புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
Page 8 of 17 •
Page 8 of 17 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan
தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017
21.01.2018
இது 'தெரிந்ததும் தெரியாததும்' பகுதியில் இருந்துச்சு. இப்போ சரியான இடத்துக்கு வந்திருக்கேன்.
என்ன சார் நீங்க. இதுல தப்பா நெனச்சுக்கிறது என்ன சா..................ர் இருக்கு. உங்க கருத்தை சொல்றீங்க, அம்புட்டுதானே.
ஆனா ஒண்ணு சார், நீங்க சொன்ன படங்களை பற்றி எழுத நான் ரெடி. wikiயில கிடைக்கிற சில தகவல்கள் தப்பானதுன்னு சொல்றாங்க. அதனாலதான், இப்படிப்பட்ட தகவல்களை அதுலே இருந்து எழுதுறதில்ல.
பழைய படங்களை பற்றி எழுதுறேனே, அதெல்..............லாமே ஹிந்து பேப்பர்ல வந்தது. ஆனா இங்கிலிஷ்ல இருக்கு. நான் அதை மொழிபெயர்த்து எழுதுறேன். 343 படங்கள் இருக்கு. அதில 1934 ல இருந்துதானே இருக்கு.
நீங்க படத்தின் பேரை சொல்வீங்களா.................ம். அதை நான் தே.............டி, கெடச்............சா, எழுதுவேனாம். சரியா?
23. இப்போ கீசக வதம் 1918
தமிழ்ல மொத மொதலா...................... வந்த படம். இதிகாசங்களை படிச்சவங்களுக்கு 'கீசக வதம்' பற்றி தெரியுமாம். இப்ப சொல்லுங்க, எத்தனை பேருக்கு தெரியும்? தெரியும்னாலும் பரவாயில்ல, நான் சொல்லாம விடமாட்டேன்.
பாண்டவர்களுடைய கதை. இவங்க பாஞ்சாலியோடு 13 வருஷம் வனவாசம் போறாங்க. வனவாசத்தின் அது பதிமூணாவது வருஷம். அஞ்ஞாத வாசம். இந்த வருஷத்ல, அடையாளம் தெரியாம வாழணும்.
விராட நாட்டில் ஒரு அரண்மனைக்கு வர்றாங்க. அங்க சுதர்சனைன்னு ஒரு மகாராணியும், ராஜாவும் இருக்கிறாங்க. இந்த அரண்மனைலதான் பாண்டவர்களும், பாஞ்சாலியும் தங்கி வேலை செய்றாங்க. அதுவும் மாறுவேஷத்தில. தங்களை கூத்தாடிங்கன்னு சொல்லி, வேலைக்கு சேர்றாங்க. ஆளுக்கொரு வேலை செய்றாங்க.
பாஞ்சாலி, சைரேந்திரி என்கிற பேர்ல, மகாராணி சுதர்சனைக்கு வேலை செய்றாள். பீமன், வல்லன்னு பேர மாத்தி வச்சுட்டு சமையல்காரனா வேல செய்றான். தர்மன் பிரகனளை என்ற திருநங்கையாக விராட மன்னனுக்கு துணையாக இருக்கிறான்.
ஒரு படம்னா வில்லன் இல்லாமலா? வில்லன் இருந்தாதானே படம் நகரும். இருக்............கானே, சுதர்சனையின் சகோதரன் கீசகன். இவனுக்கு சைரேந்திரி மேல ஒரு இது. அவள் சகோதரியின் வேலைக்காரிதானே, ஈ............ஸியா அவளை அடஞ்சிறலாம் என்ற எண்ணத்தில், அவளை தன் ரூமுக்கு வரச்சொல்லி, கூப்ட்டு அனுப்புறான். அவளும் வர்றா. இவனுடைய தப்பான எண்ணத்தை தெரிஞ்சுகுறா, சைரேந்திரி. அவன்கிட்டே இருந்து தப்பிக்கிறா.
வல்லன்கிட்ட நடந்ததை சொல்லி, அவனை கொல்ல சொல்றா. வல்லனும், கீசகனை தந்............திரமாக நடன மாளிகைக்கு வரவைக்கிறான். கீசகனின் வருகைக்காக காத்துட்டு இருக்கான். எப்படி? ஒரு துணியை சுத்திகிட்டு, சைரேந்திரி மாதிரி.
கீசகன் வர்றான். சைரேந்திரியை நெருங்குறான். அடச்சே, இல்ல இல்ல வல்லனை நெருங்குறான். பக்கத்தில வர்றான்.
கும்மாங்குத்து, கும்மாங்குத்து, சதக் சதக். அவ்ளோதான். கீசகன் ஔட். கொன்னுட்டான். இல்ல இல்ல வதம் செய்றான். இது தா..........ன் கீசக வதம் படத்தின் கதை..................
நாடக நடிகர் ராஜு முதலியார் - கீசகன்
நாடக நடிகை ஜீவரத்தினம் - பாஞ்சாலி
தயாரிப்பு - ரங்கசாமி நடராஜ முதலியார்
நடராஜ முதலியார் பேசாத படங்களை பாத்துட்டு இருந்தார். பேசும் படம் எடுக்கணும்னு ஆசைப்பட்டாராம். ஸ்ட்டூவர்ட் ஸ்மித்னு ஒருத்தர். இவரை friend புடிச்சு வச்சுகிட்டார். இவர்கூட நடராஜ முதலியார் பூனாவுக்கு போயி, சினிமா எடுக்கிறதைப் பற்றி கொஞ்சம் கத்துட்டு சென்னைக்கு வந்தார். 'இந்தியா ஃபிலிம் கம்பெனி' னு சினிமா தொழில் பார்க்க ஆரம்பிச்சார். மூப்பனார்ட்ட 35 mm பேசாத பட வில்லியம்ஸன் கேமரா வாங்கினார். குடுத்து வச்.............ச கேமரா. கீசக வதம் இந்த கேமராதானே எடுத்துச்சு.
சிவாஜி நடிச்ச 'பாபு' படத்தில கீசக வதம் தெருக்கூத்து நாடகமாக நடிச்சிருக்காங்க. இதுல சிவாஜி - பீமன் ; நாகேஷ் - கீசகன் ; விஜயஸ்ரீ - சைரந்திரி ; VKR இவங்கல்லாம் நடிச்சிருந்தாங்க.
கீசக வதம் படம் எடுக்கிறதுக்கு நடராஜ முதலியார் 35,௦௦௦/- ரூபாய் செலவளிச்சாராம், அப்..........பவே, 1917லேயே. 35 நாள்ல எடுத்த படம். ஓஹோஹோ படம்.
அந்த காலத்திலெல்லாம், ஜனங்களுக்கு தெரிஞ்ச கதையை எடுத்தாத்தான் ஓடும். அதனாலதான் இப்படிப்பட்ட கதைங்களயா............. படமா எடுத்திட்டு இருந்தாங்க. இந்த ஆலோசனையை நடராஜ முதலியாருக்கு கொடுத்தது, அவருடைய நண்பர் பம்மலார்.
என்ன மூர்த்தி சார், சந்தோஷமா?
Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1257496by மூர்த்தி Today at 12:18 pm wrote:"நன்றாக இருந்தது. நன்றி.
தொடக்கத்தில் இருந்து தரலாமே. முதல் படம் கீசக வதம் 1918 ல் சலனப் பட ம்
ராஜ முதலியார் ஜீவரத்தினம் நடித்தது.1931 இல் காளிதாஸ் நடிகர்கள் பி.ஜி.வெங்கடேசன் - டி. பி. ராஜலட்சுமி. இப்படி வரிசையாக……..தொடரலாமே."
இது 'தெரிந்ததும் தெரியாததும்' பகுதியில் இருந்துச்சு. இப்போ சரியான இடத்துக்கு வந்திருக்கேன்.
"தவறாக நினைக்க வேண்டாம், சும்மா ஒரு ஆலோசனை தான்."
என்ன சார் நீங்க. இதுல தப்பா நெனச்சுக்கிறது என்ன சா..................ர் இருக்கு. உங்க கருத்தை சொல்றீங்க, அம்புட்டுதானே.
ஆனா ஒண்ணு சார், நீங்க சொன்ன படங்களை பற்றி எழுத நான் ரெடி. wikiயில கிடைக்கிற சில தகவல்கள் தப்பானதுன்னு சொல்றாங்க. அதனாலதான், இப்படிப்பட்ட தகவல்களை அதுலே இருந்து எழுதுறதில்ல.
பழைய படங்களை பற்றி எழுதுறேனே, அதெல்..............லாமே ஹிந்து பேப்பர்ல வந்தது. ஆனா இங்கிலிஷ்ல இருக்கு. நான் அதை மொழிபெயர்த்து எழுதுறேன். 343 படங்கள் இருக்கு. அதில 1934 ல இருந்துதானே இருக்கு.
நீங்க படத்தின் பேரை சொல்வீங்களா.................ம். அதை நான் தே.............டி, கெடச்............சா, எழுதுவேனாம். சரியா?
23. இப்போ கீசக வதம் 1918
தமிழ்ல மொத மொதலா...................... வந்த படம். இதிகாசங்களை படிச்சவங்களுக்கு 'கீசக வதம்' பற்றி தெரியுமாம். இப்ப சொல்லுங்க, எத்தனை பேருக்கு தெரியும்? தெரியும்னாலும் பரவாயில்ல, நான் சொல்லாம விடமாட்டேன்.
பாண்டவர்களுடைய கதை. இவங்க பாஞ்சாலியோடு 13 வருஷம் வனவாசம் போறாங்க. வனவாசத்தின் அது பதிமூணாவது வருஷம். அஞ்ஞாத வாசம். இந்த வருஷத்ல, அடையாளம் தெரியாம வாழணும்.
விராட நாட்டில் ஒரு அரண்மனைக்கு வர்றாங்க. அங்க சுதர்சனைன்னு ஒரு மகாராணியும், ராஜாவும் இருக்கிறாங்க. இந்த அரண்மனைலதான் பாண்டவர்களும், பாஞ்சாலியும் தங்கி வேலை செய்றாங்க. அதுவும் மாறுவேஷத்தில. தங்களை கூத்தாடிங்கன்னு சொல்லி, வேலைக்கு சேர்றாங்க. ஆளுக்கொரு வேலை செய்றாங்க.
பாஞ்சாலி, சைரேந்திரி என்கிற பேர்ல, மகாராணி சுதர்சனைக்கு வேலை செய்றாள். பீமன், வல்லன்னு பேர மாத்தி வச்சுட்டு சமையல்காரனா வேல செய்றான். தர்மன் பிரகனளை என்ற திருநங்கையாக விராட மன்னனுக்கு துணையாக இருக்கிறான்.
ஒரு படம்னா வில்லன் இல்லாமலா? வில்லன் இருந்தாதானே படம் நகரும். இருக்............கானே, சுதர்சனையின் சகோதரன் கீசகன். இவனுக்கு சைரேந்திரி மேல ஒரு இது. அவள் சகோதரியின் வேலைக்காரிதானே, ஈ............ஸியா அவளை அடஞ்சிறலாம் என்ற எண்ணத்தில், அவளை தன் ரூமுக்கு வரச்சொல்லி, கூப்ட்டு அனுப்புறான். அவளும் வர்றா. இவனுடைய தப்பான எண்ணத்தை தெரிஞ்சுகுறா, சைரேந்திரி. அவன்கிட்டே இருந்து தப்பிக்கிறா.
வல்லன்கிட்ட நடந்ததை சொல்லி, அவனை கொல்ல சொல்றா. வல்லனும், கீசகனை தந்............திரமாக நடன மாளிகைக்கு வரவைக்கிறான். கீசகனின் வருகைக்காக காத்துட்டு இருக்கான். எப்படி? ஒரு துணியை சுத்திகிட்டு, சைரேந்திரி மாதிரி.
கீசகன் வர்றான். சைரேந்திரியை நெருங்குறான். அடச்சே, இல்ல இல்ல வல்லனை நெருங்குறான். பக்கத்தில வர்றான்.
கும்மாங்குத்து, கும்மாங்குத்து, சதக் சதக். அவ்ளோதான். கீசகன் ஔட். கொன்னுட்டான். இல்ல இல்ல வதம் செய்றான். இது தா..........ன் கீசக வதம் படத்தின் கதை..................
நாடக நடிகர் ராஜு முதலியார் - கீசகன்
நாடக நடிகை ஜீவரத்தினம் - பாஞ்சாலி
தயாரிப்பு - ரங்கசாமி நடராஜ முதலியார்
நடராஜ முதலியார் பேசாத படங்களை பாத்துட்டு இருந்தார். பேசும் படம் எடுக்கணும்னு ஆசைப்பட்டாராம். ஸ்ட்டூவர்ட் ஸ்மித்னு ஒருத்தர். இவரை friend புடிச்சு வச்சுகிட்டார். இவர்கூட நடராஜ முதலியார் பூனாவுக்கு போயி, சினிமா எடுக்கிறதைப் பற்றி கொஞ்சம் கத்துட்டு சென்னைக்கு வந்தார். 'இந்தியா ஃபிலிம் கம்பெனி' னு சினிமா தொழில் பார்க்க ஆரம்பிச்சார். மூப்பனார்ட்ட 35 mm பேசாத பட வில்லியம்ஸன் கேமரா வாங்கினார். குடுத்து வச்.............ச கேமரா. கீசக வதம் இந்த கேமராதானே எடுத்துச்சு.
சிவாஜி நடிச்ச 'பாபு' படத்தில கீசக வதம் தெருக்கூத்து நாடகமாக நடிச்சிருக்காங்க. இதுல சிவாஜி - பீமன் ; நாகேஷ் - கீசகன் ; விஜயஸ்ரீ - சைரந்திரி ; VKR இவங்கல்லாம் நடிச்சிருந்தாங்க.
கீசக வதம் படம் எடுக்கிறதுக்கு நடராஜ முதலியார் 35,௦௦௦/- ரூபாய் செலவளிச்சாராம், அப்..........பவே, 1917லேயே. 35 நாள்ல எடுத்த படம். ஓஹோஹோ படம்.
அந்த காலத்திலெல்லாம், ஜனங்களுக்கு தெரிஞ்ச கதையை எடுத்தாத்தான் ஓடும். அதனாலதான் இப்படிப்பட்ட கதைங்களயா............. படமா எடுத்திட்டு இருந்தாங்க. இந்த ஆலோசனையை நடராஜ முதலியாருக்கு கொடுத்தது, அவருடைய நண்பர் பம்மலார்.
என்ன மூர்த்தி சார், சந்தோஷமா?
Heezulia
- GuestGuest
மகிழ்ச்சி.நன்றி. ஹரிதாஸ் மூன்று ஆண்டுகள் ஓடியாதாமே,எங்கோ படித்தது. அதைத் தொடர்ந்து தியாகராசரும் என்.எஸ்.கே யும் கொலைக்கு குற்றம் சாடடப்பட்டு சிறைக்கு 2 வருடங்கள் சென்றதாகப் படித்திருந்தேன்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017
22.01.2018
நானும் நிறைய இதை பற்றி படிச்சிருக்கேன். லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளரின் கொலை வழக்கில்தான் பாகவதரும், NSK யும் ஜெயிலுக்கு போனாங்களாம்.
ஹரிதாஸை பற்றியும் எழுதுறேன். கொஞ்சம் டைம் கொடுங்க. தேடணும்ல. கொஞ்சம் வேற வேலையும் இருக்கு.
இன்னொண்ணு நான் சொல்லணும். கீசக வதம் படத்தை பற்றி எழுதும்போது ஒரு விஷயத்தை சரியா கவனிக்காம தப்பா எழுதிட்டேன்.
Heezulia
நானும் நிறைய இதை பற்றி படிச்சிருக்கேன். லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளரின் கொலை வழக்கில்தான் பாகவதரும், NSK யும் ஜெயிலுக்கு போனாங்களாம்.
ஹரிதாஸை பற்றியும் எழுதுறேன். கொஞ்சம் டைம் கொடுங்க. தேடணும்ல. கொஞ்சம் வேற வேலையும் இருக்கு.
இன்னொண்ணு நான் சொல்லணும். கீசக வதம் படத்தை பற்றி எழுதும்போது ஒரு விஷயத்தை சரியா கவனிக்காம தப்பா எழுதிட்டேன்.
இதுலதான் ஒரு தப்பு நடந்துருச்சு. Friends சொன்னாங்க. அர்ஜுனன்தான் ப்ரஹன்னளையாக இருந்தானாம். ரெண்டு மூணு தளங்களில் உள்ளதை மாத்தி................... மாத்தி பாத்து எழுதிட்டு இருந்தேனா, அர்ஜுனன் தர்மனாகிட்டான்.by heezulia on Mon Jan 22, 2018
தர்மன் பிரகனளை என்ற திருநங்கையாக விராட மன்னனுக்கு துணையாக இருக்கிறான்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017
27.01.2018
24. பத்ம ஜோதி 1937
பத்மா - ஹீரோயின்
TM சங்கரன் - ஹீரோ ,
MS முத்துகிருஷ்ணன், TP மனோஜ்ராவ், அம்புஜம்
மாடர்ன் தியேட்டர்ஸ் TR சுந்தரம் தயாரிச்ச ரெண்டாவது படம். முதல் படம்? இதே வருஷத்தில ரிலீஸ் ஆன சதி அகல்யா.
பத்ம ஜோதி படத்ல, தமிழ் சினிமாவில முதல் முதலா, ஒரு புது அம்சத்தை கொண்டு வந்திருக்கார் சுந்தரம். இந்தியாவிலேயே முதல் முதலாககூட இருக்கலாமாம். அது என்னான்னா, அனிமேஷன். அனிமேஷன்னா அனிமேஷன் மா................திரி. அந்த காலத்தில அனிமேஷனா? நீங்க கேக்குறது எனக்கு கேக்குது.
படத்தின் டைட்டில்ல ஹீரோயின் பேர போடறாங்க. போட்றாங்களா, அந்த பேர் பக்கத்தில ஒரு பொண்ணோட கார்ட்டூன் மூஞ்சிய காட்டினாங்களாம். அந்த மூஞ்சி நவரசத்தையும் காட்டுச்சாம். தென்னிந்திய சினிமாவில அனிமேஷன் இல்லா........த காலத்தில, இப்படி ஒரு கார்ட்டூன் மூஞ்சிய காட்டியது புதுமையா இருந்திருக்கும்ல.
அனிமேஷன் கேமராவே... இல்ல. அப்ப எப்டீ இப்டீல்லாம் சுந்தரம் காட்டினார்? அதுக்குத்தான் இருந்துச்சாமே, 'Single frame exposure' னு ஒரு முறை. இந்த முறையை வச்சுதான், இந்தப் படத்தில நடிச்சவங்க பேருக்கு பக்கத்தில, அந்தந்த கேரக்டருக்கு ஏத்தமாதிரி, கார்ட்டூன் மூஞ்சிய காட்டினாங்களாம்.
பத்ம ஜோதி படத்துல ஹீரோயின் பத்மா, பானை செய்ற ஒரு ஏழையின் மகள். பானை செய்யும் போது பத்மா பாடுவாளாம். ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காதுல்ல. ஆனா அவ அப்பாவுக்கு இந்த பாட்டு தெரியாது போல. திட்றான். செஞ்ச பானைகளை எடுத்துட்டு பக்கத்து ஊரு மார்க்கெட்ல போயி வித்துட்டு வரச்சொல்லி அவளை அனுப்புறான்.
போற வழியில ஒரு பழத்தோட்டம். அங்க ஒரு இளைஞன். அவன் சும்மாவா நிக்கிறான். கல்லெடுத்து பழத்துல எறியிறான். சின்ன வயசுதானே, மரத்துல ஏர்றதுதானே. ஓஹோ, தோட்டத்துக்கு சொந்தக்காரன் இருப்பானே. கல்லெறிஞ்சா, தோட்டக்காரன் வரும்போது ஓடிறலாம்ல. மரத்து மேல ஏறினா, குதிச்சு ஓடுறது கஷ்டமாச்சே. அதனாலதான்.
அப்டீ அவன் எறிஞ்ச ஒரு கல்லு, பத்மா கொண்டு போன பானைகள்ல பட்டு, பானைங்க ஒடஞ்சுபோச்சு. அந்த இளைஞன், அவன் ஒடச்ச பானைங்களின் விலைய கொடுத்துர்றதா சொல்றான். ஆனா பத்மா பணத்தை வாங்கமாட்டேங்கிறா. அதுக்கு ஒரு காரணமும் சொல்றா. அவன் வேணும்னுக்கு செய்யலியாம். தெரியாத்தனமா நடந்துருச்சாம்.
ஆட்டோ.....மே........ட்டிக்கா, என்ன நடக்கும்? அவளோட இந்த குணம் அவனுக்கு புடிச்சு போச்சு. அவன் இதயத்துக்குள்ள அவள் போயி உக்காந்துட்டா. வழக்கம் போல ஒரு வில்லன் இருக்கான். அந்த ஊர்ல ஒரு பணக்காரன். அவன் பத்மா மேல ஆசப்பட்டுட்டான். ஆசைப்பட்டான்ல, சைட் அடிச்சுட்டு இருக்க வேண்டியதுதானே. அவளை kidnap செஞ்சுட்டான். எப்படியோ பத்மா அவங்கிட்ட இருந்து தப்பிச்சுட்டா. நே..................ர லவ்வர்ட்ட வந்து சேந்துட்டா.
ரெண்டு பேரும் தப்பிச்சு வர்ற வழியில ஒரு குடிசை இருக்கு. அதுக்குள்ள போய் ஒழிஞ்சுக்கிறாங்க. இதை அந்த பணக்காரனோட அடியாளுங்க பார்த்துர்றாங்க. சும்மாவிட்டங்களா? இல்லியே. குடிசையை கொளுத்திட்டாங்க. இதை கொஞ்ச பேர் பார்க்கிறாங்க. யாரு..................? ரோட்ல வித்தை காட்றவங்க. அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்திட்டாங்க.
காப்பாத்தினது மட்டுமில்லாம, அவங்க ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காப்பாத்த சொல்லி விட்டுட்டாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல என்ன செஞ்சாங்கன்னாக்கா, அவங்க ரெண்டு பேருக்கும் டும் டும் டும் கொட்டிட்டாங்க. அப்ப, அந்த காலத்திலேயே .................... ஆரம்பிச்சு வச்ச போலீஸ் ஸ்டேஷன் கல்யாணம்தான், இப்...............ப வரைக்கும் கண்ட்டின்யூ ஆயிட்டு இருக்கா.............?
இந்தப் படத்தில 25 பாட்டாம். அதுல ஒரு பாட்டு, பாரதமாதாவை போற்றி பாடுற பாட்டாம். இந்தப் படத்தை விளம்பரம் செய்யும்போது "இந்தியாவின் பிரச்சினைகளை எடுத்துக்காட்டும் படம்" னு சுந்தரம் விளம்பரப்படுத்தினாராம். சுமாராத்தான் ஓடுச்சாம், பத்மஜோதி படம்.
பத்மஜோதி கதை தேசப்பற்றை பற்றிய கதையாம். இசை நல்ல இருந்துச்சாம். அதுவும் தென்னிந்தியாவில் அனிமேஷன் டெக்க்குனிடன் வந்த படமா..........., அதனால ஓடுச்சாம்.
அந்த காலத்தில படத்தின் நீளம் குறைவா இருந்துச்சுன்னா, அதை சரி செய்றதுக்கு, இடைவேளைக்கு அப்புறம், ஏதா................வது ஒரு குட்...........டி காமெடி படத்தை தயாரிப்பாளர்கள் சேத்துப்பாங்கன்னு இந்தப் பகுதியிலேயே ஏற்கனவே சொல்லியிருக்கேன். மதுரம், NSK நடிச்சது, இந்த மாதிரி.
'சினிமா கதம்பம்'னு ஒரு கார்ட்டூன் படம். ஒரு பத்து நிமிஷம் ஓடின படமாம். 1947ல மிஸ் மாலினீன்னு ஒரு படம் வந்துச்சு. இந்தப் படத்ல, இந்தக் கார்ட்டூன் படத்தை காட்டினங்களாம். தென்னிந்திய தமிழ் சினிமாவில இப்படி முதல் முதலா கார்ட்டூன் படம் போட்டது. ஜெமினி ஸ்டூடியோஸின் SS வாசன். இதுதான் இந்தப் படத்தின் புதுமை. இதை செஞ்சது கார்டூனிஸ்ட் தாணு. இந்த பத்து நிமிஷ படத்தில நடிச்சவங்க யா................ரு...............? ஜெமினியின் மங்கம்மா சபதம் படத்தின் ஹீரோயின், ஹீரோதான். அதாங்க வசுந்தராவும், ரஞ்சனும்.
அப்புறமா 1960கள்ல, இதே..................மாதிரி முக்தா சீனிவாசன், கார்ட்டூன் படங்கள டைட்டில் பாட்ல போட்டு ஒரு படம் எடுத்தாரே, யோசிச்சு பாருங்க. நமக்கு இருக்கிற வேலையில, அதையெல்லாமா யோசிக்க டைம் இருக்கு! நானே சொல்லிர்றேன். சொன்ன பொறவு பாருங்க, அட இந்....................... த படம்தானான்னு நெனப்பீங்க. தேன்மழை. நான் நெனச்சது சரியா போச்சா? இந்தப் படம் எல்லாருக்கும் புடிச்ச படம்.
- ஹிந்து
Heezulia
24. பத்ம ஜோதி 1937
பத்மா - ஹீரோயின்
TM சங்கரன் - ஹீரோ ,
MS முத்துகிருஷ்ணன், TP மனோஜ்ராவ், அம்புஜம்
மாடர்ன் தியேட்டர்ஸ் TR சுந்தரம் தயாரிச்ச ரெண்டாவது படம். முதல் படம்? இதே வருஷத்தில ரிலீஸ் ஆன சதி அகல்யா.
பத்ம ஜோதி படத்ல, தமிழ் சினிமாவில முதல் முதலா, ஒரு புது அம்சத்தை கொண்டு வந்திருக்கார் சுந்தரம். இந்தியாவிலேயே முதல் முதலாககூட இருக்கலாமாம். அது என்னான்னா, அனிமேஷன். அனிமேஷன்னா அனிமேஷன் மா................திரி. அந்த காலத்தில அனிமேஷனா? நீங்க கேக்குறது எனக்கு கேக்குது.
படத்தின் டைட்டில்ல ஹீரோயின் பேர போடறாங்க. போட்றாங்களா, அந்த பேர் பக்கத்தில ஒரு பொண்ணோட கார்ட்டூன் மூஞ்சிய காட்டினாங்களாம். அந்த மூஞ்சி நவரசத்தையும் காட்டுச்சாம். தென்னிந்திய சினிமாவில அனிமேஷன் இல்லா........த காலத்தில, இப்படி ஒரு கார்ட்டூன் மூஞ்சிய காட்டியது புதுமையா இருந்திருக்கும்ல.
அனிமேஷன் கேமராவே... இல்ல. அப்ப எப்டீ இப்டீல்லாம் சுந்தரம் காட்டினார்? அதுக்குத்தான் இருந்துச்சாமே, 'Single frame exposure' னு ஒரு முறை. இந்த முறையை வச்சுதான், இந்தப் படத்தில நடிச்சவங்க பேருக்கு பக்கத்தில, அந்தந்த கேரக்டருக்கு ஏத்தமாதிரி, கார்ட்டூன் மூஞ்சிய காட்டினாங்களாம்.
பத்ம ஜோதி படத்துல ஹீரோயின் பத்மா, பானை செய்ற ஒரு ஏழையின் மகள். பானை செய்யும் போது பத்மா பாடுவாளாம். ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காதுல்ல. ஆனா அவ அப்பாவுக்கு இந்த பாட்டு தெரியாது போல. திட்றான். செஞ்ச பானைகளை எடுத்துட்டு பக்கத்து ஊரு மார்க்கெட்ல போயி வித்துட்டு வரச்சொல்லி அவளை அனுப்புறான்.
போற வழியில ஒரு பழத்தோட்டம். அங்க ஒரு இளைஞன். அவன் சும்மாவா நிக்கிறான். கல்லெடுத்து பழத்துல எறியிறான். சின்ன வயசுதானே, மரத்துல ஏர்றதுதானே. ஓஹோ, தோட்டத்துக்கு சொந்தக்காரன் இருப்பானே. கல்லெறிஞ்சா, தோட்டக்காரன் வரும்போது ஓடிறலாம்ல. மரத்து மேல ஏறினா, குதிச்சு ஓடுறது கஷ்டமாச்சே. அதனாலதான்.
அப்டீ அவன் எறிஞ்ச ஒரு கல்லு, பத்மா கொண்டு போன பானைகள்ல பட்டு, பானைங்க ஒடஞ்சுபோச்சு. அந்த இளைஞன், அவன் ஒடச்ச பானைங்களின் விலைய கொடுத்துர்றதா சொல்றான். ஆனா பத்மா பணத்தை வாங்கமாட்டேங்கிறா. அதுக்கு ஒரு காரணமும் சொல்றா. அவன் வேணும்னுக்கு செய்யலியாம். தெரியாத்தனமா நடந்துருச்சாம்.
ஆட்டோ.....மே........ட்டிக்கா, என்ன நடக்கும்? அவளோட இந்த குணம் அவனுக்கு புடிச்சு போச்சு. அவன் இதயத்துக்குள்ள அவள் போயி உக்காந்துட்டா. வழக்கம் போல ஒரு வில்லன் இருக்கான். அந்த ஊர்ல ஒரு பணக்காரன். அவன் பத்மா மேல ஆசப்பட்டுட்டான். ஆசைப்பட்டான்ல, சைட் அடிச்சுட்டு இருக்க வேண்டியதுதானே. அவளை kidnap செஞ்சுட்டான். எப்படியோ பத்மா அவங்கிட்ட இருந்து தப்பிச்சுட்டா. நே..................ர லவ்வர்ட்ட வந்து சேந்துட்டா.
ரெண்டு பேரும் தப்பிச்சு வர்ற வழியில ஒரு குடிசை இருக்கு. அதுக்குள்ள போய் ஒழிஞ்சுக்கிறாங்க. இதை அந்த பணக்காரனோட அடியாளுங்க பார்த்துர்றாங்க. சும்மாவிட்டங்களா? இல்லியே. குடிசையை கொளுத்திட்டாங்க. இதை கொஞ்ச பேர் பார்க்கிறாங்க. யாரு..................? ரோட்ல வித்தை காட்றவங்க. அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்திட்டாங்க.
காப்பாத்தினது மட்டுமில்லாம, அவங்க ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காப்பாத்த சொல்லி விட்டுட்டாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல என்ன செஞ்சாங்கன்னாக்கா, அவங்க ரெண்டு பேருக்கும் டும் டும் டும் கொட்டிட்டாங்க. அப்ப, அந்த காலத்திலேயே .................... ஆரம்பிச்சு வச்ச போலீஸ் ஸ்டேஷன் கல்யாணம்தான், இப்...............ப வரைக்கும் கண்ட்டின்யூ ஆயிட்டு இருக்கா.............?
இந்தப் படத்தில 25 பாட்டாம். அதுல ஒரு பாட்டு, பாரதமாதாவை போற்றி பாடுற பாட்டாம். இந்தப் படத்தை விளம்பரம் செய்யும்போது "இந்தியாவின் பிரச்சினைகளை எடுத்துக்காட்டும் படம்" னு சுந்தரம் விளம்பரப்படுத்தினாராம். சுமாராத்தான் ஓடுச்சாம், பத்மஜோதி படம்.
பத்மஜோதி கதை தேசப்பற்றை பற்றிய கதையாம். இசை நல்ல இருந்துச்சாம். அதுவும் தென்னிந்தியாவில் அனிமேஷன் டெக்க்குனிடன் வந்த படமா..........., அதனால ஓடுச்சாம்.
அந்த காலத்தில படத்தின் நீளம் குறைவா இருந்துச்சுன்னா, அதை சரி செய்றதுக்கு, இடைவேளைக்கு அப்புறம், ஏதா................வது ஒரு குட்...........டி காமெடி படத்தை தயாரிப்பாளர்கள் சேத்துப்பாங்கன்னு இந்தப் பகுதியிலேயே ஏற்கனவே சொல்லியிருக்கேன். மதுரம், NSK நடிச்சது, இந்த மாதிரி.
'சினிமா கதம்பம்'னு ஒரு கார்ட்டூன் படம். ஒரு பத்து நிமிஷம் ஓடின படமாம். 1947ல மிஸ் மாலினீன்னு ஒரு படம் வந்துச்சு. இந்தப் படத்ல, இந்தக் கார்ட்டூன் படத்தை காட்டினங்களாம். தென்னிந்திய தமிழ் சினிமாவில இப்படி முதல் முதலா கார்ட்டூன் படம் போட்டது. ஜெமினி ஸ்டூடியோஸின் SS வாசன். இதுதான் இந்தப் படத்தின் புதுமை. இதை செஞ்சது கார்டூனிஸ்ட் தாணு. இந்த பத்து நிமிஷ படத்தில நடிச்சவங்க யா................ரு...............? ஜெமினியின் மங்கம்மா சபதம் படத்தின் ஹீரோயின், ஹீரோதான். அதாங்க வசுந்தராவும், ரஞ்சனும்.
அப்புறமா 1960கள்ல, இதே..................மாதிரி முக்தா சீனிவாசன், கார்ட்டூன் படங்கள டைட்டில் பாட்ல போட்டு ஒரு படம் எடுத்தாரே, யோசிச்சு பாருங்க. நமக்கு இருக்கிற வேலையில, அதையெல்லாமா யோசிக்க டைம் இருக்கு! நானே சொல்லிர்றேன். சொன்ன பொறவு பாருங்க, அட இந்....................... த படம்தானான்னு நெனப்பீங்க. தேன்மழை. நான் நெனச்சது சரியா போச்சா? இந்தப் படம் எல்லாருக்கும் புடிச்ச படம்.
- ஹிந்து
Heezulia
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- GuestGuest
அனிமேஷன் முறை சலனப் படத்திலேயே வந்து விட்ட்து. இந்திப் படத்திலும் பாவித்துள்ளார்கள்.ஆனால் SFE இல் செய்திருப்பது அவரின் திறமையைக் காட்டுகிறது. பழைய படங்கள் பல அழிந்து விட்டன . பார்க்க முடியாது.இப்படி எழுதுவதை வைத்து தெரிந்து கொண்டால் சரி.நன்றி பல. தொடருங்கள்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017
28.01.2018
முத்து சாரும், மூர்த்தி சாரும் நான் எழுதுறதை படிக்கிறது சந்தோ................ஷமா இருக்கு. பூஸ்ட் குடிச்ச மாதிரி தெம்பு வருது.
நன்றி.
Heezulia
முத்து சாரும், மூர்த்தி சாரும் நான் எழுதுறதை படிக்கிறது சந்தோ................ஷமா இருக்கு. பூஸ்ட் குடிச்ச மாதிரி தெம்பு வருது.
நன்றி.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017
28.01.2018
முத்து சாரும், மூர்த்தி சாரும் நான் எழுதுறதை படிக்கிறது சந்தோ................ஷமா இருக்கு. பூஸ்ட் குடிச்ச மாதிரி தெம்பு வருது.
நன்றி.
Heezulia
முத்து சாரும், மூர்த்தி சாரும் நான் எழுதுறதை படிக்கிறது சந்தோ................ஷமா இருக்கு. பூஸ்ட் குடிச்ச மாதிரி தெம்பு வருது.
நன்றி.
Heezulia
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நீங்கள் ஒவ்வொரு பதிவுகளை எவ்வளவு நேர்த்தியாக சிரத்தை எடுத்துக் கொண்டு
அதிக நேரம் கவனமாக பதிவு செய்கிறீர்கள்
பாராட்டுக்கள் தொடருங்கள்.
நன்றி
பேபி
அதிக நேரம் கவனமாக பதிவு செய்கிறீர்கள்
பாராட்டுக்கள் தொடருங்கள்.
நன்றி
பேபி
- Sponsored content
Page 8 of 17 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 17
|
|