புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
Jenila | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 20 of 40 •
Page 20 of 40 • 1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியும் ஒரு மகன்!
வழக்கமாக செல்லும் உணவு விடுதிக்கு சென்றிருந்தேன். வயது முதிர்ந்த, இயலாத நிலையில் உள்ள தன் தந்தையை அங்கு அழைத்து வந்திருந்தான், அவரது மகன். அவர், பலவீனமாக இருந்ததால், அவர் சாப்பிடும் போது, உணவு பதார்த்தங்கள், அவரது சட்டை, வேட்டி மற்றும் தரை மீது விழுந்தது. பக்கத்தில் சாப்பிடுவோர், இதைப் பார்த்து, முகத்தை சுழித்து, அவரது மகனை முறைத்தனர். ஆனால், மகனோ, மிகவும் அமைதியாக, தன் அப்பா சாப்பிடுவதையே பார்த்தபடி இருந்தான்.
சாப்பிட்டு முடித்ததும், தன் தந்தையை, கை கழுவும் இடத்திற்கு அழைத்துச் சென்று, அவரது முகம் மற்றும் ஆடையில் ஒட்டியிருந்த உணவு பொருட்களை துடைத்து, தலையை வாரி, கண்ணாடியை துடைத்து, அவருக்கு மாட்டி விட்டான்.
இருவரும் அங்கிருந்து வெளியில் வர, உணவு விடுதியே அமைதியானது. பில்லுக்கு மகன் பணம் செலுத்தி, தன் தந்தையின் கைப்பிடித்து, மெதுவாக அழைத்து செல்ல, அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில், ஒரு வயதானவர் எழுந்து, 'தம்பி... எதையாவது விட்டு செல்றீங்களா?' என்று கேட்டார்.
'இல்லயே... நான் எதையும் விட்டுச் செல்லலையே...' என்று மகன் கூற, அதற்கு, அந்த வயதானவர், 'இல்ல தம்பி... நீங்க, பெற்றோருக்கு நம்பிக்கையையும், இளையோருக்கு, ஒரு பாடத்தையும் விட்டு விட்டு செல்றீங்க...' என்றதும், அதுவரை முகம் சுழித்தவர்கள் கூட, எழுந்து நின்று கை தட்டி, பாராட்டினர்!
வ.முருகன், பாப்பனப்பட்டு.
வழக்கமாக செல்லும் உணவு விடுதிக்கு சென்றிருந்தேன். வயது முதிர்ந்த, இயலாத நிலையில் உள்ள தன் தந்தையை அங்கு அழைத்து வந்திருந்தான், அவரது மகன். அவர், பலவீனமாக இருந்ததால், அவர் சாப்பிடும் போது, உணவு பதார்த்தங்கள், அவரது சட்டை, வேட்டி மற்றும் தரை மீது விழுந்தது. பக்கத்தில் சாப்பிடுவோர், இதைப் பார்த்து, முகத்தை சுழித்து, அவரது மகனை முறைத்தனர். ஆனால், மகனோ, மிகவும் அமைதியாக, தன் அப்பா சாப்பிடுவதையே பார்த்தபடி இருந்தான்.
சாப்பிட்டு முடித்ததும், தன் தந்தையை, கை கழுவும் இடத்திற்கு அழைத்துச் சென்று, அவரது முகம் மற்றும் ஆடையில் ஒட்டியிருந்த உணவு பொருட்களை துடைத்து, தலையை வாரி, கண்ணாடியை துடைத்து, அவருக்கு மாட்டி விட்டான்.
இருவரும் அங்கிருந்து வெளியில் வர, உணவு விடுதியே அமைதியானது. பில்லுக்கு மகன் பணம் செலுத்தி, தன் தந்தையின் கைப்பிடித்து, மெதுவாக அழைத்து செல்ல, அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில், ஒரு வயதானவர் எழுந்து, 'தம்பி... எதையாவது விட்டு செல்றீங்களா?' என்று கேட்டார்.
'இல்லயே... நான் எதையும் விட்டுச் செல்லலையே...' என்று மகன் கூற, அதற்கு, அந்த வயதானவர், 'இல்ல தம்பி... நீங்க, பெற்றோருக்கு நம்பிக்கையையும், இளையோருக்கு, ஒரு பாடத்தையும் விட்டு விட்டு செல்றீங்க...' என்றதும், அதுவரை முகம் சுழித்தவர்கள் கூட, எழுந்து நின்று கை தட்டி, பாராட்டினர்!
வ.முருகன், பாப்பனப்பட்டு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மரம் வளர்க்கும் மாணவர்கள்!
வெளியூரில், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணத்திற்கு வந்திருந்தோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நானும், அதை வாங்கி, ஊருக்கு திரும்ப, பஸ் நிலையம் நோக்கி, நடந்து வந்த போது, மரக்கன்றுகளை வாங்கியவர்கள், வழி எங்கும் அதை, வீசி சென்றுள்ளதை பார்த்து, வேதனையடைந்தேன்.
அப்போது, அவ்வழியே வந்த அரசு பள்ளி மாணவர்கள் சிலர், கீழே கிடந்த மரக்கன்றுகளை பார்த்து, தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு, பின், 'மளமள'வென அவற்றை சேகரிக்க துவங்கினர்.
ஆர்வம் தாங்காமல் அவர்களிடம், 'இந்த மரக்கன்றுகளை என்ன செய்யப் போறீங்க...' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'இந்த மரக்கன்றுகளை, எங்க பள்ளி வளாகத்திலும், எங்க ஊரில் உள்ள குட்டையிலும் நடப்போறோம்...' என்றனர். மேலும், இதுபோல், நிறைய மரக்கன்றுகளை நட்டு இருப்பதாகவும், இப்பழக்கத்தை, தங்கள் ஆசிரியர் ஒருவர் கற்றுத்தந்ததாகவும் கூறினர்.
அந்த மாணவர்களையும், மரங்கள் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்குள் ஏற்படுத்திய ஆசிரியரையும், மனதார பாராட்டினேன்.
அ.செந்தில்குமார், சூலூர்.
வெளியூரில், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணத்திற்கு வந்திருந்தோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நானும், அதை வாங்கி, ஊருக்கு திரும்ப, பஸ் நிலையம் நோக்கி, நடந்து வந்த போது, மரக்கன்றுகளை வாங்கியவர்கள், வழி எங்கும் அதை, வீசி சென்றுள்ளதை பார்த்து, வேதனையடைந்தேன்.
அப்போது, அவ்வழியே வந்த அரசு பள்ளி மாணவர்கள் சிலர், கீழே கிடந்த மரக்கன்றுகளை பார்த்து, தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு, பின், 'மளமள'வென அவற்றை சேகரிக்க துவங்கினர்.
ஆர்வம் தாங்காமல் அவர்களிடம், 'இந்த மரக்கன்றுகளை என்ன செய்யப் போறீங்க...' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'இந்த மரக்கன்றுகளை, எங்க பள்ளி வளாகத்திலும், எங்க ஊரில் உள்ள குட்டையிலும் நடப்போறோம்...' என்றனர். மேலும், இதுபோல், நிறைய மரக்கன்றுகளை நட்டு இருப்பதாகவும், இப்பழக்கத்தை, தங்கள் ஆசிரியர் ஒருவர் கற்றுத்தந்ததாகவும் கூறினர்.
அந்த மாணவர்களையும், மரங்கள் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்குள் ஏற்படுத்திய ஆசிரியரையும், மனதார பாராட்டினேன்.
அ.செந்தில்குமார், சூலூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சத்தான ஐடியா!
சமீபத்தில், என் பேத்திக்கு,ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாடினோம்; என் மகளுக்கும், மருமகனுக்கும் ஒரு யோசனை தோன்ற, மறுநாள், என் பேத்தியுடன் படிக்கும் மாணவர்களுக்கு, கேக் மற்றும் சாக்லேட் கொடுக்காமல், கடலை மிட்டாய் மற்றும் கமர்கட்டு, இரண்டையும் கொடுத்து அனுப்பினோம்.
இதைப் பார்த்து, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், வியந்து பாராட்டினர்; குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.
இதை, அனைவரும் பின்பற்றலாமே!
எஸ்.ஷம்ஷீன், நெய்வேலி.
சமீபத்தில், என் பேத்திக்கு,ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாடினோம்; என் மகளுக்கும், மருமகனுக்கும் ஒரு யோசனை தோன்ற, மறுநாள், என் பேத்தியுடன் படிக்கும் மாணவர்களுக்கு, கேக் மற்றும் சாக்லேட் கொடுக்காமல், கடலை மிட்டாய் மற்றும் கமர்கட்டு, இரண்டையும் கொடுத்து அனுப்பினோம்.
இதைப் பார்த்து, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், வியந்து பாராட்டினர்; குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.
இதை, அனைவரும் பின்பற்றலாமே!
எஸ்.ஷம்ஷீன், நெய்வேலி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1243961krishnaamma wrote:சத்தான ஐடியா!
சமீபத்தில், என் பேத்திக்கு,ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாடினோம்; என் மகளுக்கும், மருமகனுக்கும் ஒரு யோசனை தோன்ற, மறுநாள், என் பேத்தியுடன் படிக்கும் மாணவர்களுக்கு, கேக் மற்றும் சாக்லேட் கொடுக்காமல், கடலை மிட்டாய் மற்றும் கமர்கட்டு, இரண்டையும் கொடுத்து அனுப்பினோம்.
இதைப் பார்த்து, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், வியந்து பாராட்டினர்; குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.
இதை, அனைவரும் பின்பற்றலாமே!
எஸ்.ஷம்ஷீன், நெய்வேலி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தடையாக இருக்காதீர்கள்!
நான், 9ம் வகுப்பு ஆசிரியை; என் வகுப்பு மாணவியர் ஐந்து பேர், முதல், 'ரேங்க்' எடுப்பதற்கு போட்டி போடுவர். அதில், ஒருவள், காலாண்டு தேர்வில் ஐந்தாவதாக வந்தவள், அரையாண்டு தேர்வில் பத்தாவது ரேங்க் வாங்கினாள். அழைத்து, காரணம் கேட்க, அழ ஆரம்பித்தவள், 'சடங்காகிறது தப்பா டீச்சர்... மே மாத லீவ்ல, 'ஏஜ்' அட்டென்ட் ஆனேன். உடனே, பள்ளிக்கு போக வேணாம்ன்னு எங்க அம்மா தடுத்தாங்க. பிடிவாதம் பிடிச்சு, ஸ்கூலுக்கு வந்தேன். அதிலிருந்து, யாரையும் பார்க்கவோ, பேசவோ கூடாதுன்னு எங்கம்மா ஒரே, 'டார்ச்சர்!'
'அதோட, ஸ்கூலுக்கு அவங்க தான் கூட்டி வந்து, திரும்ப அழைச்சுட்டுப் போவாங்க. பள்ளி விடுறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக வந்து, 'கேட்'ல நிற்கிறாங்க. இதனால, எல்லாரும் என்னை கேலி செய்றாங்க. இந்த மன உளைச்சலால் என்னால், படிக்க, சாப்பிட, தூங்க முடியல...' என்றாள்.
அவளது சங்கடம் புரிந்து, 'நாளைக்கு, உங்கம்மா, அப்பாவ ஸ்கூலுக்கு அழைச்சுட்டு வா... முக்கியமா உங்கப்பாவ கூப்பிட்டு வா...' என்றேன்.
மறுநாள், அவளது பெற்றோர் வந்தனர். அவளது அம்மாவை உட்காரச் சொல்லி, தலைமையாசிரியரும், நானும், தனியாக அவளது அப்பாவிடம் பேசிய போது, அவருக்கு இதுபற்றி எதுவும் தெரியவில்லை. சம்பாதித்து போடும் கடமை வீரராக மட்டுமே இருந்துள்ளார்.
அவரிடம், 'தாயே, தான் பெற்ற பெண்ணை நம்பாமல் நடந்து கொண்டால் எப்படி... அவள் நன்றாக படிக்கிறவ; அவளுக்கு உறுதுணையாக இல்லாம, இப்படி சந்தேகப் பிராணியாக இருந்தா, இது, அவ மனசை மட்டுமல்ல, வாழ்க்கையையும் பாதிக்கும். உங்கள் மனைவிய ஒவ்வொரு வாரமும் கவுன்சிலிங்கிற்கு கூட்டி வாங்க; நாங்க அவங்க கிட்ட பேசி இதை புரிய வைக்கிறோம்...' என்று அறிவுரை கூறினோம்.
நல்லவேளையாக, அவரும், அவரது மனைவியும் புரிந்து நடந்ததில், இப்போது, முழு ஆண்டு தேர்வில், முதல் மாணவியாக வந்துள்ளாள், அந்த மாணவி.
பெற்றோரே... குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு, நீங்களே தடையாக இருக்காதீர்!
மஞ்சுளா விஜயகுமார், சென்னை.
நான், 9ம் வகுப்பு ஆசிரியை; என் வகுப்பு மாணவியர் ஐந்து பேர், முதல், 'ரேங்க்' எடுப்பதற்கு போட்டி போடுவர். அதில், ஒருவள், காலாண்டு தேர்வில் ஐந்தாவதாக வந்தவள், அரையாண்டு தேர்வில் பத்தாவது ரேங்க் வாங்கினாள். அழைத்து, காரணம் கேட்க, அழ ஆரம்பித்தவள், 'சடங்காகிறது தப்பா டீச்சர்... மே மாத லீவ்ல, 'ஏஜ்' அட்டென்ட் ஆனேன். உடனே, பள்ளிக்கு போக வேணாம்ன்னு எங்க அம்மா தடுத்தாங்க. பிடிவாதம் பிடிச்சு, ஸ்கூலுக்கு வந்தேன். அதிலிருந்து, யாரையும் பார்க்கவோ, பேசவோ கூடாதுன்னு எங்கம்மா ஒரே, 'டார்ச்சர்!'
'அதோட, ஸ்கூலுக்கு அவங்க தான் கூட்டி வந்து, திரும்ப அழைச்சுட்டுப் போவாங்க. பள்ளி விடுறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக வந்து, 'கேட்'ல நிற்கிறாங்க. இதனால, எல்லாரும் என்னை கேலி செய்றாங்க. இந்த மன உளைச்சலால் என்னால், படிக்க, சாப்பிட, தூங்க முடியல...' என்றாள்.
அவளது சங்கடம் புரிந்து, 'நாளைக்கு, உங்கம்மா, அப்பாவ ஸ்கூலுக்கு அழைச்சுட்டு வா... முக்கியமா உங்கப்பாவ கூப்பிட்டு வா...' என்றேன்.
மறுநாள், அவளது பெற்றோர் வந்தனர். அவளது அம்மாவை உட்காரச் சொல்லி, தலைமையாசிரியரும், நானும், தனியாக அவளது அப்பாவிடம் பேசிய போது, அவருக்கு இதுபற்றி எதுவும் தெரியவில்லை. சம்பாதித்து போடும் கடமை வீரராக மட்டுமே இருந்துள்ளார்.
அவரிடம், 'தாயே, தான் பெற்ற பெண்ணை நம்பாமல் நடந்து கொண்டால் எப்படி... அவள் நன்றாக படிக்கிறவ; அவளுக்கு உறுதுணையாக இல்லாம, இப்படி சந்தேகப் பிராணியாக இருந்தா, இது, அவ மனசை மட்டுமல்ல, வாழ்க்கையையும் பாதிக்கும். உங்கள் மனைவிய ஒவ்வொரு வாரமும் கவுன்சிலிங்கிற்கு கூட்டி வாங்க; நாங்க அவங்க கிட்ட பேசி இதை புரிய வைக்கிறோம்...' என்று அறிவுரை கூறினோம்.
நல்லவேளையாக, அவரும், அவரது மனைவியும் புரிந்து நடந்ததில், இப்போது, முழு ஆண்டு தேர்வில், முதல் மாணவியாக வந்துள்ளாள், அந்த மாணவி.
பெற்றோரே... குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு, நீங்களே தடையாக இருக்காதீர்!
மஞ்சுளா விஜயகுமார், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளிகளுக்கு இன்றைய தேவை!
விழுப்புரத்தில் வசிக்கும் என் நண்பன், தன் இரு குழந்தைகளையும் உள்ளூர் பள்ளியில் சேர்த்துள்ளான்.
அப்பள்ளியில், தினமும் பள்ளி முடிந்த பின், 20 நிமிடங்கள், 'ஸ்பெஷல்' வகுப்பு நடைபொறும், அதில், வங்கியில் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் உள்ள படிவத்தை, எப்படி பூர்த்தி செய்வது என்று கற்றுக் கொடுப்பர், தினமும், ஒரு புதிய ஆங்கில வார்த்தைக்கு, அர்த்தம் சொல்லிக் கொடுப்பர்.
அடுத்து, சாலையில் விபத்து ஏற்பட்டு, அடிபட்டு கிடப்பவர்களுக்கு முதலுதாவி செய்வது மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து செல்லிக் கொடுப்பர்.
மேடை பயத்தை போக்க, தினமும் ஒரு மாணவனை, அவனுக்கு பிடித்த ஏதேனும் ஒரு தலைப்பில், ஐந்து நிமிடம் மேடையில் பேச வைப்பது என, ஆக்கப்பூர்வமான விஷயங்களை கற்றுத் தருகின்றனர்.
இதுபோன்று, மற்ற பள்ளிகளும் பின்பற்றினால், சிறந்த மாணவர்கள் நிறைய உருவாவர் என்பது நிச்சியம்!
வி.சீனிவாசன், சென்னை.
விழுப்புரத்தில் வசிக்கும் என் நண்பன், தன் இரு குழந்தைகளையும் உள்ளூர் பள்ளியில் சேர்த்துள்ளான்.
அப்பள்ளியில், தினமும் பள்ளி முடிந்த பின், 20 நிமிடங்கள், 'ஸ்பெஷல்' வகுப்பு நடைபொறும், அதில், வங்கியில் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் உள்ள படிவத்தை, எப்படி பூர்த்தி செய்வது என்று கற்றுக் கொடுப்பர், தினமும், ஒரு புதிய ஆங்கில வார்த்தைக்கு, அர்த்தம் சொல்லிக் கொடுப்பர்.
அடுத்து, சாலையில் விபத்து ஏற்பட்டு, அடிபட்டு கிடப்பவர்களுக்கு முதலுதாவி செய்வது மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து செல்லிக் கொடுப்பர்.
மேடை பயத்தை போக்க, தினமும் ஒரு மாணவனை, அவனுக்கு பிடித்த ஏதேனும் ஒரு தலைப்பில், ஐந்து நிமிடம் மேடையில் பேச வைப்பது என, ஆக்கப்பூர்வமான விஷயங்களை கற்றுத் தருகின்றனர்.
இதுபோன்று, மற்ற பள்ளிகளும் பின்பற்றினால், சிறந்த மாணவர்கள் நிறைய உருவாவர் என்பது நிச்சியம்!
வி.சீனிவாசன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்; கவலை இல்லை ஒப்புக் கொள்!
புறநகர் பகுதியில், நானும், என் நண்பரும் பிளாட் வாங்கியிருந்தோம். அதை, அவ்வப்போது சென்று, பார்த்து வருவது வழக்கம். வழியில், 10 குடும்பங்களை கொண்ட குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. நாங்கள், அந்த வீடுகளை கடக்கும் போதெல்லாம், மாமியார் - மருமகள் சண்டை, குடித்து விட்டு சாலையில் கலாட்டா செய்யும் குடிமகன், குழாயடி மற்றும் வம்பு சண்டை என, இப்படி ஏதாவது அரங்கேறியபடி இருக்கும்.
என் நண்பருக்கு என்ன தோன்றியதோ... ஒருநாள், அங்கிருந்த ஒரு பெரியவரிடம், 'ஐயா... என் நண்பர் ஒருவர், தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். உங்க குடியிருப்பை சேர்ந்தவர்கள், அங்கு ஒருநாள் பயிற்சி எடுத்து, அத்தொழிலை செய்யலாமே... இங்குள்ளவர்களிடம் சொல்லிப் பாருங்களேன்...' என்றார்.
அப்பெரியவரும், அதை அங்குள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்ல, இப்போது, தீப்பெட்டியில் லேபிள் ஒட்டுதல், தீக்குச்சியில் மருந்து வைத்தல், பசை செய்தல் மற்றும் பீடி சுற்றுதல் என ஆளுக்கொரு வேலையை செய்து, கணிசமாக பணம் சம்பாதிக்கின்றனர். அத்துடன், சைக்கிளில் இருந்து, இரு சக்கர வாகனம் வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதி பெற்று விட்டனர். இதற்கு தான், 'கைத் தொழில் ஒன்றை கற்றுக் கொள்; கவலை இல்லை ஒத்துக் கொள்...' என்று சொல்கின்றனர்.
டி.கே.ஆறுமுகம், கோவை.
புறநகர் பகுதியில், நானும், என் நண்பரும் பிளாட் வாங்கியிருந்தோம். அதை, அவ்வப்போது சென்று, பார்த்து வருவது வழக்கம். வழியில், 10 குடும்பங்களை கொண்ட குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. நாங்கள், அந்த வீடுகளை கடக்கும் போதெல்லாம், மாமியார் - மருமகள் சண்டை, குடித்து விட்டு சாலையில் கலாட்டா செய்யும் குடிமகன், குழாயடி மற்றும் வம்பு சண்டை என, இப்படி ஏதாவது அரங்கேறியபடி இருக்கும்.
என் நண்பருக்கு என்ன தோன்றியதோ... ஒருநாள், அங்கிருந்த ஒரு பெரியவரிடம், 'ஐயா... என் நண்பர் ஒருவர், தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். உங்க குடியிருப்பை சேர்ந்தவர்கள், அங்கு ஒருநாள் பயிற்சி எடுத்து, அத்தொழிலை செய்யலாமே... இங்குள்ளவர்களிடம் சொல்லிப் பாருங்களேன்...' என்றார்.
அப்பெரியவரும், அதை அங்குள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்ல, இப்போது, தீப்பெட்டியில் லேபிள் ஒட்டுதல், தீக்குச்சியில் மருந்து வைத்தல், பசை செய்தல் மற்றும் பீடி சுற்றுதல் என ஆளுக்கொரு வேலையை செய்து, கணிசமாக பணம் சம்பாதிக்கின்றனர். அத்துடன், சைக்கிளில் இருந்து, இரு சக்கர வாகனம் வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதி பெற்று விட்டனர். இதற்கு தான், 'கைத் தொழில் ஒன்றை கற்றுக் கொள்; கவலை இல்லை ஒத்துக் கொள்...' என்று சொல்கின்றனர்.
டி.கே.ஆறுமுகம், கோவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நண்பர்கள் ஒரு எல்லையோடு நிற்கட்டும்!
மிகவும் வசதி படைத்த, என் உறவினரின் ஒரே மகன், வெளிநாட்டில் பணிபுரிகிறான். அவனுக்கு முன் நெற்றி தலைமுடி உதிர்ந்து, வழுக்கை விழுந்து, முதிர்ச்சியாக தெரிவதால், திருமணம் தள்ளிப் போனது.
இந்நிலையில், நிறைய படித்த, ஆனால், வசதியற்ற ஒரு பெண்ணின் ஜாதகம் கிடைத்து, உறவினரிடம் கொடுத்தேன்.
ஜாதகம் பொருந்தி, மாப்பிள்ளை - பெண் மற்றும் இரு வீட்டாரின் மனப் பொருத்தமும் நிறைவடைந்து, நிச்சயதார்த்தமும் முடிந்தது. திருமண நாள், நெருங்கும் நிலையில், நானும், என் கணவரும் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தோம்.
அங்கு, கலகலப்புக்கு பதிலாக, திருமண வேலைகள் நின்று போயிருந்ததை கண்டு அதிர்ச்சியாகி, காரணம் கேட்டோம். மாப்பிள்ளையின் நண்பர்கள், பெண்ணின் புகைப்படத்தை பார்த்து, 'பெண்ணின் கன்னத்தில் கிள்ளிப் பிடிக்க கூட, சதை இல்லையே... எப்படி சம்மதித்தாய்...' என விமர்சித்ததாகவும், அதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி, 'திருமணத்தில் சம்மதமில்லை...' என்று மகன் மறுத்து விட்டதாக கூறி, மனம் வருந்தினார், உறவினர். பையனை அழைத்து, 'உன் சம்மதம் கேட்டுத் தானே முடிவு செய்தோம்; பெண் ஒல்லியாக இருந்தா என்ன நீ, வசதி படைத்தவன் தானே, உன் வீட்டிற்கு வந்தால், பூரித்து விட போறா...
'உன்னிடம் மட்டும் குறையில்லையா; இதற்கு போயி, கூடி வந்த திருமணத்தை, நிறுத்தி விட்டாயே...' என்று புத்தி புகட்டி, நின்று போன திருமணத்தை முடித்து வைத்தோம்.
நண்பர்களே... வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று, ஒரு பெண்ணைப் பற்றி எதிர்மறையாக கூறி, திருமணத்தை கலைத்து விடாதீர்!
எஸ்.ஜெயம் சதாசிவம், மதுரை.
மிகவும் வசதி படைத்த, என் உறவினரின் ஒரே மகன், வெளிநாட்டில் பணிபுரிகிறான். அவனுக்கு முன் நெற்றி தலைமுடி உதிர்ந்து, வழுக்கை விழுந்து, முதிர்ச்சியாக தெரிவதால், திருமணம் தள்ளிப் போனது.
இந்நிலையில், நிறைய படித்த, ஆனால், வசதியற்ற ஒரு பெண்ணின் ஜாதகம் கிடைத்து, உறவினரிடம் கொடுத்தேன்.
ஜாதகம் பொருந்தி, மாப்பிள்ளை - பெண் மற்றும் இரு வீட்டாரின் மனப் பொருத்தமும் நிறைவடைந்து, நிச்சயதார்த்தமும் முடிந்தது. திருமண நாள், நெருங்கும் நிலையில், நானும், என் கணவரும் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தோம்.
அங்கு, கலகலப்புக்கு பதிலாக, திருமண வேலைகள் நின்று போயிருந்ததை கண்டு அதிர்ச்சியாகி, காரணம் கேட்டோம். மாப்பிள்ளையின் நண்பர்கள், பெண்ணின் புகைப்படத்தை பார்த்து, 'பெண்ணின் கன்னத்தில் கிள்ளிப் பிடிக்க கூட, சதை இல்லையே... எப்படி சம்மதித்தாய்...' என விமர்சித்ததாகவும், அதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி, 'திருமணத்தில் சம்மதமில்லை...' என்று மகன் மறுத்து விட்டதாக கூறி, மனம் வருந்தினார், உறவினர். பையனை அழைத்து, 'உன் சம்மதம் கேட்டுத் தானே முடிவு செய்தோம்; பெண் ஒல்லியாக இருந்தா என்ன நீ, வசதி படைத்தவன் தானே, உன் வீட்டிற்கு வந்தால், பூரித்து விட போறா...
'உன்னிடம் மட்டும் குறையில்லையா; இதற்கு போயி, கூடி வந்த திருமணத்தை, நிறுத்தி விட்டாயே...' என்று புத்தி புகட்டி, நின்று போன திருமணத்தை முடித்து வைத்தோம்.
நண்பர்களே... வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று, ஒரு பெண்ணைப் பற்றி எதிர்மறையாக கூறி, திருமணத்தை கலைத்து விடாதீர்!
எஸ்.ஜெயம் சதாசிவம், மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'வாட்ஸ் -ஆப்' வாத்தியார்!
தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறான், என் மகன். அவனது வகுப்பாசிரியர், தன் மாணவர்கள் அனைவரிடமும், அவர்களது பெற்றோரின், 'வாட்ஸ் - ஆப்' எண்ணை பெற்று, தனியாக, 'வாட்ஸ் - ஆப் குரூப்' ஒன்றை ஏற்படுத்தினார்.
யாராவது ஒரு மாணவன், வகுப்பிற்கு வராமல், விடுப்பு எடுத்தால், அவனது விடுமுறை விண்ணப்பத்தை, மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, அவனது தந்தைக்கு, 'வாட்ஸ் - ஆப்' பில் அனுப்பி விடுவார்; இதனால், மாணவர்கள் பொய் சொல்லி, லீவு போடுவது, முற்றிலும் தடுக்கப்பட்டது.
மேலும், அன்றன்று நடத்திய பாடம் பற்றிய விவரங்களை, அனைத்து பெற்றோருக்கும், 'வாட்ஸ் - ஆப்'பில் அனுப்பி விடுவார்; இதனால், பெற்றோர், தங்கள் பிள்ளையின் படிப்பின் மீது, ஒரு கண் வைத்து கண்காணிக்கும் சூழ்நிலை, தானாகவே உருவாகி விட்டது.
பள்ளியில் நடக்கும் பேச்சு, விளையாட்டுப் போட்டி மற்றும் பொது அறிவு போட்டிகளில் தன் வகுப்பு மாணவர்கள் பரிசு பெற்றால், அந்த மாணவர்களின் புகைப்படத்தோடு, பரிசு பெற்ற விபரத்தையும், அனைத்து பெற்றோருக்கும் அனுப்பி வைப்பார்.
அவர்களும், அந்த மாணவர்களை வாழ்த்த, இதனால், மற்ற மாணவர்களுக்கும், 'நாமும், அதுபோல் செய்து, பெற்றோரின் பாராட்டை பெற வேண்டும்...' என்ற ஆர்வம், உருவாகியது. அதுமட்டுமல்லாமல், அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுமே, படிப்பில் திறமைசாலிகளாக திகழ ஆரம்பித்து விட்டனர்.
ஆசிரியரின் இந்த செயலை, அனைத்து பெற்றோரும் பாராட்டுகின்றனர்; மற்ற ஆசிரியர்களும், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை, மாணவர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தினால், கல்வியின் தரம், தானாக உயர்ந்து விடும் என்பதில், எள்ளளவும் ஐயமில்லை!
ஆர்.பிரபு, கோவை.
தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறான், என் மகன். அவனது வகுப்பாசிரியர், தன் மாணவர்கள் அனைவரிடமும், அவர்களது பெற்றோரின், 'வாட்ஸ் - ஆப்' எண்ணை பெற்று, தனியாக, 'வாட்ஸ் - ஆப் குரூப்' ஒன்றை ஏற்படுத்தினார்.
யாராவது ஒரு மாணவன், வகுப்பிற்கு வராமல், விடுப்பு எடுத்தால், அவனது விடுமுறை விண்ணப்பத்தை, மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, அவனது தந்தைக்கு, 'வாட்ஸ் - ஆப்' பில் அனுப்பி விடுவார்; இதனால், மாணவர்கள் பொய் சொல்லி, லீவு போடுவது, முற்றிலும் தடுக்கப்பட்டது.
மேலும், அன்றன்று நடத்திய பாடம் பற்றிய விவரங்களை, அனைத்து பெற்றோருக்கும், 'வாட்ஸ் - ஆப்'பில் அனுப்பி விடுவார்; இதனால், பெற்றோர், தங்கள் பிள்ளையின் படிப்பின் மீது, ஒரு கண் வைத்து கண்காணிக்கும் சூழ்நிலை, தானாகவே உருவாகி விட்டது.
பள்ளியில் நடக்கும் பேச்சு, விளையாட்டுப் போட்டி மற்றும் பொது அறிவு போட்டிகளில் தன் வகுப்பு மாணவர்கள் பரிசு பெற்றால், அந்த மாணவர்களின் புகைப்படத்தோடு, பரிசு பெற்ற விபரத்தையும், அனைத்து பெற்றோருக்கும் அனுப்பி வைப்பார்.
அவர்களும், அந்த மாணவர்களை வாழ்த்த, இதனால், மற்ற மாணவர்களுக்கும், 'நாமும், அதுபோல் செய்து, பெற்றோரின் பாராட்டை பெற வேண்டும்...' என்ற ஆர்வம், உருவாகியது. அதுமட்டுமல்லாமல், அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுமே, படிப்பில் திறமைசாலிகளாக திகழ ஆரம்பித்து விட்டனர்.
ஆசிரியரின் இந்த செயலை, அனைத்து பெற்றோரும் பாராட்டுகின்றனர்; மற்ற ஆசிரியர்களும், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை, மாணவர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தினால், கல்வியின் தரம், தானாக உயர்ந்து விடும் என்பதில், எள்ளளவும் ஐயமில்லை!
ஆர்.பிரபு, கோவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1244383krishnaamma wrote:'வாட்ஸ் -ஆப்' வாத்தியார்!
தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறான், என் மகன். அவனது வகுப்பாசிரியர், தன் மாணவர்கள் அனைவரிடமும், அவர்களது பெற்றோரின், 'வாட்ஸ் - ஆப்' எண்ணை பெற்று, தனியாக, 'வாட்ஸ் - ஆப் குரூப்' ஒன்றை ஏற்படுத்தினார்.
யாராவது ஒரு மாணவன், வகுப்பிற்கு வராமல், விடுப்பு எடுத்தால், அவனது விடுமுறை விண்ணப்பத்தை, மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, அவனது தந்தைக்கு, 'வாட்ஸ் - ஆப்' பில் அனுப்பி விடுவார்; இதனால், மாணவர்கள் பொய் சொல்லி, லீவு போடுவது, முற்றிலும் தடுக்கப்பட்டது.
மேலும், அன்றன்று நடத்திய பாடம் பற்றிய விவரங்களை, அனைத்து பெற்றோருக்கும், 'வாட்ஸ் - ஆப்'பில் அனுப்பி விடுவார்; இதனால், பெற்றோர், தங்கள் பிள்ளையின் படிப்பின் மீது, ஒரு கண் வைத்து கண்காணிக்கும் சூழ்நிலை, தானாகவே உருவாகி விட்டது.
பள்ளியில் நடக்கும் பேச்சு, விளையாட்டுப் போட்டி மற்றும் பொது அறிவு போட்டிகளில் தன் வகுப்பு மாணவர்கள் பரிசு பெற்றால், அந்த மாணவர்களின் புகைப்படத்தோடு, பரிசு பெற்ற விபரத்தையும், அனைத்து பெற்றோருக்கும் அனுப்பி வைப்பார்.
அவர்களும், அந்த மாணவர்களை வாழ்த்த, இதனால், மற்ற மாணவர்களுக்கும், 'நாமும், அதுபோல் செய்து, பெற்றோரின் பாராட்டை பெற வேண்டும்...' என்ற ஆர்வம், உருவாகியது. அதுமட்டுமல்லாமல், அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுமே, படிப்பில் திறமைசாலிகளாக திகழ ஆரம்பித்து விட்டனர்.
ஆசிரியரின் இந்த செயலை, அனைத்து பெற்றோரும் பாராட்டுகின்றனர்; மற்ற ஆசிரியர்களும், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை, மாணவர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தினால், கல்வியின் தரம், தானாக உயர்ந்து விடும் என்பதில், எள்ளளவும் ஐயமில்லை!
ஆர்.பிரபு, கோவை.
- Sponsored content
Page 20 of 40 • 1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 40
|
|