புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_m10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10 
60 Posts - 48%
heezulia
சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_m10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_m10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_m10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_m10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_m10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_m10சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 8:22 pm

சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? 8qSTOtMRRKQ2B8S2ZarL+23a6e322611e473815938f6def203b56
சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
சமீபகாலம் வரை கற்கருவிகளை பயன்படுத்தும் கலாசாரம், 90,000 வருடங்களிலிருந்து 1,40,000 வருடங்களுக்குள் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், சென்னையைச் சேர்ந்த ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்பு, மனித இனப் பரவல் குறித்த ஆய்வில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.
சென்னையில் உள்ள ஷர்மா சென்டர் ஃபார் ஹெரிடேஜ் எஜுகேஷனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஷாந்தி பாப்பு மற்றும் குமார் அகிலேஷ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்திருக்கின்றன.
சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் கொசஸ்தலை ஆற்றின் அருகில் அமைந்திருக்கிறது அதிரம்பாக்கம். இந்தப் பகுதியில் 1999ஆம் ஆண்டிலிருந்தே ஷாந்தி பாப்புவும் அவரது குழுவினரும் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 8:24 pm

"முதலில் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் கிடைத்தன. அதற்குப் பிறகு அங்கு மனிதர்கள் வசித்ததற்கான தடயம் கிடைக்கவில்லை. பிறகு மீண்டும் இடைக்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் கிடைத்திருக்கின்றன. இவை 3 லட்சத்து 85 வருடங்களிலிருந்து 3,25 லட்சம் வருடங்கள் வரை பழமையானவை. இதற்கு முன்பாக, இடைக்கற்காலம் என்பது இந்தியாவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகத்தான் துவங்கியது என்று கருதப்பட்டுவந்தது" என பிபிசியிடம் தெரிவித்தார் ஷாந்தி பாப்பு.
[size=31]சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? P4EPCCukT0OVIgPSU8Sw+1ceea26355f23461e84dac3a7768b775
[/size]
ஆனால், இடைக் கற்காலத்தைச் சேர்ந்த மனித எச்சங்கள் ஏதும் இதுவரை இங்கு கிடைக்கவில்லை. இந்தக் கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள் கடந்த புதன்கிழமையன்று நேச்சர் இதழில் பதிப்பிக்கப்பட்டதையடுத்து, உலகம் முழுவதும் இது குறித்த விவாதம் தீவிரமடைந்திருக்கிறது.
பொதுவாக நவீன மனிதர்களும் மனிதர்களின் மூதாதையர்களும் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் பரவினார்கள் என்பது பொதுவான புரிதல். அவர்கள் எந்த காலகட்டத்தில் எந்தெந்த கண்டங்களுக்குப் பரவினார்கள் என்பது குறித்த விவாதத்தில், தற்போதைய கண்டுபிடிப்பு மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது நாம் கருதுவதைவிட சுமார் 1 லட்சம் வருடங்களுக்கு முன்பாகவே இந்த இடம்பெயர்தல் நடந்திருக்கலாம் என்பதை தற்போது கிடைத்துள்ள கற்கருவிகள் சுட்டிக்காட்டுவதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 8:26 pm

நவீன மனிதர்கள் உருவான பிறகு அதாவது 1,25,000 வருடங்களுக்கு முன்புதான் இடைக்கற்கால மனிதர்கள் இங்கு வந்ததாக இதுவரை கருதப்பட்டுவந்தது. இருந்தபோதும் தற்போதைய கண்டுபிடிப்பை வைத்து உடனடியாக எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. இந்தியாவின் பல இடங்களிலும் கிடைத்திருக்கும் கற்கருவிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்." என்கிறார் ஷாந்தி.
மனித இன வளர்ச்சியில் பழைய கற்காலம் முடிந்து இடைக்கற்காலம் தோன்றிய காலகட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சுமார் 3 லட்சம் வருடங்களுக்கும் 2 லட்சம் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுவரை மிகப் பெரிய கற்கருவிகளைப் பயன்படுத்திவந்த மனித இனத்தின் மூதாதையர், சிறிய, திருத்தமான கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தது இந்த காலகட்டத்தில்தான்.
[size=31]சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Tspk6RTrSu6KYhfnfjWJ+964aafd3782a33c6ac513ec1ba6b9d60
[/size]
தெற்காசியாவில் இதற்கு முன்பாக பல இடைக் கற்கால பகுதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த இடைக்கற்கால கலாச்சாரத்தின் வயது, அந்தக் கலாச்சாரம் எப்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தது போன்றவை மிகக் குறைவாகவே ஆய்வுசெய்யப்பட்டிருக்கின்றன. மரபியல் ரீதியான ஆய்வுகள், மனித எச்சங்கள், தொல்லியல் ஆய்வுகள் மூலமாகக் கிடைத்த தகவல்களை வைத்து, நவீன மனிதர்களுக்கு முந்தைய ஹொமினின்களின் பரவலை உறுதிசெய்வதும் கடினமான காரியமாகவே இருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 8:27 pm

ஒரு கூற்றின்படி, இந்தியாவில் இடைக்கற்காலம் என்பது ஆப்பிரிக்காவில் இருந்து நவீன மனிதர்கள் வெளியேறிய காலகட்டத்தை ஒத்தது என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டம் 1,30,000 வருடத்திற்கும் 80 ஆயிரம் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலமாக கருதப்படுகிறது. டோபா எரிமலைச் சீற்றத்திற்கு தப்பிய மாந்தர்களே இங்கு வந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், மற்றொரு கூற்று 71 வருடங்களுக்கும் 57 ஆயிரம் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தப் பரவல் நடந்திருக்கலாம் என்று கூறுகிறது.
இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையில் மிகப் பெரிய காலகட்டம் இருக்கிறது. அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்களை கதிர்வீச்சு ஆய்வுக்குட்படுத்துவதில் உள்ள சிக்கல்களும் தெற்காசியப் பகுதிகளில் மனித எச்சங்கள் இல்லாமல் இருப்பதும்தான் இந்த காலகட்டத்தை நிர்ணயம்செய்வதில் பெரும் தடையாக இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? 0VuzDaWQmu5BnWZc2Giq+4ae08ed3c251e72673d804a2ea6b7028

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 8:28 pm

தற்போது அதிரம்பாக்கத்தில் கிடைத்திருக்கும் முடிவுகள், இந்தத் திசையில் ஓரளவுக்கு உதவக்கூடும். ஷர்மா மையத்தைச் சேர்ந்த ஷாந்தி பாப்பு, அகிலேஷ் உள்ளடங்கிய குழுவினர் கொசஸ்தலை ஆற்றின் கிளை நதி ஒன்றுக்கு அருகில் 1999ல் இந்த ஆய்வைத் துவங்கினர். பல்வேறு இடங்களில் 4 முதல் 9 மீட்டர் அளவுக்கு குழிகள் தோண்டப்பட்டன. இந்தக் குழிகளில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மண் படிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் குழிகளில் உள்ள மண் படிவுகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. 8 முதல் 6 வரையிலான பிரிவு பழங்கற்காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது. இவை, 17 லட்சம் முதல் 10 லட்சம் வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. 5 முதல் 1வது பிரிவு வரையிலான படிவுகள் இடைக்கற்காலத்தைச் சேர்ந்தவை.
இந்தப் பகுதியில் கிடைத்த கற்கருவிகளை ஆராய்ந்தபோது, கற்காலத்தைச் சேர்ந்தவர்களைப்போலவே, இடைக்கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்களும் அந்தப் பகுதியில் கிடைத்த கற்களை வைத்தே தங்கள் கற்கருவிகளைச் செய்திருக்கின்றனர் என்பதை அறியமுடிந்தது.
இதுதவிர பழைய கற்காலம் முடிந்து இடைக்கற்காலம் துவங்குவதற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் ஏதும் இங்கு கிடைக்கவில்லை. இது டோபோ எரிமலை வெடித்த காலத்தோடு ஒத்துப்போவதால், பருவநிலை மாற்றத்தால் இங்கிருந்தவர்கள் வெளியேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் பல இடங்களில் பிந்தைய - பழைய கற்காலப் பகுதிகளைச் சேர்ந்த கருவிகள் கிடைக்கும் நிலையில், இங்கு அந்த காலகட்டத்தைச் சேர்ந்த கருவிகள் ஏதும் கிடைக்கவில்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 8:30 pm

சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? Qn6WeL6OQE2QC6qrmHVO+c5dcb14d634f277b53f9c10cfbfda565

அதிரம்பாக்கத்தைப் பொறுத்தவரை, இங்கு கிடைத்த கற்கருவிகளை வைத்து இங்கு வசித்தவர்கள் நவீன மனிதர்களா அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை. நர்மதா நதிக்கரையில் கிடைத்த ஒரு மண்டை ஓட்டைத் தவிர, இந்தியாவில் இதுவரை மனித எச்சங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
"ஆனால், தற்போது கிடைத்திருக்கும் கருவிகளை வைத்து, இந்தியாவில் இடைக்கற்கால மனிதர்கள் 3.85 லட்சம் வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து 1.72 லட்சம் வருடங்களுக்குள் வாழ்ந்திருக்கலாம் என்ற முடிவுக்குவர முடியும்" என்கிறார் அகிலேஷ்.
அதிரம்பாக்கத்தில் கிடைத்த கற்கருவிகளின் காலம் அகமதாபாதில் உள்ள ஃபிசிகல் ரிசர்ச் லபோரட்டரியில் கணிக்கப்பட்டது. பொதுவாக அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்கள் கார்பன் டேட்டிங் முறையில் காலக் கணிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால், லட்சக்கணக்கான வருடங்கள் பழைய பொருட்களை காலக் கணிப்புச் செய்ய அந்த முறை உதவாது. ஆகவே, Luminescence dating என்ற முறை கையாளப்படுகிறது. அதாவது ஒரு பொருளில் ஒளிகடைசியாக எப்போது பட்டது என்பதை வைத்து அதன் காலத்தைக் கணிக்கும் முறை. அதிரம்பாக்கத்தில் கிடைத்த பொருட்கள் இம்மாதிரியான சோதனைக்கே உட்படுத்தப்பட்டன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 8:33 pm

சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? 8BcjK6XTciJQH6w0MhGt+d9cc7fed11de0326a0b3969311e72814

இதற்கு ஃபிசிகல் ரிசர்ச் லபோரட்டரியைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.கே. சிங்கி பெரிதும் உதவினார் என்று குறிப்பிடுகின்றனர் ஷாந்தியும் அகிலேஷும். மிகச் செலவுபிடிக்கும் இந்த முறையிலான காலக்கணிப்பை, தன் செலவிலேயே செய்து கொடுத்திருக்கிறார் ஏ.கே. சிங்வி.
அதிரம்பாக்கம் அகழ்வாராய்ச்சித் தலம் என்பது சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளாகவே தொல்லியளாளர்களின் கவனத்தை ஈர்த்துவந்திருக்கிறது. 1863ல் முதன் முதலில் ராபெர்ட் ப்ரூஸ் ஃபூட் மற்றும் வில்லியம் கிங் ஆகியோரால இந்த இடம் அகழாய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக 1930களிலும் 60களிலும் இந்த இடம் ஆய்வுசெய்யப்பட்டது.
19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் இங்கிருந்து எடுக்கப்பட்ட கற்காலக் கருவிகள் உலகமெங்கும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போதும் அதிரம்பாக்கம் பகுதியில் சுமார் 50,000 மீட்டர் பரப்பளவுக்கு கற்காலக் கருவிகள் சிதறிக்கிடக்கின்றன.

குறிப்பு
இதேபோல் செய்தி பதிவு செய்திருந்தது
போல் தோன்றுகிறது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 10, 2018 11:06 am


தற்போதும் அதிரம்பாக்கம் பகுதியில் சுமார் 50,000 மீட்டர் பரப்பளவுக்கு கற்காலக் கருவிகள் சிதறிக்கிடக்கின்றன.

அப்படி என்றால் பண்டை மனிதனின் தலைநகரமாகவும் சென்னை தான் இருந்திருக்கும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 10, 2018 12:16 pm

SK wrote:
தற்போதும் அதிரம்பாக்கம் பகுதியில் சுமார் 50,000 மீட்டர் பரப்பளவுக்கு கற்காலக் கருவிகள் சிதறிக்கிடக்கின்றன.

அப்படி என்றால் பண்டை மனிதனின் தலைநகரமாகவும் சென்னை தான் இருந்திருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1259124
அப்படிக் கூட இருந்திருக்கலாம் யார் கண்டது
நன்றி
நண்பா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 10, 2018 2:39 pm

சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? 103459460 சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா? 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக