புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_m10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10 
72 Posts - 53%
heezulia
திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_m10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_m10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_m10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_m10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_m10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_m10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_m10திருவையாறு தியாகராஜர் ஆராதனை Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவையாறு தியாகராஜர் ஆராதனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 12, 2018 2:18 pm

தியாகராஜரின் தந்தை ராம பிரம்மம்.
அவர் சகல சாஸ்திரங்களையும் கற்றவர். ஞானி,
சக்கரவர்த்தி திருமகனான ராமபிரானிடம் எல்லையற்ற
பக்தி கொண்டவர்.

தம் இல்லத்தில் ஸ்ரீராமபிரானின் அர்ச்சாவதார பகவானைக்
கொண்டு ஆராதித்து வந்தார். இவர் திருவையாறு காவிரிக்
கரையருகில் வசித்து வந்தார். இவருக்கு மூன்று மகன்கள்.
பெரிய மகனுக்கு திருவையாறு தட்சிணாமூர்த்தியின் பெயரான
ஜெயபேரரசன் என்ற திருநாமம்.

இரண்டாவது மகனுக்கு சுந்தரேசன் என்று பெயர். அவன்
சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி விட்டான். மூன்றாவது
மகனுக்கு தன்னுடைய ஆராதனை பகவானான ஸ்ரீராமபிரானின்
தியாகத்தை நினைத்து மனமுருகி ‘தியாகராஜன்’ என்று
பெயரிட்டார்.

பெரிய மகன் லௌகிகமாக இருந்தான். பூஜை, புனஸ்காரம்
பிடிக்காது. தனக்குத் தெரிந்தவரை கொண்டு நாட்டியம் சொல்லிக்
கொடுப்பான். பச்சிலை வைத்தியம் செய்வான்.
இதில் வரும் வருமானத்தைக் கொண்டே ஜீவனம் நடந்தது.

தியாகராஜர் சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றார். பரம ராம
பக்தராக இருந்தார். தந்தை காலகதி அடைந்தபிறகு இவர்
ஸ்ரீராமபிரானை ஆராதிக்கத் தொடங்கினார்.

காலை திருப்பள்ளியெழுச்சியிலிருந்து இரவு டோலோத்சவம் வரை
இவரே செய்து வருவார். பஜனைகளும் செய்வார்.

ராமாயண பாராயணம் செய்வார். அவருக்கு வருமானம் ஒன்றும்
கிடையாது. பாகவதர்களைப் பார்த்தால் உணவிற்கு அழைத்து
வந்துவிடுவார். இதெல்லாம் ஜெபேசனுக்கு கோபத்தை உண்டாக்கியது.
ஒருநாள் மிக கோபத்துடன் இனி உன் குடும்ப பொறுப்பை நீ பார்த்துக்
கொள், என் குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.

வீட்டில் பாதி இடத்தையும் கொடுத்து, பாத்திரங்களையும் கொடுத்தார்.
ஸ்ரீராமரே கதி என்று அமர்ந்துவிட்டார். தியாகராஜர் தளரவில்லை
அக்ஷய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு உஞ்சவிருத்திக்கு சென்றால்
10 பாகவதர்களுக்கு உணவு கிடைக்கும் என்றார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 12, 2018 2:18 pm


தினமும் அதுவே நடந்தது. பல பாகவதர்கள் வரத்தொடங்கினர்.
தியாகராஜனுக்கு ஒரே மகள்.

அவர் நலத்தை பகவான் பார்த்துக்கொண்டார். தியாகராஜரின்
பக்தரான ஒருவர் தன்னுடைய மகனுக்கு இவர் மகளை திருமணம்
செய்து கொடுக்கும்படி கேட்டார். சிஷ்யர்களின் உதவியால் திருமணம்
நடந்தது. தியாகராஜரின் கீர்த்தனங்களும் இப்பொழுது பிரசித்தி
பெற்றுவிட்டன.

மகாராஜாவே தன் அவைக்கு வரும்படி அழைத்தார். ஆனால்
தியாகராஜர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில்
ஸ்ரீராம கைங்கர்யங்கள் அரசரின் கட்டளையால் தடைபடும் என்று
நினைத்தார். ஸ்ரீராமருக்கு மட்டுமே தன் கைங்கர்யங்கள் என்பதில்
திடமாக இருந்தார்.

எனவே ராம சேவையை விட்டு அவைக்கு வர இயலாது என்று கூறி
மறுத்துவிட்டார். இதைப் பார்த்ததும் ஜெபேசனுக்கு மிகக் கோபம்
வந்தது. அரசனைப்பற்றி பாடி சன்மானம் பெற அனைவரும் ஏங்கும்
நிலையில் அரசன் அழைத்தும் நீ போக மறுத்து விட்டாயே?

உன் பின் நானும் வந்திருப்பேன். எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.
எல்லாவற்றையும் உன் முட்டாள் தனத்தினால் கெடுத்துவிட்டாயே
என்று கத்தினான். அவன் கோபமெல்லாம் ஸ்ரீராமபிரான் மீது
பாய்ந்தது.

இதற்கெல்லாம் காரணம் இந்த ராமனே என்று கத்தினான்.
தியாகராஜர் அமைதியாக ஸ்ரீராமபிரானுக்கு டோலோத்சவத்தை
முடித்துக்கொண்டு தானும் சென்று படுத்தார்.

காலை சுப்ரபாதத்திற்கு பகவானை எழுப்ப கதவைத் திறந்தார்
தியாகராஜர். அங்கு ஸ்ரீராமபிரானை காணவில்லை.

என் ராமன் எங்கே! எங்கே! என்று தேடினார். ராமா! ராமா! என்றே
அலறிக் கொண்டிருந்தார். ஒரு வாரமாகியும் உணவு, உறக்கமின்றி
ராமா! ராமா! என்றே அழுது கொண்டிருந்தார். அவர் மனைவியும்
சாப்பிடவில்லை. அன்றிரவு தியாகராஜரின் கனவில் ஸ்ரீராமபிரான்
தோன்றி

‘‘ஜெபேசன் என்னை காவிரியில் போட்டுவிட்டான். ஒரு வாரமாக
காவிரியில் வெள்ளம் நிறைய இருந்தமையால் நீ மூழ்கிவிடுவாய்
என்பதால் நான் என்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை என்று
கூறி தான் இருக்கும் இடத்தை காண்பித்தார்.

பொழுது விடிந்ததும் தியாகராஜரும், சிஷ்யர்களும் காவிரிக்கு
ஓடினார்கள். ஸ்ரீராமபிரானை மீண்டும் இல்லத்திற்கு எழுந்தருளச்
செய்தார்.

தியாகராஜர் சாஸ்திரம் அறிந்தவராதலால் ஹோமம், பாராயணம்
முதலியவை செய்து பிரதிஷ்டை செய்துதான் ராமபிரானுக்கு
ஆராதனை செய்ய வேண்டும் என்பதை அறிந்தார்.

ராமபிரானுக்கும், தியாகராஜனுக்கும் தொண்டு செய்ய காத்திருந்த
மக்கள் திரண்டு வந்தனர். பாராயணம் செய்பவர்களுக்கு தட்சணை
கொடுப்பதற்கும், தேர் கட்டுவதற்கும், பலர் முன்வந்தனர்.

தியாகராஜரின் பாடல்களை அவர் முன்னே பாட முடிகிறதே என்று
பாடிக்கொண்டு வந்தனர் சிலர். சிலர் பஜனை செய்தனர்.
தியாகராஜரின் இல்லத்து வாசலில் ஸ்ரீராமபிரான் கம்பீரமாக
தேரிலிருந்து இறங்கினான். ஜெபேசனுக்கு கண்களிலிருந்து நீர்
வழிந்தது.

ஓடி வந்து தியாகராஜரை கட்டிக்கொண்டான். ‘‘நீ சிறியவன்.
ஆனால் நான் உனக்கு மிகவும் அபசாரம் செய்துவிட்டேன்.

ராமன் என்னைப் பார்த்து சிரிக்கிறான். என்னை காவிரியில் வீசி
எறிந்தாயே என்னைப் பார். இப்பொழுது கோலாகலமாக
எழுந்தருளியிருக்கிறேன்” என்று என்னைக் கண்டு சிரிக்கிறான்.
நான் என் தவறை உணர்ந்துவிட்டேன். நாம் இருவரும் ஒரே
குடும்பமாகவே இருந்து ராமருக்கு சேவை செய்யலாம் என்றான்.

வருத்தப்படாதே அண்ணா! உன்னை பக்திமானாக செய்வதற்காக
இது ராமன் லீலை என்றார் தியாகராஜர். தியாகராஜர் மார்கழி
மாதம் பகுள பஞ்சமி அன்று ஸ்ரீராமர் திருவடியை அடைந்தார்.

இன்றும் திருவையாறில் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை அவர்
கீர்த்தனைகளுடன் நடைபெற்று வருகிறது.
-
--------------------------------

வைதேகி கிருஷ்ணமாச்சாரி
நன்றி-தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 12, 2018 2:20 pm

திருவையாறு தியாகராஜர் ஆராதனை VIKATAN_CLICKS_CARD_-5_17025
-
காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு என
ஐந்து நதிகள் தவழும் திருவையாற்றில் காவிரியின் எழில்காட்சி...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 12, 2018 2:20 pm

திருவையாறு தியாகராஜர் ஆராதனை VIKATAN_CLICKS_CARD_-8_17464
-
பஞ்சரத்ன கீர்த்தனை பிறந்த திருவையாற்றில் தவழும்
காவிரியில் நீராட, பாவங்கள் யாவும் விலகுமே..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 12, 2018 2:21 pm

திருவையாறு தியாகராஜர் ஆராதனை VIKATAN_CLICKS_CARD_-10_17106
-
அப்பர் பெருமானுக்குத் திருக்கயிலைக்
காட்சி அருளிய ஶ்ரீஐயாறப்பரின் ஆலயத் தோற்றம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக