புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10 
17 Posts - 4%
prajai
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10 
8 Posts - 2%
jairam
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10 
4 Posts - 1%
Rutu
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு


   
   

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 19, 2012 2:10 pm

ராஜ் சிவா !

ஈகரை அன்பர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் ,,,,

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்ற சுவாரசியமான கட்டுரையின் ஆசிரியர் .
அவர் வேறொரு கட்டுரை தொடரை உயிரோசையில் ஆரம்பித்துள்ளார் அதுதான்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"

இந்த கட்டுரை பற்றிய அறிமுகத்தில் ராஜ் சிவா இப்படி குறிப்பிடுகிறார்

நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது.

அப்படி என்ன தான் சொல்லபோகிறார் ராஜ் சிவா!

உங்களோடு அறிய நானும் ஆவல்கொண்டிருக்கிறேன் ..படிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்

இதோ முதல் பகுதி .......

நன்றி :உயிரோசை






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 19, 2012 2:18 pm

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -பகுதி-1





இந்தப் படத்தைப் பாருங்கள். நன்றாக உற்றுப் பாருங்கள். தரையில் விரிக்கப்படும் ஒரு கம்பளம் (Carpet) என்று இதை நீங்கள் நினைத்தால், இனி நான் எழுதப் போவதை நிச்சயம் படிக்க வேண்டிய ஒருவராக நீங்கள் இருப்பீர்கள். கம்பளம் போல, அச்சு அசலாக இருக்கும் இது கம்பளமே அல்ல. 'சரி, கம்பளம் இல்லை. அப்படியென்றால் காகிதம் ஒன்றில் வரையப்பட்ட ஒரு சித்திரம்' என்று மறுபடி நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தாலும், நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள்.

கம்பளமும் இல்லை. காகிதத்தில் வரையப்பட்ட சித்திரமும் இல்லை. அப்படியென்றால் இது என்ன? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிய ஆய்வுடன்தான், நம் பயணம் இந்தத் தொடரில் ஆரம்பமாகப் போகின்றது. இந்தத் தொடர், நான் இதற்கு முன்னர் எழுதிய 'மாயா மக்கள்' பற்றிய தொடரைப் போல, மர்மங்களை (Mystery) உள்ளடக்கிய ஒன்றாகவே இருக்கும். அதனால் மீண்டும் மிஸ்டரி என்பது பற்றி ஒரு சிறிய விளக்கத்தை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன். 

'மிஸ்டரி' என்பது இரண்டு பக்கங்களைக் கொண்ட ஒரு நாணயம் போன்றது. அதன் ஒரு பக்கம், அறிவியலால் விளக்க முடியாத மர்ம முடிச்சுகளைக் கொண்டது. அடுத்த பக்கம், 'சே! இதெல்லாம் ஏமாற்று வேலை. இப்படி எதுவும் இல்லை' என்ற மறுதலிப்பைக் கொண்டது. எப்போதும் இந்த இரு பக்கங்களும் இல்லாமல், சரி சமமாக நிற்கும் நிலைக்குத்து நிலையில் இந்த நாணயம் நிற்பதே இல்லை. கடவுளை நம்புபவர்கள் எப்படி அதில் நம்பிக்கையுடன் இருப்பார்களோ, அப்படி ஒரு பக்கத்தினரும், கடவுளை மறுப்பவர்கள் எப்படி வன்மையாக மறுப்பார்களோ, அப்படி அடுத்தவர்களும் இருப்பார்கள். இப்படியான தன்மையுடைய மிஸ்டரி சம்பவங்களையே நாம் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம். நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது. இனி தொடருக்குப் போகலாமா....?

மேலே இருக்கும் படத்தில் காணப்படும் சித்திரம் நிச்சயமாகக் கம்பளம் கிடையாது. அது காகிதத்தில் வரையப்பட்ட சித்திரமும் கிடையாது. ஆனால் அது ஒரு வரையப்பட்ட சித்திரமேதான். எங்கே? எப்படி? யாரால்? அது வரையப்பட்டது என்பதுதான் இங்கு நம் விழிகளை விரியச் செய்யப் போகும் ஆச்சரியமாக இருக்கப் போகிறது. அது என்ன என்று பார்ப்பதற்கு முன்னர், தென்மேற்கு இங்கிலாந்தில் (South West England) அமைந்துள்ள 'வைல்ட்ஷையர்' (Wiltshire) என்னுமிடத்தில் வசிக்கும் 'டோனி ஹ்யூஜெஸ்' (Tony Huges) என்னும் விமானிக்கு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.  



டோனி ஹ்யூஜெஸ் என்பவர் 'மிக இலகு விமானம்' (Microlight flight) ஒன்றின் மூலம், வைல்ட்ஷயரில் உள்ள வயல் நிலங்களுக்கு மேலாக விமானத்தில், ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்குப் பறந்து சென்றார். இப்படி வயல் வெளிகளின் மேலாகத் தினமும் பறந்து செல்வது அவரின் வழக்கங்களில் ஒன்று. மறு கோடிக்குப் பறந்து சென்ற டோனி, விமானத்தைத் திருப்பி, வந்த இடத்துக்கே செலுத்திக் கொண்டிருந்த போது, அவர் வயல்வெளியில் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. பத்து நிமிடங்களுக்கு முன்னர் அவர் அதே வயல்வெளியின் மேலாகப் பறந்து சென்றார். ஆனால் அதே இடத்துக்குத் திரும்பி வரும்போது அது காணப்பட்டது. "இது எப்படி சாத்தியம்?" என்று தன் வயர்லெஸ் சாதனத்தில் அலறினார். அவர் அந்த வயல்வெளியில் கண்டது என்ன தெரியுமா? மிகப் பிரமாண்டமான ஒரு சித்திரத்தை. அந்தச் சித்திரம் வயல்வெளியில் வட்டவடிவமாக வரையப்பட்டிருந்தது. எதனால் வரையப்பட்டிருந்தது என்று நினைக்கிறீர்கள்? அதுதான் இங்கு சொல்லப்படப் போகும் மர்மத்தின் ஆணிவேரே!

அந்தச் சித்திரம் வயல்வெளியில் செழித்து வளர்ந்த பயிர்களைச் சிதைக்காமல், நிலத்தில் அழுத்தி வரையப்பட்டிருந்தது. நிலத்தில் இருந்து பார்க்கும்போது என்னவென்றே தெரியாமல், வானத்தில் பறந்தால் மட்டுமே தெரியக் கூடிய வகையில் வரையப்பட்ட மிகப் பிரமாண்டமான சித்திரம் அது. டோனி ஹ்யூஜெஸினால் நம்பவே முடியவில்லை. பத்து நிமிடங்களில், அதுவும் பட்டப் பகலில் அதை யார் அப்படி வரைந்திருக்க முடியும்? சுற்று வட்டாரத்தில் எந்த ஒரு வாகனமோ, மனித நடமாட்டமோ காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் பரந்து விரிந்த வயல்வெளிப் பிரதேசம். கோதுமைப் பயிர் எங்கும் பயிரிடப்பட்டு, செழித்து வளர்ந்த அறுவடைக்கான நேரம் அது. 

யார் வரைந்திருக்க முடியும்? இப்படி ஒரு பிரமாண்டமான சித்திரத்தை, 'வரைவது' என்று சொல்வதே தப்பு. யார் இப்படியான ஒன்றை உருவாக்கியிருக்க முடியும்? சரி, அப்படி உருவாக்கியிருந்தாலும் உருவாக்கியவர்கள் எங்கே? எப்படி மாயமாக மறைந்தார்கள்? விமானத்தில் பறந்தபடி எங்கு தேடியும் எவரையும் காணவில்லை. பத்து நிமிடங்களில் யாரும் அப்படி மறைந்து விட முடியாது. டோனி, தான் கண்டதை வயர்லெஸ் கருவி மூலமாக கன்ட்ரோல் அறையுடன் தொடர்பு கொண்டு கூறியதும், அலறியடித்து அனைவரும் ஓடி வந்தார்கள். வந்தவர்கள் எல்லாரையும் பிரமிப்பில் ஆழ்த்தி, மௌனமாக வயல்வெளியில் படுத்து இருந்தது அந்த வயல் சித்திரம். 'பயிர் வட்டம்' (Crop Circle) என்னும் பெயருடன் உலகையே இப்போது மிகப் பலமாக மிரட்டி வரும் மிஸ்டரியாக இந்தப் பயிர்ச் சித்திரங்கள் இருக்கின்றன. இந்தச் சித்திரங்களின் பிரமாண்டத்தை நீங்கள் அறிய வேண்டுமா....? அவை எவ்வளவு பெரியவை என்பது தெரிய வேண்டுமா? சரி கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள். இதுவும் அதே வைல்ட்ஷையரில் உருவாக்கப்பட்ட ஒரு பயிர் வட்டம்தான். 



என்ன பார்த்தீர்களா? எவ்வளவு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். ஒரு காகிதத்தில் கூட இப்படி வரைவது மிகக் கஷ்டமாக இருக்கும் வேளையில், மிகத் துல்லியமாகப் பயிர்களால் இப்படி உருவாக்க முடியுமா? சரி, இதன் பிரமாண்டம் உங்களுக்குப் புரிகிறதா? புரியவில்லையா? அப்படியென்றால் அந்தப் படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். மையத்துக்குச் சற்றுக் கீழே உள்ள வெள்ளைப் பகுதியில், இரண்டு சிறிய கருப்புப் புள்ளிகள் போலத் தெரிகிறதா? அந்தப் புள்ளிகள் என்ன தெரியுமா? அவை இரண்டும் மனிதர்கள். மனிதர்கள் இவ்வளவு சிறிய புள்ளிகளாகத் தெரிய வேண்டும் என்றால், அந்தச் சித்திரத்தின் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அத்துடன் மேலே கால் பகுதியாக தந்த கம்பளம் போன்ற அமைப்புள்ள சித்திரத்தின் முழுமையான வடிவத்தையும் கீழே தருகிறேன். அதையும் பாருங்கள். அதன் பிரமாண்டமும் தெரிய வேண்டும் அல்லவா? அப்படியே மையத்துக்கு நேராகக் கீழே இருக்கும் நான்கு இதழ்கள் கொண்ட பூ வடிவத்தைப் பாருங்கள். அதிலும் ஒரு கருப்புப் புள்ளி தெரியும். அதுவும் மனிதன் என்பது புரியும். 



"இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சித்திரம். இதை ஏதோ மர்மம் என்று சொல்லி எங்களை இவர் ஏமாற்றப் பார்க்கிறார்" என்று இப்போது நீங்கள் நினைக்கும் சாத்தியம் உண்டு. நீங்கள் அப்படி நினைக்கவும் வேண்டும். சந்தேகப்படுதல் என்பதுதான் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குத் திறவுகோலாக இதுவரை இருந்திருக்கிறது. ஆனால் நாம் இதை அறிவியல் சிந்தனையுடன் அணுகும்போது, அதன் மர்மங்கள் தொடர்ச்சியாக நீண்டு கொண்டு போகின்றது. அத்தோடு, நம்மை அது தாக்கவும் தொடங்குகின்றது. அந்தத் தாக்குதல்களைத் தாங்க முடியாமல் ஒரு கணத்தில் சோர்ந்து போய், நாம் அதை நம்ப வேண்டிய சூழலுக்குள்ளாவதுடன் அதன் சுழலுக்குள்ளும் அகப்பட்டுக் கொள்வோம். 

அப்படி நம்மைத் தாக்கப் போகும் அந்த மர்மங்கள்தான் என்ன? அவை உங்களுக்குத் தெரிய வேண்டுமல்லவா? தெரிந்தால் நீங்கள் எப்படியான உணர்வுக்கு உள்ளாவீர்கள் என்று என்னால் சொல்ல முடியாது. அப்படியான அதிர்ச்சிகள் அவை.   

அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போமா...? 





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sat May 19, 2012 2:24 pm

ம்ம்ம் தொடருங்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 19, 2012 2:27 pm

இது நிலபயிரா உண்மையிலேயே ஆச்சர்யம்த்தான் இதை பார்த்ததும் ஏதோ மரத்தில் செய்யப்பட்ட சித்திரம் என்றுத்தான் நினைத்தேன் படித்ததும் வியந்துபோனேன் அதிர்ச்சி அதிர்ச்சி உண்மையிலேயே ஆச்ரர்யம்த்தான் தொடருங்கள் பாலா சார் மேலும் பல உண்மைகளை காண ஆவலாக உள்ளேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 19, 2012 2:38 pm

அடுத்த மர்ம தொடர் ஆரம்பம் ஆகிவிட்டது..

தொடர வாழ்த்துக்கள் சார்.. சூப்பருங்க

Gulzaar
Gulzaar
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

PostGulzaar Sat May 19, 2012 2:52 pm

வாழ்த்துக்கள் பாலா சார்! தொடருங்கள்... சூப்பருங்க

இதைப் படித்த போது எனக்கு தஞ்சை "தமிழ்ப் பல்கலைக் கழகம்" நினைவுக்கு வருகிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒரு கட்டிடம் "ழ" வடிவில் கட்டப் பட்டுள்ளதாம். இதையும் ஆகாயத்தில் இருந்து பார்க்கும் போதே தெரியுமாம். ழகரம் தமிழுக்கு சிறப்பு, இந்தக் கட்டிடம் தமிழ் பல்கலை கழகத்தின் சிறப்பு.

இதுபோன்ற கட்டுரைகளை தருவது உங்களின் சிறப்பு!


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 19, 2012 3:09 pm

வாழ்த்துக்கள் பாலா சார்! தொடருங்கள் நன்றி நன்றி

முதல் பதிவே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 19, 2012 5:25 pm

அடுத்த தொடரை எழுத தொடங்கிய ராஜ் சிவா அவர்களுக்கும் அதை பகிர்ந்த பாலா அண்ணாவிற்கும் நன்றி நன்றி நன்றி
மாயன்கள் தொடரில் இது போன்ற நிலத்தில் வரையப்பட்ட சித்திரங்களை நாஸ்கா கோடுகள்(nazca lines) என்று பார்த்தோம்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat May 19, 2012 5:51 pm

அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 19, 2012 6:03 pm

வியப்பாக உள்ளது.. தொடருங்கள் அதிர்ச்சி




"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக