோசம் ,பிராணமய கோசம் ,
மனோமய கோசம் ,விஞஞானமய கோசம் , ஆனந்த மயகோசம் என சாத்திரங்கள் வகைப்படுத்தியுள்ளது .

இந்த உடம்பை பஞ்சபூத்ததுடன் ஓப்பிடுவார்கள் .
பஞ்சபூத்தால் ஆனதுதான் இந்த உடல் .
பிரபஞ்சமும் பஞ்சபூத்தால் ஆனதுதான்
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலேயும் உள்ளது .
உடலைத்தாங்கும் உறுதியான பாதம் நிலம் ஆகும்
பாதத்தில் இருந்து கொப்பூழ் வரை நீராகும் .
கொப்பூழ் முதல் மார்பு வரை தீயாகும்
மார்பில் இருந்து தோள் வரை காற்று ஆகும்
கழுத்துக்கு மேலே தான் ஆகாயம் ஆகும் .


உரமடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன் முலை மேவிய கீழ் அங்கி
கரு முலை மீ மிசை கைக் கீழில் கால் ஆம்
விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே.
இது திருமந்திரம் கூறும் செய்தி .

நீங்களே பாருங்கள் நம்மைத்தாங்கும் பாதம் கால் முதலியவை உறுதியான மண் நிலம் ஆகும்
சிறுநீர் விந்து முதலியன உற்பத்தியாகும் பகுதிகொப்பூழ் வரை நீரால் ஆனது
கொப்பூழ் முதல் மார்பு வரை உணவை ஜீரணிக்கும் பகுதி தீயால் ஆனது .
மார்பில் இருந்து தோள் வரை நமது சுவாசிக்கும் பகுதி காற்றால் ஆனது
கழுத்துக்கு மேலே தான் ஆகாயம் ஆகும் .
எனவே அங்கேதான் ஈசனைத்தேடவேண்டும் .
உடலின் அனைத்து பகுதியிலும் பஞ்சபூதம் விரவி உள்ளது .
இப்போது குறிப்பிட்டது பஞ்சபூதங்களில் எந்த பகுதியில் எந்த பூதம் அதிகம் உள்ளது .
எந்த பூதத்தின் சக்தி எந்த பகுதியில்அதிகம் உள்ளது என்பதை திருமந்திரத்தில் உள்ளபடி கூறினேன் .
ஒருவாறு ஈசனை உடம்பில் இந்தப்பகுதியில் தேடவேண்டும் என தெளிந்தோம்
உடம்பினைப்பற்றி இன்னமும் அறியவேண்டிய தகவல்கள் பல உள்ளது அவைகளை அடுத்துக்காணலாம் .

அண்ணாமலை சுகுமாரன்
20/7/17

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jul 23, 2017 9:01 am


 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 J6LiWvo3QeuaIqC9tWSE+10

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -16
-அண்ணாமலை சுகுமாரன்

அதிகாரம் 2 -உடம்பின் பயன்

10) அன்னத்தால் ஆய உடம்பின் பயனெல்லாம்
முன்னோனைக் காட்டிவிடும்

அன்னத்தால்ஆயஉடம்பேன்கிறார்ஔவை
ப்பிராட்டி
நமது உடம்பு ஐந்து அடுக்குகளாலால் ஆனது என்று அறிவோம் .
இந்த ஸ்தூல உடம்பை அன்னமய கோசம் என்கிறோம் .
ஏனெனில் உடம்பு அன்னத்தால் ஆனது , இதையே ஔவைப்பிராட்டியும் அன்னத்தால் ஆய உடம்பேன்கிறார்
அன்னம் என்பது என்ன ?
அன்னம் என்பது ஆகாரம் .
நமது உடம்பு ஐம்பூதங்களால் ஆனது என்பது அறிவோம் .
எனவே ஐம்பூத சாரத்தைக் கொண்ட உணவை கொண்டால்தான் இந்த உடம்பும் வளரும் .
எனவே நமது ஆகாரமும் ஐம்பூத சாரம் கொண்டதாக அமையவேண்டும் .
பொதுவாக நாம் உணவு என்பது நமது வாயின் வழியாக
உடம்பின் உள்ளே செல்வதையே நினைக்கிறோம் .
அப்படியே நமது விஞ்ஞானம் நமக்கு விளக்கியுள்ளது .

வாயின் வாயின்வழியாக செல்லும் அன்னம் பஞ்ச பூதத்தில் நிலம் என்னும் பூதத்தின் சாரத்தையே அதிகம் கொண்டிருக்கிறது .உடம்பின் கூறுகளில் மண்ணின் பங்கே அதிகம் .எனவே இது ஸ்தூல உடம்பாகிரது .
ஆயினும் உடம்பிற்கு மற்ற பஞ்ச பூத சாரங்களும் தேவை .
வாயால் கொள்ளும் நீரும் நீரின் சாரத்தை உடம்பிற்கு அளிப்பதில்லை .
பின் எப்படி நீரின் சாரம் உடலுக்குள் செல்கிறது ?
அது தோலின் வாழியவே உடலுக்குள் செல்கிறது .
குளித்தால் புத்துணர்ச்சி கிடைப்பதற்கு அதுவே காரணம் .
மேலும் குற்றால அருவி ,மற்ற அருவிகளில் நீர் வேகமாக உடலில் மோதுவதால் அதிக நீரின் சாரம் உள்ளே போகிறது .
நமக்கு உடல் நலமும் கிட்டுகிறது .புனித நதிகளில் நீராட சொன்னதின் காரணமும் இதுவே .
ஹீலர் பாஸ்கர் உட்பட பலரும் வாயால் நீர் உட்கொள்வதைப்பற்றியே பல விளக்கங்கள் வழங்கிவருகின்றனர் .
நல்ல விஷயங்கள் அவர்கள் மூலம் பரவுவது உவப்பானதே .
ஆயினும் நீர் சத்து வாயின் வழியாக மட்டும் செல்வதில்லை .
நமது உடலில் ஐம் பொறிகள் என மெய் வாய் கண் மூக்கு செவி என பொறிகள் அமைந்துள்ளது .
இதில் வாய நிலத்தின் சாரத்தை உட்கொள்கிறது .
மெய் எனும் உடம்பின் தோல் நீரின் சாரத்தை உறிஞ்சிகிறது .
கண் எனும் பொறி தீயின் சாரத்தை ஏற்றுக்கொள்கிறது .
எனவேதான் "கண்ணில் தீ பொறி பறக்கிறது "என சிலரின் பார்வையை வர்ணிக்கிறோம் .
கண்ணாலேயே எரித்துவிடுவார் போன்று இருக்கிறதே என்று கூறுகிறோம் .
கண் தீயின் அம்சம் , பிரபஞ்சத்தில் இருந்து தீயின் சாரத்தை கண் பெறுகிறது ,
மூக்கு சுவாசத்தின் மூலம் காற்றின் சாரமான பிராணனை பெறுகிறது .
செவி பிரபஞ்சத்தில் இருந்து வானத்தின் சாரத்தைப்பெறுகிறது .
இவ்வாறு நமது உடல் ஐம்பொறிகள் மூலம் பஞ்சபூத சாரத்தை அன்னம் எனும் ஆகாரமாகப்ப்பெறுகிறது .
இந்த உண்மைகளை நான் குருவின் அருளால் கூறுகிறேன் .
பெருமை எனக்குரியதல்ல .

இவ்வாறு ஆகாரத்தின் பயனால் பெற்ற உடம்பின் பயன் எல்லாம் முன்னோனை காட்டிவிடும் என்கிறார்

அதாவது தானே உடம்பு காட்டிவிடுமாம் .
ஈசனை உடம்பு எப்படி தானே காட்டிவிடும் ?

உடம்பில் ஆகாரமாக சென்ற பஞ்ச பூதங்கள் உடம்பின் சரியான இயக்கத்தின் காரணத்தால் ,
நிலம் நீரில் ஒடுங்கி ,
நீர் நெருப்பில் ஒடுங்கி ,
நெருப்பு காற்றில் ஒடுங்கி ,
காற்று ஆகாயத்தில் ஒடுங்கி ,
பிறப்பறுக்கும் உக்தியினால் முன்னோன் எனும் மூலத்தை ,
உடல் காட்டிவிடும் என்கிறார் .

இன்னமும் எழுதினால் விரிந்துவிடும் .
இத்தோடு உடம்பின் பயன் அதிகாரம் முடிகிறது .
அடுத்து சூக்சும உடல் பற்றிக் கூறப்போகிறார் .
அண்ணாமலை சுகுமாரன்
23/7/17


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jul 24, 2017 1:38 pm


 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 2 NXSKUDwoRPaapNixZzhh+11

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -17
--அண்ணாமலை சுகுமாரன்

அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை

21 )கற்கலாம் கேட்கலாம் கண்ணாரக்காணலாம்
உற்று உடம்பால் ஆய உணர்வு

சென்ற 10 குறளில் உடம்பின் பயன் என்று நமது ஸ்தூல உடல் எனும் பௌதீக உடம்பைப்பற்றிப்பார்த்தோம்
அடுத்த இந்த உள்ளுடம்பின் நிலை எனும் அதிகாரத்தில் 10 குறளில் , உள்ளுடம்பு எனப்படும் சூக்ஷும உடம்பு.பற்றி ஔவைப்பிராட்டி கூறுவதைக்காணப்போகிறோம்

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு தேகங்கள் உண்டு. ஒன்று ஸ்தூல உடம்பு எனும் பௌதீக உடம்பு,
அடுத்தது உள்ளுடம்புஎனும் சூக்ஷும உடம்பு.
ஸ்தூல உடம்பு எனும் பௌதீக உடலை தொட்டு உணர முடியும், அதற்கு எடை, நிறம், உயரம், என்று மற்ற பொருள்களுக்கு உள்ளது போல அனைத்து இயற்பியல் மற்றும் வேதியல் குணங்களும் உண்டு. இந்த உடலை நாம் பார்க்க முடியும், தொட முடியும், நுகர முடியும்,உணரமுடியும்
ஸ்தூல உடம்பில் உணர்வுகளால் தூண்டப்பட்டு நிற்கும் நிலையில், அவை சூக்ஷும உடம்பில் பதிவு செய்யப்படும்.
நீங்கள் தூங்கும் போதும் , கனவு காணும் போதும் ,கீழ் விழுதல் , ஓடுதல், பயந்து போதல் போன்ற உணர்வுகள் பலவற்றை அனுபவிப்பது இதுதான்.
இந்த சூக்க்ஷும சரீரம் கண்ணுக்குத் தெரியாது, நுண்மையானது, நம் உடலில் எங்கும் நிறைந்து இருப்பது.
இதுதான் உங்கள் மனதிற்கும் உடலுக்கும் இடையே உள்ளது.. மனசு சரி இல்லை என்றால் இது பாதிக்கப்பட்டு உடலும் கெடுகிறது அதற்க்கு காரணம் இதுதான்
இனி குறளைக் காணலாம்

உற்று = ஊன்.றிப் பார்ப்பதனால் தோன்றும்
உடம்பால் -= உள்ளுடம்புஎனும் சூக்ஷும உடம்பு.
ஆய = உண்டாகிய
உணர்வு = அறிவு
ஊன்.றிப் பார்ப்பதனால் தோன்றும் உள்ளுடம்புஎனும் சூக்ஷும உடம்பு உண்டாகிய அறிவு கொண்டு ,
கற்கலாம் = யாவற்றையும் அறியலாம் ,
கேட்கலாம் = தொலைவில் நடப்பதைக் கேட்கலாம்
கண்ணார = கண்ணாலேயே
காணலாம் = அறிவையும் உள்ளுடம்பையும் காணலாம் .

ஊன்றிப் பார்ப்பதனால் தோன்றும் உள்ளுடம்புஎனும் சூக்ஷும உடம்பு உண்டாகிய அறிவு கொண்டு ,
யாவற்றையும் அறியலாம் ,தொலைவில் நடப்பதைக் கேட்கலாம் கண்ணாலேயே அறிவையும் உள்ளுடம்பையும் காணலாம் .
சாதாரணமாக பார்த்தால் தெரிவது ஸ்தூல உடம்பு ,
ஊன்றிப்பார்த்தால் தெரிவது உள்ளுடம்பு என்று கூறுகிறார் என்பது தெரிகிறது
எப்படி ஊன்றிப்பார்ப்பது என பின்னே ஔவைக் கூறலாம்

ஊன்.றிப் பார்ப்பதனால் தோன்றும் உள்ளுடம்புஎனும் சூக்ஷும உடம்பு உண்டாகிய அறிவு கொண்டு , கண்ணில்லாமல் காணலாம் , காதில்லாமல் கேட்கலாம் ,
புலன்களை பயன்படுத்துவாழும் ஸ்தூல உடம்பின் உணரவைக்கடந்து , உள்ளுடம்பின் உணர்வைபெறுவதே ,
உற்று உண்டாகிய அறிவின் பயன் என்கிறார்
இந்தக் குறளில்
அண்ணாமலை சுகுமாரன்
24/7/17

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 25, 2017 4:21 am

நல்லதொரு விளக்கம்.
நன்றி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக