புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_m10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_m10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_m10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_m10வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 7:54 pm

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்! 1eacc210
கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியில் இடைக்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வடலூர் வழியாகச் செல்லும் கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பழைமையான காளி கோயில் அருகே கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இடைக்கால மக்கள் வாழ்ந்த வாழ்விடப் பகுதியை ஆத்தூர் அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் இரா.கோமகன் ஆகியோர் கண்டறிந்தனர்.
காளி கோயில்: வடலூர் காளி கோயிலில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிற்பம் உள்ளது. இந்தச் சிற்பமானது 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட நீள் செவ்வக வடிவ கற்பலகையில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
சிலையின் தலைப் பகுதியானது ஜடாமகுடத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நெற்றியில் கல்மணிகளால் அழகுபடுத்தப்பட்ட நெற்றிச் சுட்டியும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி ஹாரம் போன்ற அணிகலன்களும், கைகளில் காப்பும், மார்பு கச்சையின் கீழ் வயிற்றுப் பகுதியில் வீர சங்கிலியும் காணப்படுகிறது. மேலும், கொற்றவையின் முகம் நீள் வட்ட வடிவில் சதைப் பற்றுடன் சாந்த நிலையில் காட்சியளிக்கிறது. இந்தச் சிற்பத்தின் தோள் பகுதி அகன்றும், இடை சிறுத்தும் உள்ளது.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 7:55 pm

கொற்றவையின் வலது கரங்கள் மேலிருந்து கீழாக சக்கரம், வாள், கபாலம் போன்றவைகளை தாங்கி உள்ளன.
ஒரு கை உடைந்துள்ளது. இடது கரங்கள் சங்கு, வில், கேடயம் போன்ற ஆயுதங்களை தாங்கியவாறும், கீழ்கரம் தர்ஜனீகஸ்தத்துடன் எதிரியை அச்சுறுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் முதுகுப்புறத்தில் அம்புத்தூரிகை உள்ளது.
கொற்றவையின் இடுப்பில் அணியப்பட்டுள்ள இடைக் கச்சையானது குஞ்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டு, எருமைத் தலை மீது ஒரு காலை நிலையாக ஊன்றியும், மற்றொரு காலை சற்று மடக்கி வைஷ்ணவ ஆசனத்தில் நின்றவாறும் பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக உள்ளது.
இந்தச் சிலையின் முகத்தில் பல்லவர் கால கலைப் பாணியும், உடல் பகுதியில் முற்கால சோழர் கலைப் பாணியின் தாக்கமும் உள்ளதால் இதன் காலம் கி.பி. 9 - 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
பல்லவர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த சோழர்கள் பல்லவ கலைப் பாணியை அப்படியே ஏற்றுக்கொண்டு, தங்களது கலைப் பாணியில் சிறு, சிறு மாற்றங்களைச் செய்து சோழர்கலை மரபு என்ற தனி கலைப் பாணியை உருவாக்கினர் என்பதற்கு இந்தச் சிற்பமே சிறந்த சான்றாக உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 7:56 pm

கட்டடப் பகுதிகள்: வடலூர் காளி கோயிலில் இருந்து கிழக்கு - மேற்காக சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பெரிய பண்பாட்டுப் பகுதி கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியில் வீடு கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் இருந்து 27 ஷ் 17 ஷ் 7 செ.மீ. அளவுள்ள செங்கற்கள் வெளிப்பட்டன. இதே அளவுள்ள செங்கல்கள் தாராசுரம் அகழாய்வில் கிடைத்துள்ளன. மேலும், காளி கோயிலின் கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழை நீரை வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கட்டடத்தின் தரைதளப் பகுதி வெளிப்பட்டது. இதில் 24 ஷ் 12 ஷ் 4 செ.மீ. அளவுள்ள செங்கல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதே அளவுள்ள செங்கல்கள் பழையாறை அகழாய்விலும் கண்டறியப்பட் டுள்ளன. மேலும், தரைத் தளத்தை ஒட்டியவாறு வடக்கு - தெற்காக 2 அடி அகலத்தில் மிகப்பெரிய செங்கற்சுவர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பள்ளத்திலிருந்து இடைக்காலத்தைச் சேர்ந்த சிவப்பு நிற பானையோடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்துள்ளன. இந்த கூரையோடுகள் கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் கிடைக்கப்பட்டுள்ள ஓடுகளின் அமைப்பை ஒத்துள்ளன. மேலும் காளி கோயில் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள சான்றுகளை ஆய்வு செய்ததில், கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 7:56 pm

சோழர் கால நாணயங்கள்: வடலூர் காளி கோயிலின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் நடைபெற்ற கள ஆய்வில், மண்ணின் மேற்பரப்பிலிருந்து இராஜராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட 12 செப்பு நாணயங்கள் கிடைத்தன. இந்த நாணயங்களின் முன் பகுதியில், நிற்கும் மனித உருவமும் அதன் இடதுபக்கத்தில் விளக்கு ஒன்றும் உள்ளது. பின் பகுதியில் அமர்ந்த மனித உருவத்தின் கையருகே "ஸ்ரீராஜராஜ' என்று நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதை ஈழக்காசு என்று அழைப்பர்.
இந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் 8 கிராம் எடை கொண்டது. கி.பி. 985 முதல் கி.பி.1014-ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசின் மாமன்னராக விளங்கிய முதலாம் இராஜராஜ சோழனது காலத்தில் வெளியிடப்பட்ட இந்த நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் வடலூர் பகுதியில் கிடைத்துள்ளதால் சோழர் காலத்தில் இந்தப் பகுதி சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும்.
வடலூர் பகுதியில் இதுவரை சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், வடலூர் அருகே உள்ள சந்தவெளிப்பேட்டை, கீழூர் ஆகிய கிராமங்களில் சோழர் காலத்தைச் சேர்ந்த 3 கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
மேலும் வடலூரைப் போன்று அதைச் சுற்றியுள்ள ஊர்களான மருவாய், சந்தவெளிப்பேட்டை , பெரியகோயில்குப்பம் , பூசாளிக்குப்பம் போன்ற ஊர்களில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன என்றார் வரலாற்று ஆய்வாளர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக