புதிய பதிவுகள்
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
by ayyasamy ram Today at 5:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Abiraj_26 | ||||
SINDHUJA Theeran | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பஃறொடை வெண்பா என்பது நான்கு அடிகளுக்கு மேற்பட்டு வரும் . இதன் மேல் எல்லை 12 அடிகள் வரையில் போகலாம் என்று கூறுவர் . இதில் தனிச்சொல் வராது .ஒரு எதுகையோ அல்லது பல எதுகையோ வரலாம் . இந்த வெண்பா அவ்வளவாக புழக்கத்தில் இல்லை .
சரி உங்கள் கேள்விக்கு வருகிறேன் .
முதலில் நேரசை , நிரையசை என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் .
குறில் தனித்து வந்தாலோ , ஒற்றடுத்து வந்தாலோ
நெடில் தனித்து வந்தாலோ , ஒற்றடுத்து வந்தாலோ நேரசை எனப்படும் .
குறில் இணைந்து வந்தாலோ , குறிலிணை ஒற்றடுத்து வந்தாலோ
குறிலும் நெடிலும் சேர்ந்து வந்தாலோ நிரையசை எனப்படும் .
பா / லும் > நேர் நேர் > தேமா
தெளி / தே / னும் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
பா / கும் > நேர் நேர் > தேமா
பருப் / புமி / வை > நிரை நிரை நேர் .> கருவிளங்காய்
நா / லும் > நேர் நேர் > தேமா
கலந் / துனக் / கு > நிரை நிரை நேர் > கருவிளங்காய்
நான் / தரு / வேன் > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
கோ / லம் / செய் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
துங் / கக் > நேர் நேர் > தேமா
கரி / முகத் / துத் > நிரை நிரை நேர் > கருவிளங்காய்
தூ / மணி / யே > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
நீ / யெனக் / குச் > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
சங் / கத் > நேர் நேர் > தேமா
தமிழ் / மூன் / றும் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
தா > நேர்
வெண்பாவில் நின்ற சீர் தேமா , புளிமா என்றால் வரும் சீர் முன்பாக நிரையசை வரவேண்டும் . அதாவது மா முன் நிரை வரவேண்டும் . அதேபோல
நின்றசீர் கூவிளம் , கருவிளம் என்று இருந்தால் , வரும் சீர் முன்பாக நேரசை வரவேண்டும் .
அதாவது விள முன் நிரை வரவேண்டும் .
மா முன் நிரையும் , விளமுன் நேரும் வந்தால் இயற்சீர் வெண்டளை எனப்படும் .
மூன்று அசைகள் கொண்ட காய்ச்சீர் முன்பாக நேர் வரவேண்டும் . இவ்வாறு வருவது வெண்சீர் வெண்டளை எனப்படும் .
மா முன் நேர் வந்தாலோ , விளமுன் நிரை வந்தாலோ வெண்பா இடர்ப்படும் . இதைத் தளை தட்டல் என்று கூறுவர் .
வெண்பாவின் இறுதிச் சீர் நாள் , மலர் , காசு , பிறப்பு என்ற வாய்ப்பாட்டில் முடியவேண்டும் .
சுருக்கமாகக் கூறியுள்ளேன் . வெண்பா இலக்கணம் பயில விரும்புவோர் சொந்தமாக ஒரு திருக்குறளை எழுதிப் பழகவேண்டும் .
இறுதியாக உங்கள் கேள்விக்கு விடையளிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே . இந்த விளக்கம் பலருக்கும் பயன்படுமே !
சரி உங்கள் கேள்விக்கு வருகிறேன் .
முதலில் நேரசை , நிரையசை என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் .
குறில் தனித்து வந்தாலோ , ஒற்றடுத்து வந்தாலோ
நெடில் தனித்து வந்தாலோ , ஒற்றடுத்து வந்தாலோ நேரசை எனப்படும் .
குறில் இணைந்து வந்தாலோ , குறிலிணை ஒற்றடுத்து வந்தாலோ
குறிலும் நெடிலும் சேர்ந்து வந்தாலோ நிரையசை எனப்படும் .
பா / லும் > நேர் நேர் > தேமா
தெளி / தே / னும் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
பா / கும் > நேர் நேர் > தேமா
பருப் / புமி / வை > நிரை நிரை நேர் .> கருவிளங்காய்
நா / லும் > நேர் நேர் > தேமா
கலந் / துனக் / கு > நிரை நிரை நேர் > கருவிளங்காய்
நான் / தரு / வேன் > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
கோ / லம் / செய் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
துங் / கக் > நேர் நேர் > தேமா
கரி / முகத் / துத் > நிரை நிரை நேர் > கருவிளங்காய்
தூ / மணி / யே > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
நீ / யெனக் / குச் > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
சங் / கத் > நேர் நேர் > தேமா
தமிழ் / மூன் / றும் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
தா > நேர்
வெண்பாவில் நின்ற சீர் தேமா , புளிமா என்றால் வரும் சீர் முன்பாக நிரையசை வரவேண்டும் . அதாவது மா முன் நிரை வரவேண்டும் . அதேபோல
நின்றசீர் கூவிளம் , கருவிளம் என்று இருந்தால் , வரும் சீர் முன்பாக நேரசை வரவேண்டும் .
அதாவது விள முன் நிரை வரவேண்டும் .
மா முன் நிரையும் , விளமுன் நேரும் வந்தால் இயற்சீர் வெண்டளை எனப்படும் .
மூன்று அசைகள் கொண்ட காய்ச்சீர் முன்பாக நேர் வரவேண்டும் . இவ்வாறு வருவது வெண்சீர் வெண்டளை எனப்படும் .
மா முன் நேர் வந்தாலோ , விளமுன் நிரை வந்தாலோ வெண்பா இடர்ப்படும் . இதைத் தளை தட்டல் என்று கூறுவர் .
வெண்பாவின் இறுதிச் சீர் நாள் , மலர் , காசு , பிறப்பு என்ற வாய்ப்பாட்டில் முடியவேண்டும் .
சுருக்கமாகக் கூறியுள்ளேன் . வெண்பா இலக்கணம் பயில விரும்புவோர் சொந்தமாக ஒரு திருக்குறளை எழுதிப் பழகவேண்டும் .
இறுதியாக உங்கள் கேள்விக்கு விடையளிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே . இந்த விளக்கம் பலருக்கும் பயன்படுமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1260276மூர்த்தி wrote:அப்பாவுடன் ஒரு டிஸ்கசன் போயிற்று - இப்போதுதான். அவர் எங்கோ இணையத்தில் படித்ததை சொல்லி ஒரு குண்டைப் போடுகிறார்.நான் வருமுன் ஒரு இணையப் பக்கத்தில் படித்ததாக சொல்கிறார்.
முன்னர் சொல்லியது போல், எழுத்து-அசை-சீர்-அடி-பா.
அதைவிட சீருடன் தளை,தொடை என வருகிறதாமே அவை என்ன? வெண்பாவிலா அல்லது எல்லா செய்யுளிலுமா?
நன்றி.
பொறுத்துக் கொள்ளவும்.அப்பா கொஞ்சம் இல்லை கொஞ்சம் அதிகமாகவே தமிழில் வீக்.
செய்யுள் உறுப்புகள்
=====================
செய்யுள் உறுப்புகள் ஆறுவகைப்படும்.அவை
எழுத்து
அசை
சீர்
தளை
அடி
தொடை ஆகியன வாகும்.
எழுத்து
ஓரு மொழியின் அடிப்படை உறுப்பு எழுத்து ஆகும்.
அசை
எழுத்துகள் தனித்தோ,இணைந்தோ தக்க ஒலியுடன் சீருக்கு உறுப்பாகி நின்றால் அது அசை எனப்படும்.
அசை இரு வகைப்படும்.
நேரசை
நிரையசை
சீர்
அசைகள் ஒன்றோ,இரண்டோ,மூன்றோ,நான்கோ இயைந்து நிற்பது சீராகும்.இது நான்கு வகைப்படும்.
நேர் நேர்
நிரை நேர்
நிரை நிரை
நேர் நிரை
தளை
சீர்கள் ஒன்றுடன் ஒன்று இயைந்து கட்டுப்பட்டு நிற்பது தளை எனப்படும்.தளை நான்கு வகைப்படும்.
ஆசிரியத்தளை
வெண்டளை
கலித்தளை
வஞ்சித்தளை
அடி வகைகள்
குறளடி
சிந்தடி
அளவடி
நெடிலடி
கழி நெடிலடி
தொடை வகைகள்
மோனைத் தொடை
எதுகைத் தொடை
முரண் தொடை
இயைபுத் தொடை
அளபெடைத் தொடை
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அடுத்து ஒரு இன்னிசை வெண்பாவைப் பார்க்கலாம் .
உழைப்பை மறந்தோம் .
========================
அம்மிக்கல் ஆட்டுக்கல் அத்தனையும் நாம்மறந்தோம்
சும்மா யிருக்கும் சுகமே பெரிதென
எண்ணியதால் எல்லாம் இயந்திரங்கள் செய்யுதுடா
மண்ணுக்குப் பாரம் உடம்பு .
இந்த வெண்பாவில் தனிச்சொல் இடம்பெறாததால் இது இன்னிசை வெண்பாவாயிற்று .
உழைப்பை மறந்தோம் .
========================
அம்மிக்கல் ஆட்டுக்கல் அத்தனையும் நாம்மறந்தோம்
சும்மா யிருக்கும் சுகமே பெரிதென
எண்ணியதால் எல்லாம் இயந்திரங்கள் செய்யுதுடா
மண்ணுக்குப் பாரம் உடம்பு .
இந்த வெண்பாவில் தனிச்சொல் இடம்பெறாததால் இது இன்னிசை வெண்பாவாயிற்று .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வாழ்க்கைக்கு மூவர் .
======================
நல்லவனை உன்னுடைய நன்பனாய்த் தேர்ந்தெடு
வல்லவளைக் கைப்பிடித்து வாழ்க்கைத் துணையாக்கு
பெற்றவர்கள் வாழ்வின் வழிகாட்டி இம்மூவர்
உற்றதுணை என்றும் உனக்கு .
இதுவும் இன்னிசை வெண்பாவாகும் . நேரிசை வெண்பாவைவிட , இன்னிசை வெண்பா எழுதுவது சற்று எளிது . ஏனெனில் இதில் தனிச்சொல் வராததே !
======================
நல்லவனை உன்னுடைய நன்பனாய்த் தேர்ந்தெடு
வல்லவளைக் கைப்பிடித்து வாழ்க்கைத் துணையாக்கு
பெற்றவர்கள் வாழ்வின் வழிகாட்டி இம்மூவர்
உற்றதுணை என்றும் உனக்கு .
இதுவும் இன்னிசை வெண்பாவாகும் . நேரிசை வெண்பாவைவிட , இன்னிசை வெண்பா எழுதுவது சற்று எளிது . ஏனெனில் இதில் தனிச்சொல் வராததே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
விளக்கம் அருமை. இரண்டு மூன்று தடவை திரும்ப திரும்ப படிக்க அதிகமாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஐயா.
இரண்டு இன்னிசைப் பாடல்களை தந்துள்ளீர்கள். தனிச்சொல் இல்லாத வெண்பா இன்னிசை வெண்பா. தனிச்சொல் பெற்று இன்னிசை வெண்பா எழுத முடியுமா?
வெண்பாவில் விகற்பம் என்றால் என்ன?
இரண்டு இன்னிசைப் பாடல்களை தந்துள்ளீர்கள். தனிச்சொல் இல்லாத வெண்பா இன்னிசை வெண்பா. தனிச்சொல் பெற்று இன்னிசை வெண்பா எழுத முடியுமா?
வெண்பாவில் விகற்பம் என்றால் என்ன?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முதலில் " விகற்பம் " என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம் . " விகற்பம் " என்றால் வேறுபாடு என்று பொருள் . யாப்பிலக்கணத்தில் எதுகை வேறுபாட்டை " விகற்பம் " என்று கூறுவார்கள் .
பேருந்துக் கட்டணத்தைப் பேயரசு மாற்றியதால்
ஊருக்குச் செல்வோர் உழல்கின்றார் - பாருக்குள்
இல்லாத கூத்தெல்லாம் இங்கே நடக்குதடா
நல்லோர்க்கு வாழ்வில்லை இங்கு .
என்ற வெண்பா " இரு விகற்ப நேரிசை வெண்பா " ஆகும் .
இதில் முதலிரண்டு அடிகளில் ஓர் எதுகையும் ( ரு ) , அடுத்த இரண்டு அடிகளில் வேறொரு எதுகையும் ( ல் ) இடம் பெற்றிருப்பதால் , இது இரு விகற்ப நேரிசை வெண்பா என்று அழைக்கப் படுகிறது .
சில வெண்பாக்களில் ஒரேயொரு எதுகை மட்டும் இடம் பெறுவதுண்டு . அது ஒரு விகற்ப வெண்பா என்று அழைக்கப்படும் . காட்டாக
அட்டாலும் பால்சுவையின் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் .
என்ற வெண்பாவில் நான்கு அடிகளிலும் ஒரேயொரு எதுகை ( ட் ) மட்டுமே இடம் பெற்றுள்ளது . இதை ஒரு விகற்ப வெண்பா என்று அழைப்போம் .
இந்த வெண்பாவில் இரண்டாம் அடியில் மூன்று சீர்கள் மட்டுமே உள்ளன . நான்காம் சீர் இல்லை . ஆனாலும் கருத்து முற்றுப் பெற்றுள்ளது . குறையுடைய இவ்வெண்பாவை " சவலை வெண்பா " என்று அழைப்பார்கள் .
மூன்று விகற்பங்கள் வந்து , தனிச்சொல் இடம்பெற்று வந்தாலும் அதை இன்னிசை வெண்பா என்று அழைப்பர் .
பேருந்துக் கட்டணத்தைப் பேயரசு மாற்றியதால்
ஊருக்குச் செல்வோர் உழல்கின்றார் - பாருக்குள்
இல்லாத கூத்தெல்லாம் இங்கே நடக்குதடா
நல்லோர்க்கு வாழ்வில்லை இங்கு .
என்ற வெண்பா " இரு விகற்ப நேரிசை வெண்பா " ஆகும் .
இதில் முதலிரண்டு அடிகளில் ஓர் எதுகையும் ( ரு ) , அடுத்த இரண்டு அடிகளில் வேறொரு எதுகையும் ( ல் ) இடம் பெற்றிருப்பதால் , இது இரு விகற்ப நேரிசை வெண்பா என்று அழைக்கப் படுகிறது .
சில வெண்பாக்களில் ஒரேயொரு எதுகை மட்டும் இடம் பெறுவதுண்டு . அது ஒரு விகற்ப வெண்பா என்று அழைக்கப்படும் . காட்டாக
அட்டாலும் பால்சுவையின் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் .
என்ற வெண்பாவில் நான்கு அடிகளிலும் ஒரேயொரு எதுகை ( ட் ) மட்டுமே இடம் பெற்றுள்ளது . இதை ஒரு விகற்ப வெண்பா என்று அழைப்போம் .
இந்த வெண்பாவில் இரண்டாம் அடியில் மூன்று சீர்கள் மட்டுமே உள்ளன . நான்காம் சீர் இல்லை . ஆனாலும் கருத்து முற்றுப் பெற்றுள்ளது . குறையுடைய இவ்வெண்பாவை " சவலை வெண்பா " என்று அழைப்பார்கள் .
மூன்று விகற்பங்கள் வந்து , தனிச்சொல் இடம்பெற்று வந்தாலும் அதை இன்னிசை வெண்பா என்று அழைப்பர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
ஐயா நன்றி. விகற்பம்,சவலை இரண்டிற்கும் விளக்கம் கண்டேன்.
எதுகை என்றால் என்ன? இரண்டாம் எழுத்து ஒன்றாக இருந்தால் எதுகையா?மேலே உள்ள பாடலில் ரு,ல்,ட் வந்து எதுகை ஆனது என்றால், இரு சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றாகி வந்தால் எதுகை. வேறு விளக்கம் உண்டா?
சில பாடல்களில் கடைசிச் சீரின் இரண்டாம் எழுத்து ஒன்றாகி வருவதைக் காணலாம். அவை எதுகையாகுமா?
பக்கம் ஒன்றில் உள்ள பாடல்கள் அனைத்தும் இரண்டாம் எழுத்து ஒன்றாகி எதுகையுடன் வருகின்றன. அப்படியானால் எதுகை இல்லாமல் பாடல் எழுதக் கூடாதா? முறையான தமிழ் பாடல்களில்-மரபுக் கவிதைகளில் ,குறள் பாடல்களில் எதுகை இல்லாமல் பாடல் வருகிறதே. உதாரணமாக ...
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
இரண்டு சீர்களிலும் வேறுபட்ட எழுத்து உள்ளதே!
எதுகை என்றால் என்ன? இரண்டாம் எழுத்து ஒன்றாக இருந்தால் எதுகையா?மேலே உள்ள பாடலில் ரு,ல்,ட் வந்து எதுகை ஆனது என்றால், இரு சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றாகி வந்தால் எதுகை. வேறு விளக்கம் உண்டா?
சில பாடல்களில் கடைசிச் சீரின் இரண்டாம் எழுத்து ஒன்றாகி வருவதைக் காணலாம். அவை எதுகையாகுமா?
பக்கம் ஒன்றில் உள்ள பாடல்கள் அனைத்தும் இரண்டாம் எழுத்து ஒன்றாகி எதுகையுடன் வருகின்றன. அப்படியானால் எதுகை இல்லாமல் பாடல் எழுதக் கூடாதா? முறையான தமிழ் பாடல்களில்-மரபுக் கவிதைகளில் ,குறள் பாடல்களில் எதுகை இல்லாமல் பாடல் வருகிறதே. உதாரணமாக ...
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
இரண்டு சீர்களிலும் வேறுபட்ட எழுத்து உள்ளதே!
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எதுகையில்லாமல் எழுதக் கூடாதா என்றால் , எழுதலாம் ; ஆனால் அது உப்பில்லாமல் உணவு சாப்பிடுவது போன்றது .
தற்கால புதுக் கவிதைக்கும் , மரபுக் கவிதைக்கும் உள்ள வேறுபாடு யாப்பிலக்கணம்தான் . சங்க இலக்கியங்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு காரணம் , அதன் கட்டுக்கோப்பான அமைப்புதான் . புதுக் கவிதைகள் காளான்கள் போல . கால வெள்ளத்தில் நிற்காது .
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
என்ற குறட்பாவில் ளி . ளை - எதுகையாகும் . இதை வருக்க எதுகை என்பர் .
ள என்ற எழுத்தின் வருக்கமான ளா , ளி , ளீ , ளு ....என்ற 11 எழுத்துக்கள் எதுகையாக வரலாம் .
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இந்தக் குறட்பாவிலும் ற , றை வருக்க எதுகையாகும் .
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
ல , ரி - இன எதுகை என்று சொல்வார்கள் . ய ,ர , ல , வ , ழ , ள ஆகிய எழுத்துக்கள் இடையினமாகும் .இந்த ஆறு எழுத்துக்களில் ஒன்று மற்றொன்றிற்கு எதுகையாக வரின் , அது இன எதுகை எனப்படும் .
தற்கால புதுக் கவிதைக்கும் , மரபுக் கவிதைக்கும் உள்ள வேறுபாடு யாப்பிலக்கணம்தான் . சங்க இலக்கியங்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு காரணம் , அதன் கட்டுக்கோப்பான அமைப்புதான் . புதுக் கவிதைகள் காளான்கள் போல . கால வெள்ளத்தில் நிற்காது .
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
என்ற குறட்பாவில் ளி . ளை - எதுகையாகும் . இதை வருக்க எதுகை என்பர் .
ள என்ற எழுத்தின் வருக்கமான ளா , ளி , ளீ , ளு ....என்ற 11 எழுத்துக்கள் எதுகையாக வரலாம் .
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இந்தக் குறட்பாவிலும் ற , றை வருக்க எதுகையாகும் .
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
ல , ரி - இன எதுகை என்று சொல்வார்கள் . ய ,ர , ல , வ , ழ , ள ஆகிய எழுத்துக்கள் இடையினமாகும் .இந்த ஆறு எழுத்துக்களில் ஒன்று மற்றொன்றிற்கு எதுகையாக வரின் , அது இன எதுகை எனப்படும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
நன்றி ஐயா.
சீரின் அல்லது அடியின் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வருவது எதுகை என்றால், மோனை எப்படி வரும்?
நந்தவ னத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!
இந்தப் பாடல் எந்த வகையைச் சேர்ந்தது? இரண்டு தனிச்சொல் வருகிறது. அத்துடன் ராண்டி,வேண்டி,தோண்டி,தாண்டி என அடி இறுதியில் எதுகை போல் வருகிறதே. இப்படி அடி இறுதியில் வருவதும் எதுகையா?
சீரின் அல்லது அடியின் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வருவது எதுகை என்றால், மோனை எப்படி வரும்?
நந்தவ னத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!
இந்தப் பாடல் எந்த வகையைச் சேர்ந்தது? இரண்டு தனிச்சொல் வருகிறது. அத்துடன் ராண்டி,வேண்டி,தோண்டி,தாண்டி என அடி இறுதியில் எதுகை போல் வருகிறதே. இப்படி அடி இறுதியில் வருவதும் எதுகையா?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முதலெழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும் . சீர் மோனை , அடி மோனை என்று இருவகை உண்டு . சீர் மோனையே சிறப்புடையது . அடிமோனை கட்டாயமில்லை .
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக .
முதலடியில் உள்ள நான்கு சீர்களில் ' க ' என்ற எழுத்து வருவது காண்க . இது சீர் மோனை எனப்படும் .
அடிமோனை என்றால் அடிகளில் உள்ள முதலெழுத்து ஒன்றி வருவது . பெரும்பாலான குறட்பாக்களில் , அடிமோனை இருக்காது .
நந்தவ னத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!
இந்தப் பாடல் சிந்து வகையைச் சார்ந்தது . பாரதியின் பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் சிந்துப் பாடல்களாகும் . பாரதியை " சிந்துக்குத் தந்தை " என்று பாரதி தாசன் புகழ்வார் .
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
...தேன்வந்து பாயுது காதினிலே எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
...சக்தி பிறக்குது மூச்சினிலே .
போதினிலே , காதினிலே , பேச்சினிலே , மூச்சினிலே என்று சொற்களில் ஒலியியைபு ( Rhyme )
தோன்றுவது காண்க .
செந்தமிழ் , தந்தையர் ஆகிய சொற்களில் இரண்டாம் எழுத்து எதுகை பெற்றது .
நந்தவ னத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!
நந்த , கொண்டு - இன எதுகை
ராண்டி , வேண்டி , தோண்டி . தாண்டி - ஒலியியைபு காண்க .
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக .
முதலடியில் உள்ள நான்கு சீர்களில் ' க ' என்ற எழுத்து வருவது காண்க . இது சீர் மோனை எனப்படும் .
அடிமோனை என்றால் அடிகளில் உள்ள முதலெழுத்து ஒன்றி வருவது . பெரும்பாலான குறட்பாக்களில் , அடிமோனை இருக்காது .
நந்தவ னத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!
இந்தப் பாடல் சிந்து வகையைச் சார்ந்தது . பாரதியின் பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் சிந்துப் பாடல்களாகும் . பாரதியை " சிந்துக்குத் தந்தை " என்று பாரதி தாசன் புகழ்வார் .
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
...தேன்வந்து பாயுது காதினிலே எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
...சக்தி பிறக்குது மூச்சினிலே .
போதினிலே , காதினிலே , பேச்சினிலே , மூச்சினிலே என்று சொற்களில் ஒலியியைபு ( Rhyme )
தோன்றுவது காண்க .
செந்தமிழ் , தந்தையர் ஆகிய சொற்களில் இரண்டாம் எழுத்து எதுகை பெற்றது .
நந்தவ னத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!
நந்த , கொண்டு - இன எதுகை
ராண்டி , வேண்டி , தோண்டி . தாண்டி - ஒலியியைபு காண்க .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|