புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
First topic message reminder :
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1
முகப்புரை
குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் .
ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை.
திருவள்ளுவரைப்போலவே ஔவைப் பிராட்டியும் இம்மானிடம் உய்வுபெற அரிய கருத்துக்களை இரு அடிகளில் ,குறள் வெண்பாக்களாக மொத்தம் 310 எண்ணிக்கையில் வீட்டு நெறிப்பால் ,திருவருட்பால் ,தன்பால் என்று மூன்று அதிகாராங்களாகப் பிரித்து இயற்றி இருக்கிறார்.
திருக்குறள் எடுத்தியம்பும் அறம் ,பொருள் ,இன்பம் போன்றே இக்குறள்களும் மானுட தேக அமைப்பு ,அதனுள் துலங்கும் ஆதி அறிவு , வாழ்வியல் குறிக்கோள் இவைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.
அத்தனை உலக மதங்களும் வாழ்வின் முடிவில் சொர்க்கம் சென்று சேர்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகையில் ,நமது சனாதன நெறிதானே வீடுபேறு அல்லது முக்தி என்பதை வாழ்வின் இறுதிப பயனாகக் கூறுகிறது .
இதனை அடிப்படையாகக் கொண்டே ஔவையின் குறளும் ஒரு உத்தமமான யோகசாஸ்திரத்தின்,அத்துனை பரிமாணங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது .மனதை ஆராய்ந்து அறியும் கருவியாகக் கொண்டு ,மனதைப் பற்றியும் அதன் தன்மைகளைபற்றியும் ,அதன் மேன்மைகளை அறிந்துகொண்டு ,வாழ்வின் குறிக்கோளை அடைவது எப்படி என்பதை இயம்புகிறது .இன்னும் ஜனன மரணம் என்றால் எனன ? பஞ்சபூத சேர்க்கையால் இந்த உடம்பு எவ்வாறு உருவாகி ,செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ?அதன் தலையாய குறிக்கோள் என்னவாக இருக்கவேண்டும் அதை அடையும் வழி முறைகள் எனன ? வாசியோக நிலை , சரவோடுக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் விளக்குகிறது.
யோகத்தில் திளைத்த பல அனுபவபூதிகள் அருளாளர்கள் காட்டிய மார்கங்களைவிட ,ஔவைக்குறள் மிக இலகுவாக யோகத்தின் தன்மையைப் பற்றி விளக்குகிறது .
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பில் ஏறத்தாழ 457 புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது .கி .மூ இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து கி .பி மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சுமார் நானூறு ஆண்டுகளில் சுமார் ஐநூறு புலவர்கள் பாடிய அருமையான தமிழ் பாடல்கள் தொகுக்கப்பட்டிருப்பதும் ,அத்துணை தகுதி வாய்ந்த புலவர்கள் தொடர்ச்சியாக அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்திருப்பதும் ,தமிழின் சிறப்பினையும் ,அந்த காலகட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழர் தம் அறிவின் திறனையும் ,தகுதியையும் எடுத்துக்காட்டுகிறது.
இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வெறும் தமிழ்படித்த புலவர்கள் மட்டுமல்லர் ,அவர்களில் ,சமுதாயத்தின் எல்லா பிரிவினைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் இருந்திருக்கின்றனர் . பாடல்கள் புனைந்திருக்கின்றனர் .அந்தணர் ,வணிகர் ,கணக்கர் ,வேடர் ,குயவர் ,மருத்துவர் எல்லாபிரிவினரும் புலவர்களில் இருந்திருக்கின்றனர் .அத்துனைபேரும் தமிழில் புலமைபெற்று பாடல் புனையும் வல்லமை பெற்றிருக்கின்றனர்.
சங்கப்புலவர்களில் முப்பதுக்கும் மேல்பட்டவர்கள் பெண்கள் .அதாவது ஏறத்தாழ 7 % சதவிகித புலவர்கள் பெண்களாக இருந்திருக்கின்றனர் .அத்துணை உயர்கல்வி படைத்திருந்தனர் .
ஆனால் சங்ககாலம் தாண்டிப் பல்லவர் காலம் ,பாண்டியர் ,சோழர் ,நாயக்கர் ,முகமதியர் ,மராட்டியர் ,மேலை நாட்டவர் ஆட்சிக் காலங்களில் அத்துணை பெண் புலவர்கள் இடம்பெறவில்லை. ஏன் விடுதலைக்குப் பின் கூட அதிக அளவில் பெண் புலவர்கள் இடம் பெறவில்லை என்பது தெரியவில்லை.
ஆனால் சங்ககாலத்தில் ஔவையார் பாரி ,அதியமான் போன்றவர்க்கு அரசவை தூதர் போலும் அறிவுரை கூறிடும் அமைச்சர் போலும் இருந்திருக்கின்றனர் .அச்சமின்றி காடு மேடு சுற்றி அலைந்திருக்கின்றனர்.
தமிழில் பாடி அறநெறிக் காவலர்களாக இருந்திருக்கின்றனர் .ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஔவையார் ,காரைக்கால் அம்மையார,சித்தர்களில் திலோத்தமை மற்றும் பல பெண் ஞானிகள் தமிழ் நாட்டில் வாழ்திருப்பது ஒரு பெருமையளிக்கும் செய்தியே ..
அந்தக் காலகட்டத்தில் உலகின் எந்தப்பகுதியிலும் பெண்கள் இத்துனை உயர்வு பெற்றிருந்தார்களா என்பது சந்தேகமே .ஆனால் இடையில் இங்கு என்னதான் நடந்தது என்பதும் ஆய்வுக்குரியதே .
அந்த சங்ககால ஔவையார் தான் இந்த ஔவையின் ஞானக் குறளை எழுதினாரா என்பது ஆய்வுக்குரியதே . இன்னும் சொல்லப் போனால் விநாயகர் அகவல் எழுதிய ஔவையும் குறள் எழுதிய ஔவையும் ஒருவரேவா ? என்பதுக் கூட உறுதியில்லை.
ஆனால் சங்கக்காலத்தில் திருக்குறள் எழுதப்பட்டது .ஔவையின் குறளும் குறள் வெண்பாவிலே இருக்கிறது .பிற்காலத்தில் ஏனோ குறள் வெண்பாவில் எந்த இலக்கியமும் இயற்றப்படவில்லை.
இவற்றை எல்லாம் புலவர் பெருமக்கள் பார்த்துக்கொள்ளட்டும் .அவர்கள் விடுவிக்கவேண்டிய வரலாற்று புதிர்கள் நிரம்ப இருக்கிறது .நாம் ஔவையின் குறளில் கூறப்பட்டிருக்கும் ஞானத்தை மட்டும் பார்க்க மேலே செல்வோம்.நாம் இவ்வுலகில் வந்த வேலையை விரைவில் பார்க்கவேண்டும் அல்லவா ?
மனிதராய்ப் பிறந்தவர் அனைவரும் மனிதர் ஆகிவிடமுடியுமா ?
மனதை உடையவன் மனிதன் ,ஆனால் அதை கருவியாகப் பயன் படுத்தவேண்டும் .அதன்வழி போகக் கூடாது .உறங்குவது,உண்பது, மக்களைப் பெறுவது, உலாவுவது முதலியவை யாவையும் ,விலங்குகளும் தான் செய்கின்றன .இருவருக்கும் இவை பொதுவானவையே. பின் நாம் எப்படி விலங்கைக்காட்டிலும் மேல்?நினைக்க வேண்டும்.
நான் யார் ,எனது மனம் யார் , எதற்குப் பிறந்தேன் , எங்கிருந்துவந்தேன் , இந்த உடம்பு தானே வந்ததா ,ஒருவன் தந்ததா , அந்த ஒருவன் யார் , அந்த ஒருவன் தன்மை எனன , இவைகளை நினைக்க வேண்டும். இவைகளுக்கு விடையறிய அறவழியில் நிற்கவேண்டும் .நமது பிறப்பே, பிறப்பறுக்கும் வழி காணத்தான் .
விலங்குக்கும் ,மனிதனுக்கும் இருக்கும் எல்லைக் கோடு,இந்த இறைபற்றிய எண்ணம் தான் .விலங்கு இரை மட்டும் தேடுகிறது .மனிதன் இறையைத் தேடுகிறான் .
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு —திருக்குறள் -358
அஞஞானம தான் பிறப்பைத் தருகிறது ,எனவே பிறப்பையே
அஞஞானம என்கிறார் திருவள்ளுவர் .
மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு
கல்லுண்டு மரமுண்டு
மனிதரிலும் நீர்வாழும் சாதியுண்டு
அநேககுல மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு வானவரும்
மனிதராய் பிறப்பதுண்டு
மனிதரிலே பிறப்பறுக்க வந்ததுவே
அருமைஎன வகுத்தார் முன்னோர்
இது சிவானந்த போதம் அளிக்கும் அறிவு
இனி ஔவை கூறும் உடம்பு எனும் சடப்பொருள் பற்றிய அறிவையும் ,மனம் எனும் சூக்ஷும பொருள் பற்றியும் ,உயிர் எனும் அதிஷுக்ஷும பொருள் பற்றியும் விளக்கும் அறிவியலோடு இணைந்த ஆன்மீகப் பார்வையை அடுத்தப் பகுதியில் இருந்து பார்ப்போமா ? சித்தர்களின் சித்தாந்த தொன்மை விளக்கத்தைப் படிப்படியாகக் காணலாம்.
-தொடரும்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1
முகப்புரை
குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் .
ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை.
திருவள்ளுவரைப்போலவே ஔவைப் பிராட்டியும் இம்மானிடம் உய்வுபெற அரிய கருத்துக்களை இரு அடிகளில் ,குறள் வெண்பாக்களாக மொத்தம் 310 எண்ணிக்கையில் வீட்டு நெறிப்பால் ,திருவருட்பால் ,தன்பால் என்று மூன்று அதிகாராங்களாகப் பிரித்து இயற்றி இருக்கிறார்.
திருக்குறள் எடுத்தியம்பும் அறம் ,பொருள் ,இன்பம் போன்றே இக்குறள்களும் மானுட தேக அமைப்பு ,அதனுள் துலங்கும் ஆதி அறிவு , வாழ்வியல் குறிக்கோள் இவைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.
அத்தனை உலக மதங்களும் வாழ்வின் முடிவில் சொர்க்கம் சென்று சேர்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகையில் ,நமது சனாதன நெறிதானே வீடுபேறு அல்லது முக்தி என்பதை வாழ்வின் இறுதிப பயனாகக் கூறுகிறது .
இதனை அடிப்படையாகக் கொண்டே ஔவையின் குறளும் ஒரு உத்தமமான யோகசாஸ்திரத்தின்,அத்துனை பரிமாணங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது .மனதை ஆராய்ந்து அறியும் கருவியாகக் கொண்டு ,மனதைப் பற்றியும் அதன் தன்மைகளைபற்றியும் ,அதன் மேன்மைகளை அறிந்துகொண்டு ,வாழ்வின் குறிக்கோளை அடைவது எப்படி என்பதை இயம்புகிறது .இன்னும் ஜனன மரணம் என்றால் எனன ? பஞ்சபூத சேர்க்கையால் இந்த உடம்பு எவ்வாறு உருவாகி ,செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ?அதன் தலையாய குறிக்கோள் என்னவாக இருக்கவேண்டும் அதை அடையும் வழி முறைகள் எனன ? வாசியோக நிலை , சரவோடுக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் விளக்குகிறது.
யோகத்தில் திளைத்த பல அனுபவபூதிகள் அருளாளர்கள் காட்டிய மார்கங்களைவிட ,ஔவைக்குறள் மிக இலகுவாக யோகத்தின் தன்மையைப் பற்றி விளக்குகிறது .
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பில் ஏறத்தாழ 457 புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது .கி .மூ இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து கி .பி மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சுமார் நானூறு ஆண்டுகளில் சுமார் ஐநூறு புலவர்கள் பாடிய அருமையான தமிழ் பாடல்கள் தொகுக்கப்பட்டிருப்பதும் ,அத்துணை தகுதி வாய்ந்த புலவர்கள் தொடர்ச்சியாக அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்திருப்பதும் ,தமிழின் சிறப்பினையும் ,அந்த காலகட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழர் தம் அறிவின் திறனையும் ,தகுதியையும் எடுத்துக்காட்டுகிறது.
இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வெறும் தமிழ்படித்த புலவர்கள் மட்டுமல்லர் ,அவர்களில் ,சமுதாயத்தின் எல்லா பிரிவினைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் இருந்திருக்கின்றனர் . பாடல்கள் புனைந்திருக்கின்றனர் .அந்தணர் ,வணிகர் ,கணக்கர் ,வேடர் ,குயவர் ,மருத்துவர் எல்லாபிரிவினரும் புலவர்களில் இருந்திருக்கின்றனர் .அத்துனைபேரும் தமிழில் புலமைபெற்று பாடல் புனையும் வல்லமை பெற்றிருக்கின்றனர்.
சங்கப்புலவர்களில் முப்பதுக்கும் மேல்பட்டவர்கள் பெண்கள் .அதாவது ஏறத்தாழ 7 % சதவிகித புலவர்கள் பெண்களாக இருந்திருக்கின்றனர் .அத்துணை உயர்கல்வி படைத்திருந்தனர் .
ஆனால் சங்ககாலம் தாண்டிப் பல்லவர் காலம் ,பாண்டியர் ,சோழர் ,நாயக்கர் ,முகமதியர் ,மராட்டியர் ,மேலை நாட்டவர் ஆட்சிக் காலங்களில் அத்துணை பெண் புலவர்கள் இடம்பெறவில்லை. ஏன் விடுதலைக்குப் பின் கூட அதிக அளவில் பெண் புலவர்கள் இடம் பெறவில்லை என்பது தெரியவில்லை.
ஆனால் சங்ககாலத்தில் ஔவையார் பாரி ,அதியமான் போன்றவர்க்கு அரசவை தூதர் போலும் அறிவுரை கூறிடும் அமைச்சர் போலும் இருந்திருக்கின்றனர் .அச்சமின்றி காடு மேடு சுற்றி அலைந்திருக்கின்றனர்.
தமிழில் பாடி அறநெறிக் காவலர்களாக இருந்திருக்கின்றனர் .ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஔவையார் ,காரைக்கால் அம்மையார,சித்தர்களில் திலோத்தமை மற்றும் பல பெண் ஞானிகள் தமிழ் நாட்டில் வாழ்திருப்பது ஒரு பெருமையளிக்கும் செய்தியே ..
அந்தக் காலகட்டத்தில் உலகின் எந்தப்பகுதியிலும் பெண்கள் இத்துனை உயர்வு பெற்றிருந்தார்களா என்பது சந்தேகமே .ஆனால் இடையில் இங்கு என்னதான் நடந்தது என்பதும் ஆய்வுக்குரியதே .
அந்த சங்ககால ஔவையார் தான் இந்த ஔவையின் ஞானக் குறளை எழுதினாரா என்பது ஆய்வுக்குரியதே . இன்னும் சொல்லப் போனால் விநாயகர் அகவல் எழுதிய ஔவையும் குறள் எழுதிய ஔவையும் ஒருவரேவா ? என்பதுக் கூட உறுதியில்லை.
ஆனால் சங்கக்காலத்தில் திருக்குறள் எழுதப்பட்டது .ஔவையின் குறளும் குறள் வெண்பாவிலே இருக்கிறது .பிற்காலத்தில் ஏனோ குறள் வெண்பாவில் எந்த இலக்கியமும் இயற்றப்படவில்லை.
இவற்றை எல்லாம் புலவர் பெருமக்கள் பார்த்துக்கொள்ளட்டும் .அவர்கள் விடுவிக்கவேண்டிய வரலாற்று புதிர்கள் நிரம்ப இருக்கிறது .நாம் ஔவையின் குறளில் கூறப்பட்டிருக்கும் ஞானத்தை மட்டும் பார்க்க மேலே செல்வோம்.நாம் இவ்வுலகில் வந்த வேலையை விரைவில் பார்க்கவேண்டும் அல்லவா ?
மனிதராய்ப் பிறந்தவர் அனைவரும் மனிதர் ஆகிவிடமுடியுமா ?
மனதை உடையவன் மனிதன் ,ஆனால் அதை கருவியாகப் பயன் படுத்தவேண்டும் .அதன்வழி போகக் கூடாது .உறங்குவது,உண்பது, மக்களைப் பெறுவது, உலாவுவது முதலியவை யாவையும் ,விலங்குகளும் தான் செய்கின்றன .இருவருக்கும் இவை பொதுவானவையே. பின் நாம் எப்படி விலங்கைக்காட்டிலும் மேல்?நினைக்க வேண்டும்.
நான் யார் ,எனது மனம் யார் , எதற்குப் பிறந்தேன் , எங்கிருந்துவந்தேன் , இந்த உடம்பு தானே வந்ததா ,ஒருவன் தந்ததா , அந்த ஒருவன் யார் , அந்த ஒருவன் தன்மை எனன , இவைகளை நினைக்க வேண்டும். இவைகளுக்கு விடையறிய அறவழியில் நிற்கவேண்டும் .நமது பிறப்பே, பிறப்பறுக்கும் வழி காணத்தான் .
விலங்குக்கும் ,மனிதனுக்கும் இருக்கும் எல்லைக் கோடு,இந்த இறைபற்றிய எண்ணம் தான் .விலங்கு இரை மட்டும் தேடுகிறது .மனிதன் இறையைத் தேடுகிறான் .
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு —திருக்குறள் -358
அஞஞானம தான் பிறப்பைத் தருகிறது ,எனவே பிறப்பையே
அஞஞானம என்கிறார் திருவள்ளுவர் .
மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு
கல்லுண்டு மரமுண்டு
மனிதரிலும் நீர்வாழும் சாதியுண்டு
அநேககுல மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு வானவரும்
மனிதராய் பிறப்பதுண்டு
மனிதரிலே பிறப்பறுக்க வந்ததுவே
அருமைஎன வகுத்தார் முன்னோர்
இது சிவானந்த போதம் அளிக்கும் அறிவு
இனி ஔவை கூறும் உடம்பு எனும் சடப்பொருள் பற்றிய அறிவையும் ,மனம் எனும் சூக்ஷும பொருள் பற்றியும் ,உயிர் எனும் அதிஷுக்ஷும பொருள் பற்றியும் விளக்கும் அறிவியலோடு இணைந்த ஆன்மீகப் பார்வையை அடுத்தப் பகுதியில் இருந்து பார்ப்போமா ? சித்தர்களின் சித்தாந்த தொன்மை விளக்கத்தைப் படிப்படியாகக் காணலாம்.
-தொடரும்
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
நன்றி
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -19
--அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை
ASTRAL TRAVEL
23 ) சென்று உண்டு வந்து திரிதரும் உள்ளுடம்பு
இது என்றும் கெடாதது .
உள்ளுடம்பு = சூக்ஷும தேகம்
சென்று = சங்கற்ப்பித்த இடங்களுக்கு சென்று ,
உண்டு = அங்கிருக்கும் விஷயங்களை உணர்ந்து ,
வந்து = உடலுக்கு திரும்பி வந்து ,
திரிதரும் = இவ்வாறு திரிந்து கொண்டிருக்கும் ,
இது = இந்த உள்ளுடம்பு
என்றும் = எந்த காலத்திலும்
கெடாதது = அழிவில்லாதது .
எந்த காலத்திலும் அழிவில்லாத உள்ளுடம்பு , தான் சங்கற்ப்பித்த இடங்களுக்கு
சென்று திரிந்து அங்கிருக்கும் விஷயங்களை உணர்ந்து சுற்றித் திரியும் இயல்பு கொண்டது என்கிறார் .
இதை ASTRAL TRAVEL என்பார்கள் . ஆனால் இது அனைவருக்கும் இயல்பானது அல்ல .
ஒரு வேளை ஒவ்வை இந்த குறள் எழுதிய காலத்தில் இது அனைவருக்கும் சாத்தியமாக இருந்திருக்கலாம் .ஆயினும் தற்போது போதிய பயிற்சி இல்லாமல் இது சாத்தியமில்லை .என்பதே எனது எண்ணம் .
ஞானிகள் உள்ளுடம்பை பலப்படுத்தி அதை வசப்படுத்திக்கொண்ட பிறகே ,தூல தேகத்தை விடுத்து ,
உள்ளுடம்பால் அற்புதங்களை செய்து வருகிறார்கள் .அதை இந்த குறள் ஆமோதிக்கிறது .
இந்த உள்ளுடம்பு எங்கும் செல்லும் ஆற்றல் கொண்டது .
அது நம்மை சுற்றி உள்ள 14 லோகங்களுக்கும் செல்வதாக கூறுகிறார் .
தூல தேகத்திற்கு அழிவு உண்டு , உள்ளுடம்பு ஆன்மாவுடன்சேர்ந்து சென்று மீண்டும் பிறக்கும் ..
முக்தி எனும் விடுதலை பெறும் வரை இது தொடரும் .
நம் உடலை ஐந்து அடுக்கு கொண்டது என முந்தய பகுதியில் கூறியிருந்தேன் .
அது அன்னமய கோசம் , மனோ மய கோசம் , பிராணமய கோசம் ,விஞ்ஞான மய கோசம் , ஆனந்த மய கோசம்
என அறிந்தோம் .
இதில் அன்னமய கோசம் என்பது இந்த தூல உடம்பு
இதைப்பற்றி விபரமாக தனது இரண்டாம் அதிகாரத்தில்
ஔவைப்பிராட்டி கூறியிருந்தார் .
மனோ மய கோசம் , பிராணமய கோசம் ,இவை இரண்டையும் கொண்டதையே உள்ளுடம்பு எனப்படுகிறது .
உள்ளுடம்பு பற்றி தனது மூன்றாம் அதிகாரத்தில்இப்போது கூறுகிறார் .
விஞ்ஞான மய கோசம் , ஆனந்த மய கோசம் என்ற இரண்டும் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டது .
தூல தேகத்தில் உள்ள ஐம் பூத ஆற்றல் பெறும் ஐந்து பொறிகளும் , மெய் வாய் ,கண் மூக்கு செவி இவை அனைத்தும் பொறிகள் மட்டுமே , அதாவது இயந்திரம் போன்றது , கண் இருந்தாலும் , பார்த்தல் என்பது உள்ளுடம்பின் அங்கமான மனம் , பிராணன் தொடர்பால்
மட்டுமே அமைகிறது .காது இருந்தாலும் கேட்டல் என்பது உள்ளுடம்பின் தொடர்பால் அமைகிறது .இவ்வாறே அனைத்து தூல உடம்பின் இயக்கமும் அமைகிறது .
உள்ளுடம்பைப் பற்றி 10 குறளில் கூறிவிட்டு பின் , வாயுதாரணை போன்ற விஷயங்களை அடுத்த அதிகாரங்களில் விவரிக்கிறார் .
அவைகளை தொடர்ந்து காணலாம் , எத்தகைய ஐயம் எழுந்தாலும் , தயங்காமல் தொடர்பு கொண்டு கேட்கலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
31/7/17
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அருமை நன்றி
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -20
--அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை
24 ) வருபயனுண்டு மகிழ்ந்துடனாய் நிற்கும்
ஒருபயனைக்காட்டும் உடம்பு
உடம்பு என்றாலே இந்த அதிகாரத்தைப் பொறுத்தவரை உள்ளுடம்புதான் அது மனம் பிராணன் இவற்றால் ஆனது .
வருபயன் = விருப்பு வெறுப்பு இல்லாது வருகின்ற
பலனை
உண்டு = நுகர்ந்து
மகிழ்த்துடன் = ஆனந்தப்படுவதோடு ,
ஆய் நிற்கும் = தனது இயக்க சக்தியான பிராணவத்துடன்
நிலைத்து நிற்கும் ,
உடம்பு = உள்ளுடம்பு
ஒரு பயனை =ஒப்புயர்வற்ற பலனை ,
காட்டும் = வெளிப்படுத்தும் .
வருபயன் என்றால் வருகின்ற பயன் என்பது மட்டுமல்ல ,
வருகின்ற பயனை "வருபயன் " என்ற மட்டில் எத்துடனும் ஒப்பு நோக்காமல் நிகழ்காலத்தில் கொண்டு விருப்பு வெறுப்பு இன்றி நுகரும் தன்மை .
நாம் எந்தப்பொருளை கண் கொண்டு பார்த்தாலும் ,கண் அங்கே போவதற்கு முன் நமது எண்ணம் அங்கே முதலில் சென்று விடும் .
கண் எண்ணத்தின் தன்மைக்கு ஏற்ப காணும் பொருளை உணரும் .உள்ளதை உள்ளபடிக்காணும் சக்தி
நமது கண்ணிற்கு அநேகமாக கிடையாது .
பார்ப்பது ஒன்று உணர்வது ஒன்றாகவே இருக்கும் .
இதனால்தான் அசைகின்ற கயறு பாம்பாகவும் ,
-பாம்பு கயிறாகவும் உணரப்படுகிறது .
வருபயனை வேண்டுதல் வேண்டாமல் உணர்வது இறைத்
தன்மை என்கிறார் திருவள்ளுவர் .
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல- குறள்
இத்தகைய சமநிலை இல்லாத மனிதர்கள் தான் நினைத்தது சரி என்று நினைப்பதும் விவாதிப்பதும் .தன கருத்திற்கு மாறானவை அனைத்தும் தவறு என்று சாதிப்பவர்களாகவும் இருப்பர் பிறர் கொண்டிருக்கும் கருத்திலும் ஏதாவது நியாயம் இருக்கும் என்று அவர்களால் எண்ணவே இயலாது . பிறரை எதிர்ப்பதிலும் பிறர் கூறுவதை மறுப்பதிலும் பிறர் எதிர்ப்பிலிருந்து தன்னை காப்பதிலும் இவர்களின் முழு கவனமும் ஈடு பட்டிருக்கும்.
இவர்கள் மனஅமைதி பற்றி ஒன்றும் அறிந்திருக்க மாட்டார்கள் மனஅமைதி எத்தனை இனிமையானது என அறியாதவர்கள் .துடிப்பாக இருப்பதாக எண்ணி "சும்மா" இருக்கும் சுகம் அறியாமல் இருப்பார்கள் .
இவ்வாறு வரு பயனை( நடப்பவைகளை )மட்டும் மனம் சம்பந்தப்படாமல் வேண்டுதல் வேண்டாது உள்ளது உள்ளபடி உணர்ந்து சமநிலையுடன் மன அமைதியாக இருக்கும் போது , உள்ளுடம்பு ஆனந்தத்துடன் இருக்கும் அப்போது அது தனது மூலமான ஆன்மாவுடன் சம்பந்தப்பட்டு ஒப்பற்ற நிலை பெறும் என்கிறார் ஒவ்வைப் பிராட்டி இந்தக்குறளில் .
வருபயன் அறியா துழன்றிடும் ஏழை
மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
ஒருவரும் நினது திருவடிப் புகழை
உன்னும்நாள் எந்தநாள் அறியேன்
அருவுரு ஆகும் சிவபிரான் அளித்த
அரும்பெறல் செல்வமே அமுதே
குருவுரு ஆகி அருள்தரும் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே-- என்கிறார் வள்ளல் பெருமான் இராமலிங்க சாமிகள் .
இனி அடுத்தக்குறளை அடுத்தப்பகுதியில் காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
3/8/17
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -21
--அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை
25 ) அல்லல் பிறப்பை அகற்றிவிக்கும் ஆய்ந்தாய
தொல்லை உடம்பின் தொடர்பு
உள்ளுடம்பு ,தொல்லை தரும் பிறவியை ஒழித்துவிடும் என்கிறார் இந்தக்குறளில் அவ்வையார் .
ஆய்ந்தாய = ஆராய்ந்து பார்த்தால்
அல்லல் பிறப்பை அகற்றிவிக்கும் = தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும் தொடரும் ,பிறவிகளை நீக்கும்
தொல்லை உடம்பின் = தூலஉடம்பினுடன்
தொடர்பு = ஏற்படும் உள்ளுடம்பின் தொடர்பு .
தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும் தொடரும் ,பிறவிகளை நீக்கும் ஆற்றல் தூல உடம்பிற்கு
உள்ளுடம்பின் தொடர்பு கொண்டு ஏற்படுகிறது .
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று
வீடுற்றேன். என்கிறார் அருளாளர் மாணிக்கவாசகர் .
பிறவி பிணியை நீக்கும் வழி அறியாமல் எத்தனை எத்தனை பிறவிகள் பெற்று அல்லலுறுகிறோம் .
பிறவிப் பிணி அறுபட வேண்டுமானால் என்ன என்ன குணங்கள் இருக்க வேண்டும் என்று ஒருபாடலில் கம்பன் கூறுவதைபாருங்கள்
தெளிந்து தீவினையைச் செற்றர் பிறவியின் தீர்வரென்னவிளிந்திலா உணர்வினோரும் வேதமும் விளம்பவேயும்நெளிந்துறை புழுவை நீக்கி நறவுண்டு நிறை கின்றேனால்அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்---
அதாவது மனம் தெளிந்து தீய செய்கைகளை விட்டவர்கள் பிறவி நோயை ஒழித்தவராவர்
இதை ஞானிகளும் வேதங்களும் விரிவாகக் கூறுவர்
நானோ புழுக்கள் நெளியும் கள்ளில் அந்த புழுக்களை வடிகட்டிவிட்டுச் சாப்பிட்டு இப்படி மகிழ்வடைகிறேன் . இது எதற்குச் சமம் என்றால் எரியும் நெருப்பை நெய்யை ஊற்றி அணப்பதற்குச் சமம் என்று சுக்ரீவன் சொல்லுவது போல் கம்பர் கூறுகிறார் ..
அதாவது மனம் தெளிந்து தீவினைகளை விட்டவர்கள் ,
பிறவி பிணி நீக்க இயலும் .அப்படி இல்லாமல் இப்பிறப்பில் , பிறப்பின் சுவையில் இன்பம் கொண்டு மேலும்
வினை சேர்க்கும் போக்கில் உழன்று கொண்டிருக்கிறோம் .
அதை ஊக்குவிக்கும் மனம் உள்ளுடம்பில் அடங்கியது .
உள்ளுடம்பின் தெளிதலால்
தூல உடம்பு தீவினை தவிர்க்கும் .
எத்தனை ஊர்? எத்தனை வீ(டு) எத்தனை தாய் ? பெற்றவர்கள் எத்தனை பேர் ? இட்டழைக்க ஏன் என்றேன் - நித்தம் . எனக்குக் கலையாற்றாய் ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட்டோ? என பட்டினத்தார் கூறுவது போல் பிறவி ஒழிக்கும் உபாயம் அறிவதே வாழ்வின் பயன்
என்று தெளித்தல் நன்று .
அண்ணாமலை சுகுமாரன்
5/8/17
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -22
--அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை
26 ) நல்வினையும் தீவினையும் உண்டு திரிதரும்
செய்வினைக்கு வித்தாம் உடம்பு
தூல தேகமானது ,
நல்வினையும் = புண்ணியம் எனப்படும் நல்கர்மத்தையும் ,தீவினையும் = பாவம் எனப்படும் தீயகர்மத்தையும் ,உண்டு = அனுபவித்து ,
திரிதரும் = திரிந்து கொண்டிருக்கும் , ஆனால் ,
உடம்பு = உள்ளுடம்பு எனும் சூக்ஷும தேகம் ,
செய்வினைக்கு = செய்யும்படியானகர்மவினை போக்கும்ஞான கர்மங்களுக்கு
வித்தாம் = விதையாக அமையும் .
அதாவது தூல தேகம் கொண்டு செய்யும் நல்வினை தீவினை எனும் கர்மங்களுக்கு ,பதிலாக உள்ளுடம்பு ஞானவழியில்நின்றுவினைகளை போக்கஉதவிடும் விதை போல்இருந்துஉதவிடும்
நாம் நல்வினை செய்தாலும் ,தீவினை செய்தாலும் அவைகளின் பலனை அனுபவித்து , மீண்டும் மீண்டும் அத்தகைய வினைகளை செய்து , அதன் சுழற்சியிலேயே நீடித்து நம்மை இந்த பிறவியில் சுவை கொள்ளச் செய்யும்
தானே புரிவினையாற் சாரு மிருபயனுந்
தானே யனுபவித்தல் தப்பாது – தானூறு
கோடி கற்பஞ் சென்றாலுங் கோதையே செய்தவினை
நாடிநிற்கு மென்றார் நயந்து என்கிறது நீதி நெறி
இதன் பொருள்:
பெண்ணே! அளவற்ற கோடி கோடி கற்பங்கள் கடந்துவிட்டாலும், ஒருவனை அவன் செய்த வினைகள் எப்படியும் வந்து சேரும் என்று பெரியோர் சொல்லுவர். ஒருவன் தானே செய்த வினையினால் வந்து சேரக் கூடிய இரண்டு பயன்களும் (நல்லதும், தீயதும்), செய்தவன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது தப்பவே தப்பாது
கையில் பூட்டும் விலங்கு தங்கத்தால் செய்தால் என்ன ?இரும்பில் செய்தால் என்ன விலங்கு ,விலங்கு தானே என்கிறார் ஓஷோ . அப்போது வினையே ஆற்றாமல் இருக்கலாமா என்றால் அதுவும் முடியாது .செயல்களைத் துறவாமல், ஞானத்திற்கு தயார் செய்து கொள்வது கர்ம யோகவழி.
செயல்களை செய்யும்போதே , நம் விருப்பு வெறுப்புகளென்னும் வண்ணக்கண்ணாடிகளால்தான் இவ்வுலகத்தை பார்க்க நேரிடுகிறது. இவ்விருப்பு, வெறுப்புகள் தான்ஞானத்தினை அடைவதில் பெரும் தடைக் கற்கள் என்பதனால், அவை விலக்க வேண்டியவை
சொல்வதற்கும் ,படிப்பதற்கும் இவை எளியவைதான் .நடை முறைப்படுத்த அத்தனை கடினமானது .
ஆனால் செய்யும் கர்மங்களை வெறுப்பு வெறுப்பு இன்றி செய்வது எப்படி சாத்தியம் என்றால் அதற்க்கு ஒரே வழி ,அதனால் கிடைக்கும் பலனை நம்முடையது இல்லை என முன்பே துறப்பதால் தான் சாத்தியமாகும் இந்த சமச்சீரான மனநிலைக்குப் பக்குவப்படுத்துவது தான் கர்ம யோகம்.
செயலைச் செய். ஆனால், எப்படிப்பட்ட பலன் ஏற்பட்டாலும், அதை இறைவனின் பிரசாதமாக,நன்றியுடன் ஏற்றுக்கொள்வது கர்மயோகம். மனதை அமைதியுறச் செய்து, ஞானத்தை ஏற்றுக் கொள்வதற்கு, அது தயார் செய்திடும்.
இதை அடைய நமது முக்குணம் எனும் ரஜோ ,தமஸ், சாத்வீகம் எனும் முக்குணத்தில் உயர்குணமான சத்துவத்தில் இருந்து செயல்களை செய்தால் மட்டுமே சாத்தியம் ஆகும் .
கீதையும் இதையே வலியுறுத்துகிறது .ரஜோகுணத்தில் உதித்தஎந்த கர்மமும் பெரும்பாவத்தில் ஆழ்த்துபவை என்கிறது . இராஜச குணத்தால் தூண்டப்படும் ஆசையானது, சித்தம், மனம், புத்தி இவைதனை மூடி மறைத்து, உயர் ஞானம் வந்தடையும் வழி தனை மறிக்கும்.
உடலை விட, புலன்களும், புலன்களை விட மனமும், மனத்தை விட புத்தியும், புத்தியை விட ஆன்மாவும் உயர்ந்தது. ஆகவே, அந்த ஆன்மாவை அறிவதே ஞானத்தின் குறிக்கோள்
அண்ணாமலை சுகுமாரன்
9/8/17
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஒளவையின் குரல் + கீதையுடன் கலந்து
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -23
--அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை
27) உள்ளுடம்பின் வாழ்வன ஒன்பதும் ஏழைக்
கள்ள உடம்பு ஆகிவிடும்
வாழ்வன = (தூல தேகத்தில் இருப்பு கொண்டு )
செயல்பட்டுக்கொண்டிருக்கும் ,
ஒன்பதும் = நவத்துவாரங்கள் எனப்படும் ஒன்பது
ஓட்டைகளும் ,
உள்ளுடம்பின் = உள்ளுடம்பின் தொடர்பு இல்லாதபோது ,
ஏழை = வறியவரைப்போல் செயலற்று ,
கள்ள உடம்பு = மறைந்து நிற்கும் உடம்பாக ,
ஆகிவிடும் = மாறிவிடும் .
அன்னமய கோசம் எனும் இந்த தூல உடம்பில் ஒன்பது வாசல் உண்டு .அவைகள் நவத்துவாரங்கள் எனப்படும் .
அவையாவன கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித் துவாரங்கள் இரண்டு, கருவாய் ஒன்று,உணவு செல்லும் வாய் ,கழிக்கும்கழிவுக்கு எருவாய் ஆக ஒன்பது வாசல் .
கண்டத்துக்கு மேலே ஏழு வாயில் ,
இடுப்பிலே இரண்டு வாயில் .அமைந்துள்ளது
ஒன்பது வாயில் உடம்பில் முன்பே இருந்தாலும்
பத்தாவது ஒரு வாயிலைத்திறப்பதுதான் முக்திக்கு வழி என ஞானிகள் கூறுகிறார்கள் .
இந்த துவாரங்கள் தூல உடம்பில் இருந்தாலும் அவைகளை இயக்கும் விசை உள்ளுடம்பில் இருக்கிறது .
உள்ளுடம்பின் தொடர்பு இல்லாதபோது இந்த துவாரங்கள்
வறியவரைப்போல் செயலற்று இருக்கும் .
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு
ஒன்பது காட்சி யிலைபல வாமே.-- என்கிறது திருமந்திரம் .
அது தூல உடம்பின் ஒன்பது வாயிலைமட்டும் கூறாமல் அவைகளின் வழியே புகும் ஏனைய ஒன்பது காற்றையும் ,யோகம் கற்றோர் அந்த ஒன்பது துவாரம் மூலம் பெறும் அக உணர்வுகளைக் கூறுகிறது .
இப்படிப் பட்ட வினோத ஒன்பது ஓட்டையுள்ள இந்த உடலை ஆளும் ஆன்மாவும்வின் அளப்பரிய ஆற்றலை அடுத்து வரும் பகுதியில் காணலாம்
அண்ணாமலை சுகுமாரன்
12/8/17
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அருமை.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு
» ஔவையின் அகவலில் யோக நெறி
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» ஔவையின் அகவலில் யோக நெறி
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|