புதிய பதிவுகள்
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:59 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 12:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
33 Posts - 54%
heezulia
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
16 Posts - 26%
Dr.S.Soundarapandian
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
8 Posts - 13%
Abiraj_26
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
2 Posts - 3%
SINDHUJA Theeran
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
286 Posts - 36%
ayyasamy ram
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
259 Posts - 33%
Dr.S.Soundarapandian
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
13 Posts - 2%
M. Priya
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க


   
   

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3715
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 19, 2017 12:54 am

First topic message reminder :

18 .12 .2017

இது ஒரு புதிய முயற்சி.

ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.

ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.


காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.

அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.

அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.

அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.

அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.

ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.

என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி

"என் வீரத்தின் மீதாணை"

இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.

தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.

அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.

அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.

காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.

அரசி : வரச்சொல் சபைக்கு.

காவலாளி : உத்தரவு.

ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?

அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.

சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.

புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.

அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?

புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.

அரசி : ஏனப்படி?

புலவர் : காரணம் புரியவில்லை

அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?

புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.

அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.

புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.

அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]

ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?

புலவர் : இதே ஊர்.

ப்ரதம தளபதி : பெயர்?

புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.

ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?

புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு

ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?

புலவர் : இல்லை

ப்ரதம தளபதி : சகோதரர்?

புலவர் : அனாதை

ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?

புலவர் : எமக்குத் தொழில் கவிதை.

ப்ரதம தளபதி : அடுத்து?

புலவர் : ஆண்டவன் தொண்டு

ப்ரதம தளபதி : இதற்கு முன்?

புலவர் : பிறப்பால் ஊமை.

ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?

புலவர் : கலைவாணியின் அருளால்.

ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.

புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?

ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.

புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.

அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,

அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.

புலவர் : அரசி

அரசி : ஆட்சிக்கிலக்கணம்?

புலவர் : ஆணவமற்ற அரசு.

அரசி : புலவனின் உரிமை?

புலவர் : சுதந்திரப் பறவை.

அரசி : இதயத்தை மகிழ்விப்பது?

புலவர் : குழந்தையின் மழலை

அரசி : வேதனை தருவது?

புலவர் : நண்பனின் பிரிவு.

அரசி : நட்புக்குயர்வு?

புலவர் : இடுக்கண் களைவது.

அரசி : எண்ணக்கூடாதது ?

புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]

அரசி : பொருளில்லாதவர்க்கு?

புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.

அரசி : அருளில்லாதவர்க்கு?

புலவர் : எவ்வுலகமுமில்லை.

அரசி : எங்கும் வேண்டுவது?

புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.

அரசி : உயர்வுக்கு வழி?

புலவர் : உண்மையும், சத்தியமும்.

ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?

புலவர் : கவிஞனின் காவியம்

அரசி : அழிந்து விடுவது?

புலவர் : நிலையற்ற செல்வம்

ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?

புலவர் : பேச்சைக் குறைப்பது.

ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?

புலவர் : பொன்னேட்டில் இருப்பது.

அரசி : புவியாள்பவர் முடிவு?

புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.

ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?

புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?

புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்

தளபதி : கேட்கத் தகாதது ?

புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.

ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?

புலவர் : அடக்கமில்லாமை

அரசி : அதற்குதாரணம் ?

புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.

ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி

பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.

அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.

அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.

புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?

அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?


புலவர் :   ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.

ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.

புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.

அரசி : எப்படி?

புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.

ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.

புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.

தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.

புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.

Heezulia மீண்டும் சந்திப்போம்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3715
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 17, 2018 12:34 pm

17.04.2018

முழுஸ்...............சும் படிச்சிட்டீங்களா செந்தில். விசு படம்னு சொன்னேனே. சரி இன்னொரு க்ளூ. கார்த்திக் நடிச்சிருக்கார். இப்ப ட்ரை பண்ணுங்க.


Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Apr 17, 2018 5:55 pm

கண்டுபிடிக்க முடியவில்லை



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3715
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 17, 2018 11:48 pm

17.04.2018 

தர்ம பத்தினி 1986 

கார்த்திக் – இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார்  
ஜீவிதா - ஸப் இன்ஸ்பெக்டர் வித்யா
விசு – டிஃபென்ஸ் லாயர் வரதராஜன்  
கிஷ்மு – அரசாங்க வக்கீல்
VR திலகம் – ஜட்ஜ்
சந்திரசேகர் – பிரபாகர்
சார்லி - MLA பாளயம்  
ராமலிங்கம் – ஹோட்டல் மேனேஜர்




Heezulia  மீண்டும் சந்திப்போம்  

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Apr 18, 2018 9:25 am

நன்றி நன்றி



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3715
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 19, 2018 8:48 pm

19.04.2018 

இந்த பகுதியை 18.12.2017 லே இருந்து இது வரைக்கும் 2103 பேர் படிச்சிருக்கீங்க. இங்க எழுதினதுக்கப்புறம் பார்த்தா கூட ரெண்டு பேர் படிச்சிருக்கீங்க. ஆ............க, 2015 பேர். எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? 

தர்ம பத்தினி வசனங்களை அனுப்பினத, ஏ......................ழு பேர் பாரா.....................ட்டி வாழ்த்து சொல்லியிருந்தாங்க. அவங்கள்ல ஒரு நண்பர், அதுக்கு மேல என்ன நடந்சுன்னு சொன்னா நல்லா இருக்கும்னு கேட்டார். அவருக்கு அனுப்புறதுதான் அனுப்புறேன், இங்கேயும் அனுப்பி வைக்கலாமேன்னு அனுப்பி வைக்கிறேன்.
அரசாங்க வக்கீல் சொன்னார்ல, 

“இனிமே குறுக்கு விசாரண செய்ய வேண்டியது அவங்க புருஷன்தான்”னு. 

ஆனா இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் அவரோட மனைவி வித்யாவை விசாரிச்ச ஸீன் இல்ல. ஜட்ஜ் சொன்ன தீர்ப்புதான் இருக்கு. அதை எழுதுறேன். விசு இந்த கோர்ட் ஸீன்ல மட்டும்தான் வர்றார்.

ஜட்ஜ் : இதுவரை வழக்கறிஞர்களின் வாதங்களை அடிப்படையாக கொண்டு தீர்ப்புகள் வழங்கி வந்த இந்த நீதிமன்றம், இப்போது முதல் முறையாக, ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிற எண்ணத்தில் பகிரங்...கமாக உண்மையை ஒப்புக்கொண்ட, ஒரு பெண்ணின் த்யாகத்தை அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்குகிறது. கொலை நடந்ததாக சொல்லப்பட்ட அந்த இரண்டு மணி நேரமும், குற்றம் சாற்றப்பட்ட பிரபாகர், கொலை நடந்த இடத்தில் இல்லை என்பதும், இந்த கொலைகளை அவர் செய்திருக்க முடியாது என்பதும், திருமதி வித்யாவின் சாட்சியத்தின் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி இருப்பதால், இந்த வழக்கிலிருந்து நான் அவரை, விடுதலை செய்கிறேன்.
 
ப்ரபாகரன் சாட்சி கூண்ட்ல நின்னுகிட்டு, கண்ணீரை துடைக்கிறான்.
 
அடுத்த ஸீன்
 
வித்யா வீடு. அவள் பால் கொண்டு வந்து அவங்க அக்காட்ட குடுக்கிறா.

வித்யா : அக்கா இந்தா பால் சாப்டு.

அக்கா கோபமாக : எத்தன நாளாடி இந்த தொடர்பு?

அக்கா பால் டம்பளரை தட்டி விட்றா. வித்யா முகதல பயமும், திகைப்பும். அங்க உக்காந்திருந்த ப்ரபாகரும் திகைத்து பார்க்கிறான்.

அக்கா : குடிய கெடுத்திட்டியேடி. ஒன்ன தாயா நெனச்சிகிட்டு இருந்தேன். கடைசியில சக்..............களத்தி ஆயிட்டியேடி.

பிரபாகர் கோபமா எந்திரிச்சு வந்து, மனைவியை பளா....................ர். அக்கா மெதுவ்............வா திரும்பி புருஷனை பார்க்கிறா.

ப்ரபாகர் : தாலிபிச்ச கொடுத்தவளயே தாசியாக்கிட்டியேடி சண்டாளி. அவள பத்தி கேவலமா பேசினே, ஒன்நாக்கு அழுகி போய்டும்.

வித்யாவை பார்த்து : எவ்ளோ பெரிய பொய்ய சொல்லிட்ட பாத்தியா? எல்லாரோட சம்மதத்தோடதான் கோர்ட்ல பொய்சாட்சி சொல்ல போறேன்னு என்ன ஏமாத்திட்டியே. இது பொய்யின்னு தெரிஞ்சிருந்தா இதுக்கெல்லாம் நான் உடன்பட்டிருக்கவே மாட்டேனேம்மா. கடைசில நீயே ஒன்தலைல மண்ண வாரி போட்டுகிட்டியே.

அக்கா : ஆஹாஹா, நல்லா நடிக்கிறீங்க. நீங்க தூக்குல தொங்கி செத்துற கூடாதுங்றதுக்காக, கோர்ட்ல வந்து அந்த அசிங்கத்த ஒத்துகிட்டா.

வித்யா அமைதியா, கண்ணை மூடி அழுறா. 

அக்கா : இப்போ, நீங்க ரெண்டு பேரும் உத்தமங்கன்னு எங்கள நம்ப வக்றதுக்காக இப்டி ஒரு நாடகம். ரொம்..........ப நல்லாருக்கு.

ப்ரபாகரன் : ச்சீ, வாய மூடு. ஒன்ன படச்ச ப்ரம்மாவே வந்து சொன்னாலும் நீ நம்பமாட்டே. ஆனா வித்யா களங்கமில்லாதவன்னு ஒனக்கு புரிய வக்கதான் போறேன். அதா நிரூபிச்சதுக்கப்புறம்தாண்டி ஓம்மூஞ்சிலியே முழிப்பேன்.

சொல்லிட்டு வெளியே போய்ட்டான். இவ்.............ளத்தையும் ஒரு பெரியவர், பூர்ணம் விஸ்வநாதன், சேர்ல உக்காந்து பாத்துட்டு இருக்கார். அவர் வித்யாவின் அப்பா. ப்ரபாகர் வெளிய போறதையே பாக்குறாரு. வித்யா அழுதுட்டு அப்பா பக்கத்தில வந்து,

வித்யா : அப்பா, அக்கா சொன்னதெல்லாம் கேட்டீங்களாப்பா.

அப்பா கிண்டலா : என்ன என்ன, என்ன சொல்லிட்டா? அவ ஒண்ணும் தப்பா சொல்லலியே. [இப்ப கோபமா] சரியாத்தான் சொன்னா. வேறெப்டி சொல்வா, சொல்லு பாப்போம். நீ செஞ்ச காரியத்துக்கு, ஒன்ன தலைல தூக்கி வச்சா கொண்டாடுவாங்க சொல்லு பாப்போம்.

வித்யா விசும்பி விசும்பி : அப்பா, அத்தான் நிரபராதிங்க்றது ஒங்களுக்கு தெரியும், எனக்கு தெரியும். ஏன், அந்த ஆண்டவனுக்கே தெரியும். ஆனா, சட்டத்தின் கண்களுக்கு அவர் குற்றவாளி ஆயிட்டாரே. நீதிமன்றத்தில தர்மம் ஜெயிக்கல, ஞாயம் ஜெயிக்கல, பொய்தானே ஜெய்ச்சுது. அந்த பொய்ய இன்னொரு பொய்யாலதான் ஜெயிக்க முடியும்னுங்கற நிர்பந்தம். எனக்கு இத தவ்ற வேற வழியே தெரியாம போய்டுச்சு. இது தப்பாப்பா?

அப்பா : ஒருத்தர தூக்குல இருந்து காப்பாத்றதுக்காக, ஒரு குடும்பத்தயே தூக்குல போட்டுட்டியே. [லே..............சா அழுறார்] இந்த குடும்பத்தோட மானம், கௌரவம், எல்லாத்தயும் கப்பலேத்தி விட்டுட்டியே சனியனே.

வித்யாவை இப்டி திட்டிட்டு திரும்பி பாக்குறார், வாசல்ல வித்யாவின் புருஷன் ப்ரேம்குமார். கைய ரெண்டையும் பின்னால கட்டிட்டு, அமைதியா உள்ள வர்றார். வித்யாவின் அப்பா பக்கத்தில வந்து நின்னு,

ப்ரேம்குமார் : வித்யாவோட த்யாகத்த உங்களால்லாம் புரிஞ்சுக்க முடியாது மாமா.

வித்யாவும், அப்பாவும் பிரேம்குமாரை ஆச்சரியா பாக்குறாங்க.

ப்ரேம்குமார் : அதுக்கு பெரீய மனசு. ஞாயமா பாத்தா, ஒங்க எல்லாரையும் விட பலவிதத்லயும் பாதிக்கப்பட்டவன் நாந்தான். ஆனா வித்யாவோட த்யாகத்த நெனச்சு, நான் ரொம்.............ப பெருமபட்றேன்.

அப்பா மெது...................வ்வா சேர்ல இருந்து எந்திரிக்கிறார்.

ப்ரேம்குமார் : ஒரு உயிர காப்பாத்றதுக்காக இவ்ளோ பெரீய பழிய சொமக்கணும்னா, [வித்யாவை பார்த்து] ஷீ இஸ் ரியலி க்ரேட்.

வித்யா அழுறா. புருஷன் கால்ல விழுறா. அவன் அவளை தூக்கி விட்டு,

ப்ரேம்குமார் : இவங்கல்லாம் ஒன்ன அவமானச்சின்னமா நெனச்சதுக்கப்புறம், இங்க ஒரு நிமிஷம்கூட இருக்கக்கூடாது.

மனைவியின் கண்ணீரை தொடச்சு விட்றான். அவளை அணச்சு கூட்டிட்டு போறான்.

அப்புறமாவுள்ள வீடியோவை பார்த்தா, ப்ரேம் பேசினதெல்லாம் பொய்யோ............ பொய்யின்னு தெரிஞ்சுது.





Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3715
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 20, 2018 12:48 pm

20.04.2018 
இந்த பகுதியை 18.12.2017 லே இருந்து இது வரைக்கும் 2103 பேர் படிச்சிருக்கீங்க. இங்க எழுதினதுக்கப்புறம் பார்த்தா கூட ரெண்டு பேர் படிச்சிருக்கீங்க. ஆ............க, 2015 பேர். எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? 
நான் கணக்கை தப்பா போட்டிருக்கேனே, யாரும் கவனிக்கலியா? 
மொதல்ல  2103 படிச்சாங்க, அதுக்கப்புறமா ரெண்டு பேரு கூட படிச்சாங்க, ஆக 2105 னுல்ல சொல்லியிருக்கணும். ஆனா 2015 ன்னு தப்பா எழுதிட்டேன். சரி பரவாயில்ல. யாரும் கண்டுக்கல. இப்ப பார்த்தா 2141 பேர். நேரம் கடத்தாம சீக்கிரமா இதை அனுப்பிச்சிறணும். இல்லேன்னா படிச்சவங்க எண்ணிக்கை கூடிகிட்டே போகும். நான் உக்காந்து நம்பரை மாத்திக்கிட்டே................. இருக்க வேண்டியதுதான். 

அதுக்கப்புறம் ஒரு நண்பர் கேட்டார். அந்த "பொய்யோ.................... பொய்யி" என்னதுன்னு. அவருக்கு அனுப்ப எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன்.  கலரிங் செஞ்சு அனுப்பிய வேண்டியதுதான் பாக்கி.

சந்தோஷத்துடனும், ஆச்சரியத்துடனும். 
Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Apr 20, 2018 12:53 pm

சூப்பருங்க சூப்பருங்க



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3715
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 14, 2018 9:02 pm

14.05.2018

எதிரொலி 1970

நான் வசனங்களை அனுப்பி, அது எந்தப் படம், வசனங்களை பேசியது யார் யார்னு கேட்டு, அதுக்கு விடை தெரியாம இருக்கிறதுக்கு பதிலா, அந்த வசனங்களை படிச்சி ரசிக்கிறவங்க ரசிக்கட்டுமேன்னு நெனச்சுட்டேன். காமெடி, சென்ட்டிமென்ட் எல்லாமே இருக்கும். இதோ படிச்சு, இஷ்டப்பட்டவங்க ரசிங்க. ஆனா சினிமா கேரக்டர்லதான் வசனங்கள் எழுதுவேன். கடே....................சில யார் யார்னு சொல்றேன்.

இதுல ஒரு கணவன் – கான்ஸ்டபில் ; அவன் மனைவி – தொளசி ; அண்ணன், தங்கச்சி, இவள் காதலன்  

ஒரு மனைவி கணவனை திட்றா. இல்ல அவன்ட்ட கோபமா பேசுறா. அடடா, இதுதான் திட்றதோ? சரி, என்னவோ ஒண்ணு. ரெண்..........டு பேரும் பயங்கரமா சண்ட போட்டுகிறாங்க, வாயால. படிங்க.

மனைவி : உங்க கூட படிச்சவங்கல்லாம் இன்னிக்கி எந்த நெலமைல இருக்காங்க? க்ரிமினல் லாயர் சங்கரனும், சர்க்கார் தரப்பு வக்கீல் ராகவனும் உங்க கூட படிச்சவங்கதானே. அவங்க எப்டி இருக்காங்க? நீங்க எப்டி இருக்கீங்க?

கணவன் : அவங்க அவசரப்பட்டு பாஸ் பண்ணிட்டாங்க. நான் பெயில் ஆய்ட்டேன். பன்னெண்டு வருஷமா, இதே.................... கான்ஸ்டபிள். ப்ரமொஷனே கெடயாது. நல்................ல கஞ்சி போட்ட காக்கி சட்ட.

கணவன் : அதுல......................., எங்க டிபார்ட்மெண்ட்ல என்ன ப்ரமோஷன் வந்தாலும், இதே................... கஞ்சி போட்ட காக்கி சட்டதான்.

மனைவி : இனி கஞ்சிக்கே வழியில்ல.

கணவன் : சட்ட தொங்குதே.

மனைவி : பதிலுக்கு பதில் பேசாதீங்கோ. அவங்கல்லாம் இப்டி இருக்காங்களேன்னு உங்க்ளுக்கு கொஞ்.....சமாவது சொரண இருக்குதா?

கணவன் : தெனோம், இந்த கேள்விய ஒரு தடவ கேட்றணுமா?

மனைவி : கேப்பேன். ஒங்க்ளுக்கு சொரண வர்ற வரையிலும் கேப்.......பேன்.

கணவன் : இப்டி பேஸ்றியே, ஏண்டி சொர்ணங்கறது ஊர்ல இருக்ற ஓந்தம்பீன்னு நெனச்சியா சொன்ன ஒட்ன வர்றதுக்கு? சொரணடி.............. வரும்போத்தான் வரும்.

மனைவி : ஒரு DSP ஆக வேண்டாம். ஒரு இன்ஸ்பெக்டர் ஆககூடாது?

கணவன் : நானா மாட்டேங்கறேன்.

மனைவி : கேஸு புடிக்கணும்.

கணவன் : எப்டி புடிக்றது? பண்றவன் பூ..................ரா தலமறவா பண்றான். கண்ணுக்கு முன்னால பண்ணா கெடக்கலாம், கேஸ் கெடக்க மாட்டேங்குது.

மனைவி : நான் வேண்ணா ஒண்ணு செய்றேன். நான் யாரயாவது கொன்னுர்றேன். நீங்க என்ன போலீஸ்ல புடிச்சு குடுத்துர்ங்க. ஒங்க்ளுக்கு ப்ரொமோஷன் கெடக்கும். [color:a51b= #009900][அழுறா] தூக்ல தொங்க்றதுக்கு முன்னால, ஒங்க்ள இன்ஸ்பெக்டர் ட்ரெஸ்ல பாத்துட்டு, நான் செத்து போறேன்.
[விசும்புறா]

கணவன் : ஏண்டி, இன்ஸ்பெக்டரா இருக்றவன் பூ.............ரா கொல கேஸு புடிச்சவங்றியா? என்ன இன்ஸ்பெக்டரா பாக்கணும். அவ்ளதானே? பாப்பே. [இப்போ இவன் விசும்புறான்]

அடுத்த ஸீன்

ஒரு பஸ் இஸ்டாப்பு. ஒரு பொண்ணு நிக்கிறா. கொஞ்ச தூரம் தள்ளி, அந்த பொண்ணுக்கு பின்னால ஒரு பையன். இந்த பொண்ணு குனிஞ்சு திருட்டுத்தனமா அவனை பாக்க, அவன் அசடு வழிஞ்சு இவள பாக்க. அவ அப்பப்போ வாச்சை பாக்றா. அவனும் வாச்சை பாக்றான். அவனுக்கு ஒரு ரோசன. வாச்சை கழத்தி, பாக்கெட்ல போட்டுகுறான்.

மெதுவ்................வா அவ பக்கத்ல வர்றான். செருமுறான்.

அவன் : எக்சூஸ் மி மேடம்.

அவ திரும்பி மொறக்கிறா. மேடம்னு சொல்லிட்டானாம்.

அவன் : சாரி மிஸ். [அவள் வாச்சை காட்டி] ஒங்.......க வாச்ல டைம் என்னாச்சு?

அவள்  தன் வாச்ச பார்த்து : நைன் தேட்டி.

அவன் : நீங்க எந்த பஸ்ஸுக்காக காத்துகிட்ருக்கீங்க?

அவள் தெனாவட்டா : நீங்க அத அவசியம் தெரிஞ்சுக்கணுமோ?

அவன் : தெரிஞ்சுகிட்டா ஒண்ணும் பெரிய தப்புல்ல.

அவள் : பெரிய தப்புல்ல.

அவன் : ஒங்க்ளுக்கு இஷ்டமில்லேன்னா நான் வற்புறுத்தல.

அவள் அவனை ஒரு மாதிரியா பாத்துட்டு : இஷ்டமில்ல.

அவன் : இப்டி சொன்னா நான் வருத்தபடுவேன்னு நெனச்சீங்களா? நீங்க பேசுனாலே எனக்கு சந்தோஷந்தான். இல்ல......... வழக்கமா ஒண்ணாம் நம்பர் பஸ்ஸுல போவீங்களே. நீங்க வந்ததுக்கப்புறம் அது வந்துச்சே அதுல போலியே அதான் கேட்டேன்.

அவள் : அதுல கூட்டம் அதிகமா இருந்துது. அடுத்த பஸ் வரட்டுமேன்னு காத்துகிட்ருந்தேன். இது ஒரு தப்பா?

அவன் : இது ஒண்ணும் பெரிய தப்புல்ல.

ரொம்ப தூரத்தில, அவங்க நிக்கிற பஸ் ஸ்டாப்புக்கு எதித்தாப்புல ஒரு கார் நிக்கிது. அதுல ஒருத்தன் உக்காந்துட்டு, அவங்க பேசுறத கேக்க முடியலேன்னாலும், அவங்கள கவனிச்சிட்ருக்கான்.

அடுத்த ஸீன்.

அவள் அண்ணன் ஒரு வக்கீல். பஸ் இஸ்ட்டாப்புக்கு எதுத்தாப்புல கார்ல இருந்து கவனிச்சிட்டு இருந்தானே ஒருத்தன், சாட்சாத் அவனேதான் இந்த அண்ணன்.

வீட்ல உள்ள அவன் ஆஃபிஸ் ரூம்ல உக்காந்திருக்கான். அவள் யாரோக்கோ ஃபோன் டயல் செய்றா. அண்ணன் அவளை திரும்பி பாக்குறான். அப்புறம் அண்ணனை கடந்து போறா.

அண்ணன் : கல்பனா.

தங்கச்சி : என்னண்ணா?

அவள் அண்ணன் பக்கத்ல வர்றா. அண்ணன் அவளை பாசமாவும், சந்தேகத்தோடும் பாக்குறான்.

தங்கச்சி : என்னண்ணா அப்டி பாக்குறீங்க?

அண்ணன் : ஓங்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி கேக்கணும்.

தங்கச்சி : என்னது, கேளுங்களேன்.

அண்ணன் : நீ காலேஜுக்கு ஸிட்டி பஸ்லதானே போறே?

தங்கச்சி : ஆமா

அண்ணன் : பஸ் ஸ்டாண்ட்ல வெய்ட் பண்ணி, க்யூல நிண்ணு காலேஜ்க்கு போறது ஒனக்கு கஷ்ட்.......................டமா இல்ல?

தங்கச்சி : அ அ அ அது

அண்ணன் : கஷ்டமா இர்ந்தாலும் பரவாயில்ல பஸ்ல போகவேணான்னு சொல்லிடாதீங்க, அததான சொல்ல போற?
தங்கச்சி : இல்லேண்ணா. எனக்கூட பஸ்ல போறது கொஞ்...சங்கூட புடிக்கல. அத்தான் சொல்லணும்னு ரொம்ப நா.....ளா நெனச்சுட்ருக்கேன் நானு.

அண்ணன் : அப்போ?

தங்கச்சி : எனக்கொரு சைக்கிள் வாங்கி குடுத்ருங்க. எந்த தொந்த்ரவுமில்லாம, காலேஜ்க்கு போய்ட்டு வந்துர்றேன்.

அண்ணன் அவளை ஒரு மாதிரியா பாக்குறான்.

அண்ணன் : ஓ...... பஸ்ல போறது ஒனக்கு தொந்.....ரவா இருக்கு இல்லயா?

தங்கச்சி : ஆ........மாண்ணா.

அண்ணன் : வெரிகுட். நாளக்கே ஒனக்கொரு சைக்கிள் வாங்கி குடுத்துர்றேன்.

தங்கச்சிக்கு சந்தோ................சம்.


தங்கச்சி : ரொம்................ப தாங்க்ஸ். அவள் அங்க இருந்து போய்ட்டா.

அண்ணன் : பையன் சைட்லருந்துதான் ஒரு தலைக்காதல். தருதல.

அடுத்த ஸீன்  

ஒரு சைக்கிள் நிக்கிது. அந்த பஸ் இஸ்ட்டாப் அவன் சைக்கிள்ல, இங்க நிக்கிற சைக்கிள பாத்து வர்றான். சைக்கிள விட்டு எறங்கி, சுத்துமுத்தும் பாக்குறான். அங்க அந்த பஸ் இஸ்ட்டாப் அவள், அத்தாங்க, அந்த தங்கச்சி புல் தரையில உக்காந்துட்டு இருக்கா. இவனை பாத்து சிரிக்கிறா. அவன் அவ பக்கத்தில ஓடிப்போயி, அவளுக்கு கைய குடுக்கிறான். அவளும் அவன் கைய புடிச்சுட்டு எந்திரிக்கிறா.

அப்புறம் என்ன, ரெண்டு பேரும் டூயட் பாட்றாங்க. என்ன பாட்டுக்கு?


“குங்குமச் சிமிழில் மாதுளை மொட்டுக்கள் கொட்டி கிடப்பதென்ன?”

அடுத்த ஸீன்

அந்த போலீ..................ஸ்கார கணவன், கான்ஸ்டபிள் யூனிபாம்ல வர்றான். அவன் வீட்டுக்குத்தான். வீட்டு வராண்டால, மெதுவ்...............வா அடிமேல் அடி எடுத்து, முன்ன பின்ன பாத்து பாத்து நடந்து வர்றான். அவன் இடுப்புல பையி. ஜன்னல் பக்கமா வந்து உள்ள எட்டி பாக்குறான். உள்ள பொண்டாட்டி. சட்டுன்னு ஜன்னல சாத்துறான்.

கணவன் : இன்ஸ்பெக்டர் வேலைதான் கெடக்கல. வேஷமாவது கட்டுவோம். தொளசி............ தொளச்சு எடுக்குறா. அவ ஒபத்ரவம் தாங்.........க முடியல.

போலிஸ் தொப்பிய கழட்டி கீழ வைக்கிறான். பையில இருந்த இன்ஸ்பெக்டர் தொப்பிய எடுத்து தலைல வச்சுகிறான். இன்ஸ்பெக்டர் யூனிஃபாமை எடுத்து போட்டுகுறான். அந்த பையையும் எடுத்துல இடுப்பில வச்சுகிறான்.


கணவன் : வரும்போது இன்ஸ்பெக்டர். போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும்போது கான்ஸ்டபிள்.

நெஞ்சுல தட்டி தட்டி சொல்றான். ஞாபகத்ல இருக்கணுமாம்.


கணவன் : வரும்போது இன்ஸ்பெக்டர். போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும்போது கான்ஸ்டபிள். [வெறப்பா] இன்ஸ்பெக்டர்.

அட்ட்டேன்ஷன்ல நிக்கிறமாதிரி காலை தட்றான். இருமல் வருது. சமாளிச்சுட்டு வீட்டுக்குள்ள போறான். மார்ச் பண்ணிட்டே போறான்.


கணவன் : தொள்சி.................. சீக்கா தொள்சி. இந்த வந்து பாரு யார் வந்த்ருக்காங்கன்னு.

தொளசி ஓடி வர்றா. அவன் பக்கத்ல வந்து, அவன் யூனிஃபாமை தொட்டு பாத்து, சந்தோஷமா பேசுறா.

தொளசி : ஹி ஹி ஹி என்னங்க இது?

கணவன் : [அவள் தோள்ல சாஞ்சு] ஒன் ஆசய நிறைவேத்திட்டேம்மா. [தலையை தூக்கி]  நான் இன்ஸ்பெக்டர் ஆய்ட்டேன்.

தொளசி : எப்ப ஆனீங்க?

கணவன் : இப்பதான், திண்ணைல.

தொளசி : என்னது?

கணவன் : அ அ சென்னைல. அங்க்ருந்துதான் ஆட்ரே [order] வந்துச்சு.

தொளசி கை வெரல்கள்ல சொடக்கு போட்டு திருஷ்ட்டி கழிக்கிறா.

கணவன் : சொல்லுவியேம்மா, நீ தூக்ல தொங்க்ருதுக்கு முன்னால, என்ன இன்ஸ்பெக்டர் ட்ரெஸ்ல பாக்கணும்னு. இப்ப பாத்துட்ட.

தொளசி : என்ன தொங்க சொல்றீங்களா?

கணவன் : இல்ல இல்ல கடஸ்ஸி வரக்கும் எங்கூட தங்க சொல்றேன்.

தொளசிக்கு என்ன செய்றதுன்னு தெரியாம சந்தோஷத்துல மிதக்கிறா.

அவன் தொப்பிய எடுத்து கைல வச்சுகிட்டு : எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. ஆமா, எப்டி இவள சீக்ரமா உங்க்ளுக்கு ப்ரொமோஷன் கெடச்சுது?

அவள் கைல இருந்து தொப்பிய வாங்கி தலைல வச்சுகிட்டான்.


கணவன் : ஹ ஹா, கிட்ட வாடா கண்ணா

அவள் தோள் மேல கைய போட்டுகிட்டான்.


கணவன் : நான் ஒரு கேஸ் கண்டுபுடிச்சேன்.

தொளசி : என்ன கேஸ்?

கணவன் : கொல கேஸ். தல வேற, முண்டம் வேற.

தொளசி : யாரொட தல, யாரொட முண்டம்?

கணவன் : ஒர்த்தரிதே. தல தனியா, முண்டம் தனியா இருந்துச்சு. அத பாத்த ஒட்ன நாந்தான் கரெக்ட்டா கண்டுபுடிச்சேன் இது கொலைதான்னு.

தொளசி : எப்டி கண்டுபுடிச்சீங்க?

கணவன் : ஹ ஹ ஹ சொல்றேன்லம்மா.

தொளசி : ஐயய்யோ............. ரொம்ப நே................................ரமா நிக்கிறீங்களே. பைய குடுங்க, உள்ள வக்கிறேன்.

கணவன் : இந்தாம்மா.

அப்புறம்தான் அவனுக்கு ஞாபகம் வந்சுச்சு அந்த பைக்குள்ளதான் அவன் கான்ஸ்டபிள் டிரஸ் இருக்குதூன்னு.


கணவன் : ஐயய்யோ, [பைய புடுங்குறான்] ஐயோ, ஐயோ,

தொளசி : ஏங்க இப்டி அலர்றீங்க?

கணவன் : அதுக்குள்ளதான் விஷயமே இருக்குது.

தொளசி : என்ன விஷயம்?

கணவன் : அ........ நான் கண்டுபுடிச்ச முண்டந் தல கேஸ், அது சம்பந்தப்பட்ட விஷயம் பூரா இதுக்குள்ளதான் இருக்கு.

தொளசி : என்னமோ வெட்ன தலையே இதுக்குள்ள இருக்ற மாத்ரி, தொட்ட ஒட்ன ஏன் இப்டி அலர்றீங்க?

கணவன் : தலை இருக்குன்னா அலர்றேன்? நீ தொட்ற, ஒங்கைரேக இதுல பதியும். இன்ஸ்பெக்டர் wife, ஒன்னயே நான் சந்தேகப்படும்படியா இருக்கும். கோர்ட்ல நிறுத்த வேண்டியதாயிருக்கும். அப்போ எனக்குள்ள ஒரு மனப்போராட்டம். கடமை பெரிதா, கட்ன பொண்டாட்டி பெரிதா, மண்டய போட்டு பிச்சுக்க வேண்டியதா இருக்கும். அதெல்லாம் வேண்டாம் கண்ணா. இந்த கேஸ் முடியுற வரக்கும், [திருட்டு பார்வை] இந்த பைய நீயும் தொடாத. வேற யாரும் தொடாம பாத்துக்கோ.

தொளசி : சரீங்க. எப்படியோ, யார் செய்த புண்ணியமோ, நாம இனிமே வசதியா இருக்கலாம்ங்க.

கணவன் : அசதியா வந்திர்க்கேன். ஒவ்வீட்டுக்காரன் கால புடி.

தொளசி : சரீங்க.

படிச்சிட்டீங்களா? இப்ப இந்த வசனங்களை பேசினவங்க.[/size]
[size=16]

கான்ஸ்டபில் – நாகேஷ் ; மனைவி – G சகுந்தலா ; அண்ணன் – சிவாஜி கணேசன் ; தங்கச்சி – லட்சுமி ; லட்சுமியின் காதலன் – சிவகுமார்.



Heezulia
[/size]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3715
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 27, 2020 1:12 am

27.08.2020

படம் பேர், நடிக்கிறவங்க  பேர் அப்பறமா சொல்லலாம்னு நெனச்சேன். அதை தெரிஞ்சுட்டு வசனங்களை படிச்சுக்குவோம்னு நினைக்கிறவங்க இருப்பீங்கல்ல. அதனால முதல்லயே சொல்லிர்றேன்.

படம் : ஆனந்தஜோதி 1963
மனைவி - மனோரமா ; கணவன் - MR ராதா. இவ்ங்களுக்கு ஒரு குட்டி பையன்.


கணவன் : மொதலாளிய குழில வச்சு, நான் வெளிய நிக்க. அவன் சம்பளம் குடுக்கவே மாட்டேன்றாண்டி.

மனைவி : ஐயோ, ஐயோ ஐயோ ................... ஏங்க புழுகுறீங்க? அவர்தான் மாசம் பொறந்து அஞ்சாம் தேதியே சம்பளம் குடுத்துட்டாராமே. [கணவன் மூஞ்சிக்கு நேர கைய நீட்டி] சீட்டாடி தொலச்சுட்டீங்களா? [பையனைக் காட்டி] இந்தப் புள்ளைக்கு பள்ளிக்கூட சம்பளம் கட்ட முடியாம, மாசாமாசம் அந்த பில்மாஸ்ட்டர் கட்டிகிட்ருக்காரு. அவருக்கு நம்ம பணத்த எப்ப திருப்பி குடுக்கப்போறோம்? [கோபமா கத்றா]

கணவன் : [கையை பெசஞ்சுட்டே] பணத்த திருப்பி குடுக்கணும்னு  சட்டமா? [வழியிறார்] ப்ரோநோட்டா எழுதி குடுத்திருக்கேன்? [கொஞ்சம் யோசிச்சு]  ஆமா ................... மொதலாளி சம்பளம் குடுத்துட்டார்னு யாரவன் சொன்னவன்  ஒனக்கு?

மனைவி : ஆ ........................ ங்

பின்னால் நின்ன பையன் குதிச்சு முன்னால வந்து : அப்பா ....................... டூப்பு விடாதீங்க.

கணவன் : [தலைய சொரிஞ்சுட்டே] அது சரி ...........  மொதலாளி வீட்டுக்கு பையன அனுபிச்சுக்க  ஆரம்பிச்சுட்டியே.

மனைவி : நான் அங்கே அனுப்பாட்டி ................... ஒங்க பொய்யி எப்டி அம்பலம் ஆவுறது?

கணவன் : ஏம்பொய்யி வெளிய வர்றது இருக்கட்டும். இந்த மொதலாளி பத்தி என்னடி தெரியும் ஒனக்கு? [மூஞ்சிய சுளிச்சு] சுத்த பச்ச. ரெண்டு வாட்டி பையன அனுப்பிச்சா போதும் அவனுக்கு. அப்புறம் பூ வாங்கிட்டு வந்துருவான். [மனைவியின் கொண்டையைக் காட்டி சொல்றான்]

மனைவி : உக்கும். ஒங்களுக்கு வாச்ச மொதலாளி வேற எப்டி இருப்பாரு? இந்த பாருங்க, இப்டி பொய்யே பேசிட்டிருந்தா, நம்ப  வீட்ல எப்படித்தான் லெச்சுமி நொழைவா?  நீங்களே சொல்லுங்க.

கணவன் : ஒலகம் தெரியா,,, ம பேசுறியேடி. பொய் பேஸ்றவன் வீட்லதான் லெச்சுமி நொழைறா. நீ இந்த சாமியாரு வார்த்தைய நம்பிகிட்டு ஆட்ற.

மனைவி : [அழாத கொறையா] எதுத்து எதிர்வாதம் பண்ணாதீங்க. அந்த புளியமரத்து சாமியாரு சொன்னபடி, தினம் ஒரு மணி நேரம்  பொய் பேசாம உண்மய பேசி பாருங்களேன்.  நான் ஒங்ககிட்ட நக கேக்கல. நல்ல பொடவ கேக்கல. ஒரு மணி நேரம் உண்மயத்தான் சொல்ல சொல்றேன். [கோபமாக] அது கூட ஒங்களால செய்ய முடியாதா?

கணவன் : [அலுப்பா] சரிடி. [கொஞ்சம் யோசிச்சு] பிஸினஸ் பண்ற நேரத்தில பொய் பெசலேன்னா முன்னுக்கு வரவே முடியாதே. [மறுபடியும் யோசிக்கிறான்] ஒனக்காக, Bet for lunch. அந்த பன்னெண்டுல இருந்து ஒரு மணிக்குள்ள, சாப்ட்ற நேரத்துல, உண்ம பெசுறேண்டி.

மனைவி : [சந்தோஷமா அவன் கைய புடிச்சு] போதுங்க, அது போதுங்க. இங்க பாருங்க, இந்த ஒருமணி நேரமாவது உண்மய பேசி பாருங்க. நம்ம சாமியார் சொன்ன வார்த்த பொய்யாவே ஆகாதுங்க. நம்ம குடும்பம் செழிக்கத்தான் போவுது.

- தொடரும்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3715
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 27, 2020 1:30 am

27.08.2020

ஆனந்த ஜோதி வசனங்கள் தொடருது

கணவன் பேர் புண்ணியகோடி

அது ஒரு ரேடியோ கடை. புது ரேடியோ விக்கிறாங்க, பழைய ரேடியோவ ரிப்பேர் செஞ்சு குடுக்குறாங்க.

முதலாளி : என்ன தூக்கம், என்ன தூக்கம். ஏய் மூதேவி.

தூங்கிட்டு இருந்த புண்ணியகோடி முழிச்சுகிறான்.

முதலாளி : கடையா என்ன இது? முழிச்சிட்டீல்ல. இனி ஒரே................. பொய்யாத்தான் இருக்கும்.

புண்ணியகோடி செவுத்துல தொங்கிட்டு இருந்த கடியாரத்த பாக்குறான். அது மணி பன்னெண்டுனு காட்டுது.

புண்ணியகோடி : எஜமா, [கடிகாரத்த காட்டி] பன்னெண்டு மணியாச்சு. ஒரு மணி வரைக்கும் நா அரிச்சந்திரனாவே இருக்கேன். நெஜந்தான் பேசுவேன். எவ்ள கெஞ்சி கேட்டாலும் பொய் பேசமாட்டேன்.

கடக்குள்ள சேட்டு ஒருத்தர் நுழைறாரு.

சேட்டு : பெருமாள் நாயுடு

முதலாளி : வாங்க வாங்க.

சேட்டு : [கோபமா] வர்றான் வர்றான். பணம் வாங்கி மாசம் ஆறுக்கு மேல ஆவுறான். கேட்டா நாளக்கி நாளக்கிங்கிறான். க்யாவோ நாளக்கி ?

புண்ணியகோடி : வ்யாபாரம்லாம் ரொம்ப daல்லா இருக்குது சேட்டு. குடுத்தனுப்பலாம்னுதான் நெனச்சேன்.

புண்ணியகோடி முழிக்கிறான். : என்ன பொய் பேச வேணான்னு இந்த ஆள் பொய் பேசுறாரே.

சேட்டு புண்ணியகோடி பக்கத்ல போயி : புண்ணியகேடி

புண்ணியகோடி : ஏய்யா கேடி கேடிங்கறே கோச்சு புடிச்சுட்டு.

சேட்டு : எப்டி பிஸ்னஸ்லாம் லாபந்தானே?

புண்ணியகோடி : ஏதோ கடவுள் புண்ணியத்ல இந்த வருஷத்ல எரநூறு ரேடியோ வித்துட்டு நூறு ஸ்பேர வித்து இருவதுனாயிரம் ரூபா லாபம்.

முதலாளி கோவத்துல முணுமுணுக்கிறாரு. சேட்டு புண்ணியகோடிக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு முதலாளி பக்கதுல வர்றான்.

சேட்டு : நாயுடு, நம்பிள்கிட்டே பொய் பேசாதே. சேட்ஜி ரொம்ப பொல்லாதவன். மரியாதக்கி பணம் dhe [கொடு], இல்லே, சேட்ஜி கோர்ட்டுக்கு போவான் ஸூட் file பண்ணுவான், நிம்பள் ஜப்தி பண்ணுவான்.

சேட்டு முதலாளியின் டேபிள்ள ஒரு அடி அடிச்சிட்டு, புண்ணியகோடி பக்கத்ல போயி, "வர்றான்" னு சொல்லிட்டு போறான். சேட்டு வெளியே போகும்போது, ஒரு நெட்டை ஆளு உள்ள வர்றார். புண்ணியகோடி முதலாளியை கைய காட்றான். வந்தவர் முதலாளிய பாக்குறான்.

முதலாளி : வாங்க, இங்க உக்காருங்க.

வந்தவர் : நாயுடு, வருஷா வருஷம், உங்க கட கணக்கு நஷ்ட்டத்தயே காட்டுது. அத ச்செக் பண்ணத்தான் வந்திருக்கேன்.

புண்ணியகோடி சும்மா இருக்காம வந்தவன பாத்து : நீங்க எந்த புஸ்தகத்த பாத்தீங்க?

வந்தவர் : ரெண்டு bookகு இருக்கா?

புண்ணியகோடி : அஅஅஅ, மூணு புஸ்தகம். ஒண்ணு அவர் கணக்கு, ஒண்ணு ஒங்க ஆபீஸ் கணக்குப்புள்ள கணக்கு. ஒண்ணு அவர் சம்சாரம் கணக்கு.

முதலாளி தெகச்சு போய் உக்காந்திருக்காரு.

வந்தவர் : ஓஹோ அப்டியா?

சொல்லிட்டு எந்திரிச்சு : மிஸ்டர் நாயுடு, ஆபீஸ்ல இருந்து ஆர்டர் வரும். அங்க வந்து பாத்துக்கங்க.

சொல்லிட்டு எந்திரிக்கிறாரு.

முதலாளி தயங்கி : சார் சா.....ர், கொஞ்சம் தயவு செய்ங்க சார். அவர் போயிர்றார்.

பதைபதைத்து புண்ணியகோடிய திட்றார். : ஒன்ன டிஸ்மிஸ் பண்ணிருக்கேன் போடா வெளியே. கெட்டவுட்.

புண்ணியகோடி : அட நீ என்ன டிஸ்மிஸ் பண்ண போறே? ஒரு மணி நேரம் நா உண்ம பேசுனதுல ஒரு கடையே மூடிட்டேனே, இன்னும் இருவத்து நாலு மணி நேரம் நா உண்மைய பேசினா 24 ஜில்லாவுலுள்ள ஊழல் வெளிய வந்துரும். ஒங்கடயும் நீயும். போறேன் போய்யா.
- தொடரும்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக