புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:19 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
61 Posts - 47%
heezulia
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
3 Posts - 2%
Shivanya
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
1 Post - 1%
prajai
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
14 Posts - 3%
prajai
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
9 Posts - 2%
jairam
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_m10தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல் - முதல் பகுதி


   
   

Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 22, 2018 11:34 pm

First topic message reminder :


தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 277927208083201
















தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:53 am


இமயமலை மகா பெரியதாக இருக்கலாம். கடுகு சின்னஞ் சிறியதாக இருக்கலாம். ஆனால், இமயமலைக்குள் இருக்கிற அத்தனை அவயவங்கள் கடுகுக்குள்ளும் இருக்கும். கடுகைக்கூட அப்படியே பிரித்துக் கொண்டே போகலாம். கடைசியில் ஒர் அணு வந்து நிற்கும். அப்புறம் பிரிக்க முடியாது. சர்வ வியாபகமாக, இத்தனை அண்ட சராசரங்களாகப் பிரிந்திருக்கிற சிவ – சக்திகளை பிரிக்க முடியாமல் ஓரிடத்தில் பார்க்க வேண்டும் என்றால், அது அவர்களது அன்பு ஊற்றெடுக்கிற இருதய மத்தியில்தான். பலவாக அவர்களிடமிருந்து விரிந்திருப்பதெல்லாம் ஒன்றாகக் குவிகிறது. இந்த அன்பு என்கிற அணுவில்தான்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ (து) ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவ (து) ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

என்கிறார் திருமூலர். அன்பு ஒன்றே உள்ள அந்த மனஸைத் தெரிந்து கொண்டு விட்டால், அப்புறம் நம் மனஸும் நூறாயிரம் திசைகளில் ஒடாது; அன்பிலேயே முழுகிக் கரைந்து அன்பாகவே ஆகிவிடும். அருணகிரிநாதன் பெற்ற அநுபூதி இதுதான்.

பரமேசுவரன் வஸ்து (Matter); அம்பாள் அதன் சக்தி (Energy) என்ற ஸயன்ஸ் சூத்திரமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். வஸ்துவின் ஸத்தை (சிவமயமான வெறும் இருப்பு) , அதன் மகாசக்தி (அம்பாளின் ஆற்றல்) இதுகளை மட்டும் சொல்லிக்கொண்டு நமக்கு என்ன பிரயோஜனம்? நம்மைக் கடைத்தேற்றப் போவது அவர்களுடைய அன்புதான், அருள்தான். இருவருடைய அன்பும் பொங்கிப் பெருகிக் கலந்த இந்த இடம்தான் அவர்களுடைய செல்லப் பிள்ளையான ஸுப்ரம்மண்யர். கடைக்குட்டி யாருக்குமே செல்வம்தானே? ‘செல்வ முத்துக் குமரன்’ என்றே வைத்தீசுவரன் கோவிலில் அவருக்குப் பெயர். உள்ளே ஒன்றாக இருந்த அன்பு, இரண்டாகப் பிரிந்து மறுபடி ஒன்றாகக் கலந்து இப்படி நாம் உபாஸிப்பதற்கு சுலபமாக சுப்ரம்மண்யமாக மூர்த்திகரித்திருக்கிறது.

சிவ – சக்தி ஜோதியில் ஜனித்த அவர் மகா தேஜஸ்வி; பரம பராக்கிரமசாலி; எவராலும் சம்ஹரிக்க முடியாத சூரன். தாரகன் முதலான அசுரர்களை வெல்லவே தோன்றிய மகா சக்திமான். சக்தி வேல் என்றே சொல்கிறோம். ஆனால், இந்தப் பராக்கிரம சக்தியோடு, அருட்சக்தியாக இருப்பதே அவருடைய விசேஷம்.

அறிவுச் சக்தியாக இருக்கிறவரும் அவர்தான். ‘ஞான பண்டிதன்’, ‘ஞானஸ்கந்தன்’ என்பார்கள். ஆதிகுருவான தகப்பனாருக்கே உபதேசம் பண்ணினவன். “ஸ்வாமி” என்று அமரத்தில் சொல்லப்படுகிற ஸுப்ரம்மண்யர் இந்த அவசரத்தில் (கோலத்தில்) ‘தகப்பன்சாமி’ எனப்படுகிறார். ‘ஸ்வாமி மலை’ என்றே அவர் சிவனுக்குப் பிரணவோபதேசம் செய்கிற ‘ஸுப்ரம்மண்ய’ ஸ்தலத்துக்குப் பெயர் இருக்கிறது. அங்கே அவரை ‘ஸ்வாமிநாதன்’ என்பார்கள்.

செல்லப்பிள்ளை! அதனால் தன்னைக் காட்டிலும் இந்தப் பிள்ளையை எல்லா அம்சங்களிலும் பெரியவனாகக் காட்டி பூரித்துப் போகிறார் பரமேசுவரன். ‘என்னை விட இவன் ஞானி’ என்று பிள்ளையிடமே தாழ்ந்து உபதேசம் வாங்கிக் கொள்கிறார். ‘வர பலம் பெற்றுள்ள தாரகன், சூரன் இவர்களை நான் வதைக்க முடியாது; என்னாலும் முடியாததைச் செய்ய – அதாவது என்னைவிடப் பெரியவனாக ஒருத்தன் வரவேண்டும்’ என்றே இந்தப் பிள்ளையைப் படைத்தார். அப்புறம் ஞானபலமும் அவனுக்கே அதிகம் என்று காட்ட அவனிடமே உபதேசம் பெற்றுக் கொண்டார். ‘எங்கேயும் தனக்கு வெற்றியைத்தான் விரும்ப வேண்டும். ஆனால் பிள்ளையிடத்தில் மட்டும் தோல்வியை விரும்ப வேண்டும்’ (புத்ராத் இத்தேச் பராஜயம்) என்பார்கள். அதாவது, ஒவ்வொரு பிதாவுக்கும் தன்னைவிடத் தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும், புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றுதான் இருக்கும். பரமேசுவரனுக்கே இப்படித்தான் இருந்திருக்கிறது! தானே அம்பாளோடு சேர்ந்து பிள்ளையாக வந்தான் என்றாலும் இப்போது வீரம், ஞானம், லாவண்யம் எல்லாவற்றிலும் முன்னைவிட அதிகமான பிரகாசத்தை எடுத்துக்கொண்டான்.

இங்கே லாவண்யத்தைச் சொன்னேன். ஈசுவரன் மன்மதனைத் தகனம் பண்ணியபின், மன்மதன் திமிரோடு பிரயோகம் செய்த அதே கரும்பு வில்லையும் புஷ்ப பாணத்தையும் அம்பாள் எடுத்துக் கொண்டு காமாக்ஷியானாள். ஈசுவரனைத் திமிரோடு நெருங்காமல் அன்போடு பார்த்து, அவரிடம் அடங்கி, இவற்றைப் பாதத்தில் அர்ப்பணம் செய்தாள். சண்டை போட்ட மன்மதனால் உண்டாக்க முடியாத அன்பு, இப்போது இவளது பணிவினாலேயே ஈசுவரனுக்கு உண்டாகி விட்டது. அதன் விளைவாகவே ஜனித்த குமாரன் இவன். இப்போது பார்த்தால், இவனே ஈசுவரன் பொசுக்கின மன்மதனுக்கு மன்மதனாக இருக்கிறான். தமிழில் ‘காமவேள்’ ‘செவ்வேள்’ என்று மன்மதன், முருகன் இவருக்கு மட்டுமே ‘வேள்’ என்கிற பதத்தைப் பொருத்துகிறார்கள்! அது அவனுடைய லாவண்யப் பெருமை.

‘முருகன்’, ‘முருகன்’ என்பது தமிழ்நாட்டில் வழங்குகிற வெகு சிறப்பானப் பெயர். ‘முருகன்’ என்றாலும் ‘அழகானவன்’, ‘என்றும் இளமை நலம் மாறாத சௌந்தர்யம் வாய்ந்தவன்’ என்பதே அர்த்தம்.

அழகு என்றால் அது வெறும் சரீர அழகு. அருளின் அழகுதான் இப்படி தேக காந்தியாக வந்திருக்கிறது. பரமேசுவரன் அம்பாள் சம்பந்தத்தோடு இப்படி குமாரனாக ஆவிர்பவித்தபோது வீரம், ஞானம், சௌந்தர்யம் இவற்றோடு அருளிலும் அதிகப் பிரகாசத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஸத் – சித் ஆனந்தம் என்று சொல்வார்கள். அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேசுவரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிற ‘சித்’ அம்பாள்; இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரம்மண்யர். சிவம் என்கிற மங்களமும் அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த பரம உத்கிருஷ்டமான ஸ்தானம் அவர். ஸச்சிதானந்தத்தையே ‘சோமாஸ் கந்தர்’ என்று தமிழ் நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம். ஈசுவரனுக்கும் அம்பாளுக்கும் நடுவே, இருவருக்கும் பொதுவான மத்ய ஸ்தானமாக, சுப்பிரமணியர் குழந்தை ரூபத்தில் இருப்பார். உமையோடும், ஸ்கந்தனோடும் கூடியவர் (ஸஹ உமா ஸ்கந்தர்) தான் ஸோமாஸ்கந்தரான பரமேசுவரன். ‘பிள்ளையார்’ என்று விக்நேசுவரரையே சொல்கிற தமிழ்நாட்டிலும் இங்கே மட்டும் ‘குமரன்’ என்று சிறப்பிக்கப்படுகிற இளைய பிள்ளையை மட்டும், தாய் தந்தையாரோடு வைத்து மூன்று மூர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். ‘பிள்ளை என்றால் இவன்தான்’ என்று எல்லோரும் பெருமைப்படுகிற மாதிரி, பிதாவே பெருமைப்பட்டு தோல்வியை ஒப்புக்கொள்கிற மாதிரி இப்படி உத்தம அம்சங்கள் எல்லாவற்றிலும் உச்சமாக இருக்கிறார் ஸுப்ரமண்யஸ்வாமி.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:54 am


ஸ்கந்த மகாபுராணம்தான் புராணங்களுக்குள்ளேயே மிகப் பெரியது. ஏறக்குறைய ஒன்றரை லட்சம் சுலோகம் கொண்டது. உலகத்திலேயே இருப்பதற்குள் மிகப் பெரிய கிரந்தம் அதுதான் எனலாம். இப்படிப்பட்ட ஸ்காந்தம், இன்னம் வால்மீகி ராமாயணம், காளிதாஸரின் குமார ஸம்பவம் எல்லாம் ஸுப்ரம்மண்யர் பெருமையைச் சொல்கின்றன. ‘குமாரகுப்தன்’ என்கிற மாதிரி, பழைய ஆரியாவர்த்த ராஜாக்களின் பேர் சுப்ரம்மண்ய பரமாக இருக்கிறது. ரொம்பப் பழங்கால நாணயங்களில்கூட – வட இந்தியாவின் மூலைக் கோடிகளில் கண்டெடுக்கப்பட்டவற்றில் – மயூர வாகனராகக் குமாரஸ்வாமி இருக்கிறார். இப்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்ட எல்லை மாகாணத்தில் (North – West Frontier) கண்டெடுத்த குஷானர் நாணயங்களில் குமாரஸ்வாமி உருவம் பொறித்திருந்தது. வடபுலத்தின் பல ராஜ வம்ஸங்கள் அவரை ‘ப்ரம்மணிய குமாரர்’ என்று குலதெய்வமாகக் கொண்டிருக்கின்றன. அந்த ராஜாக்கள் தங்களையும் ‘ப்ரம்மண்யர்’கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். ‘ஸுப்ரம்மண்ய’த்தின் முதல் எழுத்தைத் தள்ளினால் ‘ப்ரம்மண்யம்’ தானே நிற்கிறது? இங்கே நம் தமிழ் நாட்டில் வேதத்துக்கும் சமஸ்கிருதத்துக்கும் ரொம்பத் தொண்டு செய்திருக்கிற காஞ்சிப் பல்லவ ராஜாக்களும், தங்களை சிவ பக்தியில் சிறந்த ‘பரம மாஹேசுவரர்களாகவும்’ விஷ்ணு பக்தியில் சிறந்த ‘பரம பாகவதர்’களாகவும் சொல்லிக் கொள்வதோடு, ஸ்கந்த உபாஸனையை விசேஷமாகச் செய்த ‘பரம ப்ராம்மண்யர்’களாகவும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். சாஸனங்களில் இவற்றைப் பார்க்கிறோம்.

எல்லாவற்றுக்கும் முற்பட்ட வேதத்தில் போற்றப்பட்ட ஸ்வாமியாக அவர் இருக்கிறார். ரிக்வேத பஞ்ச சூத்திரத்தில் “தகப்பன் சாமி” யைப் பற்றிய பிரஸ்தாவம் வருகிறது. பரமேசுவரனைப் போற்ற வந்த இந்த வேத ஸூக்தத்தில் ஒரு மந்திரம் ‘குமாரனை வணங்குகிற பிதா’ என்று அவரைக் கொண்டாடுவது அதிவிசேஷம். சாந்தோக்ய உபநிஷத்தில் ஸனத்குமார – ஸ்கந்தரைப் பற்றி வருகிறது. பாணினியின் வியாகரணம், அதற்குப் பதஞ்சலி செய்த மஹா பாஷ்யம் எல்லாவற்றிலும் ஸ்கந்தன், விசாகன் என்ற பெயர்களில் முருகனைப் பற்றிப் பிரஸ்தாவம் உண்டு.

போதாயன தர்ம சூத்திரத்தில் தினமும் செய்ய வேண்டிய வேத தர்பணங்களில் ஸ்கந்தனும், அவனது பார்ஷதரும் (பரிவாரங்களும்) இடம் பெறுகிறார்கள்.

தமிழபிமானம் உள்ளவர்களுக்கு இதை எல்லாம் சொல்ல வேண்டும். ஏனென்றால், தமிழ் மொழிக்கே முருகன்தான் அதிஷ்டான தெய்வம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்! ‘முருகன்’ என்று அலாதி அன்பு சொட்டச் சொல்வது தமிழர்களுக்கே உரிய பெருமை. ஆதிகாலம் தொட்டு இங்கு குறிஞ்சி நிலக்கடவுளாக அவரை வழிபட்டு வருகிறோம். தொன்மையிலும் தொன்மையான தொல்காப்பியம் இதை ‘சேயோன் மேய மைவரை உலகமும்’ என்கிறது. ஆறுபடை வீடுகள் என்று பிரசித்தமான சுப்ரம்மணிய க்ஷேத்திரங்கள் தமிழ் தேசத்தில்தான் இருக்கின்றன. அவர் தமிழை உண்டாக்கியவர், வளர்த்தவர். சங்கப்புலவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். அகஸ்தியருக்குத் தமிழிலக்கணம் உபதேசிக்கிறார். மிகப் பழய சங்க காலத்திலேயே நக்கீரர் இவர் மீது ‘திருமுருகாற்றுப்படை’யைப் பாடியிருக்கிறார். பலர் அதைப் பாராயணம் செய்தே கைகண்ட மருந்தாகப் பலன் அடைந்திருக்கிறார்கள். முன்னொரு முறை நம் மடத்துத் துவாரா மூலமாக ஒரு வைகாசி விசாகத்தின்போது இந்தத் திருமுருகாற்றுப்படையும், விநாயகர் அகவலையும் நிறைய அச்சுப் போட்டு எல்லோருக்கும் அன்பளிப்பாக வழங்கினோம் – விநாயக சதுர்த்திக்குள் இவற்றை மனப்பாடம் செய்ய ஒப்புக் கொண்டவர்களுக்கு. காவடி எடுப்பது, கிருத்திகா விரதம், சஷ்டி உபவாஸம் இருப்பதெல்லாம் தமிழ் நாட்டுக்கே விசேஷமானவை.

இதனாலெல்லாம் முருகனைத் ‘தமிழ்த் தெய்வம்’ என்று குறிப்பாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் இந்தக் காலத்தில் தமிழ் மதம் வேறு, வேதநெறி வேறு என்று பேதம் செய்வதில் சிலருக்கு ருசி இருந்து வருகிறது. இது ஆராய்ச்சி என்று சொல்லிக் கொண்டு நம் ஜனங்களை பேதப்படுத்துவதற்காக வெள்ளைக்காரர்கள் செய்த விஷமத்தின் அனர்த்தமான விளைவு. வேத மதம்தான் என்றைக்கும் தமிழ் மதமாக இருந்திருக்கிறது என்பதுதான் என் அபிப்பிராயம். அந்த விவாதம் இப்போது வேண்டாம். குமாரஸ்வாமி ஒருத்தரை எடுத்துக் கொண்டால், ‘இவர் தமிழ் தெய்வம்’ என்கிற போது, ‘வேதத்திலும் தமிழ்நாட்டுக்கு வெளியிலும் இவர் ஆதியில் கிடையாது’ என்ற தப்பபிப்ராயம் ஏற்படக்கூடாது என்பதற்கே, ரிக்வேத காலத்திலிருந்து ராமாயணம், அப்புறம் புராண காலம், காளிதாஸன் காலம், குப்தர்கள் முதலிய ராஜாக்களின் காலம் எல்லாவற்றிலுமே பாரத தேசம் முழுக்க அவர் பெருமை பரவியிருந்திருக்கிறது என்று காட்ட வந்தேன்.

வைதிக நெறியை வளர்க்கவே ஏற்பட்ட ஸ்வாமி அவர் என்பதற்கு “ஸுப்ரம்மண்யர்” என்ற பெயரே போதும் என்று சமநிலையிலிருந்து (Un – biassed) பார்த்தால் தெரியும். பிரம்மண்யத்தை – அந்தணர்கள் பற்றி ஒழுகுகிற வேத நெறியை – வளர்க்கிறவர் சுப்ரம்மண்யர் என்பது வெளிப்படை.

வேதத்துக்கு முக்கியம் வேள்வி, யாகம். வேள்விக்கு முக்கியம் அக்னி. தெய்வங்களுக்குள் சுப்ரம்மண்யர்தான் அக்னி ஸ்வரூபமானவர். அவருக்குப் பஞ்சபூத சம்பந்தமும் உண்டு. ஆகாச ஸ்வரூபமான ஈசுவரனின் கண்களிலிருந்து நெருப்புப் பொறியாகத் தோன்றி, வாயுவும், அக்னியும் அவரைச் சுமந்து கங்கையிலே சரவணப் பொய்கை என்ற நீர் நிலையில் விட, அவர் அங்கே ஷண்முகராகி, பிறகு பூமி உச்சமாக எழுப்புகிற மலைச்சிகரங்களிலெல்லாம் கோயில் கொண்டிருக்கிறார். இப்படிப் பஞ்சபூத சம்பந்தமிருந்தாலும் அவர் அக்னிச் சுடராகவே பிறந்தவர். அக்னியில் பிறந்தவர் – “அக்னி பூ” – என்றும் அவருடைய பெயர் வரிசையில் அமரகோசம் சொல்லிக் கொண்டு போகிறது.

ஸேநானீ: அக்னி: பூ குஹ:

குகையில், நம் இருதய குகையில் ஆத்ம ஸ்வரூபமாக அரூபமாக இருக்கிற குகன், இப்படி வெளிப்பட்ட பஞ்சபூதங்களில் இருந்தாலும், முக்கியமான அக்னி ஸ்வரூபியாக இருப்பதால் அவர் அக்னியாராதனையை மையமாகக் கொண்ட வேதப் பிரதிபாத்யமான தேவதையே ஆவார்.

வேதநெறி க்ஷீணித்தால் அதைப் புணருத்தாரணம் பண்ணுவதே சுப்ரம்மண்ய ஸ்வாமிக்கு முக்கியமான காரியமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு முறையும், வட தேசத்தில் ஒரு முறையும் இப்படிப் புறச் சமயங்களை வென்று வைதிகத்தை ஸ்தாபிக்கவே அவர் இரு அவதாரங்கள் செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட அவதாரம் ஞானசம்பந்தர், பரமேசுவரனோ, முருகனோ அவதாரம் செய்ததாகச் சொன்னால் இழுக்கு என்று நினைக்கிற சித்தாந்திகள் இருக்கிறார்கள். கர்ப்பவாஸம் செய்தால் நிஷித்தம் என்பது அவர்கள் கருத்து. ‘விஷ்ணுதான் அவதரிப்பவர், எங்கள் ஸ்வாமியான சிவபெருமான் பிறவாயாக்கை’ என்பார்கள். ஆனால், அத்வைதிகளுக்கு எல்லா ஸ்வாமியும் ஒன்றுதான். ஜீவாத்மாவும் பரமாத்மாவும்கூட ஒன்றுதான். இத்தனை ஜீவர்களாக அந்தப் பரமாத்மா கர்ப்பவாஸம் பண்ணி வெளி வந்திருப்பதையே இழுக்காக நினைக்காமல் இவனிடம்கூட ‘நீயும் பிரம்மம் தானப்பா’ என்று சொல்வது நம் கொள்கை. தப்புப் பண்ணுகிற ஜீவர்களை ரக்ஷிப்பதற்காக, ஒரு பாபமும் தொடமுடியாத ஸ்வாமி அவர்களில் ஒருத்தராகப் பரம கருணையுடன் அவதரிப்பதாகச் சொல்வது அவருக்குப் பெருமை தருவதாகவே நமக்குத் தெரிகிறது. அருணகிரிநாதரைவிடப் பெரிய முருகனடியார் இருக்க முடியாது. அவரே திருப்புகழில் முருகனை “உறை புகலியூரில் அன்று வருவோனே” என்கிறார். புகலியூர் என்பது சீர்காழி. ஞான சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் சீர்காழியில்தான் அவதாரம் செய்தார்.

ஞானசம்பந்தர் எதற்கு அவதரித்தார் என்பதைச் சேக்கிழார், “வேதநெறி தழைத்தோங்க” என்று சொல்கிறார். சமணர்களை வாதில் வென்று பிரம்மண்யத்தை நிலைநாட்டினவர் ஞானசம்பந்தர். தமிழ் வேதமான தேவாரம் பாடிய அவரும் தம்மை “நான்மறை ஞானசம்பந்தன்” என்றே சொல்லிக் கொள்கிறார். இந்த மறைகளை, மறை கூறும் யாகாதி கர்மாக்களை வாழ்த்தி வளர்ப்பது முருகனுக்கே ஏற்பட்ட ஒரு விசேஷமான காரியம் என்று, ‘திருமுருகாற்றுப்படை’யும் சொல்கிறது.

தொன்மை வாய்ந்த பத்துப்பாடலில் முதலாவதாக இருக்கிற நூல் அது. தமிழ்நாட்டில் குறவரினத்திலிருந்து சகல சமுதாயத்தினரும் சுப்ரம்மண்யரை எப்படி எப்படி வழிபட்டார்கள் என்பதை அது சொல்கிறது. நக்கீரர் அதில் ஷண்முக நாதனின் ஆறுமுகங்களில், ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு விசேஷமான காரியத்தைச் சொல்கிறபோது,

ஒரு முகம்

மந்திர விதியின் மரபுளி வழா அது

அந்தணர் வேள்வி ஓர்க்கும் மே

(மந்திர விதி தப்பாமல், வைதிக சம்பிரதாயப்படி பிராமணர்கள் செய்கிற யாகங்களைக் கண்டு இன்புற்று அவற்றை வளர்க்கவே முருகனுக்கு ஒரு முகம் இருக்கிறது) என்றார்.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:54 am


இந்தக் காலத்தவர்களுக்குச் சில புதுக் கொள்கைகளில் ரொம்பவும் அபிமானம் இருக்கிறது. அதற்காக, பழங்காலத்தில் இருந்தவர்களையும் தங்கள் கொள்கைப்படி நடந்தவர்களாகக் காட்ட வேண்டும் என்று நினைத்து, அவர்கள் அபிப்பிராயங்களை மாற்றிச் சொல்லக்கூடாது. பிடிக்கிறவர்கள் புதுக் கொள்கைகளை வைத்துக் கொள்ளட்டும்; ஆனால், நம் பூர்விகர்கள்மீது இவற்றைச் திணிக்கக்கூடாது. முருகன் வேத மதத்தில் இல்லாதவன், தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் உரியவன், இங்குதான் ஆதி (ஒரிஜினல்) யில் இருந்தவன் என்பது ஒரு புதுக் கொள்கை.

யாகம் செய்கிற வேதியர்கள் தொழுகிற தெய்வம் என்று திருப்பரங்குன்றத்தில் இருக்கிற முருகனை சங்க நூலான திருமுருகாற்றுப்படை சொல்கிறது. முருகன் அவதாரமான ஞானசம்பந்தர் தாம் வேதத்தை வளர்க்கவே வந்ததாகச் சொல்லிக் கொள்கிறார். “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி யமண்” என்றும், “மறை வழக்கமிலா மாபாவியர்” என்றும் சம்பந்தரே சொல்லியிருக்கிற சமணர்களை வென்று மறுபடி வைதிக தர்மத்தை நிலைநாட்டத்தான் அவர் அவதாரம் பண்ணினார். ஸாக்ஷாத் அம்பாளுடைய க்ஷீரத்தை சம்பந்தர் பானம் பண்ணினார் என்பதே அவர் அவளுடைய நேர்ப்பிள்ளையான ஸுப்ரம்மண்யம் என்பதற்கு அத்தாட்சி. பிரம்மண்யத்தை – வைதிக தர்மத்தை – வாழ வைப்பதே தம் லட்சியம் என்பதாலேயே “வாழ்க அந்தணர்” என்ற தேவாரப் பாடலால் முடிந்த முடிவாகச் சமணரை ஜயித்தார். அந்தத் கதையைச் சொல்கிறேன்.

சமணர்களுக்கு அவர் அறிவு ரீதியில் வாதம் செய்து ஜயித்தது போதவில்லை. பாண்டிய ராஜாவுக்குத் திருநீற்று மகிமையால் வெப்பு நோய் தணித்ததும் போதவில்லை. தானாகவே உடம்பு குணமாயிருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ? மறுக்க முடியாத அற்புதத்தால் மதத்தை நிலைநாட்டப் பரீட்சை வைத்தார்கள். அதாவது அனல்வாதம், புனல்வாதம் செய்யவேண்டும் என்றார்கள். இரு கட்சிக்காரர்களும் தங்கள் தங்கள் கொள்கைகளைச் சுவடியில் எழுதி நெருப்பில் போடவேண்டும். எந்தச் சுவடி எரியாமல் இருக்கிறதோ, அதில் இருக்கிற தத்வமே சத்தியம் என்பது அனல் வாதம். ஆற்று ஓட்டத்தில் இரு தரப்பினரும் தங்கள் சுவடிகளை விட வேண்டும். எது பிரவாகத்தின் கதியை எதிர்த்து மறு திசையில் செல்கிறதோ அதுவே உண்மை என்பது புனல் வாதம். முதலில் அனல் வாதத்தில் சம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளே ஜயித்தார். அப்புறம் புனல் வாதம்.

ஜைனர்கள் ‘விப்ர க்ஷயம்’ என்று சுவடியில் எழுதி ஆற்றில் போட்டதாகச் சொல்கிறார்கள். ‘விப்ர க்ஷயம்’ என்றால் ‘பார்ப்பானே ஒழிக’ என்று அர்த்தம். வேத வேள்விகள் பரம அஹிம்ஸாவாதிகளான சமணர்களுக்கு விரோதமானதால் இப்படி எழுதி வெள்ளத்தில் போட்டதாகச் சொல்கிறார்கள். அது முழுகிப் போயிற்று.

அப்புறம் சம்பந்தர் ஒரு தேவாரப் பாடலை எழுதிப் பிரவாகத்தில் போட்டார். அந்தச் சுவடியோ அலையோட்டத்தை எதிர்த்துக் கொண்டு கன ஜோராகச் சென்றது. குலச்சிறையார் என்கிற பாண்டிய மந்திரி குதிரையில் ஏறி, கரையோடு அந்த ஏடு போகிற திசையில் வேகமாகச் சென்றார். அப்புறம் சம்பந்தர் ஒரு பதிகம் பாடி அதை நட்டாற்றில் நிற்கச் செய்தார். குலச்சிறையார் அந்த ஏட்டை ஒரே சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டு கரை சேர்ந்த இடம் இப்போது “திருவேடகம்” (திரு ஏடு அகம்) என்று வழங்குகிறது. இதுவே, சம்பந்தரின் முடிவான வெற்றி. புனலை எதிர்த்துப் போன அந்த ஏட்டில் சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் என்ன எழுதியிருந்தார்?

“வாழ்க அந்தணர்” என்றே ஆரம்பிக்கிறது அந்தத் தேவாரப் பாடல். வேதம் இருந்தால்தான், பிரம்மண்யம் இருந்தால்தான் லோகத்துக்கு, க்ஷேமம் என்பதில் சம்பந்தருக்குக் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை; அதற்கு உபகரிப்பதே தம் ஜன்மவிரதம் – அவதார காரியம் – என்று தயங்காமல் வெளியிட்டார் என்பது இதிலிருந்து தெரிகிறது. நவீன காலத்தில் சிலருக்கு இந்தக் கொள்கை பிடிக்காமலிருக்கலாம். ஆனால், சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளுக்கு அதில் நிச்சயமான உறுதியிருந்தது என்பதை ஆட்சேபிக்க முடியாது.

அது சரி; ஆனால், வேதத்தை ஓதிக் கொண்டு, யாகம் செய்து கொண்டிருக்கிற ஒரு கூட்டம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு மகான் நினைப்பாரா? சர்வ ஜனங்களும் சமஸ்தப் பிராணிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் மகானின் ஸதா கால நினைப்பாக இருக்கும். ஞான சம்பந்தர் மேலே சொன்ன பாடலை இப்படித்தான் ஆசீர்வாதம் செய்து முடிக்கிறார்:

வையகமும் துயர் தீர்கவே

“லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து” என்பது தமிழ்க் குழந்தையின் அருகில் இப்படி அருள் சொட்ட வெளிவந்திருக்கிறது. சரி, வையகம் என்றால் அதில் எல்லா ஜீவராசிகளும் ஜாதிகளும் அடக்கம்தானே? அப்படியானால் வையகம் முழுவதும் துயர் தீருகிறபோது, தானாகவே அதிலிருக்கிற அந்தணர்களும் வாழ்ந்து விட்டுப் போகிறார்கள். அவர்களை எதற்கு, வையகத்தைச் சேராதவர் மாதிரி தனியாகப் பிரித்து, முதல் ஸ்தானம் கொடுத்து, “வாழ்க அந்தணர்” என்று சொல்ல வேண்டும்? பிராம்மண ஜாதியில் பிறந்ததால் சம்பந்த மூர்த்தி ஸ்வாமிக்குத் தனி அபிமானமா? ஒரு மஹானுக்கு இப்படி சின்ன அபிமானங்கள் இருப்பதாகச் சொல்வது நன்றாகவேயில்லையே!

லோக க்ஷேமம்தான் அவருக்கு லக்ஷ்யம். ஆனால், அதற்கு சாதனம் வேத யக்ஞங்கள்தான். இதனால்தான் வேத கர்மாக்களைச் செய்கிறவர்களைத் தனியாகப் பிரித்து முதலில் சொன்னார். – பட்சபாதம் இல்லை.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

வானவர்களான தேவர்களுக்கு யக்ஞத்தில் ஆஹுதி கொடுத்தால்தான் மழை பெய்யும் – தண்புனல் வீழும். மழை பெய்து தானிய சுபிக்ஷம் உண்டானால்தான் ராஜாங்கம் செழிக்கும் – வேந்தன் ஓங்குவான். நடுவே ‘ஆனினம்’ என்று ஏன் தனியாகச் சொல்லியிருக்கிறது? முடிகிறபோது ‘வையகம்’ என்று சொன்னதில் இதுவும் அடக்கம்தானே?அந்தணரைத் தனியாக சொன்னதற்குக் காரணம், அவர்கள் செய்கிற யாக கர்மா என்று சொன்னீர்கள்; சரி, ‘பசுக்களை – ஆனினத்தை – தனியாகச் சொன்னது ஏன்?’ என்று கேட்பீர்கள். லோகோபகாரம் செய்ய வேண்டும் என்கிற பரம நியமங்களுடன் வாழ்ந்து வேதங்களைச் சொல்லி ஆஹுதி செலுத்தி யாகத்தைச் செய்பவர்கள் என்பதால் அந்தணர்களைச் சொன்னது போலவேதான், யாகத்தில் ஆஹுதியாகிற நெய்யையும் பாலையும், எரிப்பதற்கு உதவுகிற சாணத்தையும் தருகிறது, என்பதாலேயே ஆனினத்தைத் தனியாக குறிப்பிட்டார். ஆக தனியாக இவை மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஓரவஞ்சனையில்லை. வையகம் துயர்தீர உதவியாக நடைபெற வேண்டிய வேள்விக்கு உதவி செய்வதாலேயே தனியாக வாழ்த்தினார். லோகோபகாரமாக வேத கர்மத்தைச் செய்வதற்காகத்தான் அந்தணரை வாழ்த்தினார். அந்தக் கர்மாவை விட்டுவிட்டவர்களுக்கு இந்த வாழ்த்து இல்லை; அப்படிப்பட்டவர்களுக்கு நானும் வக்காலத்து வாங்க வரவில்லை.

எங்கு பார்த்தாலும் வேள்விகள் நடந்து வேத நெறி விருத்தியானால், தீயதெல்லாம் தீய்ந்துபோகும் என்பது சம்பந்தர் சித்தாந்தம் என்று தெரிகிறது.

ஆழ்க தீயதெல்லாம் ! அரன் நாமமே

சூழ்க ! வையகமும் துயர் தீர்கவே !

என்று, பின் இரண்டு வரிகளில் பாடுகிறார்.

வேதநெறி என்பது ஒரு பெரிய ஆறு; ஒரு ஆற்றிலேயே பல படித்துறைகள் இருப்பதுபோல், வேத நெறியில் சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று பல இருக்கின்றன. இவற்றுள் “மிகு சைவத்துறை விளங்க” வந்தவர் ஞானசம்பந்தர் என்கிறார் சேக்கிழார். அதனால், வேத தர்மம் தழைத்தோங்குகிறபோது, எங்கு பார்த்தாலும் சிவபெருமானின் நாமமே – ஒலிக்க வேண்டும் என்கிறார். இப்படியிருந்தால் வையகத்தில் – ஒரு ஜாதிக்கு மட்டும் இல்லை என்பதோடு நம் பாரத தேசத்துக்கு, ஹிந்து சமூகத்துக்கு மட்டும் இல்லை; உலக முழுவதிலுமே – ஒரு கஷ்டம் இல்லாமல் எல்லோரும் ஆனந்தமாயிருப்பார்கள் என்கிறார்.

இந்த லோக க்ஷேம லக்ஷியத்துக்காகவே சிலர் யக்ஞாதிகளைச் செய்ய வேண்டும் என்று அவர்களை விசேஷமாக வாழ்த்தினார். அவர்களுடைய தர்மத்தை நிலைநாட்டித் தருவதே அவரது அவதார காரியமாக இருந்தது.

வேத தெய்வமாகக் இருந்துகொண்டு, பர மதங்களை நிராகரித்து, மறைவழக்கை நிலைநாட்டுவது சுப்ரம்மண்யரின் அவதார காரியம் என்பது இதிலிருந்து தெரிகிறது.

வடக்கே ஏற்பட்ட ஸுப்ரமண்ய அவதாரத்தைப் பற்றிச் சொல்கிறேன்.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:55 am


தென் தேசத்தில் சீர்காழியில் பிறந்து ஜைனர்களை ஜயித்த அதே குமாரஸ்வாமி வடதேசத்தில் பௌத்தர்களின் ஆதிக்கம் இருந்தபொழுது பிரயாகையில் அவதாரம் செய்தார். அவருக்குக் குமாரிலபட்டர் என்று பெயர். பேரிலேயே ‘குமார’ சம்பந்தம்!

பக்தி, ஞானம் இவற்றையெல்லாம்கூட ஒதுக்கிவிட்டு ‘நமக்கு வேதம் சொன்ன கர்மா இருக்கிறது. அதை அநுஷ்டித்தாலே பரம சிரேயஸ்’ என்று அநுஷ்டானம் செய்பவர்கள் இருந்தார்கள். இவர்களுக்குக் கர்ம மீமாம்ஸகர்கள் என்று பெயர். பூர்வ மீமாம்ஸகர்கள் என்றும் சொல்வதுண்டு. வேதம் சொன்னபடி கர்மா செய்த இவர்கள் அதனாலேயே லோக க்ஷேமம், ஆத்மதிருப்தி இரண்டும் உண்டாவதைப் பார்த்தார்கள். எனவே, கர்மாவுக்குப் பலன் தருபவன் என்று ஒர் ஈசுவரனைக்கொண்டு வருவானேன் என்பது இவர்கள் கட்சி. அதனால் பக்தி வேண்டியதில்லை என்பார்கள். ‘கர்மாவிலேயே நிறைவு இருக்கிறபோது கர்மமே இல்லாத ஆத்மாவைப்பற்றி எதற்கு ஞான விசாரம்? ஞானத்துக்காகவே கர்மாவை விடுவது பாபம்’ என்பார்கள். அதாவது ஞான மார்க்கமும் இவர்களுக்கு ஆகாது. குமாரிலபட்டர் இப்படிப்பட்டவர்தான். மீமாம்ஸ மதத்தில் மூன்று விதம் உண்டு. அவற்றில் பாட்ட மதம் என்பது (குமாரில) பட்டராலேயே ஏற்படுத்தப்பட்டது. அவர் மதம் ஸ்தாபித்ததற்கு முன் கதைக்குப் போகலாம். வேத கர்மம், தானே பலனைக் கொடுக்கிறது என்ற நம்பிக்கையுடன் சகல கர்மாநுஷ்டானங்களும் செய்து வந்தார்.

அப்போது வேத அத்தியயனம், யாகயக்ஞங்கள் முதலானவற்றைக் கண்டனம் செய்யும் பௌத்தர்களின் செல்வாக்கு அதிகமாகி வந்தது. அவர்கள் ஏன் அப்படிக் சொல்கிறார்கள், அவர்களுடைய கொள்கைகள் என்ன என்று பூரணமாகத் தெரிந்துகொள்ளக் குமாரிலபட்டர் விரும்பினார். வைதிக கர்மாநுஷ்டானத்தின் உயர்ந்த பலனில் அவருக்குச் சந்தேகமில்லை; அதை அவர் விடுவதாகவும் இல்லை.ஆனாலும்கூட உடனே பௌத்தர்களிடம் சண்டைக்கு கிளம்பிவிடவில்லை. ‘அவர்களுடைய கொள்கை எந்தப் பிரயோஜனத்துக்கு ஏற்பட்டது என்று பூரணமாகத் தெரிந்து கொள்ள வேண்டும், அப்புறம் நம் கொள்கையின் பிரயோஜனம் பெரிதா; அது பெரிதா என்று தெரியும். இதற்கப்புறம்தான் அதை நிராகரிக்கத் தொடங்கலாம், என்று திறந்த மனஸோடு எண்ணியிருப்பார் போலிருக்கிறது. அல்லது அந்த மதத்தைப் பூரணமாகத் தெரிந்துகொண்டால், பிற்பாடு வாதத்துக்கு இடமில்லாமல் நாமே பூரணமாக எதிர்வாதம் செய்து நிராகரித்து விடலாம் என்று எண்ணியிருக்கலாம்.

சுப்ரமண்யர் என்கிற நிலையிலேயே இருந்தால் எல்லா மத சித்தாந்தமும் கற்றுக்கொள்ளாமலே தெரிந்துவிடும்தான். ஆனால், சுப்ரம்மண்யராயிருந்து ஜயிப்பது உதவாது. ஏனென்றால், எப்போது பார்த்தாலும் அபிப்பிராய பேதம் இருக்கத்தான் செய்யும். அவற்றை மநுஷ்யர்கள் தங்கள் புத்தி சக்தியை விருத்தி செய்துகொண்டு தாங்களே தீர்த்துக்கொள்ள விடாமல் சுப்ரம்மண்யரையே மறுபடி மறுபடி எதிர்பார்த்துக் கொண்டிருக்க விடுவதில் சாரமில்லை. எடுத்ததற்கெல்லாம் தெய்வ சக்தியை காட்டி ஜனங்களை உபயோகமில்லாமல் வைப்பதானால் சிருஷ்டியே வேண்டாமே! தெய்வ சக்தியை ஒரே தடவை பிரயோகித்து எல்லாவற்றையும் சம்ஹரித்துவிட்டு, அப்புறம் பேசாமலிருந்து விடலாம். ரொம்பவும் அதர்மம் மிஞ்சிப் போனால், கிருஷ்ண பரமாத்மா மாதிரி பகவத் சக்தியைக் காட்டத்தான் வேண்டும். மற்ற சமயங்களில் மநுஷ்யராக இருக்கிற மாதிரியே காட்டிக்கொண்டு, மநுஷ்யர்களுக்கு தக்கபடிதான் நடக்க வேண்டும். இதனால் மநுஷ்ய சக்தியை வைத்துக்கொண்டு, அதையே பெரிதாக்குகிற தன்னம்பிக்கையை, தைரியத்தை, உத்ஸாகத்தை ஜனங்களுக்கு ஊட்ட வேண்டும். பௌத்தத்தை சம்பூரணமாக அறிந்த பிறகே அதைக் கண்டிக்க எண்ணிய குமாரிலபட்டர் இப்படி நினைத்தார் போலிருக்கிறது. அதனால் மநுஷ்ய ரீதியில் பௌத்த சித்தாந்தத்தை வித்தியாப்பியாசம் செய்ய முடிவு செய்தார்.

பௌத்தர்களோ தங்களது ரகசிய தத்வங்களைச் சிஷ்யர்களுக்குத்தான் சொல்லிக் கொடுப்பார்கள். அதோடுகூட அவர்கள் கர்மாநுஷ்டானம் செய்கிற பிராம்மணர்களைத் தங்கள் விஹாரத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இதற்காக ஒரு பெரிய தியாகம் செய்தார் குமாரிலபட்டர்! எதிராளிக் கொள்கைகளை சத்தியமாக உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தம்முடைய சத்தியத்தைத் தியாகம் செய்தார் – பொய் வேஷம் போட்டார்! தம்மை பௌத்தர் என்றே சொல்லிக்கொண்டு விஹாரத்தில் சேர்ந்துவிட்டார். அந்தரங்கமாக அவசியமான கர்மாக்களை மட்டும் அநுஷ்டித்து வந்தார்; மற்ற சமயங்களில் அவர்களில் ஒருத்தராகவே காட்டிக்கொண்டார். இப்படியே அங்கேயிருந்து சம்பூரணமாக பௌத்த சித்தாந்தத்தைக் கற்றுக் கொண்டு விட்டார். அதற்கப்புறம் அவர் பிக்ஷுவாக இருந்து புத்த தர்மத்தைப் பரப்பப் போவதில்லை; எப்படியாவது கத்தரித்துக் கொண்டு நழுவப் பார்க்கிறார் என்று விஹாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. அவருக்குத் தெரியாமல் விசாரணைகள் செய்து அவரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டார்கள். ‘சரி. நம்மை வஞ்சனை பண்ணியவனை நாமும் வஞ்சிக்க வேண்டும். இவன் கொஞ்சமாக நம் ரகசிய தத்வங்களை தெரிந்து கொண்டிருந்தால் விஹாரத்திலிருந்து விரட்டினாலே போதும். இவனோ முழுக்கத் தெரிந்து கொண்டுவிட்டான். ஆனதால் லோகத்திலிருந்தே இவனை விரட்ட வேண்டும்’ என்று அவர்கள் தீர்மானம் பண்ணினார்கள்.

அஹிம்ஸைத் தத்வம் போன இடம் தெரியவில்லை. ஹிதவஞ்சனையாக அவரை ஏதோ பேச்சுக் காட்டி விஹாரத்தின் ஏழாவது மாடிக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அங்கேயிருந்து அவர் எதிர் பாராத சமயத்தில் அங்கிருந்து அவரை அப்படியே கீழே தள்ளி விட்டார்கள்.

அந்த ஆபத்து சமயத்தில்கூட அவருக்கு வேதத்தில்தான் ஸ்மரணை. எனவே, “வேதம் பிரமாணமாக இருந்தால் நான் ஏழாம் மாடியிலிருந்து விழுந்தும் எனக்குக் கெடுதல் ஏற்படாமலிருக்கட்டும்” என்று ஆணை வைத்துக் கொண்டே விழுந்தார்.

அதேபோல் அத்தனை உச்சத்திலிருந்து விழுந்தும் அவருக்கு மண்டை நொறுங்கவில்லை. கைகால்கூட முறியவில்லை. கண்ணில் மட்டும் ஒரு கல் பொத்துக் கொண்டு கொஞ்சம் புண்ணாகி விட்டது. நமக்கு அவர் எப்படிப் பிழைத்தார் என்று ஆச்சரியமாயிருக்கிறது. அவருக்கோ, ‘வேதப் பிரமாணத்தின்மேல் நான் ஆணை வைத்திருக்க எனக்கு ஏன் இந்தச் சின்ன உபாதைகூட ஏற்பட வேண்டும்?’ என்று வேதத்தின் மேல் ஸ்வாதீனமாகக் கோபமே வந்தது.

அப்போது அசரீரி கேட்டது. அது, “நீ என்ன சொன்னாய்? வேதம் பிரமாணமாதலால் எனக்குக் கெடுதல் ஏற்படாது, என்று சொல்லவில்லையே! இப்படிச் சொன்னாலல்லவா பூர்ண நமபிக்கை என்றாகும்? நீ ‘வேதம் பிராமணமாக இருந்தால்’ என்று சொன்னதில் கொஞ்சம் சந்தேகம் தொக்கி நிற்கத்தானே செய்கிறது? அதன் பலன்தான் கண்ணுக்கு வந்த கஷ்டம்” என்றது.

குமாரிலபட்டர் முன்னைவிடத் தீவிரமாக வேத கர்மங்களில் விசுவாசம் வைத்து, பாட்ட மதத்தை ஸ்தாபித்து, பௌத்தத்தை நிராகரணம் செய்யத் தொடங்கினார். தன் மதம் (சித்தாந்தம்) எதிராளி மதம் (பூர்வபக்ஷம்) இரண்டையும் கரைத்துக் குடித்த மகாமேதையாதலால், சுலபத்தில் பௌத்தர்களை வாதத்தில் வென்றார்.

‘சங்கர பகவத் பாதர் புத்த மதத்தை விரட்டினார்’ என்று நீங்கள் சரித்திர புத்தகத்தில் படித்திருக்கிறீர்கள். இது தப்பு! ரொம்பவும் மிகை (Exaggeration) என்று அவர் பெயரை வைத்துக் கொண்டிருக்கிற நானே சொல்கிறேன். ஆசாரிய பாஷ்யங்களைப் படித்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள். அதிலே பௌத்த மத கண்டனம் ரொம்பவும் குறைச்சல்தான். பௌத்தர்களை ஏற்கெனவே குமாரிலபட்டர் அடக்கி விட்டார். ஆசார்யாள் அதிகம் கண்டனம் செய்தது, வைதிகத்தையே சேர்ந்த இந்தக் கர்ம மீமாம்ஸகர்களையும், இன்னொரு வைதிக மதமான சாங்கியத்தையும்தான். அவருடைய பாஷ்யங்களில் பார்த்தால், இவற்றில் நூற்றிலொரு பங்கு தான் பௌத்தமத கண்டனம் இருக்கும்.

இதென்ன ஸ்வாமிகள் இப்படிச் சொல்கிறார் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஸுப்ரம்மண்யரின் அவதாரம் என்று குமாரிலப்பட்டரைச் சொல்லி, அவரே நம் ஆசாரியாருக்கு விரோதமான பௌத்தத்தைக் கண்டனம் பண்ணிவிட்டார் என்றும் சொல்லிவிட்டு, இப்போது ஆசார்யாள் பட்டரின் கர்ம மீமாம்ஸ மதத்தையே கண்டித்ததாகச் சொல்கிறேனே என்று குழப்பமாயிருக்கலாம். அப்படியானால், ஆசார்யாளின் மதத்துக்கு வேத கர்மநுஷ்டானமே இல்லாத பௌத்தம் விரோதமா, கர்மாநுஷ்டானம் மட்டுமே உள்ள மீமாம்ஸை விரோதமா என்று கேட்பீர்கள்.

இவை இரண்டுமே ஆசார்யாளுக்கு விரோதம் இல்லை. அத்வைதத்துக்கு எதுவுமே விரோதம் இல்லை. அதற்குள்ளே சகல சித்தாந்தங்களும் அடக்கம். படிப்படியாக கர்மம், பக்தி, ஞானம் என்று அது போகும். ஆரம்பத்தில் ஞானமேயில்லாமல் கர்மா செய்தாலும் போதும். முடிவிலே கர்மாவே இல்லாத ஞானம் வந்துவிடும். முதலில் சித்த சுத்திக்கு கர்மாதான் முக்கியம்; முடிவில் ஞானம்தான் முக்கியம். அங்கே கர்மா எல்லாம் நின்றுவிடலாம். இவற்றின் ஒருபடி லக்ஷியம் மட்டும் என்று நிற்கிறபோதுதான் அவற்றிடம் சண்டைக்குப் போக வேண்டும் என்று நம் ஆசாரியாள் நினைத்து வாதம், கண்டனம் செய்தார். அல்லது எந்தப் படி எந்த நிலையில் வருவது என்கிற தெளிவு இல்லாமல், அதை எல்லோருக்கும் பொதுவாக்கினால், அப்போது அதை வேத நிராகரணம் செய்தார். பக்திக்கும் ஞானத்துக்கும் வராமல் வெறும் கர்மாவோடு நிற்கிறார்களே என்றுதான் மீமாம்ஸகர்களைக் கண்டித்தார். பரம ஞானத்தைத் துளிக்கூட அநுபவத்தில் கொண்டுவர முடியாத சாமானிய ஜனங்களுக்கெல்லாம் மாயை, சூனியம், நிர்வாணம் என்று உபதேசம் பண்ணிக் கொண்டு லோக க்ஷேமத்துக்காக அவர்கள் அநுசரிக்க வேண்டிய வேத கர்மங்களைப் புறக்கணிக்க வைக்கிறதே என்பதால், பௌத்தத்தோடு சண்டைக்குப் போனார். பௌத்தம் ‘எப்போதும் – ஆரம்ப நிலையில்கூட கர்மா வேண்டாம்’ என்றதாலேயே, அதை ஆசாரியாள் நிராகரணம் செய்தார். ‘எப்போதும் கர்மாதான்; முடிகிற நிலையில்கூட ஞானம் வேண்டாம்’ என்றதால் பூர்வ மீமாம்ஸையை நிராகரித்தார். அவை இரண்டும் தங்கள் மட்டத்தை – லெவலை – அறியாதபோது சண்டை போட்டார். ஆனால், அவற்றை ஒவ்வொரு மட்டத்தில் தன்னிலேயே கொண்டதுதான் அத்வைதம். இதில் பௌத்தர்களுடன் இவர் போட வேண்டிய வாதப் போரைப் பெரும்பாலும் குமாரிலப்பட்டரே போட்டு அவர்களை நிராகரணம் செய்துவிட்டார். ‘ஸ்வாமியும் இல்லை, கர்மமும் இல்லை’ என்ற பௌத்தர்களை ‘ஸ்வாமி இல்லை, கர்மம் உண்டு’ என்ற மீமாம்ஸகர்கள் பெருமளவுக்கு ஜயித்த சமயத்தில், ‘ஸ்வாமியும் உண்டு, கர்மமும் உண்டு; கடைசியில் ஆத்ம சாந்தத்தில் கர்மமும் இல்லை; ஸ்வாமியும் தனியே இல்லை’ என்று சொன்ன ஆசாரியாள் அவதரித்தார்.

பரமேசுவரன் நம் ஆசார்யாளாக அவதரிப்பதற்கு முந்தியே, குமாரஸ்வாமி பட்டராக அவதாரம் செய்து பௌத்தத்தை நிராகரித்து, இவர் காரியத்தில் பாதியைச் செய்துவிட்டார்.

ஆசாரியாள் காசியிலிருந்து திக்விஜயம் புறப்பட்டார். அவருக்கு குமாரிலரைக் கண்டு தம் வழிக்குத் திருப்ப வேண்டும் என்பதிலேயே முனைப்பு. குமாரிலர் ஒருத்தர் அத்வைத வேதாந்தத்துக்குத் திரும்பி விட்டால், அத்தனை கர்ம மார்க்கக்காரர்களும் இதே வழிக்கு வந்து விடுவார்கள் என்பதால்தான் இந்த முனைப்பு.

இச்சமயத்தில் குமாரிலபட்டர் தம்மைச் சுற்றி உமியைக் கொட்டி அதை அக்னியில் கருக்கிக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தாமும் அதில் கருகிக் கருகிப் பிராணத்தியாகம் செய்துகொள்கிறார் என்கிற சமாச்சாரம் தெரிந்தது. இதைக் கேட்ட ஆசாரியாள் பதறிப்போய் பிரயாகைக்கு விரைந்தார்.

குமார ஸ்வாமியின் அவதாரமான பட்டர் ஏன் இப்படி கோரமான முறையில் ஜீவனைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்றால், மநுஷ்யர் மாதிரி செய்கிற காரியங்களில் தர்ம சங்கடமான ஒன்றைச் செய்து விட்டால், அதற்காகத் தண்டனையும் பெற்றேயாக வேண்டும் என்று அவதாரங்கள் தாமாகத் தீர்மானிப்பதேயாகும். ‘பௌத்த குருமார் என்னை அவர்களில் ஒருவராக நம்புமாறு ஏமாற்றி அவர்களிடமிருந்து வித்தையை ஸ்வீகரித்தேனே! குரு த்ரோகம் செய்துவிட்டேனே! ஈசுவரன் என்று ஒருத்தனை எதிர்ப்பார்க்காமல் புண்ணிய, பாப கர்மங்கள் தாமே பலன் தரும் என்று ஸ்தாபித்த நான், இப்போது குருத்ரோக பாபத்துக்குப் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று ரொம்பவும் மனசு நொந்து தர்ம சாஸ்திரங்களைப் பார்த்தார். அதில் மனமறிந்து செய்த குரு த்ரோகம் உடம்பைச் சித்ரவதை செய்துகொண்டாலொழியப் போகாது என்று இருந்தது. ‘சரி அப்படியே செய்வோம்’ என்று அஞ்சாநெஞ்சராக முடிவு செய்தார் குமாரிலபட்டர். ‘துஷாக்னிப் பிரவேசம்’ என்று உமிக்காந்தல் நெருப்பில் வறுபட்டுச் சாவதுதான் மிகப் பெரிய சித்ரவதை என்பதால் அப்படியே சங்கற்பம் செய்துகொண்டு காரியத்தில் அதை செய்தார். நமக்கு இப்படி ஒரு பிராயச்சித்தம் போட்டிருக்கிற புஸ்தகம் அகப்பட்டால், அந்தப் புஸ்தகத்தை நெருப்பில் போடுவோம். குமாரிலரோ, பிராயச்சித்தம் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டு, தாம் தீயில் இறங்கினார்.

வேதகர்மாக்களை எல்லாம் மறுபடி நிலைநாட்டிய மகா பெரியவர், கொஞ்சம்கூட மனம் கலங்காமல் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உமிக்காந்தலில் வெந்து கொண்டிருக்கும்போது, பகவத்பாதாள் அவரிடம் ஒடோடி வந்தார்.

குரு த்ரோகத்துக்குத் தண்டனையாக (நிஜமான குருகூட இல்லை; போலி குருத் துரோகத்துக்காக) உமிக்காந்தல் அக்கினியில் வெந்துகொண்டிருந்த குமாரிலப்பட்டருக்கு முன் நம் ஆசார்யாள் வந்து நின்றார்.

ஆசாரிய தரிசனத்தால் குமாரிலப்பட்டருக்குத் துஷாக்கினியின் தகிப்புத் தெரியவே இல்லை.

தரிசன அமிருதத்தோடு ஆசாரியாள் அவருக்குத் தத்வ உபதேச அமிருதத்தையும் கொடுத்தார்.

இது வரை கதை சொன்னேன். இப்போது கொஞ்சம் கொஞ்சம் தத்வம் சொல்கிறேன். எல்லாக் கதையும் தத்வத்தில் நிறைந்து போவதற்குத்தான்.




தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:55 am


‘வேதம் விதித்துள்ள கர்மாக்களை நாம் செய்தால், அதுவே நிறைவு; ஸ்வாமியிடம் பக்திவேண்டாம்; அவரோடு ஒன்றாகப் போய் விடுகிற ஞானம் வேண்டாம்’ என்பது கர்ம மீமாம்ஸை. இவர்கள் ஒப்புக் கொண்ட அதே வேதங்களில் உள்ள உபநிஷத்தில்தானே கர்மம் எல்லாம் நின்றுபோன ஜீவபிரம்ம அபேத ஞானத்தைச் சொல்லியிருக்கிறது என்றால்; இவர்கள் வேதத்தை ‘விதி’ என்றும் ‘அர்த்த வாதம்’ என்றும் இரண்டாகப் பிரித்தார்கள். விதி என்பது ‘நீ இன்னின்ன கர்மாக்களை இப்படியி்ப்படிச் செய்’ என்று சொல்லி, அந்தக் கர்மாக்களில் பிரயோகமாகிற மந்திரங்களைத் தரும் பகுதி. அதாவது காரியத்தைச் சொல்கிற பாகம். ஜீவபிரம்ம அபேத வாசகங்களில் காரியம் இல்லை, வெறுமே இருந்து கொண்டிருக்கிற நிலையை அது சொல்கிறது. ‘இருப்பது எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு, லோகத்துக்குப் பிரயோஜனம் தருவது கர்மம்தான். இந்த விதிகளைக் கொண்ட வேத பாகம்தான் நமக்குப் பிரமாணம்’ என்று மீமாம்ஸகர்கள் சொன்னார்கள். விதியாக இல்லாத உபநிஷத்தை ‘அர்த்தவாதம் என்பார்கள். ஒரு விதியை அநுஷ்டிப்பதால் உண்டாகும் பலனை உயர்த்திச் சொல்லி, அதனால் விதிகளில் ஜனங்கள் ஊக்குவதற்காக ‘கதைப்பது’தான் அர்த்தவாதம்.

பேப்பரில் தாதுபுஷ்டி லேகியம் விளம்பரம் ஒன்று கண்ணில் பட்டது. அதிலே சிங்கத்தோடு ஒரு ஸாண்டோ (பயில்வான்) குஸ்தி செய்கிற மாதிரி படம் போட்டிருந்தது. அந்தப் படம், அதைப் பார்த்து நம் ரஸிப்பதற்காகவா போட்டிருக்கிறது? இல்லை. இந்த லேகியத்தைச் சாப்பிட்டால் நீங்களும் அப்படி பலசாலிகளாக ஆவீர்கள்’ என்று நமக்கு ஆசை காட்டுவதற்கு ‘அர்த்தவாதமாக’வே போட்டிருக்கிறது. இப்படியேதான் ‘சகல கர்மங்களையும் அநுஷ்டிக்கிறவன் ரொம்பவும் உயர்ந்துவிடுவான் என்று ஜீவனை ஸ்தோத்திரம் பண்ணுவதற்காகவே உபநிஷத்துக்களில் ‘சகலமாகவும் ஆன பிரம்மம் ஒன்று இருக்கிறது; இந்த ஜீவன் அந்த பிரம்மமே ஆகிவிடுவான். அப்போது இவனுக்குக் கர்மாவே நின்றுபோய் ஞான மயமாகுகிறான்’ என்றெல்லாம் சொல்லி இருக்கிறது. இந்தக் ‘கதை’ எல்லாம் ஜீவனை நிறையக் கர்மாபண்ண வைக்கிற உத்தேசத்தில் ஏற்பட்டவைதான்” என்று கர்ம மீமாம்ஸகர்கள் சொல்வார்கள். லேகியம் சாப்பிட்டு ஒருநாளும் சிங்கத்தோடு சண்டைக்குப் போக முடியாது என்பதுபோல, அந்த பிரம்ம நிலையும் ஏதோ அசாத்தியத்தைச் சொல்லும் கதை என்றே கருதினார்கள்.

இவர்களுக்கு ஆசார்யாள் என்ன எதிர்வாதம் செய்து உபதேசித்தார்? வேதத்தில் காரியத்தைச் சொல்கிற விதிகளைப்போலவே, இன்னின்ன காரியம் செய்யக்கூடாது என்று சொல்லும் ‘நிஷேதங்’களையும் நீங்கள் அர்த்தவாதம் என்று தள்ளிவிடாமல் ஒப்புக் கொள்கிறீர்கள். வேதம் ‘கள் குடிக்காதே’ என்கிறது. இங்கே செய்ய வேண்டிய காரியம் எதுவும் இல்லை. ஆனாலும், ஒன்றைச் செய்யாததாலேயே பிரயோஜனம் இருக்கிறது – கள் குடிக்காததால் புத்தி கலங்காமல் இருக்கிறது என்பதால் இதை நீங்களும் ஏற்கிறீர்கள். சில காரியங்களைச் செய்யாததிலேயே பிரயோஜனம் இருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறீர்கள். அதாவது காரியத்துக்கு இல்லாமல் (வேத) சப்தப் பிரமாணத்தைப் பிரயோஜனத்துக்காகவே ஒப்புக் கொள்கிறீர்கள். சிலவற்றைச் செய்யாமலிருப்பதே பிரயோஜனம் என்று நீங்கள் சொன்னால் நானோ உபநிஷத்தில் சொன்னபடி பரம ஞான நிலையில் ஒன்றையுமே செய்யாததுதான் பரமப் பிரயோஜனம். அது வெறும் அர்த்தவாதம் அல்ல என்கிறேன். ஒரு நிலைவரைக்கும் வேத விதிப்படி லோக க்ஷேமார்த்தமாக கர்மா செய்து செய்துதான் மனஸைக் கண்டபடி திரியாமல் தர்மத்தில் கட்ட முடியும். ஆனால், கர்மாவே முடிந்த முடிவு, நிறைந்த நிறைவு என்பது சரியில்லை, கர்மா உள்ள வரை அதன் பலனை அநுபவிக்க ஜன்மா எடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். ஜன்மா முழுக்க துக்கமே இல்லாமல் நிறைந்திருக்க எவராலாவது முடியுமா? கர்மா தரும் நிறைவும் ஆனந்தமும் தாற்காலிகம்தான். நிறைந்த நிறைவு, நித்யானந்தம் எப்போது ஏற்படுகிறது? கர்மாநுஷ்டானத்தால் சித்த சுத்தி உண்டானபின், கர்மாவை விட்டு, ஆத்ம விசாரம் பண்ணி, தியான யோகத்தில் இறங்கி அதன் முடிவில், தான் எங்குமாக நிறைந்து ஆனந்த ஸ்வரூபமாக இருக்கிற ஆத்மாவே என்று அநுபவிக்கிறபோதுதான் நிறைந்த நிறைவு, பூரணத்துவம், சாசுவத சௌக்கியம் உண்டாகும். இத்தனை கர்மாவும் அந்தக் காரியமற்ற நிலைக்குக் கொண்டுவிடவே ஏற்பட்டவை” என்று உபதேசித்தார்.

‘சரி, ஒரு காரியமும் இல்லாமல் ஒருத்தன் ஆத்மானந்தத்தில் இருக்கிறான் என்றால் அவனுக்கு வேண்டுமானால் அது பரமப்பிரயோஜனம். ஆனால், லோகத்துக்கு அவனால் என்ன பிரயோஜனம்? வேதம் சொல்கிறபடி அவரவரும் கர்மாவை, கடமையைச் செய்தால்தானே லோக க்ஷேமம் உண்டாகிறது. “

இதற்கு ஆசாரியாள் என்ன பதில் சொன்னார்? ‘ஜனங்களுக்குப் பெரிய பிரயோஜனம் அன்பாக, ஆனந்தமாக இருப்பதுதானே? கர்மாவை விட்டுவிட்டு ஒருத்தன் சந்நியாசம் வாங்கிக் கொள்ளும்போது, ‘ப்ரைஷ மந்திரம்’ என்று ஒன்று சொல்கிறான். அது, என்னைக் கண்டால் ஒரு ஜீவராசிக்குக்கூட பயம் உண்டாகக்கூடாது. சகல ஜீவராசிகளிடமும் நான் அன்பாக இருக்கக் கடவேன்’ என்கிறது. கர்மா இருக்கிற வரையில் அதற்கு ஏதாவது இடையூறு வந்துதான் சேரும்; உடனே கோபம், துவேஷம் வரத்தான் செய்யும். சந்நியாசிக்கோ கர்மாவே இல்லை. அதனால் எல்லோரிடமும், எல்லாவற்றிடமும் அவனே எப்போதும் அன்பு மயமாக இருக்க முடியும். அன்பாக இருப்பதே இவனுக்கும் ‘கர்மா’வாகி விடுகிறது என்று வேடிக்கையாகச் சொல்லலாம். இவனுடைய தரிசனமே மற்றவர்களுக்கு அன்பை, ஆனந்தத்தைத் தருகிறது. இதைவிட லோகப் பிரயோஜனம் என்ன வேண்டும்? ஸ்தூலமாகக்கூட இவன் காரியம் செய்யாமலா இருக்கிறான்? காரியத்தால் தனக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லாவிட்டாலும், தன் தரிசனத்தால் தத்வோபதேசத்தால் லோகத்துக்கு நன்மை செய்வதற்காக ஊர் ஊராகச் சுற்றுகிறான். தான் கொஞ்சம்கூடப் பட்டுக்கொள்ளாமலே , பட்டுக் கொள்ளாததாலேயே, லௌகிகர்களைவிட ஜாஸ்திக் காரியம் செய்கிறான். மற்றவர்கள் அழுதுகொண்டும், ஆத்திரப்பட்டுக் கொண்டும், லாப நஷ்டக் கணக்கு பார்த்துக் கொண்டும் செய்வதால் பூரண சக்தியோடு காரியம் பண்ண முடியவில்லை; அதில் குறைகள் உண்டாகின்றன. இவனோ, சிரித்துக்கொண்டே செய்வதால் அசாத்தியமானதையும் அநாயாசயமாகச் செய்துவிடுகிறான். இவனுக்கு எல்லாம் தானானதால், தன்னிடமே ஒரு தோஷம் இருப்பதற்காகத் தன்னைத் தள்ளிவிடாததுபோல், பிறரிடம் இருக்கிற தோஷத்துக்காக அவர்களை துவேஷிக்காமல், அதைப் பரம பரிவோடு நிவிருத்தி பண்ணுகிறான். அவன் இருக்கிற நிறைந்த நிறைவான, பரிபூரண ஆனந்த நிலையில் ஜனங்களைச் சேர்க்கத்தான் முதல்படியாக வேத கர்மா இருக்கிறது. ஜனங்கள் சொந்த லாபத்தையே நினைத்து ஆசைவயப்பட்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று விடாமல், வேதம் லோகோபகாரமாகக் கர்மாவைக் கொடுத்திருக்கிறது. இவற்றை நிஷ்காம்யமாக (பற்றில்லாமல்) செய்து செய்து சித்தசுத்தி உண்டான பின் இவை நின்றுவிடலாம்’ என்று ஆசார்யாள் விளக்கினார்.

ஞானியின் அன்பு, ஆனந்தம், நிஷ்காம்ய கர்மம் முதலியவற்றுக்கெல்லாம் தாமே ஒரு விக்கிரகமாக ஆசார்யாள் குமாரிலப்பட்டரின் முன் நின்றார்.

ஈசுவர பக்தியில்லாமல் வறட்டுக் கர்மம் செய்வது பிசகு என்றும் விளக்கினார். ‘கர்மம் என்பது ஜடம். அது தனக்குத்தானே பலன் தந்து கொள்ள முடியாது. லோக க்ஷேமத்துக்காக ஸ்வாமிதான் வேதத்தின்மூலம் கடமைகளை விதித்து, பலன் தருகிறார். கர்மாவில் குறை ஏற்பட்டால் க்ஷமித்துக் கைதூக்கி விடவும், குறை வராமல் கர்மா செய்யும் சக்தியையும் சிரத்தையையும் பெறவும் அவரையே பிரார்த்திக்க வேண்டும். அவர் பிரீ்திக்காகச் செய்கிறோம் என்கிற பாவம் வந்தால்தான், சொந்த ஆசைக்காகக் காரியம் செய்வது போகும்.’

இப்படி ஆசாரியாள் உபதேசிக்க உபதேசிக்கக் குமாரிலபட்டருக்குக் கர்மமெல்லாம் ஈச்வரார்ப்பணம் செய்யப்பட்டு பக்தியிலும், அந்த பக்தி ஈசுவரனோடு இரண்டறக் கலந்து விடும் ஞானத்திலும் கொண்டு விடுவதற்குத்தான் என்று நன்றாகத் தெளிவாயிற்று.

ஆனந்த பாஷ்பத்துடன் ஆசார்யாளைப் பார்த்து, ‘கர்மமே பலன் தரவில்லை, ஈச்வரன்தான் பலதாதா என்று நன்றாகத் தெரிகிறது. நான் பிராயச்சித்தமாகச் செய்கிற இந்தத் துஷாக்னிப் பிரவேச கர்மாவுக்குப் பலனாக எனக்கு ஞானாமிருதத்தைத் தருவதற்கு ஈசுவரனான தாங்களே பலதாதாவாக வந்திருக்கிறீர்கள். கர்மாவினால் ஒருநாளும் கிடைக்காத ஜனன நிவிருத்தியை எனக்கு அருளிவிட்டீர்கள். அந்திம சமயத்தில் பக்தர்களுக்குக்கூடப் பகவத் ஸ்மரணை வராது என்பார்கள். ஆனால், ஸ்வாமியே தேவையில்லை என்ற எனக்கோ, தாங்களே நேரில் பிரத்தியக்ஷமாகி விட்டீர்கள். தங்கள் சித்தாந்தம் முழுவதும் எனக்குச் சம்மதம். ஆனால், இன்னும் சில க்ஷணங்களில் சரீரத்தை விட்டுவிடப்போகிற நான், மற்ற கர்ம மார்க்கக்காரர்களுக்கெல்லாம் இதை எடுத்துச் சொல்ல முடியாமல் அசக்தனாக இருக்கிறேன். ஆகையால் தாங்கள் மாஹிஷ்மதி நகரத்துக்குச் சென்று, அங்கே என்னைவிட மீமாம்ஸகராக இருக்கிற மண்டன மிச்ரருக்கு இதே உபதேசத்தை அநுக்கிரகத்துத் தங்கள் சித்தாந்தத்துக்குத் திருப்பிக் கொள்ளுங்கள். பிறகு மீமாம்ஸகர்கள் எல்லோரும் அதே வழிக்கு வந்துவிடுவார்கள்’ என்றார்.

சரீரத்தை வறுத்து எடுக்கின்ற அக்கினியின் தாபமே தெரியாமல் குமாரிலபட்டர் ஆசாரியாளின் சந்நிதான விசேஷத்தால் அமிருதத்தில் நனைந்த மாதிரி இருந்தார். இந்தக் கட்டத்தை நினைக்கிறபோது ‘மூக பஞ்சசதீ’ சுலோகம் ஒன்றும், அப்பர் ஸ்வாமிகளின் பாடல் ஒன்றும் ஞாபகம் வருகின்றன.

‘ மூக பஞ்சசதீ’ சுலோகம் ‘ஜனோயம் ஸந்தப்தோ’ என்று ஆரம்பிக்கிறது. ‘நான் நெருப்பில் நன்றாக வெந்துகொண்டிருக்கிறேன்’ என்கிறார் மூகர். என்ன நெருப்பு? சம்ஸாரம் என்பதுதான் நல்ல கோடைகால சூரியன் மாதிரி கொளுத்தி எடுக்கிறதாம். ‘எனக்குப் பரமஞான தீர்த்தம் ஒரு துளிக்கூடக் கிடைக்காமல் வேகிறேன்’ என்கிறார். ‘பரஞானபயஸ்’ என்கிறது சுலோகம். ‘பயஸ்’ என்றால் தீர்த்தம்; பால் என்றும் அர்த்தம்.

பரம ஞானப்பாலைத்தான் அம்பாள் ஞானசம்பந்தருக்குக் குழந்தைப் பிராயத்திலேயே அநுக்கிரகித்தாள். அதனால் அவர் ஆரம்பத்திலிருந்தே கர்மம், பக்தி, ஞானம் மூன்றைப் பற்றியும் சரியானபடி தெரிந்துகொண்டு உபதேசித்தார். அவர் பெயரிலேயே ‘ஞானம்’ இருக்கிறது. பக்தியை அவர் யதேஷ்டமாக வளர்த்தது எல்லோருக்கும் தெரிந்தது. வேத கர்மாக்களையும் அவர் எங்கு பார்த்தாலும் உயர்த்திப் பாடியிருக்கிறார். உதாரணமாக, ‘கற்று ஆங்கு எரி ஓம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை’ என்கிறார். ‘கற்று வேத அத்யயனம் செய்து, ஆங்கு – அதில் சொல்லியிருக்கிறபடி; எரி ஓம்பி அக்கினி வளர்த்து யாகம் செய்து; கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை – கலியை விரட்டிவிட்ட வேதியர்கள் வாழ்கிற சிதம்பரம்’ என்கிறார். கர்மா அதுவாகவே கலியை விரட்டிவிடவில்லை. கர்ம பலனாக ஈச்வரப் பிரசாதத்தாலேயே கலி ஓடிற்று என்பதை இதே பாட்டில் ‘முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரை பற்றா பாவமே’ என்றார். பாவம்தான் கலி புருஷன்.

குமாரிலப்பட்டருக்கு ஆயுள் முடிகிற சமயத்தில்தான் ஞானம் ஜலமாக, பாலாக இல்லாமல், அமிருதமாகவே, ஆசாரியாள் தந்த அத்வைத அமிருதமாகவே கிடைத்தது.

தாக சாந்திக்கு மூகர் எதைத் தேடிக்கொண்டார்? ‘அம்மா காமாக்ஷி! பரமசிவ ஜாயே – மகா மங்களமான பேரன்பு வடிவான ஈசுவரனுடன் இரண்டறக் கலந்திருக்கும் தாயே! சம்ஸார தாபத்தில் கொதித்திருக்கிற நான் உன் மகா குளிர்ச்சியான திருவடி நிழலைத்தான் தேடுகிறேன் அம்மா” என்கிறார். ‘பதாம்போஜச் சாயாம்’ – ‘இணையடிக் கமலங்களின் நிழலை’ என்று நேர் அர்த்தம்.

‘ஈசன் எந்தை இணையடி நீழலே’ என்று இதையே அச்சடித்தாற்போல் அப்பர் ஸ்வாமிகள் சொல்கிறார். எந்தச் சந்தர்ப்பத்தில் இதைச் சொன்னார்? மூகர் ரூபமாக (Symbolic) சம்ஸாரத்தைக் கொளுத்தும் சூரியன் என்றார். அப்பர் வாஸ்தவமாகவே ( Factual ) சுண்ணாம்புக் காளவாய்க்குள் இருந்து கொண்டு இப்படி பாடினார்.

ஜைனமதத் தலைவராக இருந்த அப்பர் சைவத்துக்கு மாறி விட்டார் என்றதும் ஜைனனாக இருந்த பல்லவ ராஜா அவரைச் சுண்ணாம்புக் காளவாய்க்குள் போடும்படி ஆக்ஞையிட்டான். அப்படியே செய்த ராஜ சேவகர்கள், “சிவன் சிவன் என்றீரே, இப்போது எப்படி இருக்கிறது சொல்லும்” என்று பரிஹாசம் செய்தார்கள்.

ஹிரண்யகசிபு செய்த குரூர தண்டனைகள் பிரஹலாதனைத் தொடாத மாதிரி, அப்பருக்கும் ஈசுவராநுக்கிரகத்தால் சித்திரஹிம்சை எதுவுமே தெரியவில்லை. தன்னிடம் கேலியாகக் கேட்டவர்களிடம் கோபமே இல்லாமல், “எப்படி இருக்கிறதா? ஈசன் எந்தை இணையடி நிழல் எப்படிக் குளிர்ச்சியாக இருக்குமோ அப்படி இருக்கிறது. அது இந்திரிய அதீதமானது. உங்களுக்குப் புரியாது. உங்களுக்குப் புரிகிற மாதிரி சில இந்திரிய சுகங்களை வரிசையாக சொல்கிறேன். எண்ணிக் கொள்ளுங்கள். முதலில் பரம ஸுஸ்வரமான வீணா கானம் – மாசில் வீணை! – அப்புறம் பூரண சந்திரன் – மாலை மதியம்; அப்புறம் ஜிலுஜிலு என்று அடிக்கும் தென்றல் – வீசு தென்றல்; இன்னும் வஸந்தகாலத்தில் எங்கு பார்த்தாலும் கம்மென்று பூரித்து நிற்கிற புஷ்பங்களின் சுகந்தம்- வீங்கு இளவேனில்; கடைசியாக, தேனின் ரஸமும், அதற்காகக் கூட்டம் கூட்டமாக வரும் வண்டுகளின் ரீங்காரமும் சேர்ந்த தாமரைப் பொய்கை-மூசு வண்டு அறை பொய்கை; இத்தனை இனிமைகளையும் ஒன்று கூட்டினால் கிடைக்கிற ஈசன் இணையடி நிழலின்பத்தை இதோ இந்தக் கொதிக்கிற காளவாய்க்குள் அநுபவித்துக் கொண்டு ஆனந்தமாய் இருக்கிறேன்” என்றார், அப்பர் ஸ்வாமிகள். அந்த ஈசனின் அவதாரமான ஆசாரியாளின் இணையடிகளைத் தரிசனம் செய்துகொண்டே, தேக சிரமம் கொஞ்சங்கூடத் தெரியாமல் குமாரிலபட்டர் நெருப்பில், கருகிப் பிராணத் தியாகம் செய்தார்.

ஞானபண்டித முருகனின் அவதாரமானவருக்கு பக்தியும் ஞானமும் தெரியாதா? ஆனாலும் பௌத்தர்கள் வெறும் அறிவு மார்க்கத்தை மட்டும் சொன்னபோது, தாம் அதில் கொஞ்சத்தை எடுத்துக்கொண்டால்கூட, அவர்களுக்கு இடம் கொடுத்துப் போகும்; இதனால் ஜனங்களை வைதிகத்துக்குத் திருப்பச் சிரமப்படும் என்பதால் ‘ஞானமும் வேண்டாம், பக்தியும் வேண்டாம், கர்மாவே போதும்’ என்று மட்டும் அடித்துச் சொன்னார். நடுவிலே இப்படி அவர் ஒரு வழி போட்டதால்தான் அப்புறம் ஆசார்யாள் கர்மம், பக்தி, ஞானம் மூன்றையும் சொல்ல முடிந்தது.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:55 am


குமாரிலப்பட்டர் நெருப்பில் அப்படியே அடங்கிக் குமார ஸ்வாமியாகிவிட்டார். தர்ம சாஸ்திரத்துக்காக சரீரத்தையே பரித்தியாகம் செய்தார். இப்படிப்பட்ட மகான்கள் போட்ட தியாக அஸ்திவாரம் நம் வைதிக மதத்துக்கு இருப்பதால், நடுவாந்திரத்தில் எத்தனை நாஸ்திகமும், அவைதிகமும், ‘சீர்திருத்தமும்’ வந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.

இங்கே நம் ஞானசம்பந்தரும் ஒரு பெரிய அக்னி ஜோதிக்குள் சென்றுதான் மறைந்தார். அப்போது அவருக்கு வயசு பதினாறுதான். அந்த சின்ன வயசுக்குள் தமிழ்த் தேசம் முழுவதும் பர மத கண்டனம் செய்து வைதிக தர்மத்தை ஸ்தாபித்துவிட்டார்.

ஆசார்யாளும் பதினாறாவது வயசிலேயே பாஷ்யங்களை எழுதி பூர்த்தி செய்து விட்டார்; சரீரத்தையும் முடிக்க நினைத்தார். ஆனால் வியாஸர், “அவசரப்படாதீர்கள்! நீங்கள் எழுதின பாஷ்யங்களை நீங்களே உபதேசிக்க வேண்டும். தேசம் முழுக்க உள்ள மற்ற மதஸ்தரை நீங்களேதான் சந்தித்து வாதில் ஜயிக்க வேண்டும். உங்களுடைய தரிசன பாக்கியத்தை ஜனங்களுக்கெல்லாம், அவர்களைத் தேடிப்போய், அநுக்கிரகிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதனால் ஆசாரியாள் இன்னொரு பதினாறு வருஷம் மனுஷ்ய சரீரத்தை வைத்துக் கொண்டார்.

ஆசாரியாள் பாரத கண்டம் முழுவதிலும் வைதிக புனருத்தாரணம் பண்ண வேண்டியிருந்ததால், (இவருடைய வேலையில் பாதியான பௌத்த மத கண்டனத்தை ஏற்கெனவே குமாரிலப்பட்டரும், உதயனாச்சாரியார் என்ற நியாய சாஸ்திர நிபுணரும் செய்திருந்தும்கூட) முப்பத்திரண்டு வயசு மனுஷ்ய சரீரத்தில் இருக்க வேண்டியிருந்தது. தமிழ் தேசத்தில் மட்டும் இந்த காரியத்தைச் செய்த சம்பந்தருக்குப் பதினாறே வயசு போதுமாயிருந்தது. அப்பா அப்படி, பிள்ளை இப்படி!

அப்பாக்காரர் பிரம்மச்சரியத்திலிருந்து நேரே சன்னியாசத்துக்குத் தாவி அவதார காரியத்தைச் செய்தார். பிள்ளையோ – அவரை ‘ஆளுடை பிள்ளை’ என்றே சொல்வார்கள் – பிரம்மச்சரிய ஆசிரமத்திலேயே மகத்தான வேத தர்ம ஸ்தாபனத்தைச் செய்து விட்டார்.

சம்பந்தருக்குப் பதினாறு வயதானபோது கல்யாணம் செய்து கொண்டு கிருஹஸ்தாச்ரமம் ஏற்க வேண்டுமென்று பந்துக்கள் கேட்டுக் கொண்டார்கள். அம்பாளின் க்ஷீரத்தைப் பானம் பண்ணினவருக்கு எந்த ஸ்திரீயும் சாக்ஷாத் பரதேவதையாகத்தான் தெரிவாள். “அம்மா! உன் க்ஷீர விசேஷம், உன் பிள்ளைகள் இரண்டுபேரும் காமமே இல்லாத குமாரர்களாகவே எந்நாளும் இருக்கிறார்கள்” என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்யலஹரி’யில் சொல்கிறார். (வடக்கே கார்த்திகேயர் கடும் பிரம்மச்சாரி. அங்கே வள்ளி தேவசேனா சமாசாரமே தெரியாது.) இப்படிப்பட்டவர்தான் ஞான சம்பந்தர். இருந்தாலும் அப்போது ஈசுவர சங்கல்பத்தை அறிந்து, அம்மாவுக்காகச் சரி என்று ஒப்புக் கொண்டார்.

திருநல்லூர் பெருமணத்தில் கல்யாணம் நடந்தது. பாணிக்கிரணம் ஆயிற்றோ இல்லையோ, புதிசாகக் கல்யாணம் செய்துகொண்ட இளம் பத்தினியையும், இன்னும் வந்திருந்த அத்தனை பந்து மித்திரர்களையும் அழைத்துக் கொண்டு அந்த ஊர்க் கோயிலுக்குப் போனார் சம்பந்தர். கோயில் முழுவதும் ஒரே ஜோதி மயமாயிற்று. ஞானசம்பந்தர்,

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்(கு) உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது

நாதன் நாமம் நமச்சி வாயவே !

என்ற பஞ்சாக்ஷரப் பதிகத்தைக் கசிந்து கசிந்து கண்ணீர் மல்கிப் பாடிக்கொண்டே அவர்கள் எல்லோரையும் ஜோதிக்குள் அனுப்பிவிட்டுத் தாமும் பரமானந்தமாக அதற்குள் புகுந்து இரண்டறக் கலந்து விட்டார்.

அவர்கள் இவருக்குக் கல்யாணம் செய்து பந்தத்தில் மாட்ட நினைத்தால், ஞானசம்பந்தரான இவரோ அத்தனை பேருக்கும், பந்தத்தைப் போக்கி, கூண்டோடு கைலாசம் அனுப்பிவிட்டார். இதுதான் பெரிய கல்யாணம், திருநல்லூர் பெருமணம்.

பரமேசுவரனின் நேத்ர அக்னியிலிருந்து வந்த சுடரே குமாரஸ்வாமி. திருப்புகழ் சொன்னபடி ‘நெருப்பையும் எரிக்கும் ஞானாக்னி அவர். அதனால் இரண்டு அவதாரங்களிலும் அக்னிக்குள்ளே சொஸ்தமாகச் சென்று ஸ்கந்தலோகத்துக்குத் திரும்பினார்.

அவர் ஞானாக்னியானாலும் இருதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால் ரொம்ப ஜல சம்பந்தமும் உள்ளவர். சரவணம் என்ற பொய்கையில்தான் சிவ தேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. சரவணப் பொய்கை அம்பாளே. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா நீராக இருந்தாள். ஜலரூபமான கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் ‘காங்கேயன்’ என்று பெயர்.

எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா. ஷஷ்டிப் பெண்களுக்கும் பாலனானார். கார்த்திகைப் பெண்டிருக்குப் பிள்ளையாகிக் ‘கார்த்திகேயர்’ ஆனார். நட்சத்திரத்தில் ஆறாக இருப்பது கிருத்திகை; திதியில் ஆறாவது ஷஷ்டி; இவருக்கு ஆறு முகம்; ஆறு அக்ஷரம் கொண்ட ‘ஷடக்ஷரி’` இவருடைய மந்திரம். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸரியம் என்று ஆறு பகைவர்களைகக் கொன்று ஞானம் அருளும் ஆறு படை வீரர் அவரே.

சுப்ரமண்யரின் ஒர் அவதாரமான குமாரிலப்பட்டரை ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் நேரில் சந்தித்து வாதத்தில் ஜயித்தார்; இன்னோர் அவதாரமான ஞானசம்பந்தரைப் பற்றி ‘ஸெளந்தர்ய லஹரி’யில் சொல்லிப் புகழ்திருக்கிறார். காலக் கணக்கு பார்க்கிறவர்கள், இது சம்பந்தரைப் பற்றியது இல்லை, ஆசார்யாள் தம்மையே சொல்லிக் கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அது எப்படியானாலும் அந்த சுலோகத்தின் தாத்பரியத்தைதத் சொல்கிறேன் (தவ ஸ்தன்யம் மன்யே*)

“ஹிமகிரி குமாரியான அம்மா! உன்னுடைய க்ஷீரம் என்பது உன் இருதயத்திலிருந்தே வருகிற அமிருதம். அது பானம் பண்ணின குழந்தைக்கு அருளைப் பொழிந்தது மட்டுமில்லை; இந்த அருளை அந்தக் குழந்தை லோகத்துக்கெல்லாம் தருவதற்காக, அந்தக் குழந்தைக்கு மேலான வாக்குசக்தியையும் உன் க்ஷீரம் தந்துவிட்டது. இந்த க்ஷீரம் ஸாரஸ்வதமானது – ஸரஸ்வதீ மயமானது. பிரவாகமாக வருகிற உன் க்ஷீராம்ருதத்தைப் பானம் பண்ணிய குழந்தை, பிரவாகமாகக் கவிதை செய்துவிட்டது. பரம கிருபையோடு நீ அதைத் தமிழ்க் குழந்தைக்கு (த்ரவிட சிசுஜாலி அளித்தாய். அதன் சிறப்பால் அந்தக் குழந்தை மகா பெரிய கவிகளுகெல்லாம் பெரியவராகி, எல்லோர் மனஸையும் வசீகரித்து விட்டது” என்று ஆசார்யாள் சொல்கிறார்.

ஆதியில் முருகக் கடவுள் சங்கப் புலவராக இருந்தார். பிறகு புலமையோடு சக்தி, ஞானம், வைதிகம், சைவம் எல்லாவற்றையும் சேர்த்து திராவிட தேசத்தை ரக்ஷிப்பதற்காக ஞானசம்பந்தராக வந்தார். குமாரிலப்பட்டர் செய்த அதே வைதிக தர்ம ஸ்தாபனத்தைத்தான் இவரும் செய்தார். “நான்மறை ஞானசம்பந்தன்” என்றே தம்மைச் சொல்லிக் கொள்கிறார்.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:56 am


சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளைப் பற்றி ஏதோ கொஞ்சம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். குமாரிலப்பட்டர் பேரைச் சிலராவது கேட்டிருப்பீர்கள். இப்போது யாருக்குமே தெரியாத இன்னொரு ஸுப்ரம்மண்ய அவதாரத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன். ரொம்ப சமீப காலம் வரையில் எனக்கே இது தெரியாது.

சரியாகச் சொன்னால், இது சுப்ரம்மண்ய அவதாரம் இல்லை. சுப்ரம்மண்யராக வருவதற்கு முன்னால் அவர் யாராக இருந்தார் என்று இந்தக் கதை சொல்கிறது. இது எப்படி எனக்குத் தெரிய வந்தது என்பதே ஒரு கதை மாதிரிதான்.

* * *

வியாஸர் ‘பிரம்ம ஸூத்திரம்’ என்று பரமாத்ம தத்வத்தைப் பற்றி விசாரணை செய்து எழுதியிருக்கிறார். அதில் மூன்றாவது அத்தியாயம், மூன்றாவது பாதத்தில், முப்பத்திரண்டாவது சூத்திரம். “ஒர் அதிகாரத்துடன் அவதரித்தவர்களுக்கு அதிகாரம் உள்ள வரையில் சரீரத்தில் இருப்பு உண்டு” என்று சொல்கிறது. இதற்கு பாஷ்யம் பண்ணும்போது நம் ஆசார்யாள், “பிரம்மாவின் மானஸ புத்திரரான ஸனத்குமாரர்கூட, தானே ருத்திரனுக்கு வரம் கொடுத்துவிட்டு அதற்காக, ஸ்கந்தனாகப் பிறப்பெடுத்தார்” என்று திருஷ்டாந்தமாகச் சொல்லியிருக்கிறார்.

ஸனத்குமாரராவது, பரமேசுவரனுக்கு வரம் தருவதாவது, அதற்காக மறுபடி பிறப்பதாவது, அதுவும் சாக்ஷாத் ஸ்கந்தனாக – இது எந்தப் புராணத்திலிருக்கிறது என்று எனக்குத் தெரியாமல் இருந்தது. பல பண்டிதர்களை விசாரித்துப் பார்த்தும் தெரியவில்லை. ஆஞ்சநேய ஸ்வாமிகளும் ரொம்ப விசாரித்துவிட்டு, பதினெட்டுப் புராணங்களையும் பார்த்துப் தமிழில் சுருக்கிப் போட்டிருக்கிற (ஸ்ரீ வத்ஸ) ஸோமதேவ சர்மாவிடம் இந்தக் காரியத்தைக் கொடுத்தார். சர்மா எனக்கு பிக்ஷை பண்ண வந்தபோது, பெரிய பிக்ஷையாக இந்த ‘டிஸ்கவரி’யைச் சொன்னார். ‘திரிபுரா ரஹஸ்யம்’ என்ற கிரந்தத்தில் மஹாத்மிய காண்டம் முப்பத்தேழாம் அத்தியாயத்தில் இது நீள நெடுகப் பெரிய கதையாகச் சொல்லியிருக்கிறது.

கதைக்கு வருகிறேன்:

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர்.

இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்னத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.

விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.

“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்த ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.

ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.

வாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருத்தருக்கு சத்தியத்திலேயே பிரதிஷ்டையாகிவிட்டால், அப்படிப்பட்டவர் உத்தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி வந்துவிடும். அதாவது, அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியமாகிவிடும். தவறுதலாகவோ, தெரியாததாலோ அவர் உண்மைக்கு விரோதமாக ஒன்றைச் சொன்னால்கூடத் வாஸ்தவத்தில் அப்படியே நடந்துவிடும்.

பரம சத்தியத்திலேயே ஸ்திரமாக நின்ற ஸனத்குமாரர் எதை நினைத்தாலும் – ஸ்வப்னத்தில் நினைத்தால்கூட – அதுவே சத்தியமாகிவிடும்.

இந்த சமாசாரம் தெரிந்து கொண்ட பின் ஸனத்குமாரர் ஆத்மாராமராக, பரப்பிரம்மத்தைத் தன்னில் தானாக அநுபவித்துக்கொண்டு, பழையபடியே உட்கார்ந்து விட்டார். லோகமெல்லாமே அவருக்கு ஸ்வப்னமாகி விட்டதால் தம் ஸ்வப்னத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.

ஆனால் இவர் ஸ்வப்னத்தில் நினைத்த நினைப்பு அசத்தியமாக போய்விடக்கூடாதே என்று பரமேசுவரனுகக்கு விசாரம் வந்துவிட்டது. அதனால், இவர் தரிசனத்துக்காகத் தபஸ் பண்ணாதபோதே, அவராகப் பார்வதீ ஸமேதராக இவருடைய ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.

ஸனத்குமாரருக்கோ மரம், மட்டையிலிருந்து சகலமும் ஒரே பிரம்மமாகத்தான் தெரிந்தது. பிரம்மத்தில் உசந்த பிரம்மம் தாழ்ந்த பிரம்மம் என்று உண்டா என்ன? எல்லாம் பிரம்மம் என்ற மாதிரியே பரமேசுவரனும் பிரம்மமாகத் தெரிந்தார். அவரை உபசரிக்க வேண்டும், பூஜை பண்ண வேண்டும் என்ற எண்ணமே ஸனத்குமாரருக்குக் கொஞ்சம் கூட உண்டாகவில்லை. அவர் தம்பாட்டுக்கு உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தார்.

பார்வதீ – பரமேசுவராள் ரொம்ப நேரம் நின்று பார்த்தார்கள். ஒரு பலனும் இல்லை. இப்படி மகா ஞானியாக ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அவர்களுக்குப் பரமப் பிரீதிதான். இருந்தாலும் ஈசுவரன் பொய்க் கோபத்துடன் ‘ஞானி என்ற அகங்காரம்தானே உனக்கு? நாங்கள் லோகத்தின் மாதா பிதாக்கள் வந்திருக்கும்போது அவமதித்துவிட்டாயே. நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார்

ஸனத்குமாரர் பயந்துவிடவில்லை. அலட்சியமாக, “நீர் சாக்ஷாத் மகா கோபிஷ்டரான ருத்திரராக இருந்து சாபம்தான் கொடும். அது ஆத்மாவைப் பாதிக்காது” என்று சொல்லிவிட்டு நிச்சிந்தையாக இருந்தார்.

‘அடடா, எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்ம ஞானி!’ என்று ஈசுவரனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.

இன்னும் கொஞ்சம் பரீட்சை பார்த்து, பூராவும் ஞானி தானா என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்து, “அப்பா; உன்னுடைய ஞானத்தை நான் ரொம்பவும் மெச்சுகிறேன். என்ன வேண்டுமானாலும் வரம் கேள். தருகிறேன்” என்றார்.

ஸனத்குமாரர் சிரித்தார். ‘உம் வரத்தை நீரே வைத்துக் கொள்ளும். எதை அடைந்தபின் இன்னொன்று வேண்டும் என்ற ஆசை லவலேசமும் இருப்பதில்லையோ, அப்படிப்பட்ட நிறைந்த நிறைவாக இருக்கிற எனக்கு வரத்தினால் ஆக வேண்டியது கடுகத்தனைக்கூட இல்லை’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

அதற்கும் ஒரு படி மேலே போனார். “பரமேசுவரா! நீ பேசுவதிலிருந்து பார்த்தால் நீதான் வரம், சாபம் இதுகளிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் சரி, உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள். தருகிறேன்” என்றார்.

ஸனத்குமாரர் சொன்னதைக் கேட்டு ஈசுவரனுக்குப் பெருமையாக இருந்தது. நம் குழந்தை நம்மிடம் ‘தாட்பூட்’ செய்தால், நமக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும்? சர்வ லோக மகேசுவரனான அவர் ரொம்பவும் தழைந்து தம்மைச் சிறியவராக்கிக் கொண்டு ஸனத்குமாரரிடம் வரம் கேட்டார். இவருடைய ஸ்வப்னத்தை நிஜமாக்க இதுவே வழி என்று நினைத்துக் கேட்டார்.

“அப்பா! இப்பேர்ப்பட்ட மகா ஞானியான நீ பிரம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறாய். பிரம்மா செய்த பாக்கியம் எனக்கும் கிடைக்கும்படியாக வரம் கொடுப்பாய்! இன்னொரு ஜன்மாவில் நீ எனக்குப் புத்திரனாகப் பிறக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

“ஆஹா, உனக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார் ஸனத்குமாரர்.

ஞானம் வருகிறவரையில்தான் இனிப் பிறவி வேண்டாம் என்று அழுவோம். ஞானம் வந்துவிட்டால் எப்போதும் ஆனந்த ஸாகரம்தான். ஜன்மா கின்மா எல்லாம் அதில் ஒரு சின்னக் குமிழி மாதிரிதான். அது வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது.

ஸனத்ககுமாரர் சொல்வதெல்லாம் சத்தியமாகிவிடும் அல்லவா? இப்போது ஈசுவரனை மட்டும் பார்த்ததுதான் ‘உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்றார். அம்பாளையும் சேர்த்து, ‘உங்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்று சொல்லவில்லை.

இதையும் ஸனத்குமாரர் யோசித்துப் பார்த்தார்.

ஸனத்குமாரருக்கும் தாம் பார்வதியை நீக்கி பரமேசுவரனுக்கு மட்டும் பிள்ளையாகப் பிறப்பதாகச் சொன்னதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. அவருக்கு எவரிடமும் நிர்ப்பயம் தான். அதனால் அந்த நியாயத்தை வெளிப்படையாகவே சொன்னார்.

‘கேட்காதவருக்கு ஒன்றைத் தரக்கூடாது என்று சாஸ்திரம். அந்த நியாயப்படி நீதான் என்னிடம் வரம் கேட்டாயே தவிர, பார்வதி கேட்கவில்லை. ஆகவே, உனக்கு மட்டுமே பிள்ளையாகப் பிறப்பேன். நீ மட்டுமாக என்னை எப்படி உற்பவிக்கச் செய்வாயோ, அப்படிச் செய்துகொள்” என்று ஸ்வாமியிடம் சொன்னார்.




தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:56 am


இதைக் கேட்டதும் அம்பாளுக்கு ரொம்ப ஏமாற்றமாக, பரம துக்கமாக ஆகிவிட்டது. லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் அவள் குழந்தைகள்தாம் என்றாலும், இது அந்த ஞானாம்பாளுக்கே தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட ஒரு பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிறபோது, அவன் நேராகத் தனக்குப் பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்று அவளுக்கும் ஆசையிருந்தது.

இவர் சாஸ்திரத்திலிருந்து நியாயம் காட்டினமாதிரி, அவளும் காட்டித் தர்க்கம் பண்ணினாள். “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லியிருக்கிறது. பதி பிரார்த்திப்பதெல்லாம் பத்தினியையும் உத்தேசித்துத்தான். ஆனதால் நான் தனியாக வரம் கேட்க வேண்டும் என்றில்லை. அவர் கேட்டதாலேயே நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்று ரைட் கேட்டாள்.

ஸனத்குமாரர் யோசித்தார். “அம்மா, நீ சொல்வது நியாயம்தான். இருந்தாலும் நான் ஈசுவரனிடமிருந்து மட்டும் உற்பவிப்பது இன்னொரு தினுசில் எனக்குத் திருப்தி தருவதாகத் இருக்கிறது. எல்லாம் பிரம்மம் என்று எனக்குத் தெரிந்தாலும், அதற்கே நீங்கள் இரண்டு பேரும் எனக்கு இத்தனை ‘டைட்டில்’ கொடுத்தாலும், ஒரு விஷயத்தில் எனக்குப் பக்குவம் வரவில்லை. அதாவது, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தில் நாம் பிறப்பதாவது, கர்ப்பவாசம் செய்து கீழ்முகமாக ஜனிப்பதாவது என்று இன்னமும் எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. பிரம்ம ஞானிக்கு இப்படி இருக்கக் கூடாததுதான். ஆனால் ஏனோ இருக்கிறதே. அதனால் இதைச் சொல்கிறேன். ஆகையால் நீ பெரிய மனசு பண்ணி, உன் பதி மட்டுமே என்னைச் ஜனிக்கச் செய்வதற்கு அநுமதி தர வேண்டும்” என்றார்.

ஆனால் அம்பாளுக்கு மனசு வரவில்லை.

யோசித்துப் பார்த்துக் கடைசியில் ஒரு ‘ராஜி’ க்கு – ‘காம்ப்ரமைஸு’க்கு – வந்தார்கள்.

ஆதியில் பரமேசுவரன் பஸ்மாசுரனுக்கு வரம் தந்திருந்தார். இந்த வர பலத்தால், அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகிவிடுவார். வரம் பலிக்கிறதா என்று பரமேசுவரனிடமே பரீட்சை பார்க்க வந்தான் அசுரன். உடனே அவர் அந்தர்த்தானமாகி விட்டார்.

அந்தச் சமயத்தில் அம்பாள் ஏதோ லீலா நிமித்தம் தன்னுடைய ஸர்வக்ஞத்வத்தை மறைத்துக்கொண்டு சாதாரண ஸ்திரீ மாதிரி இருந்தாள். எனவே, திடீரென்று பரமேசுவரனின் சரீரம் மறைந்ததைப் பார்த்ததும் அவளுக்குப் ‘பகீர்’ என்றது. பதிவிரதா ரத்தினமான அவளால் ஈசுவரனின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அப்போதே அப்படியே உருகிவிட்டாள். யதார்த்தத்திலேயே அவளுடைய சரீரம் உருகி ஒரு ஜலாசயமாக (நீர் நிலையாக) ஆகி விட்டது. அதுதான் சரவணப் பொய்கை.

பிறகு பஸ்மாசுரன் மறைந்து ஸ்வாமி சரீரத்துடன் வந்ததும், அம்பாளும் தன் திவ்விய தேகத்தை எடுத்துக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய பதிவிரதா தர்மத்துக்கும் பிரேமைக்கும் அடையாளமாக சரவணப் பொய்கையையும் அழியாமலிருக்கும்படியாக அநுக்கிரகத்தாள். சரவணம் சாட்க்ஷாத் இவள் சரீரம்தான். அது இப்போது நினைவுக்கு வந்தது.

அதனால், ஸனத்குமாரர் அடுத்த ஜன்மாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.

இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜஸின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை. அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார். “ஆனானப்பட்ட என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்?” என்று கங்கை அவரைக் கேட்டாள். அவர், “சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்” என்றார்.

இதன்படியே கங்கை செய்ய, சரவணபவனாக முருகன் அவதரித்தான். பிறகு ஸனத்குமாரர் கண்ட ஸ்வப்னப்படி தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகி, அசுரர்களை ஸமூலம் இருந்த இடம் தெரியாமல் சம்ஹாரம் செய்து சர்வ லோகங்களையும் ரக்ஷித்தான் இந்த சரவணபவன். அவருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் இதுவே ஷடக்ஷரி, ஆறெழுத்து என்று மகாமந்திரமாக இருக்கிறது. சரவணமாக இருக்கும் அம்பாளின் மகிமை!

ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ‘சகல வேதங்களையும், இதிஹாச புராணங்கள், சகல சாஸ்திரங்கள், தேவ வித்யை, பிரம்மவித்யை, பூத வித்யை, நக்ஷத்திர வித்யை என்று ஒன்று பாக்கியில்லாமல் எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன். ஆனால், இதனாலெல்லாம் வெளி சமாசாரங்கள், மந்திரங்களைத்தான் தெரிந்து கொண்டேனே யொழியத் தன்னைத் தெரிந்து கொள்ளவேயில்லை. ஆத்மாவை அறியாததால் துக்கத்தில்தான் இருக்கிறேன். நீங்கள்தான் என்னைத் தூக்கி அக்கரை சேர்க்க வேண்டும்’ என்றார் நாரதர். ஸனத்குமாரர், “ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்று தேடிப்போக வேண்டியதில்லை. கீழும் மேலும், முன்னும் பின்னும், வலது பக்கமும் இடது பக்கமும் எல்லாம் ஒரே ஆத்மாதான். அதைப் பற்றியே ஒருத்தன் தியானித்து தியானித்து, அதுவாகவே ஆகிவிட்டால், அப்புறம் அதிலேயே அவன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான். உண்மையான ஸ்வராஜ்யம் தன்னைத்தானே ஆண்டு கொள்கிற இந்த நிலைதான். இவன்தான் ‘ஸ்வராட்’ – உண்மையான சக்கரவர்த்தி. இந்த உத்தம நிலையை அடைய முதலில் ஆகார சுத்தியில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு படிப்படியாக சித்தசுத்தி உண்டாகி, மனசு நன்றாக தியானத்தில் நிலைத்து நின்று, எல்லாக் கட்டுக்குள் தெரித்து விழுந்து, ஆத்ம ஸ்வரூபமாகவே இருப்பான்” என்று வழிகாட்டினார். ‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.

இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது.

சாந்தோக்ய அவஸ்தா (‘அவஸ்தா’ என்றால் நிலை) தான் ஜெண்டவஸ்தா (Zend Avesta) என்ற பார்ஸி மதக்கிரந்தத் தொகுப்பாயிருக்கிறது. பார்ஸி மதம், முழுக்க முழுக்க அக்னி வழிபாடுதான். ஸெளராஷ்டிர தேசக்காரர் ஒருத்தர் அதை ஸ்தாபித்தவர். ‘ஸெளராஷ்டிரர்’ என்பதே ‘ஜொரொதஸ்த்ரர்’ (Zorothustra) என்றாகியிருக்கிறது. ‘ஸெளரம்’ என்றால் சூரிய சம்பந்தமானது. சூரியன், அக்னி, காயத்ரி மூன்றும் சம்புவின் விசேஷ ரூபங்கள் என்று ஆசார்யாள் ‘பிரசனோத்தர ரத்ன மாலிகை’யில் சொல்கிறார். திருவண்ணாமலையில் அக்னி ஸ்வரூபமாகவே ஈசுவரன் இருக்கிறார். சிவாக்னிதான் முருகன்.

மலையாளத்தில் தீபத்தில் அம்பாளை ஆராதித்து, ‘பகவதி சேவை’ என்கிறார்கள். ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை ‘சக்தி சக்தி’ என்றே சொல்கிறோம்.

வேதமே முக்கியமாக அக்னி வழிபாட்டு மதம்தான். ‘அக்னி’ என்ற வார்த்தையோடுதான் வேதம் ஆரம்பிக்கிறது. அக்னி காரியமே ‘ஔபாஸனம்’ என்பது. ‘உபாஸனைக்கு’ இடமாவது ‘ஔபாஸனம்’. உபாஸனை என்றாலே அக்னி காரியம் தான் என்றாகிவிட்டது. ஔபாஸனை நான்கு வர்ணத்துவருக்குமே உண்டானது.

முக்கியமான உபாஸனையான அக்னி காரியத்துக்கு சுப்ரம்மண்யர் அதிதேவதையாக இருப்பதால்தான், அவரை விட்டுவிட்டுப் ‘பஞ்சாயதன பூஜை’ என்பதில் பிள்ளையார், சூரியன், மகாவிஷ்ணு, அம்பாள், ஈசுவரன் ஆகிய ஐவரை மாத்திரம் ஆராதிக்கச் சொல்வதாகத் தோன்றுகிறது. முருகன் நம் மதஸ்தரால் நிச்சயம் ஆராதிக்கப்பட வேண்டியவர் என்பது, பஞ்சாயதனத்தை மறுபடியும் உயிர்ப்பித்த அதே பகவத் பாதாள் ஸ்தாபித்த “ஷண்மத”ங்களில் முருக வழிபாடான “கௌமார”மும் ஒன்று என்பதிலிருந்து உறுதியாகிறது.

தற்காலத்தில் அக்னி காரியம் குறைந்து, மூர்த்தி பூஜை அதிகமாகியிருக்கிறது. சுப்ரம்மண்ய சம்பந்தமான புராணங்கள், ஸ்தோத்திரங்கள், திருப்புகழ் ஆகியன நிறையப் பிரசாரமாகி, பழனி, திருச்செந்தூர், திருத்தணி முதலான க்ஷேத்திரங்களின் உத்ஸவாதிகள், ஜனங்களை ரொம்பவும் வசீகரித்து வருகின்றன. ஆனதால், பஞ்சாயதன பூஜையிலும் சுப்ரம்மண்யரைச் சேர்த்துக் கொண்டுவிடுவது உத்தமமாகும்.

ஆசார்யாள் “ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்” என்று ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். அதில் “மயூராதிரூடம்” என்று ஆரம்பிக்கிற சுலோகத்தில் “மஹீ தேவ தேவம்” என்கிறார். “மஹீதேவர்” என்றால் பிராம்மணர். இவர்களால் பூஜை செய்யப்பட வேண்டியவர் சுப்ரம்மண்யர் என்கிறார்.

“சுப்ரம்மண்யர் தமிழ்க் கடவுள்தான்; வேதத்தில் இல்லாதவர்” என்று சிலர் சொல்வதைக் கேட்டு, வைதிகமானவர்கள் அவரை உபாஸிக்காமல் இருந்துவிடக்கூடாது என்றே இதைச் சொல்கிறேன்.

இதே புஜங்கத்தில், திருச்செந்தூரில் கடலோரத்தில் விளங்கும் ஷண்முகநாதரைப் பார்த்து, “பராசக்தி புத்திரனே! சமுத்திரக் கரையில் நிற்கிற நான் சம்சார சமுத்திரத்தின் அக்கரைக்குப் பக்தர்களைக் கடத்துவிக்கிறேன். அலைகளெல்லாம் சமுத்திரத்தில் மடங்கி விழுந்து, ஒடுங்கிவிடுவதைப்போல், என் சந்நிதிக்கு வருகிறவர்களின் ஆபத்துக்கள் கஷ்டங்கள் எல்லாம் ஒடுங்கியே போகும் என்பதைக் காட்டுகிறாய்” என்று மனசு உருகும்படி பாடியிருக்கிறார். “குகனைத் தவிர இன்னொரு தெய்வம் எனக்குத் தெரியவில்லை. தெரியவே இல்லை” (ந ஜானே ந ஜானே) என்கிறார்.

‘கடலிலே அலைகள் எழும்பி, அதிலேயே லயிக்கிற மாதிரி, சகல ஜீவ ஜகத்தும் பரம சத்தியமாக என்னிடம்தான் தோன்றி, என்னிடமே முடிகின்றன’ என்ற ஞானோபதேசத்தைத் திருச்செந்தூர் முருகன் சொல்லாமல் சொல்கிறார். நாரதருக்கு ஞானோபதேசம் செய்த ஸனத்குமாரரிடம் ஈசுவரனே தழைந்து வரம் கேட்டு, ஞான ஸ்கந்தனாக அவரைப் பெற்று, மறுபடியும் அவரிடம் தழைந்து ஞானோபதேசம் (பிரணவ உபதேசம்) வாங்கிக் கொண்டார்.



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:57 am


பரமாத்மாவை அடைய நாலு மார்க்கங்கள் ஞானம், பக்தி, கர்மம், யோகம் இருக்கின்றன. சரீரம், மனசு, இதற்கெல்லாம் ஆதாரமாக இருக்கிற, ஆத்மா என்ன என்கிற விவகாரத்திலேயே, எப்போதும் இருந்து கொண்டிருந்தால், கடைசியில் அது தானே பளிச்சிடுகிறது – Flash மாதிரி. இதுதான் ஞானம். அங்கே, அறிகிற ஜீவாத்மாவுக்கும் அறியப்படுகிற பரமாத்மாவுக்கும் பேதமே இல்லை. எல்லாம் ஒரே சாந்த சமுத்திரமாக அடங்கி விடுகிறது.

சிலருக்கு இந்த சாந்தியைவிட, பரமாத்மாவோடு ஒன்றாகச் சேர்ந்து கரைந்து விடுவதை விட, கொஞ்சம் பிரிந்து அவரிடம் அன்பாக இருந்து கொண்டிருப்பதில்தான் ருசி இருக்கிறது. இவர்கள் பக்தி செய்கிறார்கள். அதனால், பரமாத்மாவின் கருணையைப் பெறுகிறார்கள். இவர்கள் செய்யும் பக்தி, ஸ்வாமி திருப்பிச் செய்யும் கருணை, இரண்டும் அன்பு என்பதன் இரண்டு ரூபங்கள் தான். ஞானம் அறிவு வழி; பக்தி அன்பு வழி.

மனஸையும் கடந்து விட்டால் ஞானம்; மனஸை வைத்துக் கொண்டே பக்தி செய்ய வேண்டும். இதே மாதிரி சரீரத்தை வைத்துக் கொண்டு கர்மாக்களைச் செய்கிறேம். அப்போதும்கூட, நமக்கென்று பண்ணிக் கொள்ளாமல் லோக உபகாரமாகப் பண்ணி, அதன் பலனை ஈசுவரனுக்கு அர்ப்பணம் செய்தால் அதிலேயே ஒரு ஆனந்தம், நிறைவு இருக்கிறது. இவ்வாறு பற்றில்லாமல் கடமையைச் செய்வது கர்ம மார்க்கம்.

மனஸை நிறுத்த முடியாததாலேயே, ஆத்மாவைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. மனசு கட்டுப்படாமல் ஓடுகிறது. ஆனால், மூச்சைக் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டால், மனசும் நின்றுவிடும். நமக்குப் பிராணன் என்று ஒன்று இருக்கிறது. பேருயிர் ஒன்றிலிருந்துதான் இந்தப் பிராணன் புறப்பட்டிருக்கிறது. அதனால், இந்தப் பிராணனை சில தினுசுகளில் கட்டுப்படுத்தி, சமநிலைக்குக் கொண்டுவந்து விட்டால் பிராண மூலமான பேருயிரை, பரமாத்ம சக்தியை அடைய முடிகிறது. இதற்கு யோகமார்க்கம் என்று பெயர்.

ஸுப்ரம்மண்ய சுவாமியைப் பற்றி நிறையக் கதை சொன்னேன். இன்னும் எத்தனையோ கதைகள் இருக்கின்றன. அவருடைய மகிமைக்கும் லீலைக்கும் முடிவேயில்லை. இத்தனை கதைகள், தத்வங்களிலிருந்தும் தெரிவது அவர் ஞானம், பக்தி, கர்மம், யோகம் எல்லாவற்றுக்கும் முடிவான பரம சத்தியமாக இருக்கிறார் என்பதுதான்.

முருகன் என்றால் ஞான பண்டிதன், ஞானோபதேசம் என்பது நினைவுக்கு வந்துவிடுகிறது. அத்வைத ஞான ஸ்வரூபமாகவே, அவரைத் திருப்புகழிலும் கந்தரபூதியிலும் அருணகிரிநாதர் சொல்லியிருக்கிறார்.

நான் வேறு எனாதிருக்க, நீ வேறு எனாதிருக்க

ஏகபோகமாய் நீயு நானுமாய்

இறுகு வகை பரம் சுகமருள்

யானாகிய என்னை விழுங்கி வெறும்

தானாய் நிலை நின்றது தற்பரமே

பக்தி மார்க்கத்தில் முருகன் முடிவாக இருப்பதைச் சொல்லவே வேண்டாம்! அடியார்களின் பக்தியையும் அவர்களிடம் கருணையையும்தான் புராணக்கதைகள், ஸம்ஸ்கிருத ஸ்தோத்திரங்கள், தமிழ்த் துதி நூல்கள் எல்லாம் விஸ்தாரமாகச் சொல்கின்றன. இவற்றில் எல்லோருக்கும் ஒரு சில திருப்புகழ்கள், திருமுருகாற்றுப்படை, ஸுப்ரஹ்மண்ய புஜங்கம் ஆகியனவாவது மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

கர்மா என்று எடுத்துக்கொண்டாலும், குமாரிலபட்டராகவும் ஞானசம்பந்தராகவும் அவதரித்து அவரே, இந்த மார்க்கத்தை ஸ்தாபித்திருக்கிறார். அப்பர் ஸ்வாமிகள் “தாஸமார்க்கம்” என்ற வழியில் எப்போதும் லோக க்ஷேமத்துக்காக ஊழியம் செய்துகொண்டே இருந்தவர். அவர் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று சொன்னவர். இந்த வரி வருகிற செய்யுளின் ஆரம்பம் நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் என்பது! கடம்ப மாலையை விரும்பி அணிகின்ற முருகன்தான் கடம்பன். ‘முருகனைப் பெற்ற அம்பாளைத் தன் பாகத்தில் கொண்ட பரமேசுவரன்’ என்ற ஸோமாஸ்கந்த மூர்த்தமாக இங்கே அப்பர் சொல்கிறார். நிஷ்காம்யமாகப் பணி செய்து கிடக்கிற பான்மையை முருகன் விசேஷமாக அருள்வான் என்கிறமாதிரி ‘நம் கடம்பன்’ என்று ஆரம்பத்திலிருக்கிறது!

கடைசியில் ‘யோகம்’ எனறு சொன்னேன். இது பிராண மூலத்தைக் கண்டுபிடித்து, அதோடு சேர்கிற வழி. பிராண சக்தி என்பது சரீரத்தில் மூலாதாரம் என்கிற இடத்தில், குண்டலினீ என்கிற ஸர்ப்ப ரூபத்திலேயே இருக்கிறது. நமக்கெல்லாம் அதன் மகாசக்தி தெரியவேயில்லை. அது குண்டலாகாரமாகச் சுருட்டிக் கொண்டு தூங்குகிற பாம்பாகவே இருக்கிறது. தூங்கும் பாம்பைத் தட்டி எழுப்புவதற்குத்தான் யோக சாதனைகள் இருக்கின்றன. சுப்ரம்மண்யர் யோக விஸ்வரூபம். அதனால்தான் அவரை எப்போதும் பாம்போடேயே சேர்த்துச் சேர்த்துச் பேசுகிறோம். ‘வாஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூப தரணாய’ என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர்கூட ‘ஸ்ரீ ஸுப்ரஹ்யமண்யாய நமஸ்தே’ கிருதியில் சொல்கிறார். ஆசார்யாளும் புஜங்கம் (புஜங்கம் என்றாலே பாம்பு) என்ற விருத்தத்தில்தான் ஸ்தோத்திரம் செய்கிறார். நாகர் பிரதிஷ்டை, ஷஷ்டியில் நாகராஜா பூஜை எல்லாம் சுப்ரம்மண்யரை உத்தேசித்தே செய்கிறோம்.

தெலுங்கு தேசத்தில் சுப்ரம்மண்யரையே ஸர்ப்பமாகப் பாவிப்பதால்தான், பாம்பை, ‘சுப்பராயடு’ என்கிறார்கள்.

அவரே யோகத்தின் நிறைவு.

ஞானமும் யோகமும் முடிகிற இடத்தில் ஒர் ஆட்டம், அசைவு இல்லை. லோகமே இல்லை. உணர்ச்சிகளே இல்லை. இதெல்லாம் பட்டுப்போன இடம் அது. இப்படிப் பட்டுப்போன நிலையில் ஈசுவரனை ‘ஸ்தாணு’ என்று சொல்வது வழக்கம்; ‘பட்ட கட்டை’ என்று அர்த்தம். சுசீந்திரத்தில் ‘ஸ்தாணுமாலயன்’ என்று கேட்டிருப்பீர்கள். மூம்மூர்த்தியும் சேர்ந்த ஸ்வரூபம். அதில் ‘ஸ்தாணு’ என்பது பரம வைராக்கியமான பரமேச்வரன்தான். உணர்ச்சியில்லாவிட்டால், ‘மரத்து’ப் போகிறது என்கிறோமல்லவா? அப்படிக் காய்ந்து மரமாக இருக்கிறவர் ஸ்தாணு. பக்தி அநுக்கிரகத்துக்காக கருணையில் நனைந்திருந்தபோது “ஆர்த்ர”ராக (ஆதிரையனாக) இருப்பவரே இப்படி ஞானத்தில் ‘பட்ட கட்டை’யாயிருப்பார். அதே மாதிரிதான் அம்பாளும், கருணாமயமான அவரும் பரம விரக்தியாக இருக்கிற ஒர் அவஸ்தை (நிலை) உண்டு. அவள் எப்போதும் ஈசுவரனையே பற்றிப் படர்ந்திருப்பவள். அவர் மரமாக இருந்தால், இவள் கொடியாகச் சுற்றிக் கொண்டிருப்பாள். ஸ்ரீசைலத்தில் அவர் அர்ஜுன (மருத) மரமாக இருக்கிறார்; இவள் மல்லிகைக் கொடியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள்; அதனால்தான் அவருக்கு மல்லிகார்ஜுனர் என்று பெயர். அது நல்ல பசுமையோடு இருக்கப்பட்ட மரம். பட்ட மரமாக அவர் இருக்கும்போது அம்பாள் என்ன செய்கிறாள்?

பரமேசுவரன் பச்சைப் பசேலென்று கப்பும் கிளையுமாக ஒரு மரம் மாதிரி இருந்தால், அம்பாள் ஒரு பசுங்கொடியாக அவரைச் சுற்றிக் கொண்டிருப்பாள். அவர் பட்ட மரமாக, காய்ந்த கட்டையாக இருக்கும்போது, அவள் என்ன செய்கிறாள்? அப்போதும் அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். ஆனால், பச்சைக் கொடியாக இல்லை. இலையே இல்லாமல் நார் மாதிரியான கொடியாக, அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அபர்ணா, அபர்ணா என்று அவளுக்கு ஒரு பெயர். ‘பர்ணம்’ என்றால் இலையே இல்லாத கொடியாக இருக்கும்போது அம்பாள் அபர்ணாவாகிறாள். பர்வத ராஜ குமரியாகப் பிறந்து ஈஸ்வரனைப் பதியாக அடைவதற்காக அம்பாள் தபஸ் பண்ணினபோது இலையைக் கூடச் சாப்பிடாமல், கடும் நியமத்தோடு இருந்ததாலேயே இந்தப் பெயர் உண்டாயிற்று என்று ஒர் அர்த்தம் சொல்வதுண்டு. எனக்கென்னவோ ‘ஸ்தாணு’ வாக ஈசுவரன் இருக்கும்போதும், அவனை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிற அம்பாள் கொடிதான் ‘அபர்ணா’ என்று தோன்றுகிறது.

ஈசுவரனும் அம்பாளும் இருந்தால் ஸோமாஸ்கந்தமாக அங்கே ஸுப்ரம்மண்யரும் இருக்க வேண்டும் அல்லவா? ஈசுவரன் ‘ஸ்தாணு’வாகவும், அம்பாள் ‘அபர்ணா’வாகவும் இருக்கும்போது முருகன் எப்படியிருக்கிறார்? ‘விசாக’ ராக இருக்கிறார் என்று சொல்லலாம். ‘சாகை’ என்றால் கிளை என்று அர்த்தம். வேதத்தில் பல கிளைகள் உண்டு. அது ஒவ்வொன்றுக்கும் இன்ன வேத சாகை என்றே பெயர் சொல்வார்கள். ‘வி’ என்பது பல அர்த்தங்களில் வரும். சில சமயங்களில் ஒன்றை உயர்த்திக் காட்ட ‘வி’ சேர்ப்பதுண்டு. உதாரணமாக, ஜயம் – விஜயம். ஆனால் ‘வி’க்கு எதிர்மறை (Negative) பொருளும் உண்டு. ‘தவா’ என்றால் புருஷனை உடையவள்: ‘விதவா’ என்றால் புருஷன் இல்லாதவள். இந்த ரீதியில் ‘வி-சாக’ என்றால் ‘கிளை இல்லாத’ என்று அர்த்தம். அப்பா பட்ட கட்டையாகவும், அம்மா இலை இல்லாத கொடியாகவும் இருக்கும்போது, குழந்தை முருகனும் கிளையே இல்லாத கீழ்க்கன்றாக இருக்கிறார். அது பரம வைராக்கிய ஸ்வரூபம்.

சுப்ரம்மண்யர் பரம வைராக்கியமாக, ஞானியாக, ஆண்டியாக, தண்டாயுதபாணியாக இருக்கிறார். அவரே வல்லீ தேவசேனா சமேதராகக் கல்யாண சுப்ரம்மண்யராகவும் இருக்கிறார். இம்மை மறுமை இரண்டுக்கும் உதவுபவராகவும், வழிகாட்டுபவராகவும், அவர் இருப்பதையே இந்த இரண்டு கோலங்களும் காட்டுகின்றன.

பாமர ஜனங்களிலிருந்து தேவர் வரையில் எல்லோரையும் ஒரேபோல் அநுக்கிரகிக்கிறவர் அவர். வேட ஸ்திரீயான வள்ளியை ஒரு பத்தினியாகவும், தேவ ராஜகுமாரியான தேவசேனையை இன்னொரு பத்தினியாகவும் கொண்டவர். பார்வதீ பரமேசுவரர்களின் கடைக்குட்டியான அவர்தான் தேவர்களில் ரொம்பவும் குழந்தை; அவரே தேவநாயகனாக இருக்கிறார். தேனாம்பேட்டையில் சுப்ரம்மண்ய ஸ்வாமி கும்பாபிஷேகம் நடந்தபோது, ‘தேவநாயகன் பேட்டை’தான் ‘தேனாம்பேட்டை’ ஆயிற்றோ என்று தோன்றிற்று. “தேவாதிதேவப் பெருமாளே” என்று அருணகிரி சொல்வார்.

அவரை நாம் எல்லோரும் பக்தி செய்து, இகபர க்ஷேமத்தைப் பெற வேண்டும். இவ்விதம் பக்தி செய்வதற்காக நம்மை நக்கீரர் ‘ஆற்றுப்படுத்திய’ நூல்தான் திருமுருகாற்றுப்படை. ஆற்றுப் படை உடைய முருகன் கங்கை ஆற்றில் பிறந்தவர். ஆறு தாங்கிய ஜோதியான அவர், ஆறெழுத்து மந்திர மூர்த்தி; ஆறுதலைக் கொடுக்கும் ஆறுமுகர்; ஆறுபடை வீரர். அவரது வெற்றி நாளான மகாஷஷ்டி துலா மாதத்தின் வளர்பிறை ஆறாம் நாள். துலா என்பது அவரது சமநிலையாம். தராசு முனையைக் காட்டுவது. ஞானத்தில் எங்கும் சமமாக இருந்து கொண்டே லோகாநுக்கிரகத்துக்காக அசுரர்களை வென்று பக்தர்களை ரக்ஷிப்பார். வெளிப்பகையோடு உட்பகைவர் அறுவரையும் அழித்து நம்மை ஜோதி ஸ்வரூபமாக்குகிற சிகரஜோதி அவர். மலைகளில் எல்லாம் மணிவிளக்காக மேலே நிற்பவர் அவர். கைலாஸ மலையில் ஜோதிப் பொழிவாய் உதித்தார். திருப்பரங்குன்ற மலையிலும் திருத்தணிகை மலையிலும் தேவயானை வள்ளியரை மணந்தார்; பல மலைகளில் சேனையை வகுத்தார்; கந்தமாதன மலையில் சூரனை வதைத்தார்; பழனி மலையில் ஆண்டியாய் நின்றார்; ஸ்வாமி மலையில் ஞானமொழி பேசினார்.

தேவாதி தேவப் பெருமாளான அவர் பெரியரில் பெரியவர். நாம் சின்னஞ் சிறியர். சின்னஞ் சிறிய நாம், தானியங்களுள் சின்னஞ் சிறிய தினையைக் காட்டி அழைத்தால், அந்தப் பெரியோன் வருவான். சின்னச் சின்ன தேனீக்கள் சின்ன மலர்களிலிருந்து எடுத்த தேனை விட்டு, தினை மாப்பிசைத்து அவருக்கு நிவேதனம் செய்தால், நமக்கு மன மலர்ச்சி என்ற தேனின் இனிமையைத் தருவார். தூய பசு மேய்ந்த தாவர லோகம் – இயற்கை – அழகு – முழுவதற்கும் சாரமாகத் திரண்டு வந்த பசு நெய்யை மாவில் வார்த்து, ஜோதி விளக்கேற்றினால் நம் மனத்திலும் அவர் ஞானச் சுடரை ஏற்றி வைப்பார்! மாவிளக்கு என்று நாம் மா விளக்கை அவருக்கு அர்ப்பணம் செய்தால், மா விளக்கான – அதாவது மகா தீபமான – அவர் நமக்கு ஞான ஜோதியைத் தருவார்.

பரமேசுவர ஸ்வரூபமான அவருக்கு, “அரன் நாமம் சூழ்க” என்று அவரே ஞானசம்பந்தராக வந்து சொன்னதற்கேற்ப, “அரஹரோ ஹரா” சொல்லி நம் பாபத்தையெல்லாம் எரித்துப் பரமானந்த ஜோதியாக இருப்போமாக!

அரஹரோ ஹரா!



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 12:57 am


எல்லோரும் காலையில் எழுந்ததும் நாராயண ஸ்மரணம் செய்யவேண்டும். மாலையில் பரமேசுவரனை தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணு உலகைப் பரிபாலிப்பவர். காலையில் உலக காரியங்களைத் தொடங்குமுன் அவரை ஸ்மரிக்க வேண்டும். பரமேசுவரனிடம் உலகமெல்லாம் லயித்து ஒடுங்குகின்றன. மாலையில் நம் வேலைகள் ஓய்கின்றன. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உலகம் இருளுக்குள் ஒடுங்குகிறது. பட்சிகள் கூட்டில் ஒடுங்குகின்றன. ஊரெல்லாம் மேய்ந்த பசுக்கள் கொட்டிலுக்குத் திரும்பி வந்து ஒடுங்குகின்றன. வெளியிலே திரியும் எண்ணங்களையெல்லாம் அப்போது இருதயத்துக்குள் திருப்பி பரமேசுவரனை ஸ்மரிக்க வேண்டும். தோஷம் என்றால் இரவு. இரவு வருவதற்கு முற்பட்ட மாலை வேளை ப்ர-தோஷம். பிரதோஷத்தில் பரமேசுவரனை நினைக்க வேண்டும்.

ஈசுவரனை எப்போதும் அம்பாளோடு சேர்த்தே தியானிக்க வேண்டும். ஈசுவரன் சிவன் எனப்படுகிறார். அம்பாளுக்கு சிவா என்று பெயர்.

வேதத்தில் ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது:

“பயங்கர ரூபம் கொண்ட ருத்திரனுக்கு பரம மங்களமான ஒரு ஸ்வரூபம் உண்டு. அதற்கு சிவா என்று பெயர். அந்த சிவாதான் உலக தாபத்துக்கெல்லாம் ஒளஷதமாக இருக்கிறது. ருத்திரனுக்கும் ஒளஷதம் அந்த சிவாவே.”

ருத்ரன் ஆலஹாலத்தை உண்டு பிழைத்திருப்பதற்குக் காரணம் இந்த சிவா என்கிற அம்பாளான மிருதஸஞ்சீவினிதான். “அம்மா, உன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தை உண்டும்கூட அழியாமல் இருக்கிறார்?” என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கேட்கிறார்.

அப்படிப்பட்ட சிவாவோடு சேர்த்து, ஸாம்ப பரமேசுவரனை (ஸ + அம்ப = ஸாம்ப; அம்பளோடு கூடியாவனாக) தியானிக்க வேண்டும். சாம்பமூர்த்தி, சாம்பசிவன் என்று அம்பாளோடு சேர்த்துச் சேர்த்தே ஈசுவரனைச் சொல்கிறது வழக்கம்.

வேதம் சிவனோடு சிவாவையும் சேர்த்து சொன்னது மட்டுமல்ல. நம் தேசக் குழந்தைகளும் அநாதி காலமாக நமக்கு அப்படியே உத்தரவு போட்டிருக்கின்றன. நம்மைப் போலக் கல்மிஷங்கள் இல்லாமல், நம்மைப் போலப் பாபங்கள் இல்லாமல் இருக்கிற குழந்தைகளின் வாக்கியமும் நமக்கு ஆக்ஞைதான்.

குழந்தைகள் நமக்குக் கட்டளை இடுவது என்ன? குழந்தைகள் ஸ்வாமியை ‘உம்மாச்சி’ என்றே சொல்லும். குழந்தைகளின் பரம்பரையில் சில தனி வார்த்தைகள் உண்டு. இவை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்களின் வார்த்தைகளும், அவற்றின் அர்த்தங்களும் மாறும். குழந்தைமொழி மாறுவதில்லை. ‘உம்மாச்சி’ என்ற குழந்தை மொழிக்கு ‘ஸ்வாமி’ என்று அர்த்தம். என்னிடம் குழந்தைகளை அழைத்து வருகிறவர்கள்கூட, “உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்” என்று அவற்றிடம் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ‘இதென்ன உம்மாச்சி? இதன் சரியான மூலம் என்ன?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

திருச்சி மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே உள்ள கோயில் ஸ்ரீ பாதந்தாங்கிகளில் திருநல்லத்திலிருந்து (கோனேரி ராஜபுரம்) வந்திருக்கிறவர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை இன்னொருவர் “உம்மாச்சு” என்று கூப்பிடுவதைக் கேட்டேன். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேசுவரன் என்பது. எனக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்தது. உம்மாச்சு, உம்மாச்சி எல்லாம் உமாமகேசனைக் குறிப்பனவே என்று தெரிந்துகொண்டேன். ஆக, குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பழம் காலத்திலிருந்து உமாதேவியுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

குழந்தைகளால் சொல்லப்படுகிற ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தைகளிடம் காமமும் குரோதமும் நிலைத்திருப்பதில்லை. இந்த விநாடி ஆசைப்பட்டு வாங்கிய பொருளை அடுத்த விநாடி கீழே போட்டுவிட்டுப் போய்விடும். இந்த விநாடி கோபித்துக்கொண்ட ஒருவரிடம் அடுத்த விநாடியே ஆசையோடு ஓடி ஒட்டிக் கொள்ளும். குழந்தைக்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. இதனால்தான் உபநிஷத்துக்களும் நம்மைக் ‘குழந்தையாக இரு’ என்று உபதேசிக்கின்றன. ‘குழந்தையே தெய்வம்’ என்பார்கள். அந்தக் குழந்தை, தெய்வம் என்றால் உமாமகேசுவரன் என்று சொல்கிறதென்றால், அந்தக் கட்டளையை நாம் ஏற்கவேண்டும். வேதத்தின் பாஷையும் குழந்தையின் பாஷையும் ஒன்றாகச் சொல்வதுபோல், எல்லோரும் சாயங்காலத்தில் அம்பிகை ஸஹிதனான ஈசுவரனை தியானிப்போமாக!

நம: பார்வதீ பதயே ஹர ஹர மஹாதேவா!



தெய்வத்தின் குரல் - முதல் பகுதி - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக