புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங்
Page 1 of 1 •
-மு. சத்தீஸ்
இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டிக்காத உலக நாடுகளை, குறிப்பாக இந்தியாவை, கடுமையாக சாடினார் கர்பால் சிங்.
“தமிழக முதல்வர் கருணாநிதி எங்கே போய்விட்டார்? இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார்?”, என்று அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பட்டர்வொர்த்தில் நடந்த கூட்டத்தில் கர்ஜித்தார்.
முதல் முறையாக நடந்தது
மார்ச் 7 ஆம் தேதி, பட்டவொர்த் ஹஜி அகமாட் படாவி மண்டபத் திடலில் நடைபெற்ற, “இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்” என்ற நிகழ்வில் ஏறக்குறைய சுமார் 3,000 தமிழர்கள் கலந்துக்கொண்டு தமது ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர்கள், மூத்த மாற்றசுக் கட்சித் தலைவர், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசினர்.
பெரும்பான்மை இனத்தவர்களின் முதலாளித்துவப் போக்கு
முதலாவதாகப் பேசிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சோவ் கோன் இயோ (Chow Kon Yeow), பெரும்பான்மை இனத்தவர்களின் முதலாளித்துவ போக்கால் வரும் இனச் சிக்கல்களே பிற்காலத்தில் இன நெருக்கடிக்கு இட்டு சென்று பின்னாளில் உள்நாட்டு போருக்கு வழியமைப்பதாக கூறினார்.
இலங்கையில் நடக்கும் போர் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றாரவர்.
சிங்களவர்களின் இனவெறி போக்குதான் தமிழர்களை ஆயுதம் தூக்கச்செய்தது என்பதை ஈழ வரலாறு காண்பிப்பதாக கூறினார்.
மலேசியாவில் இந்தியர்களைப் பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்வோரால் செய்ய முடியாத ஒரு மாபெரும் காரியத்தை பினாங்கு மாநில ஜசெக செய்துள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம். பினாங்கு மாநில ஜசெக தலைவர் என்ற முறையில், ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவினரை இவ்வேளையில் பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்று சோவ் கோன் இயோ கூறினார்.
அடுத்து, பாகான் டலாம் சட்டமன்ற உறுப்பினர் அ. தனசேகரன் ஜசெக ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவின் முயற்சியை பாராட்டியதோடு, தனது சட்டமன்ற சேவை மையம் சார்பாக 5,000 ரிங்கிட்டை நிதியாக வழங்கினார்.
இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டிக்காத உலக நாடுகளை, குறிப்பாக இந்தியாவை, கடுமையாக சாடினார் கர்பால் சிங்.
“தமிழக முதல்வர் கருணாநிதி எங்கே போய்விட்டார்? இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார்?”, என்று அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பட்டர்வொர்த்தில் நடந்த கூட்டத்தில் கர்ஜித்தார்.
முதல் முறையாக நடந்தது
மார்ச் 7 ஆம் தேதி, பட்டவொர்த் ஹஜி அகமாட் படாவி மண்டபத் திடலில் நடைபெற்ற, “இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்” என்ற நிகழ்வில் ஏறக்குறைய சுமார் 3,000 தமிழர்கள் கலந்துக்கொண்டு தமது ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர்கள், மூத்த மாற்றசுக் கட்சித் தலைவர், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசினர்.
பெரும்பான்மை இனத்தவர்களின் முதலாளித்துவப் போக்கு
முதலாவதாகப் பேசிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சோவ் கோன் இயோ (Chow Kon Yeow), பெரும்பான்மை இனத்தவர்களின் முதலாளித்துவ போக்கால் வரும் இனச் சிக்கல்களே பிற்காலத்தில் இன நெருக்கடிக்கு இட்டு சென்று பின்னாளில் உள்நாட்டு போருக்கு வழியமைப்பதாக கூறினார்.
இலங்கையில் நடக்கும் போர் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றாரவர்.
சிங்களவர்களின் இனவெறி போக்குதான் தமிழர்களை ஆயுதம் தூக்கச்செய்தது என்பதை ஈழ வரலாறு காண்பிப்பதாக கூறினார்.
மலேசியாவில் இந்தியர்களைப் பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்வோரால் செய்ய முடியாத ஒரு மாபெரும் காரியத்தை பினாங்கு மாநில ஜசெக செய்துள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம். பினாங்கு மாநில ஜசெக தலைவர் என்ற முறையில், ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவினரை இவ்வேளையில் பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்று சோவ் கோன் இயோ கூறினார்.
அடுத்து, பாகான் டலாம் சட்டமன்ற உறுப்பினர் அ. தனசேகரன் ஜசெக ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவின் முயற்சியை பாராட்டியதோடு, தனது சட்டமன்ற சேவை மையம் சார்பாக 5,000 ரிங்கிட்டை நிதியாக வழங்கினார்.
உலக மக்களின் இரட்டை வேடம், மலேசியாவும் விலக்கல்ல
பினனங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் இனவெறி என்பதை மனித சரித்திரத்தில் இருந்து விரட்டப்படும் வரை உலக மக்கள் ஓயக்கூடாது என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.
“உலக நாடுகள் காசா பிரச்சனையில் காட்டிய முனைப்பை இலங்கை விவகாரத்தில் காட்டாததை சுட்டிக்காட்டி, உலக நாடுகள் மனிதாபிமான பிரச்சனைகளில் இரட்டை வேடம் போடக்கூடாது”, என்று வலியுறுத்தினார்.
“மலேசியா அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல”, என்றும் அவர் கூறினார்.
மாநிலத்தில் ஆட்சி அமைத்த ஒரு வருடத்தில் பினாங்கு மாநில அரசு செய்த பல சாதனைகளை பட்டியிலிட்ட அவர், அச்சாதனைகளில் மேலும் முத்தாய்ப்பு வைப்பதை போல் இந்த ஈழத்தமிழர்கள் ஆதரவு நிகழ்வு அமைகிறது என்றார்.
“உலகின் எந்த மூலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும், அது காசாவாகட்டும், ஈழமாகட்டும் பினாங்கு மாநில அரசு தயங்காமல் அம்மக்களுக்காக குரல் எழுப்பும்”, என்றார் முதல்வர்.
அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமா உலகில் நிலவும் போர்களுக்கு, குறிப்பாக பாலஸ்தீன, ஈழப்பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை முன்வைப்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்தார் லிம். ஐநா சபை இப்பிரச்சனையில் தலையிட ஜசெக வலியுறுத்தும் என்றும் அவர் அறிவித்தார்.
பினாங்கு மாநில அரசின் சார்பாக ஈழத்தமிழர் துயர்துடைப்பு நிதிக்கு 15,000 ரிங்கிட் வழங்குவதாகவும் லிம் அறிவித்தார்.
இவ்வேளையில், நிதி சேகரிப்பு நிகழ்வு தொடங்கியது. அனித்தா சாரி சென்டர் உரிமையாளர் அழகர்சாமி 1,500 ரிங்கிட் கொடுத்து நிதி சேகரிப்பை தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பல தமிழுள்ளங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்காக நிதி வழங்கினர். பிரபல தொழிலதிபர் ஹென்றி பெனெடிக்ட் அவர்கள் 10,000 ரிங்கிட்டை இந்நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.
மகிந்த ராஜபக்சே, கனவு காணாதே!
மூத்த தலைவர் கர்ப்பால் சிங் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டிக்காத உலக நாடுகளை, குறிப்பாக இந்தியாவை, கடுமையாக சாடினார்.
“தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார்?; இந்தியா பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார்?”, என்று கர்ஜித்தார்.
“இலங்கையில் நடக்கும் படுகொலையைத் தடுக்காத இவ்விருவரும் உலக தமிழிர்களிடம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். இலங்கையில் நடக்கும் இனவெறியாட்டத்தைக் கண்டிக்கக்கூடத் தயங்கும் இந்தியாவை நினைத்து வேதனையடைவதாக”, அவர் குறிப்பிட்டார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் பல முறை ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக கொண்டு வந்த தீர்மானங்களை நிறைவேற்றாத மலேசிய அரசாங்கத்தையும் கர்ப்பால் சாடினார்.
மலேசிய இந்தியர்களின் மன ஓட்டத்தை மலேசிய நாடளுமன்றத்தில் பல முறை வெளியிட்டு தம்மோடு சிறை சென்ற அமரர் பி.பட்டுவையும், அமரர் வி.டேவிட்டையும் தமதுரையில் கர்ப்பால் நினைவு கூர்ந்தார்.
மேலும், இலங்கை அரசாங்கத்தின் பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
“இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்து விடலாம் என்று கனவு காணும் மகிந்த இரஜபக்சே அரசாங்கத்திற்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன்: பிரபாகரனை உங்களால் அசைக்கக்கூட முடியாது. பிரபாகரன் ஓடிவிட மாட்டார். தமிழீழம் மலரும் வரை அவர் போராடுவர். தமிழீழம் மலர்ந்தே தீரும்.”
“பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும் நாளைய சரித்திரம் போராட்டவாதி எனவும், தேசியவாதி எனவும் போற்றுமே தவிர தீவிரவாதி என்று ஒரு போதும் கூறாது”, என்றாரவர்.
“இந்த வேளையில் மஇகா சேகரித்த ஈழத்தமிழர்களின் சுனாமி நிதியில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அறிகிறோம். ஈழத்தமிழரின் மறுவாழ்வுக்காக சேகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் நிதியை தவறாக பயன்படுத்தியதாக சாமிவேலு மீது புதிய குற்றசாட்டு எழுந்துள்ளது. ஈழத்தமிழரின் இன்னலில் கூட குளிர்காயும் சாமிவேலையும், மஇகாவையும் மலேசிய தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
புக்கிட் செலாம்பாவில் மஇகாவிற்கு சரியான பாடம் காத்திருக்கிறது.
நண்பர்களே, இன்று ஈழத்தமிழர் இன்னல் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம், அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது கொடுப்போம் என்று கேட்டுக்கொண்டார்.
ஈழத்தமிழர் துயரை பற்றி நாம் அக்கறை கொள்கிறோம் என்று கூறிய வெளியுறவு அமைச்சர் இராயிஸ் யாத்திமின் வாக்குறுதி என்ன ஆனது? நிச்சயம் இந்த பிரச்சனையை ஜசெக நாடாளுமன்றத்தில் எழுப்பும்”, என்றார் கர்பால் சிங்.
இலங்கையில் நடப்பதையும் கண்டிக்க வேண்டும்
பினாங்கு துணை முதல்வர், பைருஸ் கைருடின், பாலஸ்தீன பிரச்சனையைப் போல் தமிழீழ பிரச்சனையும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று குறிப்பிட்டார்.
செஞ்சோலை சம்பவம் உட்பட இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தமதுரையில் சரித்திர பின்னணியோடு எடுத்துக்கூறி, இலங்கை அதிபர் மகிந்த இரஜபக்சே ஒரு கொலை வெறியன் என்று அவர் கூறினார்.
“காசாவில் நடந்த கொடுமைகளை கண்டித்ததைப் போல் இலங்கையில் நடக்கும் படுகொலைகளையும் மலேசியர்கள் கண்டிக்க வேண்டும்”, என்று கேட்டுக்கொண்டார்.
பினாங்கு துணை முதல்வர், பைருஸ் கைருடின், பாலஸ்தீன பிரச்சனையைப் போல் தமிழீழ பிரச்சனையும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று குறிப்பிட்டார்.
செஞ்சோலை சம்பவம் உட்பட இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தமதுரையில் சரித்திர பின்னணியோடு எடுத்துக்கூறி, இலங்கை அதிபர் மகிந்த இரஜபக்சே ஒரு கொலை வெறியன் என்று அவர் கூறினார்.
“காசாவில் நடந்த கொடுமைகளை கண்டித்ததைப் போல் இலங்கையில் நடக்கும் படுகொலைகளையும் மலேசியர்கள் கண்டிக்க வேண்டும்”, என்று கேட்டுக்கொண்டார்.
பூப்பந்தில் தமிழன் உள்ள வரையில்…
இறுதியில், ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதியின் ஆலோசகர், பினாங்கு மாநில துணை முதல்வர் ப.இராமசாமி, “பிரபாகரன் என்ற தலைவன் உள்ள வரை தமிழீழ போராட்டம் ஓய்ந்து விடாது”, என்று குறிப்பிட்டார்.
இலங்கை அரசு, போரில் வெற்றிகளை ஈட்டிக் கொண்டிருப்பதுபோல் பொய் பிராச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. உண்மையில் புலிகள் இன்னும் வலுவுடன் உள்ளனர். புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில் அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவிக்கிறது. புலிகளுடன் நேருக்கு நேர் போரிட வக்கில்லாத இலங்கை இராணுவம், குழந்தைகளையும், பெண்களையும் கொன்று குவிக்கிறது என்றாரவர்.
புலிகளை ஒரு வாரத்தில் அழித்து விடுவோம், ஒரு மாதத்தில் பிடித்துவிடுவோம் என்று பூச்சிக்கட்டுகிறது சிறீ லங்கா. ஆகக்கடைசியாக, துரோகி கருணா சொல்லியுள்ளார் 18 மாதங்களில் புலிகளை அழித்துவிடலாம் என்று.
“தமிழன் இந்த பூமிப்பந்தில் உள்ள வரை புலிகளை அழிக்க முடியாது. தமிழீழம் மலர்ந்தே தீரும். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இந்தியாவே நினைத்தாலும் அதை தடுக்க முடியாது”, என்று சூளுரைத்தார் ராமசாமி.
“அண்மைய எனது இந்திய பயணத்தில் முதல்வர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தேன், ஈழ பிரச்சனையை பற்றி பேசினேன். ஈழபிரச்சனையை விட வாரிசு பிரச்சனைதான் அவர்களுக்கு இப்பொழுது முக்கியமாக உள்ளது.
இந்தியத் தலைவர்கள், குறிப்பாக தமிழக தலைவர்கள் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவர்களுக்கு அவரவர் பதவி, நாற்காலிதான் முக்கியம்”, என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
அவர்களை விட மோசமான நிலையில் இருக்கிறது நமது முன்னாள் அமைச்சரின் நிலை. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாகி விட்டது.
மலேசிய தமிழர்கள் ஏற்கனவே மைக்கா ஹோல்டிங்க்ஸ், கேபிஜெ, டெலிகம்ஸ், தெனகா நேசனல் பங்குகள் என்று ஏமாந்து விட்டனர். அண்மையில் வெளிவந்த எம்ஐஇடி கதையும் அப்படித்தான். அதிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி என்னவென்றால், இலங்ககையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியிலும் முறைகேடாம்.
“மலேசிய தமிழர்களைத்தான் ஏமாற்றினார்கள் என்று பார்த்தால், பாவம் ஈழத்தமிழர்கள், போரோடு தினம், தினம் போராடிக் கொண்டிருக்கும் அவர்கள் வயிற்றிலும் அடிக்கலாமா?”, என்றவர் வினவினார்.
“இதைக்கேட்டால், இராமசாமி ஒரு ஜீரோ என்று என் மேல் பாய்கிறார். ஆம், நான் ஜீரோதான், ஊழலில் நான் ஜீரோ; நீர் எதில் ஹீரோ என்பதை மக்கள் அறிவார்கள்.
ஒரு வருடத்தில் என்ன சாதித்தாய் என்று கேள்வி கேட்கும் நண்பரே, என்னோடு நேரடி விவாதத்திற்கு தயாரா? நீர் தந்த சோதனையையும், நான் செய்த சாதனையையும் பட்டியலிடுகிறேன். ஈழத்தமிழரின் சுனாமி நிதி முறைகேடுக்கு பதில் சொல்லும் வரை உம்மை விடப்போவதில்லை.
புக்கிட் செலம்பாவிற்கு நான் வேட்டையாடச் செல்கிறேன். உம்மை எங்கும் சந்திக்க நான் தயார், நீர் தயாரா? ஆப்ரிக்கா சென்றாலும் சரி, அர்ஜென்டினா சென்றாலும் சரி எமக்கு பதில் சொல்லும் வரையில் உம்மை விடப்போவதில்லை”, என்றார் ராமசாமி.
மலேசிய தமிழர்களின் மீது, ஈழத்தமிழர்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளனர்.
பிரபாகரனே பல முறை இதை கூறியுள்ளார். “எங்களை யார் மறந்தாலும், மலேசியத் தமிழர்கள் எங்களை மறக்க மாட்டார்கள்”, என்று அடிக்கடி அவர் கூறுவார்.
அந்த கூற்றை இன்று மீண்டும் நாம் நீருபித்துள்ளோம். ஈழத்தமிழரின் துயர் துடைக்க ஒன்றிணைந்த தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் துணை முதல்வர் நன்றி கூறினார்.
RM73,960.40 நிதி
“இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்” கண்டன, நிதி சேகரிப்பு ஒன்றுகூடலில் சேகரிக்கப்பட்ட நிதி 73,960 ரிங்கிட் 40 சென் என்று அறிவிக்கப்பட்டது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|